Tuesday, December 15, 2015

பீப் பதிவு

காலையில் எழுந்தவுடனே மொபைல் எடுத்துப்பார்த்தேன், வழக்கமா எங்க குரூப்ல நல்ல ஸ்கேண்டில போடுவாங்க. அன்னிக்கு ஒன்னும் வரலை, ப்ச், சரி விடு என்று ஜன்னலைத் திறந்து பார்த்தேன். வழக்கமா வர ஆன்டி அன்னிக்கு காணோம், 2 குழந்தை பிறந்திருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். படபடவென கிளம்பினேன். பைக்கை ஸ்டார்ட் செய்து ரோட்டில் வந்தேன். எவனோ ஒரு பொறம்போக்கு ஆட்டோக்காரன் உரசுற மாதிரி வந்துட்டுப் போனான். வெச்சி நல்லா திட்டிட்டேன். அவுங்கம்மால ஆரம்பிச்சி, அக்கா, தங்கச்சி, ஒருத்தரையும் விடாம திட்டித் தீர்த்தேன். நல்ல வேளை அவன் பாட்டுக்கு ஆட்டோவை நிறுத்தாம போயிட்டான். இவுனுங்களை எல்லாம் ... சரி விடுவோம், அதான் போயிட்டான்ல.




பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் வந்தேன், தங்கையின் ப்ரெண்ட் ஒருத்தி நின்னுட்டு இருந்தா, எப்படியும் பேசி கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன். எப்பப்பார்த்தாலும் அண்ணா ணொண்ணான்னு கூப்பிட்டு கடுப்படிப்பா. அதுக்குள்ளார பஸ் வந்திருச்சு. தே**** **யன் பஸ் டிரைவர் அஞ்சி நிமிசம் கழிச்சி வந்தாத்தான் என்னவாம்?  இந்த நேரத்தில் டாஸ்மாக் போகுற இரண்டு குடிமகன்கள் அடிக்காத குறையா என்னைத்தாண்டி போனார்கள். அவர்களுக்குத்தெரியாது அங்கே ஏற்கனவே ஒருத்தர் மட்டையாகி தெருன்னுகூட பார்க்காம மட்டையாக கிடந்தான். காலங்கார்த்தாலேயேவாடா? எப்படிடா முடியுது? நமக்கு வேலை இருக்கு, போவோம்.

ஆபீஸ் வந்தேன், தம் பத்த வெச்சி நின்னுட்டு இருந்தேன், போன வாரம் வரைக்கும் ஒன்னா சரக்கடிக்கிற பொண்ணு வந்தா, தம் கேட்டா பத்த வெச்சிட்டு கண்டுக்காம போயிட்டா. அவ எல்லாம் பெரிய பார்ட்டி., கார்ல வரனும் அதுக்கெல்லாம். 8:30 ஆபிஸுக்கு 10:30 மணிக்கு வந்தேன். ஈமெயில் பார்க்கிறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் பார்த்தேன். சிம்பு இவ்ளோ கேவலமா பாடியிருப்பான்னு நினைக்கவே இல்லை. இவனாலதான் இந்தக் கலாச்சாரமே அழிஞ்சு போவுது. ஃபேஸ்புக்ல திட்டிட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சேன். 

Friday, December 11, 2015

முண்டாசுக் கவி


பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?










பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.



உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)