Friday, September 28, 2012

27/365 உலகையே அசத்தும் சை

சை..

Psy- பேரைக் கேட்டவுடனே சைக்கோ படமோன்னு நினைச்சிடாதீங்க. இன்னிக்கு உலக மக்களை எல்லாம் கிறுக்குப் புடிக்க வெச்சிருக்கு இந்தக் காணொளி. அதுவும் இது எந்த மொழின்னே தெரியாமப் பார்த்துட்டு ஆடிட்டு இருக்காங்க மக்கள் எல்லாம். பெரும்பான்மையான எல்லா Talkshowலயும் வந்துட்டாரு சை. அதனோட காணொளி கீழே இணைச்சிருக்கேன். கொலைவெறியைவிட பெரிய வெறியா மாறியிருக்கு இந்த கக்னம் ஸ்டைல். அதிகமில்லைங்க 30 கோடி பேர் மட்டுமே(பதிவு எழுதும் போது) பார்த்திருக்காங்க.

ஒரு கிறுக்குத்தனமான ஆட்டம்தான். ஆனா ஒருத்தருக்கு புடிச்சிருச்சின்னா இன்னொருத்தருக்கும் சீக்கிரம் புடிச்சிரும்ல. அப்படித்தான் ஆகிப்போயிருச்சு..




===00oo00===


பார்த்தாச்சா, எப்படியும், நம்ம ஊர்ல Flash Mob  வந்துரும். அப்போ எப்படி ஆடுறதுன்னு யோசிக்காம, அவரே சொல்லிக்குடுக்கிறாரு, சீக்கிரம் கத்துக்கிடுங்க.




===00oo00===

ம்ம பயபுள்ளைங்க சும்மா இருப்பாங்களா? உடனே கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு. GangNam Style மாதிரியே Kingkong Styleனு ஒரு வீடியோ விட்டுட்டாங்க. அதையும் இணைச்சிருக்கேன்.

 

Tuesday, September 25, 2012

26/365 பிள்ளையாருக்கு தொப்பை ஏன்?

  • பிள்ளையார் தோப்புக்கரணம் போட்டிருந்தா வந்திருக்குமா தொப்பை?
 --00o00--
  •  ஆணித்தரமான வாதம் அப்படிங்கிறாங்களே, ஆணி தரமா இருக்கா இல்லையான்னு விவாதம் பண்றதா?
 --00o00--
  •  மம்தா பானர்ஜி மத்திய அரசிற்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டார் # Sonia: CBI எங்கே? இன்னுமா வேலையை ஆரம்பிக்காம இருக்கீங்க? 
 --00o00--
  •   தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்  
 --00o00--
  • உடல் குறைய அதிமுக’வுல சேர்ந்துடறது உத்தமம். வுழுந்து.. எந்திரிச்சு..வுழுந்து.. எந்திரிச்சு..
 --00o00--
  • பகுத்தறிவுவாதின்னா, சாமி இல்லைன்னு சொல்லனும், இந்துக்களைத்திட்டனும். மத்த மதத்தினரை பாராட்டனும்
 --00o00--
  • எனக்கென்னமோ கம்ப்யூட்டர்ல ப்ரோகிராம் எழுதி கரன்ட் கட் பண்ணுறாங்கன்னு நினைக்கிறேன் #சரியா போவுது
 --00o00--
  • அவனவனுக்கு ஆயிரம் கவலை, இதுல மட்டன் கடை பாய்'க்கு புரட்டாசி மாசம் வந்திருச்சேன்னு கவலை
 --00o00--
  • தெருவுல சாமி வந்தா கையெடுத்து கும்பிட்ட் காலம் போய், எல்லோரும் கைல செல்போன் எடுத்து படம் வீடியோன்னு எடுக்க ஆரம்பிச்சிடறாங்க
 --00o00--

  • காசு வாங்கிட்டு ஓட்டுப் போடறவனுக்கு என்னத்தை மரியாதை வேண்டிக்கிடக்கு. என்னபேசினாலும் வாங்கிட்டுத்தான் ஆவனும் #பணம் #மரம்
 --00o00--
  • One important key in the Life is வீட்டுச்சாவிதான். இல்லாட்டி தெருவுலதான் நிக்கனும்
மேலேயுள்ளவை எல்லாம் நான் இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது

Sunday, September 23, 2012

25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -2

சி.பி.செந்தில்குமாரின் பேட்டி: பாகம் 1 
 
1) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.


===00oo00===

2) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்


===00oo00===



3) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது

===00oo00===

4) ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((

==00oo00===

5) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்

==00oo00===

6) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.

Wednesday, September 19, 2012

24/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -1

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, பத்திரிக்கை துணுக்குகளுக்காக  சி.பி. செந்தில்குமாரின் பெரிய ரசிகன் நான். அவரிடம் பேட்டி என்றதும், ஒற்றை வரியில் பதில் வந்தது.

அவரைப் பற்றி அறிமுகமெல்லாம் தேவையில்லையென்பதால் நேரடியாக கேள்வி - பதில்களுக்கு. 

உண்மையாகவே சி.பி.செந்தில்குமார் யார் என்று அறியாதவர்களுக்கு

இவர் சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்ற பெயரில் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருபவர். அவருடைய Bio பின்னொரு பகுதியில் வரும். 2000ம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் சிறந்த துணுக்கு எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்.

பதிவின் முகவரி http://www.adrasaka.com




கே1: பத்திரிக்கை துணுக்குகளால் பிரபலமான நீங்கள், பதிவுலகத்துக்கு வந்ததால் அடைந்த பலன்கள் என்னென்ன?



பத்திரிக்கைகளால் 8 லட்சம் மக்களுக்கு அறிமுகம் ஆனாலும் பிளாக்கில் சினிமா விமர்சனம் மூலம் பல இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள் அறிமுகம், நட்பு , விரோதம் எல்லாம் கிடைத்தது.. இது எனக்கு பிற்கால திரை உலக வாழ்வுக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன் .அது போக வெளி நாட்டு வாசகர்கள் பலர் அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு நிரை குறைகளை சொல்வார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி


===00oo00===


கே2: பத்திரிக்கைகளில் எழுதும்பொழுது, பணம் மற்றும் அது சென்று சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம், பதிவில் பணம் ஈட்டுதலும் குறைவு, வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதை  நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது வித்தியாசம்.


