Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Thursday, March 14, 2013

இணையவாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?

"இணையவாதிகள் கொதிக்கிறாங்க, இவுங்க சமூகத்துல இருந்து தனியாத் தெரியறாங்க. சமூகத்துக்கும் இவுங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
அப்படின்னு ஒரு நண்பர் சொன்னாரு. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.


தினமும் நமக்கு பேச, எதாச்சும் ஒன்னு புதுசு புதுசாக் கிடைக்கனும். அதாங்க, ஏதாவது ஒரு வீட்டுக்கு முன்னாடி, விசாலமான திண்ணையில் பெருசுங்க உக்காந்துகிட்டு, வெத்தலை இடிச்சிகிட்டே ஊர்க்கதை பேசுவாங்க இல்லை.. அட, அதுவுமில்லைன்னா, ஓசியிலோ இல்லை கடன் வெச்சோ டீ குடிச்சாலும், ஒரு பத்தி விடாம பத்திரிக்கையைப் படிச்சிட்டு வம்பளப்பாங்களே டீக்கடை பெஞ்ச், இப்படி இருக்கிற இன்னொரு இடம்தாங்க இந்த இணையத்துல இருக்கிற சமூக வலைதளங்கள். சினிமா விமர்சனமோ, கவர்ச்சி நடிகைகளின் கல்யாணமோ, ஈழப்பிரச்சினையோ, ஏதாச்சும் ஒன்னைப் பேசிக்கிட்டே இருப்பாங்க. தினமும் எதாவது ஒன்னு சூடாகிடும். மாணவர்கள் பிரச்சினையைப்பத்தி ரத்தம் கொதிக்கிற மாதிரி பேசிட்டே இருப்பாங்க. பாலாவோட பரதேசி டீசர் வந்தவுடனே, அதை மறந்துட்டு பாலாவை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் புதுசா வந்த போப் பத்தி, இப்படி தடம் மாறிட்டே இருக்கு இணையவாதிகளின் பேச்சு.


" Loneseoவின் Rhinocerros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் முக்கியமான ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் incongruity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா, ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!"

மேலே இருக்கிறதைச் சொன்னது, கணையாழியின் கடைசிப் பக்கங்கள்ல - ஆகஸ்ட் -1973ல் சாட்சாத்  வாத்தியார் சுஜாதா சொன்னதேதான். அப்ப இருந்த நிலைமைக்கு அவர் சொன்னது, திண்ணைப்பேச்சாளர்களுக்கோ, டீக்கடை பெஞ்ச் தேய்ச்சவங்களுக்கோ. ஆனா இன்னிக்கு அதே இணையவாதிகளுக்கும் பொருந்துது. இதுல இருந்து என்ன தோணுது... இருங்க இருங்க இன்னொன்னையும் சொல்லிடறேன்.

எஸ்.வி. சேகர் ஒரு நாடத்துல சொல்லியிருப்பாரு, "பரபரப்பான செய்தின்னா, முதல் ரெண்டு நாள் முதல் பக்கத்துலையும், அப்புறம் ரெண்டு நாளைக்கு 2ம் 3ம் மூன்றாம் பக்கத்துலயும், ஒரு வாரங்கழிச்சுப் பார்த்தா கடைசிப்பக்கத்துலேயும், அடுத்த வாரம் அந்தச் செய்தியே இல்லாமையும் போயிடும்"னு நாளிதழ்களை பத்தி கிண்டலாச் சொல்லியிருப்பாரு.


தையேத்தான் இணையவாதிகளும் செய்யறோம். இதுல ஒரு வித்தியாசமும், இல்லை. அதனால Moral of the Story is நாம மாறவே இல்லை. பேசுறதுக்கான இடம்தான் மாறியிருக்கோ ஒழிய, முறை மாறவேயில்லை.

Thanks: Img From Dinamalar- Tea Kadai Bench

Thursday, January 31, 2013

எங்கே சென்றீர் எமை விடுத்து?


