Tuesday, December 23, 2014

என் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது?

ழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில்  கிளம்பியாயிற்று  15 நிமிட   ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்,  அனைத்து செய்தி  சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.

10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்களும் காலையில் டாட்டா காட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.

அமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.

வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன?  ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது? தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்?

தினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.

தொடர்புடைய சுட்டிகள் :



Wednesday, December 17, 2014

லிங்கா - இது விமர்சனம் அல்ல

லிங்கா பார்த்தாச்சு. பயப்படாதீங்க, இந்தப் பதிவு இந்தப் படத்தைப் பத்தின விமர்சனம் மட்டுமல்ல.

லிங்கா வெற்றியா தோல்வியா என்பதைப்பற்றி நான் எழுத வரவேயில்லை. காரணம் முதல் வாரயிறுதியைத் தாண்டிவிட்டால் எல்லாருக்குமே அது தெரிந்திருக்கும். 


பலவீனம்: தர்மதுரையில், இதே துள்ளல் இருக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் தந்துவிட்டு சத்திரத்தில் தங்கியிருப்பார். அதே கதை மீண்டும், அங்கே படிப்பு, வசதி இத்யாதிகள், இங்கே அணை, ராஜா, அரண்மனை, கோயில். Very Predictable Scenes, அதுதான் பிரச்சினையே. அடுத்து வரும் காட்சிகளை அம்சமாக சொல்ல முடிகிறது. கோச்சடையானில் இருந்த திருப்பு முனைகளில் ஒன்றுகூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. பறப்பது எல்லாம் ஓவரோ ஓவரோ, சிரிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியிஸம் ஓரளவுக்கு சரி, ஆனா இவ்வளவு ரொம்பவே அதிகம் KSR

படத்தோட மிகப்பெரிய பலங்கள் 6

  1. ரஜினி 
  2. ரஜினி
  3. ரஜினி
  4. படமாக்கப்பட்ட விதம்/தயாரிப்பு நிர்வாகம்- சாபு சிரில்
  5. ராண்டி - ஒளிப்பதிவு
  6. ரஜினி

சாபு சிரில் என்கிறவரை கலை என்கிற வட்டத்தை விட்டு தயாரிப்பு நிர்வாகம் என்று மாற்றியதில்தான் இருக்கிறது படத்தின் பிரம்மாண்டத்திற்கான வெற்றி. அதுவும் பல இடங்கள்  GreenMat தொழில்நுட்பம்தான். ஆனால் அது தெரியாமல் செய்த விதத்தில் KSRன் திறமை தெரிகிறது. Double Tick. இந்த வருடத்தின் தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும். Advance Wishes Sabu Cyril

அடுத்து ஒளிப்பதிவு. அபாரம் அபாரம், அந்த புகையிரத சண்டையாகட்டும், தாத்தா ரஜினியின் பகுதிகளாகட்டும், அனைத்து காட்சிகளிலும் இவரின் உழைப்பு தெரிகிறது.

ரஜினி: ரஜினி ரஜினி ரஜினி.. படத்தின் அத்துணை பலமும் இவர் மீதுதான். இளமை கொண்டாட்டம், துள்ளுகிறார்.

மற்றபடி லிங்கா எனக்குப் பிடித்திருந்தது.

இனி, என் சொந்தப் பிரச்சினை. லிங்கா படம் வெளியாகும் என்று தெரிந்தவுடனேயே எல்லோரையும் போல் நானும் இணையம் சென்றேன், விலை பார்த்தால் $25ஆம், சரி இது சிறப்பு காட்சிகளுக்கு என்றுதானே வாரயிறுதிக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் $20ஆம். சரி, விலை குறையட்டும் என்று விட்டுவிட்டேன். இப்படி விட்ட நண்பர்கள் ஏராளம். ஆங்கில படத்திற்கு $12 என்று இருக்கையில் நீங்க வைக்கிற $25 மதிப்பு என்ன நியாயம்? இதுல  விமர்சனம் செய்யக்கூடாது, MEME செய்யக்கூடாதுன்னு சொல்ற யோக்கியதை உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா?

இனிமே $20 என்று வைத்தால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு காட்சிக்கு மட்டும் வருவார்கள், என்னைப் போன்ற சினிமா பார்க்கும் பொதுப்பார்வையாளனுக்கு விலைதான் முதலில் தெரியும். குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். (கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்றே வைத்துக்கொள்வோம், $25*2+$20*2 +பாப்கார்ன், குளிர்பானம் என்று வைத்தாலே $100 பக்கம் வருகிறது. இந்த லட்சணத்தில் 20 மைலாவது ஓட்டி வர வேண்டும், போக வர 1 மணி நேரம், படம் பார்க்க 3 மணி நேரம், கிளம்ப 1 மணி நேரம் என்று வைத்தாலும் 5 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பஸ்தன் இனி சினிமா பார்க்க இத்துணை சிரமங்கள் இருக்கின்றன. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் $20 வைத்து மொக்கைப் படம் தந்தால் கண்டிப்பாக அடுத்து வரும் படங்களுக்கு ஒருவரும் திரையரங்கம் வர மாட்டார்கள்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்/மலேசியா, இந்தியா, அரபு நாடுகள், இங்கிலாந்து என்று அனைவரும் பார்த்த பின்னால்தான் அமெரிக்காவில் வெளியாகிறது. இதில் விமர்சனங்களைப் பார்த்த பின்னரே இங்கேயிருந்து திரையரங்கம் செல்கிறோம். அதுவுமில்லாமல் அனைத்து விதமான போங்காட்டமாக பார்க்கும் வசதிகள் இருந்தும் திரையரங்கம் செல்லும் ரசிகர்களை உங்கள் விலையை வைத்து திசை திருப்பாதீர்கள்.

லிங்கா தனியாகத்தான் சென்று பார்த்தேன், அதுவும் ஒரு வார நாளில் , என்னையும் தவிர்த்து திரையரங்கத்தில் 4 பேர் இருந்தனர்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)