Showing posts with label Social. Show all posts
Showing posts with label Social. Show all posts

Monday, July 13, 2015

NRIக்கும் வீட்டுத் தரகருக்கும் நடந்த லடாய்

ண்பருக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது, அதாவது முதலீட்டுக்காக (Investment Purpose) ஒரு அடுக்ககத்தை (Apartment) சென்னையில் வாங்க வேண்டும் என்று விரும்பினார் . நண்பர் அமெரிக்காவில் வசிப்பவர், Y2K சமயத்தில் அமெரிக்கா வந்தவர் அப்படியே செட்டிலாகிவிட்டார். இங்கே, அவர் வீடு வாங்கி வசதியாகவே வாழ்ந்து வருகிறார். இந்தியா செல்லும்பொழுதெல்லாம் அங்கே ஏறும் விலைவாசியைக்கண்டு அவருக்கும் ஆசை வந்துவிட்டது. ஒரு வீடு வாங்கிப் போடலாம், 10-15 வருடங்களில் எப்படியும் நல்ல விலைக்கு விற்று ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு வீடு வாங்கி, ரிட்டையர்மென்ட் காலத்தில் அங்கே வாழ்ந்து கொள்ளலாம என்று திட்டம் தீட்டியிருக்கிறார்.

"அவர் ரிட்டையர்மென்ட் காலத்தில் சென்னையின் புறநகர் என்பது கன்னியாகுமரியாகக்கூட இருக்கலாம். " 

 இதற்காக என்னிடம் மற்றும் சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும், எப்படி வாங்கலாம், எப்படி அணுகுவது என்று ஒரு பெரிய பட்டியலே தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.





ரு நன்னாளில், அமெரிக்காவில் இருந்தபடியே விரலசைக்க ஆரம்பித்தார். உறவினர்களிடம் விசாரித்தார், அதாவது உறவினர்கள் இருக்கும் அபார்ட்மென்டிலேயே ஒரு வீடு தேடினார். எதற்காக என்றால் அவர்கள் பக்கத்தில் இருந்தால் வீட்டைப் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று. சில பல இணைய விளம்பரங்களைத் தேடினார். கடைசியாக சில நம்பத்தகுந்த தரகர்களை (broker) தேடிப்பிடித்தார். அந்தத் தரகர்களின் பட்டியலில் ஒருவரை டிக் அடித்தார். காரணம் அவர் நண்பர் கொடுத்த நற்சான்றிதழ். ஒரு நன்னாளில் அந்தத் தரகை அழைத்தார், இரண்டாவது ரிங்கிலேயே எடுத்த தரகர் "ஹலோ சார், சொல்லுங்க" என்று ஆரம்பித்தார். நண்பர், தான் எப்படி அவரை அழைத்தார் எனச் சொல்ல "சரி சார், இன்னொருக்கா கூப்பிடுங்க" என்று சொல்லி அந்த அழைப்பைத் துண்டித்தார். பிறகு நண்பர் அழைத்த அழைப்பிற்கெல்லாம் தரகர் எடுக்கவே இல்லை. கடுப்பாகிட்டார் நண்பர் "என்னடா, நான் காசைக் குடுக்கிறேன், வீட்டைக் காட்டுறதுக்கு அவனுக்கு என்ன கஷ்டம்?, NRIன்னா எவனுமே இந்தியாவுல மதிக்க மாட்டேங்குறான் " என்று திட்டித் தீர்த்தார்.


பிறகு தரகருக்கு நண்பர் பலமுறை அழைத்தும் தரகர் எடுக்கவேயில்லை. எப்படியோ ஒரு நாள் தரகர் ஃபோனை எடுக்க "ஏன் சார், அமெரிக்காவுல இருந்து கூப்பிடறேன், செலவு ஆகுறது ஒரு பக்கம் இருக்கட்டும், உங்க பகல் நேரத்துலன்னா நான் ராத்திரிதான் கூப்பிடனும், அப்படி கூப்பிட்டாலும் எடுக்க மாட்டீங்கிறீங்களே? காசு கறக்க இது ஒரு வழியா" என்று கடுப்பாகவே கேட்டுவிட்டார் நண்பர்.


அதற்கு கூலாக தரகர் "சார், நீங்க எல்லாம் அமெரிக்காவுல இருக்கீங்களோ ஒழிய சென்னை நிலவரம் தெரியறதில்ல. இன்டர்நெட்டுல கண்டதையும் படிச்சுட்டுப் பேசுவீங்க.  நீங்க அடையாறிலியோ, அண்ணா நகரிலோ வீடு கேட்பீங்க. வெளிநாட்டுல வேலை பார்க்கிறீங்கன்னுதான் பேரு, ஆனா  உங்ககிட்ட அவ்ளோ காசும் இருக்காது.  நூறு வீடு கேட்பீங்க, ஆயிரத்தெடுக்கு குறை சொல்லுவீங்க, அப்புறம் ஒன்னையும் புடிக்காதும்பீங்க.  அது பத்தாம, வீட்டுப் படம், ஒரு ரூம் விடாம, டேப் மொதக்கொண்டு டாகுமென்ட் வரை எல்லாத்தையும் ஈமெயில் பண்ணச் சொல்லுவீங்க. ரெட்டை வேலை சார் எங்களுக்கு. இந்த லட்சணத்துல வாஸ்து சரியில்லை, காத்து வராதுன்னு அங்கே இருந்தே சயிண்டிஸ்ட்டாம் கண்டுபுடிச்சி சொல்லுவீங்க. வீடு புடிச்சி குடுத்தாலும் ப்ரோக்கர் காசுக்கு உங்ககிட்ட தொங்கனும், உங்ககிட்ட காசு வாங்க நாங்க ஃபோனா போட்டு காசு அழுவனும். அந்த நேரத்துலதான் நீங்க காந்தி மாதிரி நியாயம் நேர்மை எல்லாம் பேசுவீங்க. ஏன் சார் ஃபோன் பண்ணி தாலி அறுக்கிறீங்க?" டொக்க்க்க்க்க்க்

அத்தோடு அந்தத்  தரகரை அழைப்பதை நிறுத்திவிட்டார நண்பர்.

Tuesday, December 23, 2014

என் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது?

ழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில்  கிளம்பியாயிற்று  15 நிமிட   ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்,  அனைத்து செய்தி  சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.

10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்களும் காலையில் டாட்டா காட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.

அமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.

வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன?  ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது? தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்?

தினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.

தொடர்புடைய சுட்டிகள் :



Tuesday, September 18, 2012

23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க குறும்படத்திற்கு(Innocence of Muslims) எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதுல கலந்துகிட்டவங்க 5000க்கும் மேலேயே இருக்குமாம். அதனையொட்டி நானிட்ட ட்விட்டுகள்


  • நேத்துதான் கடவுளே இல்லைன்னு பெரியார் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ஒரு இறைதூதரை கேவலப்படுத்திட்டாங்கன்னு அடிச்சிக்கிறாங்க. #நடுசென்ட்ர்ஸ் பாவமில்லையா? #ட்விட்டர் புலம்பல்
     
  • Most of them never saw the Videos Yet, but they are in Mount Road Now. [அந்தக் குறும்படத்தின் Trailerஐ பார்த்தவர்கள் எத்தனை பேரு இருக்கும்?]

  • நாம எல்லாம் தான் படிச்சவங்க #இன்னொசன்ஸ் ஆஃப்...  

  • ஒன்னு ரெண்டு விசா கிடைச்சிட்டு இருந்துச்சு. இனிமே சலிச்சி எடுப்பாங்க. ஹ்ம்ம்..  


  • சென்னை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டிப்பா அடிதடியாய் முடியப்போவுது.. வெளங்கும் #முஸ்LIM

  • நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வேற,. எந்த கடவுள் வந்தாவது கலவரம் இல்லாம பார்த்துக்கனும், கடவுளே!

  • தடியடியில் ஆரம்பித்து, வாகனங்களைச் சேதப்படுத்துவதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வன் ரகுவரன் மாதிரி அம்மா உட்காந்திருக்க வேண்டிய கட்டாயம்.  

  • KFC, McDonald, MNC மேலேயெல்லாம் கல்லை விட்டெறிஞ்சிருந்திருந்தா சமநிலையாய் ஆகியிருக்குமே 
  • உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே 
  • இப்ப உடைச்ச கண்ணாடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம். சாலையில பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் அமெரிக்கர்களா? 
  • தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்
Pic Courtesy/Thanks: IBN Live

Monday, September 3, 2012

11/365 தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடமும், கெயிட்டி தியேட்டரும்

தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடம் காரைக் காலை அடுத்த தரங்கம்பாடியில், 1712ல் அமைக்கப் பட்டது. டச்சுக்காரர்கள் அமைத்த இந்த அச்சகத்தில் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்டது. இது, அச்சு எழுத்துக்கள் வார்க்கும் வார்ப்பட சாலையும் கூட. (இந்தியாவிற்கு இதற்கு முன்னரே அச்சகம் வந்து விட்டது. கோவாவில், 1556ம் ஆண்டு ஏசு சபையினர் ஓரு அச்சகத்தை நிறுவினர்!)



