Thursday, July 31, 2008

குசேலன் - கதை

குசேலனின் கதை என்ன எல்லாரும் குழப்பிக்க வேணாம். இதுதான் உண்மையான கதை. இது விமர்சனம் அல்ல. கதை மட்டுமே.

The story is set in a small village puthoor. A barber Balan (Pasupathi) is poor with his wife Sredevi (Meena) and three children. He is not able to cope with modernization with a new air condition beauty salon / parlour opened by Sarasan (Vadivel) set up opposite his shop. He does not get license or a loan for the salon. He is in debt and ridiculed by everyone in the village.


Life is tough for him – he does not have money to pay children's school fee, nor knows how he is going to have his next meal for his family. There enters a superstar Rajni (as Rajni), who is going to come to the village for a ten day shoot. The whole village is excited in preparing their superstar's arrival. Slowly a word spreads that Balan and Rajni are childhood friends. Balan, who was a laughing stock, becomes the center of attention. Everyone goes out of their way to help Balan in every way, so that they can get a favor when Rajni arrives to the village. Balan is under pressure from everyone to part a favor of Rajni. When Rajni arrives, Balan tries his best to approach Rajni – but his honesty and status of barber, does not allow him to go pass through the police security. When the village people know that Balan is not able to help them for a favor, they start taking their support to Balan back, abusing him of cheating them.

Balan depressed and sad is back to his old self. Rajni gives a ceremonial speech at a school function where he talks about today's life, modernization, the state of good people etc. opening eyes of everyone to the sad truth of peoples behavior. In the end, Rajni goes to meet Balan at his house, and Balan becomes an overnight hero in the eyes of his village people.

மேல இருக்கிறது "கத பறையும் போல்" படத்தின் கதை, IMDBல இருந்து எடுத்தது. அப்படியே பாத்திரங்களின் மட்டும் மாத்தி போட்டு இருக்கேன். இந்தக் கதைய தமிழ்ல எப்படி எடுத்து இருப்பாங்க?
Thanks: Pic: India glitz, Story: IMDB

Tuesday, July 29, 2008

இந்து மதத்திற்கு மட்டும் ஏன்?



இவுங்க கேட்குற கேள்வில உண்மையா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும். எந்தப் பக்கத்திலேயும் ஒரு நியாயம் இருக்குமாம். ஒரு நிமிஷம் யோசிக்க வைச்சதுங்க. அப்போ இது? தனிமடல்ல வந்த இந்த presentation நியாமான கேள்விகளான்னு சொல்லுங்க??


டிஸ்கி: தலைப்பு ச்ச்ச்சும்மானாச்சுக்கும்..மாத்திருவோம்.கோச்சுக்காதீங்க மக்களே.

Tuesday, July 22, 2008

மகசூல்-ஜூலை 22

  • இவ்வளவு கேவலமான அரசியல்வாதிகள் இருக்கிற ஊருலதான் நாம் பொறந்து வளர்ந்தோமா? இதுக்கு சூதாட்டமே பரவாயில்லை. ஓட்டுப்போட காசு, வராம இருக்க காசு, ஏமாத்த காசு. சே.


  • தமிழ்ப்பதிவுகள் எல்லாம் அரசியல் பேசாம காலம் தள்ள, டுவிட்டரில் Commentary அருமை. ஒரு பாராளுமன்றதுக்குள்ள உக்காந்து இருந்த திருப்தி.
  • விலைவாசி இப்படி ஏறிக்கிடக்க இந்த ஆட்சி கவுந்திருந்தாவே பரவாயில்ல.

  • Pan அட்டை தொலைஞ்சு போயிருச்சு. என்ன பண்ண? புதரகத்துல இருந்து வாங்கலாம்னா பழைய அட்டை எண்ணும் மறந்து போச்சு.

  • சத்யம் பாட்டுக்கள மொத தடவை கேட்கும் போது நல்லாதான் இருந்துச்சு. ஆனாலும் சக்கர கட்டி திரும்ப கேட்கத்தோணுது. சத்யம் அடடா பாட்டுக்கும் சக்கரகட்டி டேக்ஸி பாட்டுக்கும் நெறைய சம்பந்தம் போல இருக்கே.

