Monday, August 28, 2006

இடைவேளை

மக்களே, வேலைப்பளு காரணமாக சிறிய இடைவேளை ஒன்று தேவைப்படுகிறது. இதனைப் பற்றி ஏற்கனவே வரப்பில் ஒரு பின்னூட்டமிட்டு இருந்தேன்.
ஒரு மாதமோ இல்லை இரு மாதமோ கழித்து மீண்டும் வந்தாலும் வருவேன்.
நன்றி!

Saturday, August 26, 2006

வேட்டையாடு விளையாடு-My Take

தமிழில்,ஆங்கில படத்துக்கு இணையாய் ஒரு பிரமாண்டம். கதாநாயகன் பறப்பதில்லை, கார், பைக் எல்லாம் உருண்டோடுவதில்லை. அக்கா, தம்பி செண்டிமென்ட் இல்லை. நிறைகள் நிறைய இருக்க குறைகள் சொற்பமே.

பல மாத காலமாய் மனதில் உருண்டோடிய நான் எதிர்ப்பார்த்த "பார்த்த முதல் நாளே" பாடல் உருவாக்கிய விதம் அருமையிலும் அருமை(முதல் இரண்டு வரிகளுக்கு blue mat picturisation" தவிர்த்து இருக்கலாமே). பாடல்கள் அனைத்துமே பிரமாண்டமாய் இன்னும் கண்களில் . இன்னொரு நிறை, நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன இடங்கள் எதுவுமே இல்லை. அனைத்துமே கண்களுக்கு புதிதாய், சுகந்தமாய், வசந்தமாய் (3 இடங்கள் மட்டுமே நமக்கு தெரிந்த இடங்கள்). இதில் கெளதம் வெற்றி பெற்று இருக்கிறார். கேமரா கையாடல் ரவி வர்மா ஒரு பெரிய பாராட்டு உண்டு. Frame by Frame செதுக்கி இருக்கிறார். படத்திற்கு இன்னொரு பலம் ஹாரிஸ். எப்பா Sax, keyboard இரண்டையும் இந்தப்படத்தில் கையாண்ட விதம் Simply Superb. Hats off to these Guys. இரண்டு பெரிய பலம் இவர்கள். இராஜீவனின் கலை, கண்டிப்பாய் பாராட்டலாம்.

அடுத்தது கமல் மற்றும் ஜோ. கமலுக்கு விமர்சனம் தேவையில்லை. ஒரு இடத்தில் கமலின் நடிப்பே அதற்கு ஒரு சான்று. 2 நிமிட பழி வாங்கலுக்குப் பிறகு அவர் காட்டும் அந்த முகபாவனை He deserves for awards.Top Angle view என்பதால் அந்த பாவனை அடிப்படுகிறதே. ஜோ, வழக்கமான கெக்கேபிக்கித்தனமான நடிப்பு இல்லை. ஆரம்பம் முதலே ஒரு சோகக்கீற்றை முகத்தில் படற விட்டிருக்கிறார், பரவாயில்லை, அம்மணி நடிப்பில் ரொம்ப முன்னேறிட்டாங்க. சூர்யாவுக்கு இணையாய் ஜோவும் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி வேகம் அதிகம். தமிழில் அனைவருக்கும் சாந்தமாய் பெயர். ஹோமோ பிடிக்காத வில்லனை அதைச் சொல்லியே வெறி ஏற்றும் கமலின் தந்திரம் ஒரு நச். வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.

கடைசி ஸீனை மட்டும் சொல்லி விடுகிறேன், 95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்டும் எப்படியோ எட்டிய விதயம் இது. ஒருவரை வாய் கட்டி மண்ணுக்குள் புதைத்தால், சில மணிவரை பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை திரையரங்கில் சொல்லி புரிய வைத்த பெருமை நமக்கும் இருக்கு.

"பார்த்த நாள் முதல்" பாடல் ஒரு அழகிய காதல் கவிதை, நியுயார்க் காட்சிகள் புதுக்கவிதை. வெண்ணிலவே பாடலுக்கு ஆங்கிலேயர்கள் வாயசைத்த விதம், ஹ்ம்ம் தமிழிக்கு புதுது.அட நம்ம கெளதம் வேற ஆட்டம் போட்டு இருக்கிறார். "நெருப்பே" பாடலில் ஆங்கில நெடிக்கு தகுந்தவாரு ஆங்கில மக்களின் கவர்ச்சி ஆட்டம்.(B & C மனதில் வைத்தா சார்)தனியொரு ஆளாய் கதாநாயகன், வில்லன் ஒரு பெரிய கும்பல் என்ற வழக்கத்தை மாற்றிய படம். இந்த படத்தில் கதாநாயகனுக்கு ஒரு படைப்பட்டாளம் இருக்க, வில்லன் இருவர் என புதிதாய் ஒரு முயற்சி.

படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம். நகைப்புடன் பின்னூட்டம் இட நான் தயார்.

முதல் காட்சியிலேயே கமலின் சண்டைக்காட்சி, யூ டூ கமல்ன்னு கேட்க ஆரம்பிப்பதற்குள் கதைக்கு சென்றவிதமும், கமலின் அறிமுகமும் ஆர்ப்பாட்டமில்லாத ஆஹா. ஆனால் அந்த தலைப்பு பாடல் கமலை ஹீரோவாக்கி காட்டி இருக்கிறது.

ஹீரோயிசம் இல்லாத கெளதம், ரவி வர்மா, ஹாரிஸ், இராஜீவன், திகில் படம் இது.
திரையரங்கில் மட்டுமே பார்க்கவும்.

மக்கள் கருத்து (நன்றி-IndiaGlitz) - இந்த கருத்துல என்ன சொல்றாங்கன்னு நல்லா கவனிச்சுக்குங்க. என்னோட அடுத்தப் பதிவு இந்த கருத்துக் கணிப்புல இருந்துதான்

Friday, August 25, 2006

Blogger பற்றி தெரியுமா?

கிழுமாத்தூர்காரர், கேள்வி கேட்ட கைப்புகிட்டையே ஒரு கேள்வி கேட்டு இருந்தார். ஒரு சின்ன தகவல் தேடி கிடைச்சதே Bloggerன் வரலாறு. இங்கே சொடுக்குங்க...

கோவியின் கருத்தை ஏற்று என் ஆங்கில பதிவில் இருப்பதை இங்கேயும் .....


Pyra Labs is the company who discovered/coined/invented the word Blogger and made the service a big success. That’s why most of our time is being eaten here.

Evan Williams and Meg Hourihan the founder, and the company's first product, also named 'Pyra', was a web application which would combine a project manager, contact manager, and to-do list. In 1999, while still in beta, the rudiments of Pyra were repurposed into an in-house tool which became Blogger. The service was made available to the public in August 1999, when likely fewer than 100 web logs existed. Much of this coding was done by Paul Bausch and Matthew Haughey.

Initially, Blogger was completely free and there was no revenue model. When the company's seed money dried up, the employees continued without pay for weeks or, in some cases, months; but this could not last, and eventually Williams faced a mass walk-out by everyone including co-founder Hourihan. Williams ran the company virtually alone until he was able to secure an investment by Trellix after its founder Dan Bricklin became aware of Pyra's situation. Eventually advertising-supported blogspot and Blogger Pro emerged.

In 2002, Blogger was completely re-written in order to license it to other companies, the first of which was Brazilian mega-corp Globo. I started blogging 2003(introduced by Cogito), deleted and recreated many times due to my inexperience in XML coding.

That is the time where Google started acquiring companies at 2003. As a sweep Google acquired Blogger in 2003 and become familiar to everybody. The people at Pyra Labs at the time of acquisition were Evan Williams, Jason Shellen, Steve Jenson, Rudy Winnacker, Jason Sutter, and Jason Goldman. Still I remember the day when left Blog with tears

In 2004, Evan Williams left Google. In 2006, Jason Goldman left Google.

So guys, hope you enjoyed the history of blogging.

Thursday, August 24, 2006

ஒரு வருடமும் ஒரு மீள்பதிவும்

போன பதிவில் சுஜாதாவைப்பற்றி பேசியதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டு வருடத்திற்கு முன் அவர் எழுதியது இன்றும் மனசில் இருக்கக் காரணம் அவர் கூறிய கருத்தேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அவர் கூறியது உண்மைதான் என்பது என் கருத்தும் கூட.

