Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Sunday, September 23, 2012

25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -2

சி.பி.செந்தில்குமாரின் பேட்டி: பாகம் 1 
 
1) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.


===00oo00===

2) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்


===00oo00===



3) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது

===00oo00===

4) ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((

==00oo00===

5) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்

==00oo00===

6) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.

Thursday, August 30, 2012

7/365 ஏமாற்றமளித்த சென்னை பதிவர் சந்திப்பு


பதிவர் வட்டம், பதிவுலகம் பற்றிய பதிவுகளை தவிர்த்தே வந்தேன். 1.அயர்ச்சி 2.என் பதிவால் சூழல் கெடுவது, என இரண்டே காரணங்கள்தான். ஏற்கனவே "அதைப்" பற்றிய பேச்சுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதாலே இந்தப் பதிவு.


ஒரு நிகழ்ச்சி நடத்துவதென்பது பெரிய காரியம், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய விழா குழுவினருக்கு வந்தனங்கள். விழாவில் அளிக்கப்பட்ட விருந்து பற்றி இதுவரையில் யாரும் குறை சொல்லாதவண்ணம் பார்த்துக்கொண்டது மிகப்பெரிய விசயம்.


இப்போ பதிவு...

தாமிரா மற்றும் அதிஷா : உங்களை அழைக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை, அவர்கள் எந்தப் பெயரையும் வைத்துக்கொள்ளலாம், அதுக்கான அங்கீகாரம் பெறப்படவேண்டிய ஆட்கள் நீங்கள் இல்லை, அதே போல அவர்களால் செய்து கொள்ளும் செலவிற்கு நீங்கள் கவலைப்படுவதன் அர்த்தமும் புரியவில்லை. இது போல இங்கே(அமெரிக்கா) வாரா வாரம் சந்திப்பு நடக்கிறது. உங்களை எல்லாம் அழைக்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை, நீங்களாக வந்து கலந்துகொண்டால் வேண்டாமென நானும் சொல்லவில்லை. அமெரிக்கா, பெங்களூர், ஈரோட்டில்  நடைபெற்ற சந்திப்புக்கு எல்லாம் நான் உங்களை அழைத்ததில்லை.பரந்துப்பட்ட உலகில் அதுவும் சமூக வலைதளங்கள் தலைமுறையில்  ஆங்காங்கே குழுவாக இருப்பது சகஜம்தான். அவரவர்க்கு அவரவருடைய சுற்றமே உலகு.

பதிவே எழுதாத பதிவர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் அனுப்பவேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவேண்டும்? திண்ணை காலியாக்க வேண்டாமா?


2007 - பதிவர் பட்டறையின் போது அதனை ஒருங்கிணைத்த நண்பர்களின் பங்கு/அருமை, அனைவரையும் அரவணைத்துச் சென்ற பாங்கும், அதன் அருமையும் இப்போது புரிகிறது. விழாவை நடத்தும்  தலைமை மற்றும் செயலாற்றுபவர்களின் செயல்களிலிருந்தும் நடந்து கொள்ளும் விதத்திலேயும் அதன் வெற்றி இருக்கும். இந்தச் சத்திப்பும் அவ்வாறே அதனை பிரதிபலிக்கிறது.

ஒரு சந்திப்பை பலரும் கேள்வி கேட்பார்கள், அதற்குப் பதில் சொல்லும் உரிமை அதனை நடத்துபவர்களுக்கே உண்டு. சிலர் பதிலளிப்பார்கள், சிலர் மறுக்கலாம், அது அவரவர் உரிமையும்,  நேரமின்மையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அதனால் கேள்வி கேட்காதீர்கள், கேட்டு, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமிருந்து இப்படியானதொரு பதில் வந்தால் அதிர்ச்சி அடையாதீர்கள்.

Source- Thanks: http://pattikattaan.blogspot.com/2012/08/blog-post_29.html


பதிவுலகம் ஒரு கட்டுக்குள் அடங்காத காட்டுக் குதிரை, அதற்கு கடிவாளமிட்டு பெயரிட்டு, முதலாளியாக  ஆக விரும்புபவர்களுக்கு வெட்டிப்பயல் இட்ட பதிவே காலத்திற்கும் போதுமானது.

2006 வரைக்கும் தமிழ் பதிவுகளின் வீச்சு இந்தியை விட அதிகமாக இருந்தது. இப்பொழுது நாம் அனுபவிக்கும் இந்த வசதி இல்லாத காலத்தில் அதற்காக பாடுபட்ட உமர்தம்பி, காசி, மதிகந்தசாமி மற்றும் தமிழ்மண அன்பர்களை (பெயரை உபயோகப்படுத்துவதற்கு மன்னிக்கவும்) நாம் ஒவ்வொரு சின்ன சின்ன சந்திப்பிலும் நினைவு கூர்தல் தேவையானது இல்லை.


சென்னை பதிவர் சந்திப்பைப் பற்றிய என்னுடைய வருத்தம் இதுதான்:

சந்திப்பு நடந்து முடிந்து பலநாள் ஆகியும், நிகழ்ச்சி நடந்த விதம் பற்றிய ஒரு முழுமையான பதிவையும் இன்னும் நான் படிக்கவில்லை/என் கண்ணில் படவில்லை. சந்திப்பில், என்னைக் கிள்ளிட்டான், முடியை புடிச்சி இழுத்துட்டான் என்கிற பாங்கிலேயே அனைத்துப் பதிவுகளும் என் கண்ணில் படுகின்றன. ஏன் முழுமையான ஒரு பதிவும் இன்னும் வரவில்லை. சுரேகா ஆரம்பித்திருக்கிறார் என நினைகிறேன். பட்டிக்காட்டான் கணக்குக் காட்டிய பதிவை மட்டுமே ஒரு முழுமையான பதிவாக எண்ணுகிறேன். (பி.கு: மேலே இருக்கும் ஒரு படம் இந்தப் பதிவின் ஒரு மறுமொழியிலிருந்து எடுத்ததே).

இதனால் என்னைப் போல வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு பதிவருக்கும், இந்த சந்திப்பில் என்ன நடந்தது என இதுவரையில் முழுமையாக அறிந்திராத வகையில், இந்தச் சந்திப்பு ஏமாற்றமே அளிக்கிறது



மற்றபடி நண்பர்கள் குழுமமாக ஒரு நிகழ்ச்சி நடத்தியதற்கு வாழ்த்துகள்!

Friday, August 24, 2012

1/365 பதிவுலகத்தில் எட்டு ஆண்டுகள்

இப்ப இந்த 365 பிரபலமாகிட்டு வருது. (இதையே ஒரு தனிப்பதிவா போடணும்). சொக்கன் அவர்கள்தான் ஆரம்பிச்சார்ன்னு நினைக்கிறேன்.

அதனால நானும் ஒன்னை ஆரம்பிக்கிறேன். அதாவது தொடர்ந்து 365நாளும் பதிவு எழுதுறது. முடியுமான்னு தெரியல. சும்மா முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். எதைப் பத்தி எழுதுவேனா? நிஜமாத் தெரியலங்க. என்னை சுத்தி நடக்கிறது, ஓடுறது, பறக்கிறது பத்திதான் எழுதப்போறேன். பதிவுலகம் பத்தி எழுதுவதை நிறுத்தி பல வருசம் ஆனதால, அதைப் பத்தியும் கூட வரலாம். ஒரு காணொளி போட்டுட்டு போறது மாதிரி மொக்கைகளை தவிர்த்துட்டு எழுதறதா எண்ணம். அதாவது சொந்த புலம்பல், பெருமைபீத்தல் இப்படி ஏதாவது ஒரு வருசத்துக்கு எழுதறது. அட இதுவே ஒரு தற்பெருமை பதிவுங்கிறதால, இதுல இருந்தே ஆரம்பிக்கிறேன். 1/365


--00--


பதிவுலகம் வந்து இன்றோடு 8 ஆண்டு காலம் ஆகிருச்சு. ஏற்கனவே பல முறை ஒத்த அலைவரிசை நண்பர்கள் கிடைச்சாங்க, நேரம் போவுது, எங்கே போனாலும் ஒரு நண்பன் அங்கே இருக்காங்க, பொதுவா எங்கேயாவது கூட்டத்துக்குப் போனா ஒருத்தர் வந்து "நீங்கதான் விவசாயியா" அப்படின்னு கேட்கிறாங்க, அப்படின்னு எழுதியாச்சு.
அதனால ஒரே ஒரு நன்றி மட்டும் சொல்லிட்டு அடுத்த வருசத்துக்குப் போயிடறேன்.

