Monday, July 18, 2011

தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்


அவளுக்கெல்லாம் வயதே ஆவதில்லை!
தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்
தொடுதிரையும்,
தொட்ட திரையில் அவளும்!

---------------------------------------------------------------------------









அடடே,
ஆச்சர்ய குறி
ரெண்டையும் கையில்
வைத்துக்கொண்டு அலைகிறேன்..

ஜூஜூபி!
கவிதை மட்டும்தான் மிச்சம்..
நிரப்ப எழுத்துக்களை
மாற்றியமைத்து முயற்சிக்கிறேன்!

ஆங்,
சொல்ல மறந்துவிட்டேனே!
வார்த்தைகளை
ஒன்றன்
கீழ்
ஒன்றாகவும்
அடுக்கவும்
எனக்குத்
தெரியும்!

-------------------------------------------------------------------------------------------

அனாதையின் கையில்
விண்ணப்பப் படிவம்!
அம்மா, அப்பா பெயரை நிரப்புமிடத்தில்
தடுமாறுகிறது பேனா!
----------------------------------------------------------------------------------------------

நடுத்தெருவில் ,
குற்றவாளியைச் சுட்டுக்கொன்றது
காவல்துறை...
தெருவோரக் கடையில்
“ஸ்டாராங்கா ஒரு டீ”
என்றான் குற்றவாளி

Sunday, July 17, 2011

ஆடி - 1 - தேங்காய் சுடுற நோன்பி


இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க

Monday, May 16, 2011

NRI கொசுத்தொல்லைகள்

* 16 வயதினிலே படத்துல இருந்தே வெளியூர்க்காரனோ, வெளிநாட்டுக்காரனோ நமக்கு எப்பவுமே இளப்பம்தான். வெளிநாட்டுல இருந்து வர்ற மாப்பிள்ளைன்னாவே சாம்பார்தான். ரெண்டு சீன்ல மட்டுதான் வருவானுங்க, அப்புறமா கண்டிப்பா அல்வா பொட்டலம் கட்டி குடுத்தனுப்பிருவாங்க.

* வெளிநாட்டுல இருந்து ஊருக்குப் போறேன்னு போன் பண்ணி சொன்னாவே போதும், “மாப்ளே சரக்கோட வந்திருடா”ன்னு கண்டிப்பா சொல்லுவானுங்க. நாமளும் நல்லதா சரக்கு வாங்கிட்டு போய் குடுத்தா “மாப்ள, இது டாஸ்மாக்ல இருக்கிற சரக்க விட மட்டமா இருக்கேடா. இதைப் போய் எப்பிடிறா சப்பி சப்பி குடிக்கிறீங்க”ன்னு கடுப்பாக்குவானுங்க. சரி, வாங்கிட்டு போவலைன்னா “வெளிநாடு போயிட்டாவே எங்களை மதிக்க மாட்டீங்களேடா”ம்பாங்க.

டேய், நாதாரிங்களா நாம எல்லாம் வேலி ஓரத்துல திருட்டுத் தெளுவு குடிச்ச குரூப்டா.

* ”மாப்ள. அங்கதான் லட்சமா லட்சமா சம்பாரிக்கிறியே. ஒரு 10 இருந்தா குடுத்துட்டு போடா அப்புறமா தர்றேன்”ம்பாங்க. நாமளும் சரி பத்தாயிரம்தான்னு நினைச்சு குடுத்தா, “டேய், பத்தாயிரத்துக்கா நான் சிங்கி அடிக்கிறேன்? என்னடா நெனச்சுகிட்ட என்னை? பத்து லட்சம்டா நான் கேட்டது”ம்பாங்க.
டேய், பத்துலட்சத்துக்கு நான் சிங்கி அடிக்கனும்டா.

* வெயில் பட்டைய கிளப்பும், கால தரையில வெக்க முடியாது. ஊர்ல எவனும் மத்தியானத்துல வரமாட்டானுங்க. ஆனா நம்மளால ஒன்னுஞ் சொல்ல முடியாது. . வீட்ல மின்சாரம் கட் ஆவும், வேத்து புளுங்கும், அப்பக்கூட நாம சிரிச்சாப்ல இருக்கனும். மகா மட்டமான சாப்பாடு இருந்தாலும் சிரிச்சிகிட்டே சாப்பிட்டாகனும். இதுல ஒன்னுல நாம கொஞ்சம் முகஞ்சுளிச்சாலும் “வெளிநாட்டுல வேலை பார்க்கிற திமிரு”ம்பாங்க. இல்லைன்னா ரொம்ப மாறிப் போயிட்டடா’ம்பானுங்க
டேய், பீத்த ரப்பர் செருப்புக்கே சிங்கி அடிச்ச கோஷ்டிடா நாம.


* நாம் எதை வேணுமின்னாலும் இங்கே போட்டுகிட்டு திரியலாம். ஆனா நண்பர்களுக்கு துணி வாங்கிட்டு போவும்போது பார்த்து வாங்கிட்டு போவனும். Made in Indiaவோ, பங்களாதேசோ, பாகிஸ்தானோ இருந்திடக் கூடாது. மானம் போயிரும். “ஏண்டா, இதை ஏன் அங்க இருந்து வாங்கிட்டு வர்ற. நம்ம சந்தைக்குப் போனா இதை விட நல்லதாவே கிடைக்குமே. அட நம்ம திருப்பூர் மூர்த்தி கடைக்கு போனா சும்மா குடுப்பான்டா. வாங்கிட்டு வரானாம் அங்கேயிருந்து” அப்படிம்பாங்க தேவையா?
டேய், ஒத்த டீ சர்ட்டுக்காக PD சார்கிட்ட கெஞ்சி கூத்தாடி 16 மைல் மாரத்தான் ஓடினவங்கடா நாம.

* சோமாலியாவுல பிச்சையெடுத்தாலும் அவன் NRIதான்,. ஆட்டோக்காரங்க, ரியல் எஸ்டேட்காரங்கலிருந்து பார்பர் வரைக்கும் டபுள் ரேட் போடுவாங்க.


* வெளிநாட்டுல கஞ்சிக்கே சிங்கியடிச்சாலும் இவுங்கள மட்டும் நடுத்தர ஓட்டலுக்கு கூட கூட்டிட்டு போவ கூடாது. ஸ்டார் லெவல் ஓட்டலுக்குத்தான் சாப்புட கூட்டிட்டு போயாவனும். நறுக்குன்னு சாப்பிட்டு பில்லை நம்ம தலையில கட்டுவானுங்க. அதுவும் பில் வந்தா கண்டுக்காம நம்ம பக்கம் தள்ளிவிட்டுருவானுங்க.

டேய் நாமெல்லாம் இதே ஸ்டார் ஓட்டலுக்கு முன்னாடி இருக்கிற கையேந்தி பவன்லதாண்டா அக்கவுண்ட் வெச்சி சாப்பிட்டோம்.


* வெளிநாட்டுல கிடைக்காத சில விசயங்களை ஊர்ல இருந்து வாங்கிப்போவோம். அப்பவும் அதுக்கு கிண்டல் வரும் “வெளிநாடு போனாலும் நீ திருந்தலையாடா? ”
டேய், பாதானிக்கா அடிக்க சைக்கிள் எடுத்துட்டு அடுத்த ஊருவரைக்கும் ட்ரிபில்ஸ் அடிச்சவங்கடா நாம.


*ஊருக்கு கிளம்பும்போது எல்லாரும் ஒரு லிஸ்ட் வேற குடுத்து அனுப்புவாங்க. எதுக்கு தெரியுங்களா? லிஸ்ட்ல இருக்கிறத எல்லாம் வாங்கி,  யாராவது வந்தா அங்கேயிருந்து இந்தியா வந்தா குடுத்து  அனுப்பனும், காசு கேட்க கூடாது. அதுக்கு நாம எத்தனைப் பேர கெஞ்ச வேண்டியிருக்கனும்னு அவுனுங்களுக்குத் தெரியாது. பொருள் போய் சேர்ந்துச்சான்னும் அவுனுங்க சொல்ல மாட்டானுங்க. நாமதான் போன் போட்டு கேட்டு உறுதிப்படுத்திகனும். அதுவும் என்னமோ கடன்காரன் கடன் குடுக்கிறா மாதிரி "வந்திருச்சு, அதுக்கென்ன அப்படிம்பாங்க"
டேய், எனக்கு குடுத்த 30 ரூபா வாங்க எத்தனை முறை வீட்டுக்கு நடையா நந்திருப்பே?

நாம இங்கே அரும்பாடுபட்டு நாயா பேயா கெஞ்சி 3 வாரம் லீவ் வாங்கிட்டு ஊருக்கு வந்தா "என்னடா வருசத்துக்கு ஒரு முறை வரே, ஒரு மாசமா இருக்கிறா மாதிரி லீப் போட்டு வர வேண்டியதுதான" அப்படிம்பாங்க. 

1/2 நாள் லீவ் போட்டுட்டு வாடா அப்படின்னா, லீவ் கிடைக்காது சொன்னவன்தானேடா நீயு .

