Thursday, March 22, 2012

பன்னாடை பன்னாடை @vivaji 03-22-2012

பன்னாடை என்றால் என்ன?
இந்த வார்த்தை பலருக்குத் தெரிஞ்சாலும் அது எப்படி இருக்கும்னு தெரியாதில்லையா? இதுதாங்க அது
  • அடுத்து ஒலிபரப்பாகும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் கோச்சடையான்.   இசை: AR Rahman, பேசியிருப்பவர்: ரஜினிகாந்த்

  • இணையத்துல காங்கிரஸ் கட்சி இருந்தா எப்படி இருக்கும்? 150 Admins and 2 Users
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடித்தால் தீக்குளிப்பேன்: கருணாநிதி எச்சரிக்கை #டேய் பசுபதி, எட்றா அந்தக் கடப்பாரையை..
  • ”சினிமாக்காரன் ஆதரவு தரலையா, அவன் படத்தைப் பார்க்காதே” என அவனைத் தள்ளி வெச்சிருந்தா அவந்தாண்டா தமிழன். நாம? ஹிஹி
  • 2025ல் பேசிக்குவாங்க “2012ல் வெட்டிக்கும்பல் ஒன்னு Twitter, facebookன்னு வெட்டியாப் பொழுதைக் கழிச்சிட்டு இருந்தாங்களாம்”
  • தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதில் தாய் முதலிடத்திலும், ராஜா இரண்டாம் இடத்திலும் #துள்ளி எழுந்தது காற்று
  • விகடன் வலைபாயுதே படித்த பின் என் நண்பன் “நீயும் தத்துவம் எல்லாம் எழுதுவியா?” என்று கேட்டு கதிகலங்க வைத்துவிட்டான். ”சத்தியமா இல்லடா” . ட்விட்டர்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை “தத்துவம்”தான்
 
  • ஆக மொத்தம் கேப்டனிடம் இல்லாத ஒன்று, அம்மாவிடம் இருப்பது #திராணி.
  • "அண்ணா" என்பது பெண்களின் கூர்மையான ஆயுதம்! இன்னொரு நல்ல காதலன் கிடைத்துவிடும் போது
 
  • லாபம் "ஈட்டி"த் தந்ததுங்கிறாங்களே, கோடாரி, அம்பு-வில் எல்லாம் எப்போ தரும்?


  • நல்லவர்களுக்குக் காலமில்லை. நிகழ்கால உதாரணம் : வைகோ
  • காதல் ஒரு எழவைப் போல, சிலருக்கு பத்து முடிஞ்சிதான் அது புரியவே ஆரம்பிக்கும்
----------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Monday, March 12, 2012

இனிமேலாவது வீட்டுல சாப்பிடுங்க ராகுல்ஜி @Vivaji Updates

  • இணையத்தில் ஒரு ஸ்மைலி போட்டுட்டாப் போதும், சண்டை முடிஞ்சிருச்சின்னோ இல்லை நான் சண்டைக்கு வரத் தயாரில்லைன்னோ அர்த்தம்

  • காதலனாக இருக்கையில் சில கணங்களில் வருத்தப்படனும், கல்யாணம் ஆன பிறகு அதுவே பல கணங்களில் என மாறும்

  • வாழ்க்கைங்கிற படத்துல இடைவேளை கிடையாதாம். ஆனா பல கிளைமாக்ஸ் வந்துட்டுப் போயிருது

  • தமிழ் மட்டும் ஏன் இவ்வளவு சிதைந்து உருமாறி வந்திருக்கு, இந்தளவுக்கு ஆங்கிலம் இல்லையே. ஏன்?

  • 38 வயசுலேயே அகிலேஷை முதலமைச்சர் ஆக்கிட்டாரு முலாயம். இன்னுமா ஸ்டாலினை இளைஞர் அணிச்செயலாளரா வெச்சிருக்கப்போறீங்க கலைஞர்ஜி?
 
  • விஜய் ராணுவ அதிகாரி. மும்பை போகும்போது ஆகும் பிரச்சினைதான் துப்பாக்கியின் மூலக்கதை. ரொம்ப புதுசா இருக்குல்ல? 

  •  ராஜா எத்தனையோ இசைக்கருவிகள் வாசிச்சாலும் அவருடைய ரசிகர்கள் வாசிக்கிறது என்னமோ “ஜிங்-ஜக்”மட்டும்தான்

  • மகளிர் தினமென அறிவித்ததும் கூட ஒரு ஆணாகத்தான் இருக்கும்

  • காதல் விஜய் படம் மாதிரி. பார்க்காதவன் பார்க்கத்துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்.


  • உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம்: ராகுல் #இனிமேலாவது உங்க வீட்டுல சாப்பிடுங்க ராகுல்ஜி
------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Thursday, March 1, 2012

அப்பாடக்கர் உருவானவிதம் - 2

அப்பாடக்கர் உருவானவிதம் - முதல் பாகம் படிக்க

ஸ்ரீராம் மற்றும் ஜெயவேலன் ஆகியோரைக் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். முதல் நாள் வெளிப்புற படப்பிடிப்பில் மூவருமே பேந்த பேந்த முழித்தோம். மூவருக்குமே ஒன்றும் தெரியவில்லை.(இப்ப மட்டும் தெரிஞ்சிருச்சாக்கும்). ஆனால் அடுத்த நாளில்

ரெண்டு பேருமே சீக்கிரமே நடிப்புக்கலையை கற்றுக்கொண்டது நான் செய்த புண்ணியம். அவர்களை நான் படுத்திய பாடு எல்லாம் Editingல் தெளிவாகத்தெரிந்தது. சில இடங்களில் “உன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே” என்றவாறு முக பாவனை எல்லாம் துள்ளியமாக புரிஞ்சிக்க முடிஞ்சது.


சில பெரிய காட்சிகள் எல்லாம் ஒரே takeல் முடிந்தது. ஸ்ரீராம் - சரக்கு காட்சி எல்லாம் ஒரே takeல் எடுத்ததுதான். ”Voiceover(dub) பண்ணிடலாம் வாங்க ஸ்ரீராம்” என்ற போது, ”இல்லீங்க இனிமே அதை செய்ய முடியாது” என்று சொல்ல Live Recordingஐ அப்படியே வைத்துக்கொண்டோம்.


சரக்கு சீனில் ஒவ்வொரு ரவுண்டுக்கும் இப்படி வைப்பதாகதான் இருந்தது. மங்காத்தாவில் பிரேம்- அஜித் காட்சியிலும் இப்படியே வர ஸ்ரீராம் கடைசி நேரத்துல ஒரு யோசனை சொன்னாரு, “ரவுண்ட்(வட்டம்) மட்டும் போட்டுக்கலாமே” என்று. குத்துச்சண்டையில் ரவுண்டுக்கும் வரும் சப்தம் ஞாபகத்துக்கு வர அப்படியே அமைத்தேன். ஆனா அது யாருக்கும் புரியல (Epic Fail) சரியா, தகவல் போய் சேரலை. Stop Clock சப்தத்தையும் சேர்த்திருந்தேன், அதை பாஸ்டன் பாலா சரியா கண்டுபுடிச்சிருந்தாரு.

என்னதான் படத்தை தெளிவா எடுத்துட்டாலும் Editing என்று வந்த பிறகுதான் தெரிந்தது, 35 GB இருந்தது raw files. அதுவரைக்கும் சுலமாக தெரிந்தது எல்லாமே கஷ்டமாக தெரிந்தது. வடிவேலு சொல்வது போல, ஒரு நாள் எல்லாமே தேவை இல்லாத ஆணிகளாகவே தெரிந்தது.அடுத்த நாள் எல்லாமே தேவையான ஆணிகளாகத் தெரிந்தது. ஜெயவேலன் இல்லாத நேரத்தில் டப்பிங் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்தே செய்ய முடியுமா என்று முயற்சித்தேன். அவருக்கு கல்யாண வேலை.

ஆமாம், ஜெயவேலைனுக்குத்தான் திருமணம். அதிக அழுத்தம் வேறு தரமுடியாத நிலை. ஆனால் அவரே பேசினால் நல்லது என நினைத்தேன். வேறு வழியில்லாமல் அவருக்குப் பதிலாக வேறொருத்தர் செய்துவிடலாம் என முடிவு செய்தேன்.வேறு யார் செய்ய, நானேதான். படம் ஆரம்பத்தில் திருநெல்வேலி களத்துடன் ஆரம்பித்தது, படத்தையும் திருநெல்வேலி பாசையிலேயே எடுத்துட்டு பிறகு கோவை வட்டார மொழிக்கு மாற்றினேன், காரணம் நமக்கு என்ன வருமோ அதைத் தானே செய்யனும்/பேசனும். சரியாகப் பொருந்திப்போக(போவல), சும்மா எடுத்த சில காட்சிகளை வைத்து ஒப்பேற்றினேன்.