--00--

 என் காலத்திலிருந்தே எழுதும் பதிவர்கள் ரொம்ப கம்மியாகிட்டாங்க. கானா பிரபா, கோவி கண்ணன், லக்கி, பெனாத்தல் சுரேஷ், இட்லிவடை, துளசி டீச்சர் இப்படி வெகுசொற்பமே. இன்னும் கொஞ்சம் பேர் அங்கொன்றும் இங்கொன்றுமா பதிவு போடுறாங்க. அப்படித்தான் ஆகும் என்பது நியதி.

மெரிக்கா வந்தப்புறம் பதிவுலகம் தாண்டி அதிக நண்பர்கள் கிடைக்கலை என்பதே நிஜம். போனவாரம் கூட பதிவுலக நண்பர்களைச் சந்திச்சேன். இந்த வாரமும் ஒருவரை சந்திக்கப்போறேன். அப்படி பதிவுலக நண்பர்களே என் வாழ்க்கையில சுத்தி இருக்கிறா மாதிரி ஆகிருச்சுங்க.

இத்தனை நாள் கூடவே இருக்கும் நண்பர்களை [2010ல் ஒரு நண்பர்கள் வட்டம் போட்டேன்(உ.த - அண்ணாச்சி மறந்துட்டேன்) ] அதுக்கு அப்புறம் ஒரு பதிவர்கூட நண்பனா மாறவே இல்லை. இல்லை, பிரமிப்பூட்டும் எழுத்துக்கள் கண்ல படவே இல்லை. ரொம்ப வருத்தம். மூத்தப் பதிவர்கள் எல்லாம்(2009க்கு முன்) கூகிள் +, ட்விட்டர் அப்படின்னு ஒதுங்கிட்டாங்க.




பதிவுலகம் நீர்த்துப் போகலாம், ஆனா இந்தளவுக்கு என்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. சமூக வலைதளங்கள் வந்தபிறகு, பதிவுலகம் மொக்கைகளை தவிர்த்திடுச்சுன்னே சொல்லலாம். ஆனால் பதிவுகளுக்கே சொந்தமான "அனுபவ" கதைகள் ரொம்ப கம்மியாகிருச்சு. கதை, கவிதைகள் கம்மியாகிருச்சு. தொடர்கதைகள் ரொம்ப சொற்பம். சரி விடுங்க, காலம் மாறிட்டே இருக்குல்ல.(நானும் ஒன்னுத்தையும் எழுதலைங்கிறது வேற கதை)

ஆம், 8 ஆண்டுகள் இந்தப் பதிவுலகம், எனக்கு பல நன்மைகளைத் தந்திருக்கு, அதுக்கு நன்றி சொல்லிட்டு 9வது ஆண்டுல அடியெடுத்து வைக்கிறேன்.  நன்றி நண்பர்களே!

Thursday, September 9, 2010

ட்விட்டர் நிச்சயம் NOபால்தான்

என் பர்ஸ் கர்நாடகா காவிரி போல என்றாள் தோழி. எப்பவாவது தான் திறக்கும் அதுலயும் ஒன்னும் வராதே என்ற அர்த்ததில்.

----OOOO----

வாரம் ஒரு முறைதான் குளிப்பியா என்றேன் தோழியிடம். ஆம் என்கிறாள். இப்படித்தான் சனிக்கிழமை என்ற பெயர் வந்திருக்குமோ?


----OOOO----



என்னை தொழிலதிபரே என்று கிண்டல் செய்வது தோழியின் வழக்கம். அவள் விட்ட மிஸ்ட் காலுக்கெல்லாம் நான் திருப்பி அழைக்க, நானெப்படி தொழிலதிபர் ஆவது, ஏர்டெல் முதலாளிதான் தொழிலதிபர் ஆகியிருக்காரு.

----OOOO----



வீட்டுக்கு வந்த தோழியிடம் ”இவன் எதுவுமே வச்சிக்க மாட்டான்” என்றார் அம்மா. “இல்லை. ஆண்ட்டி.அவன் மாறிட்டான்” என்ற தோழி காதில் சொன்னாள் ”அதான் கடன் நிறைய வெச்சிருக்கியே, காச எட்றா பேமானி”


----OOOO----


தோழியின் அப்பா உஷாரானவர். வீட்டு ஹாலில் “இங்கே நிறைய செலவு வெக்கப்படும் இதுக்கு இந்த வீட்டு நிர்வாகம் பொறுப்பேற்காது” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறார்.


----OOOO----


ட்விட்டர் நிச்சயம் நோபால்தான். இல்லையென்றால் ஒரு டிவிட் தப்பா போட்டாலே ஒரு நாடே செவுலு மேலவுட்டு கும்முறாங்களே. உண்மைதானோ???


----OOOO----



ஒரு நல்ல பழமொழி சொல்லுடா என்றாள் தோழி. “அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு” என்றேன். நீ தின்னே என் சொத்து அழியுது, இதுல உன் வீட்டாரும் சேர்ந்து இல்லே அழிக்கிறாங்க.


----OOOO----



ஒன்றே குளம். அதுல நீ எப்ப விழுவே

காதலும் கடனும் பிறர் தர வாரா

----OOOO----



டுவிஸ்கி: இந்தப் பதிவு கார்க்கி பதிவுக்கு எதிர்வினை இல்லீன்னு சொன்னா நம்பவா போறீங்க. இனிமே தோழி பதிவுக்கு எல்லாம் எதிராளி பதிவு வரும்னு எச்சரிக்கிறேன்.

Tuesday, September 15, 2009

பதிவுலகின் எமன்கள்

பதிவுலகின் எமன்கள், அதாவது ஒரு வருசம் பட்டாசு கெளப்பி பதிவெழுதுவோம். திடீர்னு ஒரு நிகழ்வு, எல்லாத்தையும் மறந்துட்டு மூத்தப்பதிவராகிடுவோம். என்ன காரணம்னு யோசிச்சதனால வந்ததுதான் இந்தப் பதிவு.

கல்யாணம்/காதல்:
பட்டைய கெளப்புன பதிவர்ங்க பல பேரு கல்யாணத்துக்கு பின்னாடி எஸ்ஸாகிருவாங்க. ஆசை அறுவது நாளு, மோகம் முப்பது நாளு வந்துருவாங்கன்னு நினைச்சா .. வரவே மாட்டாங்க. எப்பவாவது எங்கேயாவது ஒத்த வரியில் பின்னூட்டம் போடுவாங்க. அப்பப் படிச்சுகிட்டுதான் இருக்காங்க. அப்ப ஏன் எழுதறது இல்லே?
உதாரணம் - மங்களூர் சிவா, கவிதாயினி காயத்ரி

வேலை:
வேலை இல்லாமதான் பதிவெழுதறத ஆரம்பிப்போம், அப்புறம் அதே ஆணி அதிகாமயிருச்சுன்னா எழுத மாட்டோம். எழுத மேட்டர் இருக்கும், நேரம் கூட இருக்கும், ஆனா டச் விட்டுப்போயிருச்சுன்னு எழுத மாட்டாங்க.
உதாரணம்- ஜி.ரா.

வேற மோகம்.
கெளம்பிடாதீங்க. இது வேற மாதிரி. ட்விட்டரு, குழுமம் மாதிரிங்க. ட்விட்டருக்குள்ள போயிட்டா பதிவெல்லாம் படிப்பாங்க. ஆனா பின்னூட்டம் எல்லாம் ட்விட்டருல விழும். எதாவது எழுதனும்னு நினைச்சா கூட அங்கேயே எழுதிருவாங்க. இங்க வரவேண்டிய அவசியமே இருக்காது.
உதா: பெரிய கும்பலே இருக்கு.

