
விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,
நண்பனை வெளிநாட்டுக்கு
வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,
நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்
டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....
சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
*(விவசாயி என்ற முகமூடியை கழட்டிய என் முதல் கவிதை)
No comments:
Post a Comment