Thursday, December 19, 2013

அஸ்தி

அவனை தெய்வமென்று கொண்டாடியது இந்த உலகம்,
கொண்டாட்டமெல்லாம் அவன்
உயிருடன் இருக்கும் வரைதான்
மரித்துப்போனான் அவன் - வயிற்றிலும்
வாயிலும் அடித்துக்கொண்டு அழுதது ஊர்.

மயானத்தில் எஞ்சியிருந்தது எரிந்து போன
அவனது சாம்பல்- ஆம், சாம்பல்தான்
தெய்வம் என்று கொண்டாடியதால்மட்டும்
அவனது சாம்பலொன்றும் திருநீறாகிவிடவில்லை.


ஆம்,
சாம்பல் என்றும்
திருநீறாகிவிடுவதில்லை !!!!

Wednesday, December 18, 2013

ஓர் உலகப்பட முயற்சி

ஒவ்வொரு உலகப் படம் பார்த்து முடிச்சதும் மனசு கனமா இருக்கும் (பின்னே ரஜினி படமா சந்தோசமா இருக்க), அப்படியொரு சூழலுல் அன்னிக்கும் நடந்துச்சு. Turtles Can fly பார்த்து முடிச்சதும், பால்கனியில் உக்காந்து காத்து வாங்கிட்டிருக்கும்போது தோணின கதைதான் கீழே இருப்பது. இது நடந்து 6-7 மாசம் இருக்கும். 


அமெரிக்காவுக்கு தன் பேரனைப் பார்க்க இந்தியாவிலிருக்கும் கிராமத்திலிருந்து வருகிறார் தாத்தா. அவன் பிறந்ததிலிருந்து அவனை நேரில் பார்க்காமல் கணிணி மூலமாகவே பார்த்து பார்த்து ஏங்கியவருக்கு நேரில் பார்க்கும் ஆவல் எழ, உடனே கிளம்பிவிட்டார். பேரனுக்கு இப்போது 9 வயது. ஊரிலிருந்து வரும் தாத்தாவைப் பார்க்க மிகுந்த ஆவலோடு இருக்கிறான் பேரன். தாத்தாவுக்கும் கொள்ள ஆசை. வந்திறங்கியவுடன், தாத்தா பேசுவது பேரனுக்குப் புரியவில்லை. பேரன் பேசுவது தாத்தாவுக்குப் புரியவில்லை. பேரனை பள்ளிக்கூடம் நடந்தே கூட்டிப் போவது, கால்பந்தாட்டம் என அனைத்தும் பேரனைச் சுற்றியே வருகிறார் தாத்தா. ஆனாலும் இருவரும் பேசிக்கொள்வது புரியாமல். இருவருக்குமான பாசம் மிகவும் அதிகரிக்கிறது, தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என அறிந்த பேரன் அப்பா அம்மா ஊருக்குப் போனாலும் சரியாக கவனித்துக்கொள்கிறான். தன் நண்பர்களுக்கு தாத்தாவை அறிமுகம் செய்கிறான். பெருமை கொள்கிறான். தாத்தா சொல்லிக்குடுக்கும் செஸ் விளையாட்டை மிக சிரத்தையாக கற்று, பள்ளியில் நடக்கும் போட்டியில் வெல்கிறான். இதற்கு காரணம் தாத்தாதான் எனச்சொல்லி மேடையில் சொல்கையில் தாத்தாவுக்குப் மொழி புரியவில்லை. ஆனால் அவன் சொல்ல வந்தது புரிகிறது. தாத்தா ஊருக்குப் போகும் போது அவர் மொழியில் சொல்கிறார் நம் இருவருக்குமான பாலம் பாசம்தான், மொழியிருந்திருந்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லிவிட்டுச் செல்கிறார். அப்பா மூலம் இதை மொழிபெயர்த்து அறிந்து கொண்ட பேரன் தாத்தா மொழி கற்ற பின் தான் தாத்தாவை (ஸ்கைப்பில்)_ பார்ப்பேன் எனச் சொல்லிவிடுகிறான். நன்றாக பேச ஆரம்பித்து தாத்தாவுக்கு ஸ்கைப்பின் மூலம் அழைக்கிறான். தாத்தா பேசினாரா, எவ்வாறு அவருடன் பேசினார், மகிழ்ந்தாரா என்பதுதான் இறுதிக்காட்சி.


புலம் பெயர்ந்தவுடன், எவ்வாறு நமது கலாச்சாரம் மற்றும் மொழி எப்படியெல்லாம் மாறிப்போகிறது என்பதுதான் அடிநாதம். 

Tuesday, November 5, 2013

ஆங்கில் எழுத்துறு டமிலில்

ஆங்கிலத்தில் எழுதி பிரகு டமிலில் மொலி பெயர்த்த போது


enakku palli enrale pidikathu. analum adi vilunthathal ponen. apo avalai pas stopil parthein. bussil aval erivittal. nanum erinen. appothu avali yaro idithargal. enakku rompa kovam vanthuviddathu. udane idithavanai thaddi kettein, avan payanthu odividdan. aval ennai parthu sirithal. naan ulakaiye maranthuvitein. avalai faalow pannien, veedu kandu pudichitein.

adutha naal, vittai vittu kilambothu appa kettar, engeda pore? naan onnum solamal vanduvitein. friends ketta pothu sonen, lavvar vittukku porennu.

adutha naal, naan kadalil vilunthuvitathai eppadiyo appa arinthuvittar. adi pinni vittar. palam illamal naan padukkaiyil irunthein. enna seyyalam enru yosichapothu, savalam enru mudiveduthein. ana lover vanthu kadhal sollivittal. nanri. subam.









டமிலில்:

எனக்கு பல்லி என்றாளே புடிக்காது. ஆனாலும் அடி விழுந்ததால் போனேன். அப்போ அவலை பஸ் ஸ்டாப்பில் பார்த்தேன். பஸ்ஸில், நானும் ஏரினேன். அப்போது அவலை யாரோ இடித்தார்கள். ரொம்ப கொவம் வந்துவிட்டது எனக்கு. உடனே இடித்தவனை தட்டிக் கேட்டேன். அவன் பயந்து ஓடிவிட்டான்.  அவள் சிரித்தபோ, நான் உலக்கையே மறந்துவிட்டேன். அவளையே ஃபாலோ பண்ணினேன். வீடு கண்டுபிடிச்சேன்.

அடுத்த நாள்,

விட்டை விட்டு கிளம்பும்போது அப்ப கெட்டார். எங்கே பொற? நான் ஒன்னும் சொல்லாம வண்டுவிட்டேன். Friends கெட்ட பொழுது சொனேன். லவ்வர் வீட்டுக்குப் போறேன்னு.

அடுத்த நாள்,

நான் கடலில் விழுந்ததை அப்பா எப்படியே அரிந்து விட்டார், அடி பின்னி விட்டார். பழமில்லாமல் பாடுக்கையில் இருந்தேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, சவலாம் என்று முடிவெடுத்தேன். ஆனா லவ்வர் வந்து கடல் சொல்லிவிட்டாள்.

நன்றி! சுபாம்.

Friday, August 16, 2013

நம் நாடு - கதையென்ன?

லைப்பு(Title) போடு போதே எம்.ஜி.ஆர் அவர்களை  ஒரு கதாநாயகனாக காட்டும் படலம். பெண்களை கிண்டல் செய்வோரை தட்டி கேட்கிறார், வயதான அம்மாவுக்காக பேருந்தில் போராடுகிறார், திருடனை பிடிக்கிறார் இப்படி பல நல்ல விசயங்கள் ஆரம்ப காட்சியிலேயே. அறிமுகத்துக்காக தனியாக காட்சி வெக்காமல் தலைப்பு போடும்போதே முடிச்சிட்டாரு இயக்குநர் ஜம்பு.

ளநீர் விற்பவராக, நடிகை ஜெயலலிதா, குடிகார அண்ணன் ஆர்.எஸ்.மனோகர். ”நான் ஏழு வயசுல இளநி வித்தவ, பத்னேழுல நிறைஞ்சு நின்னவ” என்று ஆரம்பித்ததும் பகீரென்றது எனக்கு. இது கில்மா பாட்டு வேற யாரோவுக்கு நினைச்சா ஜெயலலிதாவுக்காம். எப்படி அனுமதித்தார் எம்.ஜி.ஆர்? அதிலும் எம்.ஜி.ஆர் செல்லமாகக் கூப்பிடும் அம்முவாகவே நடித்திருக்கிறார் ஜெ. யாருக்காகவோ உதவப்போக காசு இல்லாமல் தன்னுடைய கடிகாரத்தை ஜெவிடம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். அண்ணன் ஆர்.எஸ்.மனோகர், குடிப்பதற்காக  ஜெவிடமிருந்து கடிகாரத்தை எடுத்து விற்றுவிடுகிறார். இதற்காக பெரும் போராட்டத்துடன் ரூ.200 சேர்க்கிறார் ஜெ. இதனைப் பார்த்த எம்.ஜி.ஆர் கலங்கிப் போய்விடுகிறார்.


 கரசபையில் வேலை பார்க்கும் எம்.ஜி.ஆர் ஒரு இடப்பிரச்சினைக்கு உதவப் போக, ஒரு லட்சாதிபதியை எதிர்க்கிறார். இதனால் வேலையும் இழக்கிறார். ரங்காராவ், தங்கவேலு, அசோகன் எப்பவுமே தண்ணியடிச்சிட்டே இருக்காங்க, வில்லன்கள் ஆயிற்றே. எம்.ஜி.ஆர்’ன் அண்ணன் ரங்காராவின் பெரும் விசுவாசி, அவரிடம் வேலை பார்க்கிறார். ரங்காவீட்டை விட்டு எம்.ஜி.ஆரை வெளியே போகச் சொல்லிவிடுகிறார் அண்ணன்.




 வீட்டை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ஜெ. சேரி மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். காசு குடுக்கிறவங்களுக்கு ஒட்டு போடாதீங்க, பசியை தீர்க்கிறவங்களுக்கு ஓட்டு போடுங்க என்பது எம்.ஜி.ஆர் வைக்கும் பஞ்ச்.

கரசபை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது, இதில் அசோகனுக்கும், தங்கவேலுக்கும், ரங்காராவுக்கும் இடையில் பனிப்போர் நடக்கிறது, அதே சமயம் எம்.ஜி.ஆர் இந்தப் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். தேர்தல் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவிக்கிறார் நாகேஷ். இவ்வளவு நேரமும் இல்லாதவர் திடீரென வருகிறார். கால்ஷீட் பிரச்சினையாய் இருந்திருக்குமோ?

   ழைய தவறுகளை எல்லாம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். இதனால பாதிக்கப்படும் வில்லன்கள் எம்.ஜி.ஆரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள். இதனால பொது மக்களின் பணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எடுத்து ஓடிவிட்டதாக செய்தி பரப்புகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம்.ஜி.ஆரை பதவி விலக வைக்கிறார்கள். அதுவுமில்லாமல் எம்.ஜி.ஆரின் அண்ணனின் வீட்டையும் காலி செய்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆரையும் அடித்துப் போட்டுவிடுகிறார்கள்.

பிறகு பணக்காரர் வேடமிட்டு மீண்டும் உள்ளூருக்கு வருகிறார் எம்.ஜி.ஆர். தன்னுடைய அண்ணனை கண்டுபிடிக்கிறாரா? அவரின் மீதிருக்கும் பழியைத் துடைக்கிறாரா? ஜெ.வை கைப் பிடிக்கிறாரா? வில்லன்கள் எல்லாம் திருந்தினார்களா? வில்லன்களிடமிருந்த பணம் என்னாயிற்று? அந்த CBI அலுவலர் யார்? என்பதே இறுதிக்காட்சிகள்.

திடீர் பணக்காரனாக வரும் எம்.ஜி.ஆருக்கு எங்கேயிருந்து அவ்வளவு பணம் வந்தது? ஒரு நகர சபை தலைவருக்கு அவ்வளவு அதிகாரம் உள்ளதா? மச்சம் மரு எல்லாம் கண்டு புடிக்கவே முடியாதா? இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலில்லை.