இவனோட சொந்தக்காரன் ஒருத்தன் சான்பிரான்ஸிஸ்கோவுல இருப்பான். நியூயார்க்கும் சான் பிரான்ஸிஸ்க்கோவுக்கும் 3000+ மைல்கள்.இவனோட சொந்தக்காரன் ஒருத்தன் அங்கே இருப்பான். நான் நியூயார்க்ல இருப்பேன், அவரைப் போய் பார்த்துட்டு வாடாம்பான். போகலைன்னா, பெரிய பிகு பண்ணிக்கிறான். அமெரிக்காவுலதானே இருக்கான், போயிட்டு வாடான்னா வர மாட்டேங்கிறான், எல்லாம் திமிரும்பானுவ. அதாவது காஷ்மீர் தூரம், எதாச்சும் வாங்கனும்டா 30 கிமீ போடான்னு கேட்டுப்பாருங்க. தூரம், வெயிலு இப்படி சொல்லி சல்லியட்டிப்பானுவ.

அடேய் பதறு, நான் முக்கினாத்தான் வருமா? நீ முக்கினா வராதா?

நான் அன்னிக்கே சொன்னேன்ல


* ராம்ஜெத்மலானி கனிமொழியின் ஜாமீனுக்காக போராடுகிறார்.
ராம்ஜெத்மலானி ஒரு பிஜேபி ஆசாமிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விசயம். இது என்னய்யா திமுக காங்கிரஸோட கூட்டு வெச்சிட்டு இருக்கிற நேரத்துல பிஜேபிகாரர் திமுகவுக்காக வாதாடுறாரான்னு கேட்டா, தொழில் வேற கட்சி வேறைங்கிறாங்க. பெரிய மனுசனுங்கன்னா இப்படி ஒரு பக்காவா ஒரு கொள்கை வெச்சிக்கனும்.   தேர்தல் முடிஞ்சு விளைவுகள் நல்லா இல்லைன்னா இவுங்க, அவுங்களோட கூட்டு வெக்க இந்தத் தொழில்முறையே முன்னெடுப்பா இருக்கும். அப்ப கொள்கையும் தொழிலும் ஒன்னாகிரும்.  டேய்ய் நாங்காட்டி டென்சன் ஆனேன்

* கனிமொழியின் ஜாமீன் மனு மே14 க்கு ஒத்தி வெச்சிருக்காங்களாம். ஏன்? மே13 தேர்தல் முடிவுகள் வந்துரும். திமுக வெற்றியடைஞ்சுட்டா ஆட்சியில் பங்கு கேட்கலாம். பங்கு தராட்டா உள்ளே போட்டுருவேன்னு பூச்சாண்டி காட்டலாம். அட, எல்லாமே நீங்களேதானே முடிவு பண்றீங்கன்னு மக்கள் கேட்டா, “நீதி மன்ற முடிவுகள்ல நாங்க தலையிடுறது இல்லை”ன்னு சப்பைக் கட்டு வேற. நீங்களேதாண்டா முடிவுகளை அனுப்புறீங்க அப்புறம் என்ன?

* அப்ப திமுக தோத்துட்டா, காங்கிரஸ் அதிமுக கூட சேரலாம், கேப்டனுக்கு லம்பா அல்வா கிடைக்கலாம். அப்ப கனிமொழி, ராசா விவகாரம்? மெதுவா வழக்கு நடக்கும். எப்படியும் நாம சாவறதுக்குள்ள கோப்புகளை தொலைச்சுருவாங்க.

* தன் கையே தனக்குதவிங்கிறது பழசு. தன் கைதே தனக்குதவி இது புதுசு. இவரு ஒரு போராட்டாம் நடத்துவாராம், அதுல இவரே கைது ஆகி, டில்லி வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு போவாங்களாம். இதுல ”ஓ காட் ஐ அம் நாட் பிரைவ்ட் ஓஃப் பார்ன் இன் இண்டியா”ன்னு புலம்புவாராம். ராகுல் ராசா இதெல்லாம் எங்க ஊர்ல 1970களிலேயே பண்ணியாச்சு. பனியாராம் வேவாது. வளருய்யா.

* வைகோ திமுகவோடு கை கோர்ப்பார். வழக்கம் போல இதயம் இனித்தது, கண்கள் பனித்ததுதான்.



* அம்மா ஜெயிச்சா- நீதி நிலை நாட்டப்பட்டது, மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி கொடைநாட்டுக்கே ரெஸ்ட் விட்டுருவாங்க. வழக்கம் போல சினிமா எடுப்பாங்க பேரப்புள்ளைங்க, வழக்கம் போல புலம்புவாரு விஜய், டாஸ்மார்க்ல இவுங்க சரக்கு இன்னும் அதிகமா வரும்.





*தாத்தா ஜெயிச்சா- நீதி நிலை நாட்டப்பட்டது, மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி அம்மா கொடைநாட்டுக்கு ஓய்வு எடுக்கப் போயிருவாங்க, அஞ்சு வருசத்துக்கும். வழக்கம் போல சினிமா எடுப்பாங்க பேரப்புள்ளைங்க, வழக்கம் போல புலம்புவாரு விஜய், டாஸ்மார்க்ல அவுங்க சரக்கு இன்னும் அதிகமா வரும். மல்லையா புலம்புவாரு.

 
 
நாளன்னிக்கு பதிவு போடும் போது என்னோட பதிவுக்கு நாலுபேராவது ‘லிங்க்’ குடுக்க மாட்டாங்க? ”ஆமா, அவன் அன்னிக்கே சொன்னான்லே” அப்படின்னு?

Thursday, May 5, 2011

Under the Same Moon - Spanish விமர்சனம்

மீண்டும் ஒரு சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை தாண்டும் படம். Maria Full of Graceக்குப் பிறகு நான் பார்க்கும் எசுபானிய படம். எசுபானியம்ன்னா என்னாவா? ஸ்பானிஷ்ங்க.
Rosario சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைத் தாண்டி LAயில் சின்ன சின்ன வேலைகளைச் செஞ்சு, மெக்ஸிகோவுல இருக்கும் தன்னோட மகனுக்கு பணம் அனுப்புறா. மகனோ அம்மாவை 4 வருசமா பார்க்காத பையன். அதுவும் பையனுக்கு 9 வயசுதான் ஆவுது, உடம்பு சரியில்லாத பாட்டியோடதான் வாழ்க்கை.  அம்மா பாசத்துக்காக ஏங்க மாட்டானா? அப்பாவும் கிடையாது. அவனும் மெக்ஸிகோவுல சின்ன சின்ன வேலை செஞ்சு கொஞ்சம் காசு வெச்சிட்டு இருக்கிற பொறுப்பான, புத்திசாலித்தனமான, தைரியமான பையன். பாட்டியால வெறுக்கப்படுற சித்தப்பா,சித்தி வழியா அவனோட அப்பாவும் அமெரிக்காவுல Tucson அப்படிங்கிற ஊருல இருக்கிறத தெரிஞ்சிக்கிறான். இதுவரைக்கும் பார்த்தே இல்லாத அப்பா மேல அவனுக்கு பாசம் வரவே இல்லை. எல்லாமே அம்மாவைப் பார்க்கனும், அதுவும் சீக்கிரம் பார்க்கனும்னுதான் அவனுக்கு ஆசை.

அம்மாவும் மகனும் பொது தொலைபேசி வழியா ஒவ்வொரு வாரமும் பேசிக்கிறதுதான் கதையோட மைய ஓட்டமேன்னு சொன்னாலும், ஒரே  ஒரு காட்சிதான் வரும். அதுதான் ஒட்டு மொத்த படத்தோட ஒன் லைன், முடிவும்.  

தூக்கத்துலேயே பாட்டி இறந்து போனதும், அம்மாகிட்ட போய் சேர்ந்துடலாம்னு முடிவு செய்றான் கார்லிதோஸ்(சிறுவன்).  அதுவும் அவுங்க அம்மா அடுத்த முறை தொலைபேசியில பேசும் ஞாயிறுக்குள்ள அவுங்க அம்மாகிட்ட இவன் சேர்ந்தாகனும்ங்கிறதுதான் திட்டமே. இவன் வேலை செஞ்ச இடத்துல அமெரிக்கர்கள் ரெண்டு பேரு ஏதாவது குழந்தை/சிறுவனை எல்லைத்தாண்டி அனுப்பத் தயார்னு சொல்லி இருப்பாங்க. அவுங்க உதவியோட கார்ல எல்லையைத் தாண்டும் போது No parking டிக்கெட்டுக்காக மாட்டிக்குவாங்க. காருக்குள்ள ஒளிஞ்சிட்டு இருப்பான் கார்லிதோஸ், காரோட எடுத்துட்டு போயிருவாங்க காவல்துறை. கூட போவங்க ரெண்டு பேரும் இல்லாம..  அங்கே இருந்து தப்பிச்சு(இந்தக் காட்சி அப்ப எல்லாம் செம டென்சனப்பா) அவன், வேற இடத்துல இவனை மாதிரியே சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்களோட LA போக முயற்சி பண்றான். நடுவுல என்ரிக் அப்படிங்கிறவரோட சேர்ந்து பயணப்பட ஆரம்பிச்ச பின்னாடிதான் படமே புது பரிமாணத்துக்கு போவும். அதுவும் என்ரிக்குக்கு கார்லிதோஸோட பயணப்படறதே புடிக்காது.  .



