Thursday, December 29, 2011

ரித்தீஸ்க்கு பிறகுதான் பவர் ஸ்டார் - Twit Update 12-30

  • ரித்தீஸ்க்கு பிறகுதான் பவர் ஸ்டார் என்று கூறும் ரித்திஸ் ரசிகர்களே, " குரோதம்" புகழ் பிரேம்முக்குப் பிற்பாடுதான் ரித்தீஸே என்பதையும் அறிக.
  • TV/radio பேட்டில பொண்ணுங்களும், சரக்குல பசங்களும் இங்கிலீசுதான் பேசுவாங்க. #தமிழேண்டா
  • சிம்பு STRஆ பேரை மாத்திகிட்டாராம். யாராவது அவர்கிட்ட போய் சொலுங்கப்பா பேர் ஆசை பெருநஷ்டம்னு

  • சாதாரணமான மனிதன் புத்தகத்தை கடையில் வாங்குவான்.. அசாதாரணமானவன் அந்த புத்தகத்தை ஓசியில் வாங்குவான்
  • தமிழனுக்கு தமிழனும் எதிரி அடுத்தவனும் எதிரி. உதாரணம், ஈழம், கூடங்குளம்.
  • தமிழ் அறிந்த பெரும்பாலானோர் தம் மக்களுக்கு தமிழ் கற்பிப்பதில்லை. உதா: கமல்- ஸ்ருதி


விளம்பர இடைவேளை:



  • நல்ல பாடல்களைத்தர 80 களில் இளையராஜாவும், 90 களில் ரகுமானும் இருந்தார்கள். 11 வருடமாச்சி, யாருமே வரவில்லை. காத்திருக்கிறோம்.
  • கேட்டு வாங்குறது பிச்சைன்னா, Appraisal meeting எதுக்கு?
  • அவர்களை யாராவது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துக்கொள்கிறார்கள் பெண்கள். சட்டென பார்க்கும் கண்களை திரும்பி பார்க்கிறார்களே.


  • இந்தியாவுல நூறு, நூத்தம்பது அணைகள் நல்லா இருக்கு. ஒத்த அணையை கேரளாவுல கட்டிட்டு நாம படற கஷ்டம் இருக்கே ஐய்யய்யயோ
  • இதிலிருந்து என்ன தெரியுது. தமிழன் தமிழ்நாட்டுல வாழ்ந்தாதான் கெளரவம். அதைத்தான்யா MGR அப்பவே பாடினாரு "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" - கேரளா, கர்நாடகா, மலேசியாவில் அடிவாங்கும தமிழர்களுக்காக.
  • மூன்றாம் உலகப்போர் என்பது தண்ணீருக்காக வருவது. தமிழ்நாட்டுல ஆரம்பிச்சாச்சு. கர்நாடம், கேரளா, ஆந்திரான்னு சுத்தி அடிவாங்கிட்டே இருக்கோம்ல.

Thursday, December 22, 2011

2011ல் "மார்கட்டு" இழந்தவர்கள் - பட்டியல்

1. HP TouchPad/WebOS
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட WebOS செம மொக்கையாகி, கடைசியில் ஈச்சம்பழம் விலைக்கு விற்று தீர்த்தார்கள்.



2.Google Android Mobile Security
மொத்தத்தையும் சுருட்டிட்டுப் போகுற அளவுக்கு கூகிளோட Appsஏ, நூத்துக்கு மேற்பட்ட Appsகளை தன்னோட கடையிலிருந்து ஓரங்கட்டியது. இந்த வருடத்தின் மிகப்பெரிய malwareகள் இன்னும் Androidல் தான் இருக்காம்,. சாக்கிரதையா இருந்துக்குங்க மக்களே.

3.BlackBerry's Three-Day Outage
ஐபோனும் ஆண்ட்ராய்டும் போட்டிப்போட்டுக்கொண்டிருக்க, பெரும்பாலான Corporate businessகளில் உபயோகப்படுத்தும் BlackBerry 3நாள் பல்லிளித்ததும் கடுப்பானார்கள். பலர் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்த கதையும் உண்டு, சிலர் அலுவலக தொடர்பே இல்லாமல் நிம்மதியாகவும் இருக்க முடிந்தது

4.Windows Phone 7.5 "Mango" Update
நானும் போட்டியில இருக்கேன்ன் சொல்ற மைக்ரோ சாப்ட் தன்னோட MobOSல் 7.5 அல்லது மாங்காய்(Mango) வெளியிட அது பெரிய மொக்கையானது. கொஞ்சம் நஞ்சம் இருந்தப் பேரும் இந்த மாங்கா வாரிச் சுருட்டிக்கொண்டு போயிற்று

5.Android Tablets
Samsung Galaxy Tab, Motorola Xoom, Kindle Fire and the Barnes and Noble Nook இப்படி பல Tablet PC வந்தும் iPadஐ கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. ஆண்ட்ராய்ட் டேப்லெட்டுகளை தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் iPadக்கே மாறினதை கண்ணாரக் காண முடிந்தது.


விளம்பர இடைவேளை:



6. FTC Order Against Facebook
Facebook அண்ணாச்சிய நீ உன்னோட பயனாளர்களின் சொந்த விசயத்துல கை வெக்கிறேன்னு சொல்லி Facebookக் கையை கொஞ்சம் மடக்கி வெச்சது Federal Trade Commission. இல்லாட்டி நம்ம மூஞ்சியை விளையாண்டிருப்பாங்க. Facebookம் தணிக்கைக்கு கீழே அதுவும் 20 வருசத்து வரனும்னு கட்டளை யிட்டது, மார்க்குக்கு கொஞ்சம் சவால்தான்.

7.Google+ and Google Music
கூகுளுக்கு மூடுன பல விசயங்கள்ல தமிழ் மற்றும் மலையாளத்து பதிவர்கள்தான் ரொம்ப அடிவாங்குனாங்கன்னு நினைக்கிறேன். காரணம் மூடப்பட்ட Buzz. அது ஒரு இத்துப்போன Productனு யாருமே சீண்டாத போது ஒரு நல்ல பின்னூட்டப் பொட்டியா வேலை செஞ்சது. ஆனா இதனால ஒரு காசும் பேராதுன்னு மூடினாங்க. அதை மட்டுமா ஏகப்பட்டத்தை கழட்டி விட்டு Google+ லயே பெருசா பண்ண நினைச்சாங்க. என்ன அதுவும் படுத்துக்குச்சு. Google Music க்கும் செல்ஃப் எடுக்கவே இல்லை.

8.The BlackBerry PlayBook
iPad பார்த்து சூடுபோட்டுகிட்ட பூனையில இதுவும் ஒன்னு. உபயோகப்படுத்துர ஒருத்தரைக்கூட பார்த்தது இல்லை.

9. Yahoo
விடுங்க, ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. வெந்த புண்ணுல ஏன் வேலைப் பாய்ச்சுவானேன்.

10. Cisco Cius
கேள்விப்பட்டதே இல்லை இல்லீங்க. அப்படித்தான், இதுவும் இன்னொரு பூனை.

மார்கட்டு அப்படிங்கிற வார்த்தையே நம்ம மார்கட்டுக்குத்தாங்க பாஸூ(மாப்பு)

Monday, November 21, 2011

ஞாநியின் சொந்த ஊர் எதுவென்று தெரியுமா?

இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய இந்த கட்டுரை, நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை.... சில பதிவுகளை படித்தவுடன் நம் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போலவே இருக்கும். அப்படியாப்பட்ட பதிவுதான் இது. நான், பொதுவாக பதிவுகளை பிரதியெடுத்து வெளியிடுவது இல்லை எனினும், இந்தப் பதிவுக்காக அந்த விதியை சிறிதே தளர்த்திக் கொள்கிறேன். காரணம் நான் எழுதிய ஆணிவேர் என்ற கதையும் இதனை ஒட்டியே இருக்கிறது.  ஞாநி அவர்களை மாதிரியே நானும் பின்புலத்தில் என் சொந்த கிராமத்தில் பெயருடன் நானும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் போனமுறை ஊர் சென்ற போது, சாலை விரிவாக்கத்தில் அந்த மஞ்சள் நிற ஊர்ப் பலகையும் காணாமல் போய்விட்டது :(

இன்னும் சில நூறு பேரை இது சென்றடைய வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்,இட்லிவடை,ஞாநி


சென்ற வருடம் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒவ்வொரு விமான நிலையத்திலும் என் பாஸ்போர்ட் பெயரில் இருக்கும் பூர்விக ஊர் பெயரை அதிகாரிகள் கஷ்டப்பட்டுப் படிக்கும்போதெல்லாம், அந்த ஊரை இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்ற வருத்தம் மேலெழுந்துகொண்டே இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை.

ண்மையில் புரிசை கிராமத்தில் நடந்த புரிசை கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டுக் கலைவிழாவில் எங்கள் பரீக்‌ஷா குழுவின் நாடகம் நடத்த அங்கே செல்லவேண்டியிருந்தபோது, பயண வசதிகளை முடிவு செய்வதற்காக கூகுள் மேப்களை அலசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புரிசையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் என் பூர்விக ஊர் நல்லூர் இருப்பதைக் கவனித்தேன். இரவு நாடகத்தை முடித்துவிட்டு, அதிகாலையில் நல்லூர் போகலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் நாடகம் முடியும்போது நள்ளிரவு ஒரு மணி. அந்த நேரத்திலும் சுமார் 100 பேர் நாடகம் பார்த்தார்கள். நாங்கள் சுமார் இரண்டு மணிக்கு புரிசை கிராமத்திலேயே ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கப் போனோம்.

ல்லூர் ஆற்காடு அருகே இருக்கும் கலவை என்ற சிறு நகரை ஒட்டிய கிராமம். நல்லூரை அடைந்ததும் எங்கே யாரிடம் என்ன சொல்லி எதை விசாரிப்பது என்று எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அந்த ஊரில் எங்கள் குடும்பத்துக்கு நிலம், வீடு எதுவும் இல்லை. உறவினர்கள் யாரும் இல்லை. என்னிடம் இருந்த இரண்டு தகவல்களில் ஒன்றால் எந்தப் பயனும் இல்லை.

என் தாத்தா முனுசாமி அந்த ஊரின் முன்சீப்பாக இருந்தவர். அடுத்து என் அப்பாவும் அந்தப் பரம்பரை முன்சீப் வேலையை ஓரிரு வருடம் பார்த்துவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டார். அப்பா ஊரை விட்டு வந்த வருடம் 1927! இன்னொரு தகவல் அப்பாவின் பங்காளி சகோதர உறவினரான நல்லூர் சோமசுந்தரம் என்பவர், விடுதலைப் போராட்ட வீரர் என்பதாகும்.

முதலில் ஒரு வீட்டு வாசலில் கண்ணில் பட்டவரிடம் கேட்டேன். அவர் எல்லாத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவர் பெயர் முனுசாமி! பஞ்சாயத்து அலுவலக ஊழியர். சோமசுந்தரத்தின் வீடு இன்னும் இருப்பதாகவும் அவரது குடும்ப வாரிசுகள், உறவினர்கள் பலர் ஊருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். ஊரில் இருக்கும் பழைய சிவன் கோயிலை அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருப்பதாகவும் சொல்லி என்னை அந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். சோமசுந்தரத்தின் வீட்டையும் சுற்றிக் காட்டினார்.

கோயிலும் வீடும் என் ஆர்வத்துக்குரியன அல்ல. அந்த அக்ரஹாரத் தெருவின் முடிவில் மிகப் பெரிய மரம் ஒன்று. அதன் வயது சுமார் 200 வருடங்கள் என்றார்கள். அதுதான் சுவாரஸ்யமான கற்பனைகளைத் தூண்டியது. இருபது வயது வரை இங்கே இருந்த என் அப்பா, அந்த மரத்தின் கீழ் விளையாடியிருப்பாரா, நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பாரா என்றெல்லாம் யோசித்தேன்.

இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள். அப்பா காலத்தில் இதில் சரிபாதிதான் மொத்த மக்கள்தொகையாக இருந்திருக்கலாம்.

ஊருக்குள் நுழைந்து பஞ்சாயத்து ஊழியரைச் சந்தித்தது முதல், ஊரை விட்டுத் திரும்பி கலவை, ஆற்காடு வழியே சென்னை வந்தபின்னரும் கூட, எனக்கு நிறைய செல்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தன. எல்லாரும் நல்லூரிலிருந்து தொலைதூர மாநிலங்கள், வெளியூர்கள் சென்று குடியேறியவர்கள். பெரும்பாலோர் சிவன் கோயிலைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பல நூறு வருடங்கள் முந்தைய பழைய கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய பெருமையும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்தது.

எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?

கலவை பகுதியில் ஆண்களை விடப் பெண்களே மக்கள் தொகையில் அதிகம். ஆனால் பெண்களின் எழுத்தறிவு 59 சதவிகிதம்தான். நல்லூர் கிராமத்தில் ஒரு நூலகத்தைப் பார்த்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒவ்வொரு வேளையும் ஒரு உறவினர் வீட்டில் போய் சாப்பிட்டுப் படிக்க வேண்டிய வறுமையில் இருந்த என் அப்பாவையும் அடுத்து எங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தது படிப்புதான்.

சொந்த ஊர் என்பது சிலருக்கு நெகிழ்வான உணர்வுகளை எழுப்புகிறது. எனக்கும் செங்கற்பட்டு அப்படிப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனக்கு அதுதான் சொந்த ஊர். ஆனால் ஒவ்வொரு முறை செங்கற்பட்டுக்குப் போகும்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவது பழைய நினைவுகள்தான். இப்போதைய ஊரைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் கோபமும் வருத்தமும்தான் வருகின்றன. ஊரே கடை வீதியாக மாறிவிட்டது. சாலைகள் எல்லாம் யுத்தம் நடந்த பூமி போல இருக்கின்றன.