கதாநாயகன் துரையாக நடித்திருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். கதாநாயகி அம்முவாக நடித்திருப்பவர் நமது தற்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். அண்ணனாக டி.கே.பகவதியும், அண்ணியாக பண்டரிபாயும், அண்ணன் மகள்களாக குட்டி பத்மினியும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள்.  படத்தின் அனைத்துப் பாடல்களை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி அவர்கள். படத்திற்கு இசை MSV அவர்கள்.

படத்தின் மூன்று பாடல்கள் செம ஹிட். நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், வாங்கய்யா வாத்யாரைய்யா. தாறுமாறான  ஹிட் 7 வயசுல எளநி வித்தவ, நேரடியாவே தப்பான அர்த்தம் கொண்ட பாடல் அது.

Note: குடிகாரன் பேச்சு என்ற பாடல் இணையத்தில் எங்குமேயில்லை. விக்கியில் அதைப் பற்றிய தகவலை இப்பொழுதுதான் சேர்த்தேன். 

பி.கு. இதுபடத்துக்கான விமர்சனமில்லை 

Monday, August 12, 2013

கோச்சடையான் - கதை என்ன?

நன்றாக கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஒரே காட்சி, ஒரே போல கதாப்பாத்திரங்களுக்கு, அதுவும் ரஜினியின் படங்களிலேயே பயன்படுத்தியிருப்பார் கே.எஸ். ரவிக்குமார்.
  • முத்து படத்தில் ஒரு காட்சி, சொத்துக்காக அண்ணனிடமிருந்து சொத்துக்களை பறிக்க முயற்சிப்பார் தம்பி ரகுவரன். இதனையறிந்த அப்பா-ரஜினி அனைத்து சொத்துக்களையும் ரகுவரனுக்கு எழுதி வைத்துவிட்டு, சாமியாராகப் சென்றுவிடுவார்.
  • சொத்துக்களைப் பிரித்துத் தரச்சொல்லி அண்ணன் சிவாஜியிடம் முறையிடுவார் தம்பி மணிவண்ணன். சொத்துக்களைப் பிரிக்க மனமில்லாத சிவாஜி, தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மணிவண்ணனுக்கே கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுவார், இது படையப்பாவில்.

இரு காட்சிகளும், சூழ்நிலைகளும், ஒன்று போலவே இருக்கும். அதுவும் ரஜினிக்கே வைத்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். துணிச்சல்தான். விடுங்க, விசயம் அது இல்லை இப்போ. இன்று இணையத்தில் பரவலாக ஒரு செய்தி அடிபடுகிறது. அதாவது கோச்சடையானின் கதை என்னவென்பதே அது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.



கதை இதோ.

தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடுவார்களா துரோகிகள்? அவரது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள். அப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார் மகன் ரஜினிகாந்த். பிறகு காட்டில் மறைவாக தனிக்குழு ஒன்றை அமைக்கிறார்.  தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டைப் புரட்சி செய்து வெல்கிறார்.

இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றாலும், கதையிலும், மற்ற தயாரிப்பு  பின்னணியிலும் கே.எஸ்.ரவிக்குமாரின் முழுப் பங்கு இருக்கிறது என்பது பலரும் அறிந்த விசயம்தான். ஆனாலும், படத்தின் கதை வசீகரிக்கத்தான் செய்கிறது. அதுவும் Motion Capturing மூலம் படமாக்கப்படும் முதல் முழு நீள தமிழ்த் திரைப்படம் என்கிற போதே ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்கிறது. சும்மாவே ரஜினி கார்ட்டூன் அளவுக்கு படம் காட்டுவாரு, இதுல கார்ட்டூன் படமென்றால், எப்படியிருக்குமென்று யோசித்துப்பாருங்க. ரஜினி என்றாலே மேஜிக்தானே, அந்த மாதிரியான ரஜினியைப் பார்க்கத்தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். சமீபகாலமா வெளிவந்த அனைத்து ரஜினி திரைப்படங்களும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் "அந்த மேஜிக்" கொண்ட ரஜினி இல்லாமல்தான் வந்திருக்கிறது.

பல தடைகள், பல வருடங்கள், ஆனாலும் படத்திற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள், அதில் நானும் ஒருவன். ரகுமானின் இசை, வைரமுத்துவின் பாடல் வரிகள்...

கோச்சடையானே வா! வீறு கொண்டு வா! சரித்திரமே வா!

Sunday, July 14, 2013

மாலை நேரத்து வெம்மை

   கூட்டத்தில் நடுநாயகமாக இருக்கும்பொழுது தனித்து இருப்பது போன்று ஒரு  மனநிலை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறேன், சிரிக்கிறேன், மீண்டும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனது எங்கோ இருக்கிறது. வெம்மை தணிக்க மழை பணிக்கிறது, சிறுதூறல் விழ, இடியுடன் மின்னலும் தூரமாய். நம்மைத்தாக்காத வரையில் அது எல்லாம் ஒரு சம்பவமே.

    நாளைய தினத்தின் கவலையை நினைத்து இன்றைய சந்தோசத்தை இழந்துகொண்டிருக்கும் தருணமென்று மனதிடம் சொல்லிக்கொண்டிருந்தது அறிவு. அமெரிக்க மாலை நேரத்திற்கு சற்றும் ஒவ்வாமல் அனத்திக் கொண்டிருந்தது, காலை நேரத்து சென்னை பண்பலையொன்று. விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத விளம்பரங்கள். பிறகு தங்கம் விலை வருங்காலத்தில் ஏறுமென்றும், வாங்கி குவித்துக்கொள்ளவுமென்றும் ஒரு நிபுணர் சொல்லிக்கொண்டிருந்தார். உலோகங்களின் இழுவைக்கு இயந்து போகும் மனிதர்களை என்னவெனச் சொல்ல?

 

   திடீரென்று ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வார்த்தையையும், துண்டு இசையையும் மனமொத்த ஒரு ஜீவனுடன் ரசித்தது நினைவுக்கு வருகிறது. அந்த ஜீவன் என்ன செய்துகொண்டிருக்குமென்று அந்த ஜீவனின் வீட்டிற்குள் புகுந்து வேவு பார்க்கிறது மனது. கற்பனை சொல்லும் அவரின் நிலையை ஏற்றுக்கொள்கிறது மனது. அது சந்தோஷமான நிகழ்வையே சொல்கிறது. மீண்டும் அந்த ஜீவனை சந்திக்கும் ஆவல் எழுகிறது. மழை வலுக்க ஆரம்பிக்கிறது. நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல் இன்னொருவருக்கு வேறொரு நினைவை தந்திருக்கும், சம்பந்தமேயில்லாமல் கூட இருக்கலாம். நினைவுகள் என்றும் ஒன்று போல இருப்பதில்லை, அது தேவையுமில்லை. நினைவுகளொன்றும் ரெட்டை கோடு போட்ட காகிதத்தில் எழுதப்படுவதில்லை, அதற்கு சட்டமுமில்லை, எல்லைக்கோடுமில்லை.


   மீண்டும் விளம்பரம், ஏதோ ஒரு தேநீர் குடித்தால் குதூகலமாகிவிடலாமாம். சோகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தால் மனம் அப்படியொன்றும் குதூகலமாகிவிடுவதில்லை. தேநீருக்கெல்லாம் மனம் மாறுமென்றால், தேநீர் கடை அண்ணாச்சி எப்பொழுதுமே சந்தோசமாக இருக்க வேண்டும். கடை சாத்தும் அண்ணாச்சி வீட்டிற்கு போகும் வழியில் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிப் போகையில்தான் குதூகலாமாவதைக் கண்டிருக்கிறேன். அவருக்கு பிரியாணிதான் ஊக்கம் போலும்.

   ன்றொன்றுக்கும் சம்பந்தமேயில்லாத நினைவுகள், வாழ்க்கை நம்மை நகர்த்திக்கொண்டுதான் இருக்கிறது.   நகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். திடீரென்று சுற்றியிருந்த அனைவரும் சிரிக்கிறார்கள், நானும் சிரித்து வைக்கிறேன். அந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தமென்று எனக்கும் புரியவில்லை, அந்தச் சிரிப்பிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

Thursday, June 27, 2013

பர்ஃபி செய்வது எப்படி?

இது அரசியல் பதிவு அல்ல:




முதலில் பெரிதாய் 40 தேங்காய்களை வாங்கித் தந்துவிட வேண்டும். கூட்டாளியே அதைத் துருவி தந்துவிடுவார்கள் என்பதுதான் பேசப்படாத ஒப்பந்தம். தராவிட்டால் கூட்டாளியின் வீட்டுக்கே விமானம் ஏறிப் போய் துருவித்தர நிர்பந்திக்க வேண்டும். கூட்டாளி துருவித்தர ஒப்புக்கொண்ட பிறகு நாம் இங்கே பர்ஃபி செய்ய ஆயத்தமாக வேண்டும். கூட்டாளி தேங்காய் வாங்கியதில் பிரச்சினை என்று நம் மேலேயே பிராது கொடுக்க, சர்க்கரை வாங்க அனுப்பிச்ச ஆளை திரும்ப வரச்சொல்லிவிட வேண்டும். பிராதை, அதோ இதோ என்று இழுவையில் இருக்கும் போது, உங்க பர்ஃபியே வேண்டாம், குடுத்த தேங்காய்களைத் திரும்ப குடுங்க என்று கேட்டு திரும்ப வாங்கி வந்துவிட வேண்டும். கூட்டாளியே ரெண்டு பேரை டெம்போ வைத்து நம் வீட்டு வந்து பர்ஃபி செய்யச் சொல்லி கேட்பார்கள்.அப்பொழுதும் மசியாமல் பர்ஃபி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட வேண்டும். அதற்காக கூட்டாளியிடத்தில் துருவ சென்ற நமது ஆட்களையும் திரும்ப வரச்சொல்லி விடவேண்டும்.

திடீரென்று மகளுக்கு பர்ஃபி சாப்பிட ஆசை வந்தவுடன், மறுபடியும் தேங்காயை வாங்கி கூட்டாளியிடமே திரும்ப தந்துவிட வேண்டும்.

அப்புறம்?

அப்புறமா, முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கவும்..

==00==
பர்ஃபியை மைய்யமாக வைத்து சமீபத்தில் வந்த நகைச்சுவை காணொளி இங்கே 1:02லிருந்து பார்த்துக்கொள்ளவும்


பி.கு: இந்தப் பதிவு எந்த வித அரசியல் சம்பவங்களையும் குறிப்பது அல்ல. நீங்களாகவே ஒப்பிட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

Friday, June 21, 2013

தலைவா - கதை என்ன?

சமூக பொறுப்பு எதுவுமின்றி கூத்தும் கும்மாளமுமாய், வெளிநாட்டில் படித்து வரும் கதாநாயகன், அங்கேயே காதலும் கொள்கிறார். உள்நாட்டில் ஒரு ஊரில் பெரிய மனிதராக, எல்லோராலும் மதிக்கப்படும் மனிதராக இருக்கிறார் கதாநாயகனின் அப்பா. ஜாதிப் பிரச்சினையால் தகப்பனாரை கொன்றுவிடுகிறார்கள் வில்லன்கள். இதனால் உள்ளூருக்கு வரும் கதாநாயகன் அப்பாவைப் போலவே தலைவனாக உருவெடுக்கிறார், வில்லன்களை பழிவாங்கி தகப்பனாரைவிட பெரிய சக்தியாக உருவெடுக்கிறார். இது தான் தலைவா’வின் கதை.

தலைவா - துண்டிப்படம்



இருங்க, தேவர் மகன் கதை மாதிரியே இருக்குல்ல?