உண்மைதான்.. பதிவில் அதிக பட்சம் 1000 பேர் மட்டுமே ரெகுலரா படிக்கறாங்க. சினிமா விமர்சனம் என்றால் மட்டும் அதை 12,000 பேர் படிக்கறாங்க.. பத்திரிக்கை என்றால் மினிமம் 5 லட்சம் பேர் படிப்பாங்க.. பண ஈட்டுதல் பிளாக்கில் குறைவுதான். ஆனாலும் இது மியூச்சுவல் ஃபண்ட் போல இன்சூரன்ஸ் போல நீண்ட கால வைப்புத்திட்டம் போல பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.. .


 ===00oo00===


கே3: பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில் சச்சரவுகள் குறைவாக இருக்கும். பதிவுகளில் அது அதிகம். பதிவுலக சச்சரவுகளில் சந்திக்கும் பொழுது, பத்திரிக்கைக்கே எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது உண்டா? பதிவுலம் விட்டுச் சென்றுவிடலாம் என்றும் எண்ணியது உண்டா? உண்டெனில்,. விவரிக்கவும்.


பல சமயம் தனி மனித தாக்குதலுக்கு உண்டானபோது மனம் வருத்தப்பட்டது உண்டு, ஆனால் பதிவு உலகத்தை விட்டு போக வேண்டும் என நினைத்ததில்லை.. சவாலாக எடுத்து சாதிக்க நினைக்கிறேன். உதாரணமாக நான் வந்த புதிதில் ஹிட்ஸுக்காக சி பி எழுதுகிறார் என தாக்கி பதிவு போட்டவர் சில மாதங்கள் கழித்து தன் பிளாக்கில் கட்டுரை எழுதவும், தன் தள விளம்பரத்தை தன் தளத்தில் போடவும் கேட்டுக்கொண்டார். இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி



===00oo00===


கே4 : பத்திரிக்கைகளில் நல்ல படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து படைப்புகள் வெளியிடப்படும். அந்த நேரத்தில அவர்கள் புறந்தள்ளிய படைப்புகளை பதிவுகளில் வெளியிட்டுள்ளீர்களா? அப்படி வெளியிட்ட படைப்புகள் பதிவுகில் பாராட்டப்படும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?


பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் சரக்கு கம்மியா இருக்கும்.. நம்மை விட ஒரு எடிட்டருக்கு  மக்களின்.. வாசகர்களின் பல்ஸ் நல்லா தெரியும்.. ஏன்னா எழுதுறவங்க ளுக்கு தன் படைப்பு எல்லாமே  பிரமாதம் என்ரே தோன்றும். எடிட்டர் தான் சுப்பீரியர். ஆனா எல்லா பத்திரிக்கை எடிட்டர்களும் ஒரே மாதிரி இல்லை. அவங்கவங்க டேஸ்ட்க்கு தக்க படி நம் படைப்பை பிரிச்சு அனுப்பனும். இதுக்கு அர்த்தம் அவங்க டேஸ்ட்க்கு தக்கபடி எழுதனும் என்று அர்த்தம் அல்ல. முதல்ல  படைப்பை எழுதிட்டு இது எந்த புக்குக்கு மேட்ச் ஆகும் என தேர்வு செய்து அனுப்பனும்..

 பத்திரிக்கையால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு பதிவில் நான் போட்டது - கற்புக்கரசி காஞ்சனாவுடன் ஒரு பேட்டி ( நடிகை குஷ்புவை கிண்டல் பண்ணீய நகைச்சுவை ) இது பிளாக்கில் போடப்பட்ட போது பலர் அதை ரசிக்கவில்லை

நீங்களும் சி.பி.செந்தில்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம் என்றிருந்தால் மறுமொழியிடவும்

Tuesday, September 18, 2012

23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க குறும்படத்திற்கு(Innocence of Muslims) எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதுல கலந்துகிட்டவங்க 5000க்கும் மேலேயே இருக்குமாம். அதனையொட்டி நானிட்ட ட்விட்டுகள்


  • நேத்துதான் கடவுளே இல்லைன்னு பெரியார் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ஒரு இறைதூதரை கேவலப்படுத்திட்டாங்கன்னு அடிச்சிக்கிறாங்க. #நடுசென்ட்ர்ஸ் பாவமில்லையா? #ட்விட்டர் புலம்பல்
     
  • Most of them never saw the Videos Yet, but they are in Mount Road Now. [அந்தக் குறும்படத்தின் Trailerஐ பார்த்தவர்கள் எத்தனை பேரு இருக்கும்?]

  • நாம எல்லாம் தான் படிச்சவங்க #இன்னொசன்ஸ் ஆஃப்...  

  • ஒன்னு ரெண்டு விசா கிடைச்சிட்டு இருந்துச்சு. இனிமே சலிச்சி எடுப்பாங்க. ஹ்ம்ம்..  


  • சென்னை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டிப்பா அடிதடியாய் முடியப்போவுது.. வெளங்கும் #முஸ்LIM

  • நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வேற,. எந்த கடவுள் வந்தாவது கலவரம் இல்லாம பார்த்துக்கனும், கடவுளே!

  • தடியடியில் ஆரம்பித்து, வாகனங்களைச் சேதப்படுத்துவதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வன் ரகுவரன் மாதிரி அம்மா உட்காந்திருக்க வேண்டிய கட்டாயம்.  

  • KFC, McDonald, MNC மேலேயெல்லாம் கல்லை விட்டெறிஞ்சிருந்திருந்தா சமநிலையாய் ஆகியிருக்குமே 
  • உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே 
  • இப்ப உடைச்ச கண்ணாடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம். சாலையில பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் அமெரிக்கர்களா? 
  • தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்
Pic Courtesy/Thanks: IBN Live

Saturday, September 15, 2012

22/365 பண்ணையம் (14-செப்)


உலகம்: மீண்டும் லிபியா, எகிப்து மற்றும் புரட்சி நடந்த  நாடுகளில்  கலவரம். இதுவரை புரட்சியாளர்களுக்கு உதவியாய் இருந்த அமெரிக்காவை எதிர்த்து நடந்து வருகிறது கலவரம். காரணம், அமெரிக்காவில் முகமது நபி அவர்களை அசிங்கமாக சித்தரித்து வந்த ஒரு குறும்படம்தான் காரணம். அது வெளியிடப்பட்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம். எனக்கு என்னமோ இது பழைய பகையை மனசுல வெச்சு வெம்பி வெம்பி இருந்த மக்களுக்கு, ஒரு காரணம் கிடைச்சதும் வெடிச்சிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். சிலரோ இல்லை,. ”இது அல்-கொய்தா ஆட்களும், புரட்சியில் தோற்ற மக்களின் ஆதரவாளர்களும்தான் காரணம்” அப்படின்னும் சொல்லிக்கிறாங்க. ஆக மொத்தம் அமெரிக்க தூதுவர்கள் எல்லாம் உசுர கையில புடிச்சிட்டு இருக்காங்க. இது ஆழமா யோசிக்க வேண்டிய விசயம். ஒரு குறும்படத்துக்கு எதிர்க்கிறாங்க, அப்படின்னா மக்களின் உணர்வை என்னவென்று சொல்வது. அதுக்கு அமெரிக்கா எப்படி காரணமாக முடியும்? தூதுவர்களயும், பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்னிருக்காங்க. ”தூண்டிவிட்டா எதையும் செய்யும் ஆட்டு மந்தை மக்களா புரட்சி பண்ணினாங்க?” அப்படின்னு நினைக்கிறா மாதிரி வெச்சிட்டாங்க :( ப்ச்ச்

