Friday, January 26, 2007

MAY I KNOW YOUR LAST NAME-Part-1

யாராவது சின்னப்பசங்க நம்மள பேரு சொல்லி கூப்பிடும்போது, வரும் பாருங்க ஒரு கோவம். அப்படியே ஆத்திரத்தோட திரும்பிப்பார்த்தா "பேர் வெச்சதே கூப்பிடறதுக்கு தானேன்னு" சொல்லி நமக்கே அல்வா குடுப்பாங்க. தமிழ்நாட்டுல ஆபிசுக்கு வெளியே சின்னவங்க நம்மள பேர் சொல்லி கூப்பிட்டா நமக்கு சுள்ளுன்னு கோவம் வரும். அதையே, ஆபிசுல சுள்ளான் எல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. அப்போ ஒன்னுமே தோணாது. ஏன்னா அது கலாச்சாரம். சரி தெருவுன்னா ஒன்னு, அபிசுன்னா ஒன்னு ஆகிப்போச்சு நம்ம கலாச்சாரம். வெளங்கிரும்.

சரி விடுங்க நம்ம பிரச்சினைக்கு வருவோம் .

இந்த பேர் வெக்கிறதே சிரமமான விசயம். ஜாதி, மதம் இல்லாம, நியூமராலஜினு சொல்ற மக்கள் மனசு நோவாம நமக்கு புடிச்ச பேற வெக்கிறதுக்குள்ள உசுருபோயி உசுரு வந்துரும்ங்க. சரி, நாம் வெக்கிற பேருதானே முழுப்பேரு நெனச்சா அது தப்புங்க. மூணு விதமான் பேரு இருக்குங்க.

முதல் பேரு, நடு பேர், கடைசி பேரு.
ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. ஒருவரோட பேரு முனியாண்டி. அப்பா பேரு ஐய்யன், அம்மா பேரு அம்மா. அப்போ அவருக்கு அம்மா வெச்ச ரூல்ஸ் படி அவருக்கு பேர். A.A. Muniyaandi. அதாவது அப்பா, அம்மா பேர இனிஷியலா வெக்கனும்னு அம்மா போட்ட பகுத்தறிவான சட்டம். அம்மாங்கிறதுனால அம்மா பேர இனிஷியலா வெக்க சொன்னாங்க. நல்ல வேளை தாத்தா இப்ப ஒரு சட்டம் போட்டா தாத்தா பேரையும் வெக்க சொல்லி இருப்பார். நல்ல வேளை அவரு அதையெல்லாம் கண்டுக்கவே இல்ல. தேவையில்லாததுன்னு நினைச்சுருப்பார் போல. பொழச்சோம். வெளிநாட்டுல இந்தப்பேரோடா போனா எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா? Mr. Ammaன்னு கூப்பிடுவாங்க. இது அவுங்க வழக்கம். அதாவது Mr or Miss or Mrs. Last name. இது அவுங்க வழக்கம். Mr. Ammaன்னு கூப்பிட்டா கோவம் வரத்தானே செய்யும். என்ன பண்ண?

உலக நியதிப்படி கடைசிப்பேரு அவரோட குடும்பப்பேரா இருக்கனும். ஆனா தமிழ்நாட்டுல மட்டும் குடும்பப்பேரே இல்லையோ? ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார் அப்படின்னு பேருதான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா குடும்பப்பேர கேள்விப்பட்டதே இல்லை. இது நம்ம தலை விதி.
அப்போ உலக வழக்கம் வேற, தமிழ்நாட்டு வழக்கம் வேற. ஏற்கனவே தமிழ்நாட்டை எந்த வடக்கத்திக்காரனும் மொழியினால இந்தியாவா ஏத்துக்கிறது இல்லே. அதுக்கு என்ன வழி. நான் ஒன்னு யோசிச்சு முடிவு பண்ணி வெச்சு இருக்கேன். உங்களுக்கு தோணினா சொல்லுங்களேன்..
நம்ம மக்களுக்காக ஒரே கடைசி பேர். என்ன வெக்கிலாம்னு சொல்லுங்க். வாங்க, அடுத்த தலைமுறைக்கு ஒரு கடைசி பேர் வெப்போம்
(தொடரும்)

Tuesday, January 16, 2007

இதை வெளியிடுவார்களா?

இதை கண்டிப்பாக வெளியிடுவார்கள். அதுல ஒன்னும் எனக்கு சந்தேகம் இல்லீங்கோ. உங்களுக்கும் இருக்காது. பாருங்க குங்குமம், குமுதம், என்னா பட்டி தொட்டி எல்லாம் இதை வெச்சு என்ன பண்ணப் போறாங்கன்னு.

ஆரம்பத்தில எல்லாரும் தப்பாதான் சொல்லுவாங்க, அப்புறமா இதை விட்டு போவ முடியாதுல்ல, அதான் இவுங்க சிறப்பே. , சரி என்னாத்த தப்பா சொல்லப்போறான் இந்த விவசாயி.

