Wednesday, February 26, 2014

பண்ணையம் Feb - 26- 2014

நான் டென்னிஸ் பார்க்க ஆரம்பித்த காலத்தில் போரிஸ் பெக்கர், ஸ்டீபன் எட்பர்க், இவான் லெண்டில், ஜான் மெக்கென்றோ - என ஆண்கள் நால்வர் மட்டும் அரைஇறுதிக்கு வந்துக்கொண்டிருப்பார்கள். அதில் நான் ஸ்டீவன் எட்பர்க்கின் ரசிகன். ஏனென்று தெரியவில்லை, ஆர்ப்பாட்டமில்லாத உருவம், ஆட்டமாக இருக்கலாம், வித்தியாசமாக வலது கையில் கடிகாரம் அணிந்து கொண்டதற்காக கூட இருக்கலாம்.

பெண்களில் ஸ்டெபி கிராஃபின் கிராஃப் ஏறிக்கொண்டிருந்த காலமது. முதன் முறை பார்த்தவுடனே பற்றிக்கொண்டது இவரைப்பார்த்துதான் (கேப்ரியலா சபாடினி).(அந்த வயசுலேவான்னெல்லாம் கேட்கப்படாது)
ஆகிரதையான உடல்வாகு, தெனாவெட்டான ஆட்டம் இப்படி என்னைக் கவர்ந்தவர். ஸ்டெபி கிராபின் சர்வீஸ்களை சிதறடிப்பார். அதில் ஒரு ஆண்மைத்தனம் இருக்கும். நான் பார்த்த பெரும்பான்மையான ஆட்டத்தில் எல்லாம் சபாடினி தோற்றுதான் போயிருப்பார். ஆனாலும் அவரை பிடிக்கவே செய்தது. கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார். மரியா செரபோவா, விக்டோரியா அசரென்கா என்று கவர்ச்சி மங்கைகள் வந்திருந்தாலும் இன்னும் மனசுல குடியிருக்கிருவர் சபாடினி மட்டும்தான்.


எதையோ தேடப்போக விக்கியில் இன்று அவரின் தகவல்களைப் படிக்க நேர்ந்தது.



------------------------------------------------

படித்ததில் பிடித்தது:

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, அடிக்கடி ஒரு கதை சொல்வார். ''மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தி, 'எனக்கு பகவத் கீதையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் சொல்லி என்னைப் புரியவைப்பவர்களுக்கு என் சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று அறிவித்தாராம். இதைப் பார்த்ததும் அவரது கணவர் பதறிப்போனாராம். 'சொத்தில் பாதி என்றால் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா?’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே? புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே?’ என்றாராம் அந்தப் பெண்.


பல இணைய விவாதங்கள் கூட இப்படியாகத்தான் இருக்கு, தேவையான விளக்கமெல்லாம் குடுத்தபிறகும் மறுபடியும் ஆரம்பித்திலேயிருந்தே வருவாங்க. அவுங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு, நாம பாட்டுக்கு டீ குடிக்கப் போயிடனும்..


------------------------------------------------

வேலையில்லாப்பட்டதாரி: (VIP)

அம்மா என்ற பாடல் கேட்டவுடனே கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது, சமீபத்தில் அம்மாவை இழந்த யாரும் இந்தப் பாடகலைக்கேட்டால் கண்ணீர் முட்டத்தான் செய்யும்.

விட்ருவோம், அழுவாச்சி காவியம் நமக்கு செட் ஆவாது.

ஒரு வாரமாக Loopல் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டு, வேலையில்லாப் பட்டதாரி பாடல். காரணம், செம துள்ளல். ஆரம்ப கால ரகுமானிடமிருக்கும், அந்த ரத்தத்தை சூடாக்குற, ரட்சகன் நாகார்ஜூனுக்கு புடைக்குமே அந்த மாதிரி நரம்பை முறுக்குகிற மாதிரியான இசை. ஆரம்ப இசையே பைப்பில் ஆரம்பித்திருக்கும், இது எம். எஸ்.வி காலத்திலிருந்தே ஆர்ப்பாட்டடத்துக்கான அடியாக அமைந்துவருவது, இலக்கணமான்னு தெரியல. (அதைப்பற்றி இன்னொரு பதிவுல பேசுவோம்)