குறும்படத்தைத் தேடாதீங்க. அப்படி ஒரு சுவடே இல்லாம பண்ணிடாங்க. இதை இயக்கியது யார், நடித்தவர்கள் அப்படிங்கிற சுவடுமே இல்லாம செஞ்சிட்டாங்க.

=============================================================

இந்தியா: மீண்டும் ஒரு டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு அறிவிச்சிருக்காங்க. டீசல் விலை ஏத்துறதுதான் நாட்டின் விலையேத்தத்துக்கு அடிப்படை அப்படின்னு தெரிஞ்சே ஏத்துறாங்கன்னா மத்திய அரசு இதைத்தான் எதிர்பார்க்குதா? இதுல சில்லறை வணிகத்துலயும் அந்நிய முதலீடாம்.சேதி கேட்ட மூணாவது நிமிசம் முக்கு கடை அண்ணாச்சி விலையேத்திட்டாரு, பழசாயிருந்தாலும், சம்பந்தமேயில்லைன்னா ஆட்டோக்காரங்களும் “பெட்ரோல் விலையேறிருச்சு சார்” அப்படின்னு இன்னும் ஒரு ரூ.10 சேர்த்தி கேட்பாங்க, அடுத்து பேருந்து கட்டணம் ஏறும்..

***தா, என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? 


=============================================================

தமிழகம்: கூடங்குளம், இந்த முறை, அல்லது கடைசி முறை அப்படின்னு சொல்லலாம். போராட்டம் வெடிச்சிருக்கு. இரண்டு பக்கத்துலையும் சீற்றம் அதிகமாவே இருக்கு. வழக்கம் போல இணையபுலிகள் ஒரு சாரார் அணுமின் நிலையம் வேணும்னும், வேணாம்னும் அங்கங்கே சண்டை போட்டுக்கிறாங்க. ஆனா, செயல்படுத்த ஆரம்பிச்ச பின்னாடி மத்திய அரசு போயிட்டே இருக்கும். நம்ம ஆட்கள் போராடினா மதிக்க மத்தியில இருக்கிறது என்ன இங்கிலீஷ்காரனா? இந்தியன்தானே. உசுருக்கு இந்தியா எப்ப மதிப்பு குடுத்திருக்கு?

=============================================================

iPhone5 - அறிவிச்சவுடனே, பலத்த எதிர்ப்பு வந்துச்சு. மாத்தாத வடிவமும், புதுசா தொழில்நுட்பம் எதுவுமே இல்லைங்கிறதாலும் எனக்கும் புடிக்கலை. இணைய மக்களிடம் பலத்த ஏமாற்றம். ஆனால், நடந்ததோ வேற..

Pre-orders for the iPhone 5 went live at midnight and, true to form, they went like hotcakes. You may remember that it took 22 hours for the iPhone 4S and about 20 hours for the iPhone 4 to sell out of its pre-order, launch-day stock. The iPhone 5 took just about 60 minutes. 

Yep. One hour after pre-orders went live, Apple.com adjusted shipping expectations from one to two weeks due to the overwhelming demand

 Thanks http://techcrunch.com


=============================================================

கேட்டதில் பிடித்தது: ஆஸ்திரேலிய தமிழ் வானொலியில்   நம்ம கானா பிரபா, ரகுமான் பற்றிய நிகழ்ச்சிக்காக எழுத்தாளர் திரு. சொக்கன் அவர்கள் ரகுமான் கடந்து வந்த 20 ஆண்டுகள் பற்றி அளித்த பேட்டி, கேளுங்க. 


=============================================================



பார்த்ததில் பிடித்தது: நெற்றிக்கண் படத்துல வந்த அதே காட்சிகளை Re-Mix பண்ணியிருக்காங்க. புதுசா எதுவுமில்லைன்னாலும், ஆரம்பிச்சது  பொண்ணுங்க பக்கம் என்பதால் கொஞ்சமே வித்தியாசம்...

Cafe-Coffee day - குறும்படம் 

Thursday, September 13, 2012

21/365 இத்தாலியர் தேடிய இளையராஜா

Wednesday, September 12, 2012

20/365 தெய்"Weak"கக் காதல்

  • மனோ நிலை அப்படிங்கிறாங்களே, ஏன் SPB நிலை, யேசுதாஸ் நிலைன்னு இல்லை..? 
 --00o00--
  •  Cat வாக் அப்படின்னு சொல்லிட்டு துணி போட்டுகிட்டு நடந்து வராங்க.. எந்த பூனை துணி போட்டுகிட்டு நடக்குது?
 --00o00--
  • கூடங்குளம், 20 நாட்களில் மின்சாரம் உற்பத்தி தொடங்கும். - மத்திய மந்திரி நாராயணசாமி #டீ தூள் பழசாவே இருக்கே, மாத்த மாட்டீங்களா?
 --00o00--
  •  இளையராஜா - ஐபோன். ஏ.ஆர்.ரகுமான் - அண்ட்ராய்ட் போன். நான் LandLine. எதுல இருந்து Call வந்தாலும் பேசுவேன்.
 --00o00--
  • புல்ஸ்கேப் நோட்டை மாரோட அணைச்சுட்டு வருகிற அதே பாணியைத்தா இப்பவும் பெண்கள் செய்கிறார்கள். ஆனா நோட்டுக்குப் பதில் iPad, Laptop
 --00o00--
  • பிரபாகரன் அறிமுகமாகும் படத்திற்கு பொருத்தமான தலைப்பு “கேப்டன் மகன்”
 --00o00--
  •  என்னுடைய முதல் படத்தில் இருந்தே ****டன் வொர்க் பண்ண ஆசை.- Default Template for Directors.

