Tuesday, June 30, 2009

ஆணிவேர்

எனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. என் தந்தை சிங்கப்பூர் வந்தவுடன் என் சித்தப்பாவும் பங்காளிகளும் வேலை தேடி பட்டணம் போய்விட்டதாக கேள்வி. தாத்தா பாட்டி என யாருமே எனக்கு நினைவில் இல்லை. நான் பிறப்பதற்கு முன்னமேயே அவர்கள் இறந்துவிட்டிருந்தார்கள். எங்கள் குடும்பமும் விவசாய குடும்பம்தானாம், அப்பா சொல்லித்தான் தெரியும். நன்றாக படிக்கும் எனக்கு வயது 17. பந்துக்கள் பலர் இருந்தும் சொல்லிக்கொள்ள சொந்தம் என்று யாருமில்லை என்கிற சோகம் எனக்கு நிறையவே உண்டு.மாமா, அத்தை, சித்தப்பா சித்தி எல்லாம் படித்து கேட்டதோடு சரி. உறவுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு அநாதை போன்ற ஒரு உணர்வு வர, அப்பாவிடம் கேட்டேன்.

"அப்பா, நமக்கு சொந்தம்னு யாருமே இல்லையா?"

"இருக்காங்கப்பா, பங்காளி வழியில நெறைய சொந்தம் இருக்காங்க. ஒரு தலைமுறை போனவுடன் அவுங்க புள்ளைங்க எல்லாம் பழைய சொந்தங்களை தேடறதுமில்லே, பழகறதும் இல்லே. அவுங்க அவுங்க அவுங்களுக்கு வசதியான மக்களோட பழக ஆரம்பிச்சிறாங்க. ஏதாவது விசேசம்னா மட்டும் வந்து போயிட்டு இருந்தாங்க, அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வராம போக, தொடர்பில்லாமப் போச்சு. எதுக்கு கேக்குற?"

"இல்லே, எனக்கு நம்ம சொந்தங்களைப் பார்க்கனும் போல இருக்கு"

தூக்கி வாரிப்போட்டது அப்பாவுக்கு? ஏன், எபப்டின்னு கேட்காம, "சரி, உன் விருப்பம் போல செய்?"னாரு.

முதல்ல இருந்த சொந்தத்தை கேட்டேன், அப்பா சொன்ன யாருமே அந்தந்த முகவரியில இல்லே. முகவரியே மாறும்போது கூப்பிடறதுக்கு தொலைபேசி மட்டும் கிடைச்சுருமா என்ன? அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரே சொந்தம், கண்ணுப்பையன் சித்தப்பா மட்டும்தான். அப்பாதான் பேசினாரு. அவுங்க பையனும் புள்ளையும் அமெரிக்காவுல இருக்காங்களாம். அவுங்க நம்பரை மட்டும் வாங்கித்தந்தாங்க. என்ன பேசறதுன்னு தெரியாம அவுங்கள கூப்பிட்டேன்.

"நான் ராஜா, செல்லிக்காட்டு பெரியண்ணன் பேரன்..." அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன மொதல்ல அறிமுகம் பண்ணிக்கிட்டேன். சுரத்தில்லாம பதில் வந்துச்சு..சரி அதுக்கென்ன இப்போங்கிற மாதிரி பேசி வெச்சுட்டாங்க. அன்னிக்கு ராத்திரி முழுசும் அழுது தீர்த்தேன். அவ்வளவுதானா சொந்தம்? இதே நானும் அமெரிக்காவுல இருந்திருந்தா, இப்படி பேசி இருப்பாங்களா? எனக்கு என்ன கொறைச்சல்? இப்படி பல கேள்விங்களோட விடியற்காலையில் தூங்கிப்போனேன். காலையில அப்பா எழுப்பி சேலத்துல இருந்தே ரமேஷ் பேசுறதா சொன்னாரு.

"என்னப்பா,யாரு என்னான்னெ தெரியாம என்ன பேசறது?"

"நேத்து நீ கண்ணுப்பையன் பையனோட பேசுனியே அப்போ மட்டும் தெரிஞ்சுதா?"

சவுக்கடி மாதிரி இருந்துச்சு அப்பா கேட்டது.