ந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் "சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது" என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் "நண்பர் என அழைத்தீர்கள் என்றுதான் இங்கு வந்தேன். உங்களிடம் யாசகம் கேட்க அல்ல. என்று நாங்கள் வேண்டாம் என்று எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். உம் உதவி எமக்குத் தேவையில்லை. விருந்துக்கு என்று அழைத்து என்னை அவமதித்து விட்டீர்கள், எனவே இந்த விருந்தில் இருந்து வெளியேறுகிறேன்" என உடனடியாக கைகழுவி வெளிநடப்பு செய்கிறார் கண்ணியத் தென்றல்.

நேருவை நம்ப வைத்து பின்னர் கழுத்தறுத்து இந்தியாவிற்கு எதிராக சீனா போர் துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை. இந்திய இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேவை என்று அழைப்பு விடுக்கின்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன். அழைப்பைக் கண்ட அடுத்த நொடி தனது இளம் மகனை அழைத்துப்போய் பரங்கிமலை ராணுவ கேம்பில் ராணுவத்திற்கு சேர்த்துவிட்டுத் திரும்புகிறார் பெருந்தகை காயிதேமில்லத்.

பாராளுமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவின் மீதான விவாதம். தன் தாய்மொழியான தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கண இலக்கியச் சிறப்புகள் ஆகியவற்றைத் தன் அழகுமொழியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து "இந்திய துணை கண்டத்தின் ஆட்சிமொழியாக இருக்கும் தகுதியும்,உரிமையும் தன் தாய்மொழி தமிழுக்கே உண்டு" என்று முழங்கி இந்தியை தேசிய மொழியாக்கும் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறார் தலைவர் இஸ்மாயில் சாஹிப்.

ஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கண்ணியத் தென்றல் வெளியிட்ட அறிக்கை கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணாவின் கருத்தைக் கேட்கின்றனர். " அவரது அறிக்கையை நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இஸ்ரேல் முக்கியமா? இஸ்மாயில் முக்கியமா? என்று கேட்டால் நான் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன்! எனவே அவர் எது சொல்லி இருந்தாலும் அதுதான் என் கருத்து" என்று பதிலுரைக்கிறார் அவரது ஆத்ம நண்பர் அறிஞர் அண்ணா.

--00--

பெருந்தகையே! பிறப்பால் இந்தியனாக, இனத்தால் திராவிடனாக, தாய்மொழியால் தமிழனாக, மதத்தால் முஸ்லீமாக.... இவற்றில் எது ஒன்றுக்கும் குறைவைக்காத பெருவாழ்வு வாழ்ந்தவர் நீங்கள்! நீங்கள் மறைந்து 41 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தனக்குத் தலைவனில்லாது தவிக்கிறது, தத்தளிக்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். தலைவன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தன்னைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வழிகாட்டும் தற்குறிகளால் தடுமாறி நிற்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். இனியும் உங்களைப் போல் ஒரு தலைவன் கிடைப்பான் என்ற நம்பிக்கை எமக்கு அறவே இல்லை. இறைவனிடம் கேட்டு நீங்களே எழுந்து வாருங்கள்!!

-------------------------------------------------------------------------------------
ஆக்கம்: புதுகை அப்துல்லா 

Monday, October 1, 2012

28/365 என்ன இங்க சண்டை

கணவன் - கணிணியில் வேலையாய் இருக்க, சமயலறையில் மகள், மனைவியிடையே ஏதோ வாக்குவாதம். 


கணவன்: என்ன இங்க சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்?


மனைவி : அதான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தோம்ல. அதான்.

கணவன்: ஏதோ புஸ்தகம்னு காதுல விழுந்துச்சு, அதுக்கும் மேல ஒன்னும் கேட்கலயே

மனைவி :  இவ்ளோ நேரம் அதைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தோம். இப்ப வந்து என்னான்னு கேட்டா?