இடம்மாற்றம்.
அதே வேலை, அதே கம்பனி. ஆனா இடம் மாறிட்டா எழுத மாட்டாங்க. காரணம் புது ஊர்ல செட் ஆவாத ஃபிகருங்க செட் ஆகியிருக்கலாம், அப்பா அம்மா குடும்பம்னு ஆகியிருக்கலாம், நண்பர்கள் குழு செட் ஆகியிருக்கலாம், இப்படி.
உதாரணம்: கப்பி, கைப்பு.


இடம்மாற்றம்-2
ஆகா, இதுல பார்ட்2 வான்னு கேட்டீங்க. ஆமாம் இன்னும் கூட வரலாம். வேலை மாறி போறீங்க. ஏற்கனவே இருந்த அலுவலகத்துல எல்லாத்தையும் தொறந்து விட்டுருப்பாங்க(Internet Connectionஐ சொன்னேங்க, வீண் கற்பனை வேணாம்). புது அலுவலகத்துல புதுசா சமைஞ்ச பொண்ணு மாதிரி Internetஐபொத்தி வெச்சிருப்பாங்க. நாமளும் பொத்திகிட்டு இருக்க வேண்டியதா இருக்கும்.
உதாரணம்: இளவஞ்சி

புது உறவு
கல்யாணம் ஆனா கூட பதிவு போடுறவங்க உண்டு, குழந்தை பொறந்துட்டா பார்த்துக்க போயிருவாங்க, புதுசா வந்த நண்பர்கள் கிண்டல் அடிக்கறாங்கன்னு எழுதாம விட்டவங்களும். அவ்ளோதான். இது திரும்ப வராத கேசுங்க.
உதாரணம்- வெட்டிப் பயல்.


Special case:
போலி,புலி,காலி,டவுசர் கழட்டப்பட்டது, துண்ட உருவுனது, மூக்கச் சிந்தினது, கொட்டாயி உட்டது, உருண்டு பொரண்டது நிறைய இருக்கு, அதாவது பதிவுலகமே காரணம். இப்போதைக்கு ஒரு கோடு போட்டு உட்டுருவோம். வேணாம்.

Writer’s Block:
முன்னாடி ஒரு எழவுமே எழுதி இருக்கமாட்டாங்க, திடீர்னு ஒரு 6 மாசம் எழுதமாட்டாங்க. காரணம் ஏன்னு கேட்டா Writer’s Blockம்பாங்க. இதை எல்லாம் ஏத்துக்கவே முடியாது. எத்தனை தனிமடல் வருது அதை தமிழாக்கம் பண்ணினாவே ஒரு நாளைக்கு 2 பதிவு போட்டுறலாம். இதுவும் சோம்பேறிகளின் காரணம்.

வேற எதுனாச்சும் உங்களுக்குத் தோணினாலும் பின்னூட்டத்துல போட்டுருங்க.

Thursday, September 3, 2009

நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு

நியூஜெர்சி- பதிவர்கள்/ட்விட்டர்கள் சந்திப்பு. போன வருடம் குளிர்காலத்தில் நடைபெற்ற சந்திப்பு மீண்டும் இந்த வருட வெயில் காலம் முடியறதுக்கு முன்னே முடிச்சுடலாம்னு நெனச்சோம். நாம நெனைக்கிறதெல்லாம் நடக்குதுங்களா? அதுவுமில்லாம பதிவர்களெல்லாம் ட்விட்டர்களாக மாறிப் போயிட்டாங்க. எதுவோ ஒன்னு,..

வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM(காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்
எங்கே: எடிசன், இடம் இன்னும் முடிவாகலைங்க. சீதோஸ்ண நிலையப் பொறுத்து. ஆனா எடிசன் பொதுவான இடங்கிறதால, முடிவாகிருச்சு.
அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.
சரி அப்புறம்: சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்: போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.

எத்தனை பேர் வர்றீங்கன்னு ஒரு கணக்கு சொல்ல பின்னூட்டம் போடுங்க மக்களே

Tuesday, December 2, 2008

NJ Bloggers Meet-2008

டிஸ்கி: தமிழ்மணத்திற்காக வெச்ச தலைப்பு : லக்கியும் செந்தழலும்தான் காரணமா?

வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணினது இதுதானுங் மொதோ முறை. இதுக்கு முன்னாடி ஒரு போனைப் போட்டு இங்கே வந்துருங்க, சாப்பாடு ரெடி அப்படின்னு சொன்னாப் போதும். ஆனா இந்த முறை பல முகங்களை பார்த்ததே இல்லே. அதனாலயே கொஞ்சம் நெருடல்.

முதல்ல நன்றியுரை:
'தமிழோவியம்' கணேஷ் சந்திரா, சத்யராஜ் குமார், ஜெய். இந்த மூணு பேருக்குமே எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அப்புறம் சஹானாவும் அவுங்க அம்மாவுக்கும். என்ன பேசினாலும் கேட்டுகிட்டு பொறுமையா இருந்தாங்க. (ச்சின்னப்பையன், உங்க வீட்டுல புதுசா பூரிக்கட்டை வாங்கியிருக்கீங்களாமே. உண்மையா?)

ஏற்கனவே படம், பதிவெல்லாம் எல்லாம் போட்டுட்டாங்க. இனிமே நான் என்னத்த எழுதறது? .