ரமேஷ் கிட்ட பேச ஆரம்பிச்சேன். எங்கயோ ஒரு நுனி சொந்தம் அது. ரொம்ப்ப ரொம்ப தூரம்னு கூட சொல்ல தெரியாத ஒரு சொந்தம். நல்ல நிலைமையில இருக்கிறான் போல, என்ன விட மூணு வயசு பெரியவன். நிறைய பேசினோம், சம்பந்தமே இல்லாம. சினிமா, அரசியல், சிங்கப்பூர் வாழக்கை, என்னோட பள்ளி, புடிச்ச PS3, அவனுக்கு புடிச்ச சாப்பாடு, மணிக்கணக்குல பேசினோம். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து சொந்தத்தை தேடற நிலைக்கு வந்துட்டோம். அப்பாகிட்டே மூணு மாசம் இந்தியா போறேன்னு சொன்னேன். அப்பாவுக்கோ இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லே. ஆனா என்னோட விருப்பம் ஜெயிச்சது.

இந்தியா....

ரமேஷுக்கு அப்பா இல்லே, அம்மா மட்டும்தான்.மளிகை கடை நடத்துறாங்க. கொஞ்சம் வசதியான வீடு, அவுங்க அம்மா உழைப்பு தெரிஞ்சது. ரமேஷுக்கு காலேஜ் விட்டா கடை. அவன் உலகம் அவ்வளவுதான். கொண்டலாம்பட்டி பை-பாஸ்ல தம் போட்டுட்டு, ஏற்காட்டுல டீ சாப்புடறதுன்னு ஒரு புது வாழ்க்கை. எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.

ரமேஷ் செம கில்லாடி.அவன் மொதல்ல என்னை கூட்டிக்கொண்டு போனது குலதெயவம் கோயிலுக்கு. பண்டாரத்துக்கு தாத்தாவைத் நல்லா தெரிந்திருந்து வைத்திருந்தான்.

"தாத்தா, எங்க சொந்தக்காரவங்க யாராவது போன விசேசத்துக்கு காசு குடுத்தாங்களா?" ரமேஷ்.

"அட யார்ரா இவன் கூறுகெட்டவன். யாரு குடுக்காம போறாங்க? உங்க பெரிய மாமன் கூட, அதாண்டா நாமக்கல்ல லாரி பட்டறை வெச்சிருக்காருல்ல.. அவரு கூட மூணு லட்ச ரூவா குடுத்தாரு"

"அவுங்க போன் நம்பரு குடு தாத்தா. பேசோனும்'

"ஏன் உம்மாமன் உன்கிட்ட பேசறது இல்லையா"

"அதெல்லாம் உனக்கெதுக்கு நம்பர குடு நாம்பேசிக்கிறேன்"

இப்படி ஒவ்வொரு அடையாளத்தையும் பிடித்தோம்.

மொத்தம் 13 மாமா, 8 அத்தை, 7 சித்தப்பாக்கள், அவர்கள் வழி வந்த சொந்தங்கள் என 500 பேருக்குமேலேயே சொந்தங்களின் எண்ணிக்கை வந்தது. ஒருவருக்கும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் என் தந்தை விட்டுவந்த தொலைவு. உறவுகள் தொலைய வெளிநாட்டிற்குச் செல்லும், சொல்லும் எல்லாம் காரணங்களும் எனக்கும் இருந்தது. எல்லார் வீட்டுக்கும் பேசினோம், சென்றோம்.

எடப்பாடி முருகேசன் மாமா, என்னை ரொம்பவே கவர்ந்தார். ஆட்டோ ஒட்டுகிறார், ஊரில் அவருக்குத் தெரியாத மனிதர்களும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. வசதி குறைந்தவரான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 45 வயசு மட்டுமே ஆகியிருந்தது.

"மாமா, நான் நம்ம ஊருக்கு போலாம்னு இருக்கேன்"

"எந்த ஊருக்குடா? சிங்கப்பூருக்கா? பின்னே இங்கேவா இருக்கப்போறே?"