கண்டிப்பா அங்கீகாரம் இல்லாமல் யாரும் எழுத முன் வர மாட்டார்கள். நமக்கு அங்கீகாரம் என்பது பின்னூட்டம்தான். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதற்காக நமக்கு நாமே திட்டத்தில் நாமே அனானி மூலம் பின்னூட்டம் இட்டுக்கொள்வது ..... வேணாம் விட்டுருங்க இந்த நல்ல நாள்ல அதெல்லாம் எதுக்கு. அதே சமயம் என்னை நியாயப்படுத்தவும் அவசியம் இங்கே இல்லை. ஏன்னா எனக்கு என்ன ஒரு 200 பின்னூட்டம் விழுந்து இருக்காலாம் அதுல 20 நானே போட்டுகிட்டதா இருக்கும். சரி விடுங்க. இந்த ஒரு வருசத்தில எனக்கு பதிவுலகம் மூலம் என்ன கிடைச்சு இருக்கு? பல நண்பர்கள். அதற்காகவே இன்னும் எழுதவேன் பின்னூட்டமே கிடைக்காமல் போனாலும்...

அதென்ன நல்ல நாள்? ஒரு வருடம் ஆச்சுங்க என் முதல் பதிவ போட்டு. அதாவது இந்த நாள் இரண்டாம் வருசத்துல அடியெடுத்த வைக்கிறேன்.
ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி!!!

Wednesday, August 23, 2006

வலைப்பதிவு பற்றி சுஜாதாவின் கருத்து


விகடனில் இரண்டு வருடங்களுக்கு முன் சுஜாதா வலைப்பதிவுகளை பற்றி கூறியதை படமாக இணைத்துள்ளேன். அதையே தட்டச்சும் செய்துள்ளேன்.

"இன்று வலைக்குள் போட்டுவிட்டால் அது கிபி. 2014 ஆக்ஸ்ட்டில்கூட யாரோ ஒடு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம்தான் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்து கல்வெட்டுகளூகு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயதில் நாங்கள் எல்லாரும் நாடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறுவடிவம்தான். "இதோ பார் என் கவிதை" இதோ பார் என் கருத்து" "இதோ பார் உலகுக்கு என் உபதேசம்" அன் நானும் இருக்கிறென் நண்டுவளையில் என்று. .ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து எதோ ஒரு திசையி. குரல் குடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்கள் என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்"

இதில் அவர் கூறிய "பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான்" என்பது இப்போது நாம் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டங்களே. இதற்காகவா நாம் வலைப்பதிக்கிறோம்? பதிலை நீங்களே சொல்லுங்கள்.

Saturday, August 19, 2006

நட்பு

கல்லூரி ஆரம்பிக்க இருந்த முந்திய நாள்,
எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி சென்ற போதுதான்
அவனைப்பார்த்தேன்.
என் அறை நண்பன் என்ற
முறையில் ஹாய் சொன்னதோடு
எங்கள் அறிமுகம் முடிந்து தூங்கிப்போனேன்.

மூத்தோருக்கு சல்யூட் அடித்த
அந்தக் கல்லூரியின் முதல்நாளில்தான்,
எந்த பிரிவு என மூத்தோர் கேட்க,
பதில், என்னுடைய பிரிவாக இருக்கையில்
மனதுள் ஒரு சந்தோசம்.
ஆக, இருவரும் ஒன்றாக மூத்தோருக்கு
மரியாதை செலுத்தி விட்டு
கடைசி வரிசையில் ஒன்றாக அமர்ந்தோம்.

அன்றுதான் எங்களை நெருக்கியது நட்பு!

பிறகு என்னிடம் இருந்து
சிகரெட் பழக்கத்தையும்,
இருவருமே தண்ணி பழக்கத்தையும்
பழகியது வெகு சீக்கிரம்.

ஒரே தட்டில் சாப்பாடு,
இருவருக்கும் பொதுவானது
சட்டை, ஷூக்கள், ஒரே சிகரெட்,
ஒன்றாக சைட் என
முதல் செமஸ்டர் முடியும் முன்னே.

இன்னும் இருகியது எங்கள் நட்பு!

இணைபிரியா நண்பர்கள் என்று
நம்மை எல்லோரும் சொன்ன போது
காலர் தூக்கிவிட்ட படி,
நாம் விட்ட சிகரெட் புகைக்குக்கூட
ஒரு கர்வம்.