  • பாபாவின் அரசியல் அன்னிக்கும் அரங்கேறுச்சு, அவர் வரலை. கார் படிக்கட்டுல இடிச்சுக்கிட்டாரோ தெரியலை.
  • சங்கத்து சிங்கம் கப்பி வழக்கம்போல பொய் பேசி ஏமாத்துனாரு, அவரும் வரலை.
  • இனியா, அமரபாரதி ரெண்டு பேரும் வரலை, ஏன்னும் தெரிஞ்சிக்க முடியல. தொடர்பு எல்லைக்கு அப்பாலோ இப்பாலோ.... ஆனா தொடர்பே இல்லே :(
  • மும்பை, ஈழம்-உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தலாம்னு மோகன் சொன்ன போது ஒரு மாதிரியா.(Uncomfortable) இருந்துச்சு. ஆனா அது எவ்வளவு பெரிய விசயம்னு இப்போதான் தோணுது. HatsOff Mohan.
  • பொதுவா இருக்கிற பதிவர் சந்திப்பு மாதிரி இல்லீங்க இது. அதாவது ரொம்ப மொக்கை கம்மியா இருந்தது. பல விஷயங்களை ஆராய ஆட்களும் இருந்தாங்க. மூத்தப் பதிவர்கள்தான் ஆராய்வாங்களோ?. இதுல நான் மூத்தப் பதிவர் இல்லே முத்தப் பதிவர்தான் அடம்புடிச்சாரு கேஆர்எஸ். தொலஞ்சு போவட்டும்.
  • குழுப்பதிவுகள் வெற்றியடையாம போனதுக்கான காரணம் (Stop - இங்கே செவுப்புச்சட்டை மக்கள் நல்லா கவனிங்க), முதலாளித்துவம் இல்லாதததுதான் சொல்லிட்டாங்க.அதாவது ownership,. அதாவது ஒரு காரணத்துக்காக ஆரம்பிச்சு வேகமா மக்கள் ஒன்னு சேர்ந்து, பிறகு அவுங்க அவுங்க பதிவுலயே எழுதிக்கலாம்னு போயிடறதாலயும், தன்னோட பதிவுக்கு lime light தேவைங்கிறதுக்கும், admins எல்லாம் சீக்கிரமே ஆர்வம் இழந்திடறதும் காரணம். உண்மைதாங்க 2006ல எத்தனை குழுப்பதிவுகள் ஆரம்பிச்சாங்க. அதுல எத்தனை இப்போ செயல்ல இருக்கு?
  • சேவைகள் பதிவுகள் மூலமா செய்யலாமேன்னு மொக்கைச்சாமி கேட்க, ஒரு குழுவா இருந்து செய்ய பதிவுகள் தேவை இல்லை, குழுதான் தேவை. அதுக்கு மக்களே போதும்னு சொல்ல எல்லாரும் கப்சிப். அதுவுமில்லாம எதிர்வினைகள்தாங்க பதிவுகள்ல நல்ல விஷயம் செய்ய விடாம தடுக்குதுன்னும் காரணம் சொன்னாங்க. (பேரை மாத்துங்க மொக்கைச்சாமி ஐயா, பழைய போலி பேருதான் மொக்கைச்சாமி. உங்கப் பேரைக் கேட்டாவே ச்சும்மா உதறுதுல்ல)
  • செந்தழல், லக்கி entry க்கு அப்புறம்தான் நேரடித்தாக்குதல் அதிகமாச்சுன்னு சொல்ல அறையில் ஒரே நிசப்தம். இன்னும் காண்டு கஜேந்திரன் வந்திட்டுதான் இருக்குன்னு மனசுல நெனச்சுக்கிட்டு நானும் மண்டையா ஆட்டிக்கிட்டேன். ஆனா லக்கியோட பார்வையும் Graphம் இதை கண்டிப்பா மாத்திப்போட்டுரும். ஆனா இன்னிக்கு ரவியும், லக்கியும் வேற பாதையில ஜரூர போய்ட்டு இருக்காங்க, மத்தவங்க? ரவி கிட்டேயாவது தாக்குறதுக்கு சமமமா ஹாஸ்யப்பதிவுகள் வந்துச்சு. ஆனா இப்போ அப்படியா இருக்கு? நேரடித்தாக்குதல் பதிவு போடுறவங்களுக்கு- மக்களை நேராப் பார்த்தா எப்படி பேசமுடியும்னு யோசனை பண்ணி பதிவு போடுங்க.
  • மொக்கைக்கான காரணம், பலதும் அலசுனாங்க, காயப்போட்டாங்க. கடைசியில சுலுவா முடிச்சாரு கொத்ஸ். அதாவது செய்திய copy-paste பண்றதுதான் காரணம்னு சொன்னாரு. நானோ அதை விமர்சனம் பண்றதுதான் மொக்கைக்கு காரணம்னு சொன்னேன். செய்திய எல்லாரும் விமர்சனம் பண்ணப்போகவே மொக்கையாகிருதுங்களே. (பஞ்ச் பாலா செளக்கியங்களா கொத்ஸ்). போலியப் பத்தி பல புது மக்களுக்குத் தெரியவே இல்லே. எ.கொ.இ.ச. மொக்கைக்கு கொத்ஸ் சொன்ன உதாரணம், பதிவ படிச்சதும் பதிவு போட்டவனோட செவுனிய காட்டி அப்பலாம்னு தோணிச்சுதுன்னா அது மொக்கைப் பதிவு. அதுக்கு கணேசின் பெருத்த ஆதரவு வேற. மொக்க பதிவுக்கு மட்டுமா அப்பலாம்னு தோணுது?
  • ’பதிவை எழுதினதுக்கு உடனே வெளியிட்டா அதனோட தரம் இல்லே, ரெண்டு மூணு நாள் கழிச்சு நீங்களே ஒரு முறை நிதானமா படிச்சு, திருத்தி வெளியிடுங்க, அப்போ அந்தப் பதிவு கண்டிப்பா நல்லா வரும்’னு சொன்னாரு ஜெய். இப்படி பண்ணினா, நானெல்லாம் பதிவே போடமுடியாது. ஆனாலும் நல்ல யோசனைதான். இந்தப் பதிவும் அந்த முறையிலே போட்டு இருக்கேன், வித்தியாசம் தெரியுது.இனிமேலும் பின்பற்ற போறேன்.
  • மருதநாயகத்த காய்ச்ச பல வருசம் காத்திருந்தது, அன்னிக்குத்தான் நிறைவேறுச்சு. பல சமயம் அவரோட பதிவுகளை வாரினேன். நல்ல பதிவுகள் போட்டா படிக்க மாட்டேங்குறாங்க, அதனாலயே மொக்கை பதிவுகள் போடுறேன்'னு வாக்குமூலம் வேற குடுத்தாரு.
  • ச்சின்னப்பையன் பேர்க்காரணமே கலாய்ச்ச மாதிரி ஆகிருச்சு. 'இச்'சின்னப்பையனா எல்லார் கண்ணுக்கும் தெரிஞ்சாரு. மனுசன் பதிவுலதான் அடிச்சு ஆடுறாரு, நேருல.. சத்தமே இல்லே. (இனிப்பு நல்லா இருந்துச்சுங்க Mrs. இச்சின்னப்பையன்)
  • தன்னோட பதிவுகள விமர்சனம் பண்ணுங்கன்னு மோகன் அடம் பிடிக்க, பொதுவுல நிறை/குறை சொன்னா அவரோட எழுத்தோட வீரியத்தையும், வேகத்தையும் குறைக்கும்னு மனசுல நினைச்சுகிட்டு, அவரோட பதிவுகளைப் படிச்சதே இல்லைன்னு 'டகால்டியா' உண்மையச் சொன்னேன். இனிமே இப்படி பொதுவுல கேக்காதீங்க. தவறுகளை மட்டுமே பார்க்கும் சமூகம் இது. கசக்கும் உமிழ்நீர் சுரப்பதில் தவறில்லை, ஆனா அது மருந்தாகவும் இருக்கலாம்.
  • நசரேயன், சத்தமே இல்லாம சிரிச்சுகிட்டே போனாரு, ஒன்னும் விசேசம் இல்லே.
  • ஜெய்-யார்யா இது? ராயர் கிளப்ல இருந்து இன்னி வரைக்கும் இருக்கிற மேட்டரை உள்ளங்கையில் வெச்சுகிட்டு இருக்காரு. எழுதறது இல்லே, படிக்கிறதோட சரின்னாரு.. இவர்தான் அன்னிக்கு ஆட்ட நாயகன். ஏகப்பட்ட சிக்ஸர் அடிச்சாரு(இட்லி வடையா இருப்பாரோ?)
  • ரோஹன் இவரை பத்தி நிச்சயம் சொல்லி ஆகணும்,சென்னை எல்லை கோட்டை தாண்டிய வுடனே எலிசபெத் ராணி பேரன்/பேத்தி மாதிரி பேசும் தமிழ் மக்கள் மத்தியிலே,தமிழ் நாட்டு வாடை கொஞ்சம் ௬ட இல்லனாலும், தமிழ் படிக்கணும்,தமிழ் பேசனுமுன்னு அவர் சொல்லும் போது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது, அவர் தமிழிலும் பேசிக்காட்டினார், நமிதாவை விட நல்லா தமிழ் பேசுகிறார்-நன்றி நசரேயன். இவரோட உற்சாகத்துக்கு, பலே பேஷ் நன்றி (இப்படித்தான் பேசனும்னு கொத்ஸ் முன்னாடியே சொல்லி கூட்டிட்டு வந்திருப்பாருங்கிறது நுண்ணரசியல்)
  • எல்லா இடத்துலேயும் சந்திப்பு முடிஞ்சு வெளியே வந்து ஒரு சந்திப்பு நடக்கும். அதாவது தம்மரே தம், இங்கே தம்தான் இல்லே. கூட்டமா இருந்ததைப் பார்த்து ஒரு மாமா காருல வந்துட்டு, நோட்டம் விட்டாரு பின்னாடி தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி சும்மாவே திரும்பிப் போனாரு.

ஆக மொத்தம் ஒரு வித்தியாசமான படம் சொல்ற டைரக்டருங்க மாதிரி நானும் சொல்லிக்கிறேன், இதுவும் ஒரு வித்தியாசமான சந்திப்புதான்.

