Thursday, January 31, 2008

சில மேற்'குறி'யீடுகள்

வலைப்பூவில் இன்று படித்தது...கவிஞர் நாதாரி யின் ஒரு கவிதை..

ILA(a)இளா said...
சார், இந்த மாதிரி மலம், கழிவுன்னு இல்லாம கவிதை போட முடியாதுங்களா? நல்ல வார்த்தய போட்டு கவிதை எழுதினா நல்ல கவிதை வராதுங்களா? எனக்கு இந்த கவிதையின் கரு பிடிச்சு இருந்தாலும், கையாளப்பட்ட வார்த்தைகள் பிடிக்கலைங்க. இந்த மாதிரி கவிதைகள் பெரும்பான்மை மக்கள் விரும்புறது இல்லீங்க. இது உங்க பதிவு நீங்க கவிதை போடலாம், எடுக்கலாம். உங்க உரிமை,ஏன்னா உங்க பதிவு இது. நாளைக்கே நாங்களும் பதிவை படிக்க வரனும், செல்லான்னா இப்படித்தான் கவிதை போடுவார்ன்னு நினைக்க வெக்காதீங்க.
July 17, 2007 6:42 PM
OSAI Chella said...
இளா, எதிர் அழகியல் பற்றிய உங்கள் புரிதல் போதவில்லை என்று நினைக்கிறேன். சுகுணா திவாகரின் பதிவுகளில் தேடினால் கிடைக்கும். மற்றபடி அக்கவிதை அவரின் இயல்புநடையிலேயே எனக்கு மிகவும் பிடிக்கிறது. அவர் ஒன்றும் தென்றல் வீசும் மாளிகை மாடத்தை பற்றி இங்கு எழுதவேயில்லை இளா. அப்படி இருந்தால் உங்கள் அழகியல் வெளிப்படிருக்கும்! அது சரி இம்மதிரிக்கருத்துக்கள் கொண்ட ஒரு அழகான கவிதையை வைரமுத்துவிடமோ வாலியிடமோ இருந்து காண்பியுங்களேன் பார்க்கலாம். அவர்களின் அ'ல'கை!!
July 17, 2007 7:31 PM ILA(a)இளா said...
எனக்கு புரிதல் எல்லாம் தெரியாதுங்க, படிச்சா நல்லா இருக்கான்னு மட்டும்தான் சொல்லத்தெரியும், இதுக்கு எதுக்கு வாலியையோ, வைரமுத்தையோ இழுக்கனும்? ஒத்துக்கிறேங்க, உங்க அளவுக்கு கவிதை அறிவு எனக்கு இல்லே. ஆனா எனக்கு இந்த கவிதை அருவருப்பாதான் இருந்துச்சு, இன்னும் இருக்கு. இதுக்காக என்னை கவிதை அறிவில்லாதவன்னு சொல்லிக்குங்க, வழக்கம் போல ஹிஹின்னு போட்டுட்டு போறேன், அருவருப்போட..


//எதிர் அழகியல் பற்றிய உங்கள் புரிதல் போதவில்லை என்று நினைக்கிறேன்//இப்படி மலம் கழிவுன்னுதான் எழுதினாதான் எதிர் அழகியல் புரிய வெச்சதுக்கு நன்றிங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லீங்க.----------------------------------------------------------------------------------

நான் : .... எதிர் அழகியல் பற்றியும் சொல்லி இருக்கலாம். தமிழ்ப்பதிவர்களுக்கு ரொம்பவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்குங்க, என்னையும் சேர்த்து.


அய்ஸ்:
இளா

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை சிறிது கடினம்தான்..பழக்கப்பட்ட அல்லது தான் நம்பும் ஒன்றை சிதைக்க இயலாத குறுகிய மனங்களே கவிதையில் ஆபாசம் என ஓ வென்று கத்துகிறார்கள்.புரியவில்லை என புலம்புகிறார்கள்..

-----------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் ஒரு கத்தி மாதிரிங்க. அதை சரியான விதத்தில் வெளிப்படுத்தனும். ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம்தான். வாந்தி எடுக்கிற மாதிரி கவிதை எழுதிட்டு எதிரழகியல்னு சொன்னா.. ஹிஹி எனக்கு அறிவு அவ்வளவுதான்னு ஒதுக்கிக்கலாம். எந்த அழகா இருந்தா என்ன? பெத்தவங்ககிட்ட வாசிச்சு காட்டுற மாதிரி இருக்கனுங்க. அதனால சொல்றது என்னான்னா "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று". கட்டற்ற சுதந்திரம் இருக்கு. அதை நல்ல முறையில பயன்படுத்திக்க வேணாம்.
பதிவுலக எதிரழகியலும் பொடலங்காயும்.. தூத்தெறி

Wednesday, January 16, 2008

இந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?