அச்சுத் தொழில், முற்றிலும் கிறிஸ்தவ பாதிரி களின் கைகளில் இருந்தமையால், எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ்நாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர், அவர்கள் வெளியிட்ட கிறிஸ்தவ சமய நூல்களை, "பரங்கிப் புத்தகங்கள்' என்று தூஷித்து, கையால் கூட தீண்டுவதில்லை. கிறிஸ்தவ சமயப் பரப்பிகள் தம்முடன் கொண்டு வந்த, காகிதம் செய்யும் கலையையும் நம் நாட்டு மக்கள் இழிவானதும், தீட்டுப்படக் கூடியதுமான தொழில் என்று ஒதுக்கி விட்டனர். உலகில் முதலில் மரப்பட்டைகள், பின்னர், கன்றுக் குட்டியின் தோல், அப்புறம் பட்டுத் துணி, பிறகு ஒருவித நாணலில் செய்த, "பரப்பிரஸ்' என்ற தாள் முதலியன எழுது பொருள்களாக இருந்து வந்தன. சீனர்கள் கி.பி., 105ம் ஆண்டில் காகிதம் செய்யக் கற்றுக் கொண்டனர். பட்டுத் துணியில் எழுதி வந்த சீனரிடையே, காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் எங்கும் பரவி விட்டது.
அராபியர்கள், சீனரிடமிருந்து அந்தத் தொழிலை, கி.பி., 751ம் ஆண்டில் அறிந்தனர். அதன்பின், காகித உற்பத்திக் கலை உலகெங்கும் சிறுக, சிறுகப் பரவியது. ஐரோப்பியர் அதை அராபியரிடமிருந்து, 12ம் நூற்றாண்டில் தான் கற்றனர். கன்றின் தோல் மறைந்து காகிதம் தயாரிக்கப்பட்டது.
இந்தியர்களாகிய நமக்கு, சீனருடன் கிறிஸ்தவ சகாப்தம் துவங்குவதற்கு முன்பிருந்தே உறவு இருந்தது. பல்லவரும், சோழரும், சீனர்களுடன் தூதுவர் உறவு கொண்டிருந்தனர். அதுபோலவே அரபிகளுடனும் நமக்கு நெடுங்கால உறவு உண்டு. ஆனால், நாம் இவ்விருவரிடமிருந்தும் காகிதம் செய்யும் தொழிலை ஏன் அறிந்து கொள்ளாமல் போனோம்? 19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் ஏன், ஏடும் எழுத்தாணியுமாக உட்கார்ந்திருந்தோம்?
கிறிஸ்தவ பாதிரியார்கள், பழைய கந்தல் துணிகளைக் கூழாக அரைத்து காகிதம் செய்தனர். நம் ஆச்சார மக்கள், இது, சமய ஆச்சாரங்களுக்குப் புறம்பான இழி தொழில் என்று கருதி, தள்ளி விட்டனர். (பழைய கந்தல் துணிகளில் கீழ் ஜாதியினர் பயன்படுத்திய துணிகளும் அடங்குமே என்பதால்!)

— ப.சிவனடி எழுதிய சரித்திர நூலிலிருந்து...

தென்னிந்திய சினிமா வரலாற்றில், முதல் இருபது ஆண்டுகளில் வர்த்தக ரீதியாக ஒரு படமும் தயாரிக்கப்படவில்லை. இன்று விரிந்து, பரந்து வளர்ந்துவிட்ட இந்த சினிமாத் துறையை - தயாரிப்பு, விநியோகம், காட்சிப்படுத்துதல் என்று பிரித்தால், காட்சிப்படுத்துதல் மட்டுமே முதல் இருபது ஆண்டுகளில் வளர்ந்தது எனலாம். மற்ற இரு அம்சங்களும் அப்போது ஆரம்பமாகவில்லை.
சென்னை மவுண்ட் ரோடில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த வெங்கையா என்பவரை, வேகமாகப் பரவி வந்த சலனப் படத்துறை ஈர்த்தது. சென்னையில் இரண்டு நிரந்தரக் கொட்டகைகளும், பல டூரிங் சினிமாக்களும் வெற்றிகரமாக சலனப் படங்களைத் திரையிட்டுக் கொண்டிருந்தன. இவரும் ஒரு குரோனா மெகபோன் (கிராமபோன் ஒன்றுடன் இணைக்கப்பட்ட புரொஜக்டர்) ஒன்றை வாங்கி, விக்டோரியா பப்ளிக் ஹாலில் படங்களைத் திரையிட ஆரம்பித்தார். அவை, 500 அடி நீளமே கொண்ட அமெரிக்கத் துண்டுப் படங்களே. படம் திரையில் விழ ஆரம்பித்ததும் ரெகார்டு சுழல ஆரம்பித்து, ஒலி பிறக் கும், படங்கள் பேசுவது போன்ற பிரமை ஏற்படும்.

வசூல் நன்றாகவே ஆனது. பிறகு இவர் இலங்கைக்கும், பர்மாவிற்கும் சென்று, படங்களைத் திரையிட்டார். கணிசமான தொகையுடன் திரும்பிய வெங்கையா, ஒரு நிரந்தரக் கொட்டகையைக் கட்டி சென்னையிலேயே தங்க முடிவு செய்தார்.

மவுண்ட் ரோடில், 1913ல், "கெயிட்டி' தியேட்டரைக் கட்டினார். முதன் முதலாக இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கு தான் கடைசி வரை தியேட்டர்களில் எல்லாம் மூத்தது. அது மட்டுமல்ல, முதலில் வைத்த பெயரே நிலைத்திருந்தது.
— தியோடர் பாஸ்கரனின், "தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து...

Source & Thanks : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7733&ncat=2

Tuesday, August 28, 2012

5/365 பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு..

ன்னோட பள்ளிக்கூடத்து முதல்நாள் எப்படி இருந்துச்சுன்னு இன்னிக்குத் தெரியல(நாளைக்குள்ள எப்படியும் வீட்டுல கேட்டுருவேன்னு வைங்க). ஆனா, பல பொடுசுங்களைப் பார்த்திருக்கேன், முதல் நாள் பள்ளிக்கூடம் அனுப்புறதுக்குப் பெரிய போரே நடக்கும். அம்மாவும் அப்பாவும் பள்ளிக்கூடம் வரைக்கு கூட்டிட்டுப் போய் விட்டுட்டு, அப்புறமா வாசல்லையே நின்னு கொஞ்சம் நேரம் பார்த்துட்டு இருப்பாங்க. ஆசிரியர் வந்து "நீங்க போங்க, அப்பத்தான் பசங்க அடம் புடிக்காம இருப்பாங்க" அப்படின்னு சொல்ல அப்பா சோகமாவும், அம்மா கண்ணை கசக்கிட்டுப் போவாங்க. இந்தக் காட்சியை பள்ளிக்கூடத்து முதல் நாளுல தவறாம பார்க்கலாம்.   




மெரிக்காவுல, இது பள்ளிதொடங்கும் நேரம். பொதுவா Labour Day(செப்-4-2012) முடிஞ்சோ, இல்லைன்னா ஒன்னு ரெண்டு நாள் முன்னாடியோ ஆரம்பிக்கும். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பசங்களை வரவழைக்க இப்படி ஒரு வழி செஞ்சிருக்காங்க செல்சி வில்லியம்ஸ் பள்ளிக்கூடத்துக்காரங்க(இது அரசு பள்ளிதான், தனியார் இல்லை).அதுக்குப் பேரு Back-toSchool Celebration.



 
காசுக்கு? விளம்பரதாரர்களைப் பிடிச்சிருக்காங்க. செம கூட்டம் வேற. கொஞ்சம் கறித்துண்டு, நொறுக்கு (Grill, Snacks) விளையாட்டு, போட்டிகள்னு நம்ம ஊர் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் மாதிரியே செஞ்சிருந்தாங்க. அருமையான யோசனை இல்லீங்களா?. பசங்களும், பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு வந்துட்டு பார்த்தாப்ல இருக்கும், "விடுமுறை முடிஞ்சிருச்சி கண்ணுங்களா சீக்கிரம் வாங்க" அப்படின்னு அழைக்கிறாப்லயும் இருக்கும், புதுசா வர குழந்தைகளுக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினாப்லயும் இருக்கும். ஒரே கல்லுல ரெண்டு/மூனு மாங்கா.