நண்பர்களோடு மகிழ்ச்சியாகச் சென்று உலாவிய ரேடியோ மலை மர்ம தேசமாகி விட்டது. வேறு எந்த ஊரிலும் எனக்குத் தெரிந்து ஊருக்கு நடுவே சிறு குன்று கிடையாது. அதன் மீது ஒரு பூங்கா, நகராட்சியின் வானொலி எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. அதனால்தான் ரேடியோ மலை என்று பெயர். அண்மை யில் சென்றபோது குன்றேறிப் பார்த்தேன். அங்கே இருந்த அச்சுறுத்தும் தோற்றத்தில் சிலர் முறைத்த முறைப்பில் திரும்பிவிட வேண்டியதாயிற்று.

நான் தவறாமல் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சடுகுடு விளையாடிய வேதாசலம் நகர் அழகேசனார் தெரு பூங்காவும் விளையாட்டுத் திடலும் சிதிலமடைந்து கிடந்தன. அதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தார்கள். வருடம் முழுவதும் விதவிதமான விளையாட்டு வீரர்களுடன் உயிர்த்துடிப்போடு காணப்பட்ட சீர்திருத்தப்பள்ளி விளையாட்டுத் திடல் பாழடைந்து ரயில்வேயின் கோடவுனாகக் கிடக்கிறது. குளவாய் ஏரியைத் தூர்த்து ப்ளாட் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதன் ஆயக்கட்டு வயல்கள் எல்லாம் பைபாஸ் சாலையினால் ஏற்கெனவே ப்ளாட்டுகளாகிவிட்டன.

ஒரு காலத்தில் நமக்குப் பெருமகிழ்ச்சி தந்த பல விஷயங்கள் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. இளம் வயதில் தினசரி மணிக்கணக்கில் அரட்டை அடித்த நண்பனை முப்பது வருடம் கழித்து சந்திக்கும்போது, பழைய சந்தோஷங்களின் தொடர்ச்சியாக இப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் இருவருக்கும் பேச எதுவுமில்லை. பகிர எதுவுமில்லை. கால ஓட்டத்தில் இருவரின் மதிப்பீடுகளும் வெவ்வேறு திசைகளில் போய்விட்டதே காரணம். மாறாக ஒரு வாரம் முன்பு அறிமுகமான ஒருவருடன் மணிக்கணக்கில் பேசுகிறோம். இருவருக்கும் இடையில் பொது அக்கறைக்குரியவை நிறையவே இருப்பதே காரணம்.

உறவுகளைச் சடங்குகளாகவோ, அல்லது வெறும் பழக்கத்தினாலோ அல்லது வேறு வழியில்லாமலோ தொடரும் போது அவை சுமையாக மாறுவதுதான் நிகழும்.

உறவாடக் கற்றுக்கொள்வோம் என்பதுதான் நான் அண்மையில் குடந்தையில் நடத்திய ஒரு பயிலரங்கத்தின் செய்தி. லயன்ஸ் க்ளப் இதை ஏற்பாடு செய்திருந்தது. லயன்ஸ் மாவட்டம் 324ஏவின் இப்போதைய ஆளுநர் ராமராஜன் இந்த வருடம் வித்தியாசமான சில பயிலரங்குகளை நான் நடத்தித் தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நானும் என் தோழி பத்மாவும் அவற்றைச் செய்து தரப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

லயன்ஸ் உறுப்பினர்கள் தம்பதிகளாக வந்து பங்கேற்கும் பயிலரங்கம் இது. அரசியல், கல்வி, மீடியா, வணிகம் எல்லாமே கடும் சிக்கல்களுடன் இருக்கும் சூழலில், தனி வாழ்க்கையில் உறவுகளும் எவ்வளவு சிக்கலாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்ந்து என்ன செய்யலாம் என்ற கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள். போலி கௌரவமும் அதிகாரப் பார்வையும்தான் பல உறவுகளை நாசப்படுத்துகின்றன. அன்பும் பரஸ்பர மதிப்பும் மட்டுமே நம்மை மீட்கும்.

இன்னொரு பயிலரங்கம் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு, பத்து வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்கானது. மாணவர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வசதிகளும் வாய்ப்புகளும் மட்டும் தான் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பயிலரங்கங்கள் அவர்களுக்கு நீந்திக் கரையேறக் கிடைக்கும் இன்னொரு துரும்பு.

மயிலாடுதுறையில், நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்தப் பள்ளியின் வரலாறு பிரமிப்பானது. எழுத்தாளர்கள் கல்கி, துமிலன், சா.கந்தசாமி, தி.மு.க. தலைவர் பேராசிரியர் அன்பழகன், இன்னும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள் பலர் படித்த பள்ளி இது என்று அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நூலகம் இல்லையென்று தெரிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இருநூறு கோடி ரூபாயில் ஒரு கனவு நூலகத்தை, சென்னையில் அமைக்கிறோம். இருநூறு ஊர்களில், இரண்டாயிரம் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அல்லது இருந்தும் இல்லாத நிலை. மயிலாடுதுறை பள்ளியில் ஆயிரக் கணக்கில் நூல்கள் உள்ளன. ஆனால் நூலகர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. பள்ளிகளில் காவலர் (வாட்ச்மேன்), துப்புரவுப் பணியாளர் பதவிகளெல்லாம் கூட அரசால் நியமிக்கப்படாத நிலைதான் பல பள்ளிகளில் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் சிலரை ஒரு சில ஊர்களில் நியமிக்கிறார்கள்.

ஒவ்வொரு பயணமும் நம் சூழல் எவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கூடவே அதையெல்லாம் தாண்டி எழுந்து வருவதற்கான துடிப்போடும் ஆர்வத்தோடும் தேடலோடும் இன்னொரு தலைமுறை உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பையும் இந்தப் பயணங்கள் எனக்குத் தருகின்றன.

முசிறியில் மாணவர் பயிலரங்கம் முடிவில் அன்றைய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் அலை அலையாக எழுந்து வந்து முதல் முறை மைக் முன்னால் பேசிய அத்தனை முகங்களும் குரல்களும் மறக்க முடியாதவை.

Thursday, November 17, 2011

Why this kolai veri di - Lyrics

So Finally Dhanush has Written an English Song





Yo Boys, I am singing Song,
Soup Song..
Flop Song..

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
rhythm Correct
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

Maintain Plz
why this கொலை வெறி கொலை வெறி கொலை .. டீ

Distanlce-u moon-u moon-u
moon-u Color-u White-u
White-u background night-u
night-u color-u black-u

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

White skin-u girl-u girl-u , girl-u Heart-u black-u
Eyes-u Eyes-u meet-u meet-u,
my future dark-u.


why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

மாமா notes எடுத்துக்கோ,
அப்படியே கையில SAX எடுத்துக்கோ

பம்ப்பாம்பஐ பம்ப்பாம்பா பம்ப்பாம்பா பபபபா
சரியா வாசி
அஹ்ஹஹஹ்ஹஹ, சூப்பர் மாமா ரெடி?

ஒன் டூஉ த்ரீஈ ஃபோர்ர்...

வா. Whatஅ change over மாமு.

ok மாமா, now tune change-U,

கையில glass-u,
Only English-u?

Handல Glass-u, glass-ல Scotch-u, eyes-u f-ullஆ tear-u,
Empty Life-u, girl-u come-u, life-u reverse gear-u,
Love-u Love-u, oh my Love-u, You showed me bouv-u,
Cow-u cow-u, holy Cow-u, i want to hear now-u,
God I am dying now-u, she is happy how-u?
This Song-u for Soup boys-u,
we dont have choice-u

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

ம்ம்ம்திங்காக்க்
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

Tuesday, November 15, 2011

வாழ்த்துகளா? வாழ்த்துக்களா?

இதுவும் திரும்பத் திரும்ப வர ஒரு கேள்வி.  வாழ்த்துக்கள் என்பது சரி இல்லை.

 வாழ்த்துகள் என்பதுதான் சரி.

அதே மாதிரிதான் எழுத்துகள், சொத்துகள், முத்துகள் என்று சொல்லறதுதான் சரி. இதுக்கு என்ன ரூல் இருக்குன்னு சிலர் கேட்கலாம். இன்னும் சிலர் வந்து நீ எழுதின கொத்தனார் நோட்ஸ் படிச்சேன். அதுல கூட வன்தொடர்க் குற்றியலுகரம் வந்தா வலி மிகும்ன்னு இருக்கே. பாட்டுப் பாடு, தேக்குப் பலகைன்னு சொல்லிக் குடுத்துட்டு இப்போ வாழ்த்துக்கள்ன்னு மாத்திச் சொல்லலாமான்னு கேட்கறாங்க.


ராசாக்களா, நீங்க அம்புட்டு தூரம் நோட்ஸ் படிச்சு இருக்கீங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா அதே நோட்ஸ்ல நான் இந்த வாழ்த்து மேட்டரும் சொல்லி இருக்கேனே. சரியாச் சொல்லணும்ன்னா அந்த வன்தொடர்க் குற்றியலுகரம் ரூல்தான் இங்கவும் மேட்டர். புணர்ச்சி விதிகள்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா ரெண்டு தனித் தனி வார்த்தைகள் புணரும் பொழுதுதான் அந்த விதிகள் சரியா வரும்.

அப்போ எழுத்து + கள், இதை எடுத்துக்கிட்டோம்ன்னா எழுத்துக்கள் அப்படின்னு வரும். இதுக்கு அர்த்தம் என்ன? கள் போன்ற எழுத்துன்னு அர்த்தம். இல்லையா? ஆனா ஒன்றுக்கு மேற்பட்டன்னு சொல்ல வரும் பொழுது பன்மை விகுதியா கள் அப்படின்னு சேர்க்கறோம். இது விகுதி. இது தனியான சொல் இல்லை. இதைச் சேர்க்கும் பொழுது நம்ம புணர்ச்சி விதிகள் வேலைக்காகாது. பன்மை விகுதியா கள் சேரும் பொழுது வலி மிகுமா மிகாதான்னு விதிமுறைகள் எதுவும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. ஆனா அர்த்தம் ஆகுது அனர்த்தம் ஆகுதான்னு பார்த்து போடச் சொல்லி இருக்காங்க.

கல்கியின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும்.

கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

நாம முன்னாடி பார்த்தா மாதிரி, கள் போன்ற எழுத்து என்பதைக் குறிக்கும் எழுத்து+கள் என எழுதினால் அது எழுத்துக்கள் அப்படின்னு புணரும். அதனால ரெண்டாவது வரியோட பொருள் என்ன ஆகுதுன்னா கல்கியின் எழுத்து கள் போன்றது. அது எனக்குப் பிடிக்கும்ன்னு ஆகுது. நீங்க அதைத்தான் சொல்ல வந்தா எழுத்துக்கள்ன்னு போடுங்க. இல்லையா எழுத்துகள்தான் சரி.

இனிப்புகள் எல்லாருக்கும் தரலாம் ஆனா இனிப்புக்கள் எல்லாருக்கும் தரலாமா? த்ரக்கூடாதுன்னு சட்டமே இருக்குய்யா!

அதே மாதிரி ஒருத்தருக்கு பிறந்த நாள் விருந்துன்னு அம்சமா சியர்ஸ் சொன்னா அது வாழ்த்துக்கள். மனம் நிறைய வாழ்த்தினா அது வாழ்த்துகள்தான்.

முத்து, சொத்து, வித்து - இதை எல்லாம் என்ன சொல்லணும்? இருக்கிறதை எல்லாம் வித்து’க்’கள் வாங்கினா என் சொத்து’க்’கள், அதுவும் முத்து’க்’கள்ன்னு வேணா சொல்லலாம். பன்மையைக் குறிக்க சொல்லணும்னா முத்துகள் சொத்துகள் வித்துகள்தான். முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் அப்படின்னு கவிஞர் ஒருத்தர் எழுதி இருக்காரேன்னு கேட்டா அது சந்தத்துக்கு எழுதறது. இன்னும் சிலர் கூட இந்த மாதிரி பன்மை விகுதி சேர்க்கும் பொழுது வலி மிகுந்து எழுதி இருப்பாங்க.

இதுக்கு தனியா விதிமுறைகள் ஒண்ணும் இல்லை. அதனால நான் இப்படித்தான் எழுதுவேன்னு சொன்னா ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. ஆனா எழுதினா அனர்த்தம் வரக் கூடாதுன்னு பார்த்துக்கணும். அவ்வளவுதான்

Copied From இலவசம்

Thursday, November 10, 2011

கேரளாவையே அதிர வைத்திருக்கும் சந்தோஷ் பண்டிட்

ஒருத்தரு தன்னோட படத்துல வர்ற 3 பாட்டுக்களை Youtubeலயே வெளியிடறாரு. hits நிறைய வந்திருது, அதிகமில்லைங்க 5 லட்சம் hitsதான். ஆச்சர்யமா இருக்கா? அப்படியான்னு, அடுத்து இன்னும் 3 பாட்டுக்களை வெளியிட்டாரு, hits எகிர ஆரம்பிச்சிருச்சு. மக்களோட எதிர்பார்ப்பும் அதிமாயிருச்சு.  கடைசியா 2 பாட்டுக்கள், அப்புறம் Trailer. பட்டை லவங்கம் எல்லாம் சேர்த்து கெளப்பிருச்சு பாட்டுக்கள். Fans Clum அங்காங்கே முளைக்க வேற ஆரம்பிச்சிருச்சு.  இப்படி Youtubeஆலயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின படம் கிருஷ்ணனும் ராதையும். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்னமேயே.

சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க.

இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது



படத்தின் Trailer





நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க.