Wednesday, November 19, 2008

New Jersey-வலைப்பதிவர் சந்திப்பு-08


வணக்கமுங்க,
வட அமெரிக்க வலைப் பதிவாளர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இந்தக் குளிர்காலத்திலேயும் சந்திக்கனும் முடிவு செஞ்சுட்டாங்க. எழுத்துதான் உலகம்னு இருக்குற நமக்கு ஏதுங்க குளிர், வெயில். அதுக்கு பேர் எல்லாம் வெக்கனுமாம்ல. அதனால அதுக்கு Thanksgiving 08 வெச்சாச்சுங்க(ரோஜாவுக்கு பேரா முக்கியம்). தமிழ்ல நன்றி நவிலல்னு வெச்சுக்கலாம்.

இடம்:
Hoysala Restaurant
Highwood Plaza
2 John F Kennedy Blvd,
Somerset, NJ 08873
Ph: 732-247-4300

View Larger Map

நாள்:
நவம்பர்-29-2008- சனிக்கிழமை.


நேரம்:
5:30துல இருந்து 7:30 மணி வரக்கும்.(அதுக்கு மேல அங்கே இருந்தா செவுனியக் காட்டி அப்புவேன்னு சொல்லிப்புட்டாரு அந்த ஹோட்டல் டேமஜரு).அதனால 5:15க்கே வந்துரோனும்.

இன்னும் சந்தேகம் இருந்தா எனக்கு ஒரு தனி மடல் போடுங்க: ilamurugu அட்டு gmail டாட்டு com.

தேவை:
நீங்க வருவீங்கன்னா ஒரு பின்னூட்டம்.(இல்லாட்டினா வாழ்த்தோ, முட்ட கோசோ, தக்காளியோ, முட்டையோ.. அனுப்பிருங்க). எதுக்குன்னா ஒரு கணக்குக்குதான்.

எதுக்குன்னு கேக்க மாட்டீங்களா. அதாங்க டேமில்ல Agenda: பதிவுகளில் மொக்கைய குறைப்பது எப்படின்னு மொக்கைதான் போடப் போறோம். அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.(சிரிக்காதீங்க ஆமா).

அப்புறம் இந்த சந்திப்புக்கு வெத போட்ட நசரேயன், பேரு வெச்ச கொத்ஸ், இடம் புடிச்சுக்கொடுத்த KRS, நேரத்தை நிர்ணயம் பண்ணின பாபா எல்லாருக்கும் ஒரு நன்றி!

Wednesday, October 15, 2008

* என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

அதெல்லாம் ஞாபகத்துக்கு இல்லீங்க. ஊருல திரை கட்டி விசேசத்துக்கு படம் போடுவாங்க. அது சுதந்திரதினம், எம்ஜிஆரு பொறந்த நாளு, மாரியாயி நோன்பி, கருப்பண்ண பொங்கல்னு. மொத படம் பழசாவும், ரெண்டாவது படம் புதுசாவும் இருக்கும். ஆனா நான் பார்த்த மொதோ படம் "நினைத்ததை முடிப்பவன்"னு அம்மா சொன்னாங்க.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம், குரோம்பேட்டை ராகேஷ்ல கூட்டாளிங்களோட ஒரு தடவை, அம்மணியோட ஈரோட்டுல ஒரு தடவை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
பந்தயம்தான். அதெல்லாம் தெனம் ஒரு படம் பார்க்குறோம். Tube Tamil, Tamil Wire, TamilOன்னு வாரம் ரெண்டாவது பார்க்குறோம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பார்க்குற ஆள் நானு. அண்ணாமலை, ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், அப்படின்னு பெரிய பட்டியல் போடலாம்.உன்னால் முடியும் தம்பி என்னிக்குமே புடிச்ச படம், அது மாதிரி ஏதாவது செய்யனும் நினைச்ச படம். கஜேந்திரான்னு ஒரு படம், அது மாதிரி பாதிச்ச படம் எதுவுமே இல்லே. ங்கோ.......

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சண்டியர், என்ன கருமத்துக்கு தலைப்பை மாத்தச் சொன்னாங்களோ தெரியல.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
அதே தொழிலா இருந்ததால ஒன்னும் சொல்ல முடியல. ஆனா தசாதவதாரம் ஆரம்பக் காட்சிகளின் சொதப்பல் மாதிரி நெறைய குறைய மட்டும் கண்டுபிடிக்க முடியுது. காரணம் அதேத் தொழிலுல 3 ஆண்டு அனுபவம்.
PC SreeRaam, மணி ரதனம், விட்டலாச்சாரியார், மாயாவி வெங்கி இவுங்க எல்லாம் என்னை பாதிச்சவங்க. ஏன் ஜீன்ஸ் படம்,, எப்பா எப்பா, சங்கர் மாதிரி தொழில்நுட்பத்துக்கு மெனக்கெடுற ஆட்கள் ரொம்ப கம்மி(காப்பி அடிக்கிறதை அவர் தவிர்க்கலாம்)

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நெறைய, எல்லாம் Onlineலதான்.வேற என்ன இருக்கு. சினிமா எக்ஸ்பிரஸ் மாதிரி சினிமாவுக்குன்னே வர பொஸ்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இல்லீங்க. எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில், சினிமாப் பொன்னையா, வாரமலர் துணுக்கு மூட்டை, ஜூவி மியாவ் மாதிரிதான்.

7.தமிழ்ச்சினிமா இசை?
உயிர்நாடி. பதில் 9 வது கேள்வில பாருங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இரானி, ஸ்பெயின் மாதிரியான தரமான படங்கள் மட்டும்தான் பார்ப்பேன்னு புருடா விடத்தயாரா இல்லே. தமிழ், Subtitleவெச்சா ஆங்கிலம், ஹிந்தி பார்க்குறது உண்டு, Dil Chata Hai, முங்காரு மலே(கன்னடம்), மணி சித்திரதாழ், ..etc

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
4 வருசமா இசை அமைப்பாளர்கள் அலுவலக்த்துக்கு ஏறி இறங்கி நாசமாப் போனது பெரிசு. காசு குடுத்து கேஸட் வாங்கி அதுல நம்ம ட்யூனை போட்டு sampleஆ குடுத்தா, அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்.. "அய்யோ நம்ம ட்யூனாச்சேன்""னு போயி கேட்டா 5 ஆயிரமோ பத்தாயிரனோ குடுத்து வாயடச்சுருவாங்க. (சங்கர்)கணேசுக்கு குண்டுப் பார்சல் அனுப்பிச்சது சரின்னு அப்போத் தோணும். அப்படி பின்னாடி நெறைய புண்ணு வாங்கின சம்பவங்களினால சினிமாவே வேணாம்டான்னு இப்போ இருக்கிற பொழப்ப பார்க்கிறேன். Junior Artists ரித்தீஸ், நெப்போலியன், ஆட்டம் போடுற ஸ்ரீதர், நோபல், ஜானி இவுங்களோட தெனமும் கூட வாழ்ந்த வாழ்க்கைன்னு நிறைய இருக்கு. அதெல்லாம் ஒரு சோகக்கதை. எங்கூரு ஆபாவாணன், எங்க ஊரே சேர்ந்து எடுத்து சிவாஜி நடிச்சு வெளிவராத ஒரே படம் ஆயிரம் கைகள், பவளக்கொடிக்கு இசை அமைச்ச என் மாமன் திலீப்...etc

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லாவே இருக்கும். ஆனா எந்த நடிகரும் அரசியலுக்கு போவ கூடாது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நல்லா இருப்பாங்க/இருப்பேன். வேற வேலை பார்க்கலாம், பதிவுகள் பாதியா கம்மியாயிரும். பால் மீதி ஆவும், சீரியல் அதிகமாகும், குத்தாட்டம் ஆட்டம் நெறைய நடக்கும்.

பொதுவா சங்கிலித் தொடருக்குன்னா வர மாட்டேன். கொத்தனாரே என்னமோ கேட்க நானும் ஆமாஞ்சாமின்னு சொல்ல.. இப்படி ஆகிப்போச்சு வாழ்க்கை. நானும் 5 பேரைக் கூப்பிடனுமாமே. அதான் சினிமாக்காரங்களையே கூப்பிடுவோம், வந்து எழுதலை....நடக்கிறதே வேற

1. மு.கருணாநிதி
2. ஜெ. ஜெயலலிதா
3. ரஜினி
4. கமல்
5. அமிதாப்(ஆசுபத்திரியிலிருந்த வந்தவுடன் எழுதினாப் போதும்)
6. சிரஞ்சீவி காரு.