  1. மாண்டாட்டு- -பலூன்
  2. தம்பூச்சி- அம்மாயி-அம்மாவின் அம்மா
  3. பெளபெள- டைனோசர்
  4. அப்பா ஒய்- அப்போய்
  5. டாப்டாப்- மடிக்கணினி
  6. மானா-வேண்டாம்
  7. பாச்சு- பாஸ்(சிவாஜி)
  8. பியூவ்ன்- போ
  9. பூவ்-போ
  10. ச்சுச்சு-சிறுநீர்
  11. ஆயி-லாரி/ஆயி
  12. கூக்கு-கோக்
  13. காயி-கோழிக்கறி
  14. பூனு-பேசி
  15. கவுஸ் -கையுறை
  16. பீனு-1-ஒபன்
  17. பீனு-2-பேனா
  18. ஊய்யா-சூர்யா
  19. ஐயா-இளா
  20. மிம்மீ-மம்மீ
  21. டாட்லி-டாடி
  22. பீயா-பீட்சா
  23. ட்டாலர்-ஸ்ட்ராலர்
  24. கோஸு-க்ளோஸ்
  25. சாக்கு-சாக்ஸ்
  26. கீய-கீழே
  27. யாக்-உவாக்
  28. சூப்ப-சூப்பர்
  29. ட்ரெக்கு-ஷ்ரெக்
  30. போயிசு-போலீஸ்
  31. உன்னிஉன்னி-ஆம்புலன்ஸ்லிருந்து வரும் சத்தம்
  32. அக்கு -கடி
  33. ஈபா-ஐ பாட்
  34. பாட்டா-பாட்டு
  35. ஈமோ-ரிமோட்
  36. பீப்ப-பேப்பர்
  37. புர்ஸூ-பெரிசு
  38. உய்யி-ஆகாய விமானம்

இன்னும் நிறைய இருக்குங்க, இவ்ளோதான் இப்போ ஞாபகத்துக்கு வருது. பின்னூட்டத்துல சொல்லிடறேன் இல்லைன்னா இதுலையே சேர்த்துடறேன்.

இந்த வார்த்தைக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியும், உங்களுக்கு தெரியலைன்னா ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளரை பாருங்க.

மேலே இருக்கிற அத்தனை வார்த்தைகளும் எங்க வீட்டு வாரிசு சொல்லுற வார்த்தைங்கதாங்க. ஒவ்வொரு வீட்லையும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் பொதுவா ஒரு மொழி இருக்கும், இது அடுத்த வீட்டு மக்களுக்கு தெரியறது ரொம்ப கஷ்டம். மக்கள் யாராவது எங்க வீட்டுக்கு வந்தா ஏதோ வேற மொழி பேசுற ஊர்ல இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வந்துரும். இதுவும் ஒரு மொழி திணிப்பு தாங்க, ஆனா சுகமான திணிப்பு. என்ன பண்ண எல்லாம் ஒரு வட்டம்தான். போக போக அந்தக்குழந்தையே பல மொழி கத்துக்கிட்டு நம்மகிட்டயே படம் காட்டுவாங்க. அப்போ அந்த பெரிசான குழந்தைக்கே இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆனா அப்பா, அம்மாவுக்கு மட்டும் காலம் முழுசா இந்த வார்த்தைகள் காதுல கேட்டுகிட்டே இருக்கும். நாம் எடுத்து கொஞ்சுறபோது இருக்கிற ஒரு பாசம் பெரிசானா கம்மியாயிடலாம். அப்போ இந்த வார்த்தைகளும், நெஞ்சில் வாங்கிய மிதிகளும், கையில் துடைத்தெடுத்த எச்சிலும்தாங்க சுகம்..

"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளா தவர்'' (குறள்-66)"

Sunday, January 13, 2008

சில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு


(1) அகாடியா-மைனேவுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு பயணம் சென்ற பொழுது எடுத்த படம்.
நேரம்-தமிழில் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம், நடுநிசியைத்தாண்டி..




(2) இதுவும் அதே இடத்தில் விடியற்காலை எடுத்த படம். அப்போதும் தமிழில்தான் சிந்திப்பதைப்பற்றி சிந்தித்திக் கொண்டிருந்தோம்.


(3)கார்னிங்- கண்ணாடி மாளிகையில் எடுத்த படம். கண்ணாடியிலேயே ஒரு அலங்காரம்..


(4) கார்னிங்- கண்ணாடி மாளிகை.

நிர்மூலம் உடையின் நிர்வாண

மென்றால்

நிர்வாணமும் ஒரு வகையில்

நீர்மூலமே.


(5) என் வீட்டில் ஒளி கொடுக்கும் இன்னொரு சில்லு. சுச்சியப் போட்டா வெளிச்சம்வரும் சில்லு.

(6)என் வீட்டு குளியறையில் இருக்கும் காலி குடுவை.
குளியறையிலே இருந்தாலும்
வெளிச்சத்தில் மட்டுமே
நிதமும் குளிக்கிறது..
காலியாய் இருப்பதால்
தினமும் நிரப்புகிறேன்
நீராவியால்...

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)