  • பாடல்கள்
  • இசை
  • சண்டைப் பயிற்சி
  • கலை
  • படத்தொகுப்பு
  • பிண்ணனி இசை
  • Grapics
  • Effects
  • பாடியது
  • கதை
  • வசனம்
  • திரைக்கதை
  • உடைகள்
  • Title Graphics
  • Pro. Desgining
  • இயக்குனர்
  • தயாரிப்பு.
அதாவது எல்லாம் இவரே.  குறும்படத்துல நாமளே எல்லாம் பண்ணிக்கிறா மாதிரி.   சும்மா இல்லீங்க, படத்துல 8 பாட்டுக்கள் பாஸூ.   இந்தப் பாட்டையும், trailerஐயும் பார்த்துட்டு நம்மூர் சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் மாதிரிதாங்கன்னு சொல்லிடாதீங்க. விவரமானா ஆளு இவரு.

தீபாவளிக்கு தமிழ் படங்கள் (வேலாயுதம், 7ம் அறிவு) வெளியாகுதுங்கிறதனால மலையாளப் படங்கள் எதுவுமே வெளியாகலை. அந்தளவுக்கு நம்ம படங்களைப் பார்த்து பயந்து போய் இருக்காங்க, கேரளத்து அச்சன்கள். ஆனா துணிஞ்சு படத்தை வெளியிட்டாரு சந்தோஷ் பண்டிட். முதல்ல எர்ணாகுளத்துல 3 திரையரங்கத்துல வெளியாச்சு படம், எல்லாக்காட்சிகளும் ஹவுஸ் ஃபுல். உடனடியா இன்னும் ப்ரிண்ட் போட்டு 12 திரையரங்கத்துல வெளியிட்டாங்க. எல்லா திரையரங்கத்துலேயும் ஹவுஸ் ஃபுல்.


மண்டை காய்ஞ்சு போயிட்டாங்க கேரள திரையுலக மக்கள். உடனடியா, ஒரு விவாதம் ஏற்பாடு பண்ணினாங்க, அதுல சந்தோசும் பங்கேற்க, காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்துட்டாங்க மக்களும், திரையுலக மக்களும். Negative Promotion அப்படின்னாங்க, லூஸுத்தனமுன்னு கூட சொன்னாங்க. அப்போ சந்தோஷ் சொன்னதுதான் எல்லாருக்குமே அதிர்ச்சி. அதாவது ”நான் கேரளத்து சூப்பர் ஸ்டாரானது புடிக்காம பொறாமையில் பேசுறாங்க” அப்படின்னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாரு. கஷ்ட காலம் வரும் போது ஆண்டவன் அவதரிப்பான், அப்படி அவதரிச்சவன்தான் இந்த சந்தோஷ் கூட சொன்னாங்க, அதாவது கிண்டலா.

அந்த விவாதத்தின் காணொளிகள்






மலையாள சினிமாவே நொடிஞ்சி போயிருக்கிற இந்த நேரத்துல, இப்படி ஒரு மலையாளப் படம் வெற்றிகரமா ஓடுறதை பார்த்துட்டு, திரையுலக ஜாம்பவானான மது,  ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி ஒரு விருதும் குடுத்தாரு. வாய்பிளந்துட்டாங்க கேரளா மக்கள். அதன் காணொளி இதோ.



இதே நிகழ்ச்சியில சந்தோஷ் பண்டிட் சொன்னது இது ”மக்கள் ISD call போட்டு கூப்பிட்டு திட்டுறாங்க. அதாவது 3 நிமிசம் முதல் 15 நிமிசம் வரைக்கும் திட்டுறாங்க. ஆனா, நானா எந்த callயும் cut பண்றது இல்லை. அவுங்களாத்தான் cut பண்ணிட்டுப் போறாங்க. இது எல்லாம் என்னோட வெற்றி” அப்படின்னும் நேரடியாவே சொல்லிட்டாரு. படத்தோட மொத்த செலவு 5 லட்சம், வசூல் எவ்ளோ ஆச்சு தெரியுங்களா? மனசை திடப்படுத்திக்குங்க மக்களே. ஒரு கோடியைத் தாண்டிருச்சாம். அடுத்தப் படத்திற்கான ஆங்கிலப் பாட்டும் இப்போ hit. இதுக்கும் இவரு போற இடமெல்லாம் செம கூட்டமா வந்து திட்டிட்டுப் போறாங்க.

கேரளா மக்கள் எல்லாம் இவரை கேணைன்னு சொல்லிகிட்டே படம் பார்க்க, இப்போ இவர் கோடீஸ்வரர் ஆகிட்டாரு. இப்போ சொல்லுங்க பாஸூ, யாரு கேணைன்னு? இதுக்கும் இவர் எந்த promotionக்குன்னு எந்தச் செலவும் பண்ணலை. எல்லாம் Youtubeல பண்ணின promotionதான்.

கேரளாவின் talk of the Townஆ,இல்லே இல்லே talk of the Stateஆ மாறியப்போயிட்டாரு இந்த கேரளத்து சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்.  படம் வெளியானதுல இருந்து செய்திகள்,  மக்கள் பார்த்தா பேசிக்கிறது, பதிவுகள் எல்லாமே சந்தோஷ் பண்டிட்தான்.

என்ன கொடுமைன்னா, இனிமே இது மாதிரி எத்தனை லூஸுங்க இந்த மாதிரி கெளம்பி வரப்போறாங்களோ தெரியலை. ஆனாலும், கேரளாவுக்கு வந்த இந்த நிலைமை வந்திருக்கூடாதுடா குருவாயூரப்பா.

Monday, October 31, 2011

சவால் சிறுகதை-2011

  • மொட்டை மாடியின் தொட்டியின் சின்ன இடுக்கில் ஒளிந்திருந்தான் கிருஷ்.
  • மாடிப்படிக்கட்டின் அடியில் ஒளிந்திருந்தான் கோ.
  • மொட்டை மாடியின் இன்னொரு மூலையில் கீற்றுகளை அடுக்கி வைத்திருந்தார்கள், சுவற்றிக்கும் கீற்றுக்கும் இடையில் ஒளிந்திருந்தான் ராஜ். சத்தமே இல்லாமல் தன்னுடைய படுக்கையின் அடியில் ஒளிந்திருந்தாள் ராஜி.

கண்டிப்பாக இந்த மூவரும் மாட்டிக்கொள்வார்கள், காரணம் வி (எ) விஷ்ணு. அவந்தான் இப்போழுது போலிஸிடம் மாட்டிக்கொண்டவன்.(இனிமேல் போலீஸ்=போ) informerஆக மாறிவிடுகிறேன் என்று கெஞ்சியதின் அடிப்படையில் விஷ்ணுவை போ, தன்னுடைய இடத்திற்கு கொண்டு சென்றது. விசாரணையில் அவர்கள் ஒளிந்திருந்த இடத்தை சொல்லிவிட்டான் விஷ்ணு. விஷ்ணு சொன்னது உண்மைதானா என அறிய முதலில் தேடலைத் தொடங்கியது போ.

ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்துவைத்து ராஜி இந்த அறைக்கு வந்தது, கூடவே விஷ்ணுவும். ராஜி கொரில்லா தாக்குதல் நடத்தக் கூடுமென முதலே அறிந்திருந்த போ, எதற்கும் தயாராகவும் அதே சமயம் அவள் தப்பித்துக்கொள்ளாதவாறு முன்னேற்பாடும் செய்யப்பட்டது. அதிக எதிர்ப்பு எதுவுமில்லாமலும், சத்தமே போடாமலும் போ’விடம் தஞ்சமடைந்தாள் ராஜி. தன்னுடைய அணியிலிருந்தே காட்டிக்கொடுத்த வி மீது கடும் கோபம் கொண்டாள்.


அடுத்து யார் எனக் கேட்டபோது, விஷ்ணு மொட்டை மாடியில் இருக்கும் மூவரையும் சைகயாலே சொல்ல ஆரம்பிக்கும் போதே, தாக்க ஆரம்பித்தாள் ராஜி. இதனை சற்றும் எதிர்பாராத வி, நிலை தடுமாறி கீழே விழுந்தான் “காட்டிக்கொடுக்கிறியே நீ எல்லாம் மனுசனா? உன்னை நாங்க எவ்ளோ நம்பினோம். என்னிக்குடா உன்னை விட்டுட்டு நாங்க சாப்பிட்டு இருக்கோம்? சொல்லுடா? மனசாட்சியே இல்லாம காட்டிக்கொடுத்திட்டியே? போலீஸ் தேடிட்டு வரது புதுசா என்ன? மத்தவங்களை விடுடா கிருஷை எப்படிடா காட்டிக்கொடுக்க மனசு வந்துச்சு” என கடும் சீற்றத்துடன் வந்து விழுந்த வார்த்தைகள்.

தலை குனிந்தபடியே யார் யார் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என சொன்னபோதே ஊகித்துவிட்டாள், வி'ன் விளையாட்டை. மனசுக்குள் சிரித்தபடியே, அவர்களுடன் நடக்க ஆரம்பித்தாள்.

மொட்டை மாடி,
மாலை 5:48. சூரியன் இறங்குமுகமாய் இருந்தாலும் இலைகள் சடசடவென படபடக்க ஆரம்பித்ததாலும், வெக்கை மட்டும் சிறிதும் குறையவில்லை. கால அட்டவணையின் படி பார்த்தால் சரியாக இன்னும் 12 நிமிடங்கள் தப்பித்து விட்டால் போதும். ஆனால் இந்த 12 நிமிடத்தை எப்படி சமாளிப்பது, போ’வோ வேகமாய் தேட ஆரம்பித்தது. தேடலின் அடுத்த கட்டமாய் கோ. மாடிப்படிக்கட்டின் அடியில் ஒளிந்திருக்கிறான் என்பதை சரியான கணக்குப் போட்டு, அவன் தப்பிக்காதவாறு, தகுந்த நேரத்தில் வளைக்கப்பட்டான். முடிந்தது, ராஜிக்கு கவலை எல்லாம் கிருஷ் மீதுதான். அவன் தப்பித்தாலோ, மாட்டினாலோ போதும்.

அதே சமயம்
கிருஷ், எப்பொழுதும் தன்னுடைய ESP மூலம் நடப்பதை அறிந்து கொண்டு இந்த மாதிரி சிக்கலிலிருந்து தப்பிவிடும் ஆற்றல் பெற்றவன். அப்பொழுதுதான் வி’ விளையாடிய விளையாட்டு அவனுக்குத் தெரிந்தது, தப்பான குறியீடு அது-SWH26F. அதனால கண்டிப்பாய் ராஜ் தப்பிவிடுவான் என புரிந்துகொண்டான். எந்நேரமும் விஷ்ணு தன்னை அழைக்கலாம் என அவன் பாக்கெட்டில் இருந்த போனை தொட்டு உறுதி செய்து கொண்டான். சபதம் வராமிலிருக்க Silent mode ஆக்கிக்கொண்டான்.

அதே சமயம்,
மொட்டை மாடியின் இன்னொரு மூலையில் கீற்றுகளை அடுக்கி வைத்திருந்தார்கள், சுவற்றிக்கும் கீற்றுக்கும் இடையில் ஒளிந்திருந்தான் ராஜ். கீற்றுக்குள் 5அடி நீளத்தில் நெளிந்து கொண்டிருந்தது கருநாகப்பாம்பு. நேற்று தின்ற எலி இன்னும் ஜீரணமாகாமல் பாடாய் படுத்தியது. இது தெரியாமல் மூச்சைக்கூட சப்தமில்லாமல் விட்டுக்கொண்டிருந்தான் ராஜ்.

அதே சமயம்,
கிருஷ் மெதுவாக நகர்ந்து கட்டிடத்தின் மேலேறி முன்பக்கமாய் ஜன்னலுக்கு மேலே இருக்கும் தடுப்புக்கு வந்தான்.கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த ஜன்னலோ எந்த நேரத்திலும் இடியலாம் என்ற நிலையில் இருந்தது. சிமெண்ட் கூட இன்னும் காயவில்லை.



இன்னும் 3 நிமிடமே, போ’ வேகமாய் தேட ஆரம்பித்தான். கிருஷ் மொட்டை மாடியின் தொட்டியின் இடுக்கில் இல்லாதது கண்டு அனைவரும் திடுக்கிட்டார்கள்.

டேய், ”கிருஷ் எங்கே?” என போ கேட்க, வி’ற்கு ஒன்றும் புரியவில்லை. ராஜி பதட்டமானாள். இப்படித்தான் இவன் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தப்பிக்கும் நோக்கில் மாட்டிக்கொள்வான். இது ஒன்றும் புதுசில்லை.

அதே சமயம்,
கீற்றுக்குள்ளிருந்த பாம்பு ஆள் அரவம் கேட்டு நெளிய ஆரம்பித்தது. மனித வாடை கண்டு எச்சரிக்கையாய் தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.

அதே சமயம்,
விஷ்ணுவிடமிருந்து போன் வர, ஜோப்பிலிருந்து போன் எடுத்து பார்த்தான்.

டன் டன் டன் டன் டன் டன் டன் டன் டன்..

மணி அடித்தது.

பிராத்தனைக்கு நேரமாச்சு என்று சொல்ல அனைவரும் கூடம் நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.

பிராத்தனைக்கு ஓடியவர்களின் போலீஸ்(விக்கி), வி(விஷ்ணு), ராஜ் அகியோருக்கு வயது முறையே 12,8,6. SP.கோகுலுக்கும் வயது 8தான். வயது அதிகமானதால் விக்கியை அது, இது எனவே அழைப்பார்கள் இந்த நண்பர்கள்.


கற்பனை வியாதியில் உள்ள கிருஷ்க்கு மட்டும் இது கேட்கவே இல்லை. பாம்பு மீண்டும் தூங்க ஆரம்பித்தது.

