Thursday, February 26, 2009

ஆஸ்கார் வாங்கினா மட்டும் என்ன?

இந்தியா திரும்பிவரும் போது விமான நிலையத்தில்


பின்பு...




Red Carpet, Lime Light, SDM One of the Hero, US visit இருந்தாலும்.. வீடு இதுதானுங்களே. ஆட்டம் முடிஞ்சு போச்சு, வேலையப் பாருடா செல்லக்குட்டி.. :(



Azharuddin Ismail, who played young Salim in the Oscar-winning film “Slumdog Millionaire,” sat in his modest Mumbai home Thursday after returning from the U.S. (Arko Datta/Reuters)

நன்றி: WSJ, The Hindu(X)

Tuesday, February 17, 2009

குருவிகள்: 6 வார்த்தைகளில் கதை/கவிதை

முன்னாள் பதிவர்கள்(ஆமாங்க ட்விட்டர்ல இருக்கிற எல்லா மக்களும் பதிவுகளுக்கு டாடா சொல்லிடறாங்க. ஆனா எல்லாப் பதிவுகளையும் படிப்பாங்க.முக்கியமான விசயம், மூத்தப்பதிவர்களுக்கே உரித்தான ஸ்டைல்ல பின்னூட்டம் போட மாட்டாங்க. என்ன ட்விட்டர்? ஊர்ல திண்ணை இருக்கும் பார்த்திருக்கீங்களா?. எல்லா ஊர்ப்பெருசுகளும் வேலை வெட்டி இல்லாம வெத்தலை பாக்கு போட்டுகிட்டு ஊரைப் பத்தி பொரனி(எந்த ன?) பேசுவாங்களே அந்த மாதிரி ஒரு திண்ணைதான் இந்த ட்விட்டர்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி லிங்கன் ஒரு மேட்டரைச் சொன்னாரு. அதாவது 6 வார்த்தைகளில் கதை எழுதனும். அது கவிதை/ஹைக்கூவா மாறிடுச்சுங்க. சுவாரஸியமா போகுது ட்விட்டர் இப்போ. வெட்டியா பொழுதப் போக்கினாலும்..6 வார்த்தை கவிதைகள்ல கலக்கிட்டாங்க. இப்ப், பதிவுகளை விட ட்விட்டர் செம ஜோராப்போவுதுங்க. 6 வரிகள்ல கவிதை எழுதலாம் 6 வார்த்தைகள்ல?

6 வார்த்தைல கவிதை/கதை/ஹைக்கூ

இளா: தெருவில் பிச்சைக்காரன், ஒரு ரூபாய் கூடவா இல்லை?

ajinomotto : பேரன் பேத்தி கண்ட உனக்கு சின்ன வயசு ஜோடியை மனசு தேடினால் நீ சூப்பர் ஸ்டார்...

gchandra : நீ இப்போ என்ன செய்யறே?, டிவிட்டரில் நான்.

ajinomotto : சினிமா வாய்ப்பு.சோப்பு.உழைப்பு.3 ஹிட்டு.பஞ்சு டயலாக்கு.நாளைய தமிழக முதல்வர்

பெனாத்தலார் : கடன்காரன் தொல்லை; கவலை இல்லை! மந்திரி பிள்ளை!

பெனாத்தலார் : தலால்தெருவின் பிச்சைக்காரன் காரை வெறிக்கிறான். நாளைக்கு நீ

இலவசக் கொத்தனர் : இணையம் இல்லை. விண்டோஸ் திறந்தேன். உலகம் அழகு!

பெனாத்தலார் : அவனைக் காப்பியடித்து கதை படைத்தேனாம். அவனுமா படித்தான் ஆங்கிலம்?...

இளா : பதவியேற்றபின் நடிக்க வேண்டியிருக்கு, நடிகனாவே இருந்திருக்கலாமே!...

பெனாத்தலார் : அட்டுபிகர். அழகாய்த் தெரிந்தாள். ரெண்டுநாள் ரயிலில் இலுப்பைப்பூ!...

இளா : இருட்டு, தெரியவில்லை அடுத்த வீட்டு ஃபிகர்.

இலவசக் கொத்தனர் : பாழாப்போன பத்மஸ்ரீ. பாவம் விவேக். சிரிக்கிறாரு வடிவேலு!...

இளா : தமிழில் கவிதை எழுதப் பழகனும், வரி இல்லாவிடினும்.

இலவசக் கொத்தனர் : தொலைபேசி, செல்பேசி, இணையம் இருந்தாலும் கம்யூனிகேஷன் கேப்!...


