Monday, July 27, 2015

கரும்புனல் - ஒரு வாசகனின் பார்வை

ங்கே வந்த புதிதில் அமெரிக்கர்கள் படிப்பதைக்  கண்டு வியந்து பார்த்திருக்கிறேன். புகைவண்டி, பேருந்து, பூங்கா, கடற்கரை என்று எங்கேப் பார்த்தாலும் படித்துக்கொண்டிருப்பார்கள். சிலர் நடந்துகொண்டே கூட படிப்பார்கள். இவைகளையெல்லாம் ஆச்சர்யமாக பார்த்திருந்தேன். இந்த நாவலை நான் புகைவண்டிப் பயணத்தில் ஆரம்பித்து, பிறகு நடந்தவாரே படித்து, வேலை முடித்து  மீண்டும் நடந்தும் பயணத்திலுமாய் தொடர்ந்து படித்து முடித்தேன். அவ்வளவு சுவாரஸ்யமான நாவல் இது.

சூழலியல் பிரச்சினை(Situation Based) மையமாகக்கொண்டு வந்த நாவல்கள் குறைவு, கரும்புனல் இதை மையமாக வந்த முக்கியமானதொரு நாவல் என்கிற முன்னுரையுடனே படிக்க ஆரம்பித்தேன். The Volcano படம் முடித்து திரையரங்கத்தை விட்டு வெளியே வந்தபிறகு தலையில் சாம்பல் இருக்கிறதா என தட்டிப் பார்த்துக்கொண்டேன். காரணம், அந்தப் படம் என் மீது அந்தளவுக்கு வியாபித்து இருந்தது. வெளியே வந்தும் எனக்கு சாம்பல் வாசம் அடிப்பதாகவே இருந்தது எனக்கு. 

ப்படியொரு பாதிப்பு இந்த நாவலிலும் ஏற்பட்டது, நாவல் படித்து பல மணி நேரங்கள் ஆகியும் புழுதியை நான் சுவாசிப்பதாகவே உணர்ந்தேன். அதுதான் நாவலின் வெற்றி. இந்த நாவலுக்கான வெற்றியே, ஒவ்வொரு சிறு இடத்திற்கும் ஆசிரியர் அளிக்கும் சிறு சிறு விளக்கங்களும், அந்த இடத்தை வர்ணிப்பதுமே. சரியான அளவில் நறுக்குத் தெறித்தார் போல் கதாநாயகன் போகும் இடங்களையெல்லாம் நம்மையும் பயணிக்கச் செய்கிறார். கதாநாயகன் இருக்கும் அறை அதற்கு ஓர் உதாரணம், அங்கேயிருக்கும் கழுவாத அலுமினிய டீக் குண்டாவும், குண்டாவில் ஒட்டியிருக்கும் மீந்துபோன டீயுமே நம் மனக்கண்ணில் வந்து ஓடும். பீஹாரின் சிறு கிராமங்களும், சிறு நகரங்களும் இப்படித்தான் இருக்கும் என நம் மனதில் ஓடவிடுகிறார் ஆசிரியர்.  சந்துரு கொல்கத்தா செல்வதாக இருக்கும் காட்சியில் என் மனதில் உண்மையாகவே அந்த நகரத்தின் சப்தம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
 
முதலில் நெருடலாய் எனக்குத் தோன்றிய விசயங்கள் இரண்டு.  புதிதாய் மக்கள் போகும் கிராமம் நான் மலை மீது இருப்பதாய் நினைத்துக்கொண்டிருந்தேன். 2. சட்டென முடியும் இறுதிப்பகுதி, வாசகனை இப்படி சடாரென அடித்தால்தான் நிலைகுலைவான் என்று ஆசிரியர் நினைத்திருப்பார் போலும்
இன்னும் கதாநாயகன் குடியிருந்த அறை, அந்தப் புழுதி, கிராமம், குவாரி, எல்லாம் ஒரு வாரமாகியும் மனத்துக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆசிரியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். 