கட்டப்பட்ட செங்கல் ஒவ்வொன்றாக தன்னுடைய பிடிப்பை விட ஆரம்பிக்கும் போது பிராத்தனை ஆரம்பித்தது.
கோகுல் இன்னும் பிராத்தனை கூடத்திற்கு வராததை அறிந்த விஷ்ணு, விக்கி, ராஜ், ராஜி அனைவருமே. ”சார்” என ஒரே நேரத்தில் அலறினார்கள்.

அந்த ஆதவற்றோர் இல்லத்திருலிருந்த அனைவரும் ஒன்று கூடி தேட ஆரம்பித்தார்கள். இவனுக்கு இதே பொழப்பாப் போச்சு என வார்டன் கூறிக்கொண்டே மாடிப்படிக்கட்டில் தாவி ஏறிலானார். மற்ற இரு வார்டன்களும் கிணற்றுள் எட்டிப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.

போன் வருமா எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருந்த கிருஷை லாவகமாய் தூக்கிக்கொண்டு போனார் வார்டன்.
பிராத்தனை ஆரம்பித்தது.

கிருஷ் ஏன் அப்படி கற்பனை செய்து கொண்டிருந்தான் எனவும், Day Dreaming பற்றியும் அறிய

பட உதவி: இந்த அட்டவணையை ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து  படமாக எடுத்தது @VickyTamil.  ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு 7:30 மணி நேரமே தூங்க அனுமதிக்கப்படுகிறது.

Wednesday, October 26, 2011

திவாளியாம். என்ன ம** தீவாளி


மனதளவில், இன்னும் இந்தியனாய் வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு  இந்தியனுக்கும் சமர்ப்பணம்





Dedicating to All Non Resident Indians(Still Considering them as Indians)

போன வருசமும் இதே போல புலம்பியது

Thursday, October 13, 2011

காதல் ஜூரம் - 2

காதல் ஜூரம் - பாகம் 1 படிக்க

Onsite வந்துட்டா மட்டும் நமக்கு எங்கிருந்தோ மொழி மேல அப்படி ஒரு வெறி வந்துரும். காரணம் வேற ஒன்னும் இல்லீங், வெள்ளையும் கருப்பையும் பார்த்து பார்த்து, அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம உதட்டையே உத்து உத்து பார்த்து, பாதி அர்த்தம் புரிஞ்சி, மீதிக்கு நாமே fill in the blanks பண்ணினா வரத்தானே செய்யும். ரகுவுக்கும் அப்படித்தான் வந்துச்சு. தமிழார்வம். அதனாலயே நெறைய படிச்சு, blogs எழுத ஆரம்பிச்சான்.

வாரக் கடேசிக்கு எங்கே போலாம்னு யோசனை பண்ணினான். ஒரு பட்டியலே போட்டான் ரகு.

  • பாலா வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சலாம் போட்டு ”பகுன்னாரா?” அப்படின்னு அவன் வூட்டுக்காரம்மாகிட்ட கேட்டாவே உச்சில முடி நிக்கிற மாதிரி காரமா கோழிச் சாப்பாடு கிடைக்கும்.
  • விஜிய இங்கே கூப்பிட்டு ரெண்டு படத்த பார்த்துட்டே, கரோனாவை(பீர்) தள்ளி flat ஆகலாம்.
  • வடக்கத்து ஜிகிட்டுக்கு போனப் போட்டு “அயாம் ஃபைன் யார்? யூ கம் ஹியர்னா” அப்படின்னு குச் குச் ஹோத்தா பண்ணலாம். ஆனா ரெண்டு நாளைக்கு வழிய முடியாதே... அதுக்காக ஞாயித்துக்கிழமை செம தூக்கம் போடனும்.
ப்படி பட்டியல வெவரமா வேகமா போட்டுட்டு இருக்கும் போது “டொங்க்”. எவனோ ஜிடாக்ல கூப்பிடறான்னு நினைச்சுகிட்டே போனா பூ படம் போட்டு தெரியாத பேர்ல சேட்ல ஒரு ஆளு. ஒரு வேளை பேர மாத்தி விளையாடுற வ.வா.ச மக்களா இருப்பாங்களான்னு கூட நினைச்சான்.

"Hi, How are You?" அப்படின்னு முதல் வரி.
ID பார்த்தான் ”traehteews_sruoy”. என்ன எழவுடா இது. ஏதோ ஒன்ன விக்க வர பொம்பளைங்க ID மாதிரியே இருக்கு. சரி நமக்கும் நேரம் போவலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

“I am fine, whatzup"

"This is my New ID, whn is your next blog" ஆஹா அதுவா இது. தூள்டா.
"In a day. What is your name? where are you from? how did u get my blog? do you like it? ho..."

"ஹல்லோ நிறுத்துங்க, எதுக்கு இத்தனை கேள்வி? என் பேரு ராஜி, உங்க பாஷையில் சொன்னா புதரகம்தான். உங்களை மாதிரி Onsite எல்லாம் வரலை. இந்தியாவுல பொறந்து, இங்கே படிக்க வந்தேன். அப்படியே வேலை தேடி, செட்டிலாகிட்டு இருக்கேன். இப்போ உங்க ஊருக்குப் பக்கம்தான். போதுமா? உங்களைப் பத்தி நானும் விசாரிச்சுட்டேன். Tamil ப்லொக் எழுதறவங்களை விசாரிக்கிறது கஷ்டமா என்ன? உங்கள பத்தி விவரத்தை நாஞ்சொல்லவா?”
”ஆஹா. இவ்வளவு தூரம் ஆகிப்போயிருச்சா? சரிங்க உங்க நம்பர் கொடுங்க. கூப்பிடறேன்”.

“அதுக்குள்ளேயே சந்தேகமா? நான் பொண்ணுதான். கலாய்க்க எல்லாம் இல்லீங்க. உங்க புரொபல் பார்த்தேன், பக்கத்து ஊர்தான்னு தெரிஞ்சு போயிருச்சு. அதான் சேட்டிங். எப்படியும் வாரக் கடேசி சும்மாதானே இருப்பீங்க. மொக்கைப் போட ஆள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நான் சேட்டுவேன், நாள் முழுக்க”
“சரி நீங்க பதிவ படிக்கிறீங்களே. நீங்க பதிவெல்லாம் எழுதுவீங்களா?”

“ஓ எழுதுவேனே. ஆனா வேற பேர்ல. உங்களால கண்டுபிடிக்க முடியாது”
“அடச்சொல்லுங்க”

“நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க”

“அப்படியா. அப்போ தெரிஞ்ச முகம்தான்னு சொல்லுங்க”

“படிச்சா அதிர்ச்சியாகிர மாட்டீங்களே”
இருதயத்துடிப்பு அதிகமாக ஆச்சு “என்னாங்க, நக்கலா. பதிவச் சொல்லுங்க, நான் நீங்க யாருன்னு சொல்லுறேன். பதிவெல்லாம் கம்மியாத்தான் போட்டிருக்கேன். ஆனா எல்லாப் பதிவர்களையும் தெரியும். 80 பேர்க்குமேல சேட்டுல சேர்த்து வெச்சிருக்கேன். தெரியுங்களா?”

”பதிவோட பேர அப்புறம் சொல்றேன். இப்போ கூப்பிடுங்க” எண் திரையில வந்து விழுந்துச்சு.

“9 மணிக்கு மேல கூப்பிடறேனே, இன்னும் 45 நிமிஷம்தானே இருக்கு”

“ஓஹ், free minutesக்காகவா? சரி கூப்பிடுங்க”

மனசு 45 நிமிசத்துக்கெல்லாம் காத்திருக்க மாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியான 3 வது தம்ம அடிக்கும் போதுதான் ஒரு கேள்வி வந்துச்சு.

”லவ்வு வந்துருச்சா?” பொண்ணு சேட் பண்ணினாவே லவ்வுன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிற சாதாரண பையன் நம்ம ரகு இல்லேன்னா கூட, அவனும் பையந்தானே.

9 மணி ஆனவுடன் எண்ணைத் தட்டினான். ஒரு ரிங்லேயே ”சொல்லுங்க ரகு”ன்னு ஒரு வீணை பேசிச்சு. அசடு வழிஞ்சே 30 நிமிஷம் பேசினான் ரகு. வழக்கமான விசாரிப்பு முடிஞ்சு, வழக்கமான குடும்ப கதை முடிஞ்சு, என்ன சமைக்கத்தெரியும் பேசி, லத்திகா, வேலாயுதம், 7ம் அறிவு, எங்கேயும் எப்போதும் ஆரம்பிச்சி ஒரு படம் விடாம, புடிச்ச சீன், புடிக்காத பாட்டு அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் வரும் போது மணி 3:20.

ரெண்டு பேருக்கும் மனசே இல்லாம தூங்கப் போனாங்க. ஆனா ரகு தூங்கல.

காலையில 6:10 மணிக்கு மணி அடிச்சது.

“தூக்கமே வரலேடா. நீ தூங்குனியா?” முதன் முறையா டா போட்டு பேசினாள். போன்ல பேசிகிட்டே காபி முடிஞ்சு, உச்சா போயி, ஆயி போயி 9 மணி வரைக்கும் போச்சு. அன்னிக்கு நல்லா தூங்கல ஆனா ராத்திரி 10 மணிக்கே போன் பேசுறத நிறுத்திட்டாங்க. இப்படியே சனிக்கிழமை, போனும்,. சேட்டும்னு ஓடிப்போக, ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மனசிலேயும் ஓடி வந்து உக்காந்துகிச்சு.

ஞாயிறு, காலை 7:20 மணிக்கு.

”டொங்க்”

“ஹேய் உன்னோட பதிவென்னென்னு சொல்லவே இல்லியே”

”சொன்னா சிரிப்பேடா. வேணாம்”

“அடச்சொல்லுன்னா”

“உன்ன மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எனக்கு வராது”
”அப்போ என்னோடது எல்லாம் கவிதங்கிறியா?”

”பின்னே? நீ கவிஜன். நான் மனசில பட்டத எழுதறவ”, ஆர்வத்தைத் தூண்டிக்கிட்டே போனா.

“சொல்றியா? இல்லாட்டி போவட்டுமா?”

”சொல்றேன், சொல்றேன்”


”டொங்க்” பதிவோட முகவரி வந்துச்சு.


“பகுத்தறிவாளர்கள் வாழ்க” அப்படின்னு பெரியாரைப் புகழ்ந்தும், பிராமிணர்களைச்சாடியும், அதேசமயம் செம நாகரிகமா எழுற ஒரு ஆம்பளைப் பதிவரின் பதிவு அது.

“எதுக்குடி இதத்தர்றே. இத நான் படிக்கிறது இல்லே”

“நாந்தான் இத எழுதறேன், நம்பலைன்னா ஒரு பின்னூட்டம் போடு. நான் வெளியிடறேன்.”

ஒரு பதிவுக்கு “நல்ல பதிவு" அப்படின்னு பின்னூட்டம் போட்டான். “போட்டாச்சு”

“இப்போ பாருடா” பின்னூட்டம் வெளியாகிருந்தது.

மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத கிலி வந்துச்சு. எப்போ பார்த்தாலும், தினமலர், பாஜக, பிராமிணர்கள்ன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி, எப்பவுமே சூடா இருக்கிற பதிவு அது. பாதி பேருக்கு மேல அந்தப் பதிவர் மேல செம காண்டுல இருந்தாங்க. எல்லாரும் ஆம்பிளைன்னு நினைச்சு இருக்க ”இது ஒரு பொண்ணா?”.

“என்னடா சத்தத்தையே காணோம்”
“அதிர்ச்சியா இருக்கு”

“ஏன்?இந்தப் பதிவ எழுதறது ஒரு பொண்ணான்னுதானேன்னா? நாந்தான் எழுதறேன். ஏன் எழுதக்கூடாதா?”
“எழுதலாம். தப்பே இல்லே”

“அப்புறம்?”

“ “

“என்ன சத்தத்தையே காணோம்”

“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

”என்னத்தைப் பேசச்சொல்றே” என்றான் பூணூலை அழுத்தி பிடித்தப்படி...

விதி: காதலுக்கு, அவா வீடு, பெரியவா வீடுன்னெல்லாம் தெரியாது.

ஒரு முகம் தெரியா பெண்ணின் அனானி மறுமொழி கிடைச்சதும் சந்தோசம் தாங்கல. அப்புறம் ஒரு சந்தேகம் வந்துருச்சு ஒரு வேலை ராயலை சிங்கமெல்லாம் சேர்ந்து ரவுண்ட் கட்டின கதை மாதிரி ஆகிருமோன்னு ஒரு 'பல்பு'ம் எரிஞ்சது. எதுக்கும் இருக்கட்டும்னு அந்த ID ஜிடாக்ல சேர்த்துட்டு........
எல்லாரும் கண்டிப்பா மொத பகுதிய மறந்திருப்பீங்க, அதனால ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருங்க.(Click here)

Wednesday, October 12, 2011

விவாஜி Updates- Oct12

Vivaji ன்னா என்னான்னு தெரியாதவங்களுக்கு . Twitterல் என்னோட ID @vivaji http://twitter.com/vivaji





  • கோவிலுக்குப் போனேன். முருகன், விநாயகர், லஷ்மி, ஐயப்பன், பெருமாள் எல்லார் கூடவும் பேசினேன். அவுங்கதான் யாருமே என்கிட்ட பேசலை.