ஒரு சமயம் அவுங்க அப்பா இருக்கிறதா சொன்ன Tucsonக்கே வந்தவுடனே என்ரிக்கிட்டே தன்னோட அப்பா அங்கே இருக்கிறதா சொல்லும் போது, என்ரிக்தான் அப்பாவோ நினைக்க வெக்கும் திரைக்கதை. ஆனா அவுங்க அப்பாவையும் கண்டுபுடிச்ச பின்னாடிதான் கார்லிதோஸ்க்கு சோதனையே ஆரம்பிக்கும். ஆமாம், கார்லிதோஸோட அப்பா அவுங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வராமலே போயிருவாரு. என்றிக்கும் அவனோட LA வந்து தேடோ தேடுன்னு தேடுவாங்க. கார்லிதோஸ் தன்னோட அம்மோ எழுதுன கடுதாசில வந்த முகவரி தேடிப்போன பின்னாடிதான் தெரியும், சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்கள் எல்லாமே வேற ஏதோ ஒரு முகவரி தந்து கடுதாசி போடுவாங்கன்னு.


தே சமயம் ரொசாரியோ, அவுங்க வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தரோட காதலும் இல்லாம, ஏதோ ஒரு வேகத்துல ஒருத்தரோட பழக ஆரம்பிக்கிறா. கல்யாணம்கூட முடிவாகிடுது, ஆனா ஏதோ ஒன்னு தடுக்க, மெக்ஸிகோவுல இருந்து அவளுக்குத் தொலைபேசி வருது, அப்பத்தான் அவளுக்கு தன்னோட அம்மா இறந்ததும், பையன் எல்லைத்தாண்டி தன்னைப்பார்க்க வர்றதும் தெரியும்.
முகவரி தப்பா இருந்தாலும் அம்மாகிட்ட பேசும் போது, அந்த பொதுத் தொலைபேசி பக்கத்துல எப்படி இருக்கும் கேட்டதை வெச்சி அதே இடத்தை ரெண்டு பேரும் தேட ஆரம்பிக்கிறாங்க. கஷ்டம்னு என்ரிக்குக்கு தெரிஞ்சாலும் கார்லிதோஸுக்காக பொறுத்துகிட்டு தேடறாங்க.  ஒரு சமயம் காவல்துறையில் மாட்டிக்க வேண்டியதாயிருது. என்ரிக் காவலர்களைத் தாக்கி, தான் மாட்டிகிட்டாலும் பையன் தப்பிச்சு போகனும்னு செய்ற இடம் மனசுல அந்தப் பாத்திரம் பச்சக்கு ஒட்டிக்க வெக்கும். காவலர்கள்கிட்ட தப்பிச்ச பையன் ஓடிப்போயி நின்ன இடம், அம்மா எப்பவுமே தொலைப் பேசியில பேசுற இடம், அதே நேரம் பையன் எப்படியும் இந்த இடத்தை கண்டுபுடிச்சு வந்திருவான்னு அம்மாவும் காத்திருக்க... இவன் சாலை இந்தப் பக்கம் , பையன் அந்தப் பக்கம்னு நின்னு.. சுபம்.

ம்மா மகன் பாசத்தை கதையின் கருவா வெச்சி, எல்லைத் தாண்டுறது, பையனோட புத்திசாலித்தனம், வேலை செய்யனும்னு இருக்கிற ஆவல்,வேலை செய்யும் போது ரசிச்சு செய்றதுன்னு நிறைய விசயங்கள் பலிச்சுன்னு சொல்லியிருக்காங்க. படத்துல பல லாஜிக்கான ஓட்டைகள் இருக்கு, உதாரணம், கார்ல இருந்து பையன் தப்பிச்சு வர்ற இடம். அதேமாதிரி அலைபேசி எண் இருந்தும் எடுத்துட்டு வராத பையன்.  படத்துக்கு ரெண்டு பலம், ஒன்னு இசை, இன்னொன்னு எந்த இடத்திலும் நெருடல் இல்லாத, கண்ணைக் கூசச் செய்யாத ஒளிப்பதிவு.  படம் 2007ம் ஆண்டு வெளி வந்தது.

கார்லிதோஸா நடிச்ச பையனோட நடிப்பு அட்டகாசம், ஒவ்வொரு frameலயும் அவனோட உழைப்பு தெரியுது. எப்படித்தான் இயக்குனர் இந்தப் பையன்கிட்ட வேலை வாங்கினாரோ தெரியல. கொஞ்ச நேரமே நடிப்புக்கு வாய்ப்பு இருந்தாலும் என்ரிகாக நடிச்ச Eugenio நடிப்பு, இறுதியில தன்னைக் காட்டி கொடுத்து பையன் காப்பாத்துற இடத்துலயும்.. நச். அதே மாதிரி பையனும், என்ரிக்கும் சேர்ந்து தேடும் போது ரொசாரியோ வேற பக்கம் திரும்பி உக்காந்திருப்பாங்க, அந்தக் காட்சியில் நாமே பையன்கிட்ட கூப்பிட்டு சொல்லத் தோணும். இப்படியாப்பட்ட சின்ன சின்ன விசயங்கள்ல இந்தப் படம் ஜெயிச்சிருது. அதுசரி, திரைக்கதைதானே படத்துக்கு பலம்.
Cast
  • Adrian Alonso as Carlos "Carlitos" Reyes
  • Kate Del Castillo as Rosario
  • Eugenio Derbez as Enrique
  • America Ferrera as Martha
  • Jesse Garcia as David
  • Maya Zapata as Alicia
  • Gabriel Porras as Paco
  • Sonya Smith as Mrs. Snyder 
  • Directed by Patricia Riggen
  • Produced by Ligiah Villalobos/Gerardo Barrera
  • Written by Ligiah Villalobos
  • Music by Carlo Sillioto/Los Tigres del Norte
  • Cinematography Checco Varese
  • Editing by Aleshka Ferrero
  • Running time 106 minutes
  • Gross revenue $23,311,391
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

Wednesday, May 4, 2011

ரண்டு மூனு ஒன்னு

ஈரோடு கதிரின் அசல் இங்கே இருக்கு.. இது நகல் மட்டுமே


1)
ல்லா ஆண்களின் கனவுகளிலும்
யாரோ ஒருத்தியின் முகம்
மங்கலாய் வந்துபோகிறது
சிலசமயம் தெரிந்த பெண்ணாகவும்
பலசமயம் தெரியாத ஃபிகராகவும்


2)
காதலியோடு ஷாப்பிங்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
கிரெடிட் கார்ட் பில்லில் மட்டுமே
டவுசர் கழடுகிறது

3)
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் ஆண்களின் வாழ்க்கையிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது.
காதல் சக்சஸாகவோ,
பார்களில் ஃப்ளாட்டிகியோ,
திருமணமாகி மண்டை காய்ஞ்சோ,
காதல் பரத் மாதிரி
”ஙே..ஙே..ஙே..” என்று போவதோ
ஆண்களில் மட்டுமே!

Monday, May 2, 2011

கோவை- ராஜராஜேஸ்வரி டவர்ஸ்

"தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு

"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"

”அது போன முறை ஹீரோ நட்சத்திரமான போதே சொல்லியாச்சு. வேறக் கதைச் சொல்லுமா”
“அப்படியா சரி, இதுவும் கோயமுத்தூர்ல நடந்த கதைதான், இது 5 பேர் இல்லே 4 பேர்தான். சொல்லவா?”

“ம்ம் சரி”

1997ல டிசம்பர் மாசம் பஞ்ச பாண்டவர்கள்ல நம்ம ஹீரோவைத்தவிர எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்கே பொழைப்ப பார்த்துட்டு போயிர நம்ம
ஹீரோ மட்டும் தனியா என்ன பண்றதுன்னு தெரியாம மூட்ட முடிச்ச கட்டிகிட்டு ஊருக்கு போயிட்டாரு. தெனம் இருந்த கம்யூட்டர் க்ளாஸை சனி,
ஞாயிறுன்னு மாத்திகிட்டாரு.

ஏற்கனவே இவரு கூட படிச்ச சந்தோஷ் சனி/ஞாயிறு batchல இருக்க இன்னும் வசதியாய்ப்போயிருச்சு. அந்த batchல சந்தோஷ், செந்தில், சங்கர் அப்புறம் நம்ம ஹீரோ ஒரு செம செட்டா மாறிட்டாங்க. அதுல சங்கர் பெரிய இடத்துப் பையன் சென்னையில இருந்த வந்தவர், சத்தியில அவுங்க சித்தப்பா வீட்டுல இருந்து வந்து போறாரு, செந்திலும் சத்திதாங்கிறதால ரெண்டு பேரும் ஒன்னா வந்து போவாங்க. சந்தோஷ் WPTக்கு பக்கத்துலயே வீடு. நம்ம ஹீரோ மட்டும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸுல வந்துட்டு போவாரு. அதாவது போகவர 230 கிமீ. 6 மணிநேரம் ஆக போகவர. இந்த செட்லயே நம்ம ஹீரோதான் சுமாரான படிப்பு. சங்கர், செந்தில், சந்தோஷ் எல்லாம் CNEல 7 Paper பரீட்சை எல்லாம் எழுதி முடிச்சுட்டாங்க. நம்ம ஹீரோ ஒரு Paper மட்டும் எழுதிட்டு போதும்னு நிறுதிட்டாரு. அவுங்களோட சேர்ந்தவுடனே படிக்கனும் ஆசை வந்திருச்சு. (காலம் போன கடைசியில).