கணவன்: கவனிக்கலைம்மா.

மனைவி :  அதான, நாங்க பேசும் போது நீங்க எங்கே கவனிச்சிருக்கீங்க?

கணவன்: வேற வேலையா இருந்தேன்மா. அதான் கவனிக்கலை

மனைவி :  நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு வேற வேலை வந்திரும்ல?

கணவன்: சரி, விடு நான் கேட்கலை.

மனைவி :  அதான? வீட்டு மேல அக்கறை இருந்தா என்ன பேசியிருப்போம்னு கேட்டிருப்பீங்கள்ல?

கணவன்: அக்கறை இல்லாமத்தான் கேட்க வந்திருப்பேனா?

மனைவி :  அக்கறை இருந்திருந்தா முதல்லயே வந்திருக்கமாட்டீங்களா? அதான் இல்லைன்னு தெரியுமே.

கணவன்: ஷ்ஷ்ஷ், நான் கேட்டதுதான் குத்தமா?

மனைவி : ஓ, அப்ப நான் சண்டை போட்டதுதான் குத்தமா?

கணவன்: என்னான்னு தெரியாம நான் எப்படி குத்தம்னு சொல்லுவேன்.

மனைவி : எனக்கு வேறை வேலையில்லாம நாந்தான் உங்க ரெண்டு பேர் மேலையும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்கேனா?

கணவன்: சரி, விடு, எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம்  ....

[மறுபடியும் சிகப்பிலிருக்கும் வரியில இருந்து படிக்கவும்..]

Tuesday, September 18, 2012

23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க குறும்படத்திற்கு(Innocence of Muslims) எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதுல கலந்துகிட்டவங்க 5000க்கும் மேலேயே இருக்குமாம். அதனையொட்டி நானிட்ட ட்விட்டுகள்


  • நேத்துதான் கடவுளே இல்லைன்னு பெரியார் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ஒரு இறைதூதரை கேவலப்படுத்திட்டாங்கன்னு அடிச்சிக்கிறாங்க. #நடுசென்ட்ர்ஸ் பாவமில்லையா? #ட்விட்டர் புலம்பல்
     
  • Most of them never saw the Videos Yet, but they are in Mount Road Now. [அந்தக் குறும்படத்தின் Trailerஐ பார்த்தவர்கள் எத்தனை பேரு இருக்கும்?]

  • நாம எல்லாம் தான் படிச்சவங்க #இன்னொசன்ஸ் ஆஃப்...  

  • ஒன்னு ரெண்டு விசா கிடைச்சிட்டு இருந்துச்சு. இனிமே சலிச்சி எடுப்பாங்க. ஹ்ம்ம்..  


  • சென்னை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டிப்பா அடிதடியாய் முடியப்போவுது.. வெளங்கும் #முஸ்LIM

  • நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வேற,. எந்த கடவுள் வந்தாவது கலவரம் இல்லாம பார்த்துக்கனும், கடவுளே!

  • தடியடியில் ஆரம்பித்து, வாகனங்களைச் சேதப்படுத்துவதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வன் ரகுவரன் மாதிரி அம்மா உட்காந்திருக்க வேண்டிய கட்டாயம்.  

  • KFC, McDonald, MNC மேலேயெல்லாம் கல்லை விட்டெறிஞ்சிருந்திருந்தா சமநிலையாய் ஆகியிருக்குமே 
  • உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே 
  • இப்ப உடைச்ச கண்ணாடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம். சாலையில பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் அமெரிக்கர்களா? 
  • தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்
Pic Courtesy/Thanks: IBN Live