Monday, October 13, 2008

* செந்தழல் ரவி - BlogOgraphy

பொதுவா பதிவர்களைப் பத்தி எழுதறதை தவிர்த்துட்டே வந்திருக்கேன். காரணம், தேவையில்லாத சச்சரவு வரும்னுதான். தலையில மண்ண வாரிப் போட்டுப்பாங்களான்னுதான். பதிவர் வட்டத்தைப் பத்தி எழுதினா குழுமடல் மாதிரியும் ஆகிருங்கிறது என்னோட எண்ணம். பதிவுலகத்தை திருப்பி போட்டவங்க (இதென்ன தோசையா?) சிலரைப் பத்தி, இல்லைன்னா பதிவுலகமே திரும்பி பார்த்தவங்கங்களைப் எழுதனும்னு நெனைச்சுட்டு இருந்தேன். அதுக்கு காலம் நேரம் எல்லாம் சரியா வரனும்தானே. அது என்ன BlogOgraphy? BioGraphy மாதிரிதான்.

மொதல்ல எழுதனும்னு நினைச்சது செந்தழல் ரவியப் பத்தி.

முன்குறிப்பு: Comments moderated.

நான் தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்தக் காலத்துல ரொம்ப நாகரிகமா கருத்துக்களை மறுத்தாங்க(போலி மட்டும் கெட்ட வார்த்தையிலதான் திட்டுவாரு). ஏதோ ஒரு பதிவுல எங்கே பார்த்தாலும் "I beg a pardon to offfend your post" அப்படின்னு பார்த்திருக்கேன். இந்தமாதிரி நாகரிகமான ஒரு கட்டமைப்பை உடைச்சதுல செந்தழல் ரவிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கு. அந்தக் காலத்துல தான் செந்தழல் ரவி பதிவுலகத்து வந்தாரு. வந்தவுடனே டமால் டுமீல்னு பதிவுகள் வரும். செம கடுப்புல எல்லாரும் பார்த்துட்டு இருந்தோம். இதுல இரவுக்கழுக்குன்னு ஒரு கேங் வேற தரத்துக்கு கீழே போச்சு.(நம்பி ஏமாத்துனா தரத்துக்கு கீழேங்கிறது என்னோட வாதம்). பொன்ஸ் பத்தி எழுதின பதிவுதான் எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்கு ரவி மேல செம கோவம் வர வெச்ச பதிவு. ஆம்புளைகளோட பதிவுகளையே கிண்டல் அடிக்க யோசிக்கிற நேரத்துல ஒரு பொண்ணைப் பத்தி(Personalஆ) எழுதுனப் பதிவைப் பார்த்து கோவம் வராதுங்களா?


ரவிய நான் மாமா, மச்சான்னு கூப்பிட ஆரம்பிச்ச காலத்துலதான் ரவி போலி கேங்ல இருக்காருன்னு கேள்விப்பட்டேன். அந்தச் சமயத்துல தான் ரவி தேடுJobs ஆரம்பிச்சாரு. அதுவரைக்கு வில்லனா இருந்த ரவி கதாநாயகனா எல்லா பத்திரிக்கையிலும் வலம் வந்தாரு. அப்பதான் நானும் மோஹன்தாஸும் ரவிய நாய் கடிச்சதைப் பதிவப் போட போலி எங்களுக்கு நேரடியாவே நாய் பட்டம் குடுத்து பாராட்டினதும் இந்தப் பதிவுக்கு தேவை இல்லாத தம்பட்டம்.

ரவி ’U’ அடிச்சது, போலிகளோட நடந்த சண்டைதான். அதான் தமிழ்ப் பதிவுலகத்தோட வரலாறு பக்கமாச்சு. அப்புறம் கர்நாடகா பிரச்சினை வந்ததும், ரவிக்கு போலிகளால தொந்தரவு வந்ததும், செல்லாவும் ரவியும் போலிய பத்தி போலீஸ்ல புகார் தந்ததும் ரகசியமாவே இருந்ததுச்சு. பூனைக்கு மணிய கட்டிய பெருமை இவுங்களையேச் சாரும். இன்னிக்கும் பல பேரோட பின்னூட்டப் பொட்டி திறந்தாப்ல இருக்குன்னா அதுக்கு ரவியும் ஒரு காரணம்.

வீராச்சாமி படத்துக்கு படம் பார்க்காமையே அவர் எழுதுன விமர்சனம் என்னோட favourite. அதுக்கு முன்னாடி சில நல்ல பதிவுகள் வந்ததும் உண்டு. கோழி திருடன், தேங்காய் பொறுக்கி எல்லாம் டாப் டக்கர்.

இன்னும் செந்தழல் ரவி பதிவுலகத்தின் நாகரிகத்தை கண்டுக்கவே இல்லீங்கிறது வருத்தம்தான்(அப்படின்னு ஒன்னு இருக்கா?). இன்னும் அவர் பிராமிணர்களை வசை பாடுறதும், அவர் பதிவுகள்ல அடுத்தவங்க போட்ட பிடிக்காத பின்னூட்டத்துக்கு அனானியா அவரே பின்னூட்டமா திட்டுறதும் எனக்குப் பிடிக்காத செயல்.

(தொடரும்)

அடுத்தப் பதிவர் - கருத்து கந்தசாமி

* திரட்டியை COPY அடிப்பது எப்படி?

பதிவ திருடினாங்க, பொறுத்துக்கிட்டோம்.
கவிதைய திருடினாங்க ஒத்துகிட்டோம்.
கதைய பதிவுலிருந்து திருடி, தனிமடலா தன் பேருல அனுப்பிச்சாங்க, சிரிச்சிகிட்டோம்.

திரட்டியையுமா? என்னமோ போங்க, தமிழை வாழ வெக்க இவ்வளவு சிரமப்படுறீங்கன்னு தெரியுது. வாழ்க தமிழ்!

நகல்:



அசல்:
Tamil BLOGKUT-சங்கமம்

Tuesday, August 26, 2008

தமிழ்-பதிவர்களின் வெறியாட்டம்

சாதாரணமாவே நம்ம மக்களுக்கு தமிழார்வம் அதிகமுங்க. அதுவும் அப்பால் தமிழ்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கிற தமிழனுக்கு தமிழ் மேல பற்று கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். blogs எனப்படும் பதிவுகள் நிறைய மக்களோட கருத்து பிரதி பலிப்பா இருக்காம்.

விசயகாந்த் கணக்கா ஒரு கணக்கு சொல்றேன் பாருங்க. அதாவது போன மாசத்துல (ஜூலை-2008) கணக்குப்படி இந்திய மொழிகளில் அதிகம் எந்த மொழிக்கு பதிவுகள் வருதுன்னு கணக்கெடுக்கலாம்னு நினைச்சேன். அதன் படி மொழி மற்றும் பதிவுகளின் எண்ணிக்கைய பாருங்க.

(Thanks BLOGKUT.COM)

Tamil-12384
Telugu-2396
Malayalam-5003
Kannada - 2416
Hindi-11649.

இதிலென்ன கொடுமைன்னா இந்தியாவுல அதிகம் பேர் பேசுற மொழியான ஹிந்தில தமிழைவிடக் குறைவான பதிவுகள் வருது. அதிகமா ஆங்கிலத்துலதான் எழுதுறாங்க போல. கணக்குப்படி நம்ம மக்களின் வெறிய பார்த்தீங்களா? இதுக்கு எல்லாம் யாரு காரணம்? பதிவர்களும், திரட்டிங்களும்தானுங்களே..

Disc: This is upto my knowledge and calculations are as per Google-Blog search-Language based-Rss.

தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்து 3 வருசம் ஆகிருச்சு அப்படிங்கிறதை சுருக்கமா சொல்லிக்கிறேனுங்க. 4 வது வருசத்துல அடியெடுத்து வைக்கிறேங்க.