  • ஆமா, நம்ம ஊர்ல மாதிரி முதல் நாள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற "காட்சிகள்"  அமெரிக்காவுல பார்க்க முடிவதில்லையே, ஏன்?

அப்புறம், பொடுசுங்க பாடுறாப்ல இருக்கவேண்டிய "பள்ளிக்கூடம் போகலாமா?" பாட்டை கேப்டன், கனகாவோட சேர்ந்து எப்படி கெடுத்துவெச்சிருக்காரு பாருங்க.. சே :(
(காணொளி எங்கேயா? இது குழந்தைகள் நிகழ்ச்சிங்க, மிட்நைட் மசாலா இல்லை)

Wednesday, February 8, 2012

22 பேரைக் கொன்ற மக்கனாவை காப்பாற்றிய Dr. கே.அசோகன்- வாருங்கள் பாராட்டலாம்

நாம் மறந்து வரும் விசயங்களில் ஒன்று பாராட்டுதல், அங்கீகரித்தல். சச்சினுக்கு பாரதரத்னா கிடைக்குமான்னு ஏங்குற நம்ம மக்கள், வீதியில கிடக்கிற குப்பையை சுத்தம் செய்யும் ஊழியர்களை அருவெருப்பா பார்க்கிற உலகம் இது. கொஞ்சம் நாமளும் பாராட்டலாமே, நாலு பேருக்கு இந்த விசயத்தை கொண்டு செல்லலாமே அப்படிங்கிற எண்ணதுலதான் தினமணியில் வந்த செய்தியை கீழே குடுத்திருக்கேன். 

கொஞ்சம் பாராட்டினாதான் கொறைஞ்சா போயிருவீங்க பாஸூ?

நன்றி: தினமணி(மூலம்)  -எம்.ஆனந்த்

========================================
கோவை, வ.உ.சி. மாநகராட்சி உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள தனது அறையில் இரவு, பகல் என அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் வலைதளத்தில் விலங்குகளுக்கான சிகிச்சை மற்றும் தேவையான தகவல்களை அவர் சேகரித்துக் கொண்டிருப்பார். பூங்காவில் உள்ள முதலைக்கு கீழ் தாடை உடைந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும், பாம்புக்கு புற்றுநோய் கட்டியுள்ளது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்...

- இப்படி 'எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும்' தாயுமானவரின் வரிகளுக்கு இலக்கணமாக இருப்பவர், கோவை வஉசி மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் மற்றும் மருத்துவரான கே.அசோகன். அவரிடம் நாம் பேசியதிலிருந்து....

''சென்னையில் உள்ள கால்நடை கல்லூரியில் 1989-ல் எனது படிப்பை முடித்து 1996-ல் சின்ன சேலத்தில் உள்ள அரசுக் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணியில் அமர்ந்தேன். 22 ஆண்டுகள் பணியில் 12 முறை இடமாற்றங்கள்... இதுதான் என் பணிக்குக் கிடைத்த பரிசு
.

நான் முதுமலையில் பணிபுரிந்த போது, அடிக்கடி யானைகள் இறந்தன. யானைகளின் திடீர் மரணம் ஏன் ஏற்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டேன். யானைகளுக்குத் தொண்டையடைப்பான் நோய் வருவதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து, மற்ற யானைகளுக்குப் பரவாமல் தடுத்தேன்.

அதேபோல் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் யானைகளின் வாழ்நாள் குறைந்திருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தேன். யானைகளைத் தாக்கும் நாடாப்புழுக்கள்தான் இதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தேன். அதற்கான சிகிச்சையை மேற்கொண்டேன்.

அதேபோல் காட்டுக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்களில் பலா பழத்தில் வெடிகுண்டை ஒளித்துவைத்து யானைகளைக் கொல்வது, அதன் வழித்தடத்தில் ஆணி பொறிகளை வைப்பது, தந்தங்களுக்காக யானைகள் சுடப்படுவது போன்ற காரணங்களைக் கண்டறிந்தேன். தாயால் கைவிடப்பட்ட யானைக் குட்டிகள், தோல் நோய் போன்ற மற்ற காரணங்களையும் கண்டுபிடித்து அவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறேன். ஏறக்குறைய 55 யானைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்து பல விஷயங்களைக் கண்டறிந்தேன்.

வயநாடு (கேரளா) - முதுமலை இடையே அவ்வப்போது ஓடி ஒளிந்துகொண்டு 22 பேரைக் கொன்ற மக்கனா (கொம்பில்லா ஆண் யானை). இந்த வகை யானைகள் ஆசியாவிலேயே 5விழுக்காடுதான் உள்ளன. அதனால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற பல குழுக்கள் அமைத்து அதைப்பிடித்தேன். அப்போதுதான் அதன் உடலில் இருந்த பல துப்பாக்கி குண்டுகளைப் பார்த்தேன். பிழைப்பதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில், பல லட்சம் செலவு செய்து தினமும் 3 மணி நேரம் சுமார் ஓர் ஆண்டு சிகிச்சை கொடுத்து அதன் காயங்களைக் குணமாக்கி அதை நடமாடச் செய்து இன்னும் அது உயிருடன் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன்.

1998-99 வாக்கில் சிறுமுகை வனப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறக்கும் நிலையில் இருந்த யானைக்கு, எங்களின் மருத்துவக் குழுவுடன் தொடர் சிகிச்சை கொடுத்து அதைப் பிழைக்க வைத்தோம்.

2000-ஆம் ஆண்டில், குன்னுரில் விஷம் தடவிய மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டு கோமா நிலைக்குச் சென்ற சிறுத்தைக் குட்டியை பிழைக்கவைத்தோம். அண்மையில் கோவை வஉசி பூங்காவில் புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட பாம்புக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து அது நல்ல நிலையில் உள்ளது.

நாகை மாவட்டத்தில் 2004-ஆம் ஆண்டு கால்நடை மருத்துவராக இருந்தபோது படகு வலையில் சிக்கி ஆயிரக்கான ஆமைகள் இறப்பது வழக்கமாக இருந்தது. அப்போது கடற் கரையில் செயற்கையாக ஆமைகள் முட்டைகளைப் பாதுகாக்க ஓர் இடத்தை உருவாக்கி குஞ்சுகள் பொரிந்தவுடன் அவற்றை எடுத்துச் சென்று ஆழ்கடலில் விட்டு ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியையும் செய்திருக்கிறேன். மீனவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் மூலம் ஆமைகள் பாதுகாப்புக்கு வழிவகை செய்கிறோம்.

மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த 2008-ஆம் ஆண்டு அங்கு சென்ற குழுவில் நானும் இடம்பெற்றேன்'' என்றார்.

- இவர் முதுமலையில் இருந்தபோது, இவரின் தன்னலமற்ற பணிக்காக 'அண்ணா' விருதுக்கு இவரின் பெயரை பரிந்துரை செய்தனர் அந்தப் பகுதியில் இருந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். ஆனாலும் விருது கிடைக்கவில்லை. சுயநலமில்லாமல் சூழலுக்கு உழைப்பவர்களுக்கு அரசு விருது தந்து கௌரவிக்க வேண்டும் என்பது பல சுற்றுச் சூழல் ஆர்வளர்களின் ஏக்கம்.

Wednesday, December 1, 2010

Aids Day- பதிவர்களின் பங்கு?

இன்னிக்கு உலக எயிட்ஸ் தினம்.


நண்பர்களே,


இது ஒரு ச்சும்மா முயற்சி. எயிட்ஸுக்காக நம்ம (பதிவர்கள் சார்பா) ஒரு வாக்கியம் ( Slogan) கொண்டுவரலாமா?. நாம ஏற்கனவே “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” ” எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, ”தில்லு துரை” இதெல்லாம் பார்த்திருக்கோம். சரி, நம்ம சார்பா ஒரு நல்ல வாக்கியம் சொல்லுங்கப்பா. அரசுக்கு அனுப்பி வைக்கலாம். கற்பனை பண்ணிப்பாருங்க உங்களோட வாக்கியம் ஊர் ஊரா, அரசாங்க செலவுல விளம்பரம் பண்ணும்போது ஏற்படப் போற சந்தோசம்? அடுத்து யாராவது விளம்பர நிறுவனம் உங்களை கொத்திட்டு போயி பெரிய வேலை குடுக்கலாம்(இப்படியெல்லாம் கூட நடக்காலாமே..:)).





சங்கை நாம ஊத ஆரம்பிக்கலாம். நாட்டுக்கு நம்மாளான ஒரு தொண்டா இருக்கட்டுமே. சும்மா ‘நச்’னு மக்களுக்கு சுலபமா மண்டையில அடிச்சா மாதிரி இருக்கனும்.