Monday, June 17, 2013

பண்ணையம் June-17-2013

பல்பு 

முந்தியெல்லாம் படைப்புகளை எழுதி காசு குடுத்து கவரிலோ போஸ்ட் கார்டிலோ எழுதிப் போட்டா 'வருந்துகிறோம்' அப்படின்னு காசு குடுத்து கவர் வாங்கி திருப்பி அனுப்புவாங்க. இப்போதெல்லாம், நாமளும் ஈமெயிலுல அனுப்புறோம். ஆனா,  வருந்துகிறோம் அப்படின்னு கூட பதில் ஈமெயில் வருவது இல்லை. படைப்பு வெளியானாத்தான் தெரிய வருது. இதுதான் புது வகையான பத்திரிக்கை தர்மம் போல.

இப்பவெல்லாம் பல்பு வாங்கினா கூட தெரியறதே இல்லை


==000==

ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க

ட்வர்ட் ஸ்நோடன் அப்படிங்கிறவந்தான் விக்கிலீக்ஸுக்கு விசயங்களை ததவரு அப்படிங்கிற செய்திதான் போன வாரயிறுதி பரபரப்பு. அவருதான் சொல்லியிருக்காரு NSA(அதாவது லோக்கல் மொழியில சொன்னா அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு வாரியம்(?!)) தொலைபேசி, Skype, Facebook, Twitter இன்னும் எது எது எல்லாம் தொலைதொடர்புகளுக்காக உபயோகப்படுத்துறோமோ, அதை எல்லாத்தையும் NSA ஒட்டுக்கேட்பதா அவர் சொன்னாரு. இது பலரை கொந்தளிக்க வெச்சிருக்கு. இதை ட்விட்டர், ஃபேஸ்புக் அப்படின்னு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, பலரோ அப்படியெல்லாம் இருக்காதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

இது போன வாரம் ஹூஸ்டன் பண்பலையில வந்த  ஒரு நகைச்சுவை இல்லாட்டி நக்கல் அப்படின்னு எடுத்துக்கலாம். போன வாரம்ஒபாமாவின் மகளோட பிறந்தநாள், அவருக்கு என்ன ஒபாமா என்ன பரிசளிச்சிருப்பாரு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டாங்க அதுக்கு வந்த ஒரு பதில் இது "Justin Bieber's Cell Phone Call records".

==000==

இனிமே தந்தி அடிக்காது


டந்த 160 ஆண்டுகளாக நமக்காக சேவை செய்த "தந்தி"  ஜூலை 15 முதல் தன்னோட சேவையை நிறுத்திக்கொள்ளப் போகிறதா தபால் துறை அறிவிச்சிருக்கு. தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிந்துப் போகிறது இன்னொரு தொழில் நுட்பம்,. வல்லவன் வாழ்வான்  என்பதுதான் நியதியும் கூட. ஆனாலும் தந்தி பல தலைமுறைகளாக நம்மோக சமூகத்தில் ஒரு அங்கமாகிட்டே வந்திருக்கு. தந்தி வந்தா பயப்படறது , "பயத்துல பல்லெல்லாம் தந்தியடிச்சுது" அப்படின்னு சொல்றது,  ஏன் தினத்தந்தி அப்படிங்கிற ஒரு நாளிதழ் அப்படின்னு நம்மோடவே பயணித்திருக்கிறது தந்தி.இன்றைய செல்போன் யுகத்துல தந்தி என்பது செல்லாக்காசு.

போய்(வா) தந்தி!


==000==


நடுத்தெருவில் 
அடிபட்டு இறந்துகிடந்தது
நாயொன்று
நன்றியில்லாமல் 
கடந்து போயின
மனித மிருகங்கள்..

==000==





சினிமாவுல அடிச்சுக்கொல்றதுக்கு மூக்கு லாரியைத்தான் வில்லன்கள் உபயோகப்படுத்துவாங்க. அதனால சின்ன வயசுல மூக்கு லாரின்னாலே பயம்தான். இப்பவும் அந்த பயம் இருக்கத்தான் செய்யுது.






==000==


இணையம் மூலம்
உலகம் முழுக்க பேசுவோம்
பக்கத்துவீட்டுக்காரன் 
யாரென்று தெரியாமலேயே


 ==000==

ன் முதல் அலைபேசியை 2001ல் வாங்கினேன். அப்ப பேச, நான் மத்தவங்களுக்கு அழைச்சா ரூ.4(Outgoing), வேற யாராவது என் அலைபேசிக்கு அழைச்சா நிமிசத்துக்கு ரூ.2(Incoming). காசை விடுங்க, அதைவிட பெரிய சிக்கல் Charger. 10 நிமிசம் பேசினாவே Charge போயிடும். அதுக்காக  Charger கையிலேயே தூக்கிட்டுப் போவனும். நோக்கியா வந்தபிறகு கொஞ்சம் இது மாறியது. 2013லும் Charger எடுத்துட்டுதான் போக வேண்டியிருக்கு, அப்ப Ericscon இப்ப iPhone, ஒன்னும் வித்தியாசமில்லை.பேச மட்டுமே iPhone வெச்சிருந்தா தாங்குது, ஆனா 4g/LTEன்னு போட்டு விளையாண்டோம், முடிஞ்சோம். 3 மணிநேரத்துக்காவது தாங்குறாப்ல ஃபோன் குடுங்க டிம்மு

Thursday, June 6, 2013

அப்பாடக்கர் என்றால் என்ன? Meaning of Appatakkar

What is the Meaning for Appatakkar/Appatucker

இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. 


 அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)

இதைச் சொன்னவர் M.m. Abdulla

Wednesday, June 5, 2013

அழிந்துவரும் விவசாயம்

தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரிய​வந்துள்ளது. 

கடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரை​யிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்​பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

''விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது'' என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.


''ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது.  ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.
செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.
ராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து 'வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள்  செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.


1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்’ ஏறவைத்தது'' என்றார் நம்மாழ்வார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்போதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, '40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை. அடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர். பல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.


ஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராமசாமி.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ''கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது. சொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் 'ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது'' என்றார் சின்னசாமி.

ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 'பார்’ மட்டும்தான் நடக்கும்போலும்!
- ஜி.பழனிச்சாமி 

படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

விகடனில் வந்த கட்டுரை. ஒரு கோப்புக்காக இங்கே பதிவிட்டுள்ளேன். நன்றி விகடன்

Tuesday, May 28, 2013

பண்ணையம் -மே-28-2013

இணைய மொண்ணைகள் :

எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு ஒன்று வாசக வட்டத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். அதற்கான விளக்கத்தையும், சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆமாம் இணையத்தில் பெரும்பான்மையினர் மொண்ணைகள்தான். நுனிப்புல் மேய்தல் கூட்டம்தான் அதிகம், ஒரு எழுத்தாளனின் உண்மையான கருத்தை படித்து அறிவதற்கு கூட ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களை எல்லாம அவர் மொண்ணைகள் என்று சொன்னதில் தவறேதுமில்லை. #iSupportJemo [1] [2]

=======================================
IPL-6 

இறுதி ஆட்டத்தில் சென்னையும் மும்பையும் மோதும், அதில் மும்பை வெற்றி பெரும் என்று நான் கொஞ்சம் நாளுக்கு முன்னமேயே கணித்து ட்விட்டரில் சொல்லியிருந்தேன். அதுபோலவே நடந்தது. விசயம் அதிலில்லை, சச்சின் ஆட்டதின் போது கண்ட பேட்டியும், ஒரு குழந்தையைப் போல் அவர் குதூகலித்தையும் மறக்கவே முடியவில்லை, எத்தனாயிரம் ஆட்டங்கள் பார்த்திருப்பார், ஆனாலும் புதிதாக ஆடவருபவனின் உணர்ச்சியைப்போலவே இருந்த அந்த மனிதனின் குணம்தான் இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

தோனி - கடைசிவரைக்கும் தன்னாலானதை இறுதி ஆட்டத்தில் செய்தார். கடைசி பந்தில் 29 ஓட்டங்கள் தேவை, இது சாத்தியமே இல்லை என்றாலும், பெளலிங்கில் வைட் போட்டது, ஃபீல்டிங்கை மாற்றியது என மும்பை செய்தது எல்லாம் தோனி என்கிற பயமே காரணம். வெற்றியோ தோல்வியோ, விசில் போடுறதை மட்டும் நிறுத்தப் போவதில்லை நாங்கள். மும்பை அணியினருக்கு வாழ்த்துகள் #விசில் போடேய்

=======================================

போன வாரம் ஒரு கடற்கரைக்குப்  போனோம். அப்ப இந்தப் பெயர்ப்பலகை கண்ல பட்டுச்சு. அப்ப சுட்டது இது.
(சுட்டது-Shoot புகைப்படம் சுட்டேன், சரியா வராது இல்லே?)

=======================================

சினிமாப் படமோ, குறும்படமோ : எதை எடுத்தாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் 15 விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். சினிமாப் பிரியர்கள் படிக்க வேண்டிய உபயோகமான 15 குறிப்புகள், http://www.moviemaker.com/articles-directing/danny-boyle-15-golden-rules-filmmaking/


=======================================

ன்னிக்கு காலையில கனவுல வந்தது, தாவரங்கள் இல்லைன்னா உலகம் பொய்த்துப்போகும் அப்படின்னு என்னமோ ஒரு கனவு, அதுல வந்த ஒரு வார்த்தையை படமா போட்டுப் பார்த்தேன். கனவுல கூட நமக்கு உலகத்தைக் காக்கிற சிந்தனைதான் வருதுன்னா பாருங்களேன்.
=======================================

TMS



தமிழ் சினிமாவுலகுக்கு மாபெரும் இழப்பு. இப்ப எல்லாம் சில பாடல்களைக் கேட்டா சில சம்பவங்கள் நினைவுக்கு வரும்,. சில பாடல்களை கேட்டவுடனே உடனடியா, ரொம்ப நாளா கூப்பிடாத கல்லூரி/பள்ளித் தோழனையோ தோழியையோ கூப்பிட்டு அந்தப் பாட்டை கேட்டதையும், அதுக்கு சம்பந்தமான சம்பவத்தை நினைச்சி சிலாகிச்சி பேசிக்குவோம். அப்படித்தான் ஒரு தலைமுறையே இந்த மாதிரி சம்பவங்களுக்கான ஞாபகத்தை வரவழைக்கக் கூடியவர் TMS. எத்தனாயிரம் பாடல்கள் பாவனைகள்? எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் , சிவாஜிக்கு ஒரு மாதிரியும், முடியுமா? ஒரு தலைமுறையையே தன் குரலால அடிமைப் படுத்தி வெச்சிருந்தவரு. இன்னிக்கு காலையில முருகன் பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்தப் பாட்டும் வந்துச்சு. "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" பாட்டை இறைஞ்சி பாடியிருக்காரு. நாமளே முருகன் கிட்டே நேரடியா கேட்கிறமாதிரி நமக்குத் தோணும். உங்களுக்கு ஏது ஐயா சாவு. எங்க மனசுல எப்பவுமே இருப்பே ராசா..

Tuesday, April 30, 2013

கண்ணதாசனும் கொத்தாளத்தேவனும்

உண்மையைச் சொன்னா நாம நம்பிடுவோமுங்களா? கண்டிப்பா இல்லை, யார் நமக்கு நம்பிக்கையா இருக்காங்களோ அவுங்க எதைச் சொல்றாங்களோ அதைத்தான் நம்புவோம். அதுக்கு ரெண்டு உதாரணங்கள் கீழே இருக்குங்க. 
 
 ==00oo00==

 1.  கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

         
கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,

''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''


==00oo00==

2.  விருமாண்டியாய் பசுபதியும், கொத்தாளத்தேவரா கமலும் நடிச்சிருந்தா இவங்கள்ல யார் வெர்ஷனை நம்பியிருப்பீங்க? .(இது ஒரு ட்விட்)

கண்டிப்பா கமல் சொன்னதைத்தானே நம்பியிருப்போம். அப்ப எது உண்மை அப்படிங்கிறதை யார் சொன்னா நம்புவோம்?

இப்ப முதல் வரியைத் திரும்பப் படிச்சிப்பாருங்க. நாஞ்சொன்னது சரிதான்னு உங்களுக்கே தோணும்.