"இல்ல மாமா, கொழிஞ்சிக்காட்டூருக்கு"

ஐந்து நிமிடம் மாமா ஒன்றுமே சொல்லவில்லை. பிறகு "உனக்கு யாரத்தெரியும்னு அங்கேப் போற? நம்ம காட்டை எல்லாம் வித்தாச்சு, ஊருக்குள்ள சொந்தம்னு சொல்லிக்க ஒரு பய இல்லே. அப்புறம் என்ன வேலை. வந்தமா நம்ம கூட கொஞ்ச நாள் இருந்தோமான்னு இருப்பியா அத வுட்டுப்புட்டு"

என்னுடைய வழக்கமான இருக்கம், பிடிவாதம் அங்கேயும் வென்றது. மாமா, நான், ரமேஷ் மூவரும் ஒரு நாள் என் கிராமத்துக்கு போக நாள் குறித்தாயிற்று.

அந்த நாள்..

மாமா ஏற்பாடு செய்திருந்த காரில் சென்றோம்.

"ராஜா, எங்கேடா போறது? அங்கே போயி என்னத்த பார்ப்பே? "

"போவோம் மாமா, தாத்தா பாட்டி இருந்த இடத்தை பார்ப்போம்"

"பார்த்து?"

பதில் தெரியாத கேள்வி. பார்த்து என்ன செய்யப் போகிறேன்? நான் படித்த பழைய பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதும், பழைய புத்தகத்தினை பார்க்கும் போதும், என் சிறுவயது நணபனைப் பார்க்கும் போதும் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு வெறுமை வரும். அது என்னவென சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத உணர்வு. சோகமே மிகுதியாய் தோன்றும். அது போலவே இதுவும் இருக்கும்.

"என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குற, சுடுகாட்ட பார்க்கவா அங்கே இருந்து வந்த?"

"மாமா, உங்களுக்கு எல்லாம் சொந்தம் பந்தம் கூட இருக்கன்னு ஆசை இல்லியா?"

"அடப்போடா, கல்யாணம் ஆகியிருந்தாலாவது பொண்டாட்டிங்கிற சொந்தம் வந்து இருக்கும். நமக்கு அதுவும் குடுப்பினை இல்லே"

"இல்லே மாமா, ஒரு விசேசம், எழவுன்னா கூட நம்ம சொந்தத்துக்கு தெரியாது. இதுக்கூட சொந்தம் இல்லாட்டா என்னாத்துக்கு?"

"ஏன் சொந்தக்காரன் வந்தாத்தான் பொணம் எரியுமா?" சத்தமாக சிரித்தார். "சொந்தமெல்லாம்ம்ம்... கூட இருந்தாத்தான். உனக்கும் எனக்கும் பொழப்புதான் முக்கியம். ஒரு ஜான் வயித்துக்குன்னு சொல்லிகிட்டு நாம தொலக்கிறது நெறைய அதுல மொதல்ல போறதே சொந்தந்தான்"

காசாங்காடு ஊராட்சி உங்களை வரவேற்கிறது. சிமெண்டினால் ஆனா அழுக்கேறிய பலகை. என் கிராமம். என் தாத்தன் பாட்டி, முப்பாட்டன் வாழ்ந்த இடம், முதன் முறையாய் பொதுவில் அழுதேன். காரணம் தெரியவில்லை.

"டே, இங்க பாரு? இந்த மயித்துக்குதான் வரவேணாம்னு சொன்னாரு மாமா. கேக்குறியா. என்னாத்துக்கு அழுவுற என்ன இருக்குன்னு சொல்லு?"

"என்னமோ தெரியலடா, சொந்தம் இல்லாம வளர்ந்த எனக்கு இது எல்லாம் புதுசா இருக்கு"

டீ கடை ஒன்று இருந்தது. மாமாதான் போய் விசாரித்து விட்டு வந்தார்.

"சொந்த ஊருல என்ன மாமா விசாரிச்சிகிட்டு"

"இல்லடா, நானும் சின்ன வயசுல இங்கே இருந்துப்போயிட்டேனா. அதான். மொதல்ல ஒத்தயடிதான் இருந்திச்சு. இப்போ ரோடெல்லாம் போட்டிருக்காங்க. அதான் நம்ம காட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். ஊருல இப்போ 10 இல்லைன்னா 15 பேர்தான் இருக்காங்களாம். மீதி எல்லாம் பொழப்ப தேடி நம்மள மாதிரியே வெளியூருக்குப் போயிட்டாங்களாம்"