சரி, என் பங்குக்கு


”மாட்டலைன்னா மாட்டிக்குவீங்க”

Monday, November 29, 2010

தமிழ் கலாச்சாரம்னா? Living Together

என்னதான் கமல் சகலாவல்லவன்னாலும், பொது மேடைன்னு வந்துட்டா தன்னோட கருத்தைச் சொல்றதுல குழப்பம் வந்துரும், இல்லே நமக்கு புரிஞ்சிதா இல்லையான்னு நமக்கும் குழப்பம் வந்திரும். ரஜினி அரசியலுக்கு வர்றா மாதிரி பேசுறதும் அதே கணக்குத்தான். ஆனா கமல் பேசுறதுல ஒரு உள்ளார்த்தம் தெளிவா இருக்கும். அது இலக்கியவாதிங்களுக்கு மட்டும் டக்குனு புரிஞ்சிரும். இருங்க, எதை பேச வந்துட்டு எதைப் பேசிட்டு இருக்கேன் பாருங்க. ஆங், அதாவது தமிழ்கலாச்சாரம், சேர்ந்து வாழ்றது.. அதைப் பத்தி கமல் பேசுறது இல்லை, ஆனா நீங்க புரிஞ்சிக்குங்க. ஏன்னா இன்னைக்கு Living togetherக்கு முன்னோடி அவர் தான்.




தமிழ் கலாச்சாரங்கிறது ரொம்ப முக்கியமான விசயம், ஏன்னா அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை மாறிகிட்டே வரும். அதை காப்பாத்துறது ரொம்ப முக்கியம். அம்பது வருசத்துக்கு முன்னாடி விதவை கல்யாணம் பண்ணிகிட்டா குத்தம், அதே நூறு வருசத்துக்கு முன்னாடின்னா கொன்னுருவோம். அதான்
கலாச்சாரம்.

Wednesday, November 25, 2009

26/11

நம்ம மக்களுக்கு மறதி ஜாஸ்திங்க..எதுக்கும் இருக்கட்டுமே.




மேலே ஒரு நிகழ்படம் இருக்குங்க. பார்க்க முடியாதவங்க இந்த இடுகையில பாருங்க.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத இந்த மாதிரியான குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறவங்க இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க. இந்துத் தீவிராவாதிங்க பண்றது சரியில்லைன்னு இந்த வன்முறை சரின்னு சொன்னவங்க நிறைய பார்த்திருக்கேன். இரண்டு பேரும் பண்றது தப்புதான். இதுல ’A’ கிரேடு ’பி’ கிரேடு எல்லாம் இல்லீங்க. சுஜாதா எழுதின மாதிரி “தப்பு என்ன பனியன் சைஸா.. தப்பு தப்புதான்”..

அகில இந்திய முஸ்லிம் கட்சிக்கு பாராட்டுக்கள். அப்சல் கசாப் செத்தா இந்தியாவுல புதைக்கவோ, எரிக்கவோ கூடாது சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி 4 பேர் செய்யுறதால எத்தனை எத்தனை அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படறாங்க??? இந்திய இனிமேலாவது முழிச்சுக்கலாம். அப்சல் கசாப் வெச்சு இந்தியா உலக அளவுல ஒரு மயித்தையும் புடுக்கப்போறதில்லை.. அது மட்டும் நிச்சயம்..

Monday, October 13, 2008

* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்

"தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு

"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"

”அது போன முறை ஹீரோ நட்சத்திரமான போதே சொல்லியாச்சு. வேறக் கதைச் சொல்லுமா”

“அப்படியா சரி, இதுவும் கோயமுத்தூர்ல நடந்த கதைதான், இது 5 பேர் இல்லே 4 பேர்தான். சொல்லவா?”

“ம்ம் சரி”

1997- டிசம்பர் மாசம் பஞ்ச பாண்டவர்கள்ல நம்ம ஹீரோவைத்தவிர எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்கே பொழைப்ப பார்த்துட்டு போயிட நம்ம
ஹீரோ மட்டும் தனியா என்ன பண்றதுன்னு தெரியாம மூட்ட முடிச்ச கட்டிகிட்டு ஊருக்குப் போயிட்டாரு. தெனம் இருந்த கம்யூட்டர் க்ளாஸை சனி,
ஞாயிறுன்னு மாத்திகிட்டாரு.

ஏற்கனவே இவரு கூட படிச்ச சந்தோஷ் சனி/ஞாயிறு batchல இருக்க இன்னும் வசதியாய்ப்போயிருச்சு. அந்த batchல சந்தோஷ், செந்தில், சங்கர் அப்புறம் நம்ம ஹீரோ ஒரு செம செட்டா மாறிட்டாங்க. அதுல சங்கர் பெரிய இடத்துப் பையன் சென்னையில இருந்த வந்தவர், சத்தியில அவுங்க சித்தப்பா வீட்டுல இருந்து வந்து போறாரு, செந்திலும் சக்திதாங்கிறதால ரெண்டு பேரும் ஒன்னா வந்து போவாங்க. சந்தோஷ் WPTக்கு பக்கத்துலயே வீடு. நம்ம ஹீரோ மட்டும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸுல வந்துட்டுப் போவாரு. அதாவது போகவர 230 கிமீ. 6 மணிநேரம் ஆக போகவர. இந்த செட்லயே நம்ம ஹீரோதான் சுமாரான படிப்பு. சங்கர், செந்தில், சந்தோஷ் எல்லாம் CNEல 7 Paper பரீட்சை எல்லாம் எழுதி முடிச்சுட்டாங்க. நம்ம ஹீரோ ஒரு Paper மட்டும் எழுதிட்டு போதும்னு நிறுத்திட்டாரு. அவுங்களோட சேர்ந்தவுடனே படிக்கனும் ஆசை வந்திருச்சு. (காலம் போன கடைசியிலே).

இவுங்க எல்லாருமே படிச்ச இடம் RRT(ராஜ ராஜேஸ்வரி டவர்ஸ்) 4 வது மாடில இருக்கிற HardCore அப்படிங்கிற Computer Center. இது காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கு. இவுங்களுக்குள்ள பொதுவா இருக்கிறது
ஒன்னே ஒன்னுதான். அதுதான் சைட் அடிக்கிறது. அதுவும் மானாவாரியா சைட் அடிப்பாங்க. அதுலயும் RRT வாசல்ல நின்னுகிட்டாப் போதும், வர போற ஒருத்தரையும் விடறது இல்லே. செமையா கமெண்டு வேற, ஆனா அது எல்லாம் இவுங்களுக்குள்ளேயே இருக்கும். எந்தப் பொண்ணுக்கும் கேக்காது. இதுல நம்ம ஹீரோவுக்கு சைட் அடிக்கவும் தெரியாது. அப்படியொரு வஸ்து.

சங்கரும், நம்ம ஹீரோவும் செம தம் பார்ட்டிங்க. யார் மொதல்ல வந்தாலும் சரி, மத்தவங்களுக்காக காத்திருந்து ஒன்னா நாலு பேரும் சேர்ந்துதான் 4வது மாடியில கிளாஸுக்கு போவாங்க. அப்படி ஒரு செட்.

இப்போ விஷயத்துக்கு வரலாம். இவுங்கள்ல ஒருத்தருக்கு, அங்கேயே படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வு வந்துருச்சு. அவுருக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை தெய்வீகக்காதல் வந்துரும். வாரக்கடைசியான போதும் காதலர் அந்தக் காதலிய பார்க்க ஏதுவா
வந்து ஸ்டைலா நிப்பாரு. காதலியும் வருவாங்க, பார்ப்பாங்க, போவாங்க. இப்படியே போயிருச்சு. காதலருக்காக மத்த மூணு பேரும் மண்டை காய ஆரம்பிச்சாங்க. ”எவ்ளோ நாளைக்குத்தான் சைட்டே அடிப்பே மாப்ளே, அந்தப் பொண்ணும் உன்ன பாக்குதுல. அப்புறம் என்னடா? லவ்வச் சொல்லிற வேண்டியதுதானே”ன்னு மத்த மூணு பேரும் ஏத்திவிட்டதுல காதலரும் Feb-14 அன்னிக்கு காதலைச் சொல்றதுன்னு ஏக மனதா முடிவு பண்ணிட்டாரு.

1998 ,Feb-14, காதலர் சூப்பரா dress பண்ணிட்டு வந்தாரு. பின்னே இருக்காதா? காதலைச் சொல்றது காதலர் தினத்திலே ஆச்சே. மத்த மூணு பேரும் சிரிச்சிகிட்டாங்க ”அப்பாடா தொல்லை ஒழிஞ்சது”. லவ்வு
ஒக்கேன்னாலும், இல்லேன்னாலும் மணி நேரத்துக்கு ஒக்காந்து மண்டை காயத்தேவையில்லையே.