 --00o00--
  • நமக்கெல்லாம், பெண்கள் கதாநாயகிகளாகவும், ஆண்கள் எல்லாம் காமெடியன்களாகவும் தெரியும் மாநிலம், கேரளம் மட்டும்தான் #ஓணம்
 --00o00--
 

  •  பயத்திற்கும், பாசத்திற்கும் இடையில்தான் ஊசலாடுகிறது அப்பா-மகன் உறவு
 --00o00--
  •  பிரியும் வேலையில்தான் புரிகிறது "நாம இன்னும் கொஞ்சம் அன்பை காட்டியிருக்கலாமோ?" என்று
 --00o00--
  • ஆரம்பத்தில் தெய்வீகக் காதலாக இருப்பதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு தெய்”வீக்” காதலா மாறிடுவதுதானே வழக்கம்

 --00o00--
  •  "இன்னிக்கு சாயங்காலம் என்ன சமைக்கிறது?" - இந்தக் கேள்விக்கு முதல் நிமிசத்தில பதில் சொல்லிட்டான்னா அவன்தான் உண்மையான புருசன்
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் , ஆங்காங்கே நான்  இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது

Tuesday, September 11, 2012

19/365 செப்டம்பர் 11ல் இன்னொரு சம்பவம்

த்தட் த்தட் த்தட்..

வேகமாக கதவு தட்டப்பட்டது.

”இந்நேரத்துக்கு யாரா இருக்கும்? இப்பத்தானே வேலைக்குப் போனாரு, அதுக்குள்ளேவா வந்துட்டாரு?” என்றபடி கதவைத் திறந்த நவீனாவுக்கு ஆச்சர்யம். ஒருவர் நின்றிருந்தார், முன்னே பின்னே பார்த்திராத ஆசாமி. அஃப்சலை பார்க்க வந்திருப்பாரோ என நவீனா எண்ணியபோது...

 “குட்மார்னிங் மேடம். எப்படி இருக்கீங்க? அக்பர் இருக்காரா?”

“ஆமா, அவருடைய அறையில தூங்கிட்டு இருக்காரு, எதுக்காக கேட்குறீங்க?”

”நாங்க ****லிருந்து வந்திருக்கோம். தொந்தரவுக்கு மன்னிக்கவும், வழி விடறீங்களா?” என அடையாள அட்டையைக் காண்பித்தபோது தெருவிலிருந்து  நிறைய Cops, Bullet Proof Jacket அணிந்த படி திமு திமுவென வீட்டினுள் நுழைந்தார்கள்.

”எங்கே இருக்காரு?” என ஒருவர் கேட்க

“மேலே வலது பக்கம் மூன்றாவது அறை”

அனைவரும், கையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டார்கள், நவீனாவுக்கு ஏதோ விபரீதம் என்று அப்பொழுதுதான் புரிந்தது. அதே நேரத்தில் “அக்பர் நாங்க உங்களை கைது செய்ய வந்திருக்கோம். ஒத்துழையுங்கள். கதவைத் திறங்க”

....

சத்தமே இல்லாமல் ஒரு நிமிடம்.

”அக்பர்! மீண்டும் சொல்றோம், தேவையான அனைத்து ஆதாரங்களும் இப்ப எங்ககிட்ட இருக்கு. நீங்க ஒத்துழைங்க, ப்ளீஸ்”

.....

அடுத்த நிமிடம், அனைவரும்ம் துப்பாக்கியை தயாராக்க ஆரம்பித்தனர். unlock சத்தம் பட், பட் என வராந்தா முழுதும் எதிரொலித்தது”

டமார்.. கதவை உடைக்க ஆரம்பித்தனர்.. மூன்றாவது உதையில் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்தது.  
அக்பர் கையில் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று எண்ணியவர்களுக்கு வியப்பு. அமைதியாக கட்டிலில் கலக்கத்தோடும், குழப்பத்தோடும் உட்காந்திருந்தார்.  இரவு உடையிலிருந்து ஏற்கனவே வேறு உடைக்கு மாறியிருந்தார். இந்தக் கோலத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

கைது செய்ய ஏதுவாக அவரே முன்வர, அவரின் கைது படலம் எந்தவித அசம்பாவிதமுமில்லாமல் நடந்தேறியது.




வழக்கு பற்றிய விவரங்களுக்கு  


ரு காலத்துல மேயர் குடியிருந்த, அரசுக்குச் சொந்தமான வீடு, அரண்மனை மாதிரி. இப்படித்தான் அந்த வீட்டைப் பத்தி நான் முதலில் கேள்விப்பட்டது. 6 படுக்கையறைகள், 1000 சதுர அடிக்கும் குறையாத Dinning Hall, அதே  அளவில் Living Room, Kitchen. பிரமாண்டத்தை அங்கேதான் பார்த்தேன். 

நான் நியூஜெர்சிக்கு வந்தவுடன் நான் குடியிருக்க வீடு தேடியதில் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீடு அதுதான். இருங்க, தப்பா கணக்குப் போடாதீங்க. வீட்டுக்குச் சொந்தக்காரர்(அக்பர்) இந்த வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடிய போது, நான் வீடு தேடியதும் ஒரே நேரத்தில் நடந்ததால் குறைந்த வாடகைக்கு ஒரு அறையில் தங்கிக்கொள்ள அனுமதியளித்தார். அத்தனை வசதிகளும் அந்த வீட்டில் உண்டு. Fully Furnished, Yes.

வர் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. நாங்கள் 1st Floor(இந்தியவில் Ground Floor) தங்கிக்கொள்ளலாம். Fully Furnished Basement உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடைப்பந்து, தோட்டம் எல்லாம் அனுபவித்துக்கொள்ளலாம். அவர் எப்பவாவது வருவார், மாடியறையில் தங்கிக்கொள்வார். அவர் கேட்டுக்கொண்டது இந்த ஒன்றே ஒன்றைத்தான். நாங்களும் குடிவந்தோம், 13 கார்கள் நிறுத்த இடமிருந்து கார் இல்லாமல் இருந்தேன். காரணம், தேவைப்படவில்லை. தேவைப்பட்டால் தெய்வம் போல உதவ கே.ஆர். எஸ் இருந்தார்.

அரண்மனையில் குடியிருக்க ஆரம்பித்தவுடன், Basement மற்றும் மேலேயிருந்த படுக்கையறைகளை வாடகைக்கு விட ஆரம்பித்தார், அதுவும் நாங்கள் வந்து 6 மாதம் கழித்து. சமையலறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம். பொறுத்துக்கொண்டோம், காரணம்? எங்களுக்கும் அவ்வளவு பெரிய வீட்டில தனியா இருக்க சற்றே பயம் இருந்ததும்தான் காரணம்.