போற வழியில் ஊரைப் பார்த்தேன் பொட்டல் காடு. ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது.
எப்படியோ உச்சி வெயில் நேரத்திற்கு தாத்தா இருந்த வீட்டிற்கு வந்தோம். இடிந்து சிதிலமாகி இருந்தது. கொஞ்சமாய் மண் திட்டு மட்டுமே இருந்தது. மீதி இருக்கும் என் பாரம்பரியம், என் பாரம்பரிய சொத்து, என் பூர்வீகம். மழை நீரிலும், வெய்யிலிலும் கவனிப்பாரற்று கிடந்த வீடு போல. மனதில் எதுவுமே தோன்றவில்லை. ஏதோ பொருட்காட்சிய பார்ப்பது போல் பார்த்துகொண்டிருந்தேன். ரமேஷ் யார் கூடவோ தூரமாய் இருந்த மேட்டின் மீது ஏறி தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். தாத்தாவையும் பாட்டியையும் புதைத்த இடத்தை தேடி அலைந்தோம். கடைசியாய் ஒரு பெரியவர் வழி சொன்னார். அவரும் ஒரு கேள்வி கேட்டார் "என்னாத்துக்கு தேடுறீங்க. ஏதாவது புதையல் கிதையலா?"

சிரித்தபடியே போனோம். புதைத்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு பள்ளமாய் இருந்தது. ஐந்து நிமிடம் மெளனமாய் இருந்தேன். ரமேஷ் மட்டும் என் கூட இருந்தான். மாமா எங்கோ பார்த்தபடி சிகரெட் பிடித்தபடி இருந்தார். சரி, அவருக்கும் என் தாத்தாவுக்கும் தூரத்து சொந்தம்தானே. ஊரை விட்டு மெயின் ரோட்டிற்கு வரும்பொழுது இருட்டத்தொடங்கி இருந்தது.

தூரமாய் ஒரு வேப்பம் மரம் தெரிந்தது, குருவிகளின் கீச்சுக்குரல்கள் கேட்டது, வேப்பம் பழங்கள் காற்றில் அசைந்து விழுந்தன, ஆடியது இலைகள், கீழே விழுந்த பழங்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள்
ஒரு நரைக்கிழவி! நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.

Monday, June 22, 2009

என்ன லாடு லபக்கா?


இந்தப் படத்துல இருக்கிற பெரிய லாடு லபக்குத்தான். யாருன்னு தெரியலைன்னா நமக்கு கேவலம்..தெரியாட்டின்னா தெரிஞ்சுக்குங்க. ஏன்னா நம்மோட பாதி நேரத்தை கடத்துற வித்தைய கண்டுபுடிச்சவரு இவருதான்.

Friday, June 19, 2009

உச்சா- கலப்படம் இல்லாமல்

உச்சா, மூச்சா- இது எல்லாம்தான் பதிவுல எழுதுறதுக்கு சுலபமான வார்த்தைங்க. வேற எல்லாம் எழுதினா ஆபாசம், கிளர்ச்சி, அதிகாரா கோஷமின்னுருவாங்க.

உச்சா: கல்லூரியில 3 மணிநேரம் பரிட்சை இருக்கும். அதுவும் கோயமுத்தூருல டிசம்பர் மாச குளுருக்கு 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு பரிட்சை எழுதறது எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா? பரிட்சைக்கு நடுவாலயும் எந்திருச்சு போவ முடியாது? பிட் எடுத்துட்டு வந்துருவோமாம்? இப்போ மட்டும் இல்லாமையா இருக்கோம்?. பரிட்சை முடிச்சுட்டு வெளியே வரும்போது "பரிட்சை எப்படிடா மாப்ளே?"ன்னு கேட்கிற பசங்களுக்கு பதில் கூட சொல்லாம ஒரே ஒட்டமா ஓடிப்போயி 'போவோம்'.

"மாப்ளே! இப்படி 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு, அப்புறம் போற சொகம், **க** அடிக்கிறத விட சுகம்டா" அப்படின்னு சொன்னது இன்னமும் ஞாபகத்துக்கு இருக்குங்க.