இரண்டாம் ஆண்டில்,
அப்பாக்களிடம் கெஞ்சி பணம் வாங்கி
பொதுவாக ஒரு பைக் வாங்கியதும்,
பல நேரங்களில் பெட்ரோலுக்கு பெண்களிடம்
அல்லு போட்டு ஊர் சுத்தியதும்,
குரங்கு அருவிக்கு போய்
திரும்பி வருகையில் பெட்ரோல் தீர்ந்து
விடுதி வரைக்கும்,
வண்டி தள்ளியே வேர்வையில்
மறுபடியும் குளித்துவிட்டு,
சிரித்த படி உறங்கிய போது
உடல் வலி மேலிட,
மனதுள் ஒரு திருப்தி.

விடுமுறையில்
உன் வீட்டுக்கு நான் வந்தேன்,
உன் அத்தைப்பெண்ணை
எனக்கு அறிமுகப்படுத்தி
நீ வெட்கப்பட்டாய்

"உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாட நண்பா"
அப்படின்னு கிண்டலடிச்சு
"நல்லா இருங்க"ன்னு சொல்லி
ஒரு சிவாஜி கணக்கா வாழ்த்தினேன்.

டீ சாப்பிட
வண்டிய எடுத்துக்கிட்டு
ஊட்டிக்கு ஓவர் ஸ்பீடுல போய்
போலீஸ் மாமாகிட்டா மாட்டினது
யாருக்குமே இன்னும் தெரியாது.

ஆச்சு 4 வருசம்,
அரியர் இல்லாம தப்பிச்சுட்டு,
இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு
வீடே இல்லாத ஒரு காட்டுக்கு
போனது நாம் தான்.

கல்லூரியின் கடைசி நாள்,
எல்லார் கண்களிலும் கண்ணீர்,
அவனையும் என்னையும் தவிர.
"எங்கேடா நண்பா போயிருவா,
ஒரு பீர் அடிச்சுட்டு ராத்திரி கோவில்பட்டியில
பஸ் ஏறினா காலையில உன்னோட ஈரோட்டில்
ஒன்னா தம் அடிக்கப்போறேன்"
அப்படின்னு என்னைத்தேற்றிவனே
அவன் தான்.

பிறகு கணினி படிக்க
அவன் சென்னை போனதும்,
எனக்கு அவ்வளவு வசதியில்லாம
ஈரோட்டிலேயே படித்தேன்,
ஆனாலும் ஒரே கோர்ஸ்.

எப்படியோ அடிச்சு புடிச்சு
பெங்களூர்ல நீ
நல்ல வேலை வாங்கிட்ட,
ஈரோட்டுல,
சொற்ப சம்பளத்துல
நானும்தான்.

எத்தனையோ தடைவ
நீ என்னை
"பெங்களூருக்கே வந்துருடா" அப்படின்னு
கெஞ்சிய போதும்
"தோட்டத்த பார்த்துக்கனும் நண்பா"
அப்படின்னு சொல்லி
தட்டி கழிச்சுட்டே வந்தேன்.

வேலைப்பளு காரணமா
கொஞ்சம் கொஞ்சமா
பிடி தளர்ந்துகிட்டே போனது
நமது நட்பு.


நீ அமெரிக்கா போனது கூட
அங்கிருந்து நீ போட்ட
மின்னஞ்சல் மூலம்தான்
தெரிய வந்தது.

கொஞ்ச காலம்,
நம்மை மறந்து ஓடிப்போனது.
நாமும் வாழ்க்கையின் சீற்றத்தில்
காலத்தினையும் மறந்து போனோம்.

நானும் டில்லியில்
நல்ல வேலையில் சேர்ந்து,
குடும்பதோட
அங்கே போனபோதுகூட
உன்னை மறக்கவே இல்லைடா.
ஒரு 2வாரம் கழிச்சு
நான் உனக்கு போட்ட
மின்னஞ்சலுக்கு பதிலே வரலை.
அப்படியே மறந்தும்,
வேலையினால் மரத்தும் போனேன்.
சில மாசம் கழிச்சு
சென்னைக்கு வந்த போது
உனக்கு போட்ட மின்னஞ்சல்,
டிஸ்க் கோட்டா ஓவர்ன்னு
எனக்கே திரும்பி வந்துச்சு.

வீட்டுக்கு போன் பண்ணி
உன்னோட தொலைபேசி
எண்ணை வாங்கி வெச்சுகிட்டு,
ISDன்னா நெறையா ஆகுமேன்னு
நினைச்சு அடுத்த மாசம் சம்பளம்
வாங்கி பேசிக்குவோம்ன்னு விட்டுட்டேன்.
இப்படியே ஒரு 2 வருசம்
சம்பளம் வாங்கிட்டேன்.