Wednesday, September 12, 2012

20/365 தெய்"Weak"கக் காதல்

  • மனோ நிலை அப்படிங்கிறாங்களே, ஏன் SPB நிலை, யேசுதாஸ் நிலைன்னு இல்லை..? 
 --00o00--
  •  Cat வாக் அப்படின்னு சொல்லிட்டு துணி போட்டுகிட்டு நடந்து வராங்க.. எந்த பூனை துணி போட்டுகிட்டு நடக்குது?
 --00o00--
  • கூடங்குளம், 20 நாட்களில் மின்சாரம் உற்பத்தி தொடங்கும். - மத்திய மந்திரி நாராயணசாமி #டீ தூள் பழசாவே இருக்கே, மாத்த மாட்டீங்களா?
 --00o00--
  •  இளையராஜா - ஐபோன். ஏ.ஆர்.ரகுமான் - அண்ட்ராய்ட் போன். நான் LandLine. எதுல இருந்து Call வந்தாலும் பேசுவேன்.
 --00o00--
  • புல்ஸ்கேப் நோட்டை மாரோட அணைச்சுட்டு வருகிற அதே பாணியைத்தா இப்பவும் பெண்கள் செய்கிறார்கள். ஆனா நோட்டுக்குப் பதில் iPad, Laptop
 --00o00--
  • பிரபாகரன் அறிமுகமாகும் படத்திற்கு பொருத்தமான தலைப்பு “கேப்டன் மகன்”
 --00o00--
  •  என்னுடைய முதல் படத்தில் இருந்தே ****டன் வொர்க் பண்ண ஆசை.- Default Template for Directors.

 --00o00--
  • நமக்கெல்லாம், பெண்கள் கதாநாயகிகளாகவும், ஆண்கள் எல்லாம் காமெடியன்களாகவும் தெரியும் மாநிலம், கேரளம் மட்டும்தான் #ஓணம்
 --00o00--
 

  •  பயத்திற்கும், பாசத்திற்கும் இடையில்தான் ஊசலாடுகிறது அப்பா-மகன் உறவு
 --00o00--
  •  பிரியும் வேலையில்தான் புரிகிறது "நாம இன்னும் கொஞ்சம் அன்பை காட்டியிருக்கலாமோ?" என்று
 --00o00--
  • ஆரம்பத்தில் தெய்வீகக் காதலாக இருப்பதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு தெய்”வீக்” காதலா மாறிடுவதுதானே வழக்கம்

 --00o00--
  •  "இன்னிக்கு சாயங்காலம் என்ன சமைக்கிறது?" - இந்தக் கேள்விக்கு முதல் நிமிசத்தில பதில் சொல்லிட்டான்னா அவன்தான் உண்மையான புருசன்
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் , ஆங்காங்கே நான்  இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது

Monday, September 10, 2012

18/365 கூ"DUNG"குளம்

இந்த ஒரு படமே போதும்,

மக்களின் வாழ்வாதாரத்தை கொன்றுவிட்டு, வேறு மக்களுக்கு வசதி வாய்ப்பளிக்கும் அரசுக்கு வந்தனங்கள்

Thursday, September 6, 2012

13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்

நண்பனின் மகனுக்கு 6 வயது. இன்னொரு நண்பனின் மகனுக்கு 5 வயது. இருவரும் உற்ற தோழர்கள். அமெரிக்காவில் ஒரு குடும்பமே நட்பாய் இருப்பது என்பது அபூர்வம். அதாவது அப்பா- அப்பா, அம்மா-அம்மா, மகன் - மகன்.

மகன்கள் இருவருமே விட்டுக்குடுக்க மாட்டார்கள், அப்பா என்ன சொன்னாலும் “இல்லேப்பா, அவன் சொன்னான் சரியாத்தான் இருக்கும்” என்று சின்ன வயசே ஆனாலும் இருவருக்குமான நட்பு அப்படியாகத்தான் இருந்தது. போன வாரம் வரையில். ஆமாம், ஒரு குடும்பம் For Good இந்தியா கிளம்ப, பசங்களுக்கும் ஒரு குடும்பம் இந்தியா போவதாகச் சொன்னாங்க. பசங்க ரெண்டு பேருக்குமே அதனோட விபரீதம் புரியல, ஊருக்கு போயிட்டு வந்துடற மாதிரி நினைச்சிகிட்டே இருக்காங்க.