ஒரு தடவை ஒருத்தரு மூணு மணி நேரம் அடக்கிக்கிட்டு இருந்து 'போயி'ட்டு இருந்தாரு. இன்னொருத்தன் வந்தான், வந்தவன் சும்மா இல்லாம "மாப்ளே மாப்ளே, இங்கே பாருடா"ன்னு பொறத்திக்காண்ட தட்டி தட்டி ஒரே தொந்தரவு வேற. பார்த்தாரு 'அடிச்சுட்டு இருந்தவரு' நிறுத்தவும் முடியல, இவன் தொல்லையும் தாங்க முடியல. ஒரு கையால **அ புடிச்சுகிட்டு, இன்னொரு கையால மூச்சாவ புடிச்சு, பொறத்திக்காண்ட நோண்டுனவன் மூஞ்சியில சலீர்னு அடிச்சாரு. அப்புறம் அவன் ரொம்பநாள் அவன்கிட்ட பேசவே இல்லே.

ஒருத்தருக்கு வந்தாமட்டும் கூட இருக்கிற எல்லாருக்கும் வந்துருதே ஏன்?

சின்ன வயசில எலிமெண்டரி பள்ளிகூடத்துல விதவிதமா வாய்க்கா எல்லாம் போட்டு வுடுவாங்க. விவரம் தெரியாத வயசு.

போன வருசம் உச்சா போவையில இன்னொருத்தன் கூடவே வந்தான். அமெரிக்காவுலதான் தெரியுங்களே, உச்சா போறதுக்கும் ஆய் போறதுக்கு ஒரே ரூம்புதான், சின்னதா சின்னதா தடுப்பு மட்டும் உள்ளே இருக்கும். சோத்தாங்கை பக்கம் இருக்குறாப்ல. வந்தவன் சும்மா இல்லாம மேனஜரை மேல இருந்த கோவத்தை 'போயி'கிட்டே என்கிட்ட சொல்லிட்டு வந்தான். கெட்ட வார்த்தை எல்லாம் போட்டு திட்டு திட்டுன்னு திட்டிட்கிட்டே இருந்தான். ஒரு அஞ்சு நிமுசம் வுடாம திட்டிப்புட்டான். அப்புறம் நிறுத்திப்புட்டான். சாயங்காலம் ஒரு மீட்டிங் வெச்சாரு. நாசுக்கா சொன்னாரு மானேஜரு "ஒன்னுக்கு போனோம்னா.. போறதுக்கு மட்டும் போங்க.. கண்டமேனிக்கு பேசவேணாம்.. உள்ளுக்குள்ள உக்காந்து போயிட்டு.. இருப்பாங்க. அவுங்களுக்கும் கேட்கும்"னாரு. அப்போதான் அவனுக்கு வெளங்குச்சு, அவன் திட்டிகிட்டு இருக்கும் போது, அவரு உள்ளாரு ஒரு தடுப்புக்குள்ள உக்காந்தகிட்டு, போயிட்டு இருந்திருக்காரு. சாக்கிரதை மக்களே அப்புரைசல் நேரத்துல ஆப்பு வெச்சிரப் போறாங்க.

Tuesday, June 16, 2009

Stage Friends- Drama உலகம்

நமக்கு ரொம்ப நாடக பைத்தியங்க. எங்க ஊர்லயும்தான் நாடகம் போடுவாங்க. கிட்டதட்ட ஒரு காபரே ரேஞ்சுக்கு இருக்கும். விடலைப் பசங்க தகிரியமா மேடையில நடிகைங்கள கட்டிப் புடிக்கிற கருமம் எல்லாம் எங்க ஊர்லதான். ஆனாலும் நமக்கு வானொலியில் போடுற நாடகங்கள் ரொம்ப புடிக்கும். அப்புறம் DDல வந்த பஞ்சு பட்டு பீதாம்பரம், Flight 172 இதெல்லாம் நாடக உலகத்துக்கு நம்மள லைட்டா இழுத்துச்சு(பார்க்க மட்டும்தாங்க). சரி என்னாத்துக்கு நம்ம வரலாறு.. நேரா மேட்டருக்கு வரலாமே.


மூணு வாரத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல(இந்த ஊர்லன்னா 50 மைல் தள்ளி, நாக்குத் தள்ள... தள்ள கார் ஓட்டிட்டு போவனும்) Stage Friendsன்னு ஒரு குழு நாடகம் போட்டாங்க. இந்த ஊர்ல என்ன கூட்டம் வரப்போவுதுன்னு போனா திருவிழாவாட்டம் இருந்துச்சுங்க கூட்டம். இந்த நாடகம் போட்டவங்களைப் பத்தி எங்க சொந்தக்காரர் சொன்னது ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னாரு "தமிழுக்கு பாடுபடற சில மக்கள் இருக்காங்க. அவுங்க நாடகம் எல்லாம் போடுவாங்க"ன்னு சொன்னாரு.