அதுக்கும் ஒரு நாள்
முடிவு வந்துச்சு.
என்னோட அலுவலகத்துலயே
எனக்கு ISD வசதியோட
தொலைபேசி தர,
நண்பனுக்குதான் முதல்ல கூப்பிட்டேன்.

இந்த எண் விளங்காம போயிருச்சுன்னு
ஒரு வெள்ளக்காரமா சொன்னப்பதான்
நம் நட்பின் தூரம்
தெரிய ஆரம்பிச்சது.

நான் ஈரோடு வீட்டுக்கு போனபோதுதான்
உன்னோட
கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்தேன்.
ஒரு வருசம் முன்னாடியே ஆன
கல்யாணத்துக்கு என்னன்னு
வாழ்த்து சொல்ல? எப்படியோ
உங்க வீட்டுக்கு போன் போட்டு
உன்னோட செல் போன் நம்பர் வாங்கி
பார்த்தா சென்னையிலேயே
இருந்து இருக்க 3 வருசமா.

பல வருசம் கழிச்சு
நான் கூப்பிட்ட முதல் போன்கால்
"என்னை கண்டுபுடின்னு" நான் சொல்ல,
நீ என் குரல் மறந்து
"எங்கையோ கேட்ட குரல் மாதிரி இருக்கே"
அப்படின்னு சொன்ன போது
நமது நட்புக்குள்
ஒரு பெரிய இடைவெளி தெரிஞ்சுது.


எதேச்சையாக,
டிராபிக் சிக்னலில் ஹாய் சொல்லும்போதும்,

தியேட்டரில அசந்தர்ப்பமாக பார்த்து
படம் ஆரம்பிச்சுருமுன்னு அவசரத்துல
"எப்படிடா இருக்கேன்னு" கேட்கும் போதும்,

யாஹூ அட்ரஸ் புக்கில
உன்னோட பிறந்து நாள்
ரிமைண்டர் வரும்போதும்,

இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம்முடைய நட்பு.
------------------------------------------------------------
இளவஞ்சி/நிலா, வாக்களித்து மீண்டும் எனக்கு ஆறுதல கிடைக்கச் செய்த அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!

Thursday, August 17, 2006

கனவும் ஆகஸ்டு 15ம்


விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,

நண்பனை வெளிநாட்டுக்கு
வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,

நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்

டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....


சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

*(விவசாயி என்ற முகமூடியை கழட்டிய என் முதல் கவிதை)

Wednesday, August 16, 2006

கண்டுபுடிங்க பார்ப்போம் -2

முதலாவது போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து கண்டுபுடிங்க பார்க்கலாம் அடுத்த பகுதி இது.

எல்லாரும் சொல்ற மாதிரி நாமும் விவசாயியோட வரப்புல ஒரு நல்வாழ்த்து சொல்லி இருக்கோம், முடிஞ்சா பாருங்க.

முன்னுரை:
இந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு
காதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.
வலைப்பதிவுலேயும் இது உண்டு.

நமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி

அது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.
தங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.

1) கntaதைச் soல்கிறேN (What I see is what you get)

2) கொஞ்SAம் SIரிppu, KONJசம் கொழுPPUமாY.. MAறந்தவைKAளை நினைவுPTUத்THAவே இந்tha விTUபட்TAவை

3) ஒண்ணுME PUரியLA உLAகத்திLE... Eன்னMO நடKKUது.. MAர்MAAமாய் இRUக்குது...

4) உலGAMம் ஆச்சRIயக் குறிKAளாL ஆNAது.

5) VAAழ்க்கைs SUவDUகளுM, அதில் எZHUMம் SIந்தைYUம், PAAர்வையுMAAய், வளைYA வRUம் பTHIவு.

6) என் ப்லொக்கிற்கு வRUகை தந்THAதற்கு நNறி. ஒண்ணுM Oண்ணுM ரெண்TU எNபது நானும் eன் நண்பர்kaளும் நடTHதி வந்THA மாத பத்திரிக்கை. இப்POது WEB வடிVAம் PEற்றுள்LAது.