இவுங்க எல்லாருமே படிச்ச இடம் RRT(ராஜ ராஜேஸ்வரி டவர்ஸ்) 4 வது மாடில

இருக்கிற HardCore அப்படிங்கிற Computer Center. இது காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கு. இவுங்களுக்குள்ள பொதுவா இருக்கிறது ஒன்னே ஒன்னுதான். அதுதான் சைட் அடிக்கிறது. அதுவும் மானாவாரியா சைட் அடிப்பாங்க. அதுலயும் RRT வாசல்ல நின்னுகிட்டா போதும், வர போற ஒன்னையும் விடறது இல்லே. செமையா கமெண்டு வேற, ஆனா அது எல்லாம் இவுங்களுக்குள்ளேயே இருக்கும். எந்தப் பொண்ணுக்கும் கேக்காது.

சங்கரும், நம்ம ஹீரோவும் செம தம் பார்ட்டிங்க. யார் மொதல்ல வந்தாலும் சரி, மத்தவங்களுக்காக காத்திருந்து ஒன்னா நாலு பேரும் சேர்ந்துதான் 4வது மாடியில கிளாஸுக்கு போவாங்க. அப்படி ஒரு செட்.

இப்போ விஷயத்துக்கு வரலாம். இவுங்கள்ல ஒருத்தருக்கு, அங்கேயே படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வு வந்துருச்சு. அவுருக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை தெய்வீகக்காதல் வந்துரும். வாரக்கடைசியான போதும் காதலர் அந்தக் காதலிய பார்க்க ஏதுவா
வந்து ஸ்டைலா நிப்பாரு. காதலியும் வருவாங்க, பார்ப்பாங்க, போவாங்க. இப்படியே போயிருச்சு. காதலருக்காக மத்த மூணு பேரும் மண்டை காய ஆரம்பிச்சாங்க. ”எவ்ளோ நாளைக்குத்தான் சைட்டே அடிப்பே மாப்ளே, அந்தப் பொண்ணும் உன்ன பாக்குதுல. அப்புறம் என்னடா லவ்வச் சொல்லிற வேண்டியதுதானே”ன்னு மத்த மூணு பேரும் ஏத்திவிட்டதுல காதலரும் Feb-14 அன்னிக்கு காதலைச் சொல்றதுன்னு ஏக மனதா முடிவு பண்ணிட்டாரு.

1998 ,Feb-14, காதலர் சூப்பரா dress பண்ணிட்டு வந்தாரு. பின்னே இருக்காதா? காதலைச் சொல்றது காதலர் தினத்திலே ஆச்சே. மத்த மூணு பேரும் சிரிச்சிகிட்டாங்க ”அப்பாடா தொல்லை ஒழிஞ்சது”. லவ்வு
ஒக்கேன்னாலும், இல்லேன்னாலும் மணி நேரத்துக்கு ஒக்காந்து மண்டை காயத்தேவையில்லையே.

அன்னிக்குன்னு பார்த்து Unix ஆரம்பிச்சாரு வாத்தியார். தெளிவா சொல்லிபுட்டாரு “விண்டோஸ் அழிஞ்சாலும், வயக்காடு அழிஞ்சாலும் Unix சோறு போடும். அதனால ஒழுங்க கவனிங்க” சொல்ல, காதலை காலையிலேயே fresha சொல்றதா இருந்தது, தம் டைம்முக்கு மாறுச்சு.

தம் நேரம்(அதாங்க break) 11:30. மத்த மூணு பேரும் வெளியே வந்து டீ குடிக்க போலாமான்னு கேட்க காதலர் மனசுக்குள்ள Friendஆ figureஆ பட்டிமன்றம். வழக்கம் போல figureஏ ஜெயிக்க மத்த மூணு பேரும் வழக்கம் போல படிக்கட்டுல போய் கன்னத்துல கை வெச்சிகிட்டு உக்காந்துகிட்டாங்க. ஆனா காதலியோ, பொட்டியில எதையோ தொலைச்சுட்ட மாதிரி தட்டிகிட்டே இருந்தாங்க. உச்சா கூட போவாம 4 பேரும் காத்திருக்க வாத்தியாரு நேரமாச்சுன்னு கூப்பிட்டாரு. காதலச்சொல்றது இப்போ மதிய சாப்பாட்டு நேரத்துக்கு shiftஆகிருச்சு.

காலையில தியரியா ஓட நாலு பேருக்கும் ஒன்னுமே மண்டையில ஏறல. சாப்பாட்டு நேரம் எப்போ வரும்னு காத்திருக்கும்போதே காதலி சாப்பாட்டுக்கு போறதை கண்ணாடி வழியா பார்த்துட்டாரு காதலர். உடனே “நிப்பாட்டுங்க சார், ஒரே தியரியா இருக்கு. சாப்ட்டு வந்து கவனிக்கிறோம்’னு சொல்லிட்டு, வாத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடியே வகுப்ப விட்டு வெளியே போய்ட்டாரு. மீதி மூணு பேரும் பின்னாடியே ஓட, காதலர் காதலிய தொரத்த இப்படியே அன்னபூர்ணா வரைக்கும் march fast. மூணு பேரும் செம கட்டு கட்டுறாங்க காதலருக்கோ சாப்பாடு எங்கே எறங்குது. கண்ணால பார்குறாரு, கண்ணால பேசுறாரு, அந்தப் பக்கமிருந்து ஒரு ரியாக்சனும் வரலே. காதலி கூட நெறைய அல்லக்கைங்க இருக்க காதலருக்கு கூச்சமா போயிருச்சு. 100அடி ரோட்டு முக்குக்கு வந்தா ஒரே ரோஜா கூட்டம். இருக்காதா feb 14, அவனவன் தம்மு காசெல்லாம் போட்டு செவப்பு ரோஜாவா வாங்கிட்டு போவ, காதலருக்கு மனசுல லைட்டா சஞ்சலம். “நாமும் ஸ்டைலா காதலிக்கு முன்னாடி முட்டிப் போட்டு ரோஜா நீட்டி I Love You சொன்னா எப்படி இருக்கும்”னு காதலா காதலாவுல கமலுக்கு கொம்பு மொளைக்குறாப்ல மொளைக்க 2 ரோஜாவுக்கு தெண்டமா காசு அழுதாங்க.

இப்போ காதலைச்சொல்றது 4 மணி தம் நேரத்துக்கு மாறுச்சு. 4-4:30 கேப்ல சொல்லிடறது, இல்லைன்னா லவ்வே சொல்லப் போறது இல்லைன்னு காதலர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு. 2 மணிக்கு மறுபடியும் தியரி. இப்போ காதலருக்கு கண்ணு சொக்குது. ஆனாலும் காதல் கனவுதான். 3:30 காதலி அவுங்க வகுப்ப கடந்து போவும் போது, காதலர டேப்பரா பார்த்துட்டுப் போவ காதலர் அப்படியே பறக்க ஆரம்பிச்சிட்டாரு. 3:45 சனி ஆரம்பிச்ச நேரம்னே சொல்லலாம்.

வாத்தி “தியரி போதும், வாங்க practicalஆ பார்த்துரலாம்”னு சொல்ல. காதலருக்கு செம கடுப்பு. 3:47 நாலு பேரும் labக்குள்ளே போனாங்க. வாத்தி serverஅ ON பண்ணிட்டு வந்து Computerஅ ON பண்ண டுப்புன்னு பெரிய சத்தம். எல்லா கம்ப்யூட்டரும் reset ஆகி மறுபடியும் BIOS ஓட ஆரம்பிச்சது. வாத்தி ”பக்கத்துல எங்கேயோ transformer வெடிச்சிருக்கு. அதான்” சொல்லி முடிக்கலை எங்க கட்டடமே இடிஞ்சி போற மாதிரி சத்தம். நாங்க இருந்த இடம் ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. பவிசா லேப், Councellor அறையில எல்லாம் போட்டு வெச்சிருந்த கண்ணாடி எல்லாம் கீழே உழுந்து செதறிருச்சு. தரை முழுசும் கண்ணாடிச் சில்லுங்க. இதுல Labக்கு செருப்பு போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறதால நாலு பேரும் வெறுங்கால இருக்காங்க. எல்லாரும் கண்ணாடிச் சில்லுன்னு கூட பார்க்காம அடிச்சு புடிச்சு கீழே ஓட ஆரம்பிச்சாங்க. புஸ்தகப் பை, சாப்பாட்டு பை, செருப்பு, ஷூ எதுவும் யாருக்கும் தெரியல, உசுர கையில புடிச்சுகிட்டு ஓடுறாங்க. எங்கப் பார்த்தாலும் பதட்டமான மக்கள். பீதி, பயம், உசுரு மட்டுமே அப்போ பிரதானம். டுப்புன்னு வேற எங்கேயோ சத்தம். அவ்ளோதான், யாரும் யாரையும் பார்க்கல. friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழேதான் நிப்பாடினாங்க.
கட்டடம் முழுசும் பொகையா வருது. டயரு எரியிற மாதிரி நாத்தம். அய்யோ அம்மான்னு எல்லா இடத்துலேயும் கூச்சல், உசுருக்கு பயந்துட்டு வெறுங்காலுல ஓடும் போது கண்ணாடிப்பட்டு RRT முழுக்க போட்டு வெச்சிருந்த வெள்ளை டைல்ஸ்ல எல்லாம் ரத்தம். கீழே இருந்த மூணு பேரும் ஹீரோவத் தேட நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு பொறுமையா நடந்து வராரு. நாலு பேரும் மனசுலேயேயும் உசுரு பொழைச்ச சந்தோசம், அதுல காதலையும், காதலியியையும், வாங்கி வெச்ச ரோஜாவையும் மறந்துட்டாங்க. அப்பதான் ஹீரோ சொன்னார் “மாப்பிள்ளைங்களா, எல்லாரும் ஊர் போய்ச்சேருவோம், அப்புறம் மீதிய பேசிக்கலாம்”ன்னு சொல்லிட்டு கெளம்பி போனாங்க.

