
கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ..
எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொன்னு மனம் பின்னே போகுதம்மா
தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியகண்டு
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பல்லப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு
கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...
அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடம்தானே
தவலைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடம்தானே
கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...
வண்டி மாட்டப்பத்தி எழுத ஆரம்பிச்சு இப்படி பாட்டுல முடிஞ்சு போச்சேன்னல்லாம் நான் கவலப்படல, நான் ஓட்டின வண்டிமாடும், நான் விழுப்புண் வாங்கின கதையும் அப்புறமா வரும், வரும், வரும், வரும், வரும்..
No comments:
Post a Comment