  • குசேலன் பாட்டுங்க ஏன் இப்படி இருக்கு? படத்துல நல்லா எடுத்திருப்பாங்களோ?

  • ஆயுதம் செய்வோம் பார்த்தேன். முன்னா பாய் மூணாவது பகுதியோ?

  • வல்லமை தாராயோவுக்கும் மெளன ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?

  • காவல் நிலையம் போக வேண்டிய கட்டாயம் வந்திருச்சு. தொலைச்சதை காவல் நிலையத்துல தேட வேண்டியதா இருக்குங்க.

  • வெயில் இங்கே தாளிச்சு எடுக்குதுங்க. என்ன கொடுமைங்க இது. நான் புதரகத்துலதான் இருக்கேனா?

  • கண்ணாடி போட்டு பழகியாச்சு. (வேற என்ன பண்ண?)

Wednesday, July 16, 2008

பெயரிலிக்கு ஒரு யோசனை

தமிழ்மணம் நிர்வாக குழுவிலிருக்கிற பெயரிலி(எ) இரமணீதரன் அவர்களே, உங்களுக்குமா தமிழ்மணம் பத்தி தெரியலீங்க? உங்களுக்குத் தெரியாத தொழில் நுட்பமா?

உங்களோட பேரு -/பெயரிலினு வெச்சு இருக்கீங்க. இதனால உங்க மறுமொழிகளை தமிழ்மணத்துல படிக்க முடியுங்களா?

மேலும் இந்தத் தொடுப்பைப் பாருங்க( ம திரட்டில வரும் ))

http://tamilmanam.net/comments/-/பெயரிலி. இது வேலை செய்யாதுங்களே... யோசனைய சொல்ற அளவுக்கோ சண்டை போடுற அளவுக்கு நாங்க எல்லாம் பெரிய ஆளுங்க இல்லீங்க அப்படின்னு இங்கே நாம் சொல்லிக்கிறோமுங்க.


அட இப்படி மொக்க போடவா பெரியவங்க பேர இழுக்கனும்.... இருங்க..

ஒரு யோசனை சொல்றேங்க. ஒரு பந்தை எடுத்துக்குங்க, ஒரு செவுத்த பார்த்து வீசுங்க. பந்து திரும்பி உங்களுக்கே வந்துரும். மறுபடியும் வீசுங்க. திரும்ப உங்களுக்கே வரும். வீசிட்டே இருங்க வந்துட்டே இருக்கும். இதனால செவுரு என்ன ஒடைஞ்சா போயிருங்க?



ஏதோ ஒன்னை முடிவு பண்ணியாச்சு, அதை செஞ்சாச்சு அப்புறம் எதுக்குங்க எல்லாரும் எல்லாத்துக்கும் வெளக்கஞ்சொல்றீங்க? இப்படி வெளக்கம் சொல்லிச் சொல்லியே தமிழ்மணம் முழும் வெளக்கமாவும், குத்தஞ்சொல்றதாவும் இருக்கு.

இந்தப் புண்நவீனத்துவியாதிங்க இருக்காங்களே அவுங்களுக்கு காமம், கருமாந்திரம், மூத்திரம் ...இப்படி வார்த்தைங்க போட்டுதான் எழுத வருமா?. நல்லதா எழுதினா நாறிப்போயிருவாங்களா? இல்லே புண்நவீனத்துவம் பழசாகிருமா?

ஆடி-1

இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. பிரிச்சு வெக்கிறது தான் வெக்கிறீங்க கல்யாணம் ஆகி கொழந்த குட்டிங்க இருக்கிறவங்களா பார்த்து பிரிச்சி வெக்கிறது. அப்படி பிரிச்சு வெச்சுட்டா இந்தக் கருமம் புடிச்ச தள்ளுபடி இருக்காதுல்ல. அது என்னய்யா புதுசா கண்ணாலம் ஆனவங்களை மட்டும் பிரிக்கிறது? அது பாவமில்லையா?

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம்.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு இருக்கிற தேங்காயால அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க..

ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே போட்ட பதிவுதானுங்க... [நன்றி]

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)