அன்னிக்குதான் அத்வானி மீட்டிங்கின்னும், 12 குண்டு வெடிச்சதுன்னும் 33 செத்துப்போய்ட்டாங்கன்னும், 4 பேருக்குமே வீட்டுக்கு போன பிற்பாடுதான் தெரிஞ்சது.

”அப்புறம் என்ன ஆச்சுமா? ஹீரோ அப்புறமாவது படிச்சாரா? வேலை கெடச்சுதா?”

“அப்புறமாத்தான் படிச்சாரும், 8 வருசம் கழிச்சு டிகிரி முடிச்சாரு. MCSE முடிச்சாரு. நல்லா வேலை கிடைச்சு, இப்போ நம்ம உசுர வாங்குறாரு”

“யாருமா அது?”சூர்யா.

“அதோ என்னத்தை திட்டினாலும் வசூல்ராஜால பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பாரே அவர்தான். அங்க உக்காந்துகிட்டு பதிவுக்கு பின்னூட்டம் வருதான்னு பார்க்குது பாரு அந்த ஜென்மம்தான்”

“உசுர கூட மதிக்காம செருப்புதான் முக்கியம்னு நினைச்ச இளா அப்பாதானா அது?”

Update: நான் ஓரளவுக்கு நல்ல நெலைமையில இருக்குறதுக்கு இந்த மூணு பேரும் ஒரு காரணம். அவுங்களுக்காக இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்

இது ஒரு மீள்பதிவே: கோவைக்கு இந்த முறை போனபோது ராஜராஜேஸ்வரி டவர்ஸ் இருக்கிற இடத்துல வேற என்னமோ இருந்துச்சு. பல கனவுகளை மனசுல சுமந்துகிட்டு படிச்ச இடம் அது, இப்போ ஒரு ஜவுளிகடையை பார்க்கும் போது ஒரு வெறுமை வந்திருச்சு. அதான் மீள்பதிவு.

Wednesday, March 16, 2011

பெரிய வீட்டு "கமலி" - 3 (தொடர்கதை) இறுதிப்பகுதி

“என்னங்க, விசயம் தெரியுங்களா?’ இது கோயமுத்தூர் குசும்பு செந்திலிடம்


‘என்னங்க?’

’எங்க வூட்டுக்காரர் உங்க மனைவியைக் காதலிச்சாராம்’ என்றதும்..


முதல் பகுதி  | இரண்டாம் பகுதி
சட்டென முகம் மாறியது எனக்கு. தெரியாமல் சொல்லிவிட்டோமோ என்று என் மனைவியும் செந்திலை நோக்க...

’ம்ம் சொல்லுங்க. அப்புறம் என்னாச்சு?’ ஏதோ கதை கேட்பது போல சாப்பிட்டுக்கொண்டே செந்தில் கேட்க, குழந்தைகளும் ஆர்வம் பீறிட ஒவ்வொருத்தராய், நடந்ததை கேட்க ஆரம்பித்தார்கள், இல்லை இல்லை நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கோ தர்ம சங்கடம், வேகமாய் சாப்பிடுவதைப் போல தலை நிமிராமல் இருந்தேன், தலை நிமிருவதைத் தவிர்த்தேன். இது கூச்சமா? குற்றவுணர்ச்சியா? வெட்கமா? தன்னுடைய மனைவியைக் காதலித்தவன் இவன்தான் என செந்தில் என்னை முறைத்துக்கொண்டிருப்பாரோ? இப்படி கூறு கெட்டத்தனமாகவா போட்டு உடைப்பாள் மனைவி? கமலி என்னைப் பற்றி என்ன நினைப்பாள், அவளுடைய குடும்பத்தில் பிரச்சினை ஆகிவிடாதா?


’என்ன அன்பு? நீங்க சொல்லுங்களேன்,நீங்கதானே காதலிச்சீங்க? நீங்க சொன்னாத்தான் அதுல ஒரு உயிர் இருக்கும்’ என்றாரே பார்க்கலாம், செந்தில்.


இப்படி ஒரு நிலை வருமென கொஞ்சமும் நான் யோசிக்கவில்லை. ஒரு தலையாய்க் காதலித்த என் முன்னாள் காதலி, அவளுடைய கணவன் அவர்களுடைய இரு வாரிசுகள், என் மனைவி, என் வாரிசுகள் இவர்களுக்கு முன்னால் என் காதலைப் பற்றி சொல்லவேண்டுமாம்? அதுவும் ஒரு சொல்லாத காதல் வேறு. 20 வருடங்களுக்கு முன்னால் பூத்த காதல் இன்னும் என் மனதில் அப்படியே இருக்குமா? சொல்ல நினைத்தால் அதே உணர்வுகளோடு சொல்ல முடியுமா? பல எண்ணங்கள், சிக்னல் இல்லாத 4 ரோட்டில் ஓடும் மோட்டார் பைக்குகளைப் போல எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாக ஓடியது.

கமலி என்னைக் காதலிப்பதாய் அவளது டைரியில் எழுதியிருந்ததை என் மனைவியிடம் மறைத்திருந்தேன்.ஏனெனத் தெரியாமல், தெரிந்தே மறைத்த விசயம் அது.

’அப்பா சொல்லுங்கப்பா’ என்றான் என் ஆண் வாரிசு.

சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்து நிமிர்ந்த வேளையில் என் மனைவியே சொல்ல ஆரம்பித்தாள். அவளுக்குத் தெரியும், என் நிலைமையப் பற்றி. இந்த நேரத்தில் அவள்தான் என்னைக் காப்பாற்றினாள், காப்பாற்றவும் முடியும். நான் சொல்ல நினைத்த விசயங்கள், மறந்த விசயங்கள் எல்லாவற்றையும் ஒரு தோரணமாகக் கட்டினாள், பூச்சரம் தொடுப்பதைப் போல தொடுத்தாள், ஒரு தேர்ந்த ஓவியனைப் போல உணர்வுகளை வரைந்தாள். நான் காதலித்ததை விட அவள் சொன்ன பாங்கு என் பழைய காதல் மேலும் மெருகேறியது. அவள் சொன்னதில் ஒரு காதல் இருந்தது, என் காதலையும் சேர்த்து. ஒரு, ஒருதலைக்காதலைக்கூட இப்படிச் சொல்லமுடியுமா என வியந்தேன். என் மனைவியும் நான் காத்திருந்தது வரை, நீட்டி முழக்கி சொல்லிமுடித்தாள்.

அறையில் நிசப்தம், யாரும் சாப்பிடவில்லை. அவள்
சொன்ன கதையின் சோகம் எல்லோரையும் தாக்கியிருந்தது. இந்த நேரத்தில் ஒரு இடைவெளி தேவைப்பட்டது. கை கழுவ எல்லாரும் எழுந்திருக்க ஆரம்பித்தோம். 15 நிமிடம் கழித்து ஏதோ ஒரு காரணத்திற்காக சமையலறை சென்ற போது, கமலி தனித்து, தலை குனிந்தவாறு இருந்தாள். அவள் முதுகு மட்டுமே தெரிந்திருந்ததால் ‘என்னங்க, கொஞ்சம் தண்ணி வேண்டுமே’ என்ற போது சுதாரித்து சட்டெனத்திரும்பினாள். அவள் கண்களில் கண்ணீரும் ஏதோ ஒரு சந்தோச முடிவின் திருப்தியும் இருந்தது. இருவருமே காதலித்திருக்கிறோம், காதல் ஒன்று சேரவில்லை, காதல் பரிமாற்றமே கொள்ளாத நிலையிலும், இருவரும் காதலித்திருந்தோம் என நினைப்பே எங்கள் கண்களில் தெரிந்தது. அதுவும் ஒரு நொடி, ஒரே நொடி..