கொஞ்சம் மனசு வெச்சு கீழே போயிதான் பார்க்குறது என்னான்னு....
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#



101-மொய்- வெச்சாங்களே சங்கத்துக்காரங்க

"சங்கத்துல சேர்ந்து என்னாத்த சாதிக்கப்போறே? ஒரு குரூப்பா அலையிற மக்கள் விளங்கினதா சரித்திரமே இல்லை". வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல முதல் பதிவா நான் ரெடி பண்ண படம் வந்தபோது எனக்கு வந்த விமர்சனம்தான் இது .

இது பழசு. புதுசா பார்க்குறீங்களா? படத்தப் பாருங்க மொதல்ல.
இது நம்மோட 101வது பதிவுங்க. 100வது பதிவை விவேகானந்தர் கேட்ட அந்த 100 பேருக்கு சமர்பிச்சது மாதிரி இந்த 101வது பதிவ மொய் வெச்சாங்களே அந்த சங்கத்துக்காரங்க("!@#@) அவுங்களுக்கு சமர்ப்பிக்குறேங்க. 101ன்னாவே நமக்கு மொதல்ல ஞாபகம் வர்ரது மொய்தான். அதுதான் 101வது பதிவு மொய்க்கு சமர்ப்பிச்சாச்சு.

வாரிசுக்கு பொறந்தநாள் கொண்டாட எல்லாரையும் கூப்பிட்டப்ப சங்கத்துக்காரங்களுக்கு மட்டும் ஒரு மடல் போட்டேன். அவ்ளோதான் அவுங்க நான் அழைச்ச அழைப்பு. சூடான்ல இருந்து வந்துச்சு முதல் பரிசு. "மாமா குடுத்தேன்னு சொல்லுங்க இளா"ன்னு என்னை நெகிழ வெச்சவரு நம்ம புலி(நாகை சிவா). அப்புறமா பதிவு போட்டு பெருமை பண்ணினாங்க ராம்/தேவ்.

சாயங்காலம் 5 மணி இருக்கும். எல்லாரும் பார்ட்டி ஹாலுக்கு கிளம்பற நேரம், கதவை திறந்தா முகத்தை மறைச்சுகிட்டு பொக்கே வெச்சுகிட்டு நின்னாரு ஒரு ஆள். வாங்கிப்பார்த்தா, சங்கத்து சார்பா கைப்பு அனுப்பிவெச்ச பூக்களா சிரிச்சு இருந்த சங்கத்து மக்கள் மனசு அதுல இருந்துச்சு. கண்ணுல தண்ணி வந்துருச்சுங்க. பார்ட்டி ஹாலுல வரவேற்புல சிரிச்சபடியே எல்லாத்தையும் "வாங்க வாங்க" சொன்னது அந்த மனசுங்கதாங்க. (பார்க்க படம்)

கொஞ்ச நேரம் கழிச்சு "மாப்ளே வானவில் எஃப். எம்ல மருமவனுக்கு பொறந்த நாளுன்னு சொன்னாங்களே"ன்னு ஒரு அலைபேசி அழைப்பு. அதுவும் சங்கத்து மக்கள் ஏற்பாடாம்.

போங்கய்யா, சங்கத்துல சேர்ந்து எழுதி ஒன்னையும் சாதிக்க வேணாம், இது போதாதா? இன்னிக்கு காலையில் பாலபாரதி சொன்ன மாதிரி, "பதிவுலகத்துல நண்பர்களை மட்டும்தான் நிறைய சம்பாரிச்சு வெச்சு இருக்கேன்" நானும் அந்த மாதிரி நண்பர்களை மட்டுமே சம்பாரிச்சு வெச்சு இருக்கேங்க. இது நூத்துக்கு நூறு உண்மைங்க. அதுக்காகவேனும் நான் பதிவுலகத்துல இருக்கனும்.

சங்கத்து மக்கள் எல்லாருக்கும், ஜி.ரா, சுதர்சனுக்கும், பின்னூட்டம் மூலமும் அலை பேசிவழியாவும் வாழ்த்துன அத்துன பேருக்கும் நன்றிங்க. என்னோட பொறந்த நாளுக்கு பதிவு போட்ட அந்த கச்சேரி மச்சானுக்கும் நன்றிங்க.

ராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்னை கொலைகாரனா ஆக்கிராதீங்க.

Monday, January 15, 2007

பொங்கலுக்கும் பசிக்குதே





ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி, உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசி வந்த எந்தம்பி மட்டும்
அழும் குரலோடு.




"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே"
விரட்டியது குண்டம்மா.

இந்த பொங்கல் நாளிலாவது
பசிக்கத் தெரியாமல்
இருந்திருக்கக் கூடாதா?


தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்
3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய
100 அடி உசரத்துல ஒரு நடிகர்.





குடம் குடமாய் பாலாபிசேகம்...
ஒரு தம்ளருல குடுங்கய்யா
தம்பி வயிறாவது நனையட்டும்.

ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி,
உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!

பசியோட திரும்பவும் தம்பி அழ,
கையேந்தி ஆரம்பிச்சேன்
"அம்மா தாயே.."