செப்-11-2008: நான் அலுவலகம் வந்து வேலைகள், சந்திப்புகள் முடிந்து 11:30 மணி வாக்கில் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு. "வாங்களேன், காப்ஸ் வந்திருக்காங்க. சோஷியல் கேட்டிருக்காங்க, உங்க கிட்ட பேசனுமாம்" என்று பதட்டமான குரலுடன் அம்மணி அழைத்தவுடன் அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.


ஒரு பெரிய காவல்துறைப் பட்டாளமே அங்கே இருந்தது. தன்னை இந்தக் குழுவிற்கு முதன்மையானவர் என்று தன்னை தன் அடையாள அட்டையுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி, வழக்கின் காரணங்களை கூறிவிட்டு எனக்கு இதில் எந்தளவுக்கு பங்களிப்பு இருக்கலாம், அதற்கான கேள்விகளைக் கேட்கப்போவதாக கூறிவிட்டு  5/6 கேள்விகள் கேட்டார். பதில்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், "உங்களுக்கான விசாரணை அவ்வளவுதான், இனி இந்த வீட்டில தங்குவது உங்களிஷ்டம் என்றும், அதனால் காவல்துறையினரால் எந்தப் பிரச்சினையும் வராதென்றும் உறுதிசெய்துவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் அக்பரின் மகள் வந்தபோது, அழுகையினூடாக அவர் சொன்னது. ”எங்கப்பா எந்தத் தப்பும் பண்ணலை , அவர்னால உங்களுக்குத் தொல்லை ஏற்பட்டிருந்தா மன்னிக்கவும்” என்று முடிக்கும் போது மாலை மாலையாகக் கண்ணீர். பாவம், பள்ளிக்கூட பெண்ணுக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும். அம்மாவும் சிறையில், அப்பாவும் சிறையில். 5 பெண்கள், ஒரு சின்னப் பையன். இதுதான் அவர்களது குடும்பம்.

பிறகு 20 நாட்கள் அந்த வீட்டில் குடியிருந்தோம், இல்லை,, இல்லை அடுத்த நாளே வீடு தேட ஆரம்பித்தோம். காரணம், அக்பருக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு உரிமை எடுத்துக்கொண்ட வந்த ஒரு அம்மாவின் அடாவடித்தனமே எங்களை காலி செய்ய வைத்தது.

பி.கு: அக்பரும், அவரது மனைவியும் இரு மாதங்களில் விடுவிக்கப்பட்டனர். இன்றும் செப்-11 என்றால் அக்பருக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது

Monday, September 10, 2012

18/365 கூ"DUNG"குளம்

இந்த ஒரு படமே போதும்,

மக்களின் வாழ்வாதாரத்தை கொன்றுவிட்டு, வேறு மக்களுக்கு வசதி வாய்ப்பளிக்கும் அரசுக்கு வந்தனங்கள்

Sunday, September 9, 2012

17/365 கிழிஞ்சது கிருஷ்ணகிரி

குவின்ஸி ஒரு வீட்டின் ஓரத்தில் கவனிப்பாரற்று கிடக்கும் டிராக்டர்




பாஸ்டன் -Commons படகு சவாரி



இச்சு இச்சு இச்சு கொடு..




கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு சொல்றோமே, கிழிஞ்ச கிருஷ்ணகிரி 
எப்படி இருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா?


[All Photos Shot in iPhone-4]

Saturday, September 8, 2012

16/365 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

இது இணையத்தில் கண்ட ஒரு படம், இந்த வார சினிமா கேள்வியில், ஒரு தமிழ் படத்தில் இதைப் போல தன்னைத் தானே செதுக்கிக்கொள்ளுமாறு தலைப்பில் படம் வந்திருக்கும்.

கேள்விகள்:
  1. அது என்ன படம்
  2. படத்தை இயக்கியவர் யார்?
  3. கதாநாயகி யார்? 

Friday, September 7, 2012

15/365 அமெரிக்காவின் ஹோலி

இப்போ http://thecolorrun.com அமெரிக்காவுல ரொம்ப பிரபலமாகிட்டு வர்ற ஓட்டம். மாராத்தானுக்கு எல்லாம் 3 மாசம் தவமிருக்கனும், இது அப்படியில்லை,  அதுவுமில்லாம.. இருங்க அதை கடைசியில சொல்றேன்.




துல என்ன பண்ணனும்.  மொத்தம் 5 கிமீ ஓடனும். (என்னடா இது அமெரிக்காவுல மைல் கணக்குத்தானே, கிமீ கிடையாதே) முதல் கிமீட்டருக்கு எல்லாரும் மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. அதாங்க. வண்ணத்தை பொடியிலும் Squirt Pipeலேயும், அவுங்களே குடுப்பாங்க. அதை வாங்கி நாம மத்தவங்க மேல அடிக்கனும். அதான் விளையாட்டே. (பொடி சாப்புடறளவுக்கும் இருக்காம்).  ரெண்டாவது கிமீ போனவுடனே பச்சை வண்ணம். மூனுல நீலம், நாலாவது ஊதாவும், கடைசி மற்றும் அஞ்சாவதுல இளஞ்சிவப்பும் குடுப்பாங்க. வண்ணத்தை எல்லாம் நம்ம ஊர்ல ஹோலி கொண்டாடும் போது என்ன பண்ணுவோமோ அதையேதான் செய்யனும்.




க மொத்தம் அஞ்சாவது கி.மீ முடிக்கையில வண்ணமயமா வரனும். இதான் இந்த விளையாட்டோட அடிப்படை. Fat Nation அப்படின்னு சொல்ற அமெரிக்காவுக்கு இது மாதிரி நிறைய ஓட்டங்கள் தேவைப்படுது. அதுவுமில்லாம இந்தியர்கள் அதிகம் பங்குபெறுகிற ஹோலியில இருந்து இதை உருட்டினதால வட-இந்தியர்களின் பங்கெடுப்பும் அதிகமா இருக்காம்.
இருக்காதா பின்னே?



ம்மூர்ல மஞ்சத்தண்ணி ஊத்துறது, அப்படின்னு ஒரு விளையாட்டு இருந்துச்சே தெரியுங்களா? நம்ம ஊர்ல இருந்த ஹோலியை, அமெரிக்காவுக்காக ஓட்டம்னு  மாத்தி கொண்ட்டாட்டமா மாத்தி ஓடறாங்க. நாம் தீவாளி, பொங்கல்னு இருக்கிற கொண்டாட்டத்தையே மறந்துட்டு , வெளியில கொண்டாடுவதை விட்டுவிட்டு வீட்டுக்குள்ள அடைய ஆரம்பிச்சிருக்கோம், அமெரிக்காவோ உள்ளேயிருந்து வெளியே வர முயற்சிக்கிறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது? உலகம் உருண்டைங்கிறதுதான்.