’நீங்க போங்க தண்ணீர் கொண்டு வரேன்’

‘சரிங்க’

மீண்டும் ஆரம்பித்தது செந்திலுக்கும் எனக்குமான பேச்சு. எங்கள் வீட்டம்மாவும், கமலியும் மீண்டும் பேச ஆரம்பிக்க, குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தார்கள்.

செந்தில்தான் கேட்டார் ‘ஏங்க நீங்க கமலியைத் தேடவே இல்லையா?’

’இல்லீங்க, வேலை கிடைச்ச பிறகு அதுக்கே நேரம் சரியாப்போச்சு. பிற்பாடு கல்யாணம், வாரிசுகள். மறந்துட்டேங்க’ என்ற போது இருவருமே அடக்க முடியாமல் சிரித்துவிட்டிருந்தோம்.

ஓஹ், நானும் சிரித்திருக்கேன், அப்போ அது உண்மைதான். எனக்கு இந்தக் காதல் மறந்து போச்சு, காதல் கூட மறந்து போவுமா என்ன?

‘காலம் என்னத்தையெல்லாம் மறக்க வெக்குது பார்த்தீங்களா அன்பு’, என்றார் செந்தில். பிறகு நிறைய பேசினோம். காதல் பேச்சு, அத்தோடு முடிந்து போனது. கிளம்பும் நேரம் வர இரவு சாப்பாட்டை கட்டி குடுத்தனுப்பினாள் கமலி. அடுத்த வாரம் அவளின் குடும்பம் எங்கள் வீட்டிற்கு வருவதாய் என் மனைவிடம் வாக்களித்தாள் கமலி, நான் என் வாரிகள் வண்டியில் அமர்ந்திருக்க பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் ’அடுத்த வாரம் பேசிக்கலாம்மா, இல்லாட்டி ஃபோன்ல பேசிக்குங்க. வா நேரமாச்சு’ என்ற என் குரல் கேட்டு வந்தமர்ந்தாள் மனைவி. வண்டியைக் கிளப்பினேன்.

வெகு திருப்தியுடன் அமைந்தது அந்தச் சந்திப்பு. 20 வருடம் இதற்காகவா காத்திருந்தோம். ஏன் சந்தித்தோம்? ஏன் குடும்பத்தோடு வந்தோம்? பேசினோம்? எல்லாம் கனவு போல ஓடியது. சாலையின் இரு ஓரங்களிலும் மரங்கள் வேகமாய் பின்னோக்கி வேகமாய் ஓட ஆரம்பித்தது. நிறைவேறாத ஆசை ஏதோ இன்று நிறைவேறியது போன்றதொரு நினைப்பு. மனைவியைப் பார்த்தேன், களைப்பில் தூங்க ஆரம்பித்திருந்தாள், என் குழந்தைகளும்.

எனக்கும் கமலிக்கு இடையே இருந்த காதல் ஒரு நொடிப்பொழுதில் ஆரம்பித்து அதே நொடியில் முடிந்தும் போனதுதான் விந்தையாக இருந்தது. காலையில் கிளம்பும் போது மனது முழுக்க கேள்விகள், திரும்பும் போதோ....

அங்கே மீதி இருந்தது நட்பு தோய்ந்த அன்பு மட்டுமே.

பட உதவி என் ஆதர்ச ஓவியர் இளையராஜா

பெரிய வீட்டு "கமலி" - 2 (தொடர்கதை)

முதல் பாகம்



"அன்பு!
எனக்கு மட்டும்"

கமலி எழுதி இருக்கிறாள்.

கடிதத்தை மூடி புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, காருக்குள் போய் உக்காந்து கொண்டேன்.

"அன்பு. இருப்பா, என்ன சொல்ற வீட்ட பார்த்தியே புடிச்சு இருந்துச்சா? முடிச்சுடலாமா?"

"இல்ல மாமா, வேணாம். விட்டுருங்க. எனக்கு இஷ்டம் இல்லே" வாழ்நாள் முடியர வரைக்கும் இனிமேல் இந்தத் தெரு பக்கம் வரவே கூடாது என நினைத்தபடி என்றபடி ஆக்ஸிலேடரை மிதித்தேன்.


வீட்டைப் பார்த்து வந்தவுடன் ஒரு வாரம் அதே ஞாபகமாய் இருந்து, பிறகு எப்போவாவது நினைத்து, அப்புறம் நினைக்க மறந்தும் போய் இரண்டு வருசமாச்சு. புது வருசம் அன்னிக்கு கண்டிப்பாக கோவிலுக்கு போவது பழக்கம். இது சின்ன வயசுல இருந்தே இருந்தாலும், அமெரிக்கா வந்தும் தொடருது.

”டொயிங்க்”


சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன், சிரித்தபடி ஒருவர் அருகில் வந்தார். எங்கேயோ இவரை.. இல்லை இவனை.. அட சுப்பு. பள்ளித்தோழன். நான் முதல் பெஞ்ச் என்றால் இவன் மூன்றாவது பெஞ்ச். ’என்னடா அன்பு? எப்படி இருக்க? இந்த மாநிலம்னு தெரியும், ஆனா இந்தக் கோயிலுக்கு வருவேன்னு தெரியாதேடா’ ஏதோ ஒரு வாரம் பழக்கம் விட்டுப்போனது போல பேசினான். பிறகு அளவளாவியதில், அவன் என்னோட முகவரி கூட தெரிந்து வைத்திருக்கிறான், ஆனால் பேச மட்டும் செய்யவில்லே. நானும் காரணம்
கேட்கவில்லை. 10 நிமிசம் பேசியதில் பல வருடம் விட்டுப் போன விசயங்கள் பரிமாறிகிட்டோம். இப்பொழுதுதான் இந்த மாநிலம் வந்திருக்கிறானாம். ‘கமலிகூட இங்கேதாண்டா? தெரியுமா?’ என்றபோது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏன் அவளைப் பற்றி விசாரிக்கவில்லை என்றும் கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ங்கேயிருந்து 60 மைல்தாண்டா, ஒரு எட்டு போய் பார்த்துட்டு வா. ஒரு பொண்ணு, ஒரு பையன், இஞ்சினியர் மாப்பிள்ளை, 5 படுக்கையறை கொண்ட வீடுன்னு ஜம்முன்னு இருக்கிறாடா. பெரிய வீடாச்சே, சும்மாவா பொண்ண குடுத்திருப்பாங்க?’ ‘ம்ம்’ என்று மட்டும் சொன்னேன். அவளுடைய விவரம் எல்லாம் அலைபேசியிலேயே மாறியதற்கும் என் குடும்பம் நவகிரகம் சுற்றி வரவும் சரியா இருந்தது.

அடுத்த வாரமே சுப்புவின் வீட்டிற்கு போனோம், பழைய விசயங்களை எல்லாம் பேசியபோது சுப்பு ‘என்னடா கமலி விசயம் வீட்டிற்கு தெரியுமா?’ என்று காதில் குசுகுசுத்தான். என் வீட்டுக்காரம்மாவோ இந்த மாதிரி விசயத்தில் கெட்டி. ‘என்னண்ணே? பெரிய வீட்டுப் பொண்ணப் பத்தி
கேட்குறீங்களா?’ என சுப்புவை கேட்கவும், மீதியிருந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து முடித்தான் சுப்பு. ‘அடுத்த வாரம் போலாம்னு இருக்கோம்ணே’ என்றதும், மீதியிருந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து முடித்தேன். ’என்னைக் கேட்காமல் எப்படி முடிவெடுக்கலாம், அதுவும்..’ ஆமா, உங்களைக்கேட்டுத்தான் எல்லாம் முடிவெடுக்கிறோமாம்’ இது சுப்புவின் விட்டம்மா. இப்படிச் சொல்வதில் வீட்டம்மாக்களுக்கு என்றுமே குஷிதான், கும்மாளம்தான்.


வீட்டிற்கு வரும் வழியில்தான் வீட்டம்மாவைக் கேட்டேன் ‘என்ன நெசமாத்தான் சொல்றியா? நான் இன்னும் அவகிட்ட பேசக்கூட இல்லே. அப்புறம் எப்படி அடுத்த வாரம் போறது’ ’அட பேசுங்க, கேளுங்க, இதெல்லாம் ஒரு விசயம்னு. மண்டையில முடி கொட்டினதக்கப்புறம் என்ன வெட்கம்?’ சரிதான். எனக்கும் இன்னும் ஒருவித தயக்கம் இருந்திகிட்டே இருக்கு. எங்கே ஆரம்பிக்கன்னு தெரியல. அடுத்த நாள் அலுவலகம் கிளம்புகையில், வீட்டம்மா ‘அடுத்த வாரம் அங்கே போறோம்தானே?’.

’உனக்கு ஏன் இவ்வளவு வேகம்?’

‘அட நீங்க பார்த்து ஜொள்ளுவிட்ட பார்ட்டி, எப்படித்தான் இருக்கும்னு பார்க்கவேணாமா’.