பட உதவி-நன்றி-தினமலர்

Friday, January 12, 2007

விவேகத்துக்கு இன்று பிறந்தநாள்


சுவாமி விவேகானந்தா, ஜனவரி-12-1863ல், கொல்கத்தாவில் தத்தா குடும்பத்தில பிறந்தவர். கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ள கொண்ட முயற்சியில் ராமகிருஷணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவற்றை தோற்றுவித்த ராமகிருஷண பரஹம்சரிடம் சீடராக வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்தே நரேந்திரநாத் தத்தாவாக இருந்த அவர் பெயர், விவேகானந்தாவாக மாறியது.


"Brothers and sisters, the long night is at last drawing to a close. Miseries and sorrows are disappearing. Ours is a sacred country. She is gradually waking up, thanks to the fresh breeze all around. Her might no one can overcome."


"Are you prepared for all sacrifices for the sake of our motherland? If you are, then you can rid the land of poverty and ignorance. Do you know that millions of our countrymen are starving and miserable? Do you feel for them? Do you so much as shed a tear for them?"


"Have you the courage to face any hurdles, however formidable? Have you the determination to pursue your goal, even if those near and dear to you oppose you? You can be free men only if you have confidence in yourselves. You should develop a strong physique. You should shape your mind through study and mediation. Only then will victory be yours."
"I loved my motherland dearly before I went to America and England. After my return, every particle of the dust of this land seems sacred to me."


இந்த வாசகத்தை உலகம் முழுக்க அறியச் செய்தவர். காவி உடையணிந்த இவரை வாயில் காப்போன் கூட மதிக்க யோசிக்கும் நேரத்தில மதிப்பிற்குரிய அண்ணன் தங்கைகளே என்று பேச்சை ஆரம்பித்து மேற்கு தேசத்தில நமது கலாச்சாரத்தை விதை ஊன்றியவர் என்ற பெயரும் விவேகானந்தாவையே சாரும்.


படகோட்டி மறுத்த காரணத்தால் நீந்தியே கடலில் இருந்த பாறையை அடந்து தன் விடா முயற்சியை இளைஞர்களுக்கு எடுத்துகாட்டியவர். 100 இளைஞர்ளை குடுங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறேன் என்றவர். அவர் மறைந்து 104 வருடங்களாகிவிட்டது (July-4-1902), இன்னுமா கிடைக்கவில்லை அந்த 100 இளைஞர்கள்.

அந்த நூறு இளைஞர்களுக்காக என்னுடைய 100வது பதிவை சமர்பிக்கிறேன்.


இந்தியாவின் இளைஞர் தினமான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, January 9, 2007

சிகுன்குனியா ஸ்பெஷல்


அரசர் ஏன் இப்படி ஓடி வராரு?
எதிரி நாட்டு மன்னன் சிகுன்குனியா அப்படின்னு ஒரு கொசு படையும் வெச்சு இருக்கார்ன்னு யாரோ புரளியை கிளப்பி விட்டுட்டாங்களாம்.









வெளிவராத, பத்திரிக்கைகளுக்கு முயற்சி செய்த என்னுடைய படைப்புகள் இவை. என்னுடைய 99ம் பதிவு இது. 100வது என்ன எழுதலாம் நீங்களே சொல்லுங்க மக்களே..

பட உதவி:விகடன்.

சர்வே

பிறந்தநாள் வாழ்த்துக்கள்-சுதர்சன்




இன்று பிறந்தநாள் காணும் சுதர்சன்.கோபால்(a)ஓமப்பொடியார் நீடூழி வாழ தமிழ் வலைப்பதிவாளர் சார்பாக வாழ்த்துகிறோம்.


இவண்
கொங்கு வாசல் நண்பர்கள்

Monday, January 8, 2007

மீண்டும் தடாலடி

இந்தப் படத்துக்கு தகுந்த மாதிரி 2 வரியில் ஒரு "நறுக்" சொல்லுங்களேன்.
யாருக்குத் தெரியும் இந்த வசனங்கள் ஏதாவது பத்திரிக்கையில் வந்தாலும் வரலாம்.
GG அவர்களை, இந்தப் பதிவுலகம் மறக்காமல் இருக்கவே இந்தப்போட்டி.

Friday, January 5, 2007

மல்லிகா-ஒரு மீள்பதிவு

இது என்னுடைய முந்தைய பதிவு. சொடுக்கி பார்த்துக்குங்க.

இதை காப்பி (அ) டீ அடிச்சு ஹிட் வாங்க பதிவு போட்ட "வாத்திய கோஷ்டி" தேவுக்கு என் கண்டனங்கள்.

மிருகம், போராளி அப்படியெல்லாம் நாம சொல்லிக்கிறது இல்லீங்க. ஏதோ Template Test பண்ணிக்கலாம் அப்படிங்கிற ஒரு எண்ணம்தான்.

Tuesday, January 2, 2007

நல்ல ஆரம்பம் 2007

வாழ்க இந்தியா, வளர்க அதன் கலாச்சாரம்.
வாயைப் பிளந்துராதீங்க. அம்மணி போட்டு இன்னொரு ஆட்டமும் இங்கே இருக்கு சொடுக்கி பார்த்துக்குங்க.
FYI-Just for template testing. Thanks to New Blogger for the Pain

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)