போனவாரம், பிரிஞ்சுப் போற குடும்பத்துக்காக, ஒரு Get toghether நடந்துச்சு. எல்லார் முகத்துலையும் கவலை தாண்டவமாடுது. பல வருடங்கள் பழகிய நட்பு, பிரியப் போவுதேங்கிற கவலை. பரிசுப் பொருட்கள் கை மாறுது. ஆனாலும் பசங்க எப்பவும் போல விளையாடுறாங்க, அடிச்சுக்கிறாங்க.

கிளம்புற நேரத்துல, எல்லாருக்கும் கண்ணுல தண்ணீர் வராத குறை, பசங்களுக்கு அது புரியவே இல்லை. “எப்போப்பா அவன் வீட்டுத் திரும்ப வருவோம்?” அப்படின்னு ஒரு பையன் கேட்க பதில் சொல்ல முடியாம அப்பா முழிக்கிறாரு. ரெண்டு பசங்களும், வழக்கம் போல, ”அப்புறம் வரேன், உன்னோட இந்த பொம்மை எடுத்துட்டுப் போறேன், அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைசின்னு.

நான், இந்தப் பசங்களைப் பார்த்துதான் ரொம்ப சோகமானேன். விவரம் தெரியாத வயசுல, ஒருத்தன் பிரிஞ்சு போறான்னு தெரியாம, விளையாண்டு, பை பை சொல்லிட்டுப் போறாங்க. வாழ்வுக்காக எத்தனையோ பேரை பிரியறோம். ஆனா பிரிச்சும் வைக்கிறோம்ங்கிறது எத்தனைப் பேருக்குத் தெரியுது?

நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?

Friday, August 24, 2012

1/365 பதிவுலகத்தில் எட்டு ஆண்டுகள்

இப்ப இந்த 365 பிரபலமாகிட்டு வருது. (இதையே ஒரு தனிப்பதிவா போடணும்). சொக்கன் அவர்கள்தான் ஆரம்பிச்சார்ன்னு நினைக்கிறேன்.

அதனால நானும் ஒன்னை ஆரம்பிக்கிறேன். அதாவது தொடர்ந்து 365நாளும் பதிவு எழுதுறது. முடியுமான்னு தெரியல. சும்மா முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். எதைப் பத்தி எழுதுவேனா? நிஜமாத் தெரியலங்க. என்னை சுத்தி நடக்கிறது, ஓடுறது, பறக்கிறது பத்திதான் எழுதப்போறேன். பதிவுலகம் பத்தி எழுதுவதை நிறுத்தி பல வருசம் ஆனதால, அதைப் பத்தியும் கூட வரலாம். ஒரு காணொளி போட்டுட்டு போறது மாதிரி மொக்கைகளை தவிர்த்துட்டு எழுதறதா எண்ணம். அதாவது சொந்த புலம்பல், பெருமைபீத்தல் இப்படி ஏதாவது ஒரு வருசத்துக்கு எழுதறது. அட இதுவே ஒரு தற்பெருமை பதிவுங்கிறதால, இதுல இருந்தே ஆரம்பிக்கிறேன். 1/365


--00--


பதிவுலகம் வந்து இன்றோடு 8 ஆண்டு காலம் ஆகிருச்சு. ஏற்கனவே பல முறை ஒத்த அலைவரிசை நண்பர்கள் கிடைச்சாங்க, நேரம் போவுது, எங்கே போனாலும் ஒரு நண்பன் அங்கே இருக்காங்க, பொதுவா எங்கேயாவது கூட்டத்துக்குப் போனா ஒருத்தர் வந்து "நீங்கதான் விவசாயியா" அப்படின்னு கேட்கிறாங்க, அப்படின்னு எழுதியாச்சு.
அதனால ஒரே ஒரு நன்றி மட்டும் சொல்லிட்டு அடுத்த வருசத்துக்குப் போயிடறேன்.