[படங்கள் and Info from : http://thecolorrun.com]

Thursday, September 6, 2012

14/365 நீங்க மாடு மேய்க்கத்தான் லாயக்கா?

ள்ளிக்கூடத்துல படிக்காத மாணவர்களைப் பார்த்து அதிகம் சொல்லப்படுவதுதான் இது "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு". எந்த ஆசிரியருக்காவது  தெரியுமா, மாடு மேய்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு?

ங்க ஐயன், மாடு மேய்ச்சிதான் ஆசிரியர் ஆனார். அந்தப் பரம்பரையில் வருவதாலும், நானும் மாடு மேய்ச்சிருக்கேன் என்பதாலுமே கேட்கிறேன் மாடு மேய்க்கிறது அவ்வளவு சுலபமா?

  1. உங்களுக்குத் தாளி வெக்கத் தெரியுமா? தவிடும் ,தண்ணியும் கலந்து  காலையில பால் கறக்கிறதுக்கு முன்னாடியே வெச்சிடனும், காளை மாடுன்னாலும். நான் சொல்றது 5 மணிக்கு முன்னாடி, எழுந்திருச்சிருவீங்களா?
  2. சாணி அள்ள முடியுமா?  அதுவும் காலையில ஒரு தரம், சாயங்காலம் ஒரு தரம்னு ரெண்டு தரம் சாணி அள்ளனும். அள்ளுவீங்களா?
  3. மூக்கனாங்கயிறு முடிச்சு போடத் தெரியுமா?
  4. கொம்பு சீவி விடத் தெரியுமா?
  5. கட்டுத்தாரையை கூட்டி அள்ள முடியுமா?
  6. மாட்டுக்கு கொசு கடிக்காம இருக்க, சும்மா ஏஸி ரூம்புல குட்-நைட் தட்டற மாதிரி இல்லீங்க. நாய்த்துளசியைத் தேடிப் புடிச்சாந்து, பொவப் போட்டு கொசுவை ஓட்டனும், முடியுமா?
  7. வாரத்துக்கு ஒரு தபா தண்ணியூத்தி வுட முடியுமா?
  8. காளை மாடுன்னா 6 மாசத்துக்கு ஒரு தடவை லாடம் கட்டனும், (பசு மாடுன்னா வருசத்துக்கு ஒரு தபா "ஜிங் சாக்" பண்றதை வேடிக்கைப் பார்க்கலாம்.)
  9. பருத்திக்கொட்டையும், புண்ணாக்கும் சரியான நேரத்துல வெக்க முடியுமா?
  10. தீனி வெச்சாலும் மாடு மேய்க்க ஓட்டிப்போவனும், ரெண்டு மாட்டை ஒன்னா மேய்க்க வெக்கவே முடியாது, இதுல பத்து, பதினைஞ்சு இருந்தா டவுசர் அவுந்துரும்.
  11. மாட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா உடனே மருத்துவரைக் கூட்டியார முடியுமா?
  12. இதை எல்லாத்தையும் விடுமுறை இல்லாம 7 நாளும், வருசம் முழுக்கவும் செய்ய முடியுமா?


[எங்க மாடு]

னிமே மாடு மேய்க்கத்தான் லாயக்கு அப்படிங்கிறவங்ககிட்ட இதைக் கேட்டுடுங்க....இதெல்லாம் முடியும்னா நீங்க மாடு மேய்க்கவே போலாம், அப்படின்னும் சொல்லிடுங்க.

மாடு மேய்க்கிறதுன்னா சும்மா இல்லீங்க, ரெம்ப கஷ்டம்

13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்

நண்பனின் மகனுக்கு 6 வயது. இன்னொரு நண்பனின் மகனுக்கு 5 வயது. இருவரும் உற்ற தோழர்கள். அமெரிக்காவில் ஒரு குடும்பமே நட்பாய் இருப்பது என்பது அபூர்வம். அதாவது அப்பா- அப்பா, அம்மா-அம்மா, மகன் - மகன்.

மகன்கள் இருவருமே விட்டுக்குடுக்க மாட்டார்கள், அப்பா என்ன சொன்னாலும் “இல்லேப்பா, அவன் சொன்னான் சரியாத்தான் இருக்கும்” என்று சின்ன வயசே ஆனாலும் இருவருக்குமான நட்பு அப்படியாகத்தான் இருந்தது. போன வாரம் வரையில். ஆமாம், ஒரு குடும்பம் For Good இந்தியா கிளம்ப, பசங்களுக்கும் ஒரு குடும்பம் இந்தியா போவதாகச் சொன்னாங்க. பசங்க ரெண்டு பேருக்குமே அதனோட விபரீதம் புரியல, ஊருக்கு போயிட்டு வந்துடற மாதிரி நினைச்சிகிட்டே இருக்காங்க.

போனவாரம், பிரிஞ்சுப் போற குடும்பத்துக்காக, ஒரு Get toghether நடந்துச்சு. எல்லார் முகத்துலையும் கவலை தாண்டவமாடுது. பல வருடங்கள் பழகிய நட்பு, பிரியப் போவுதேங்கிற கவலை. பரிசுப் பொருட்கள் கை மாறுது. ஆனாலும் பசங்க எப்பவும் போல விளையாடுறாங்க, அடிச்சுக்கிறாங்க.

கிளம்புற நேரத்துல, எல்லாருக்கும் கண்ணுல தண்ணீர் வராத குறை, பசங்களுக்கு அது புரியவே இல்லை. “எப்போப்பா அவன் வீட்டுத் திரும்ப வருவோம்?” அப்படின்னு ஒரு பையன் கேட்க பதில் சொல்ல முடியாம அப்பா முழிக்கிறாரு. ரெண்டு பசங்களும், வழக்கம் போல, ”அப்புறம் வரேன், உன்னோட இந்த பொம்மை எடுத்துட்டுப் போறேன், அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைசின்னு.

நான், இந்தப் பசங்களைப் பார்த்துதான் ரொம்ப சோகமானேன். விவரம் தெரியாத வயசுல, ஒருத்தன் பிரிஞ்சு போறான்னு தெரியாம, விளையாண்டு, பை பை சொல்லிட்டுப் போறாங்க. வாழ்வுக்காக எத்தனையோ பேரை பிரியறோம். ஆனா பிரிச்சும் வைக்கிறோம்ங்கிறது எத்தனைப் பேருக்குத் தெரியுது?

நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?