Tuesday, March 19, 2013

திமுக விலகல் - ஒரு அலசல்

காங்.  கூட்டணியிலிருந்து திமுக விலகியது.


அதிமுகவுக்கு, இது பெரும் சங்கடத்தை கொண்டு வந்து தந்திருக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் போராட்டம், இதில் இவர்களும் இன்னொரு பக்கம் செய்லபட, வரும் பாராளமன்ற கூட்டணியில் குழப்பத்தை தாராளமாகச் திமுக செய்யும் என்பது இன்னொரு கவலை. இது நாள் வரையில் அமைதி காத்து வந்த முதல்வரே  "இது ஒரு நாடகம்" என்று அறிக்கை விடுமளவுக்கு  மாற்றியிருக்கிறது. அதிமுகவுக்கு கையறுநிலையை கொண்டு வந்ததில் கலைஞர் மீண்டும் அரசியல் சாணக்கியன் என்று நிரூபித்திருக்கிறார்.

காங். இது பெரும் பின்னடைவே, தமிழகம் மட்டுமல்லாமல், தேசியளவிலும். ஆட்சியிலிருந்தாலும், திமுகவின் விலகல் ஒரு தர்ம சங்கடத்தை அளித்துவிட்டது.

தமிழகளவில், மக்களுக்குத் தெரியும் இந்த விலகல் எந்த விதமான பயனும் இல்லையென. சதுரங்க ஆட்டத்தில் வெட்டு நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு அப்பால், சம்பந்தமேயில்லாமல் ஒரு மூவ் நடக்குமே அதுபோலத்தான் என்பது தமிழக மக்களின் பார்வை. காரணம் மாணவர்களின் முன்னெடுப்பு, டெசோவை அசாதாரணமாக கீழே தள்ளியது.

சோ, சுப்ரமணிய சாமி போன்றவர்களுக்கு வேலைக்கான நேரம் வந்துவிட்டது. டீ பார்ட்டி, அரசியல் கலந்தாலாசோனைகள், செவ்விகள் என இனி தேர்தல் வரைக்கும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல லாபியிஸ்ட்டுகள் தமிழகம் நோக்கி வர விமானத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்திருப்பார்கள்.

இந்தியளவில், திமுகவிற்கு இது பெரிய வெற்றி, CNN ஆரம்பித்து விட்டது,. இன்னும் 2 நாட்களுக்கு TRP Rating இறங்காமல் திமுகவின் விலகலை வைத்து நிகழ்ச்சிகள், செவ்விகள் என ஒப்பேற்றிக்கொள்வார்கள்.


யாருக்கு எப்படியோ திமுக தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. இறுதிக்கட்ட ஈழப்போரின் போது கையறுநிலையிலிருந்தவர்கள் திமுக தொண்டர்கள்தான். இனிமேல் கொஞ்சம் சுவாசித்துக்கொள்வார்கள்.

Monday, March 18, 2013

ஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு -எனது சாட்சியம் ம.செந்தமிழன்

முன்னுரை: இணையத்துல வந்த ஒரு சேதிதாங்க இது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

ஈழப் போரை இலங்கையும்,இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார்.

எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது.

மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார்.
திரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. ’கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன’ என நாம் கதறியபோதெல்லாம், அவர் ‘சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள்’ என்று அறிக்கை மேல் அறிக்கையாக வாசித்தார்.

அந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.
அந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.

திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில், படுகொலைகளுக்கு எதிரான ஊர்வலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். ஊர்வலத்தின் இறுதியில், இன துரோகம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை நானும் சில இளைஞர்களும் சாலையில் வைத்துக் கொளுத்தினோம். அப்போது, காவல்துறை மீதிருந்த அச்சத்தினால் சலனப்பட்ட தம்பி ஒருவர் தவறுதலாக, என் கால்களில் பெட்ரோலை ஊற்றிவிட்டார். பதாகையில் எரிந்த தீ என் கால்களில் எரிந்தது. இடது கால் கடுமையாக தீயில் வெந்த நிலையில் அங்கேயிருந்த கடையில் படுத்திருந்தேன்.

தஞ்சையிலிருந்து வந்த அதிரடிப் படையினர், சாலையில் நின்ற பொதுமக்களை எல்லாம் அடித்து நொறுக்கி வேனில் ஏற்றினர். ’தீ வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ எனக் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். எங்கள் இடத்திற்கு மிக அருகில் அவர்கள் வரும்போது, நானும் க.மாதவன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சில நண்பர்களும் அவ்விடத்தின் பின்னே இருந்த கழிவுநீர்க் குட்டையில் ஒளிந்துகொண்டோம்.

அதன் பின்னர், எங்களால் வீடு திரும்பவே இயலவில்லை. எல்லா வீடுகளிலும் சோதனைகள், கைதுகள். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இயலாமல், வெந்து தசை கிழிந்த காலுடன் இரவெல்லாம் அலைந்து திரிய வேண்டி இருந்தது.

என் மனைவி அப்போது கருவுற்றிருந்தார். என் வீட்டில் தங்கினால், என்னால் அவரது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் தொல்லை வரும் என்பதால், வேறொரு கிராமத்தில் தலைமறைவாகத் தங்கிக் கொண்டிருந்தேன்.

செங்கிப்பட்டியைச் சேர்ந்த திரு.குழ.பால்ராசு, அவர் மகன் திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி ஆகியோரைத் தேடி ஏறத்தாழ இருபது கிராமங்களில் காவல்துறை சுற்றித் திரிந்தது. நள்ளிரவு வேளைகளில்,ஆண்கள் இல்லா வீட்டின் கதவைத் தட்டி, பெண்களிடம் ‘சோதனை’ என்ற பேரில் முறையற்று நடந்து கொள்வது காவல்துறையின் அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டது.

திரு.குழ.பால்ராசு, அப்பகுதியின் த.தே.பொ.க தலைவர். அவர் காடுகளுக்குள் பதுங்கி இருந்தார். திரு.ஸ்டாலின், 18 வயது இளைஞர் அவர், காடு காடாகத் திரிந்து, உணவின்றி வாடிக் கொண்டிருந்தார்.

இவ்விருவரும் கிடைக்கவில்லை என்பதால், திரு.பால்ராசுவின் இளையமகன் அப்புவைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். அப்பு அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்! ‘உன் அப்பாவும் அண்ணனும் சரண்டர் ஆனாத்தான் உன்னை விடுவோம்’ என்று அவனிடம் மிரட்டல் விடுத்தது காவல்துறை.

ஏறத்தாழ ஒருவார காலம். செங்கிப்பட்டி சுற்று கிராமங்களில், மக்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை, உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை. எந்நேரமும் காவல்துறை மற்றும் ஆள் காட்டிகளின் கண்காணிப்பிலேயே உழன்றனர் மக்கள்.
நான் வெகுதொலைவில் ஒரு கிராமத்தில், தங்கிவிட்டேன். ஏறத்தாழ 60விழுக்காடு தீக்காயம். முறையான மருத்துவம் பார்க்க இயலாததாலும், ஒளிந்துகொள்வதற்காக கழிவு நீர்க் குட்டையில் பதுங்கியதாலும் காலிலிருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது.

ஊடகங்களில் இந்த நெருக்கடி நிலையைப் பதிவு செய்தால், ஓரளவு தளர்வாக இருக்கும் என்றெண்ணி, எனது ஊடக நண்பர்களுக்குப் பேசிக் கொண்டே இருப்பேன். எல்லோரும் பதற்றமடைந்தார்கள், வருந்தினார்கள். ஆனால், எவராலும் இச்சம்பவங்கள் குறித்த ஒரு துண்டுச் செய்தியைக் கூட கொண்டுவர முடியவில்லை.

அப்படி ஒரு நெருக்கடியை திரு.கருணாநிதி அரசு ஊடகங்கள் மீது தொடுத்திருந்தது நண்பர்களே!
வழக்கில் தொடர்புடைய போராட்டக்காரர்களைச் சரிவரக் கைது செய்யவில்லை என்பதற்காக, ஒரு காவல்துறை ஆய்வாளர் மீது துறைவாரி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

அதாவது, அவரது இவ்வளவு கெடுபிடிகளும் போதாது, மேலும் ஒடுக்குமுறையை ஏவ வேண்டும் என்று பொருள்!

அதன் பின்னரும், அவர்கள் முகாமையாகத் தேடிய எவரையும் அவர்களால் கைது செய்யவே இயலவில்லை. இறுதியாகப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது காவல்துறை. திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி, திரு.மாதவன் உள்ளிட்ட சிலர் ஒப்படைக்கப்பட்டனர். தேடுதல் வேட்டையைக் காவல்துறை நிறுத்திக் கொண்டது.

நான், தஞ்சைக்குத் திரும்பினேன். சீழ் பிடிக்கும் நிலையில் இருந்த கால், மெல்ல மெல்ல குணமானது. ஏறத்தாழ இரு மாதங்களுக்குப் பின், மீண்டும் நடக்கத் துவங்கினேன்.

அதன் பின்னர், காங்கிரஸ் – தி.மு.கவிற்கு எதிரான ஆவணப்படம் ஒன்றை இயக்கினேன். இளந்தமிழர் இயக்கம் சார்பில் அப்படத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல முற்பட்டபோது, மீண்டும் தேடுதல் வேட்டை, சோதனை, கெடுபிடிகள்.

என் வீட்டில் ஏறத்தாழ 40 காவல்துறையினர் சோதனை செய்தனர். தெரு முழுக்க காவல்துறைப் படை நின்றது. இவ்வாறு அவர்கள் செய்வது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே. இந்தச் சோதனை நடந்தபோது, நான் வேறொரு இடத்தில் ஏறத்தாழ 5000 குறுவட்டுகளுடன் இருந்தேன். என்னுடன், மு.நியாஸ் அகமது இருந்தார்.

சோதனையிட்ட காவலர்கள் என் அம்மாவிடம் விசாரணை செய்தனர்.
வீடு முழுதும் சல்லடைபோட்டு விட்டு, எதுவும் கிடைக்காமல் திரும்பினர். அன்று இரவே, நாங்கள் மீண்டும் ஓடத் துவங்கினோம். இம்முறை நண்பர்கள் க.அருணபாரதியும், வெ.இளங்கோவனும் இணைந்து கொண்டனர்.

அந்த நேரத்தில், சென்னை ரிச்சி தெருவில் கூட ஒரே நேரத்தில் 10 குறுவட்டுகள் வாங்க முடியாது. எங்கள் தேவையோ ஏறத்தாழ 50,000 குறுவட்டுகள். வெளியே சொல்லவே இயலாத உத்திகளை எல்லாம் கையாண்டு, பக்கத்து மாநிலத்துக்குச் சென்று, குறுவட்டுகள் வாங்கி, ஊர் ஊராக அலைந்து தங்கி, அந்த ஆவணப்படத்தை ஆயிரக் கணக்கில் படிகள் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பினோம்.

ஈரோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நான் தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன். விடுதி வரவேற்பறையில் காவல்துறையினர் விசாரணை செய்துகொண்டிருக்கின்றனர். ஸ்லீவ்லெஸ் பனியன், பெர்முடா கால்சட்டையோடு தப்ப வேண்டியிருந்தது. அருணபாரதியோ, அறையின் உள்ளே இருக்கிறார். அவரது மடிக் கணினியில், போர்க் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்கள் இருந்தன.
அலைபேசியில் அவருக்குத் தகவல் கூறி, சில நொடிகளில் தப்பினோம்.

இப்படியாக நாங்கள் ஓடிக் கொண்டே இருந்தோம். நாங்கள் மட்டுமல்ல, எம் போன்ற ஆயிரக் கணக்கானோர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தோம்.

இவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏனெனில், அப்போது ஊடகங்களில் திரு.கருணாநிதி நடத்திய ‘ஒருவேளை உண்ணாவிரதம், அவரது முதுகு சிகிச்சை, அவரது போர் நிறுத்தக் கடிதங்கள், போர் நிறுத்தப்பட்டது என்ற வெற்றிச் செய்தி, மழைவிட்டும் தூவானம் விடாததுபோல இன்றைக்கு சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற உவமை நயமிக்க அறிவிப்பு’ போன்ற செய்திகள் மட்டுமே பதிவாகிக் கொண்டிருந்தன.

நானும் அருணபாரதியும், வெ.இளங்கோவனும், நியாஸ் அகமதுவும் இன்னும் சில தோழர்களும் சில சாட்சிகள் மட்டுமே. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் வெகு சாதாரணமானவை என்னுமளவுக்கு, நாட்டில் ஒடுக்குமுறை நிலவியது. எண்ணற்றோர் பிழைப்பிழந்து, குடும்பம் இழந்து, நிம்மதி தொலைத்துப் போராடிக் கொண்டிருந்தனர். 19 பேர் தீக்குளித்தே இறந்தார்கள் எனும்போது, அப்போதைய மனநிலையை உணர முடிகிறதல்லவா!

எத்தனை வழக்குகள், எத்தனைக் கைதுகள், எவ்வளவு அடி,உதைகள்! கணக்கிலடங்காதவை அவையெல்லாம் நண்பர்களே.

இந்தச் சூழல்களில், எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அவர்களில், நண்பர்கள் பா.ஏகலைவன், வெற்றிவேல் சந்திரசேகர், இளையராஜா, எனது உதவியாளர் ரஞ்சித், ஓசூர் வினோத் மற்றும் விமல் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

அந்த நேரத்தில், பேருந்தை மறித்தவர்கள் கூட, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

’சிங்களப்படைக்கு ஆயுதம் ஏற்றிய ராணுவ வண்டிகள் சேலம் வழியாக கோவை வருகின்றன’ என்று குறுஞ்செய்தி அனுப்பியது மாபெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டது நண்பர்களே! அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நாங்கள் கோவைச் சிறையில் சந்தித்தோம்.

ஈழப் போர்க் காட்சிகள் அடங்கிய ஆவணப்படக் குறுவட்டுகள் வைத்திருந்தால் கைது, அப்படங்களைக் கேபிளில் ஒளிபரப்பினால் கைது, ராஜபக்சே கொடும்பாவி கொளுத்தினால் கைது, தங்கபாலு கொடும்பாவி கொளுத்தினால் கைது, ஊர்வலம் போனால் கைது, ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது, தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே கைது, ஈழப் போர் குறித்த துண்டறிக்கைகளை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர்களுக்கு மிரட்டல், ஃபிளக்ஸ் பதாகைகள் அச்சிடுவோருக்குக் காவல்துறையின் எச்சரிக்கைகள், கண்காணிப்புகள் இன்னும் என்னென்னவோ நடந்தன!

ஆகவேதான், சொல்கிறேன், போர் தமிழகத்திலும் நடந்தது!

திரு.கருணாநிதியின் இந்த அணுகுமுறைகளைப் பற்றிய நூல் ஒன்றை வெற்றிவேல் சந்திரசேகர் எழுதியுள்ளார். மிகச் சிறந்த ஆவணம் அது. ’ஈழப் படுகொலையில் கருணாநிதி’ என்பது அந்த நூல்.

ஹிட்லர் தனது ஊடக அணுகுமுறைகள் மற்றும் போர் உத்திகள் குறித்து கூறியவற்றில் சில:
’பெரிய பொய்யர்கள், பெரிய மந்திரவாதிகளுக்கு ஒப்பானவர்களே’
’தாங்கள் ஆட்சி செய்யும் மக்கள் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பது அரசுகளின் அதிர்ஷ்டம்தான்’
’உண்மை ஒரு விஷயமே இல்லை; வெற்றிதான் முக்கியம்’
’பொய்யைப் பெரிதாகச் சொல்லுங்கள், அதை எளிமைப்படுத்துங்கள், அதேபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், நிச்சயமாக மக்கள் அதை நம்பிவிடுவார்கள்’

இவை எல்லாவற்றையும், திரு.கருணாநிதி கடைப் பிடித்தார்; தேர்தலில் வெற்றியும் பெற்றார். இப்பொழுதும் இதே உத்திகளுடன்தான் அவரது தமிழீழ ‘அரசியல்’ நடக்கிறது.

இவ்வாறெல்லாம் அவரை விமர்சிப்பதால், நான் வேறு ஏதேனும் கட்சியின் ’அரசியலை’ ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். இதுவரை, என் விரல்களில் கறை படிந்ததே இல்லை; இனியும் படியப்போவதில்லை.

வரலாற்றில் அக்கறை கொண்டவன் என்பதால், இந்த நேரத்தில் இந்தப் பதிவு ஆவணமாக வேண்டும் என்ற கடமைக்காக இதை எழுதுகிறேன். இது எனது சாட்சியம். அவ்வளவே!

எங்களது இந்த அனுபவங்களிலிருந்து எதையேனும் உணர்ந்துகொண்டு, ஈழ விடுதலைக்கு உங்களால் பங்களிக்க முடியும் என்றால், மனநிறைவடைவோம்.

Source: http://www.twitlonger.com/show/lbdnc4

முடிவுரை: ஒரு படம் மட்டும்தாங்க..

Sunday, March 17, 2013

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!


                                                         


ன்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டி மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?






ன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.


















பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?




ன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?



காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?




(தொடரும்)

Thursday, March 14, 2013

இணையவாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?

"இணையவாதிகள் கொதிக்கிறாங்க, இவுங்க சமூகத்துல இருந்து தனியாத் தெரியறாங்க. சமூகத்துக்கும் இவுங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
அப்படின்னு ஒரு நண்பர் சொன்னாரு. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.


தினமும் நமக்கு பேச, எதாச்சும் ஒன்னு புதுசு புதுசாக் கிடைக்கனும். அதாங்க, ஏதாவது ஒரு வீட்டுக்கு முன்னாடி, விசாலமான திண்ணையில் பெருசுங்க உக்காந்துகிட்டு, வெத்தலை இடிச்சிகிட்டே ஊர்க்கதை பேசுவாங்க இல்லை.. அட, அதுவுமில்லைன்னா, ஓசியிலோ இல்லை கடன் வெச்சோ டீ குடிச்சாலும், ஒரு பத்தி விடாம பத்திரிக்கையைப் படிச்சிட்டு வம்பளப்பாங்களே டீக்கடை பெஞ்ச், இப்படி இருக்கிற இன்னொரு இடம்தாங்க இந்த இணையத்துல இருக்கிற சமூக வலைதளங்கள். சினிமா விமர்சனமோ, கவர்ச்சி நடிகைகளின் கல்யாணமோ, ஈழப்பிரச்சினையோ, ஏதாச்சும் ஒன்னைப் பேசிக்கிட்டே இருப்பாங்க. தினமும் எதாவது ஒன்னு சூடாகிடும். மாணவர்கள் பிரச்சினையைப்பத்தி ரத்தம் கொதிக்கிற மாதிரி பேசிட்டே இருப்பாங்க. பாலாவோட பரதேசி டீசர் வந்தவுடனே, அதை மறந்துட்டு பாலாவை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் புதுசா வந்த போப் பத்தி, இப்படி தடம் மாறிட்டே இருக்கு இணையவாதிகளின் பேச்சு.


" Loneseoவின் Rhinocerros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் முக்கியமான ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் incongruity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா, ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!"

மேலே இருக்கிறதைச் சொன்னது, கணையாழியின் கடைசிப் பக்கங்கள்ல - ஆகஸ்ட் -1973ல் சாட்சாத்  வாத்தியார் சுஜாதா சொன்னதேதான். அப்ப இருந்த நிலைமைக்கு அவர் சொன்னது, திண்ணைப்பேச்சாளர்களுக்கோ, டீக்கடை பெஞ்ச் தேய்ச்சவங்களுக்கோ. ஆனா இன்னிக்கு அதே இணையவாதிகளுக்கும் பொருந்துது. இதுல இருந்து என்ன தோணுது... இருங்க இருங்க இன்னொன்னையும் சொல்லிடறேன்.

எஸ்.வி. சேகர் ஒரு நாடத்துல சொல்லியிருப்பாரு, "பரபரப்பான செய்தின்னா, முதல் ரெண்டு நாள் முதல் பக்கத்துலையும், அப்புறம் ரெண்டு நாளைக்கு 2ம் 3ம் மூன்றாம் பக்கத்துலயும், ஒரு வாரங்கழிச்சுப் பார்த்தா கடைசிப்பக்கத்துலேயும், அடுத்த வாரம் அந்தச் செய்தியே இல்லாமையும் போயிடும்"னு நாளிதழ்களை பத்தி கிண்டலாச் சொல்லியிருப்பாரு.


தையேத்தான் இணையவாதிகளும் செய்யறோம். இதுல ஒரு வித்தியாசமும், இல்லை. அதனால Moral of the Story is நாம மாறவே இல்லை. பேசுறதுக்கான இடம்தான் மாறியிருக்கோ ஒழிய, முறை மாறவேயில்லை.

Thanks: Img From Dinamalar- Tea Kadai Bench

Tuesday, March 12, 2013

Cloud Computing என்றால் என்ன? கொளுவுக் கணிமை

முதலில் வருவது cloud computing. சட்டென்று இதற்கான கலைச்சொல்லைச் சொல்லாமல் விளக்கம் தந்தே சொல்லுகிறேன். முதன்முதலில் இது போன்ற கலைச்சொற்களைத் தரும்போது விளக்கமும் கொடுத்துச் சொற்களைத் தந்தால் நன்றாக இருக்கும். ஏதொன்றையும் தமிழில் முதலில் எழுதும் போது, புதுச் சொற்கள் பயிலவேண்டிய கட்டாயத்தில் இதுபோன்ற விளக்கமும் கொடுத்து ஆக்கத்தை எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

-------------------

ஒவ்வொரு கணிப்புதிரியின் (computing problem) சிக்கலான தன்மையைப் பொறுத்து அதைத் தீர்ப்பதற்கு கணித்திறன் (computing capacity) தேவைப்படும். கணித்திறன் கூடக் கூடக் கணியின் விலையும் கூடும். ஒவ்வொரு கணிப்புதிரிக்காகப் கணித்திறன் கூடிய புதுப்புதுக் கணிகளை உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது.



பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதிகப்பட்ட கணித்திறன் தேவைப்படும், கணிப்புதிரிகளைச் சுளுவ (to solve) வேண்டும் போது, கணியாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒருசில குறைதிறன் கணிகளைச் சரஞ்சரமாகவோ (series), இணையாகவோ (parallel) கம்பிகளாலும் (wires), வடங்களாலும் (cables) பிணைத்து புதிரிகளின் தீர்வுகளைக் காண முயலுவார்கள்.



சரி, இது போன்ற பிணைப்புக்களால் ஓரளவுக்குப் பெரும்புதிரிகளைச் சுளுவியெடுக்க (to solve) முடியும் என்றாலும், அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பலநேரங்களில் இந்தக் கணிகளை ஒரேயிடத்தில் ஒன்றுசேர்க்க முடிவதில்லை. அவை பல்வேறு இடங்களில், ஏன் பல்வேறு நாடுகளில், கூட இருக்கக் கூடும். அவற்றை ஒன்று சேர்த்து ஓரிடத்திற்குக் கொண்டுவந்து பிணைத்துக் கணிப்பது என்பது மிகப் பெருமாண்டமான செலவைக் கொண்டுவருகிறது. மாறாக இந்தக் காலத்தில் உலகெங்கும் இருக்கும் பல்வேறு கணிகளை (அவை 100, 1000, 100000 என்று எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும்) “இணையம்” என்ற வலையால் ஒன்றிணைக்க முடியும். பூதியல் (physical) முறையில், கம்பி, வடங்கள் வழி கணிகளை இணைப்பதற்குப் பகரி(substitute)யாக, ஒரு கணியை இணைய வலையில் (internet web) பிணைத்து எங்கெங்கோ இருக்கும் கணிகளையும், நம் கணியையும் ஒரு கூட்டுப் பொதியாக்கி, கூட்டுறவு முறையில், ஒரு கணிப் புதிரியைச் சுளுவுவதையே cloud computing என்று சொல்கிறோம்.