--00--

 என் காலத்திலிருந்தே எழுதும் பதிவர்கள் ரொம்ப கம்மியாகிட்டாங்க. கானா பிரபா, கோவி கண்ணன், லக்கி, பெனாத்தல் சுரேஷ், இட்லிவடை, துளசி டீச்சர் இப்படி வெகுசொற்பமே. இன்னும் கொஞ்சம் பேர் அங்கொன்றும் இங்கொன்றுமா பதிவு போடுறாங்க. அப்படித்தான் ஆகும் என்பது நியதி.

மெரிக்கா வந்தப்புறம் பதிவுலகம் தாண்டி அதிக நண்பர்கள் கிடைக்கலை என்பதே நிஜம். போனவாரம் கூட பதிவுலக நண்பர்களைச் சந்திச்சேன். இந்த வாரமும் ஒருவரை சந்திக்கப்போறேன். அப்படி பதிவுலக நண்பர்களே என் வாழ்க்கையில சுத்தி இருக்கிறா மாதிரி ஆகிருச்சுங்க.

இத்தனை நாள் கூடவே இருக்கும் நண்பர்களை [2010ல் ஒரு நண்பர்கள் வட்டம் போட்டேன்(உ.த - அண்ணாச்சி மறந்துட்டேன்) ] அதுக்கு அப்புறம் ஒரு பதிவர்கூட நண்பனா மாறவே இல்லை. இல்லை, பிரமிப்பூட்டும் எழுத்துக்கள் கண்ல படவே இல்லை. ரொம்ப வருத்தம். மூத்தப் பதிவர்கள் எல்லாம்(2009க்கு முன்) கூகிள் +, ட்விட்டர் அப்படின்னு ஒதுங்கிட்டாங்க.




பதிவுலகம் நீர்த்துப் போகலாம், ஆனா இந்தளவுக்கு என்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. சமூக வலைதளங்கள் வந்தபிறகு, பதிவுலகம் மொக்கைகளை தவிர்த்திடுச்சுன்னே சொல்லலாம். ஆனால் பதிவுகளுக்கே சொந்தமான "அனுபவ" கதைகள் ரொம்ப கம்மியாகிருச்சு. கதை, கவிதைகள் கம்மியாகிருச்சு. தொடர்கதைகள் ரொம்ப சொற்பம். சரி விடுங்க, காலம் மாறிட்டே இருக்குல்ல.(நானும் ஒன்னுத்தையும் எழுதலைங்கிறது வேற கதை)

ஆம், 8 ஆண்டுகள் இந்தப் பதிவுலகம், எனக்கு பல நன்மைகளைத் தந்திருக்கு, அதுக்கு நன்றி சொல்லிட்டு 9வது ஆண்டுல அடியெடுத்து வைக்கிறேன்.  நன்றி நண்பர்களே!

Friday, June 29, 2007

விசிலடிச்சான் குஞ்சுகள்!

முதல் நாள் சம்பளத்துக்காக:








மது/மங்கைக்காக-சிற்றின்பம்
(las Vegas)



நடிகருக்காக(Sivaji-Bangalore)




சாதனத்துக்காக(Queue for iPhone a day before)





ஆன்மீகத்துக்காக:


அவனவனுக்கு ஆயிரம் விருப்பம் இருக்கு. உனக்கும் மட்டும் எப்பவுமே மிஞ்சுவது வயித்து எரிச்சல். உனக்காகவே இது இருக்கு.










Thursday, December 15, 2005

தொடர்பு எல்லை

இன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.



நண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.



இந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.



இப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே?



கொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.

அதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாடித்திரையில் கிடைச்சிடுமா, என்ன?

 வருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.



சரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க!

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)