 
கதையில் மூன்று நிலை மனிதர்கள்.  
  1. பெருநிறுவன அதிகாரிகள் (Corporate Officers) ஓர் அலுவலகத்திலிருக்கும் உயரதிகாரிகளும் அவரது செயல்பாடுகளும் எண்ணங்களும் எவ்வாறு இருக்கும் எனத் தெளிவாக புரிய இந்தப் புத்தகம் படித்தால் போதும். என்னதான் பெரிய பதவிகளில் இருந்தாலும் அவர்களுக்குள் மேலோங்கி வரும் பண ஆசை, ஜாதி வெறி, நேரம் பார்த்து கழுத்தறுக்கும் திறன், தன் எண்ணங்கள் நிறைவேற தன் கீழ் வேலை செய்யும் பணியாளர்களை பகடைகளாக மாற்றி வெற்றி பெரும் சாணக்கியத்தனம், வேலை ஆக வேண்டுமென்றால் எப்படி எங்கே காய் நகர்த்துவது, அதற்காக எதையும் பலி கொடுப்பது.. 
  2. (ஏழை) ஊர் மக்கள், அவர்களது போராட்டம், அவர்களுக்குள் இருக்கும் பிரிவினைகள், தீவிரவாதம், பிடிவாதம், அவர்களின் ஆசை, மீள முடியாது என்று தெரிந்திருந்தும், அதிலும் தம் ஆசைகளை நிர்பந்திப்பது, படித்த மக்களின் பின்னிருந்தாலும் உணர்வுகளுக்கும் சூழல்களாலும் தவறு செய்வது. ஒரு ஆட்டு மந்தைக்கூட்டமாய் என்னவென அறியாது ஓடும் மக்கள். அவர்களுக்கு தலைமை தாங்குபவர்கள்.
  3. கதாநாயகனின் மனவோட்டமும், நேர்மையும், வீரமென்று சொல்லிக்கொள்ளும் கோழைத்தனமும், மேல் அதிகாரிகளால் வஞ்சிக்கப்படுதலும், நல்லது செய்ய நினைத்த மக்களால் பழி வாங்கப்படுதலும், எந்த காலத்திலும் நல்ல பெயர் வாங்க முடியாது என்கிற நடுத்தர வர்க்கத்துக்கேயான ஒரு பாத்திரம்
இந்த மூன்று நிலை மக்களையும் இணைப்பதே இந்த நாவல், அதுவும், பீஹார் மக்கள், வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள், இருக்கும் விவசாயமும் அற்றுப் போனால் அவர்களின் கதி என்னவாகும் என கதாநாயகி சொல்லும் அந்த ஒரு பக்கம்தான் கதைக்கான மூலமாய் நான் நம்புகிறேன். நிலக்கரி சுரங்க தொழில் இவ்வளவு போராட்டமா என்றும் வியந்துகொண்டிருக்கிறேன். 
 

 
 வாசகர்கள் தவர விடாமல் படிக்கக் கூடிய நாவல் இது.


நூல்: கரும்புனல்
ஆசிரியர்: ராம்சுரேஷ்

வெளியீடு:-
வம்சி பதிப்பகம்
19, டி. எம். சரோன்
திருவண்ணாமலை – 606601

விலை:- ரூபாய் 170/-

Saturday, July 18, 2015

நளபாக பிரியாணி

தையும் வித்தியாசமா செஞ்சே பழகிட்டோமா? அதையே சமையலில் செய்யலாம் அப்படின்னு நினைச்சாலும் நமக்கு ருசி அப்படியே வேணும். கொத்து பரோட்டான்னா நம்மூர் தெருவோர பரோட்டா கடை ருசி வேணும், அதுவும் சால்னா அதிகம் விட்டு, வெங்காயம் தூக்கலா வேணும். நியூ ஜெர்சி எடிசன் மற்றும் சுற்று வட்டாரத்தில் சரியான ஹைதராபாத் பிரியாணி கிடைக்கலைன்னு புலம்பிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பல பேர் ”ஏன் வீட்ல செஞ்சிக்க கூடாதா?” அப்படின்னு உசுப்பேத்த நானும் தயாராகிட்டேன்.

மையல் குறிப்பெல்லாம் அங்கே இங்கே தேடி கிடைச்சது, அப்புறம் வெட்டுறது, நறுக்குவது, தாளிப்பது வேக வைப்பது எல்லாம் சரியா நடந்துச்சு. அளவு பார்த்து பார்த்து எல்லாம் சரியா செஞ்சேன். நமக்கு ருசி அப்படியே வேணும் பாருங்க. குக்கர்ல விசில் விட்டு பக்குவமான நேரத்துல சொன்னபடியே இறக்கிட்டேன்.