சரியான கணிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (computer control protocols) இருந்தால் ஒரு கணியின் இயக்கக் கட்டகம் (operating system) இந்த வலையின் மூலம் எண்ணற்ற கணிகளை இயக்க முடியும். அதே போல 4, 10 கணிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய இயக்கக் கட்டகங்களை ஒருங்குறச் செயற்பட வைத்து 10000 கணிகளைக் கூடச் செயற்பட வைக்கமுடியும். பலநேரம் எந்தக் கணி கட்டுறுத்துகிறது (which is controlling), எந்தக் கணி கட்டுப்படுகிறது (which is getting controlled) என்று சொல்ல முடியாதபடி அவை மாறி, மாறிச் செயற்படலாம்.



இந்தக் கணிகளின் இணைப்பு இந்த முறையில் தான் ஏற்பட்டது என்று கணுவலை அடவுகளைக் (network design) காட்ட முடியாதபடி கணிகள் முனைகளாக (nodes) ஒருங்கிணைந்து செயற்படும். எப்படி ஒரு மேகத்தினுள் மழைக்கருக்கள் (condensation droplets) சேர்ந்து பஞ்சுபோல் உருக்கொண்டு புதுப்புது உருவம் எடுத்துச் சூழ்நிலைக்கு ஏற்ப பெருகிச் சுருங்கி விரிகின்றனவோ, அது போல இந்த கணி முனைகளும் (கணிக் கருக்களும்) தமக்குள் ஒன்றிணைந்து இயங்கி, கொடுத்திருக்கும் கணிச்சிக்கலைச் சுளுவித் தருகின்றன என்பதால் கணித் திரளைச் சுட்டுவதற்கு மேகத்தை உருவகமாக்கிக் காட்டுவார்கள்.



தமிழில் கொண்டல் என்ற சொல் மேகத்தைக் குறிக்கும் சொல். மழைக்கருக்கள் திரண்டு இருப்பதைக் கொள்ளுதல் என்று சொல்லுவார்கள். குள்>கொள்>கொண்டு>கொண்டல் என்று அந்தச் சொல் உருவாகி, மழைக்கருக்கள் பொருந்திய மேகத்தைக் குறிக்கும். கொண்டல் குளிரும் போது மழை பொழியும். குள்ளுதல் என்பது திரளுதல். குள் என்னும் வேரில் இருந்து பிறந்த கூட்டச்சொற்கள் தமிழில் ஏராளம். இங்கே கொண்டல் என்பது இயற்கையில் வலையும் இல்லை, இணைப்புமில்லை, பிணைப்புமில்லை. அது ஒரு திரள். தாமாகவே திரளும் கூட்டம்.



இப்படித் திரள்வதை agglutination என்றும் ஆங்கிலத்தில் சொல்லலாம். குள்>கொள்>கொளுவு>கொளுவதல் என்பது தமிழில் agglute என்பதைக் குறிக்கும். நம்முடைய கணித் திரளில் வலை இருக்கிறது; இணையம் இருக்கிறது. ஆனால் ஒரு புதிரியைச் சுளுவ, எந்தக் கணி எத்தனை கணிகளோடு பிணைந்தது என்பது குறிப்பிட்டுச் சொல்ல முடியாததால் அது திரள் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. திரளுதல் என்பதை கொளுவுதல் (agglute) என்றும் சொல்லலாம். Tamil is an agglutinative language - தமிழ் ஒரு கொளுவு நிலை மொழி என்று சொல்லுவார்கள். கொளுவுக்கும் கொண்டலுக்கும் அடியில் இருக்கும் கருத்துத் திரளுதலே. இங்கே கொண்டல் என்ற சொல்லை அப்படியே நேரடியாகப் புழங்காமல், பின்னால் ஏற்படக்கூடிய கூட்டுச் சொற்களுக்கு வாய்ப்பாகக் கொளுவு என்பதை முன்சொல்லாக்கிக் cloud computing என்பதைக் ”கொளுவுக் கணிமை” என்று சொல்லலாம். கொளுவு என்ற சொல்லிற்குள் ”திரள், எங்கெங்கோ இருக்கும் கணிகள், இணையம், பிணைப்பு” என எல்லாமே உள்ளூற அடங்கி விடும்.

--------------------



அடுத்தது On line [learning, resources] இதைச் சிறிது காலமாகவே எடுகோடு என்ற சொல்லாற் குறித்து வருகிறேன். எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கும் கோடு. He is always online = எப்பொழுதும் அவர் எடுகோட்டில் இருப்பார். [எங்கெல்லாம் ஆங்கிலத்தில் online வருகிறதோ அங்கெல்லாம் எடுகோடு என்பது சரியாகவே பொருந்துகிறது. பல்வேறு வாக்கியங்களை வைத்துப் பாருங்கள். ஏதேனும் விதிவிலக்கு இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்.



எடுகோட்டுப் படிப்பு = online learning. எடுகோட்டு ஊற்றுகைகள் = online resources. மூலங்கள் என்ற சொல்லை resources என்பதற்கு இணையாக நான் பயன்படுத்துவதில்லை. முளை, மூலம் என்ற சொற்கள் roots என்பதை ஒட்டிவரும் மெய்யியற் சொற்களுக்கே பயன்படுத்துகிறேன். ஊற்று/ ஊற்றுகை என்பது ஊறிவரும் நீர்ப்பொருள் என்பதால் அறிவுப் பொருளைக் குறிக்கமுடியும்.



அன்புடன்,

இராம.கி.
 
 
http://valavu.blogspot.com/2010/03/cloud-computing.html இதனுடைய நகல்தான் இந்தப் பதிவு. பலரைச் சென்றடையும் என்ற எண்ணத்தில் . நன்றி இராமி.கி ஐயா அவர்களுக்கு

Tuesday, March 5, 2013

கணேஷ்குமார் மோகன் - குறும்படங்களின் குறுநில மன்னன்

நாளைய இயக்குனர்,  இந்தளவுக்குப் பிரபலமாகாத காலம்னு நினைக்கிறேன். தமிழ் குறும்படங்கள் வெகு சொற்பமாய் இருந்த காலம் அப்படின்னு நினைக்கிறேன். அப்பத்தான் இவரோட குறும்படம் ராமசாமியை யூட்யூப் மூலமா பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சது. அடடே, நல்லாயிருக்கே அப்படின்னு பலரும் இவர் பக்கம் திரும்பிப் பார்த்த சமயம் அதுதான்னு நினைக்கிறேன்.

ராமசாமி - வி.கே.ராமசாமியின் ஒரு காட்சியை அடிநாதமா வெச்சி சிரிக்க வெச்ச படம் அது. வெங்கட் சுந்தரோட அபாரமான நடிப்பு இல்லை, இல்லை  அசால்ட்டான நடிப்புதாங்க படத்துக்கே பலம். இதுக்கும் பெரிய தொழில் நுட்பமில்லாத, பெரிய பட்ஜெட் எதுவுமில்லாத, இசைக்குன்னு தனியா ஒரு ஆள் கூட இல்லாம, பின்னி எடுத்த படம்.வசனம், நடிப்பு, காட்சி இவ்வளவுதான் இந்தப் படத்துக்கு ஆதாரம்.

இராமசாமி - குறும்படம்




====0oo0=====

அப்புறம் கொஞ்ச நாளிலேயே வந்துச்சு ஒரு பாட்டு.  அதிபுதிரியாக ஹிட் அடிச்சுது, அதுதான் இவரின் அடுத்தக் குறும்படத்தின் பாடல் - அது ஊருக்கு 4 பேரு. சுருக்கமாக O4P. அந்த பாட்டுக்கு இசையமைச்ச பாலமுரளிக்கு செம திருப்பு முனையா இருந்துச்சுன்னு சொல்லிக்கலாம். படத்தை திரையரங்கத்துல எல்லாம் வெளியிட்டு, அதாங்க Screening [ஒன்னு ரெண்டு காட்சிகள் மட்டும் ஓடும்]. தொழில்நுட்பத்துல ஒரு திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்துச்சு

னக்கோ ஆச்சரியமான, ஆச்சர்யம், இந்தச் செய்திகளை எல்லாம் Facebook வழியாத்தான் தெரிஞ்சிகிட்டேன். இதற்காக இவர் செலவு செய்த  பணமும், நேரமும் அதிகமா ஆகியிருக்கும். என்னமோ திட்டமிருக்கு.

====0oo0=====

குறும்படம் ஊருக்கு 4 பேரு



ருக்கு 4 பேரு, பெரிய ஹிட் ஆச்சு. அபிநவ் (படத்தொகுப்பு) அவரோட அந்தப் படத்தோட லெவலே வேற மாதிரி ஆகிருச்சு. சினிமா மக்களெல்லாருமே இந்தப் படத்தை கண்டிப்பா பார்த்திருப்பாங்க. அதுவும் MLMஐ வெச்சி, நல்ல நோக்கத்தோட வந்ததால உண்மையாலுமே அதிரிபுதிரியா ஹிட்டடிச்சுது. பல விவாத மேடைகளில படத்தோட சாரம்சத்தைப் பத்தி பேசினாங்க.உண்மையாகவே MLM பத்தி பலருக்கும் இருக்கும் கேள்விகளை வெளிச்சம் போட்டு கேட்டாங்க. பதில் இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுவும் இணையத்துல 10 நிமிசத்துக்கு மேல குறும்படம்னாவே ஓட்டிவிட்டு பார்க்கும் காலத்துல சற்றேறக்குறைய 30 நிமிசத்துக்கு படமெடுக்கிறதுக்கும் ஒரு தில் வேணும்

இவுங்க குழுவுல, ஆரம்பத்தில இருந்தே ஒளிப்பதிவுல கலக்கிட்டு இருக்கிறார். KB Prabhu.


====0oo0=====

ஆனா இதுக்கெல்லாம் முன்னாடியே(?!) 536 அப்படிங்கிற குறும்படத்தை எடுத்திருக்காங்க அப்படிங்கிறது பலரும் அறிந்திராத செய்தி. அது உங்களுக்காக

குறும்படம் - 536




ஒரு சமயம் இவுங்களோட பேட்டி கோவையில தனியார் சேனல்ல ஒளிபரப்பாச்சு. அதுலதான் தெரிஞ்சது இயக்குநர் ஷங்கர் அழைச்சதையும், இவர்னால அவரிடம் உதவியாளரா சேரமுடியாத நிலையையும் இதுல சொல்லிருந்தாரு. ஆனா சரியான முடிவை கணேஷ் எடுத்திருக்காருன்னு நான் நினைக்கிறேன்.  

அப்புறம் மஞ்சள் வெயில் அப்படின்னு ஒரு படம்னாங்க, அது என்னாச்சின்னே தெரியலை(???!).



====0oo0=====

வெங்கட் வேற ரெண்டு குறும்படத்துல படத்துல நடிச்சாப்ல. நாளைய இயக்குனர்ல கூட வந்தாப்ல. வெங்கட்டுக்கு ஷங்கர் படத்துல வாய்ப்பு கிடைக்கவும் இது உதவுச்சுன்னா பாருங்களேன். நண்பன் படத்துல விஜய்க்கு சீனியரா நடிச்சிருப்பாப்ல.

YesKay தனியா படம் செஞ்சிருந்தாரு. (http://www.youtube.com/watch?v=kqxA_9hUCi0).

பாலமுரளி- பல குறும்படங்களுக்கு இசையமைச்சிருக்காரு.  சமீபத்துல வெளியான புத்தகம் திரைப்படத்துக்கும் சில காட்சிகளுக்கு இசையமைச்சிருக்கிறதா கேள்வி.

