Monday, October 24, 2005

காக்கா!


இது கரைவது கூட இசைதான்கிறாங்க
கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்கிறார்கள்.
சனீஸ்வரனின் வாகனமாம், கருப்பாய் இருந்தால் அண்ட காக்காயாம், மனிதன் இறந்தால் இவர்களுக்கு சாப்பாடாம் (முன்னோர் என்று அர்த்தமாம்)
தலைவர்களின் சிலைகளை இவர்கள் மட்டும்தான் அசிங்கப் படுத்துகிறார்காளாம்(கண்ணகி சிலை இப்போ எங்கே சாமி?).
சில வீடுகளில் தினமும் ஆகாரமிடுகிறார்கள்(எதற்கு என்று தெரியாமலே)
நாம் தலைக்கு சரியா குளிக்காமல் விட்டு புண் வந்தால் காக்கா புண்ணாம்.
வடாம் காய வைப்பதற்க்கு ஒரு Duplicate காக்கா
வேலை இல்லா மக்கள் ஒன்று கூடி எங்காவது சேர்ந்தால் காக்கா கூட்டம்.
பங்கிட்டு உண்பதற்க்கு காக்கா தான் உதாரணம் (இது ஒண்ணு தான் காக்காய் பற்றி நல்ல விதமாக தோன்றியது),
அட நம்ம சிவாஜி (ரஜினி- சிவாஜி இல்லைங்க, பராசக்தி சிவாஜி) காக்கா பாட்டுலாதாங்க அவரோட கலைப் பயணத்தினை ஆரம்பிச்சார்.
கோழி புடிக்கிறதுக்கு ஒரு அர்த்தம்ன்னா, காக்கா புடிக்கிறதுன்னா வேற அர்த்தம்
இதனோட பேர சொன்ன முகம் சுழிக்கிறவங்க எல்லோரும் இவுங்க பேர அப்படியே ஆங்கிலத்துல மொழி பெயர்த்து பேரின் கடைசியில ஒரு "N" சேர்த்தால் முகம் சுழிக்கிறவங்க எல்லாம் இதுக்கு அடிச்சுக்குவாங்க (Crow+N= CROWN)(எங்கியோ போயிட்டேடா)

என்னடா ஒரே காக்கா புராணமா இருக்கேன்னு உங்க மனசுல ஒரு கேள்வி வந்து இருக்குமே? வேற ஒண்ணும் இல்லீங்க, தோட்டதுல கேமரா வெச்சுகிட்டு ஏதாவது பட்டாம்பூச்சி, குருவி கிடைத்தால் அழகா படம் போட்டு பேர் வாங்கலாம்ன்னு நினைச்சேன், நம்ம நேரம் எதுவும் கிடைக்கலை. வல்லவனுக்கு (சிலம்பரசன் இல்லீங்க) புல்லும் ஆயுதம் அதான் ஒரு ஒத்த காக்காய புகைபடமா எடுத்து அதைப்பற்றி ஒரு வலைப்பூ. (பின்னூட்த்துல பின்னீறாதீங்க சாமீயோவ்)

Monday, October 17, 2005

மழை!




சந்தோஷம்!
எதுக்கு? டிராவிடுக்கு கேப்டன் பதவி கிடைச்சதே அதுக்கா இல்ல மஜா பாட்டு hit ஆயிடுச்சே அதுக்கா? இதெல்லாமா நமக்கு சோறு போட போகுது? இல்லீங்க. சந்தோஷத்துக்கு காரணமே வேற.

