’அந்தப் பொண்ணு பாவம்யா’,’ ‘கவர்ச்சி நடிகைன்னா கையப்புடிச்சி இழுத்துருவானுங்களே. வில்லன் நடிகர்களை வில்லனாய் பார்க்கிற சமூகம் ஆச்சே’, ‘அப்பன் பேரை கெடுக்க வந்த புள்ளைய்யா இது’ இப்படி.
சரி, விசயத்துக்கு வருவோம்...
வெங்கட் பிரபு கோவா படம் ஆரம்பித்த சமயம். மள மளவென படங்கள் ஆரம்பித்துக்கொண்டிருந்தார் சோனா. “எங்கேயிருந்துடா மாப்ளே இவ்ளோ பணம் கிடைச்சது.ஹ்ம்ம்ம்,, எல்லாம் ‘அப்படித்தாண்டா’” இப்படி சொல்லி பொருமிக்கொண்டது பொதுசாம். ஒரு படம் கூட முன்னேறவே இல்லை. சூட்டோடு சூடாக வெங்கட்பிரபுவுக்கு(இனி பிரபு) ஒரு சிறியளவில் பணம் கொடுத்து அடுத்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் சோனா(தளங்களில் வருவது போல் 75 லட்சம் அல்ல) எந்த விதமான ஒப்பந்தங்களும் போடப்படவில்லை. இதெல்லாம் நம்பிக்கையின் பேரில் திரையுலகில் நடப்பதுதான். மங்காத்தாவுக்கு ஆரம்பிப்பதற்கு முன்னே படம் ஆரம்பிக்கலாமா என பிரபு சோனாவிடம் வினவ, பணமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என சொன்னாராம் சோனா.
சரண், பிரபு பழக்கம் ஊரறிந்ததுதானே. சிறுவர்கள் முதல் இந்நாள் வரை தொடரும் பந்தம், தனிப்பட்ட முறையில அல்லாது தகப்பனார் இருவரும் “வாடா போடா” என அழைத்துக்கொள்ளுமளவிற்கு நெருக்கம். அப்படியே தொடர்ந்தது சரண்-பிரபு. சரண்/SPB தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்க், பிரபு நடிக்க வந்த படம் உன்னைச் சரணடைந்தேன் மிகப்பெரிய தோல்வி. அதறகு பரிகாரமாக சென்னை 600028, அதே சரண் தயாரிக்க பிரபு இயக்க(குடும்பப்படம் என சொல்லிக்கொண்டார்கள் படப்பிடிப்புத்தளங்களில்), படம் மிகப்பெரிய வெற்றி. இதனிடையில் சரண் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வி.
அதே சமயம் ஒரு கிசுகிசுவிலும் சிக்கிக்கொள்ளாதவர் சரண். அப்பா பேரை காப்பாற்றிக்கொள்ள அரும்பாடு பட்டவர், பணம்/பட விவகாரங்களிலிருந்து மட்டும் அவரால் தப்பிக்கமுடியவில்லை(நேரம் சரியில்லை)
விவரப் பட்டியல்
- 2003 உன்னைச்சரணடைந்தேன் - தோல்வி
- 2005 மழை - தோல்வி- பெரும் பணம் நஷ்டம்
- 2007 சென்னை 600028 -வெற்றி
- 2008 குங்கும பூவும் கொஞ்சு புறாவும் - தோல்வி- பொருள் நஷ்டம்
- 2009 நாணயம் - படத்திற்கு நல்ல பெயர் ஆனாலும் தோல்வி- நஷ்டம்
- 2011 ஆரண்ய காண்டம் - இணையளவில்/வாயளவில் வெற்றி- பெரும் நஷ்டம்- தன்னுடைய கனவாக நினைத்த Kodhandapani studiosஐ விற்றே படத்தை வெளியிட்டார்கள். மீளமுடியாத கடன்.