7) பெRIயோரை விYAத்தலும் இLAமே சிறியோRAI இகழ்THAல் அTHAனினும் இLAமே

8) யார் வேண்TUமாNAAலும் வRAலாம், எNன வேண்டுMAAனாலும் பேSAலாம்...என் மNAம் மகிழும்VAரை :-))

9) எNATHU பேNAAவின் பிரசVAத்தால், KAவிதைGAள் - குசும்PUகள் - ஞாPAகங்கள் - ellaam வார்த்தைkaளின் வDIவிலே

10) நட்PIன்றி யாRUமில்லை நண்PAர்KAளின்றி நாNIல்லை

Monday, August 14, 2006

கண்டுபுடிங்க பார்ப்போம்-1

கண்டுபுடிங்க இதெல்லாம் எந்த வலைப்பதிவாளர் என்று?

இந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு
காதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.
வலைப்பதிவுலேயும் இது உண்டு.

நமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி

அது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.
தங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.

1) free யா விடு Maame
2) சுதந்திர இந்தியாவில் Acid வீச்சும் Auto ஆட்களும் மிச்சம் இருப்பதால்

3) Cudalore காட்டானின் களத்துமேடு...

4)Ennai பாதிக்கும் நிகழ்வுகள் பற்றி Sila வார்த்தைகள்

5) அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு ezutha ஆசைதான்.. manasuக்குள்ளே அடங்குடா மவனேன்னு kural கேக்குதே!!

6)தமிழ்ப்பாக்களோ inimai. அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது innum இனிமை.

7)எனக்கென oru இடம் நானாக நானிருக்க... அத்துவானக் kaattil தேன் தேடியலையும் oru சிட்டைப் போல...

8) படித்தது, paarththathu, kEட்டது, uதித்தது, உNaர்ந்தது

9) nI பார்த்துட்டு போனாலும் paarக்காம போனாlum பிதற்றிகிட்டேthaan இருப்பேன்...!

10 )எல்லாத்தயும் nakkal அடிப்பதே nam தொழில்

::இது பகுதி-1::
ஆதரவைப் பொற்த்து அடுத்த பகுதியும் வரலாம்

Sunday, August 13, 2006

புதுத் தமிழ்மணம்

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் "தமிழ்மணம்" நிர்வகிக்க இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.

உலகத்துல இருக்கிற தமிழ் மனிதர்களை ஒன்று சேர்த்து முதன் முதலில் எழுத வைத்த நுட்பத்தாருக்கு(காசி) எங்களின் கோடான கோடி நன்றி. தமிழ் படிச்சுட்டு மட்டுமே இருக்கிற பல்லாயிரம் மக்கள் இன்னைக்கு எழுதறாங்க(தட்டச்சு) என்றால் தமிழ்மணம் மட்டுமே காரணம்.
அதனை தொடர்ந்து நடத்த வந்து இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மீண்டும் எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.

Saturday, August 12, 2006

திரவ தீவிரவாதம்

தீவிரவாதத்துக்கு அர்த்தமே இன்னும் நமக்கு விளங்க மாட்டேங்குது. ஒரு குக் கிராமதுல ரெட்டை ஜடை போட்டு இருக்கிற ஒரு 16 வயசு புள்ள பண்றது கூட தீவிரவாதம்னு அந்த பொண்ணை டாவடிக்கிற பையன் சொல்லும்போது இதுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபுடிக்க முடியாது.

இப்போ 2 நாளைக்கு முன்னாடி உலகமே ஹீத்ரோ விமானநிலையத்தைத்தான் தொலைக்காட்சியில பார்த்துகிட்டு இருந்துச்சு. ஏன்? எதுக்கு ? எப்படி? அப்படிங்கிற விஷயமெல்லாம் நமக்கு வேணாம். அப்போ செயப்பாட்டுவினை பார்ப்போமா? நம்ம ஊர்ல வெக்கிற செய்வினைக்கும் இதுக்கும் பெரிசா வித்தியாசமில்லை.


லண்டன் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களை திரவ வெடி பொருட்களைக் கொண்டு தகர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியை தாம் கண்டு பிடித்துள்ளதாக லண்டன் காவல்துரை(ற) தெரிவித்துள்ளனர். அதேசமயம் திரவ வெடிபொருட்கள் என்னான்னு தெரிஞ்சிக்கலாமா?

ஒரு விமானத்தில் வெடிக்கும் உபகரணத்தினை கடத்தி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திரவ வடிவிலான வெடிகுண்டு ஒரு சரியான மாற்று வழியாகும்.