நமக்கு ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கிறதும் புடிக்கும். இந்த மூடி வைச்சதுக்கு அப்புறம் மூடி திறக்கிறதுக்கு இடையில் பிரியாணிக்கு தொட்டுக்க அதிகமா வெங்காயம் நறுக்கிப் போட்டு தயிர் பச்சடி செஞ்சாச்சு. ஆங், சொல்ல மறந்துட்டேன் பாருங்க,. ஒரே கல்லுல இரண்டு மாங்கா ஞாபகம் வெச்சிக்குங்க.

குக்கர் திறந்து பார்க்கிறேன், அபாரமான வாசம், ருசி பார்க்கிறேன்..ஹ்ம்ம்ம்ம் அபாரம்ம்ம். அப்படியே என்னைக் கிள்ளிப் பார்த்துட்டேன். நளபாகன் நான் அப்படின்னு மனசுக்குள்ள பெருமிதம்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டா இந்தப் பதிவு முடியாது. பிரியாணி கொஞ்சமா பொங்கல் மாதிரி கொழ கொழன்னு இருந்துச்சு. என்ன பண்ணியும் இனி இதை காப்பாத்த முடியாதுன்னு முடிவு செஞ்சி, தட்டுல போட்டு கரைச்சி குடிச்சிட்டேன். ருசி அபாரம். ஒரே கல்லுல இரண்டு மாங்கா பாருங்க, பொங்கல் + பிரியாணி இரண்டையும் ஒரே சமையலில் முடிச்சாச்சு. கண்டிப்பா இது பிரியாணி மாதிரி ருசி இருந்தாலும் பிரியாணி பதத்துல இல்லவே இல்லை, பொங்கல் பதத்துல இருந்ததால பொங்கிரியாணி அப்படின்னு பேர் வெச்சிட்டேன்.

பின் குறிப்பு:


  1. வாசகர்கள் காறி துப்புவதைத் தவிர்க்க நான் செய்த பிரியாணி படங்களைப் பகிரவில்லை.
  2. இங்கே இருக்கும் படங்கள், இணையத்திலிருது எடுத்து வறுத்தவை


Monday, July 13, 2015

NRIக்கும் வீட்டுத் தரகருக்கும் நடந்த லடாய்

ண்பருக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது, அதாவது முதலீட்டுக்காக (Investment Purpose) ஒரு அடுக்ககத்தை (Apartment) சென்னையில் வாங்க வேண்டும் என்று விரும்பினார் . நண்பர் அமெரிக்காவில் வசிப்பவர், Y2K சமயத்தில் அமெரிக்கா வந்தவர் அப்படியே செட்டிலாகிவிட்டார். இங்கே, அவர் வீடு வாங்கி வசதியாகவே வாழ்ந்து வருகிறார். இந்தியா செல்லும்பொழுதெல்லாம் அங்கே ஏறும் விலைவாசியைக்கண்டு அவருக்கும் ஆசை வந்துவிட்டது. ஒரு வீடு வாங்கிப் போடலாம், 10-15 வருடங்களில் எப்படியும் நல்ல விலைக்கு விற்று ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு வீடு வாங்கி, ரிட்டையர்மென்ட் காலத்தில் அங்கே வாழ்ந்து கொள்ளலாம என்று திட்டம் தீட்டியிருக்கிறார்.

"அவர் ரிட்டையர்மென்ட் காலத்தில் சென்னையின் புறநகர் என்பது கன்னியாகுமரியாகக்கூட இருக்கலாம். " 

 இதற்காக என்னிடம் மற்றும் சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும், எப்படி வாங்கலாம், எப்படி அணுகுவது என்று ஒரு பெரிய பட்டியலே தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.