  • ஜொள் விடுவது தப்பில்லை. அது அடுத்தவர்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்

  • அழகான பொம்மைகள் வைத்து ஆராதிப்பதுதான் கொலு என்றால், அவள் இருக்கும் என் வீட்டில் வருடம் முழுவதும் கொலுதான்

  • நான் எப்பொழுதும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். என் கம்பீரம் தொலையும் இடத்திலேயே, என்னையும் கொன்றுவிடு

  • சில பேரோடு கொண்டாடும்போது, கொண்டாட்டங்கள் கொண்dotங்களா மாறிவிடுகிறது. அப்புறம் அவர்களைப் பார்க்கவே பிடிப்பதில்லை

  • மணிக்கணக்குல நான் நல்லவன்னு பில்டப் குடுத்தாலும், நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சரியா கண்டுபுடிச்சிடறாங்க. கேர்ள்ஸ் ஆர் கிரேட்

  • அங்கிள்ஸ் அங்கிள்ஸாவே பேசிக்கிறாங்க. ஆனா இந்த auntiesதான் teenAgeல இருக்கிறா மாதிரி பேசிக்கிறாங்க.

  • பெண் தப்பாவே பாடினாலும் ரசிக்க முடிஞ்சது "என் இனிய பொன் இளாவே"

  • ஒவ்வொருவரின் வாழ்விலும் "சங்கீத ஸ்வரங்கள்"-அழகன் போன்றதொரு நிகழ்வு கண்டிப்பாய் நடந்தேறியிருக்கும். Atleast team conf call

  • வாடி போடின்னா திட்டுறாங்க. அம்மா'டி'ன்னேன் ஒன்னும் சொல்லலை(என்ன உலகம்டா இது?)

  • உலகில் இரண்டே வகையான பெண்கள்தான் உள்ளனர் 1)அழகாயிருக்கும் பெண்கள் 2)தான் அழகு என நினைக்கும் பெண்கள்

  • @paval குழுமம் -->பதிவுகள்  --> ஆர்குட் --> பேஸ்புக்   --> டிவிட்டர்   --> பஸ்  -->ப்ளஸ்    --> குழுமம்
#வாழ்க்கைஒருவட்டம்டா

  • இந்திய உணவை அனுப்புங்கள் இந்திய இங்கிலிஷை அனுப்பாதீர்கள் # தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் @calgarysiva :
  • @calgarysiva : ஆங்கிலத்தையும் கொன்று தமிழையும் இனி மெள்ள சாகடிக்கும் டமிளர்களுக்கு சவுக்கடி# தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் உங்கள் குழந்தைகளிடம் உங்கள் தாய் மொழியில் பேசுங்கள், ஆங்கிலத்தை நாங்கள் கற்று தருகிறோம். தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் @calgarysiva :

  • மீட்டிங்ல கொட்டாவி வராம தடுக்க ஏதாவது மருந்து மாத்திரை இருக்கா?

  • நாம சொல்றதுக்கெல்லாம் Rofl,LoL போடுறவங்க மூஞ்சியில சிறுபுன்னகை கூட வந்திருக்காது #onliners
கடைசியா கேபிள் சங்கருக்காக
நானும் யூத்துன்னு சொல்ற யாருமே யூத் இல்லே. யூத் எவனும் நான் யூத்துன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே



....

Tuesday, October 11, 2011

காதல் ஜூரம்-1

(தமிழ் பதிவுலகத்தில் காதல்)

இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதனும்னு இவனுக்கு தெரியல.

Anonymous Said..
I like your writing style and your kavithai's. I dunno how to write in tamil. Or else I would have written in Tamil. I have added your blog to my fav. Eagerly waiting for your next poem.


சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன். Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும்.

இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, பிலாக் குட்டு எல்லா இடத்திலேயும் பதிவை கூட்டி வெச்சு, எல்லா பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வராத நிலையில இப்படி வந்த பின்னூட்டம் வந்ததே பெரிய சந்தோசமா இருந்துச்சு,. பின்னே வந்த மொத பின்னூட்டமே அனானி. ஹ்ம்ம், நடத்துவோம்னு உங்க பின்னூட்டத்துக்கு நன்றின்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.

Anonymous Said
You are welcome.


Anonymous Said
"DONT PUBLISH"


Please add my mail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com".
அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.

விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!

தொடரும்

Monday, October 10, 2011

மகசூல்- Oct-10-2011

Facebook, twitter எல்லாவிடத்திலேயும்
தேடிவிட்டேன்.
எனக்கானவள் மட்டும் இன்னும்
கிடைக்கவேயில்லை..

கிராமத்தில்
காத்துக்கொண்டிருக்கிறாள்
என் அத்தை மகள்!

--00--



நாள் தோறும்
 என் தேவதை
 என் கண்ணில்!
வாசல் கடக்கையில் சென்ற
கோதுமை குதிரையைப்பார்த்தப்பிறகு
தேவதை முகம் மட்டும்
 நினைவிற்கு
வந்துத்தொலையமாட்டேன்
என்கிறது!

--00--

னக்கும் எனக்குமான தொகுதிகள்
உடன்பாடு ஏற்படுவதேயில்லை.
கூட்டணி ஆட்சிதான் என்றாலும்,
அதிகார வர்க்கமெல்லாம் உன்னிடமே,
சட்டசபையிலே உன் குரல் மட்டுமே
என்றுமே கேட்கிறது,
எதிர்கட்சியாகவே உணர்கிறேன் என்றும்,
எனக்காக தருணம் வருவதேயில்லை.
வந்தாலும் இடைமறுப்பு செய்துவிடுகிறாய்,
என்ன ஆனாலும் ஆட்சி மட்டும்
சிறப்பாகவே நடக்கிறதாம்
நம் இல்லமெனும் அரசியலில்!

----00----

ல்லா ஏத்திவிட்டுட்டு போற பொண்ணும்,
பேருந்துலயிருந்து இறக்கிவிடற
கண்டக்டரும்
நல்லா இருந்ததே
சரித்திரமே இல்லை!

--------------------------------------------

யிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. ஒரு நாள் கங்கை நதியில் பயணிகள் படகில் சென்றுகொண்டிருந்தனர். இரவு நேரம். திடீரென்று மற்றொரு படகில் வந்த கொள்ளையர்கள், பயணிகளின் படகில் ஏறினார்கள். அந்தப் பயணிகளின் விலையுயர்ந்த ஆடைகளையெல்லாம் கொள்ளையர்கள் கவர்ந்துகொண்டார்கள். யாராவது எதிர்த்தால் அவர்களைக் கொல்லக்கூடத் தயங்காதவர்கள் அவர்கள்.


கொள்ளையடித்த பிறகு கொள்ளையர்கள், தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பயணிகளின் முகங்களைக் கூர்ந்து பார்த்தார்கள்.இதைப் பார்த்த பயணிகளில் ஒருவர், மற்ற பயணியிடம் சொன்னார்:

""துர்க்கையை வழிபடுகின்ற கொள்ளையர்கள் இவர்கள். எல்லா வருடமும் இவர்கள் ஒரு இளைஞனை துர்க்கைக்குப் பலிகொடுப்பார்கள்!''

மற்றொரு பயணி சொன்னார்:
""இந்த முறை பலிகொடுப்பதற்கான ஒரு ஆளைத்தான் நம்மிடையே தேடுகிறார்கள்!''

இந்த நேரத்தில், படகின் ஒரு புறத்தில் இருந்த அழகான ஒரு இளைஞனைக் கொள்ளையர்கள் தேர்வு செய்தார்கள். அவன் வெளி நாட்டுக்காரன்.

கொள்ளையர்களில் ஒருவன், ""ம்...இவன்தான் பலி கொடுப்பதற்கு ஏற்றவன்!'' என்று சொல்லி அந்த இளைஞனைப் பிடித்து நிற்க வைத்தான். அப்போது இளைஞன் சொன்னான்:

""நீங்கள் என்னைக் கொல்லலாம். ஆனால் உங்களின் இந்தச் செயலால் உங்களுக்குத் துர்க்கையின் அருள் கிடைக்காது. ஏனென்றால் மிகவும் தொலை தூரத்தில் உள்ள நாட்டிலிருந்து, புத்தரைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்காக வந்த பயணி நான். என் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை!''

இதைக் கேட்ட மற்ற பயணிகளுக்கு அந்த இளைஞனின் மீது அன்பும் இரக்கமும் ஏற்பட்டது. இளைஞனைச் சும்மா விட்டுவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகத் தங்களில் ஒருவரைப் பலி கொடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படியும் அவர்கள் கொள்ளையர்களிடம் சொன்னார்கள். ஆனால் கொள்ளையர்கள் அதைக் கேட்கவில்லை. அந்த இளைஞனையே பலி கொடுப்பது என்று முடிவு செய்தார்கள்.

"நான் பலியாகத் தயாராக இருக்கிறேன்! ஆனால் நான் பிரார்த்தனை செய்வதற்கு எனக்குச் சற்று நேரம் அவகாசம் தரவேண்டும்'' என்று இளைஞன் சொன்னான்.

கொள்ளையர்கள் சம்மதித்தார்கள்.

இளைஞன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். ஆச்சரியம்! அப்போது ஒரு பயங்கரமான புயல் காற்று வீசியது. கங்கை நதி கொந்தளித்தது. அலையில் படகு ஆடியது.

பயணிகளும் கொள்ளையர்களும் பயந்துவிட்டார்கள். துர்க்கா தேவி தங்கள் மீது கோபம் கொண்டுவிட்டாள்போலிருக்கிறது என்று நினைத்த கொள்ளையர்கள் இளைஞனை விடுதலை செய்தார்கள். பிறகு பயணிகள் தங்கள் படகை கரைக்குச் செலுத்தி தப்பினார்கள்.

அந்த நேரத்தில் அப்படியொரு புயல் வீசவில்லையென்றால் "யுவான் சுவாங்' என்ற பெயருடைய அந்த இளைஞனின் வாழ்க்கை முடிந்திருக்கும். ஆமாம், உலகப் புகழ் பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங்தான் அந்த இளைஞன்.

யுவான் சுவாங் (602 - 664)

இந்தியாவில் 14 வருடங்கள் பயணம் செய்தவர் யுவான் சுவாங். இவர் சீன நூலாசிரியர். 1300 வருடங்களுக்கு முன்பு 5000 கிலோ மீட்டர் நடந்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்தார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் படித்தார். கி. பி. 645 - ஆம் ஆண்டு சீனாவிற்குத் திரும்பினார்.

----00-----

Monday, October 3, 2011

Indli- இண்ட்லி-சொந்த செலவில் சூன்யம்

இண்ட்லியின் புதிய அம்சம் என்ன தெரியுங்களா? மேலே இருக்கிற படம்தான். இண்ட்லியில் நான் யாரையும் பின்தொடர்வது இல்லை. அதன் காரணமாக இனிமே எனக்கு எந்த பிரபலமான இடுகைகளும் தெரியாது. என்னாங்கடா டகால்டியா இருக்கு. எத்தனை இடத்துலதான் தொடர்வதாம், Buzz, reader, Twitter, Facebook. இப்படி பல இடங்களில் தொடர்ந்து தொடர்ட்ந்தே சலிச்சுப்போவுது.
(இதுக்கும் எந்த பொண்ணையும் வாழ்க்கையில பின்தொடர்ந்து போனது கிடையாதென்பது இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத சுய அறிமுகம்) 

 இதற்கு என்னுடைய கண்டங்கள். இந்த புதிய வசதி பலரை தன்னுடைய பயணர் பகுதியில் இருந்து இழக்க நேரிடும். ஏற்கனவே போட்டி பலமா இருக்குற நேரத்துல சொந்த செலவுல சூன்யம் வெச்சிட்டிருக்காங்க. நான் யாரையும் பின் தொடர போவதில்லை என்பதே என் நிலைப்பாடு.

நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்? பின்னூட்டத்துல சொல்லிட்டுப்போங்க. இதையே ஒரு கண்டனப்பதிவாவும் நீங்க நினைக்கலாம் இல்லாட்டி இந்த வசதிக்கு ஆதரவாகவும் நீங்க நினைக்கலாம். இதற்காக நீங்க பண்றது எல்லாம் ஒன்னே ஒண்ணுதான். சோத்தாங்கை பக்கம் பாருங்க ஒரு வாக்குப்பட்டை இருக்கும். அதுல உங்க பொன்னான வாக்குகளை செலுத்திட்டு போங்க பாஸூ.

Friday, September 30, 2011

கிரிக்கெட்YouTubeSpecial:ஆகச்சிறந்த சில காணொளிகள்

Best of Indian Crickets

Sachin's First Run



One of the Best Catch from Ajay Jadeja



India Tasting the First Evey world Cup


Shane Warne's Best


Jhonty Rhodes Run Out


Paul Collingwood's Catch


Best Catches -Some more


First Indian to Hatrick - Chetan Sharma


Miandad hits a six off last ball against India in sharjah cup final 1986, bowler was Chetan Sharma.



As a Final Touch:
Shahid Afridi Takes A Brilliant Catch On The Bowling Of Saqlain Mushtaq. While Doing So He Broke Shoaib Malik's Shoulder.
A Catch That Almost Ruined A Career

USA- Dish network வைத்திருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தினேஷ் Buzzல் பகிர்ந்து கொண்டதை இங்கே பதிவில் அவர் அனுமதியோடு வெளியிடுகிறேன்

Dish network வைத்திருக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை. (அமெரிக்க பஸ்ஸர்களுக்கு மட்டும்)

இன்னைக்கு ஒரு ஃபோன்கால். ஒரு இந்தியப் பெண் குரல், “You have dish network for your television right?”னு கேட்டது. நானும் “யெஸ்” என்றேன். டிஷ் நெட்வொர்க்கோட சேட்டிலைட் ஆர்பிட் மாத்தப்படுறதாவும். அதனால பல ரீசிவர்கள் இன்கம்பேட்டிபிளாகிடும்னும் சொன்னாள். உங்க ரீசிவர் கம்பேட்டிபிளானு பாக்கணும்னு சொல்லி, ரீசிவர் மாடலும், ரீசிவர் ஐடியும் கேட்டா. எனக்கு அப்பவே முதல் டவுட்டு வந்தது. ஏன்னா ஃபோன் நம்பரை வச்சே டிஷ் நெட்வொர்க் ஆளுங்க என் ஜாதகத்தையே எடுத்துருவாங்க. இவ ஏன் இந்த டீட்டெயில்ஸ் கேக்கறான்னு. அடுத்து உங்க அக்கவுண்ட் செக் பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சி உங்க ரீசிவர் கம்பேட்டிபிள் இல்லை சார் நான் என்னோட சூப்பர்வைசர்கிட்ட கனெக்ட் பண்றேஎன்னு சொன்னா.