திரவ வடிவிலான வெடிகுண்டினை சுலபமாக மறைச்சுடலாம். பிளாஸ்டிக் வெடிப்பொருட்களை தேடுவதற்கு பயன்படும் மிக உயர் நுட்பம் கொண்ட இயந்திரத்தினால் கூட இவற்றை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.(இன்னும் தெளிவாகாத விஷயம் இது)

நன்கு தெரிந்த திரவ வடிவிலான எரிபொருள் என்றால், அது நைட்ரோகிளிசரின் ஆகும்.(இதப்பத்தி என்கிட்ட என்னான்னு கேட்காதீங்க, என்னோட வேதியியல் ஆசிரியர்க்கு எனக்கும் எப்பவுமே ஆவாது) இது ஒரு சிறு நகர்விலும் வெடிக்க கூடிய நிறமற்ற திரவம்'ன்னு சொல்லிக்கிறாங்க.

நிறமற்ற தன்மையினால், விமானங்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவங்களுக்கு இது ஒரு சுலபமான் வழியா தெரிநஞ்சாலும், வெடிகுச்சிகள் இல்லாமல் இவை வெடிக்காது என அறிவியல் பெரியசாமிங்க சொல்றாங்க.

உண்மையில், பெரும்பாலான திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க, வெப்பம் அல்லது மின்சார உந்துதல் வேணும். அதனால திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க காமிராக்களில் இருக்கும் ஃபிளாஷ் அல்லது பேட்டரியினால் இயங்கும் உபகரணம் தேவை.

சாதாரண வீட்டில் பயன்படும் பெரும்பாலான பொருட்களில், உதாரணமாக நகப் பூச்சினை எடுக்க பயன்படும் திரவம், கேசத்திற்கு நிறம் கொடுக்கும் திரவங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை கொண்டு கூட திரவ வெடிப்பொருளினை உருவாக்கலாம்.

ஆனால் இதில் கடினமான் விஷயம் என்னென்னா, இவற்றினை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஏழாம் ஆம் திகதி தாக்குதல் நடத்திய குண்டுத்தாரிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரைஅசிடோன் ட்ரைபெராக்சைட் என்ற வெடிப்பொருளினை பயன்படுத்தியதாக லண்டனில் இருக்கும் காவல்துறையினர் நம்புகின்றனர்.

இந்த வெடிப்பொருளை கூட திரவ வடிவில் தயாரிக்க முடியும். ஆனால் சரியான விகிதத்தில் கலவையினை உருவாக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. இந்த பொருட்களை கொண்டு, வெடிப்பொருட்களை உருவாக்க முயலும் அனுபவம் அற்றவர்கள், பெரும்பாலும் வெடிக்குண்டு தயாரிக்கும் போது பொருட்கள் வெடித்து கொல்லப்படுகின்றனர்.

இது போன்று வெடிப்பொருளாக செயற்பட கூடிய மேலும் பல திரவங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நைட்ரோமீதேன் – இது மாதிரி விமானங்களில் எரிபொருளாக பயன்படுகின்றது. இது தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது.

அதே போன்று நைட்ரோ ஈதேன் மற்றும் மீதேல் நைட்ரேட்டும் இருக்கின்றது.

இந்த இரசாயன பொருட்களை பெறுவதற்கு கடினம் அல்ல, ஆனால் இவற்றை வெடிக்க வைக்க கூடிய சரியான பொருளினை கண்டுபிடிப்பதற்கு, அறிவும், அனுபவமும் தேவை.

முக்கியமாக, திரவப் வெடிப்பொருட்களால் மிகுந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாராவதில்லை. ஆனால் விமானங்கள் என்று பார்த்தால், சக்தி வாய்ந்த குண்டுகள் தேவை இல்லை. ஏனென்றால் சிறிய வெடித்தாக்குதல் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த வல்லது.

காற்றழுத்தம் செய்யப்பட்ட விமானத்தின் அறைகள், வானில் உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் போன்றவை, ஒரு சிறிய வெடித்தாக்குதலின் பாதிப்பினை கூட பூதாகரமாக்கும், அதன் விளைவாக விமானம் முற்றாக நாசம் அடையும்.

நன்றி பிபிசி:
நம்ம திரவ தீவிரவாதிய உள்ளே போட்டாதான், நாம சரியாவோம், அட தேனீரை சொல்றேங்க.

Thursday, August 10, 2006

பலி கெடா- சைவமா? அசைவமா?