இந்த மனைவிமார்களுக்கு மட்டும் புருசன் சைட் அடிச்சாலோ, காதலிச்சாலோ பொறாமையவிட அவுங்க எப்படி இருப்பாங்கன்னு பார்கிறதுல ஆர்வம் அதிகம். மதியம் 2 மணிக்கு அலைபேசியில் Mrs. Kamali Senthil என்ற எண் பார்த்து அழைக்கும் போது கை நடுங்கியது. ரெண்டாவது மணியில்,

“ஹலோ” அமெரிக்க உச்சரிப்பில் ஒரு பெண்மணி பேச,

நானும் கமலிகிட்ட பேச முடியுமா என்று கேட்டேன்.

‘நீங்க?

’ நான் ’அன்பு’,

’எந்த அன்பு.... சின்னாயக்கா மகனா?’ என்றதும்.

’ஆமா. ஞாபகம் இருக்குங்களா. நான் உங்க ஊருக்குப் பக்கமாத்தான் இருக்கேன். சுப்பு சொன்னான்’

’ஓஹ் அப்படியா, சந்தோசம்ங்க. எவ்வளவு வருசம் இருக்கும்? 20 இருக்குமா?’


பிறகு இரு குடும்பங்களைப் பற்றி பேசி, அடுத்தவார இறுதிக்கு கமலி வீட்டுக்கு போவதென்று தீர்மானம் ஆச்சு. கடைசி வரைக்கும் அந்த டைரி மேட்டரைப் பத்தி நானும் பேசலை. அவுங்களும் பேசலை.

000000000000000000000000000
வெள்ளிக்கிழமை என்னிக்கு வருமென்று காத்திருந்தேன் நான். வீட்டுக்காரரிடம் அன்று இரவே சொல்ல்விட்டேன் ‘எங்க ஊர்க்காரங்க
வராங்க. சனிக்கிழமை எங்கேயும் போயிரக் கூடாது, ஆமா.’ அவரும் சரியென தலையாட்டிவிட்டு போய்விட்டார். என்ன சமைப்பது என அன்றே பட்டியல் போட ஆரம்பித்தேன். என்றுமில்லாத அதியசமாக அன்று மளிகை கடைக்கு அவரை வற்புறுத்தாமல் நானே போய் வந்தேன்.

என்ன துணி போட்டுக்கலாம்? புடவை? சுடிதார்? ஜீன்ஸ் டீ சர்ட் ? குழப்பம் அதிமாகிக்கொண்டே இருந்தது. கடைசியாக ஒரு கேள்வி என்னைத் தாக்கியது “அந்தக் கடிதத்தை யாரும் படிச்சிருக்க மாட்டாங்கதானே? அது அந்தப் புஸ்தகத்துக்கு உள்ளேதானே இருக்கும்?”

00000000000000000000000000000000

வெள்ளிவரை வேலை கழுத்தை நெறித்தது. இடையிடையே கமலி ஞாபகம் வந்துவிட்டுப் போனது. என் காதல் தெரிந்த மாதிரி அவளுடைய வீட்டுக்காரருக்கும் அவள் சொல்லியிருப்பாளா? ஆமா, அவ என்கிட்டயே சொல்லலை என்ற நினைப்பு வந்த போது சிரித்துவிட்டேன்.

சனிக்கிழமை,

பத்து மணி. எங்கேம்மா போறோம் என்று இரு குழந்தைகளும் கேட்டபோது ‘என்னங்க சொல்லிரலாமா’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தாள் வீட்டம்மா. குசும்பு புடிச்ச கோயமுத்தூர்காரங்க என மனசுக்குள் நினைத்துக்கொண்டே ‘ஒரு அங்கிள் வீட்டுக்கு போறோம்பா. அவுங்க எங்க ஊரு’ என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னேன். குழந்தைங்க (13,16 வயசு ஆனாலும் குழந்தைங்க தானே) சலிப்போடு உக்காந்தார்கள், பாவம் அவர்களுக்கு என்ன முக்கியமா இருக்கோ? எங்க ஊரு, ஒரே பள்ளிக்கூடம், கல்லூரி, விமான நிலையத்துல பார்த்தது, வேலை செய்ததுன்னு மாசம் ஒரு முறை யாராவது ஒரு வீட்டிற்கு இப்படி கூட்டிப் போவது பழக்கமாகிவிட்டிருந்தது. போகும் 1 மணிநேரத்தில் வீட்டின் மூவரும் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்துவிட்டார்கள். சரியாக மதியம் சாப்பாட்டு போன மாதிரி வீட்டிற்கு முன்னால் வண்டி நின்றது.


பெரிய வீடு,
கண்டிப்பாய் ஊரிலிருந்த பெரிய வீட்டில் பாதி கூட இல்லை, இருந்தாலும் அந்தத் தெருவிலேயே பெரிய வீடாய் இருந்தது. சுப்பு சொன்ன “ஜம்முன்னு இருக்கிறாடா” ஞாபகத்துக்கு வந்தது. அழைப்பு மணி அழுத்துமுன்னேன் செந்தில்(கமலியின் வீட்டுக்காரர்) கதவைத் திறந்தார். என்னைப் போலில்லாமல், சின்னத் தொப்பையுடன், முன் விழுந்த முடியுமாக இருந்தார். சிரித்த படியே வரவேற்றார்.

‘கமலி, வந்துட்டாங்க. சீக்கிரம் வா’ என்ற போது மனசுக்குள் புகைவண்டி ஓடுவது போல தடதடத்தது. அவள் முகம் காணும் பொழுதை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன். ’வாங்க.. வாங்க’ என்றபடியே மாடியில் இருந்து வந்தாள் கமலி. ரெட்டை ஜடை, வெள்ளை ஜாக்கெட், பச்சை தாவணி என பள்ளிக்கூட கமலியை எதிர்பார்த்து வந்திருந்தது எவ்வளவு தப்பென்று இருந்தது. உருவம் பெருத்து, முடி நரைத்து, கண்ணாடி போட்டு ... காலம் மாறுவதை மனம் மறுத்தே வந்தது புரிந்தது.

சிநேகத்துடன், ‘நல்லா இருக்கீங்களா?’ என்று மட்டும் முடித்துக்கொண்டேன். பிறகு நானும் செந்திலும் வரவேற்பறையில் பேச ஆரம்பித்தோம். குழந்தைகள் நால்வரும் ஏதோ அறையில் பேசிக்கொண்டிப்பது கேட்டது. வீட்டம்மாவும், கமலியும் சமயலறையில்.

என்ன ஒரு 45 நிமிடம் ஆகியிருக்குமா? ’என்னங்க சாப்பிடலாமா?’ என்றபடியே கமலி அழைக்க, குழந்தைகளும் சேர்ந்துகொள்ள, உணவருந்தும் இடம், கலகலப்பாகியது.

“என்னங்க, விசயம் தெரியுங்களா?’ இது கோயமுத்தூர் குசும்பு செந்திலிடம்

‘என்னங்க?’

’எங்க வூட்டுக்காரர் உங்க மனைவியைக் காதலிச்சாராம்’ என்றதும்..

(தொடரும்)

இறுதிப்பகுதி இங்கே

பெரிய வீட்டு "கமலி" -1 (தொடர் கதை)

"கமலி"

அவள் பேரை நினைக்கும் போதே மனசுக்குள் ஒரு பேரானந்தம். "கமலி என் லவ்க்கு ஓக்கேன்னு சொல்லிடனும்" மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.

"அடடா, சொல்ல மறந்துட்டேனே. என் பேரு அன்பு, இப்போதான் BTech முடிச்சேன், கேம்பஸ்ல வேலை கிடைச்சது. ஆனா மேல் படிப்பு படிக்கனும்னு காத்துட்டு இருக்கேன். MITல அட்மிஷனும் ரெடி, அமெரிக்காவுல வேலையும் ரெடி. ஆண்டவன் அந்த அளவுக்கு எனக்கு கருணை காட்டி இருக்காரு. எதை எடுத்துக்கிறதுங்கிறது கமலி சொல்ற வார்த்தையில்தான் இருக்கு. கமலிய சின்ன வயசுல இருந்தே காதலிக்கிறேன். ஆனா, நல்ல நிலைமைக்கு வந்த பின்னாடிதான் அவகிட்டே என் காதலை சொல்லனும்னு ஒரு பிடிவாதம். கமலி சரின்னுசொல்லிட்டா ஏதோ ஒரு ஆஃபர் லெட்டரை எடுத்துகிட்டே வேலையில் சேர்ந்துடலாம். அவளிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மனசெல்லாம் பாரம் குறைஞ்ச மாதிரி ஆகிடும். காதலை சுமக்கிறத விட பெரிய பாரம் ஒன்னும் இல்லீங்க. சட் புட்டுனு அதை அவகிட்ட இறக்கி வெச்சுட்டா, அப்புறம் அவள் பாடு. ஊர்ல பெரிய வீடு அவுங்களது, பெரிய குடும்பம் ஒரே பொண்ணு. அவுங்க வீட்டை சுத்தி பார்க்கவே அரை மணிநேரம் ஆகும். என் வீடோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போயிரும். என் காதலை சொல்லாத்ததுக்கு இதுவும் ஒரு காரணம்."