கிரேஸி மோகனுடைய நாடகத்துல இவுங்க நடிச்சாங்க. Tenant Commandments. நாடகம் ஆரம்பமே அசத்தல். அதிலேயும் மோகன்னு ஒருத்தர் பின்னி பெடலெடுத்தாரு. அங்கே நிமிந்து உக்காந்தவங்க, பின்னாடி இருக்கவங்க குனிஞ்சு உக்காருடா பனைமரம்னு சொன்னப்புறம்தான் இறங்கினேன். வழக்கமான நாடகத்துல வர்ற இசை மட்டும் மிஸ்ஸிங்(BGM). மத்தபடி அருமை. நாடகத்தோட ஹைலைட்டே ஒரு வசனம் கூட தப்பில்லாம பிசிறு தட்டாம நடிச்சதுதான். யாரும் திரைக்குப் பின்னாடி திரும்பி பார்த்து வசனம் மறந்துருச்சுன்னு சொல்லல. அவ்ளோ ஒத்திகைப் பார்த்திருக்காங்கன்னு தெரியுது. ஒருத்தர் கூட ஒரு தப்பும் பண்ணாம நாடகம் நடிச்சது அவுங்களோட உழைப்பை காட்டுது. அதிலேயும் குரு, சாமியாரா நடிச்ச அம்மா, நாரதமுனி வேசத்துல நடிச்சவரு, வீட்டு முதலாளி(ஆர் எஸ் மனோகரை ஞாபகப் படுத்தாரு) சீனிவாசன், வாடகைக்கு வர்ற குடும்பத்தலைவரு ரமணி , கனீர் குரல்ல நடிச்ச வீடு புரோக்கர் எல்லாரும் பட்டைய கெளப்பிட்டாங்க. நாடகத்துக்காக மொட்டை போடுறவரோட தியாகத்தை என்னான்னு சொல்ல.. அவ்ளோ dedication.


மோஹன்கிறவரு ஒரு வசனம் பேசினது செம நச். அதுவும் கோவை நெல்லை slangல அடுத்தடுத்து பேசின வசனம் எந்தக்காலத்துக்கும் மறக்காது. கொஞ்சம் Current topic சேர்த்துட்டா செமையா இருக்கும். Intervalல பஜ்ஜி, போண்டா, புதினா சட்னின்னு பழக்கப்பட்ட நமக்கு 2 மணிநேரம் ஒரே இடத்துல உக்காந்து கொஞ்சம் கஷ்டம் கூட. ஒரு இடைவேளை தரலாம். பொடிப்பசங்க தொல்லைதான் கொஞ்சம் கஷ்டம். அவுங்கள பார்த்துக்கிறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணினா இன்னும் செளகரியமா இருக்கும்.

ஊரா ஊரா போயி நாடகம் போடுறாங்க. கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வர்ற கலைகள்ல நாடகமும் ஒன்னு (TV Serial எல்லாம் நாடகம்னா ..தா நாடகம் அழிஞ்சே போவலாம்டா). பிராமணர்களோட ராஜ்ஜியம் நாடகம்னு சொல்றது எல்லாம் சென்னை மக்களுக்குத்தான். எங்க ஊர்ல வருசா வருசா நாடகம் போடுவாங்க. இயக்குனர்க்கு 350ரூபாய் குடுப்பாங்க. 2 குயர் நோட்டுல வசனம் எழுத வேண்டியது அவரோட முதல் கடமை, கதை செம மொக்கையாத்தான் இருக்கும். ஆனா நேர்ல பார்கும்போது அது வேற மாதிரி போவும்.