மங்காத்தாவின் பெரும் வெற்றிக்குப்பிறகு, சரணுக்காக படம் செய்வதென முடிவு செய்தார் பிரபு (Friend Indeed). வழக்கம் போல், இந்த முறையும் சோனாவிடம் ஒரு வார்த்தை கேட்கலாமென பிரபு நினைத்து அழைத்தார். சோனா இந்த முறை படம் செய்யலாமென சொல்ல பிரபுவுக்கு குழப்பம். காரணம், விசாரித்த வரையில் சோனாவிடம் பணமில்லை என்றே சொன்னார்கள். அதுவுமில்லாமல் பிரபுவின் அடுத்தப் படம் பெரிய பட்ஜெட் படம். இதற்கான பணத்தை சரணால் ஏற்பாடு செய்ய முடியும்,(இன்னும் பல சொத்துக்கள் கைவசம் இருப்பதால்), சோனாவிடம் பணமில்லை என்பதை அறிந்த பிரபு,வைபவ் வீட்டிற்கு, சோனாவையும், சரணையும், மற்றும் தன்னுடைய அணி (மகத், வைபவ், பிரேம்ஜி இன்னும் வெகு சிலர், அதில் ஒரு காவல்துறை அதிகாரியும் அடக்கம்) என அனைவரையும் அழைத்தார் . பணத்தை வட்டியுடன் திருப்பி தந்துவிடலாம் என பிரபு நினைக்க சோனா அங்கே வந்தார்.
பிரபு அணி தண்ணிவண்டி அணி என எல்லாருக்கு தெரிந்த விசயம்தான். சோனாவும் மதுக்கும்பலில் கலந்து கொள்ள பேச்சு பேச்சாகவே இருந்தது. சரண் இப்போது குடிப்பதில்லை என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 3 ரவுண்டேலேயே “டேய் பிரபு , பேசி முடிச்சிடுடா” என சரண் பிரபுவிடம் சொல்ல, எல்லார் முன்னிலையிலேயும் சோனா குடுத்த பணத்திற்கு 1.5% வட்டியும் காசோலை அளிக்கப்பட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்ட சோனா அத்துடனே கிளம்பிவிட்டார்.
சோனா போகும்வழியிலேயே பிரபுவை அழைத்து “என்னை ஏமாற்றிவிட்டீங்க, படம் பண்றதுதான் பேச்சு. ஏன் மாறுனீங்க” என கேட்க பிரபு “அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. ஏன் மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க” என கேட்டுள்ளார். இல்லை, படம் பண்ணித்தாங்க, இல்லாட்டா பிரச்சினை பண்ணுவேன் எனச் சொல்ல, பிரபு “பேப்பர்ல ஒன்னுமில்லை, வெறுங்கையில் முழம் போட முடியாது, படம் பாதியில நின்னுச்சுன்னா என் பேர் கெட்டுப்போயிரும், நீங்க சங்கத்துல சொல்லிக்குங்க” என கோபமாய் பேசி வைத்துவிட்டார் பிரபு. இதுதான் நடந்தது.
அடுத்த நாள் காலையில் சோனா புகார் குடுக்கிறார், என்னவென்று “சரண் தன்னிடம் தப்பாக நடக்க முயற்சித்தார்” என .. காவல்துறையினருக்கு தங்களுடைய துறையிலிருந்தே உண்மை தெரியவர மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரணோ, எதிர் புகார் அளிக்கப்போகிறார் என அறிந்த சோனா, நெஞ்சு வலியென மருத்துவமனையில் போய் அனுமதி வாங்கிக்கொண்டார். இது எல்லோரும் அறிந்த விசயம். பெண் எது சொன்னாலும் அம்பலம் ஏறும் என இருக்கும் சமுதாயத்தில், சில லட்சங்களை விட்டெறிந்து சோனாவின் வாயைடைத்திருக்கிறார் SPB. இனி, சோனா சில காலங்கள் அமைதியாக இருப்பார்.