நானும், வெயிட் பண்ணேன். சூப்பர்வைசர் வந்து, புது ரீசிவர் அனுப்பி வைக்கிறேன். பழைய ரீசிவரை ப்ளக் அவுட் பண்ணிட்டு இதை ப்ளக் இன் பண்ணா போதும். வொர்க் ஆகிடும். பழைய ரீசிவரை 15 நாளைக்குள்ள எங்களுக்குத் திருப்பி அனுப்பனும். ப்ரிபெயிட் ரிட்டர்ன் லேபிளும் சேர்த்து அனுப்புவோம். அப்புறம் $80 டாலர் சார்ஜ் பண்ணுவோம். ஆறுமாசம் கழிச்சி அதை ரிட்டர்ன் பண்ணிடுவோம். அக்கவுண்ட்ல இருக்கிற உங்க க்ரெடிட் கார்டுக்கு சார்ஜ் பண்ணுவோம்னு நிறுத்தாம பேசினான். இப்ப எனக்கு ரெண்டாவது டவுட்டு. சேட்டிலைட் ஆர்பிட் மாத்தினா ஆண்டெனாவைத் திருப்ப வேண்டியிருக்குமே, இவன் ரீசீவரை மாத்தினாப் போதும்னு சொல்றானேன்னு.

அதோட, நீங்க மாசா மாசம் கரெக்டா பில் கட்டுறதால, 12 மாசத்துக்கு $5 டிஸ்கவுண்ட் குடுக்குறேன் அப்பிடின்னான். ”நான் நிறுத்துப்பா, ஒரு நிமிசம். உங்க சேட்டிலைட் சேஞ்ச் பண்றதுக்கு நான் எதுக்கு $80 டாலர் குடுக்கணும்?”னு கேட்டதும், நீங்க இப்பவே குடுக்க வேண்டாம், ரீசிவர் கைக்கு வந்ததும், உங்களுக்கு ஃபோன் பண்ணி நான் சார்ஜ் பண்ணிக்கிறேன்னு சொன்னான்.

அதுக்கடுத்ததா அவன் கேட்டதுதான் எனக்கு டவுட்டை கன்ஃபர்ம் பண்ணிருச்சி. இந்த ஆர்டரை கன்ஃபர்ம் பண்றதுக்கு உங்க கிரெடிட் கார்டோட முதல் 12 டிஜிட் மட்டும் சொல்லுங்க, கடைசி டிஜிட் வேண்டாம்னு சொன்னான். நான் முழிச்சிக்கிட்டேன். என்கிட்ட கிரெடிட் கார்ட் இப்ப இல்லை, நீ நாளைக்கு இதே நேரத்துக்கு ஃபோன் பண்ணு நான் தர்றேன்னு சொன்னேன். உடனே அவன், இருங்க சார் அது தேவையில்லை. நான் ரிசீவரை அனுப்பி வைக்கிறேன். அப்பிடின்னு சொல்லிட்டு அவனோட ஃபோன் நம்பர் & ஏஜண்ட் நம்பர் குடுத்தான்.

அவன் ஃபோனைக் கட் செஞ்சதும், நான் டிஷ் நெட்வொர்க் கஸ்டமர் கேருக்கு ஃபோன் பண்ணேன். அவங்க அப்பிடியெல்லாம் எதுவும் மாத்தலை. நீங்க அந்த காலை இக்னோர் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டான்.

உடனே நான் அந்த சூப்பர்வைசருக்கு ஃபோன் பண்ணி, டிஷ் நெட்வொர்க்குக்கு ஃபோன் பண்ணி கேட்டேன், அது தேவையில்லைன்னு சொன்னாங்க, எனக்கு புது ரீசீவர் அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன். அவனும் சரி நான் ஆர்டரைக் கேன்சல் பண்ணிடுறேன்னு சொல்லிட்டான்.

அவன் என்ன செஞ்சிருக்கணும்னா, என் அக்கவுண்டுக்குள்ள ரீசிவர் ஐடி வச்சி லாகின் பண்ணியிருக்கான். அதுல என்னோட கிரெடிட் கார்ட் லாஸ்ட் ஃபோர் டிஜிட்ஸ் மட்டும் தெரியும் இல்லையா, அதுனால ஃபர்ஸ்ட் 12 டிஜிட்ஸ் கேட்டிருக்கான். நான் குடுத்துருந்தா, இன்னேரம் என்னைய போண்டி ஆக்கியிருப்பானுங்க.

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சி. இது மாதிரி ஃபோன் வந்தா எச்சரிக்கையா இருங்க. ரீசிவர் ஐடியையே குடுக்காதீங்க. என்னோட அக்கவுண்ட்ல இருக்குமேன்னு கேட்டு மடக்குங்க.

Thursday, September 22, 2011

சோனா - SPB சரண்- நடந்தது என்ன? ரிப்போர்ட்

சரண் மற்றும் சோனா விவகாரம் பற்றிக்கொண்டு எரிகிறது, செய்திகளில். பல தளங்களில் சோனாவிற்கு ஏக வரவேற்பு.

’அந்தப் பொண்ணு பாவம்யா’,’ ‘கவர்ச்சி நடிகைன்னா கையப்புடிச்சி இழுத்துருவானுங்களே. வில்லன் நடிகர்களை வில்லனாய் பார்க்கிற சமூகம் ஆச்சே’, ‘அப்பன் பேரை கெடுக்க வந்த புள்ளைய்யா இது’ இப்படி.
 

சரி, விசயத்துக்கு வருவோம்...
வெங்கட் பிரபு கோவா படம் ஆரம்பித்த சமயம். மள மளவென படங்கள் ஆரம்பித்துக்கொண்டிருந்தார் சோனா. “எங்கேயிருந்துடா மாப்ளே இவ்ளோ பணம் கிடைச்சது.ஹ்ம்ம்ம்,, எல்லாம் ‘அப்படித்தாண்டா’” இப்படி சொல்லி பொருமிக்கொண்டது பொதுசாம். ஒரு படம் கூட முன்னேறவே இல்லை. சூட்டோடு சூடாக வெங்கட்பிரபுவுக்கு(இனி பிரபு) ஒரு சிறியளவில் பணம் கொடுத்து அடுத்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் சோனா(தளங்களில் வருவது போல் 75 லட்சம் அல்ல) எந்த விதமான ஒப்பந்தங்களும் போடப்படவில்லை. இதெல்லாம் நம்பிக்கையின் பேரில் திரையுலகில் நடப்பதுதான். மங்காத்தாவுக்கு ஆரம்பிப்பதற்கு முன்னே படம் ஆரம்பிக்கலாமா என பிரபு சோனாவிடம் வினவ, பணமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என சொன்னாராம் சோனா.


ரண், பிரபு பழக்கம் ஊரறிந்ததுதானே. சிறுவர்கள் முதல் இந்நாள் வரை தொடரும் பந்தம், தனிப்பட்ட முறையில அல்லாது தகப்பனார் இருவரும் “வாடா போடா” என அழைத்துக்கொள்ளுமளவிற்கு நெருக்கம். அப்படியே தொடர்ந்தது சரண்-பிரபு. சரண்/SPB தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்க், பிரபு நடிக்க வந்த படம் உன்னைச் சரணடைந்தேன் மிகப்பெரிய தோல்வி. அதறகு பரிகாரமாக சென்னை 600028, அதே சரண் தயாரிக்க பிரபு இயக்க(குடும்பப்படம் என சொல்லிக்கொண்டார்கள் படப்பிடிப்புத்தளங்களில்), படம் மிகப்பெரிய வெற்றி. இதனிடையில் சரண் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வி.

அதே சமயம் ஒரு கிசுகிசுவிலும் சிக்கிக்கொள்ளாதவர் சரண். அப்பா பேரை காப்பாற்றிக்கொள்ள அரும்பாடு பட்டவர், பணம்/பட விவகாரங்களிலிருந்து மட்டும் அவரால் தப்பிக்கமுடியவில்லை(நேரம் சரியில்லை)
விவரப் பட்டியல் 
  • 2003 உன்னைச்சரணடைந்தேன் - தோல்வி
  • 2005 மழை - தோல்வி- பெரும் பணம் நஷ்டம்
  • 2007 சென்னை 600028 -வெற்றி
  • 2008 குங்கும பூவும் கொஞ்சு புறாவும் - தோல்வி- பொருள் நஷ்டம்
  • 2009 நாணயம் - படத்திற்கு நல்ல பெயர் ஆனாலும் தோல்வி- நஷ்டம்
  • 2011 ஆரண்ய காண்டம் - இணையளவில்/வாயளவில் வெற்றி- பெரும் நஷ்டம்- தன்னுடைய கனவாக நினைத்த Kodhandapani studiosஐ விற்றே படத்தை வெளியிட்டார்கள். மீளமுடியாத கடன்.

ங்காத்தாவின் பெரும் வெற்றிக்குப்பிறகு, சரணுக்காக படம் செய்வதென முடிவு செய்தார் பிரபு (Friend Indeed). வழக்கம் போல், இந்த முறையும் சோனாவிடம் ஒரு வார்த்தை கேட்கலாமென பிரபு நினைத்து அழைத்தார். சோனா இந்த முறை படம் செய்யலாமென சொல்ல பிரபுவுக்கு குழப்பம். காரணம், விசாரித்த வரையில் சோனாவிடம் பணமில்லை என்றே சொன்னார்கள். அதுவுமில்லாமல் பிரபுவின் அடுத்தப் படம் பெரிய பட்ஜெட் படம். இதற்கான பணத்தை சரணால் ஏற்பாடு செய்ய முடியும்,(இன்னும் பல சொத்துக்கள் கைவசம் இருப்பதால்), சோனாவிடம் பணமில்லை என்பதை அறிந்த பிரபு,வைபவ் வீட்டிற்கு, சோனாவையும், சரணையும், மற்றும் தன்னுடைய அணி (மகத், வைபவ், பிரேம்ஜி இன்னும் வெகு சிலர், அதில் ஒரு காவல்துறை அதிகாரியும் அடக்கம்) என அனைவரையும் அழைத்தார் . பணத்தை வட்டியுடன் திருப்பி தந்துவிடலாம் என பிரபு நினைக்க சோனா அங்கே வந்தார்.

பிரபு அணி தண்ணிவண்டி அணி என எல்லாருக்கு தெரிந்த விசயம்தான். சோனாவும் மதுக்கும்பலில் கலந்து கொள்ள பேச்சு பேச்சாகவே இருந்தது. சரண் இப்போது குடிப்பதில்லை என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 3 ரவுண்டேலேயே “டேய் பிரபு , பேசி முடிச்சிடுடா” என சரண் பிரபுவிடம் சொல்ல, எல்லார் முன்னிலையிலேயும் சோனா குடுத்த பணத்திற்கு 1.5% வட்டியும் காசோலை அளிக்கப்பட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்ட சோனா அத்துடனே கிளம்பிவிட்டார்.
சோனா போகும்வழியிலேயே பிரபுவை அழைத்து “என்னை ஏமாற்றிவிட்டீங்க, படம் பண்றதுதான் பேச்சு. ஏன் மாறுனீங்க” என கேட்க பிரபு “அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. ஏன் மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க” என கேட்டுள்ளார். இல்லை, படம் பண்ணித்தாங்க, இல்லாட்டா பிரச்சினை பண்ணுவேன் எனச் சொல்ல, பிரபு “பேப்பர்ல ஒன்னுமில்லை, வெறுங்கையில் முழம் போட முடியாது, படம் பாதியில நின்னுச்சுன்னா என் பேர் கெட்டுப்போயிரும், நீங்க சங்கத்துல சொல்லிக்குங்க” என கோபமாய் பேசி வைத்துவிட்டார் பிரபு. இதுதான் நடந்தது.

  டுத்த நாள் காலையில் சோனா புகார் குடுக்கிறார், என்னவென்று “சரண் தன்னிடம் தப்பாக நடக்க முயற்சித்தார்” என .. காவல்துறையினருக்கு தங்களுடைய துறையிலிருந்தே உண்மை தெரியவர மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரணோ, எதிர் புகார் அளிக்கப்போகிறார் என அறிந்த சோனா, நெஞ்சு வலியென மருத்துவமனையில் போய் அனுமதி வாங்கிக்கொண்டார். இது எல்லோரும் அறிந்த விசயம். பெண் எது சொன்னாலும் அம்பலம் ஏறும் என இருக்கும் சமுதாயத்தில், சில லட்சங்களை விட்டெறிந்து சோனாவின் வாயைடைத்திருக்கிறார் SPB. இனி, சோனா சில காலங்கள் அமைதியாக இருப்பார்.