Tuesday, September 4, 2012

12/365 கலவி, கல்வி, ஒரே புள்ளி

இது ஒரு நாகரிகமான பதிவு அல்ல. 18 வயசுக்கு மேலேயே இருந்தாலும் இதை மனசுல வெச்சிக்குங்க. மன்னிச்சுடுங்க. இதுக்குமேலேயும் படிக்கனும்னா படிங்க.

  • என்னதான் அப்பா-அம்மா விளையாட்டுல பெரிய வீரனாய் இருந்தாலும், Sports Quota வுல வேலை எதுவும் கிடைக்காது

  • காமத்துக்கு அ'னா, ஆ'வன்னாவைத் தவிர வேற எழுத்துக்களும் தெரியாது, மொழியும் தெரியாது

  • கலவி, கல்வி - இரண்டுக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம். ஆனால், இரண்டுமே பள்ளியிலேயே சொல்லித்தரப்பட வேண்டும்

  • கிரிக்கெட்டுக்கும் ‘அது’க்கும் என்ன சம்பந்தம் ? இரண்டிலும் பேட்ஸ்மேன், “நின்னு” விளையாடனும், சீக்கிரமே அவுட்டாகக் கூடாது

  • ஸ்கிரீன்ப்ளேவுக்கு ஃபோர்ப்ளேவுக்கு சம்பந்தமிருக்கு. இரண்டையும் ஒழுங்கா பண்ணிட்டா படம் ஒழுங்கா வர 75% வாய்ப்பிருக்கு.

  • எல்லாச் சாவிகளுக்கும் பூட்டுக்கள் திறந்துவிடுவதில்லை. ஆனால் சில சாவிகளுக்கோ பிரதி இருப்பதில் ஆச்சர்யமில்லை

  • செஸ் விளையாட்டில் யாரும் "டிரா" என்னும் முடிவை விரும்புவதில்லை #எழுத்துப்பிழை

மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது.A+ என்ற கணக்கில் சேர்த்துவெச்சதுதான் இவையெல்லாம்.


சொந்த சரக்கை பார்த்துட்டீங்க, இனிமே அடுத்தவங்க சரக்கு.

இந்தப் பசங்க இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் அப்படிங்கிற பேருல யூட்யூப்ல பிரபலமானாங்க, முடிந்தவரையில் கெட்ட வார்த்தை போட்டு படம் போட ஆரம்பிச்சாங்க. அவுங்களோட காணொளியில இதுவும் ஒன்னு.


 

Monday, September 3, 2012

11/365 தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடமும், கெயிட்டி தியேட்டரும்

தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடம் காரைக் காலை அடுத்த தரங்கம்பாடியில், 1712ல் அமைக்கப் பட்டது. டச்சுக்காரர்கள் அமைத்த இந்த அச்சகத்தில் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்டது. இது, அச்சு எழுத்துக்கள் வார்க்கும் வார்ப்பட சாலையும் கூட. (இந்தியாவிற்கு இதற்கு முன்னரே அச்சகம் வந்து விட்டது. கோவாவில், 1556ம் ஆண்டு ஏசு சபையினர் ஓரு அச்சகத்தை நிறுவினர்!)



அச்சுத் தொழில், முற்றிலும் கிறிஸ்தவ பாதிரி களின் கைகளில் இருந்தமையால், எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ்நாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர், அவர்கள் வெளியிட்ட கிறிஸ்தவ சமய நூல்களை, "பரங்கிப் புத்தகங்கள்' என்று தூஷித்து, கையால் கூட தீண்டுவதில்லை. கிறிஸ்தவ சமயப் பரப்பிகள் தம்முடன் கொண்டு வந்த, காகிதம் செய்யும் கலையையும் நம் நாட்டு மக்கள் இழிவானதும், தீட்டுப்படக் கூடியதுமான தொழில் என்று ஒதுக்கி விட்டனர். உலகில் முதலில் மரப்பட்டைகள், பின்னர், கன்றுக் குட்டியின் தோல், அப்புறம் பட்டுத் துணி, பிறகு ஒருவித நாணலில் செய்த, "பரப்பிரஸ்' என்ற தாள் முதலியன எழுது பொருள்களாக இருந்து வந்தன. சீனர்கள் கி.பி., 105ம் ஆண்டில் காகிதம் செய்யக் கற்றுக் கொண்டனர். பட்டுத் துணியில் எழுதி வந்த சீனரிடையே, காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் எங்கும் பரவி விட்டது.
அராபியர்கள், சீனரிடமிருந்து அந்தத் தொழிலை, கி.பி., 751ம் ஆண்டில் அறிந்தனர். அதன்பின், காகித உற்பத்திக் கலை உலகெங்கும் சிறுக, சிறுகப் பரவியது. ஐரோப்பியர் அதை அராபியரிடமிருந்து, 12ம் நூற்றாண்டில் தான் கற்றனர். கன்றின் தோல் மறைந்து காகிதம் தயாரிக்கப்பட்டது.
இந்தியர்களாகிய நமக்கு, சீனருடன் கிறிஸ்தவ சகாப்தம் துவங்குவதற்கு முன்பிருந்தே உறவு இருந்தது. பல்லவரும், சோழரும், சீனர்களுடன் தூதுவர் உறவு கொண்டிருந்தனர். அதுபோலவே அரபிகளுடனும் நமக்கு நெடுங்கால உறவு உண்டு. ஆனால், நாம் இவ்விருவரிடமிருந்தும் காகிதம் செய்யும் தொழிலை ஏன் அறிந்து கொள்ளாமல் போனோம்? 19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் ஏன், ஏடும் எழுத்தாணியுமாக உட்கார்ந்திருந்தோம்?
கிறிஸ்தவ பாதிரியார்கள், பழைய கந்தல் துணிகளைக் கூழாக அரைத்து காகிதம் செய்தனர். நம் ஆச்சார மக்கள், இது, சமய ஆச்சாரங்களுக்குப் புறம்பான இழி தொழில் என்று கருதி, தள்ளி விட்டனர். (பழைய கந்தல் துணிகளில் கீழ் ஜாதியினர் பயன்படுத்திய துணிகளும் அடங்குமே என்பதால்!)

— ப.சிவனடி எழுதிய சரித்திர நூலிலிருந்து...