இது எல்லாம் எழுதப்படவே இல்லை. எடிட்டிங் முடிந்த பிறகே ஸ்ரீராமிற்கே தெரிந்தது. இடையிடையே ஸ்ரீராமும் நானும், பல விதமாக காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தோம். எப்படி காட்சிகளை அமைத்தாலும்
வேறு வேறுவிதமான பரிமாணங்கள் வருவதைக்கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுக்கொண்டோம். அதிசயித்தோம்.

எடிட்டிங் என்பது பெரும் கலை.உண்மையைச் சொன்னால் கத்திரி வைப்பதில் தான் படத்தின் ஓட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகில் இருப்பவர்களுக்கு தெரிவதேயில்லை.

இசைக் கோப்பிறகாக ஒரு வார காலமானது. அப்படி இப்படியென 4 மாத காலமானது. பல இரவுகள் 2 மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். கண்டிப்பாக 80-100 மணிநேரமாவது

உழைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஒரு வாராக 6 நிமிடத்திற்கு ஜெயவேலன் இல்லாமலேயே படம் முடிந்தது. வெளியிடும் நேரத்தில் எனக்கு ஒரு தயக்கம். காரணம், படம் எனக்குப் பிடிக்கவில்லை, அடுத்தது negative thought  உருவாக்கம். IT பத்தின இந்த விசயங்கள் பெரிதாக பேசப்படவில்லை எனினும் இந்தப் படம் தெளிவாகவே அதைச் சொன்னது. ஸ்ரீராம் கோபத்தின் உச்சநிலையை அடைந்திருந்தார், ருத்ரதாண்டவம் ஆடாதது ஒன்றுதான் குறை. படம் வந்தே ஆகவேண்டும் என்று அவரே கடைசியாக ஒரு நாள் குறித்தார். அதற்கு முன்னரே படம் முடிவடைந்திருந்தது. சொன்னதேதியில் ஸ்ரீராமிம் கையால் படம் வெளியிடப்பட்டது. ஆனால தமிழோய்வியம்தான் படம் வெளியிடுவதாக இருந்தது. எங்களுக்குள் இருந்த குழப்பத்தால், இரு பக்கமும் படம் ஒரே நாளில் வெளியானது.

இதற்காக சில குரல்களை மட்டும் வெளியிடத்தில் வாங்க வேண்டியிருந்தது, நாட்டாமையாக கணேஷ் சந்திராவும், நாயராக நிஜமாகவே ஒரு மலையாள் நண்பரும் உதவினார்கள். பதிவர்கள் மட்டுமே முதல் நாளில் அதிகம் பார்த்தார்கள் என நினைக்கிறேன், தெரிந்தவர்கள் ஆதலால் யாரும் பெரிதாக குறை சொல்லவில்லை. நல்ல நண்பர்கள். Gregopaul எனும் twitter நண்பர்கள் படத்தை அங்குலம் அங்குலமாக விமர்சித்தார், திரைப்பட்த்தில் ஒளிப்பதிவாளராக இருக்கும் அவர் படத்தினைப்பார்த்த கோணம் வித்தியாசமாக இருந்தது.

இந்தப் படத்திற்காக செலவு என்பது செய்யப்படவே இல்லை. ஆமாம், படம் பிடிக்கத்தேவைப்படும் சில கருவிகள் வாங்கியதைத்தவிர படத்தில் செலவு என்பதே இல்லை. படம் பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் iPhoneலயே பிடிக்கப்பட்டது. ஒரு படம் எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதும் எவ்வாறாக படம் எடுக்கவேண்டும் என்பதற்கான முதல் புள்ளியையும் கற்றுக்கொடுத்தது இந்தப் படம்.

உண்மையைச் சொன்னால், போனமாதம்தான் நானே அந்தப் படத்தை முழுதாக பார்த்தேன். இவ்வளவுநாள் கழிச்சு பார்க்கும்போது நான் செய்த தவறுகள் நிறையத் தெரிந்தன. Editingல் செம சொதப்பல், நீளம், ஏகப்பட்ட தேவையில்லாத காட்சிகள். ஹ்ம்ம், கத்துக்கிட்டா இதையெல்லாம் செய்யறோம். ஆனா மனசுக்குத் திருப்தியா நாம நெனச்சது வரும்போது ஒரு சந்தோசம் வரும்பாருங்க...

ஆனா ஒன்னு சொல்றேங்க, படம் எடுக்கிறது ரொம்பக் கஷ்டங்க.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)