இந்தப் பாட்டை , யாருமில்லாத தெருவுல ஒரு டீக் கடை பெஞ்சுக்கு முன்னாடி ஆடுவாங்களோ? இல்லை, பொல்லாதவன் "எங்கேயும் எப்போதும்" மாதிரி முழுக்க பல்பா போட்டு எடுப்பாங்களோ? அப்படி இப்படின்னு கற்பனை பண்ணிட்டே இருக்கேன். ஆனாலும் இந்தப் பாடலின் காட்சி வடிவத்திற்கு தனுஷ், மற்றும், இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டே ஆகனும். இந்த காணொளி அதை எல்லாம் தூள் தூள் பண்ணிடுச்சு. சரியான இடத்துல வெட்டி ஒட்டி, வெறியேத்துறாங்க. கம்னு இந்த வீடியோவையே படத்துல வெச்சிடுங்க, வேல்ராஜ். பட்டாசா இருக்கும்.

என்னதான் இருந்தாலும் ரஜினி ரஜினிதான்!!! அந்த எடிட்டருக்கு ஷொட்டுகள்!!




Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா - எனும் பிதாமகன்

1994/95 ஆக இருக்கும், என்னுடைய கல்லூரியில் சிந்தனை மன்றம் என்று ஒன்றுண்டு. அதாவது இலக்கியம், கலை சம்பந்தப்பட்ட ஒரு மன்றம். பெரிய கல்லூரி என்பதால் சிந்தனை மன்றத்துக்கு பெரிய ஆட்களை அழைப்பது வழக்கம். பெரிய கூட்டமென்று இருக்காது. 30-40 பேர் இருப்பார்கள். அனைவரும் இலக்கியம் /தமிழ் மீது பற்று கொண்டவர்கள்.


அந்த வருடத்திற்கு பாலு மகேந்திரா, எடிட்டர் லெனின், மற்றும் நாடகச் சக்ரவர்த்தி எஸ்.வி.சேகர் ஆகியோரை அழைத்திருந்தனர். நான் வரவேற்புரை ஆற்றினேன். மற்றும் சில பொறுப்புகளை ஏற்றிருந்தேன்.

ஒரு பயிற்சி வகுப்பு போல நடந்தது. லெனின் அவர்களது குறும்படம் காட்டப்பட்டது. பாலு மகேந்திராவின் பாட்டி - வடை சுட்ட கதை சொல்லப்பட்டது. எஸ்.வி சேகரின் அரசியல் சார்ந்த ஒரு பேச்சும் இடம்பெற்றது.

இதன் முடிவில் அனைவரும் சிறப்பு விருந்தினர் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தனர். முடியும் தருவாயில் மைக் மேடையில் நின்றிருந்த என்னிடம் பாலு மகேந்திரா வந்தார், “நானும் இது மாதிரி பலருக்கும் கையெத்து போடனும் சார், அதுக்கு என்ன சார் பண்ணனும் என்று கேட்டேன். இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் அதே அமைதியான குரலில்  ”அதுக்கு நீ நிறைய கத்துக்கனும், படிக்கனும், காத்திருக்கனுமே” என்றார்

கற்றுக்கொள்வேன், காத்திருப்பேன்” என்றேன்.

ஆனால், காலம் கடந்துவிட்டது.  பாலு மகேந்திரா என்னும் திரைத்துறையின் பிதாமகன் காலமாகிவிட்டார். ஒரு லாயக்கியுமில்லாத/விசயமும் அறியாத என்னிடம் அவர் மேலும் நிறைய பேசிக்கொண்டிருந்தார். நான் முதலில் வெகு நேரம் உரையாடிய பிரபலம் அவர்தான். என்னை மதித்து பேச வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் பேசியிருந்தார். சினிமாவில் ஏதாவது சாதித்த பிறகே இந்த சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன்.  ஆனால் காலன் வென்றுவிட்டான்.


நான் இன்னும் காத்திருக்கிறேன். கற்றுக்கொண்டுவிட்டேனா என்று தெரியவில்லை.

உங்க ஆன்மா சாந்தியடைட்டும் சார். 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)