இலவசக் கொத்தனர் : பையனோடு நட்சத்திரம் பார்த்து நாளானது. நன்றி ஆற்காட்டார்!..

இளா : இப்போது டிவிட்டரிலும் குட்டிக் கதைகள்!


gchandra : யாருக்கும் வேலை இல்லை, டிவிட்டரில் குட்டி கதைகள்

இளா : பினாத்தல் இலவசம்- டிவிட்டரில்

பெனாத்தலார் : கும்மிருட்டு, புதிதாய்த் தெரியுது பக்கத்துவீடு. தாங்க்ஸ் ஆற்காட்டார்!..


இளா : மின்சாரம் இல்லா உலகம், பளிச்சென்று உறவுகள்

gchandra : குருவி பறந்துபோச்சு. வில்லு உடைஞ்சுபோச்சு. வேட்டைக்காரன் ஐயோ பாவம் !!...

இலவசக் கொத்தனர் : ஆறு வார்த்தைக் கதையா? காதலியின் கண்ணுக்குள் பாரு!

Wednesday, February 11, 2009

ராம சேனா செஞ்சாதான் தப்பா?

காட்சி-1
சூர்யா: கலெக்டர் சார், நீங்க ஒரு கோர்ட் வெச்சி, இது சரி, இது தப்பு, இது பண்ணாத அப்படின்னு சொன்னா சரி, நாங்க சொன்னா தப்பா? ஏன்னா உங்க கிட்ட அதிகாரம். நாங்க படிக்காதவங்க. (படம் தளபதி)

மக்களிடமிருந்து விசில் பறக்கிறது. இது சினிமா.

காட்சி-2(உண்மைச் சம்பவம்)

இடம் : மருதமலை மேல் ஒரு parking.

கல்லூரி பெண்கள்(போலிருக்கும் ஒரு 5/6 பேர்) ஜீப்பின் பின்னாடி கண்ணீருடன் அமர்ந்திருக்க, ஆண்கள் எல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
காரணம்- ”அவுங்க எல்லாம் எதுக்கு சார் மருதமலைக்கு வராங்க? மலையில இருக்கிற ம்ரத்துக்கு கீழ ஒதுங்கி......... க்காகதான். அவுங்க அப்பா அம்மாகிட்ட சொன்னாதான் திருந்துவாங்க. படிக்கிற வயசுல என்ன அ**ப்பு வேண்டிக்கிடக்கு?”

விசாரித்துக் கொண்டிருந்த நான் ”பாவம் சார், விட்டுருங்க தெரியாம செஞ்சிட்டாங்க” பரிதாபத்துடன் நான் வேண்டிகொண்டேன்

காட்சி-3
மெரினா கடற்கறை(ரை) சென்னை, மற்றும் பூங்காகளில் ‘சேரும்’ ஜோடிகளைப் பிரிக்க அரசு வாய்மொழி உத்தரவு.
காவல்துறை: ..........தா, இதுக்குதான் நாங்க போலீஸ் ஆனோமா?

மக்கள்: இப்படித்தான் செய்யனும், அங்கே என்ன லவ்வு வேண்டிக்கிடக்கு?

காட்சி -4

செய்தி: மங்களூரில் இராம சேனா பப்’ல் அடிதடி. ஆண் பெண் பாராமல் தாக்கினார்கள்.

மக்கள்: இவன் யாரு பபுக்குள்ள போயி அடிக்க?

என்ன கொடுமை இது சரவணண் - மறுபடியும் மொதோ காட்சிய படிச்சுப்பாருங்க.

Sunday, February 1, 2009

தலை குனிந்து கொள்ளுங்கள் தமிழர்களே

ஈழத்தமிழனுக்கு வேலை மறுக்கும் தமிழர்கள், மாற வேண்டியது எது? மாற்ற வேண்டியது எதை? அரசியல்வாதிகள் செய்வதுதான் நமக்குத்தெரியுது, பொதுமக்கள் செய்றது மட்டும் சரீங்களா?




பார்த்து முடிச்சுட்டா தலைப்பை மாத்திப் படிங்க.
தலை குனிந்து கொள்ளுங்கள் ”தமிழகத்து“ தமிழர்களே. சனம், நட்பு, சொந்தம், பந்தம், குடும்பம் எல்லாத்தையும் விட்டு நம்மை நம்பி வர்றவஙக்ளுக்கு ஒரு வேலை கூட குடுக்க முடியாதா? அரசாங்கம்தான் செய்யாது, வேலை குடுத்துட்டு இருக்கிற முதலாளிங்களுமா?

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)