Monday, September 12, 2011

எங்கெங்கும் காதல்

காலை பால் பூத்தில் நைட்டிக்கும் லுங்கிக்கும்,
பேருந்தில் சிலவை headPhoneலும், SMSகளாகவும்,
இடுப்பில் கைவைத்தவுடன் நெளிந்தபடியும்,
சத்தமாகவும், கிசுகிசுப்பாகவும், குழைந்தும், குமறியும்,
சிட்டை கைமாறும்போதும்,
பேருந்து சன்னல்களின் வழியேயும்,
பேருந்து நிறுத்ததில் காத்திருத்தலாயும்,
ஷேர் ஆட்டோக்களின் நெருக்கத்திலும்,
சிறுநீர் கழிக்குமிடத்தில் இதயத்தின் நடுவில்லாமல்
சற்றே ஓரமாய் அம்புவிட்டும்,
கடற்கரை மணலின் சூட்டிற்கு மேலும் தகிப்பாயும்,
ஐஸ்கிரீம் கடைகளில் அனல் கக்கும் சூடாகவும்,
காஃபி கடைகளில் மெதுவாய் சூடு ஆறியபடியேயும்,
வயதைத் தாண்டியும்,
இன்னொருவன் மனைவி மீதேயும்,
புளிய மரத்தின் தோலை செதுக்கியும்,
பள்ளி குட்டைப்பாவாடையிலும்,
அரும்பு மீசை துளிர்விடும் நேரத்திலும்,
IT tagகள் ஒன்றோடு ஒன்று உரசியும்,
இருசக்கர வாகனத்தில் தொத்தியபடியேயும்,
ட்விட்டரில் RT/DMஆகவும்,
ஃபேஸ்புக்கில் Likesஆகவும் புகைப்படங்களாகவும்,
பாட்டியின் நெற்றிச் சுருக்கத்திலேயும்,
தாத்தாவின் சைக்கிள் கேரியரிலும்,
அப்பாவின் திறக்காத ட்ரங்க் பெட்டியிலும்,
எனக்கான பெயரிலும்,
நண்பன் எனக்கு சரக்கு வாங்கி குடுக்கவும்,
சென்னையின் வெப்பத்திலும்,
ஊட்டியின் குளிருலும்,
எங்கெங்கும் காதல்!




பாவம்,
எனக்குத்தான் அமையவில்லை காதலும்
அதற்கான காதலியும்!

Wednesday, August 31, 2011

மங்காத்தா திரை விமர்சனம் - mankatha Movie review

”சார்! படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவரு” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு. ஆனா படமே வேற மாதிரிங்க.

பாஸ்டன்ல, முதல் நாளுக்கு ஒரே காட்சி, அதுவும் ராத்திரி 9:45க்கு, செவ்வாய்கிழமை, இன்னிக்கு எவன் வருவான், அதுவும் ஒரு வேலை நாளுல, அஜித் படத்துக்கு” அப்படின்னு நினைச்சுகிட்டு அரங்கத்துக்குப்போனா ஆச்சர்யம். என்னா கூட்டம் (இங்கேயெல்லாம் 60 பேரே பெரிய கூட்டம்தான்).

அஜித்திக்கு இத்தனை ரசிகர்களான்னு சந்தேகம்தான். வெங்கட்பிரபுவுக்காகவும் வந்திருக்கலாம். “சரக்கடிச்சா இளையராஜா பாட்டு கேட்கத்தோணுதுடா”, சரக்கடிச்சுட்டு அடுத்த நாள் காலையில் “இனிமே சரக்கே அடிக்கக்கூடாதுடா” இப்படி வர்ற வசனங்கள்தான் பலமே. கதையே இல்லாம காட்சி வெக்கிறது இவரோட சாமர்த்தியம். அதேதான் இந்தப் படத்திலேயும். எப்பவுமே ஒரு அணி வெச்சிருப்பாரு, காமெடிக்குனு பிரேம், வைபவ், அரவிந்த்(இப்படி சப்பை பசங்கன்னு இவரே சொல்லிக்கிடுவாரு, நாமளும் சிரிச்சிக்குவோம்).

கெட்டவங்களா, அஜித், வைபவ், மஹத், JP, அர்விந்த் ஆகாஷ், பிரேம், லட்சுமிராய், அஷ்வின். ஆமாங்க படத்தில் எல்லாருமே கெட்டவங்க. படத்தோட கதை, எதையாவது ஒளிச்சி வெச்சி தேடனும்.. அப்ப IPL சூதாட்டம்னு சேர்த்துக்கலாம்- இப்படித்தான் அமைஞ்சிருக்கும் கதை

நாயக சினிமா உலகத்தில் 50 வது படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஜித்தின் தைரியத்தையும் பாராட்டியே ஆவனும்.
”ஆமாங்க, எனக்கு நாப்பது வயசுதான்,வில்லந்தான். குடிச்சு குடிச்சு தொப்பை வந்துருச்சு, முடியெல்லாம் நரைச்சுப் போயிருச்சு, அதுக்காக பணமும் பொண்ணும் வேண்டாமா?” இதுதான் அஜித்தின் கதாபாத்திரம். இந்தா பார்த்துக்க இதுதான் என் தொப்பைன்னு சட்டையில்லாம நிக்கிறது, ரொம்பவே தைரியம்தான். அதுவும் Interval Block க்குன் முன்னாடி செஸ் போர்ட் வெச்சிருக்கு ஒரு திட்டம் போடுறது காட்சி அப்ளாஸ், வெங்கட் அஜித் மேல நம்பிக்கைக்கு அந்த ஒரு காட்சியே போதும். அதுவும் ரத்தமெல்லாம் பச்சை நிறமாய்..:)

நான் ஆக்சன் கிங்தான், நான் பிரேம்ஜி- காமெடியந்தான், நான் JP, வில்லன் - கதாநாயகியோட அப்பாதான், இப்படி நிறைய தான்கள்.

கதைக்கான களம் கிரிக்கெட்.. ஆமாம் மீண்டும் கிரிக்கெட். இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது போல இது Ocean11/12/13 எல்லாம் இல்லை(வேற எதனாச்சும் இருக்கலாம்) IPLல்கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுகிறது,(எப்படி விட்டார்கள் தணிக்கையில்?)அதற்கான பணத்தை ஒரு அணி கொள்ளையடிக்கிறது, அந்த அணியிடமிருந்தும் கொள்ளையடிக்கிறார்கள் இன்னொரு ’அணி’. அவனைப் போடு, இவனையும் போடு, எல்லாத்தையும் போடுறா, இதுக்கு நடுவுல காவல்துறையும் பணத்தையும் கொள்ளையர்களை தேடுகிறார்கள், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பல திருப்பங்களோடு ஆடுவதுதான் மங்காத்தா.

கதாப்பாத்திரங்களை விம்பார் போட்டு விளக்கவே தேவைப்படுது முதல் பாதி. இரண்டாம் பாதியோ, ஒவ்வொரு காட்சியிலும் திருப்பம். ஒவ்வொருத்தரும் தன் பாணியில் சொல்லி ”முடிக்கை”யில்
முடிந்து போகிறது படம். ஙொக்கா மக்கா, இரண்டாம் பாதியில இயக்குனர்தான் தெரியறாரு.  Example: இரண்டு குழுக்கள் அடிச்சுக்கும். வில்லன் கூட்டமும்,  இன்னொரு வில்லன் கூட்டமும்(அதான் நல்லவங்களே இல்லையே) அஜித் குழுவுல 3 பேரு. அவுங்களுக்கு உள்ளேயும் அடிச்சிக்குவாங்க, எதிர்த்த கும்பலையும் அடிப்பாங்க. எவன் எவனை அடிக்கிறான்னே தெரியாது. ஆனா தெளிவா புரியும்(Yuvan's Cliche RR- returns)- Director's Touch- Stunt Touch. Chasingல அஜித் கலக்கியிருக்காரு(இதெலென்னா ஆச்சர்யம்)

”எவந்தாண்டா நல்லவன்?” அப்படின்னு ரசிகர்கள் உச்சதாபியில் கத்தும் போது ”எவனுமே இல்லைடா” என்று சொல்லிருக்கிறார் இயக்குனர்.

முதல் பாதி அஜித்தின் அதகளம், வைபவ்வை நம்பி வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பாதியில் முதல் பாதி. ஒரு டூயட்டும் உண்டு. வாழ்கைடா வைபவ். அதுவும் அஞ்சலியொட டூயட்டுல. டேய் வாழ்வுதாண்டா. அஞ்சலி இந்தப் படத்தில் too Sexy. வைபவ், பீமா விக்ரம் மாதிரியே rough and tough. அப்புறம் அழுவாச்சி, அப்ரூவர். இப்படி நிறைய மாற்றம். நீ ஜெயிச்சிட்டடா வைபவ்.


மஹத், நடிக்க ரொம்ப சிரமப்பட்டிருக்கார்(வரலை). ஆனால் ஆட்டம் பாட்டத்தில் balance செஞ்சிக்கிறாரு உண்மையைச் சொல்லப் போனால், பாடல்களில் மஹத்தும், வைபவும்தான் தெரிகிறார்கள். குத்தாட்டத்துக்கு எது அஜித்னு முடிவு பண்ணியே ஆளை இறக்கிருக்காரு வெங்கட், ஊமைக் குசும்பன்யா நீயு) மஹத்திற்கு ஏன் இத்தனை ரசிகைகள்? திரையரங்கில் அவருக்கென தனி ஜொள் ஆறே ஓடுது. கேட்ட இசுமார்டா இருக்கானாம். நடிக்க வரலையேன்னு கேட்ட பொண்ணுங்க சொல்லுது அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்களாம். அரவிந்த் ஆகாசுக்கு பெரிய கதாபாத்திரம், குடுத்த காசுக்கு சரியா கூவியிருக்காருபா. அஷ்வின், பரவாயில்லை ராசா, முன்னேறிடுவே, தனியா தேடுப்பா.

ஜெயப்பிரகாஷ், வழக்கம் போலதான் (ரகுவரன் இல்லையென்ற குறை தீர்ந்தது). திரிசா, வருகிறார், ஆடுகிறார், கொஞ்சுகிறா, அழுகிறார். அவ்வளவுதான். ஆண்டிரியாவுக்கோ அதிலும் பாதிதான்.



லட்சுமிராய் ஆரம்பம் முதல் கடைசி வரை, ரொம்ப கொஞ்சம் துணியோட வந்து போறாங்க. ரெண்டு பாட்டுல செம ஆட்டம் (அம்மணி, தோணி ஏன் உங்கிட்ட Boldஆனாருன்னு இப்பத்தான் தெரியுது). சொல்லிக்கொள்ளும்படியான வேடம்தான்.  வழக்கம்போல பிரேம்ஜி நகைச்சுவைக்கு உத்தரவாதம். பல படங்களில் பார்த்து பார்த்து சலிச்சுப் போன கதாபாத்திரம்.வசனங்கள்(அடுத்தவங்களுதுதான்) பேசியே தப்பிச்சிக்கிறாரு.(பெரியப்பா பாட்டும், அடுத்தவங்க வசனமும்தான் பிரேம்ஜி.. போன படத்துல “கண்கள் இரண்டால்” இந்தப் படத்துல “நேத்து ராத்திரி அம்மா”)

குறைகள்: மொக்கையா ஒரு காவல்துறை அதிகாரி இறந்து போவது, அதுக்கு விளக்கம், அதைவிட மொக்கை. பம்பாயில் எல்லாருமே தமிழ் பேசுறது, ஒரே தெருவில் இருந்தாலும் காவல்துறை மெனக்கெட்டுத் தேடுவது, அஜித் என்பதால், காவல்துறை அதிகாரி என்றாலும் மொத்தமாக எல்லாரும் நம்புவது(நாமளும்தான்), பிரேம்ஜியின் Clicheகள்(போதும்யா சலிக்குது). மொக்கை சீனுக்கும், ரத்தத்துக்கும் திரை போட்டு ஏன் மறைக்கிறது.

இசை : யுவன் 30% (Cliche in some scenes from Goa, Saroja). யுவனில்லைன்னா நாறியிருக்கும். அத்தனை chasing, அத்தனை வசனம். fillup பண்ண வேணாமா?

ஒளிப்பதிவு: சக்தி சரவணன் 30% அதுவும் கடைசியா அர்ஜூனை காட்டும் போது ஒரு லோ ஆங்கில் வருமே. ஷ்ஹ். பின்னிட்டீங்க சார். ஏகப்பட்ட கட் ஷாட்ஸ், இல்லாட்டா ரிச்னெஸ் வராதுல்லை.

ரஜினி பாணியில் அஜித். ஆமாங்க, இப்படி இயக்குனரிடம் சரண்டர் ஆவறது நமக்குத்தான் நல்லது. விஜய் சார் கொஞ்சம் யோசிங்க.

அர்ஜூன், கிடைத்த இடத்தில் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார். அதுவும் இறுதிக்காட்சியில். Welcome Back Action King. அர்ஜுன் அஜித்தை “தல” என அழைப்பதும், அஜித் அர்ஜூனை ”வாய்யா ஆக்சன் கிங்கு” என்று கிண்டலாவே கூப்பிட்டுக்கிறதும் ரசிக்க வைக்கிறது. விஜய் படம் கூட வருதுங்க. சந்தானம், ரஜினி, கமல், சாம் ஆண்டர்சன் என எல்லாவிடத்திலேயும் சொல்லியடித்திருக்கிறார்கள். கைத்தட்டல் அள்ளுகிறது. அஜித் திட்டமிடும் போது வீடு முழுக்க அஜித்களும், ”நீ நான்” பாடலில் வரும் Computer Graphicsம் அட போட வைக்கிறது.

அஜித்திற்கு தேவைப்பட்டது ஒரு ஹிட், 50 வது படமும் நல்ல படமா இருக்க வேண்டும். ரெண்டுக்கும் ஒரே டிக் மங்காத்தா.