Wednesday, July 16, 2008

பெயரிலிக்கு ஒரு யோசனை

தமிழ்மணம் நிர்வாக குழுவிலிருக்கிற பெயரிலி(எ) இரமணீதரன் அவர்களே, உங்களுக்குமா தமிழ்மணம் பத்தி தெரியலீங்க? உங்களுக்குத் தெரியாத தொழில் நுட்பமா?

உங்களோட பேரு -/பெயரிலினு வெச்சு இருக்கீங்க. இதனால உங்க மறுமொழிகளை தமிழ்மணத்துல படிக்க முடியுங்களா?

மேலும் இந்தத் தொடுப்பைப் பாருங்க( ம திரட்டில வரும் ))

http://tamilmanam.net/comments/-/பெயரிலி. இது வேலை செய்யாதுங்களே... யோசனைய சொல்ற அளவுக்கோ சண்டை போடுற அளவுக்கு நாங்க எல்லாம் பெரிய ஆளுங்க இல்லீங்க அப்படின்னு இங்கே நாம் சொல்லிக்கிறோமுங்க.


அட இப்படி மொக்க போடவா பெரியவங்க பேர இழுக்கனும்.... இருங்க..

ஒரு யோசனை சொல்றேங்க. ஒரு பந்தை எடுத்துக்குங்க, ஒரு செவுத்த பார்த்து வீசுங்க. பந்து திரும்பி உங்களுக்கே வந்துரும். மறுபடியும் வீசுங்க. திரும்ப உங்களுக்கே வரும். வீசிட்டே இருங்க வந்துட்டே இருக்கும். இதனால செவுரு என்ன ஒடைஞ்சா போயிருங்க?



ஏதோ ஒன்னை முடிவு பண்ணியாச்சு, அதை செஞ்சாச்சு அப்புறம் எதுக்குங்க எல்லாரும் எல்லாத்துக்கும் வெளக்கஞ்சொல்றீங்க? இப்படி வெளக்கம் சொல்லிச் சொல்லியே தமிழ்மணம் முழும் வெளக்கமாவும், குத்தஞ்சொல்றதாவும் இருக்கு.

இந்தப் புண்நவீனத்துவியாதிங்க இருக்காங்களே அவுங்களுக்கு காமம், கருமாந்திரம், மூத்திரம் ...இப்படி வார்த்தைங்க போட்டுதான் எழுத வருமா?. நல்லதா எழுதினா நாறிப்போயிருவாங்களா? இல்லே புண்நவீனத்துவம் பழசாகிருமா?

Saturday, May 24, 2008

Google Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்

இந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி எல்லாப் பதிவுகளையும் திரட்டி இல்லாம எப்படி படிக்கிறதுன்னு படிச்சுட்டு வந்துருங்க

முதல்ல ஒன்னு சொல்றேங்க. மாங்கு மாங்குன்னு பொட்டியத் தட்டி, விடிய விடிய கண்ணு முழிச்சி உருவாக்கின திரட்டியில இருக்கிற வசதிகளை எல்லாம் சுலபமா ரெண்டு நிமிஷத்துல பண்ணிட முடியாதுங்க. அதுக்கான வசதி இன்னும் வரலை. பிற்காலத்துல வரலாம்.

எல்லாருடைய பின்னூட்டங்களையும் படிப்பீங்க அப்படிங்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்குன்னு சில பதிவர்களை பிடிச்சு இருக்கும். அவுங்க பின்னூட்டங்களை தொடர்ந்து படிச்சுட்டு வருவீங்க. அவுங்க பதிவுகளின் ஓடைகளை எடுத்து திரட்டலாம். உதாரணத்துக்கு நீங்க தொடர்ந்து 10 பதிவர்களின் பதிவுகளை படிச்சுட்டு வர்றீங்கன்னு வெச்சுக்கலாம். அவுங்க பின்னூட்ட ஓடையை சேர்த்துக்குங்க.

உதாரணத்துக்கு http://vivasaayi.blogspot.com/feeds/comments/default. இது என்னோட பின்னூட்ட ஓடை. http://*********.blogspot.com/feeds/comments/default இப்படி எந்த blogspotக்கும் பின்னூட்ட ஓடை இருக்கும். இதுல என்ன ஒரு வசதின்னா பின்னூட்டம் முழுசாவே படிச்சுக்கலாம்.

wordpressக்கு http://*******.wordpress.com/comments/feed/. திரட்டிகளை அலுவலகத்துல தடுத்து இருந்தாலும் ரீடர் மூலமாவே படிச்சுக்கலாம்.

Monday, May 5, 2008

OPMLம் ஈரவெங்காயமும்

Tamil OPEN OPML குழு - என்ன செஞ்சது? ஒன்னும் கிழிக்கவில்லை. எல்லாப் பதிவுகளையும் முக்கி முக்கித் தேடி எல்லாத்தையும் ஒட்டவெச்சு ஒரு OPMLஆ குடுத்தோம். சிலர் மூக்கைச் சுத்தி சாப்பிடுவாங்க இல்லே, அதுமாதிரிதான் இதுவும்.

நான் தொழில்நுட்பத்தை புரிஞ்சிகிட்டது OPML வெளியிட்ட ஒரு வாரத்துக்குப் பின்னாடிதாங்க. 4000 ஓடையயும் ரீடர்ல போட்டா சாவுது, தொங்குது,அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்த நேரத்துல ரவிசங்கர் ஒரு பிட்டை போட்டுட்டு போனாரு. அதாவது எல்லாத் தமிழ்ப் பதிவுகளையும் படிக்க ஒரே ஓடை இருந்தாப் போதும்னு. OPML, 4000 ஓடை எதுவுமே தேவை இல்லை. Google Readerல இந்த ஓடையச் சேர்த்துட்டா எந்தத் திரட்டிக்குமே வரத் தேவை இல்லைங்க. அந்த ஓடை இதோ...

http://www.google.com/blogsearch_feeds?as_q=.&lr=lang_ta&safe=active&q=.&ie=utf-8&output=rss

அடுத்தப் பதிவுல Google readerல எப்படி பின்னூட்டத்தையும் திரட்டுறதுன்னும் சொல்லிடறேன். திரட்டி செய்ய எந்த வழங்கியுமே தேவை இல்லை.. Google Readerஏ போதும்.

கூகில் ரீடர் இல்லாம கூட பதிவ படிக்கலாங்க, அதாவது ஒரு திரட்டி மாதிரி. அதுவும்கூட முடியும் எப்படின்னும் அடுத்தப் பதிவுலேயே சொல்றேன்..

Friday, July 6, 2007

நாய் கடிச்சிருப்பா...

ராத்திரி கும்மிருட்டு, சீட்டி அடிச்சுகிட்டு கைய வீசி நடந்து போன செந்தழல் ரவி காலை கடிச்சுட்டு ஓடிச்சிருச்சாம். ரத்தம் சொட்ட சொட்ட வூட்டுக்கு வந்து கடமை தவறாம ஜி.டாக்ல லாகின் பண்ணி சேட் பண்ணினவங்களை எல்லாம் கடிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஏன் இந்த கொலை வெறி ரவி?

அண்ணார் எங்கே இருந்தாலும் நாலு வேளை சோறு கிடைக்க ஏற்பாடு பண்ணிடுங்க, பாவம் பெங்களூரில குளிர் வேற ஜாஸ்தியாம். ரவிய கடிச்சவருக்கு தான் சோறு போட சொல்றேன்.

ரவிய கடிச்சதுக்கு பதிலா இவரை கடிச்சு வெச்சு இருக்கலாம், புண்ணியமாவது கிடைச்சு இருக்கும்.