ரு நன்னாளில், அமெரிக்காவில் இருந்தபடியே விரலசைக்க ஆரம்பித்தார். உறவினர்களிடம் விசாரித்தார், அதாவது உறவினர்கள் இருக்கும் அபார்ட்மென்டிலேயே ஒரு வீடு தேடினார். எதற்காக என்றால் அவர்கள் பக்கத்தில் இருந்தால் வீட்டைப் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று. சில பல இணைய விளம்பரங்களைத் தேடினார். கடைசியாக சில நம்பத்தகுந்த தரகர்களை (broker) தேடிப்பிடித்தார். அந்தத் தரகர்களின் பட்டியலில் ஒருவரை டிக் அடித்தார். காரணம் அவர் நண்பர் கொடுத்த நற்சான்றிதழ். ஒரு நன்னாளில் அந்தத் தரகை அழைத்தார், இரண்டாவது ரிங்கிலேயே எடுத்த தரகர் "ஹலோ சார், சொல்லுங்க" என்று ஆரம்பித்தார். நண்பர், தான் எப்படி அவரை அழைத்தார் எனச் சொல்ல "சரி சார், இன்னொருக்கா கூப்பிடுங்க" என்று சொல்லி அந்த அழைப்பைத் துண்டித்தார். பிறகு நண்பர் அழைத்த அழைப்பிற்கெல்லாம் தரகர் எடுக்கவே இல்லை. கடுப்பாகிட்டார் நண்பர் "என்னடா, நான் காசைக் குடுக்கிறேன், வீட்டைக் காட்டுறதுக்கு அவனுக்கு என்ன கஷ்டம்?, NRIன்னா எவனுமே இந்தியாவுல மதிக்க மாட்டேங்குறான் " என்று திட்டித் தீர்த்தார்.


பிறகு தரகருக்கு நண்பர் பலமுறை அழைத்தும் தரகர் எடுக்கவேயில்லை. எப்படியோ ஒரு நாள் தரகர் ஃபோனை எடுக்க "ஏன் சார், அமெரிக்காவுல இருந்து கூப்பிடறேன், செலவு ஆகுறது ஒரு பக்கம் இருக்கட்டும், உங்க பகல் நேரத்துலன்னா நான் ராத்திரிதான் கூப்பிடனும், அப்படி கூப்பிட்டாலும் எடுக்க மாட்டீங்கிறீங்களே? காசு கறக்க இது ஒரு வழியா" என்று கடுப்பாகவே கேட்டுவிட்டார் நண்பர்.


அதற்கு கூலாக தரகர் "சார், நீங்க எல்லாம் அமெரிக்காவுல இருக்கீங்களோ ஒழிய சென்னை நிலவரம் தெரியறதில்ல. இன்டர்நெட்டுல கண்டதையும் படிச்சுட்டுப் பேசுவீங்க.  நீங்க அடையாறிலியோ, அண்ணா நகரிலோ வீடு கேட்பீங்க. வெளிநாட்டுல வேலை பார்க்கிறீங்கன்னுதான் பேரு, ஆனா  உங்ககிட்ட அவ்ளோ காசும் இருக்காது.  நூறு வீடு கேட்பீங்க, ஆயிரத்தெடுக்கு குறை சொல்லுவீங்க, அப்புறம் ஒன்னையும் புடிக்காதும்பீங்க.  அது பத்தாம, வீட்டுப் படம், ஒரு ரூம் விடாம, டேப் மொதக்கொண்டு டாகுமென்ட் வரை எல்லாத்தையும் ஈமெயில் பண்ணச் சொல்லுவீங்க. ரெட்டை வேலை சார் எங்களுக்கு. இந்த லட்சணத்துல வாஸ்து சரியில்லை, காத்து வராதுன்னு அங்கே இருந்தே சயிண்டிஸ்ட்டாம் கண்டுபுடிச்சி சொல்லுவீங்க. வீடு புடிச்சி குடுத்தாலும் ப்ரோக்கர் காசுக்கு உங்ககிட்ட தொங்கனும், உங்ககிட்ட காசு வாங்க நாங்க ஃபோனா போட்டு காசு அழுவனும். அந்த நேரத்துலதான் நீங்க காந்தி மாதிரி நியாயம் நேர்மை எல்லாம் பேசுவீங்க. ஏன் சார் ஃபோன் பண்ணி தாலி அறுக்கிறீங்க?" டொக்க்க்க்க்க்க்

அத்தோடு அந்தத்  தரகரை அழைப்பதை நிறுத்திவிட்டார நண்பர்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)