எப்படியோ அமெரிக்காவோ, முனியப்பன் கோவிலோ அவுங்க அவுங்க ரேஞ்சுக்கு நாடகம் போட்டாத்தான் இந்தக் கலை தப்பிக்கும், அப்படி தப்பிக்க வெக்கிற Stage Friendsமக்களுக்கு என்னோட நன்றி. அமெரிக்காவுல நாடகம் போடுறது ரொம்ப சுலபம் இல்லே. 30 மைலாவது ஓட்டிட்டி போயி குளுரோ, வெயிலோ ஒரு இடத்துல சேர்ந்து ஒத்திகை பார்த்து.. விளம்பரம் பண்ணி.. டிக்கெட் வித்து..கூட்டம் வந்து... மேடையேறி ஒழுங்கா வசனம் மறக்காம நடிச்சு.. இத்தனை விசயத்தையும் சரியாப் பண்றாங்க இவுங்க, அதுவும் வெற்றிகரமா. நாடகம் மூலம் வர்ற பணத்தை இலங்கை வாழ் தமிழருக்கு தந்திருக்காங்க. இப்படி பல சேவைகள் இவுங்க செய்யறாங்க. ஒரு கலையா மட்டும் நினைச்சு இதை சிறப்பா செய்யறாங்கன்னு நினைக்கும் போதே இவுங்கள மாதிரி ஒன்னு இருந்தாவேப் போதும் நாடகம் செழிக்கும் நினைச்சுகிட்டேன்.

Tuesday, June 9, 2009

இங்க எவன்டா டாப்பு

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எளந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..


இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு

அண்ணன், அண்ணி, நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, நல்ல புருசன், கள்ளப்புருசன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு,கொழுந்தியா, மூதாரு, பாட்டி, போட்டி, அக்காப்பொண்ணு, அத்தைப் பொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகல,சம்பந்தி, முறை மாமன், முறைப் பொண்ணு, தலைச்சன் புள்ளை, இளைய புள்ளை,மூத்த தாரம், இளையதாரம், தொடுப்பு, ஒன்னு விட்டது, ரெண்டு விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணு தந்தவன்...

இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம் பெயிலியர், எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், பட படப்பு,பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுத்தல், பொறாமை, கிண்டலு, எளப்பம், எச்ச புத்தி, இறுமாப்பு, சகுனி வேலை, சதிச்செயல் ,கோல்மூட்டல், குறுக்குப்புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய், புளுகுமூட்டை, டகுல் வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து,கொள்ளிக்கண்ணு, குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேருமாரு, டிமிக்கி, ஊள உதார், ஒப்பாரி, ஜால்ரா, ஜக்கடித்தல்,திருட்டுத்தனம், தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு



குப்புசாமி, கோவிந்தசாமி, முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராசாமி, கண்ணுசாமி, கருப்பசாமி, மலைச்சாமி, பழனிசாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுசாமி, அழகுசாமி, அப்பாசாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவசாமி, சீனுசாமி, சடையசாமி, சந்திராசாமி, வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி, கோதண்டசாமி, அங்குசாமி, துரைசாமி, பொன்னுசாமி, அய்யாசாமி, அண்ணசாமி, நல்ல சாமி..



இதெல்லாம் டூப்பு, கந்தசாமி டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, கந்தசாமிதான் டாப்பு

[தலைப்புக்கு மன்னிக்கனுங்க,..தோரணை சமீபத்துலதான் பார்த்தேன். அந்த effectலதாங்க வெச்சுட்டேன்]

அப்புறம் கேட்கிறபோது தப்பு ஒன்னும் தெரியலீங்க. ஆனா, தட்டச்சும்போது தெரிஞ்சது. ஒன்னு மட்டும் ரிப்பீட்டு ஆவுது. அது ???? இது வேறையான்னு கேட்கறீங்களோ?

Thursday, June 4, 2009

Tamil Quiz Jun 03 09

ரொம்ப நாள் ஆச்சுங்க குவிஜு வெச்சு. மக்கள் எல்லாமே வேலை இருந்தாப்போதும்னு நினைக்கிற நிலைமை. அப்பவாச்சும் சேத்துவைப்பாங்க.

இந்த முறை, நாம பலரும் தெனமும் இல்லாட்டி ஒரு முறையாவது சந்திக்க/ அனுபவிக்க/பேசப்படற சங்கதிதாங்க இந்த முறை குவிஜூல முதல் 3 கேள்விங்க, மீதியெல்லாம் வழக்கம்போலதாங்க. சரிங்க நேரா கேள்விகளை பார்ப்போமா?