அபிநவ்வோட பேரை பல குறும்படங்களில் பார்த்தேன். நாளைய இயக்குனர்ல வந்த பல படங்களில், இவுங்களோட பங்களிப்பு கண்டிப்பா இருக்கு.

====0oo0=====

2012ல் குட்டீம்மா படத்தைப் பத்தி சொன்னாங்க, படத்தோட trailer வந்திச்சு, அதுவும் சமீபமாத்தான். படத்தைப் பல இடத்துல  Screening பண்ணியிருக்காங்க. பெரிய வெற்றின்னு வேற சொல்றாங்க. படம் Youtubeல வரும்னு காத்திட்டு இருக்கேன்.



B.லெனின், பாலு மகேந்திரா, அம்ஷன் அப்படிங்கிறவங்க எல்லாம் 1980/90களிலேயே இந்தக் குறும்படம்/Documentary எல்லாம் செய்த முன்னோடிகள். 

====0oo0=====
திரைப்படத்திற்காக குறும்படங்களை ஒரு Profile ஆ செய்வாங்க. அதுல கணேஷ் மாபெரும் வெற்றி பெற்றிட்டாரு. குறும்படங்கள் மூலமா பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வெச்ச கணேஷுக்கு வாழ்த்துகள். குறும்படங்களுக்காக இருந்த பல பார்வைகளையும் மாத்தினதுல கணேஷூக்கு முக்கிய இடமுண்டு. இப்பவும் பலர் குறும்படம் எடுத்தா அது Youtube/Vimeoவுல வந்தாப் போதும்னு நினைக்கிறாங்க. இல்லைன்னா நாளைய இயக்குனர். இதுதான் இன்னிக்கு இருக்கிற தமிழ் குறும்பட சூழல்.



கூடிய சீக்கிரம் நாங்க உங்களை ஒரு திரைப்பட இயக்குநராப் பார்க்கனும் பாஸூ.

இப்படிக்கு

இதுநாள் வரைக்கும்  வெகுதொலைவிலிருந்து உங்களைத் தொடரும் ஒரு ரசிகன்

Wednesday, February 13, 2013

எண்களோடான தமிழ்


ஒன்று: வானம் - ஒன்று.

இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.

மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.

நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.

ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.

ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.

ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.

எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.

ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.

Saturday, February 2, 2013

ஒரே மாதிரி எத்தனை படம்டா வரும்?

ஜனவரி 29 ம் தேதி டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட இந்த Animation Video ஆஸ்கர் விருதின் போட்டிக்கு அளித்துள்ளார்கள்.

காணொளி பார்த்தீங்களா? நல்லா இருந்திச்சி இல்லே? பிரச்சினை அது இல்லை. 4 வருடங்களுக்கு முன்னரே Signs அப்படின்னு ஒரு குறும்படம் வந்திச்சு, அதனோட பாதிப்புதான் அப்படின்னு இணைய உலகத்துல பேச்சு. அந்த காணொளியையும் பார்த்துடுங்க.


அதே மாதிரி தமிழில் போன வருடம் Inbox அப்படின்னும் ஒரு குறும்படம் வந்துச்சு. எல்லாம் ஒரே களன்.


ஆச்சா, இப்ப சிரிச்சிக்கிறது எல்லாம் நம்மாளு(பாலசந்தர்) ஏக் துஜே கேளியேவிலே நோட்டம் பார்த்துட்டாரு. அந்தக் காணொளியும் கீழே இருக்கு. நெற்றிக்கண்ல கூட ஒரு காட்சி இப்படி வரும்தானே?



இதனால நான் சொல்ல வரது என்னான்னா? ஆணியே புடுங்க வேணாம்னு நீங்க சொல்றது கேட்குது

Friday, February 1, 2013

விஸ்வரூபம்: கத்தரிக்க வேண்டிய காட்சிகள் - பொது புத்தியாளன் பார்வையில்

த்தரிக்க வேண்டிய காட்சிகளை கடைசியில சொல்லியிருக்கேன், இப்போ படத்தைப் பத்தி பார்ப்போம்.  விருப்பமில்லாதவர்கள் சிகப்பு வரிக்கு நேரடியாகப் போயிடலாம்



படம் பற்றி என் எண்ணம் : 
 படம் ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடக்கிறது. தமிழ்நாட்டைப் பற்றி பேசுவது 3 வார்த்தைகள் மட்டும்தான். அதிலும் குறை எல்லாம் இல்லை. காபூல் எக்ஸ்ப்ரஸ் படத்திலும், The Siege படத்திலும் காட்டப்பட்டதை விட இந்தப் படத்தில் காட்டப்பட்டது குறைச்சலே. இதில் கமல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது.

கமல் கதாநாயகனாக உருமாறும், உருவெடுக்கும் காட்சியில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்கு வைத்து வந்த Opening Sceneவிட அபாரம். அதுவும் இரண்டாம் முறை காட்டப்படும் போது  Simple Fantastic. சண்டைக்காட்சி அமைத்தவருக்கு என் பாராட்டுகள். ராகுல் போஸ், கமலுக்கு இணையான ஒரு கதாபாத்திரம், உண்மையைச் சொல்லப் போனால், சில இடங்களில் கமலை விட அதிகமாக Score செய்து விடுகிறார். படத்தில் கதாநாயகனும் இஸ்லாமியர், வில்லனும் இஸ்லாமியர்.

பூஜா குமாரும், ஆன்ட்ரியாவும் படம் நெடுக வருகிறார்கள். விசாரணைக் காட்சியில் ஆண்ட்ரியாவின் தெனாவெட்டான நடிப்பு Simply Superb. பூஜா குமாரின் கதாபாத்திரம் இப்படியுமில்லாமல் அப்படியுமில்லாமல், ம்ம்ம், கதையில வந்துட்டே இருக்காங்க.

கமலின் ஆரம்ப காட்சிகளுக்கான நடிப்பு அபாரம், அது எப்படிங்க, அவ்வை சண்முகியே பெருசா நினைச்சா இதுல இன்னொரு பரிமாணம். அவரைப் பத்தி புகழ என்ன இருக்கு, அவருக்கு நடிக்க வரும், வருது.

பிரச்சினையென இஸ்லாமியத் தலைவர் பேசிய பேச்சுக்கும் படத்துக்கும் சம்பந்தமேயில்லை. ட்விட்டரில் எழுதியதை இங்கே பகிர்கிறேன்

"பகடைக் காய்களுக்கு கடைசிவரை தாங்கள்தான் பகடைக் காய்கள் என்றே உணர்வதில்லை" 

அவர்களுக்கு ஒன்று, இது உங்களுக்கான களமில்லை, தயவுசெய்து உங்கள் மதத்தினரை களங்கப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு நீங்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்று மறந்துவிடாதீர்கள். நீங்க சொல்லும் சொல்லை வைத்துதான் உங்களையும் உங்கள் மதத்தவரை மற்ற மதத்தினர் பார்க்கிறார்கள், அதுவும் இந்த சினிமாவை வைத்து, நீங்கள் பேசிய பேச்சுக்கு, என்னுடைய வருத்தங்களும் கண்டனங்களும்.

டம், Hollywood தரமென்றால் ஆமாம் என்று சொல்வேன். ஆனால் கமல் Hollywood தரத்தில் முந்த வேண்டுமென்றால், கமல் எடுத்துவைத்திருக்கும் முதல் படி மட்டும்தான் என்றுதான் சொல்வேன். அதற்கு பொருளாதார Constraint இருக்கும் என்று நம்பினாலும், முதல் படி எடுத்து வைத்துவிட்டார் என்றே சொல்வேன்.

இப்போ என் பார்வையில் தவிர்த்திருக்கவேண்டிய காட்சிகள்:

1. பாப்பாத்தி, இந்தா இந்த கோழியை ருசி பார் - இந்தக் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு பிராமணனையும் பாதித்திருக்கும். நானறிந்தவரையில் பிராமணர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கவில்லை.  இந்த இடத்தில் நான் சொல்லிக்கொள்வது - நான் பிராமணன் இல்லை. பொதுப் புத்தியாளன்

2. ஆங்கிலேயப் பத்திரிக்கையாளரை கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சியில் பின்னணி இசை(I see the YouTube video shows as it). இதே போல பல இடங்களில் இது மாதிரியான இசை வருகிறது. இது ஒரு சம்பவத்தைப் பொதுப்படுத்துதல், இதை எதிர்க்கிறார்கள் என்றால் தவறேயில்லை. என் கண்டனங்கள் சேர்த்துக்குங்க.

3. தாலிபான் குழந்தைகள் விளையாடுமிடத்தில் கூட விரலை துப்பாக்கியாக்கி விளையாடுவதாக காட்டியிருப்பது எனக்கு சரியாகப் படலைங்க, உண்மையாகவே இருந்தாலும் (பத்தி 2க்கான பதிலே இதிலும்,  பிற்பாதியில் அதை மீட்டெடுக்கும் காட்சிகள் வந்தாலும் கூட)

படத்தில் காட்டப்பட்ட மீதிக் காட்சிகள் எல்லாம் பல படங்களில் காட்டிய, செய்திகளில் பார்த்த, பழைய மாவையே திரும்ப அரைத்த காட்சிகள்தான்.

தமாஷ்தான் என்று கமலும், ராகுலும் பேசிக்கொள்ளும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. எல்லாத்தையும் தமாசா எடுத்துக்க முடியல.

எனது முடிவு: இதுவொரு மசாலாப் படம், குழந்தைகளுக்கானது அல்ல, ஒரு முறைக்கு இரு முறை கூட பார்க்கலாம். ஆனால் கமல் இந்த மாதிரி சர்ச்சைகளை விட்டு வெளிவரவேண்டும். நாட்டில் பல விசயங்கள் திரையில் வராமல் இருக்கின்றன, அதையும் மனதில் வெச்சிக்குங்க, இல்லை, இது அமெரிக்காவை திரும்ப பார்க்க வைக்கும் படமென்றால் இந்த மாதிரியும் படமெடுக்கலாம், ஆனால் இந்த ஒரு முறைதான் இருக்கிறதா என்றால், மன்னிக்கவும்  கமல் சார், எடுக்கவேண்டியது நிறைய இருக்கு, வெளியே வாங்க.

Thursday, January 31, 2013

எங்கே சென்றீர் எமை விடுத்து?


ந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் "சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது" என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் "நண்பர் என அழைத்தீர்கள் என்றுதான் இங்கு வந்தேன். உங்களிடம் யாசகம் கேட்க அல்ல. என்று நாங்கள் வேண்டாம் என்று எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். உம் உதவி எமக்குத் தேவையில்லை. விருந்துக்கு என்று அழைத்து என்னை அவமதித்து விட்டீர்கள், எனவே இந்த விருந்தில் இருந்து வெளியேறுகிறேன்" என உடனடியாக கைகழுவி வெளிநடப்பு செய்கிறார் கண்ணியத் தென்றல்.

நேருவை நம்ப வைத்து பின்னர் கழுத்தறுத்து இந்தியாவிற்கு எதிராக சீனா போர் துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை. இந்திய இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேவை என்று அழைப்பு விடுக்கின்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன். அழைப்பைக் கண்ட அடுத்த நொடி தனது இளம் மகனை அழைத்துப்போய் பரங்கிமலை ராணுவ கேம்பில் ராணுவத்திற்கு சேர்த்துவிட்டுத் திரும்புகிறார் பெருந்தகை காயிதேமில்லத்.

பாராளுமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவின் மீதான விவாதம். தன் தாய்மொழியான தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கண இலக்கியச் சிறப்புகள் ஆகியவற்றைத் தன் அழகுமொழியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து "இந்திய துணை கண்டத்தின் ஆட்சிமொழியாக இருக்கும் தகுதியும்,உரிமையும் தன் தாய்மொழி தமிழுக்கே உண்டு" என்று முழங்கி இந்தியை தேசிய மொழியாக்கும் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறார் தலைவர் இஸ்மாயில் சாஹிப்.

ஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கண்ணியத் தென்றல் வெளியிட்ட அறிக்கை கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணாவின் கருத்தைக் கேட்கின்றனர். " அவரது அறிக்கையை நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இஸ்ரேல் முக்கியமா? இஸ்மாயில் முக்கியமா? என்று கேட்டால் நான் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன்! எனவே அவர் எது சொல்லி இருந்தாலும் அதுதான் என் கருத்து" என்று பதிலுரைக்கிறார் அவரது ஆத்ம நண்பர் அறிஞர் அண்ணா.

--00--

பெருந்தகையே! பிறப்பால் இந்தியனாக, இனத்தால் திராவிடனாக, தாய்மொழியால் தமிழனாக, மதத்தால் முஸ்லீமாக.... இவற்றில் எது ஒன்றுக்கும் குறைவைக்காத பெருவாழ்வு வாழ்ந்தவர் நீங்கள்! நீங்கள் மறைந்து 41 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தனக்குத் தலைவனில்லாது தவிக்கிறது, தத்தளிக்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். தலைவன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தன்னைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வழிகாட்டும் தற்குறிகளால் தடுமாறி நிற்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். இனியும் உங்களைப் போல் ஒரு தலைவன் கிடைப்பான் என்ற நம்பிக்கை எமக்கு அறவே இல்லை. இறைவனிடம் கேட்டு நீங்களே எழுந்து வாருங்கள்!!

-------------------------------------------------------------------------------------
ஆக்கம்: புதுகை அப்துல்லா 

Monday, January 14, 2013

வெள்ள ப்ரொடியூசரு

ரு நல்ல நாள் அதுவுமா அந்தத் தயாரிப்பாளரை சந்திச்சேன், சரக்கடிக்கிற இடத்துலதாங்க. நான் என்ன பண்றேன்னு சொல்லவே இல்லை. அவராத்தான் சொன்னாரு, அவரு ஒரு தொழிலதிபர் அப்படின்னும், சினிமாப் படம் ஒன்னு எடுத்துடறதுதான் அவரோட லட்சியம் அப்படின்னும் சொன்னாரு.

ஒன்னு ரெண்டு தம்ளர் இறங்கியதும், நான் பேச ஆரம்பிச்சேன். “அண்ணே, எனக்கு படம் இயக்கனும் அப்படிங்கிற ஆசையிருக்கு. நல்ல கதையா பலதும் இருக்கு. ஆனா உங்களை மாதிரி ஒரு நல்ல தயாரிப்பாளர் மட்டும் கிடைக்க மாட்டேங்குறாங்க. என்னோட விதி இப்படி கதை சொல்லித்தான் முடிஞ்சிடுமோன்னு தெரியலண்ணே” அப்படின்னு பிட்டைப் போட்டு வெச்சேன்.

என் கண்ணையே குறுகுறுன்னு பார்த்திட்டு இருந்தாரு. “ஏங்கண்ணு, என்னைப் பார்த்தா என்ன நினைக்கிறே? (சரக்கு அம்புட்டு உள்ளே போயிருக்கு)”

”சரியாத் தெரியலண்ணே! ஆனா வெள்ளை மனசுக்காரவுகளா இருக்கீங்க. இங்கே சீக்கிரமா ஏமாத்திப் புடுவாங்கண்ணே”

“கண்ணு, உன் கண்ணு கூர்மைடா, பொய் சொல்லலை. நெசமாலுமே, கதையிருந்தா சொல்லு, இப்பம் வேணாம், காலங்காத்தால வா, பேசிக்கலாம். இந்தா என் நம்பரு” அப்படின்னு சொல்லிட்டு, நான் அடிச்ச சரக்குக்கும், சைட் ட்ஷ்ஷுக்கு சேர்த்தே காசை வெச்சிட்டுப் போனாரு.

எனக்கோ நம்பிக்கையேயில்லை. உடனடியா அவரோ நம்பரை பதிஞ்சி வெச்சிக்கிட்டேன், மொபைல் கீது தொலைஞ்சு போயிட்டா, உடனே பக்கத்துல இருந்த ஒரு சிகரெட் அட்டையை எடுத்து அதுலையும் இப்படி எழுதி வெச்சிக்கிட்டேன்.

Dheivam - 98427*****

காலையில எழுந்திருச்சது 5 மணிக்கு, சுத்தமா தூக்கமேயில்லீங்க. தனியாளா நானா ஒரு முறை, ரெண்டு கதையையும் சொல்லிப் பார்த்துக்கிட்டேன். முதல்வன் அர்ஜூன் கணக்கா(கக்கா போகயிலும் கூட).

சரியா 8 மணிக்கு அவரோட வீட்டுக்கு முன்னாடி என்னோட சில்வர் ப்ளஸ் போய் நின்னுச்சு. வீட்டைப் பார்த்தா, இல்லீங், இல்லீங் அது மாளிகை, பங்களா.. வாட்ச்மேன் கேட்டாரு “என்ன தம்பி, ஐயாவை பார்க்க வந்தீங்களா? செத்த நேரம் பொறு, ஒரு அரை மணிநேரத்துல கூப்பிடுவாரு” அப்படின்னு கேட்டுலையே நிக்க வெச்சாரு.

சரியா அரைமணிநேரம் கழிச்சு, வாட்ச்மேன் உள்ளே போகச் சொன்னாரு. 6 இல்லைன்னா 7 காரு இருக்கும்ங்க. அத்தனையும், பளபளன்னு ஜொலிக்குது, வெள்ளைக்காருங்க. ஐயா, இல்லை இல்லை தெய்வம்தான் ஹால்ல உக்காந்து இருந்தாரு, ’வெள்ளையும் சொள்ளையுமா’ அப்படின்னு கேள்விப் பட்டிருப்பீங்க, ஆனா அவரு வெள்ளையோ வெள்ளையா இருந்தாரு, வீடு முழுக்க வெள்ளைதான். சோபா வெள்ளை, பூஞ்செட்டியெல்லாம் வெள்ளை. எல்லாம் வெளுப்பு.

“வா கண்ணு, தூங்குனியா” அப்படின்னு தெய்வமே கேட்க “இல்லைண்ணே, ஒரே படபடப்பாவே இருந்துச்சு”

“என்ன சாப்பிடுற?” உள்ளே திரும்பி, ”மணியா! ரெண்டு காபி கொண்டா, அப்படியே தம்பி வந்திருக்காப்ல, இட்லி பண்ணிடு” அப்படி உத்தரவு போட்டாரு. “சாப்பிடுவே இல்லை” அப்படின்னு என்னைப் பார்த்து கேட்க “என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, சங்கோஜமா இருக்குண்ணே” அப்படின்னு நெளிய ஆரம்பிச்சேன்.

காபி ஆச்சு, கதை சொல்ல ஆரம்பிச்சேன், இட்லி ஆச்சி, மறுபடியும் இன்னொரு காபி ஆகும் போது, என்னோட முதல் கதை/திரைக்கதையை முடிச்சிருந்தேன்.

5 நிமிசம், கண்ணை மூடி உக்காந்திருந்தாரு. என்ன நினைச்சாரோ தெரியலை, மளமளன்னு எந்திருச்சு உள்ளே போனாரு. வரும்போது, கையில ஒரு வெத்தலையும் 51 ரூபாவும் வெச்சி “ஏந்திரிப்பா”ன்னாரு. எழுந்திருச்சேன், “இந்தா, படத்தோட அட்வான்ஸ், மத்தவங்க எப்படி குடுப்பாங்கன்னு தெரியாது, நம்ம குடும்பத்துல இப்படித்தான் வெத்தலை பாக்கு வெச்சி ஆரம்பிப்பாங்க” அப்படின்னு அவரு சொல்லும்போது எனக்கு தரை நழுவுற மாதிரியே இருந்துச்சு.

சடார்ன்னு தெய்வத்தோட காலுல விழுந்துட்டேன். மத்த விசயங்களைப் பேச ஆரம்பிச்சேன், இந்தக் கதைக்கு கதாநாயகனா, பெரிய ஆளைச் சொன்னேன், புது ஆளைப் போடலாம்னாரு, இப்படியே எல்லாத்துக்கும் அறிமுகத்தையே வெச்சி பண்ணிடலாம்னாரு. சரின்னு தலையை ஆட்டி வெச்சேன். கடைசியா ஒரு கொக்கிப்போட்டாரு. “50% பணம் நீ போடு கண்ணு, அப்பத்தான் படம் ஜெயிக்கனுங்கிற வெறி உனக்கு வரும். என்ன சொல்றே?”

”இல்லண்ணே, அவ்ளோ பணத்துக்கு நான் எங்கே போவேன்.”.அப்படின்னு சமாளிக்க, ஆரம்பத்துல அவரு காசு போடுறதாவும், பாதிப் படத்துக்கு மேலே நான் ஏற்பாடு பண்ணிக்கிறதாவும் முடிவாகிருச்சு. சந்தோசத்தோட கிளம்பி வந்தேன், இல்லை பறந்துட்டே வந்தேன்.

இருக்கிற நிலத்தை வெச்சிடலாம்,  கொஞ்சம் பேங்க்ல கடன் வாங்கிக்கலாம், இப்படி பலவிதமா யோசிச்சிக்கிட்டே வீட்டு வந்தா, குமரேசன் நின்னிட்டு இருந்தான். டிகிரி தோஸ்த்து.

”என்றா ஆச்சு, உம்பட போனுக்கு? எத்தனை வாட்டி கூப்பிடறேன், ஆப் பண்ணியே வெச்சிருக்க?” அப்படின்னு எகுற ஆரம்பிச்சான். அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்திச்சு, அட ஆமாம்ல, கதை சொல்ல ஆரம்பிச்ச போது அணைச்சி வெச்சது. சந்தோசத்தை அடக்க முடியாம நிக்கிறேன், அவனா வந்து என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டான். ”மாப்ளே, ஹீரோவாகப்போறேன்டா, ஒரு ப்ரொடியூசரு படம் பண்ணலாம்னு சொல்லிட்டாரு” அப்படீங்க, “டேய், நானும் ஒரு ப்ரொடியூசரை பார்த்துட்டுதான்டா வரேன்” அப்படின்னு சொல்ல ரெண்டு பேருக்கும் தலையும் புரியல, காலும் புரியல.

அண்ணாச்சி கடையில டீ அடிச்சிட்டே சொன்னான் “முதல் 50% பணத்தை நான் போடனும்டா. நெலப்பட்டாவை ஐயன்கிட்ட கேட்டிருக்கேன். தரேன்னுட்டாரு. அப்பத்தான் ஜெயிக்கனும்ங்கிற வெறி வரும்னு சொன்னாருடா. எனக்கும் மனசுக்கு அதான் சரியாப் பட்டுச்சு. இதாப்பாரு” அப்படின்னு வாடின வெத்தலையோட 51ரூபாவை மேம்பாக்கெட்டுல இருந்து எடுத்தான்.

முடிவோட எழுந்திருச்சேன் “வெள்ளை வீட்டு ப்ரொடியூசராடா?”

”ஆமாம்டா, உனக்கு எப்படி.. இரு இரு.. உனக்கும் அவரேத்தானா. அப்ப நீதான் டைரக்டரா? டேய்ய்ய்ய்ய்”

”ஆமாம்டா அவரேத்தான், இரு இரு.. முதல் 50% உன்னோட நிலம். ரெண்டாவது 50% என்னோட நிலம். ஆமாம்டா, முதல்ல 50% அவரு பணம் போடுறாராம், ரெண்டாவது 50% நான் போடனுமாம். எப்படிஈஈ?” அவனையே பார்த்திட்டிருந்தேன்.

இப்படி முடிச்சான்

 “அப்புறம் என்ன ****க்குடா அவனுக்கு ப்ரொடியூசருன்னு பேரு *&*&^(*&^*(&^” 

படம் நன்றி: Super Goodfilms
Disc: மேலேயுள்ள கதைக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வெள்ளை வெளேறென்றால் இவர்தான் சரியா வருவாருங்கிறதால அவர் படம். அம்புட்டுதான்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)