தென்னிந்திய சினிமா வரலாற்றில், முதல் இருபது ஆண்டுகளில் வர்த்தக ரீதியாக ஒரு படமும் தயாரிக்கப்படவில்லை. இன்று விரிந்து, பரந்து வளர்ந்துவிட்ட இந்த சினிமாத் துறையை - தயாரிப்பு, விநியோகம், காட்சிப்படுத்துதல் என்று பிரித்தால், காட்சிப்படுத்துதல் மட்டுமே முதல் இருபது ஆண்டுகளில் வளர்ந்தது எனலாம். மற்ற இரு அம்சங்களும் அப்போது ஆரம்பமாகவில்லை.
சென்னை மவுண்ட் ரோடில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த வெங்கையா என்பவரை, வேகமாகப் பரவி வந்த சலனப் படத்துறை ஈர்த்தது. சென்னையில் இரண்டு நிரந்தரக் கொட்டகைகளும், பல டூரிங் சினிமாக்களும் வெற்றிகரமாக சலனப் படங்களைத் திரையிட்டுக் கொண்டிருந்தன. இவரும் ஒரு குரோனா மெகபோன் (கிராமபோன் ஒன்றுடன் இணைக்கப்பட்ட புரொஜக்டர்) ஒன்றை வாங்கி, விக்டோரியா பப்ளிக் ஹாலில் படங்களைத் திரையிட ஆரம்பித்தார். அவை, 500 அடி நீளமே கொண்ட அமெரிக்கத் துண்டுப் படங்களே. படம் திரையில் விழ ஆரம்பித்ததும் ரெகார்டு சுழல ஆரம்பித்து, ஒலி பிறக் கும், படங்கள் பேசுவது போன்ற பிரமை ஏற்படும்.

வசூல் நன்றாகவே ஆனது. பிறகு இவர் இலங்கைக்கும், பர்மாவிற்கும் சென்று, படங்களைத் திரையிட்டார். கணிசமான தொகையுடன் திரும்பிய வெங்கையா, ஒரு நிரந்தரக் கொட்டகையைக் கட்டி சென்னையிலேயே தங்க முடிவு செய்தார்.

மவுண்ட் ரோடில், 1913ல், "கெயிட்டி' தியேட்டரைக் கட்டினார். முதன் முதலாக இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கு தான் கடைசி வரை தியேட்டர்களில் எல்லாம் மூத்தது. அது மட்டுமல்ல, முதலில் வைத்த பெயரே நிலைத்திருந்தது.
— தியோடர் பாஸ்கரனின், "தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து...

Source & Thanks : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7733&ncat=2

Sunday, September 2, 2012

10/365 கிறுக்கியது யாரு? சினிமா Quiz

இன்று தினமலரில் வந்த செய்தி.

ஈரோடு : விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.ஓ., விவசாயிகள் பிரச்னை என்னவென்று கேட்காமல் மெய்மறந்து அருகில் இருந்த தாளில் படம் வரைந்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்த விவரம வருமாறு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஈமு கோழி பிரச்னை, கரும்புக்கு நிலுவை பணம் பாக்கி, பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு... என, விவசாயிகள் தங்கள் தரப்பு குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்தவர், டி.ஆர்.ஓ., கணேஷ். இவர் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்; விவசாயிகள் பேசுவதைத்தான் டி.ஆர்.ஓ., குறிப்பு எடுக்கிறார் என நினைத்து, அருகில் போய்ப் பார்த்தால், பச்சை மை பேனாவால், அவர் மும்முரமாக படம் வரைந்து கொண்டிருந்தார் !

நன்றி: தினமலர் 

இருங்க, இது மாதிரி அடுத்தவங்க ஏதாவது பேசும் போது படம் பக்கத்துல இருக்கிற காகிதத்துல படம் வரையறதை ஏதோ தப்பு போல செய்தி வெளியிட்டுருக்கும் தினமலருக்கு எதிரான பதிவு இல்லை  இது..

திவு என்னான்னா, இதே மாதிரி ஒரு சினிமாவுல ஒரு வில்லன் இதைப் போலவே செய்வார். அது ஒரு துப்பா மாறி வில்லனைக் காட்டிக்குடுத்துடும். கேள்விகள்
1. அது என்ன படம்?
2. படத்துல வில்லனாய் கிறுக்கி மாட்டிக்கொள்வது யார்?
3. படத்தின் கதாநாயகன் யார்?

Saturday, September 1, 2012

9/365 வேகத்திற்கு உதவிய காவல்துறை

யோசனைப் பண்ணிப்பாருங்களேன், ஒரு காரை 30 மைல் வேகத்துல ஓட்டிட்டு இருக்கீங்க. அமைதியா, ஆர்ப்பாட்டமில்லாத சாலை, மனதிற்கேற்ற இசை, கையில காபி இப்படி அழகா போயிட்டு இருக்கிற ஒரு பயணத்துல, திடீர்னு காரே வில்லனாய் மாறி, உங்க பேச்சு கேட்காம அதுபாட்டுக்கு ஓடினா என்ன ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

போன வாரம் அப்படித்தான் ஒரு சம்பவம் ஆச்சு. அமெரிக்கா  ஐயோவா மாநிலத்துல ஒரு அம்மணி காரை 30 மைல் ஓட்டிட்டு இருக்கும் போது, வண்டி அதா வேகமெடுத்திருக்கு, அம்மணி பிரேக் போட்டு பார்த்திருக்கு , நிக்கலை. வண்டி அது பாட்டு வேகமெடுக்க 110-120 மைல்ன்னு ஓட ஆரம்பிச்சிருச்சு. அம்மணியும் இடிக்காம இருக்க போற வண்டி சந்துல எல்லாம் பூந்து ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க, உசுரு பயமாச்சுங்களே.

ன்ன பண்றதுன்னு தெரியாம காவல்துறையை கூப்பிட்டிருக்க அம்மணி. அவுங்களையும் Neutralல போடு,.. அது இதுன்னு தெரிஞ்சதை சொல்ல, அம்மணியும் முயற்சி பண்ணிட்டே இருந்திருக்காங்க. ஆனாலும் வேகம் குறையாம சுமார் (59 மைல்) போயிருச்சு. அப்புறமா காவல் துறை சொன்னாப்ல Accelerator குடுத்து  brake புடிச்சவுடனே நின்னுடுச்சு.
றங்கும்போது அம்மணியின் நிலையை காணொளியில  பாருங்க. அப்புறம் அம்மணி சொன்னது கீழே

"I knew I was going to die ... I didn't have any doubt about. I really thought I was going to die ... and no matter what I did, I couldn't slow it down."

அம்மணி ஓட்டிட்டு போன வண்டி Kia Sorento SUV. Kia தொழில் நுட்பக்காரங்களோ "இது என்னான்னு எங்களால கண்டுபுடிக்க முடியலை"ன்னு சொல்லிட்டாங்க, எப்படியும் அம்மணிக்கு பெரிய நஷ்ட ஈட்டைத் தந்துடுவாங்கல்ல.

அடுத்த முறை வண்டியை எடுக்கும் போது பிரேக் புடிக்குதான்னு பார்த்துட்டு கிளம்புங்க. 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)