அன்னிக்குன்னு பார்த்து Unix ஆரம்பிச்சாரு வாத்தியார். தெளிவா சொல்லிபுட்டாரு “விண்டோஸ் அழிஞ்சாலும், வயக்காடு அழிஞ்சாலும் Unix சோறு போடும். அதனால ஒழுங்கா கவனிங்க” அப்ப்டின்னு சொல்ல, காதலை காலையிலேயே fresha சொல்றதா இருந்தது, தம் டைம்முக்கு மாறுச்சு.

தம் நேரம்(அதாங்க break) 11:30. மத்த மூணு பேரும் வெளியே வந்து டீ குடிக்க போலாமான்னு கேட்க காதலர் மனசுக்குள்ள Friendஆ figureஆ பட்டிமன்றம். வழக்கம் போல figureஏ ஜெயிக்க மத்த மூணு பேரும் வழக்கம் போல படிக்கட்டுல போய் கன்னத்துல கை வெச்சிகிட்டு உக்காந்துகிட்டாங்க. ஆனா காதலியோ, பொட்டியில எதையோ தொலைச்சுட்ட மாதிரி தட்டிகிட்டே இருந்தாங்க. உச்சா கூட போவாம 4 பேரும் காத்திருக்க வாத்தியாரு நேரமாச்சுன்னு கூப்பிட்டாரு. காதலச்சொல்றது இப்போ மதிய சாப்பாட்டு நேரத்துக்கு shiftஆகிருச்சு.

காலையில தியரியா ஓட நாலு பேருக்கும் ஒன்னுமே மண்டையில ஏறல. சாப்பாட்டு நேரம் எப்போ வரும்னு காத்திருக்கும்போதே காதலி சாப்பாட்டுக்கு போறதை கண்ணாடி வழியா பார்த்துட்டாரு காதலர். உடனே “நிப்பாட்டுங்க சார், ஒரே தியரியா இருக்கு. சாப்ட்டு வந்து கவனிக்கிறோம்’னு சொல்லிட்டு, வாத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடியே வகுப்ப விட்டு வெளியே போய்ட்டாரு. மீதி மூணு பேரும் பின்னாடியே ஓட, காதலர் காதலிய தொரத்த இப்படியே அன்னபூர்ணா வரைக்கும் march fast. மூணு பேரும் செம கட்டு கட்டுறாங்க காதலருக்கோ சாப்பாடு எங்கே எறங்குது. கண்ணால பார்குறாரு, கண்ணால பேசுறாரு, அந்தப் பக்கமிருந்து ஒரு ரியாக்சனும் வரலே. காதலி கூட நெறைய அல்லக்கைங்க இருக்க காதலருக்கு கூச்சமா போயிருச்சு. 100அடி ரோட்டு முக்குக்கு வந்தா ஒரே ரோஜா கூட்டம். இருக்காதா feb 14, அவனவன் தம்மு காசெல்லாம் போட்டு செவப்பு ரோஜாவா வாங்கிட்டு போவ, காதலருக்கு மனசுல லைட்டா சஞ்சலம். “நாமும் ஸ்டைலா காதலிக்கு முன்னாடி முட்டிப் போட்டு ரோஜா நீட்டி I Love You சொன்னா எப்படி இருக்கும்”னு காதலா காதலாவுல கமலுக்கு கொம்பு மொளைக்குறாப்ல மொளைக்க 2 ரோஜாவுக்கு தெண்டமா காசு அழுதாங்க.

இப்போ காதலைச்சொல்றது 4 மணி தம் நேரத்துக்கு மாறுச்சு. 4-4:30 கேப்ல சொல்லிடறது, இல்லைன்னா லவ்வே சொல்லப் போறது இல்லைன்னு காதலர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு. 2 மணிக்கு மறுபடியும் தியரி. இப்போ காதலருக்கு கண்ணு சொக்குது. ஆனாலும் காதல் கனவுதான். 3:30 காதலி அவுங்க வகுப்ப கடந்து போவும் போது, காதலர டேப்பரா பார்த்துட்டுப் போவ காதலர் அப்படியே பறக்க ஆரம்பிச்சிட்டாரு. 3:45 சனி ஆரம்பிச்ச நேரம்னே சொல்லலாம்.

வாத்தி “தியரி போதும், வாங்க practicalஆ பார்த்துரலாம்”னு சொல்ல. காதலருக்கு செம கடுப்பு. 3:47 நாலு பேரும் labக்குள்ளே போனாங்க. வாத்தி serverஅ ON பண்ணிட்டு வந்து Computerஅ ON பண்ண டுப்புன்னு பெரிய சத்தம். எல்லா கம்ப்யூட்டரும் reset ஆகி மறுபடியும் BIOS ஓட ஆரம்பிச்சது. வாத்தி ”பக்கத்துல எங்கேயோ transformer வெடிச்சிருக்கு. அதான்” சொல்லி முடிக்கலை எங்க கட்டடமே இடிஞ்சி போற மாதிரி சத்தம். நாங்க இருந்த இடம் ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. பவிசா லேப், Councellor அறையில எல்லாம் போட்டு வெச்சிருந்த கண்ணாடி எல்லாம் கீழே உழுந்து செதறிருச்சு. தரை முழுசும் கண்ணாடிச் சில்லுங்க. இதுல Labக்கு செருப்பு போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறதால நாலு பேரும் வெறுங்கால இருக்காங்க. எல்லாரும் கண்ணாடிச் சில்லுன்னு கூட பார்க்காம அடிச்சு புடிச்சு கீழே ஓட ஆரம்பிச்சாங்க. புஸ்தகப் பை, சாப்பாட்டு பை, செருப்பு, ஷூ எதுவும் யாருக்கும் தெரியல, உசுர கையில புடிச்சுகிட்டு ஓடுறாங்க. எங்கப் பார்த்தாலும் பதட்டமான மக்கள். பீதி, பயம், உசுரு மட்டுமே அப்போ பிரதானம். டுப்புன்னு வேற எங்கேயோ சத்தம். அவ்ளோதான், யாரும் யாரையும் பார்க்கல. friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழே வந்துதான் நிப்பாடினாங்க.

கட்டடம் முழுசும் பொகையா வருது. டயரு எரியிற மாதிரி நாத்தம். அய்யோ அம்மான்னு எல்லா இடத்துலேயும் கூச்சல், உசுருக்கு பயந்துட்டு வெறுங்காலுல ஓடும் போது கண்ணாடிப்பட்டு RRT முழுக்க போட்டு வெச்சிருந்த வெள்ளை டைல்ஸ்ல எல்லாம் ரத்தம். கீழே இருந்த மூணு பேரும் ஹீரோவத் தேட நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு பொறுமையா நடந்து வராரு. நாலு பேரும் மனசுலேயேயும் உசுரு பொழைச்ச சந்தோசம், அதுல காதலையும், காதலியியையும், வாங்கி வெச்ச ரோஜாவையும் மறந்துட்டாங்க. அப்பதான் ஹீரோ சொன்னார் “மாப்பிள்ளைங்களா, எல்லாரும் ஊர் போய்ச்சேருவோம், அப்புறம் மீதிய பேசிக்கலாம்”ன்னு சொல்லிட்டு கெளம்பி போனாங்க.

அன்னிக்குதான் அத்வானி மீட்டிங்கின்னும், 12 குண்டு வெடிச்சதுன்னும் 33 செத்துப்போய்ட்டாங்கன்னும், 4 பேருக்குமே வீட்டுக்கு போன பிற்பாடுதான் தெரிஞ்சது.

”அப்புறம் என்ன ஆச்சுமா? ஹீரோ அப்புறமாவது படிச்சாரா? வேலை கெடச்சுதா?”

“அப்புறமாத்தான் படிச்சாரு, 8 வருசம் கழிச்சு டிகிரி முடிச்சாரு. MCSE முடிச்சாரு. நல்லா வேலை கிடைச்சு, இப்போ நம்ம உசுர வாங்குறாரு”

“யாருமா அது?”சூர்யா.

“அதோ என்னத்தை திட்டினாலும் வசூல்ராஜால பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பாரே அவர்தான். அங்க உக்காந்துகிட்டு நட்சத்திர பதிவுக்கு பின்னூட்டம் வருதான்னு பார்க்குது பாரு அந்த ஜென்மம்தான்”

“உசுர கூட மதிக்காம செருப்புதான் முக்கியம்னு நினைச்ச இளா அப்பாதானா அது?”

Update: நான் ஓரளவுக்கு நல்ல நெலைமையில இருக்குறதுக்கு இந்த மூணு பேரும் ஒரு காரணம். அவுங்களுக்காக இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்

Tuesday, July 29, 2008

இந்து மதத்திற்கு மட்டும் ஏன்?