காவேரி எங்க ஊர் பக்கம்தான் ஓடுதுனாலும் அதனால எங்களுக்கு எந்த பலனும் இல்லை. எங்களுக்கு ஏரித்தண்ணியும், கிணத்துத்தண்ணியும் தான் உதவுது, அதுவும் மழை நல்லா பெய்தால்தான். இந்த வருஷம் வருண பகவானுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லனும். 10 வருஷம் ஆச்சு எங்க ஊர் ஏரி நிரம்பி. சுனை, ஊத்து தண்ணியெல்லாம் நான் டவுசர் போட்டு ஒடக்கான் அடிச்ச காலத்துல பார்த்தது.(10 வது லீவ்லதான் நான் லுங்கிகட்ட ஆரம்பிச்சேன்). இந்த வருஷம்தான் ஊத்து தண்ணி பள்ளத்துல(வண்டிதடம்) ஓடுது, ஏரியும் நிரம்பி வழியுது. அதுக்கு கிடா வெட்டு, பூசைன்னு நடக்குதா, இல்ல. மழை வர வைக்கதான் கழுதைக்கு கல்யாணம், பூசைன்னு நடத்துவாங்க, வந்துட்டா... மறந்துருவோம்ல. என்ன மனுஷ பயலுகடா? அதுக்கு தான் நம்மோட வலை மூலமா வருண பகவானுக்கு ஒரு பெரிய நன்றி.(வருண பகவான் BLOG படிப்பாரான்னு எல்லாம் பின்னூட்டம் போடாதீங்க).

நேத்து தோட்டத்துல நாத்து நடவு நடக்கும் போது எடுத்த புகைபடம்

Sunday, October 9, 2005

சுத்தம் சோறு போடும்!


இதுவும் ஒரு புலம்பல்தாங்க..
பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நிலநடுக்கம், கத்ரீனா & ரீட்டா, சென்னை கடலோர பகுதியில் மாதத்துக்கொருமுறை கொந்தளிப்பு...... என்னதான் நடக்குது இந்த உலகத்தில. ஏன் நடக்குது இதெல்லாம்? முற்பகல் செயின் பிற்பகல் விளையும் அப்படிங்கிறது நம்ம மக்களுக்கு மட்டும் இன்னும் ஏன் புரியவே மாட்டேங்குதுங்க. ஒரு இந்தியன் வெளிநாட்டுக்கு போனா தெரியற முதல் வித்தியாசம் என்ன தெரியுங்களா? "சுத்தம்". சுத்தம் சோறு போடும் அப்படின்னு சொன்னா, உடனே "அப்போ சுகாதாரம் குழம்பு ஊத்துமா"ன்னு வியாக்கியானமா கேள்வி மட்டும் கேட்கிறோம், அதை கடைபிடிக்கிறோமா சத்தியமா இல்லைங்க. போன வருஷம் விவசாயத்துக்கு தண்ணி இல்லாம நாம பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாதுங்க. அட, நெல்லம் பயிறுக்கு தண்ணி இல்லாங்காட்டியும் பரவாயில்லைங்க, நம்ம முப்பாட்டன் காலத்திலிருந்து செழிப்பா இருந்த தென்னை மரத்தையெல்லாம் காப்பாத்த நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்லைங்க. டிராக்டர்ல எல்லாம் தண்ணி கொண்டு வந்து ஊத்தி காப்பாத்துனோம்.
எங்க தாத்தா, ஒரு நவீன விவசாயிங்க. தாத்தா இப்போ இல்லைங்க, இதெல்லாம் தெரிஞ்சுதானோ என்னமோ மேட்டாங்காட்டுல எல்லாம் மாஞ்செடி நட்டு வெச்சார், மகராசன். அதோட மட்டும் இல்லாம எங்க ஊர்ல முக்கால்வாசி பேர் மாஞ்செடி வைக்க காரணமாகவும் இருந்தார். அதனாலதானோ என்னமோ இப்பொவெல்லம் தண்ணி இல்லாட்டியும் எங்க ஊர் இப்போ சமாளிக்கவாவது முடியுது.

சரிங்க விஷயத்துக்கு வருவோம். யாரும் தப்பு செஞ்சாலும் பாதிக்கப்படுறது என்ன மாதிரி இருக்கிற விவசாயிங்கதான். நகரம் முழுசும் புகை, நாத்தம், சாக்கடை தண்ணிய ஆத்துல கலந்துவிட்டுறது அப்படின்னு முடிஞ்ச வரைக்கும் சுற்றுபுறத்த நாசம் பண்ணிடறாங்க. அப்புறமா பூமி நடுங்குது, கடல் கொந்தளிக்குதுன்னு சொல்றது தப்புங்க.

நான் சொல்றதை நம்பலைன்னா இந்த தொடுப்பை தட்டி பாருங்க

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)