1) SWITCH ன்னு கேள்விப்பட்டிருப்போம். ஆனா இது இந்திய IT துறைகள்ல ஒரு acronym இருக்கு. அது(?) என்ன?
Ans: Satyam, Wipro. Infosys, TCS, CTS, HCL

2) அப்பா ஒரு முஸ்லிம், அம்மா நாத்திகவாதி. பையன் கிறிஸ்துவன். யாருங்க அந்தப் பையன் அது?
Ans: Barack Obama

3) இவர் இசையமைச்சதை பல முறை கேட்டிருப்போம். அதுதாங்க சன் தொலைக்காட்சியில ஒரு மணிக்கு ஒருதபா போடுவாங்களே "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ்மாலை"ன்னு. சன் டிவியின் அறிமுக(Singature) இசையை கோர்த்தவர் யாரு?
Ans: 'நம்மவர்'Mahesh

4) இடது சாரி கொள்கைகளை கொண்டவர். மாணவரா இருந்தப்பவே புகழடைஞ்சாரு. இவரைத் தீவிரவாதின்னு சொன்னாங்க. கொல்லப்பட்டார். மாணவ்ர்களுக்காக ஒரு இயக்கம் கூட ஆரம்பிச்சாரு. இவரை அடித்தளமா வெச்சு இந்தி, தமிழ்னு திரைப்படம் கூட வந்திருக்கு. நடிச்சவங்க எல்லாம் பெரிய நடிகர்கள். அந்த மாணவன் யாரு?
Ans: George Reddy- http://en.wikipedia.org/wiki/George_Reddy

5) இவர் ஒரு நடிகர், ஒரு வருசத்துல அதிகமான படங்களை நடிச்சவர்னு பேரிருக்கு. ஈரோட்டுல, புரோட்டா கடையில வேலை பார்த்தவர். அம்மா, அப்பா இல்லாதவர். நமக்கு எல்லாம் தெரிஞ்ச அந்த நடிகர் யாரு?

Ans: விக்னேஷ்

Tuesday, June 2, 2009

மகசூல்- ஜூன் - 2

ஆஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவுல இந்தியர்களுக்கு எல்லாம் பிரச்சினையாம். அடிக்கிறாங்களாம். ஆமாம் தன் மாநிலத்தை தாண்டின எல்லாத் தமிழனுக்கு நடக்கிறதுதானே. 80 கிமீ தாண்டி இருக்குற பெங்களூருலயே சாத்து சாத்துன்னு சாத்துறாங்க. அங்கே நடக்குறது தெரிஞ்ச விசயம்தான், இன்னிக்கு தண்ணிக்கு வெளியே வந்திருக்கு. இங்கிலாந்துல சில்பாவுக்கு ஆனப் பொறவு தானே தெரிஞ்சது.


தனித்தன்மையை இழந்துவரும் தமிழ்மணம்
தமிழ்மணம்-இது ஒரு சுகந்தம் மாதிரி இருந்துச்சுங்க. அலுவலவத்துக்கு போனோமா தமிழ்மணத்தை திறந்தோமான்னு காலத்தைத் தள்ளிட்டு இருந்தோம். சாப்பாடு மறந்து தமிழ்மணம் பார்த்த காலம் எல்லாம் உண்டு. தமிழ்மணத்த ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இடமா இல்லாம உணர்வுபூர்வமாத்தான் இன்னிக்கும் பார்க்குறேன். காரணம், அதனால கிடைச்ச உறவுகள். தமிழிஸை பார்த்து சூடு போட்டுகிட்டே போறாங்க. வேணாங்க மக்களே, தமிழ்மணம் தமிழ்மணமாவே இருக்கட்டும்.

கந்தசாமி:
எனக்கு என்னமோ கந்தசாமி பாட்டு எல்லாம் புடிச்சது. 3 நாள் விடுமுறையில கந்தசாமி, முத்திரை, தோரணை பாட்டு மட்டுமே காருல கேட்கிட்டே போனோம், 1000 மைலுதூரம். என்ன ஸ்பானிஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கு. மெக்சிகோன்னு முடிவு பண்ணியாச்சி இல்லே.. ரஜினி மன்னன்ல பாடின மாதிரி இல்லாம கொஞ்சம் சுமார் ரகம், விக்ரம். இத்தோடு நிறுத்திக்குங்க சீயான் சார், வேணாம். அழுதுறுவோம். "கந்தசாமிதான் டாப்பு" பாட்டு செம டாப்பு. கட்டுடைத்தல்ன்னு சொல்ற ரகம். பல்லவி, சரணம்னு இல்லாம சும்மா கலக்கலா ஒரு பாட்டு.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)