இவுங்க கேட்குற கேள்வில உண்மையா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும். எந்தப் பக்கத்திலேயும் ஒரு நியாயம் இருக்குமாம். ஒரு நிமிஷம் யோசிக்க வைச்சதுங்க. அப்போ இது? தனிமடல்ல வந்த இந்த presentation நியாமான கேள்விகளான்னு சொல்லுங்க??


டிஸ்கி: தலைப்பு ச்ச்ச்சும்மானாச்சுக்கும்..மாத்திருவோம்.கோச்சுக்காதீங்க மக்களே.

Friday, May 30, 2008

நான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile Vidhya



But நானும் ஒரு Human Being தானேன்னு வித்யா சொல்லும் போதும், 10 மணிநேரமாவது துக்கமாவே இருப்போம்னு தேவி சொல்லும்போதும்- கண்ணீர் விட வெச்ச சில தருணங்கள்.

பல வருஷம் ஆச்சு இப்படி ஒரு வெட்கத்தைப் பார்த்து- வாழ்த்துக்கள் வித்யா.

வித்யா என்கிற ஒரு பொண்ணுக்குள்ள இப்படி ஒரு தைரியமா? தெளிவா? இப்படியுமா ஒரு மனசு கல்லு மாதிரி... மன்னிக்கனும் ஒரு அற்புத சிலை மாதிரி இருக்கும். Hats Off வித்யா.

ஹேமா மாதிரி எல்லாருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிற கூடாதா ஆண்டவா..

Wednesday, May 28, 2008

எடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு

முதன் முறையாக தென்னிந்தியாவில் கோலேச்சி உள்ளது பாஜக. வாழ்த்துக்கள்!
பெங்களூர் உள்ளூர் முன்னேற்றத்துல குமாரசாமி ஒரு வேகத்தை கொண்டுவந்தாரு. முடிஞ்ச வரைக்கும் அவர் கட்சியால தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்காரங்களுக்கு பிரச்சினை வராம பார்த்துட்டு இருந்தாரு. அப்பவும் வேதிகே, காட்டாளு, ரேணுகா எல்லாம் வந்துட்டு இருந்தாலும் கொஞ்சம் நாம மூச்சு விடற மாதிரி வெச்சு இருந்தாரு. இதை பாஜக காப்பாத்துமா?

இனி நம்ம மேட்டருக்கு வருவோம்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒத்திப்போட்டு தனது சாணக்கியத் தனத்தை மறுபடியும் நிலைநாட்டினார் தலைவர். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டபடியால் கூட இருக்கலாம். ஆனால் வாட்டாள், காட்டாள் மாதிரி ஆளுங்ககிட்டே எல்லாம் மோதி மக்களை காயப் படுத்த வேணாம்னு நினைச்சு இந்தத் திட்டத்தோட செயலாக்கத்தை ஒத்தி வெச்சாரு. ஆனா கர்நாடக மக்கள் வாட்டாளுக்கும்,, காங்கிரஸுக்கும் சேர்த்தே ஆப்படிச்சுட்டாங்க. இதுல மண்டை காயறது வழக்கம் போல தமிழனுங்கதான். குறிப்பா தர்மபுரி மாவட்ட மக்கள். இனி கலைஞர் என்ன செய்வாரு?? விகடனுக்கு எடியூரப்பா சொன்ன விஷயம் கலைஞர் வயித்துல புளிய கரைச்சு இருக்கலாம்.

விகடன் கேள்வி: 'நிலையானஅரசு கர்நாடகத்தில் வரட் டும் என்றுதான் திட் டத்தை ஒத்தி வைத்தார் எங்கள் முதல்வர்.தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?''

எடியூரப்பா: (கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே) 'இந்தக் கேள்வியைத்தான் முதல்ல

கேட்பீங்கனு நினைச்சேன். ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.

தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''



ஆக மொத்தத்துல அம்மாவுக்கு அடுத்த தேர்தல்ல பேச அவல் கிடைச்சாச்சு, எப்படியும் கூட்டு வெச்சுக்குவாங்க. அப்புறம் என்ன? இந்த முறை நாடாள(!)மன்ற தேர்தலுக்கு ஒரு செம ட்ரம்ப் கார்ட் கிடைச்சாச்சே. அதுக்குள்ள இந்தப் பிரச்சினைய முடிக்க தலைவர் பார்ப்பாரு. பஸ் எரியாம, ரத்தம் பார்க்காம விடமாட்டாங்க போல இருக்கு. இந்த விளையாட்டுல வழக்கம் போல தோத்து போயி காய்ஞ்சு கருவாடா போறவங்க நாமதானுங்களே. ஒழுக்கமா வாழ விடுங்கப்பா..

Saturday, March 1, 2008

KADHALIKKA NERAMILLAI - Title Song

ஒரு மூணு வாரமா மனசுல இந்தப்பாட்டத் தவிர எதுவுமே ஓட மாட்டேங்குதுங்க. நாடகம் பார்க்கிற பழக்கம் இல்லைன்னாலும் இந்த தலைப்பு பாடல்கள் கலக்கோ கலக்குன்னு கலக்குதுங்க. மெட்டி ஒலி, கங்கா யமுனா சரஸ்வதி, ரயில் ஸ்நேகம் இப்படி நெறைய சொல்லிகிட்டே போவலாம். இப்போ விஜய் ஆண்டனி பாட்டு சின்னத்திரையில கலக்கிட்டு இருக்கிற நேரத்துல அவரை பாராட்டியே ஆவனும். ஏற்கனவே "கனா காணும் காலங்கள்" பாட்டு கலக்கிட்டு இருக்க இப்போ இது கலக்கிட்டு இருக்கு. கூகிள்ல இந்தப்பாட்டை நாந்தான் மொதல்ல தேடுறேனு நினைச்சா 10 ஆயிரம் பேரு அதுக்கு முன்னாடியே தேடி இருக்காங்க. அதான் பதிவுல மக்களுக்கும் இந்தப் பாட்டை குடுக்கலாம்னு ஒரு எண்ணம். பாடல் வரிகள் கூட பாட்டும் இருக்கு. பிரஜன் உனக்கு எங்கேயோ மச்சம்யா...

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)


For Download : Here

பாடலைப் பார்க்க




இந்தப் பாடல் தேன்கிண்ணம் குழு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Thursday, February 28, 2008

எனக்கு இந்தப் பரிசு வேண்டாம்- யாருக்காவது வேணுமா?

Claim Ref. Number: 34V/27N/30H 03NL
Batch Number: EZ90 556 MB-NL 88
SERIAL NO: 289567-09

Sir/Madam,
This email is to notify you that your
Email
Address attached to a Ticket Number(00106912000.00) has won an
Award Sum of Euro 1,000.000.00(One Milliom EURO)In an Email Sweepstakes
program held on the 26th of Febuary 2008. Please contact the claim
officer through the below given contact information for the Claim
CASINO LOTTERY CLAIM AGENCY.
casinoclaim@gmail.com

WINNING
INFORMATIONS
Ref Number (34V/27N/30H 03NL)
Serial Number 78097
lucky
Numbers 4426765
Batch Number: EZ90 556 MB-NL 88
Serial No: 289567-09
Please forward the above stated winning information with your name and
telephone to the Euro Claim Agent.
........................................................................................................................
Congratulations!!!

Mrs Precious Walker.
Reply email: casinoclaim@gmail.
com

Tuesday, December 18, 2007

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று...

'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...'

& பிரமிளின் புகழ்பெற்ற இந்தக் கவிதையை வெளியிட்டது 'அஃக்' இதழ். எட்டு ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.

அதை நடத்திய பரந்த்தாமன் அச்சுக்கும் பதிப்புக்குமாகச் சேர்த்து மூன்று முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில் ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.

''இலக்கியம், சினிமா, ஃபுட்பால்... இதெல்லாம்-தான் இந்தப் பரந்த்தாமன். இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள் தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,


சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச் சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப் படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர் ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தேன்.

அப்போ சேலத்தில் 'இம்பீரியல்'னு ஒரு தியேட்டர் இருந்தது. மரக்கடை கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின், ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர் பத்திரிகையில் 'ரே'யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க. நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும், கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்'' என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து பேசுகிறார் பரந்த்தாமன்.

''நான் பிறந்த ஆறு மாசத்திலேயே அப்பா இறந்துட்டார். அம்மாதான் என்னை வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால் ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும் பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது. ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்; கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன். அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ, பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத் துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம் நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!'' என்கிறார் பரந்த்தாமன்.

''ஒரு நாள், சேலத்துக்கு கு.அழகிரிசாமி வந்தி-ருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். 'என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?'னு கேட்டார். 'ஒண்ணுகூடப் படிச்சதில்லை'னு சொன்னேன். சிரிச்சுட்டு, 'நீ இப்படித் தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு வர்றியா?'னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை, சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, 'என் கூட வா! உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்' என்றார். பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.