இந்த பலி கெடா பலி கெடா அப்படிங்கிறதுன்னா என்னான்னு மல்லாக்க படுத்து யோசிச்சாலும் பதில் கிடைக்காதுங்க. அதெல்லாம் வாழ்க்கையில இருந்துதான் தெரிஞ்சிக்கனும். சரி பலி கெடாங்கிறது அசைவமான்னு கேட்டா சைவம்தாங்க அதிகம்ன்னு சொல்லுவேன். சச்சின் வந்த வந்தவுடனே ராபின் உத்தப்பாவை பலி கெடா ஆக்கினாங்க. இது சைவம்தான். இந்தியா- பாக் பிரச்சினைக்கு ஒரு மாநிலத்தை பலி கெடா ஆக்கினாங்க. தலைவர் பொண்டாட்டி சிலையில ஏதோ பிரச்சினை அதுக்கு பொது மக்கள் பலி கிடா ஆக்கினாங்க. இது இரண்டும் அசைவம். ஆஹா பிரச்சினையான பதிவா ஆகிரும் போல இருக்கே. வுடு ஜூட் விவசாயி.

இந்த நடிகை அம்மணிங்க முகத்தை மட்டும் மாத்திட்டு வேற ஒரு கலையம்சம் உள்ள அம்மணியோட உடம்போட இணைச்சு ரசிக்கிற சில ஜென்மங்களும் இருக்கு. அதுல யாரு பலி கெடா அந்த நடிகைதான். அவுங்க முகம் மட்டும் அழகா இருக்கும், உடம்பு கலையம்சத்தோட இருக்கும். மக்கள் ஆஹா நடிகைய நிர்வாணமா பார்த்துபுட்டேன்னு சொல்லி அத ஒரு 4 பேருக்கு ரகசியமா அனுப்பி வைப்பாங்க. இதுல குஷ்பூவ வெச்சு ஒரு பத்திரிக்கை பேர் வாங்கிருச்சு. (அப்புறம் என்னாப்பா ஆச்சு). மல்லிகா ஷெராவத், ஏஞ்சலினா, நம்ம 3ஷா எல்லாம் இதுல அடக்கம் இது சைவமா தெரிஞ்சாலும், அசைவ மேட்டரு.

இப்படி படம் அனுப்பினா என்ன ஆகும் தெரியுமா? ரசிச்சு பார்த்தோம்னு யாருப்பா சொல்றது? அது இல்லே , அப்படி இனிமே படம் அனுபிச்சா உங்க மெயில் சர்வர் நிறுத்தப்படும். யாஹூல அனுபிச்சா யாஹூ இந்தியாவுல வேலை செய்யாது, ஜி மெயில்ல அனுபிச்சா ஜிமெயில் இந்தியாவுல வேலை செய்யாது. பயந்துட்டீங்க தானே.

ஏற்கனேவே வலைப்பதிவுகளை கொஞ்ச காலமா தடுத்தாங்க இந்தியாவுல. இப்போ மின்னஞ்சல். ஏன்? கேள்வி கேட்கிறது ரொம்ப சுலபம் பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம். இப்படி சொன்னப்புறமும் பதில் வேணுமின்னு அடம் புடிச்சா இத சொடுக்கி பார்த்துக்குங்க.


சைவம், அசைவம் எதுவேணுமின்னாலும் வரலாம் அதுக்கு நான் பொறுப்பில்லை.
இந்த மாதிரி படம் யாராவது ஒருத்தர் அனுபிச்சா யாரு பலிகெடா? அது சைவமா? அசைவமா?

Friday, August 4, 2006

ஆடி 18

கூடுதுறை

நேத்து ஆடி 18, இன்னைக்கு வரலட்சுமி விரதம்/ஆடி வெள்ளி.
நம்ம ஊரு பக்கம் ஆடி 18 ரொம்ப விஷேசம்ங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்கன்னா பார்த்துக்குங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசமும், இந்த வருசமும் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.

* பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம்,
* காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
* இஸ்கூலு விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
* புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்

சின்ன வயசுல அம்மா சொல்ற படியே தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.

இந்த வருசம் தண்ணி(காவேரி ஆத்துல தாங்க) நல்லா ஓடுதுங்க. கையைக்கடிக்காம இந்த வருசமும் மகசூல் ஆச்சுன்னா அடுத்த வருசமும் தலையில காசு வெச்சு முங்குவேன் சாமி..

படம்: பவானி கூடுதுறை

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)