Tuesday, June 19, 2007

காணாமல் போனவர்கள்-தாணு, ஜிஜி

1) நட்புக்காகன்னு நல்லாதான் எழுதிகிட்டு இருந்தாங்க. மேட்டூர் அணை நிரம்பி வழிஞ்ச போது எழுதின பதிவென்ன? நட்சத்திரத்துல கலக்குன கலக்கலென்ன? ஒரு ஆடு குட்டி போட்டப்ப அழுத அழுவாச்சி என்ன? சிசுக் கொலையைப் பத்தி கிழிச்ச கிழிச்சல் என்ன? என்ன? என்ன?என்ன?என்ன?என்ன? என்ன?...
அப்புறம் காணாம போயிட்டாங்க. எங்கே போனாங்கன்னே தெரியல. கண்டுபுடிச்சு குடுத்தா அவுங்க ஆசுபத்திரிலேயே இலவசமா ஆப்ரேசன் பண்ணிக்கலாம். பலருக்கு தெரியாத அந்த பதிவர் இவுங்கதான்

2) தடாலடியார் ஜிஜி, பேர் சொன்னாவே பலரும் போட்டிக்கு தயாராகிடுவீங்களே. அவரையும் கண்டுபுடிங்க. அவரை கண்டுபுடிக்க அவர் தொலைக்காட்சிலேயே ஒரு வெளம்பரம் குடுத்துடலாமா?

இவுங்களையெல்லாம் பதிவுலகத்துக்கு இழுக்கிற வழியை ப.க.ச மேற்கொள்ளுமா?இல்லே அமுக மேற்கொள்ளுமா? இல்லே பாசக்கார குடும்பம்? எனி ஒன் ஓஃப் தி சங்கம்? சற்றுமுன் குழு?

Monday, June 18, 2007

அதிரும் தமிழ்மணம்

கடந்த 2 மாதமாக் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் வியக்க வைக்குதுங்க. 40 பின்னூட்ட ஊயரெல்லையை உயர்த்தி 40+,அனைத்து பின்னூட்டங்களும் மற்றும் நட்சத்திரம்ன்னு டேப்(Tab) Browsing நுட்பத்தை கொண்டு வந்தாங்க. அதுதான் முதல், அப்புறம் சூடான இடுகைகளும், பரண் போன்ற நல்ல விஷயங்களும் கொண்டு வந்து இருக்காங்க. மறுமொழிதிரட்டியும் அருமை. ஆனால் அது எந்த அளவுக்கு பயன்படுதுன்னு தெரியலைங்க.


அதுவுமில்லாம இப்போ தமிழ்விழி-விழியத்திரட்டி என்னும் அடுத்த தலைமுறைக்கான நுட்பமான ஓடும் படங்களுக்கான திரட்டியும் கொண்டு வந்து இருக்காங்க. திரட்டி போட்டியும் பலமா இருக்குற இந்த காலத்துல இப்படி அசத்துறாங்களே. வாழ்த்துக்கள்! குழும பதிவுல சமீபமா பதிவு போட்டவங்க பேர் மட்டும் வந்துகிட்டு இருந்தது, அதுவும் இப்போ சரியாகிருச்சு. யாரோ பலமான ஒரு நுட்பர் பிஸ்து கிளப்புறாரு. அவருக்கு Hats Off!





அதேமாதிரி தமிழ்மணத்தின் வேகம் இப்போ ரொம்ப நல்லா இருக்கு. புது சர்வருல ஓட்டுறாங்களோ இல்லை அகலப்பாட்டை அதிகப்படுத்துனாங்களோ தெரியல. ஆனா வேகம்.








எனக்கும் சில விஷயங்களை தமிழ்மணத்துக்கு சொல்லனும் நினைக்கிறது உண்டு. அவை


1) Tab Browsing க்கு ஏத்தா மாதிரி வடிவமைத்தல். IE 7 மற்றும் இதர browerகளில் ஒரு Browser மட்டும் திறந்து மற்ற வலை தளங்களை இன்னொரு Browser திறக்காமையே பார்க்க முடியும். தமிழ்மணத்துல இருக்கிற ஒரு இடுகையை திறந்தால் இன்னொரு browser திறக்கும். படித்து விட்டு அந்த browserஐ மூடாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லையெனில் மறுபடியும் அதேகதைதான். இல்லையெனில் வலது பட்டனை தட்டி Open in New Tab தட்ட வேண்டி இருக்கிறது. Tab Browsing ல் பிரச்சினை தமிழ்மணத்தில் மட்டும் இல்லை தனியாக browser திறக்கும் அனைத்து தளங்களிலுமே இந்த பிரச்சினை இருக்குதுங்க.






2) 1024 x 768-Best with 1024 x 768 resolution அப்படின்னு முகப்புல போட்டு இருக்கிறது தெரிஞ்சே இந்தக் கேள்வி. இப்போ வர பொட்டி எல்லாம் குறைந்தபட்சம் 1280 x 800ல் தான் வருது.அதாவது 256 MB Display Memory. இந்த resolutionல் தமிழ்மணத்தை திறந்தால் பின்னூட்டப் பக்கம் சற்றே கலைஞ்ச மாதிரி இருக்குது.

3) குறிச்சொல் குறிப்பிட்டு இப்போ பதிவுகளை தெரிவிக்கிறது இல்லே, (நினைக்கிறேன்) அப்புறம் "அனைத்து குறிச்சொற்களும்..." அப்படின்னு ஒரு கட்டம் வருதே அது எப்படி? அதுல பதிவுகளும் வருதே. பதில் தெரியாமதாங்க கேட்கிறேன். வழி இருந்தா சொல்லுங்க, ப்ளீஸ்


இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களைத் தவிர தமிழ்மணம் எங்கள் மனசுகளை அதிர வைக்குதுங்கோவ்வ்.

Sunday, June 17, 2007

சிவாஜியும் பகுத்தறிவாளனும்

பொத்துக்கிட்டு வருதுங்க கோவம். இவுங்க பகுத்தறிவும், பொருளாதார விளக்கமும், சமுதாய பார்வையும் அருமைங்க. 60 வயசு தாத்தாவுக்கு 20 வயசு சோடியான்னு உள்குத்து பதிவுகள் போடுறீங்களே, கிளிண்ட் ஈஸ்ட் வுட் ஜே.லோவோட நடிக்க ஆசைன்னு சொன்னா ரசிப்பீங்களோ?

நீங்க சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் படத்துக்கு குடும்ப சகிதமா போறது இல்லியா? அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு? ஸ்பைடர் மேன் உதட்டோட முத்தம் குடுத்தா சரியா?

லாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க.சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.

ரஜினி சொல்ற அம்மா, அப்பா, குடும்ப பாசம் தப்பா?

ஏன்? வேட்டையாடு விளையாடு படத்துல கமல் என்ன 52 வயசு பொண்ணோடையா நடிச்சாரு? கமலினி முகர்ஜிக்கும், ஜோதிக்காவுக்கும் அவ்வளவு வயசு ஆகிடலையே? எம்.ஜி.ஆரு கூட நடிச்ச பொண்ணுங்களுக்கு அவரு வயசா என்ன?

ரஜினி படத்தை பாக்கனுமின்னா உங்க ஈகோவை எல்லாம் விட்டுட்டு போய் பாருங்க, ரசிப்பீங்க."அப்படிதான் நாங்க ஈகோவோட இருப்போம்"னா அவரு படத்தை ஏன் பார்க்க போறீங்க? பார்க்காம இருந்துட வேண்டியதுதானே?

என்னமோ போங்க, சிவாஜி படத்தை நானும் பார்த்துட்டேன். பால பாரதி சொன்னதைத் தவிர மத்தவங்க சொன்ன விதமோ, கருத்தோ சரியா இல்லே(இது சிவாஜி படத்துக்கு எதிர்மறையா பதிவிட்டவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

டிஸ்கி:
1) நானும் ஒரு கமல் ரசிகன்
2) நானும் திராவிட நாட்டுல பொறந்த திராவிடன்தான்.
3) சாதி/மதம், பில்லி, சூன்யம் பார்க்காதவன்தான்
4) பெரியார் பொறந்த ஊரில் பொறந்து வளர்ந்து அவர் கொள்கைகளை பின்பற்றுபவன்தான்.
5) இயக்குனர் சீமானின் தமிழும் கருத்தும் என்னை கவர்ந்த படியால் அந்த கருத்துகள் வழி வாழ விரும்பும் ஒருவன் நான்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)