என்னோட மதிப்பெண் 7.5/10

Pics: Thanks to India Glitz(Online media Partner)

Thursday, August 25, 2011

எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் - தமிழ்மணம் என்ற திரட்டி

இந்தப் பேட்டி மறைந்த அண்ணன் சிந்தாநதி பதிவிலிருந்து மீள் செய்யப்படுகிறது. Blogspirit எந்தக் காலத்திலேயும் மூடப்பட்டும் என்ற நிலையுள்ளதால் அவருடைய இந்த வரலாற்று சிறப்புமிக்க பேட்டியை மீள் பதிவாக்குகிறேன்.
நன்றி: காசி

கே: தமிழ்மணம் என்ற திரட்டி உருவாக்கப்பட்டபின் பதிவர்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

மகத்தான வரவேற்பு இருந்தது. பலரும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்தார்கள். மாலன் திசைகள் இதழில் தலையங்கமே எழுதிப் பாராட்டினார். பலரும் என் பதிவுகளின் மறுமொழியூடாகவும், தனிமடல் வழியாகவும் பாராட்டி வரவேற்றிருந்தார்கள். ஒரேயடியாக 'வாழ்நாள் சாதனை' என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியவர்களும் உண்டு்:-) இது பற்றிய அந்தச் சமயத்தில் எழுதப்பட்ட இடுகைகளை நேரடியாக வாசிப்பதே இதற்குச் சரியான பதிலாக இருக்கும். (கீழே பார்க்கவும்)


கே: எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும். தமிழ்மண அனுபவத்தில் அப்படியான அனுபவங்கள் பற்றி?

முதலில் 'எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும்' என்பது சரியா?. 'ஏன், எதிர்ப்பு ஒன்று இருந்தே ஆகவேண்டுமா? இது என்ன வக்கிர சிந்தனை?' என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய அனுபவம் நீங்கள் சொல்வது சரியென உணர்த்துகிறது. எதிர்ப்பு இருந்தது, வெளிப்படையாக அல்ல, நீறுபூத்த நெருப்பாக! ஏற்கனவே இணைய இதழ்/குழுமங்கள் வாயிலாக இணைய ஊடகத்தையும் வழமையான தமிழ் ஊடகச் சூழலைப்போல மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த வெகு சிலருக்கு மட்டுமே தமிழ்மணத்தின் வரவு எட்டிக்காயாய்க் கசந்தது. மற்றபடி எல்லாரும் மனதாரப் பாராட்டி வரவேற்றார்கள்.


இந்த எதிர்ப்புணர்வு உள்ளுக்குள்ளேயே வளர்த்தெடுக்கப்பட்டுத் தமிழ்மணம் பயனுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலான அரசியல் சமூக நிகழ்வுகளில் (உ-ம். சங்கராச்சாரியாரின் கைது) வழமையான 'நாகரிக ஊடக உலக'த்தைப் போல அல்லாமல் எவ்வித ஒளிவு மறைவும் பாசாங்கும் இன்றி விமர்சனங்களும் விவாதங்களும் நடப்பது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைக் கிளப்பியது. இதற்கெல்லாம் மேடை போட்டுக் கொடுத்தது என்ற வகையில் அந்த எதிர்ப்பெல்லாம் தமிழ்மணத்தின் மேல் பாய்ந்தது. (தங்கள் ஆட்களால்) கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்களையே பார்த்து வந்த இவர்கள் ஏதோ தமிழ்மணமே அப்படியான எழுத்துக்களை வேண்டி விரும்பி வெளியிடுவது போன்று நினைத்துக் கொண்டதும் வேடிக்கை. 'இது தானியங்கி, எல்லாக் கருத்துகளையும் வடிகட்டாமல் காட்டுகிறது' என்பது போன்ற அறிவார்த்தமான உண்மைகளை உணருவதற்கு, அவர்கள் மேலாண்மைக்கு ஏற்பட்ட பங்கமும், அவர்களின் புனித பிம்பங்கள் சாதாரணர்களாகிப்போனதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தடையாய் இருந்தன.

தமிழ்மணத்தின் இருப்பையும் பணியையும் மறுப்பது, சிறுமைப்படுத்துவது என்று தொடங்கி, போலி விவகாரம் போன்ற சர்ச்சைகளில் தமிழ்மணத்தின் பக்கச்சார்பற்ற சாத்தியத்துக்குட்பட்ட நிலையைப் புரிந்துகொள்ளாமல் சாடுதல் என்று நீண்டது. இதன் முத்தாய்ப்பாகத்தான் 2005 அக்டோபரில் நடைபெற்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகள். இவற்றின் ஊடே 'தமிழ்மணத்தை மூடிவிட்டுப் போயேன்' என்ற வசைகளும் பலமுறை வைக்கப்பட்டன. தமிழ் வலைப்பதிவுகளைச் சிறுமைப்படுத்துவதையும் குழுமங்களில் வாசிக்கக் கண்டிருக்கிறேன். மாற்று ஊடகமாகத் தமிழ்மணம் ('தமிழ் வலைப்பதிவுகள்' அன்று பெரும்பாலும் 'தமிழ்மண'மாகத்தான் இருந்தது எதிர்ப்பாளர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை) வளர்வது எவருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களால்தான் இந்த 'மூடிவிட்டுப் போயேன்' சொல்லமுடியும் என்பது புரிந்ததால், இந்த ஒரு காரணத்துக்காகவே இதை என்றும் மூடிவிடக்கூடாது என்று உறுதி பூண்டேன்.

என் பின்னணியையும் இந்த எதிர்ப்பாளர்கள் பின்னணியையும் பார்த்தால், நான் இணையத்துக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகள், பத்தாண்டுகள் முன்பிருந்து இவர்கள் தமிழ் இணைய சூழலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். நான் தமிழ்மணம் வெளியிடும்போது தமிழிணையத்தில் இயங்கத்தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆக, 'எங்கிருந்தோ வந்தான், இதைச் சாதித்தேவிட்டான்' என்ற பொறாமையும் இவர்களில் சிலருக்கு இருந்திருக்கலாம் என்று இன்று தோன்றுகிறது. இவர்களோடே அனுபவத்தால் பாடம் கற்ற நீண்டநாள் தமிழிணைய வாசிகள் பலரும் அவ்வப்போது அறிவுறுத்தியதற்கும் ஆதரவளித்ததற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

கே: நீங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, வளர்த்து விட்ட தமிழ்மணம் இப்போது உங்கள் கையில் இல்லை. இந்த முடிவு எதனால் எடுக்கப் பட்டது?

முதல்கட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து அவற்றுக்குச் சரியான பதிலாக தமிழ்மணம் இரண்டாம் பதிப்பு (கிட்டத்தட்ட இன்று காணும் வடிவம், ஆனால் பல புது அம்சங்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன, அதற்கு உழைக்கும் நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்) வெளியிட்டு, அதுவும் பெரும் வரவேற்பினைப் பெற்றது. என் தொழில்/வாழ்க்கை சம்பந்தப்பட்ட தேவைகள் தொடர்ந்து இதில் ஈடுபடுவதற்கு சவாலாக இருந்தபோதும் விடாப்பிடியாகத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.முதல் பதிப்பிலிருந்தே உதவிய நண்பர்கள் செல்வராஜ்/மதி கந்தசாமியோடு, இளவஞ்சி/பிரகாஷும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

ஆனாலும், முறையற்ற தாக்குதல்கள், கனவான்களின் அவதூறுகள், தமிழ்மணம் 'இந்திய இறையாண்மைக்கு எதிரான திராவிட/தமிழ்-தேசியக் குரல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது' என்ற இட்டுக் கட்டப்பட்ட கருதுகோள் காரணமாக தூற்றல்கள், அவற்றுக்குப் பெருங்கனவான்களின்/ கனவாட்டிகளின் மறைமுக ஆதரவு, 'எது நடந்தாலும் எனக்கென்ன?' என்று மெரினா மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்ட பதிவர் பெருமக்கள் என்று எக்கச்சக்கமான எதிர்மறை நிகழ்வுகள் என்னை 'போதும், போய் உன் வாழ்க்கையையும் தொழிலையும் பார்' என்று துரத்தின. இவையே தமிழ்மணத்தை நான் தொடர்ந்து நடத்தாததற்குக் காரணம். இந்தக்காரணிகள் பெரும்பாலும் இன்னும் மாறாத பொழுதும், இன்று தங்கள் பொருளையும், உழைப்பையும் செலவிட்டுத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து நடத்தும் டி.எம்.ஐ. நண்பர்களைப் பார்க்கும்போது ஒரு பக்கம் வருத்தமாயும் மறுபக்கம் பெருமையாயும் உள்ளது.

கே: தமிழ்மணம் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு எற்பட்ட பயன்கள் என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

தமிழ்மணம் தவிர்த்தும் வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குப் பலரும் தனியாகவும் கூட்டுழைப்பிலும் பலதைச் செய்திருக்கிறோம். தமிழில் எழுதலாம் வாருங்கள் வலையில் பரப்பலாம் பாருங்க என்ற என் கட்டுரைத்தொடர் படித்து வலைப்பதிக்க வந்தவர்கள் பலர். ஆனாலும் தமிழ்மணம் மூலம் தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குக் கொடுத்த உத்வேகம் இன்னும் பலமானது. சில வரிகளில் சொல்வதானால்:

வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.
வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.
வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.
மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.
தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.

'இந்தி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறைப்படுவதே 'இந்திய மொழி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறை கொள்வது (Hindi=Indic, பார்க்க: Bhasha Blogs: Indic Blogs in the Indian Blogosphere) என்றாகி விட்ட சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் முதன்மையான ஒரு நிலையை அடையத் தமிழ்மணம் சிறப்பான பங்காற்றியுள்ளது. பார்க்க: http://www.myjavaserver.com/~hindi/

(கீழே கடைசிப் பத்திகள் சென்று பார்த்தால் இந்தப் படம் தெரியும்)

முதன்முதலாக ஒரு தமிழ்த் தளத்தை வியாபார ரீதியாக விற்பனை செய்ய முடிந்தவர் நீங்கள் தான் என்று கூறப்படுவது பற்றி?

இருக்கலாம், எனக்குத் தெரியாது. இப்படி ஒரு செய்தி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதில் விற்பனையில் என்னுழைப்புக்காக, சிந்தனைக்காக என்று நான் பெற்றுக்கொண்டது நயாபைசாவும் இல்லை. தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு என் நேரத்தை செலவிட முடியாது என்று புரிந்தபோது, ஆர்வக்கோளாறு காரணமாக சில நிரலாளர்களைச் சம்பளத்துக்கு வைத்து, இடம், கணினி, இணையத்தொடர்பு என்று ஏற்படுத்தி அவர்களுக்காகச் செலவு செய்த பணம்தான் நான் பெற்றுக்கொண்ட விற்றுமுதல்! தமிழ்மணத்துக்காக நான் செலவிட்ட நூற்றுக்கணக்கான மணி நேரங்களை என் தொழிலுக்காகவோ, குடும்பத்துக்காகவோ, குறைந்த பட்சம் ஒரு சாதாரண வலைப்பதிவனாகவோ செலவிட்டிருந்தேனானால்கூட:) நான் அடைந்திருக்கக்கூடிய பலனை(?) எண்ணிப் பார்த்தால் ...


சமீபத்தில் பதிவுகளை வாசிக்கவும் மீண்டும் வலைப்பதியவும் ஆரம்பித்துள்ளீர்கள். புதிய பதிவர்களில் நம்பிக்கையளிப்பவர்களாக தோன்றும் சில பதிவர்கள்?

வாசிக்க ஆரம்பித்திருந்தாலும் இன்னும் புதிய பதிவர்கள் அதிகம் பேரை வாசிக்கவில்லை. இந்த நிலையில் சுட்டுவது, அடையாளம் காட்டுவது எல்லாம் சரியாக இருக்காது எனவே பட்டியலிட இயலவில்லை. ஆனால், புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்' என்ற வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.:)

தமிழ்மணத்தின் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கிறதா?

முழுதும் இருக்கிறதென்றும் சொல்லமுடியவில்லை, இல்லையென்றும் சொல்ல முடியவில்லை. பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படுள்ளன. ஏற்கனவே இருப்பவற்றில் சில வழுக்கள் களையப்படவேண்டி இருக்கின்றன. புதிதாய் வலைப்பதிக்க வருபவர் செய்யவேண்டிய செயல்களை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். சொல்வது எளிதாய் இருந்தாலும், தன் நேரத்தை செலவிட்டு மூளையைப் பயன்படுத்தி இதில் ஈடுபட இங்கே கிடைக்கும் உத்வேகம் இன்னும் போதாது. எனக்காவது பேர்(?) கிடைத்தது. இன்று தமிழ்மணத்துக்காக பங்களிக்கும் நண்பர்களுக்கு அதுவும் இல்லை. கைக்காசையும் போட்டு, உழைப்பையும் போட்டு, வசவுகளையும் வாங்கிக்கொண்டு, அவர்கள் இத்தனை செய்வதே பெரிது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

---------------------------------------------------------------------------------

இந்தப் பதிவுக்கான காரணம், பலவுண்டு, அடுத்த கட்டம் அடுத்த கட்டம் என்று சொல்லி முற்றிலுமாக நாம் அழித்தது இப்போ இருக்கும் கட்டத்தைத்தான். இன்னொரு பதிவுல அதைப் பத்தி பேசலாம்.

2004ம் ஆண்டு Aug-24ல் முதல் பதிவு எழுதினேன். இன்றோடு 7 ஆண்டுகள் ஆகிறது.. தமிழ்மணம் இல்லாவிட்டால் இந்த நிலை எட்டியிருக்க இயலாது. அதனால்தான் தமிழ்மணத்தையும் அண்ணன் காசியையும் சிறப்பிக்க ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். காசி பேட்டி என்றால் வர மாட்டார். அதான் மறுபதிவு.

எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். உங்களின் மேலான அன்புக்கு எனது நன்றிகள்!

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)