அம்மாவிடமும் நண்பர்களிடமும் பணம் வாங்கி 'அஃக்' பத்திரிகை துவங்கினேன். எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன் எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள் எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான் முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள். எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.

காசு? மறுபடியும் அம்மா-தான்! தன் ஒரே மகனுக்கென்று அம்மா கஷ்டப்பட்டு ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து 'பிருந்தாவனம்' பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன். அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள் அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள் மடிந்துவிட்டது.

வண்ணதாசனின் 'கலைக்க-முடியாத ஒப்பனைகள்' என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும் பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும் என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில் எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.

அம்மா எனக்காக வைத்திருந்தது இரண்டே இரண்டு சொத்துக்கள். ஒன்று, வீடு; மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத் தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள் மட்டும்-தான்'' என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.

பரந்த்தாமனுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் சரியான வேலை இல்லை, குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.

அன்று நண்பனிடமிருந்து பெற்ற ஃபிலிம்-ஃபேர் பத்திரிகை அட்டைப் பட சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள் இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.

நன்றி-விகடன்

Tuesday, October 16, 2007

கற்றது கணக்கு- Bsc(Maths)

"அப்பா, எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்தான்பா படிக்கனும். அதுதான்பா என்னோட விருப்பமே. வாசவியோ, ஈரோடு ஆர்ட்ஸோ சேர்த்து விட்டுருங்கப்பா."

"ராஜா. கணக்கு படிச்சா உடனடியா அரசு வேலை கிடைக்கும். UPSC, TNPSC எல்லாம் எழுத வசதியா இருக்கும். நான் சொல்றேன் நீ, கோயமுத்தூர்ல தான் படிக்கிறே, அதுவும் ஹாஸ்டல்லதான் BSC Maths படிக்கப்போறே. சொல்லிட்டேன். வேற எதுவும் பேச வேண்டாம்"

அப்பா பேச்சு தட்ட முடியாமல் கோவையில் உள்ள பிரபல கலைக் கல்லூரியில் கணக்கு படிக்க ஆரம்பிச்சான் ராஜா. படிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், அவனுக்கு விருப்பமான விஷயங்களில் கவனத்தைத் திருப்பினான். வேலையத்த வேளையில செய்யுற ஓவியமும், ஷட்டில் பேட்மிண்டனும் அவனுக்கு விருப்பமா இருந்து இருக்கு. அந்தக் கல்லூரியில் இரண்டுக்கும் சொற்பமான மக்களே இருந்தார்கள், இதையெல்லாம் பண்ணினா சோத்துக்கு என்ன பண்றதுன்னு எவனும் சீண்டாத ஏரியா இது. அப்படியே ஓவிய கமிட்டி சேர்மன், பேட்மிண்டனுல பல்கலைகழக்த்துல ஒரு நல்ல இடமுன்னு வாங்கி காலேஜுக்கு போவாம ஓபி அடிச்சுகிட்டே இருந்துட்டான்.

இப்படியே 2 வருஷத்தையும் ஓட்டிட்டான். அதே சமயம் ஏனோ தானோன்னு 40% வாங்கி எல்லா பாடத்திலேயும் பாஸும் ஆகிட்டானுங்க ராஜா. ஆனா இந்தச் சனி இருக்கு பாருங்க, அது மனுசன் கழுத்துல கட்டி நுனிக்கயித்த கையில வெச்சுக்கும், "மவனே ஓடுடா. கடேசியா உனக்கு வெக்கிறேன்"னு வெக்கும் ஆப்பு.

அப்படித்தான் இவனுக்கு கடேசி வருஷம் 5th Sem, 6th Sem எல்லாத்துலேயும் கப்பு. வேற வழியே இல்லே. ஊருக்கு டிகிரி வாங்காம வந்தா மானம் போயிருமேன்னு "என்ன கருமத்தையோ படி, ஊரு பக்கம் மட்டும் டிகிரி வாங்காம வந்துராத"ன்னு இருக்கிற நகையெல்லாத்தையும் அடமானம் வெச்சு 20ஆயிரத்தை ராஜா கையில குடுத்துட்டாங்க.

என்ன பண்ணுவாங்க அவுங்க மட்டும். இவனும் ஏதாவது டிகிரி வாங்கி குரூப் பரீட்சை எழுதி முன்னேறிடுவான்னு கற்பனை அவுங்களுக்கு. "ஆசை இருக்காம் தாசில்தார் ஆவ, யோகம் இருக்காம் கழுதை மேய்க்க".

ராஜாவோட கூட்டாளி ஒன்னு சொன்னான் "மாப்ளே! ஒரு கோர்ஸ் இருக்காடா. இண்டெர்நெட்ல பரீட்சையாம். உடனே ரிசல்டாம். பாஸானா உடனே வேலையாம்டா. "

"என்னடா ஒளற்ர, எப்படிடா உடனே திருத்தி குடுப்பாங்க?"
"இல்லே மாப்ளே. வெட்டியாத்தானே இருக்கோம். வா, ஆப்டெக் வரைக்கும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்"னான்.

காந்திபுரம் பேர்ந்து நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கிற RRT(RajaRajeshwari Towers) ல 5 வது மாடியில இருக்கு ஆப்டெக். செமத்தியான ஃபிகருங்க,. ஜொள்ளிக்கிட்டே கவுன்சலரை பார்க்க போனான் ராஜா. கோர்ஸ் என்னான்னே தெரியாம "Internet Exam, result "ன்னு உளற ஆரம்பிச்சான். இவன் என்ன சொல்ல வரான்னு அவங்களுக்கு சுத்தமா புரியலே. அந்த கவுன்சலரு நல்ல ஃபிகரு. இவன் சொல்றதை எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு ஒரு Broucherஐ எடுத்து முன்னாடி வெச்சு ஆரம்பிச்சது, அதனோட உளர்றலை. இப்போ இவனுக்கு ஒன்னும் புரியல. அப்படியே அவனை கூட்டிக்கிட்டு போயி லேப், கிளாஸ் ரூம் எல்லாம் காட்டுச்சு. அடடா, அடடா, எத்தனை பொண்ணுங்க, எப்படி பசங்களோட சோடி போட்டு படிக்குதுங்க., நேர்த்தியா டிரஸு, ரூமு, பிகரு, "ராஜா, கலக்குறே"ன்னு மனசுக்குள்ள 100 வயலினை வாசிச்சுகிட்டே சொல்லிட்டு போனாங்க தேவதைங்க.

ஆனாலும் "Internet Exam, result " அப்படியெல்லாம் இந்த ஃபிகரு சொல்லவே இல்லியே, மறுபடியும் இவன் உளரலை ஆரம்பிச்சான். அப்போதான் அந்த ஃபிகருக்கு புரியவே ஆரம்பிச்சது. "இவனுக்கு Softwareக்கும், Hardwareக்குமே வித்தியாசம் தெரியல. எவனோ சொன்னான்னு நம்ம தாலிய அறுக்கிறான்" அப்படின்னு மனசுக்குள்ள நினனச்சிக்கிட்டு. "ஓஹ், நீங்க எதிர்த்தா மாதிரி இருக்கிற கவுன்சிலர்கிட்டே பேசியிருக்கனும் ராஜா. வாங்க அந்த டிபார்ண்மெண்ட்க்கு கூட்டிட்டு போறேன்னு எதிர்த்தா மாதிரி இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே "தூ, இதெல்லாம் ஒரு இடமா? எங்கே பார்த்தாலும் ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டருங்க. ஒரு பொட்டிக்கும் டப்பா இல்லே. எல்லாம் தொறந்தே கிடக்கு. அதுக்கு மேல ஒரு ஃபிகர் கூட இல்லே. அட ஃபிகர் இல்லாட்டி விடுங்கப்பா. ஒரு பொண்ணுங்க கூட இல்லே" என்ன தலை விதிடா. சரி, இங்கே படிக்க அங்கே சைட் அடிக்கன்னு ஆரம்பிச்சான் அந்த கோர்ஸை.

3 மாசம் முடிஞ்சவுடனே placement. சம்பளம் அதிகமில்லை ஆனாலும் நாய் பொழப்பா இருந்துச்சு. ஆனாலும் ஒரு சந்தோசம், ஒரு software மக்களுக்கு வேலை கிடைக்கிலே. இவனுக்கு சோத்துக்கு பஞ்சமில்லாம ஆச்சு. அடிச்சு புடிச்சு 8 வருஷத்துல டாக்டர் படிப்பை விட பெருசா டிகிரி முடிச்சான். அப்படியே படிப்படியா Network Engineer, System Admin அப்படின்னு graphல ஒரே ஏறுமுகம்தான். Bsc Maths படிச்சுட்டு Engineerன்னு விஸிட்டிங்க கார்டு வாங்கின ஒரே ஆள் இந்த ராஜா. அவுங்க அம்மாவுக்கு பெரிய சந்தோசம் வேற. பின்னே மவன் கணக்கு படிச்சாலும் ஒரு பெரிய இஞ்சினியர் ஆகிட்டான்ல.

Sep-11 கூட இவன் வேலைக்கு ஒரு தொந்தரவும் பண்ணல. பிறகாலத்தில் பெரிய புராஜக்ட் மேனஜரா ஆவனும்னு பிலாகுல பதிவு எல்லாம் போடுறான்னா பார்த்துக்குங்களேன். அதானால Bsc Maths படிச்சா இஞ்சினியர் ஆவலாம். அதுவும் கம்பியூட்டர் இஞ்சினியரு.

Monday, August 27, 2007

Work from Home-1


Working From Home- இது ஏதோ மேனேஜர்களுக்கு மட்டும்தான்னு இருந்த காலம் போயி, இப்போ எல்லாரும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதென்ன Work From Home? அலுவலகத்துக்கு போகாம வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதுதான் இந்த முறைக்கு அர்த்தம். இது எந்த அளவுக்கு IT சாராத தொழிலுக்கு பொருந்துங்கிறதுதான் எனக்கு தெரியல. மக்களை சந்தித்தே ஆகனும்னு இருக்கிற தொழிலுக்கு இது பொருந்தாது(உதாரணம்- மருத்துவம்). அதிலும் சில இடத்துல செய்ய முடியும். ஆனா இதை என் அலுவலகத்துல ஒரு விளக்கமா குடுத்தப்போ நிறைய எதிர்ப்புகள் வந்தாலும், பிறகு எல்லா மட்டங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்துறதுதாங்க கொஞ்சம் கஷ்டம். இது அடுத்த தலைமுறைக்கான யோசனையா இருக்கலாம். இதனால கிடைக்கும் பலன்கள் அதிகம். உள் அரசியல் இருக்காது, வேலைக்கு போகும் நேரம் குறையும், தனிப்பட்ட வேலைக்கான நேரம் அதிகமாகும், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் கூடலாம். இதைப்பற்றி நிறைய அலசலாம் வாங்க.

Wiki வழக்கம் போல ஒரு விளக்கம் குடுத்து இருக்காங்க.

A Work-at-Home scheme is a Get-rich-quick scheme in which a victim is lured by an offer to be employed at home, very often doing some simple task in a minimal amount of time with a large amount of income that far exceeds the market rate for the type of work. The true purpose of such an offer is for the perpetrator to extort money from the victim.

Work-at-home schemes have been around for decades. Originally found as ads in newspapers or magazines, they have expanded to more high-tech media, such as television and radio ads, and on the Internet.

Legitimate work-at-home opportunities do exist, and millions of Americans do their jobs in the comfort of their own homes. But anyone seeking such an employment opportunity must be wary of accepting a home employment offer, as only about one in 42 such ads have been determined to be legitimate [1]. Most legitimate jobs at home require some form of post-high-school education, such as a college degree or certificate, or trade school, and some experience in the field in an office or other supervised setting.

(தொடரும்)

Wednesday, August 8, 2007

அமெரிக்காவும் கொல்டியும்

இந்த மக்களைப் பத்தி நிறைய சொல்லலாங்க. அதுவும் ITல இருக்கிற கொல்டிக்களைப் பத்தி. இவுங்க ITக்கு வந்துட்டா இவுங்க கனவு, வாழ்க்கை எல்லாமே அமெரிக்காதான். வேற எந்த நாட்டுக்கு போனாலும், அமெரிக்கா, பச்சை அட்டை கனவு மட்டும் அவுங்களுக்கு போகவே போகாது. எங்கம்பெனியில இருந்த நண்பன் 3 வருசமா ப்ராக்(Czech Republic) இருந்தாரு. ஆனாலும் அமெரிக்கா போயே ஆகனும்னு சொந்த காசைப் போட்டு அமெரிக்கா போய்ட்டாரு. அது என்னமோ இவுங்களுக்கு மட்டும் எப்படித் தான் விசா கிடைக்குதோ தெரியல. இவுங்களுக்கு இருக்கிற மொழிப்பற்று, சினிமாப் பற்று, மாநிலப்பற்று, கொல்டிங்க பற்று என்னை ரொம்பவே சிலிர்க்க வெச்ச விஷயம்.

இதுல ஒரு Spreadsheet மெயில வந்துச்சு. அமெரிக்க வாழ் கொல்டி மக்களின் வரதட்சணை பட்டியல் அது. கொல்டி மக்கள் அமெரிக்காவுல இருந்த காலத்தைப் பொறுத்தே வரதட்சணை நிர்ணயமாகுதாம். அந்த Spreadsheetல கடைசி வரிதான் அருமை. வயது: 27-32, இருப்பு:பச்சை அட்டை, படிப்பு: இஞ்சினியரிங், வரதட்சணை: Unlimited. அடங்கொக்க மக்கா இது என்ன சரவணபவன் மீல்ஸா?

Grand Canyon போயிருந்த சமயம், அந்த ஊர்ல சின்னதா இருக்கிற பேருந்துல தான் சுத்தி பார்க்க முடியும். அப்படி போய்ட்டு இருக்கும் போது ஓட்டுனர்கிட்டே பேசிட்டே வந்தேன். அப்போ அவர் கேட்ட கேள்வில எனக்கு சிரிப்பு தாங்கவே முடியல. "இந்தியாவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டாங்களா?"ன்னு கேட்டாரு. ஏன்னா? பேருந்துல இருந்த அத்தனை மக்களுமே இந்தியர்கள். ஆனா நமக்குதானே தெரியும், அங்கே இருந்தவங்க யாருன்னு. நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்ம கூட வந்த கூட்டாளி "என்னப்பா சிரிக்கிறே?"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர்கிட்டே"ஆந்திராவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டிங்களா?"ன்னு நான் கேட்டேன், ஏன்னா அவரும் ஒரு கொல்டிதான்.


இனி துணுக்குகள்:

1) "மாப்ளே இந்தியா போறே எங்களை எல்லாம் மறந்துடாதடா? ஹ்ம்ம் ஹ்ம்ம் கிளம்பு"

"Hello Excuse me, could you please....."

"மாப்ளே என்னடா? இப்படி சொன்னா முன்னாடி போவாங்களா? அவுங்களுக்கு புரியற மாதிரி சொல்லு. இப்போ பாரு, ஜருகண்டி, ஜருகண்டி, ஜருகண்டி ஜருகண்டி"

2) அமெரிக்கா போவாம நீ படிச்சு என்ன ஆவப்போவுது, கம்னு விவசாயம் பார்க்க வந்துரு.

3) "ஏழுமலைவாடா வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா" லாஸ் வேகாஸ் ஹோட்டலில் தங்கி இருந்த போது பக்கத்து அறையில் பூசை சத்தம் :). அட அநியாய ஆபிசர்களா, இங்கே வந்துமா?

4) "எத்தனை லட்சம் செலவு பண்ணியாவது அமெரிக்கா போயிடனும். அப்புறம் அதை ரிட்டர்னா கல்யாணத்துல வாங்கிக்கலாம்" ஒரு ரெட்டிகாரு "தம்" பிரேக்ல சொன்னது.

5) அமெரிக்காவுல் இருக்கிற எல்லா Consultantsம் அவுங்கதான்.

6)SAP-ன்னா என்ன அர்த்தம் தெரியுங்களா? Systemanalyse und Programmentwicklung அப்படின்னு சொன்னா அது தப்பாம். State of Andrapradeshதான் சரியாம் அவ்ளோ மக்கள் SAPல வேலை பார்க்கிறாங்க. காரணம்?

7) நம்ம ஊர்ல பெரிய Software, pirated கிடைக்காதுன்னு சொல்ற விசயம் அங்கே 30 ரூபாய்க்கு கிடைக்கும்னு சொல்லி நம்மள கதி கலங்க வெப்பாங்க? எப்படீய்யா?

8) ஆந்திரான்னாவே Consulateல ஒரு முடிவோடதான் இப்பவெல்லாம் application பார்ர்கிறாங்க.

9) அதுசரி, தெலுங்கு மக்களுக்கு கொலுட்டின்னு எப்படி பேர் வந்துச்சு? தெலுகுவை திருப்பிபோடு, கமுத்திப் போடுன்னு கதை விடாதீங்க. உண்மையான காரணம் தெரிஞ்சா சொல்லுங்க.

இது நமக்கு தெரிஞ்ச விசயம்தான், இன்னும் இருந்தா "செப்பண்டி"

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)