லெட்டரை பிரித்தேன்

"கணக்கு போட Tally,
படம் எடுக்க Trolly,
கல்கத்தாவுல் காளி,
கண்ணீர் விட்டா நீலி,
பாட்டு எழுதறாரு வாலி,
எப்பவுமே என் மனசுல கமலி,
நீ பார்த்தா நான் காலி"

காதல் சொட்டிக்கொண்டிருந்த கடிதத்தை மூடி வைத்தேன்.


"கமலி, என்னை உனக்குத் தெரியும். வேலையும் இருக்கு, நல்ல சம்பளம் கிடைக்கும், உனக்கும் படிப்பு முடியப் போவுது. உன்னை நல்லா வெச்சு காப்பாத்துவேன். உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். சரின்னு சொல்ல தோணிச்சுன்னா நாளைக்கு காலையில கோயிலுக்கு வந்து சொல்லிட்டு போயிடு. நான் வேலையில் சேர்ந்துட்டு பெரியவங்ககிட்டே பேசுறேன். இல்லைன்னு சொல்லமாட்டேன்னு சொல்றதுன்னா இப்பவே சொல்லிரு, இல்லாட்டி கோயிலுக்கு வராத. சரியா" எப்படி பேசனும்னு மனசுக்குள் ஒரு ஒத்திகை நடத்தினேன்.

கமலி வரவும் சடாரென்று அவள் முன்னாடி நின்று கடிதத்தை நீட்டினேன். ஒத்திகை பார்த்த வார்த்தையெல்லாம் சொல்ல நினைச்சப்போ எதுவுமே ஞாபகத்துக்கு வரலை. சே, சொதப்பிருச்சே. என்ன என்பது மாதிரி பார்த்தாள். படிச்சு பாரு என்பது மாதிரி ஒரு கண்ணசைச்சுட்டு இடத்தை காலி பண்ணிட்டேன். இதுக்கு பேர்தான் காதல் பயமா?

எப்பவுமே 6 மணிக்குதான் எனக்கு முழிப்பு வரும், ஆனா அன்னிக்கு மட்டும் 5 மணிக்கே முழிப்பு வந்துருச்சு. சீக்கிரமே குளிச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு(கோயிலுக்குதான் போறேங்கிறது கூட மறந்து போயிருச்சு) ஓட்டமா ஓடிப்போயி சாமிக்கு ஒரு சலாம் போட்டுட்டு சன்னதியில் உக்காந்துட்டேன். உச்சிகால பூஜையும் நடந்து முடிஞ்சிருச்சு. கமலி மட்டும் வரவே இல்லே. கோயிலை பூட்டுற நேரமும் வந்தாச்சு, எழுந்தரிச்சு வேட்டியிலிருந்த தூசியையும், மனசிலிருந்த கமலியயும் தட்டிவிட்டு சைக்கிள் எடுத்து வீட்டுக்கு கிளம்பினேன். வர வழியே பெரிய வீட்டைப் பார்த்தேன். ஜன்னலில் கமலி தெரிந்தாள், ஆனால் என்னைப் பார்க்கவில்லை, சத்தமில்லாமல் என் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

காலச் சக்கரம் சுழல ஆரம்பிச்சது, PG முடிச்சுட்டு நான் அமெரிக்கா வந்துட்டேன் அப்பப்போ ஊருக்கு போகும்போது எல்லாம் அந்த பெரிய வீட்டு வழி போறதைத் தவிர்த்தேன். 17 வருஷம் ஆச்சு மறுபடியும் ஊருக்கு வந்தபோதுதான் புரோக்கர் பொன்னுசாமி என்னைப் பார்க்க வந்தாரு.

"அன்பு, பெரிய வீடு விலைக்கு வருது, உன்னை விட்டா வாங்குறதுக்கு இந்த ஊர்ல யாரும் இல்லே. சொல்லு முடிச்சுரலாம். எனக்கு கமிஷனா நீ என்ன குடுத்தாலும் சரி"

"என்ன மாமா சொல்றீங்க. பெரிய வீட்டுக்கு காசு பிரச்சினையா என்ன? அவுங்க எதுக்கு விக்கனுங்கிறாங்க"

"இல்லே அன்பு, பையனையும், பொண்ணையும் கட்டி குடுத்தாட்டாங்க. பொண்னை கூட அமெரிக்காவுலதான் கட்டி குடுத்து இருக்காங்களாம், பெரியவரு சொன்னாரு. பெரிய வீட்டம்மா காலமான பின்னாடி எவ்ளோ நாள்தான் பெரியவரு அவ்ளோ பெரிய வீட்ல தனியா இருப்பாரு? அவ்ளோ பெரிய வீட்டை பெரியவராலையும் பார்த்துக்க முடியல. அதான் மெட்ராஸ் போயி அவுங்க தங்கச்சி வீட்ல தங்கிக்கிறேன்னு சொல்றாரு"

"சரி மாமா. வீட்டை ஒரு தடவை பார்த்துட்டு சொல்றேனே, சரியா?"

பெரிய வீட்டு தெருவுக்குள்ள என் கார் நுழைஞ்சப்ப மனசுக்குள்ள் ஏதோ ஒரு பெரிய பாரம் வந்து அழுத்த ஆரம்பிச்சது. இதே தெருவுல நான் சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது ரொம்ப சாதாரணமானவனா இருந்தேன். அதே வீட்டுக்கு டி.வி பார்க்க போவேன். தீபாவளி, பொங்கல் இனாம் வாங்க போவேன். இன்னிக்கு, நல்ல நிலைமைக்கு வந்து அதே வீட்டை வாங்குற அளவுக்கு வந்துட்டேன். பெரிய வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்திட்டு வீட்டைப் பார்த்தேன்.

ஒரு சதவீதம் கூட குறியாத கம்பீரம் ஆனா வெள்ளையடிச்சு பல வருஷம் இருக்கலாம்னு தோணிச்சு. கமலி இருந்த அறையின் ஜன்னல் பார்த்தேன், அன்று பார்த்த கமலி அங்கே இல்லை, ஆனால் எனக்கு இன்னும் அதே காதல் இருந்தது, எதிர்பார்ப்பு இருந்தது.

நமக்காக கமலி காத்துட்டு இருக்க மாட்டாளா என்ற கற்பனை. இந்த வீட்டை வாங்க இன்னிக்கு ஆண்டவன் கட்டளை குடுத்து இருக்கான். அன்னிக்கே குடுத்து இருந்தா கமலியையும் சேர்த்து இந்த வீட்டையும் காப்பாத்தி இருப்பேனே. மனசுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்க வர பெரியவர் வந்தார். தனிமை அவரை வாட்டி இருக்க வேண்டும், கம்பீரம் அந்தளவுக்கு கலைந்து இருந்தது.

"வாப்பா, அன்பு. எப்படி இருக்கிற. கமலிகூட அமெரிக்காதான்பா. முடிஞ்சா ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா."

"நல்லா இருக்கேன் ஐயா" காலம் மாறினாலும் என் மரியாதை மட்டும் மாறாதது எனக்கே ஆச்சர்யத்தை குடுத்தது.

"வீட்டை ஒரு தடவை பார்த்துக்கிறேங்க ஐயா"

"சரிப்பா"

புரோக்கர் பொன்னுசாமி கூடவே ஒவ்வொரு அறையாய் பார்த்துட்டே வந்தோம். கமலி அறைக்கு சீக்கிரம் போக மனசு அவசரப்பட்டது.

"பார்த்துட்டு வா அன்பு. நான் ஐயாகிட்ட பேசிட்டு இருக்கேன்"

அவர் போனது கமலி அறையில் நுழைந்தேன். பல கற்பனைகள், பல வருசங்கள் போனாலும், இருவருக்குமே கல்யாணம் ஆகியிருந்தாலும் அந்த காதல் மட்டும் கொஞ்சமும் குறையாமல் ஞாபகத்தில் இருந்தது. அவள் பீரோ திறந்து பார்த்தேன். பழைய துணிமணிகள், பட்டு குஞ்சங்கள், பழைய புத்தகங்கள். நான் பரிசளித்த பாலகுமாரணின் "மெர்குரிப்பூக்களும்" இருந்தது. செல்லரித்த நிலைமையில் இன்னும் என் ஞாபகத்தை சொல்லும் ஒரு சுவடு. பிரித்தேன், மங்கலாய் தெரிந்தது என் கையெழுத்து. "என் உயிர் கமலிக்கு". நடுப்பக்கத்தில் அதே காதல் கடிதம், இன்னும் அதே காதலோடு என்னைப்பார்த்து சிரித்தது. மடித்து வைக்கப்பட்டு இருந்த கடித்ததைப் பிரித்தேன். நைந்து போன நிலைமையில் இருந்தாலும் என் எழுத்துக்கள் மட்டும் அப்படியே, கடிதத்தின் பின்னால் பார்த்தேன்

"அன்பு!
எனக்கு மட்டும்"

கமலி எழுதி இருக்கிறாள்.

கடிதத்தை மூடி புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, காருக்குள் போய் உக்காந்து கொண்டேன்.

"அன்பு. இருப்பா, என்ன சொல்ற வீட்ட பார்த்தியே புடிச்சு இருந்துச்சா? முடிச்சுடலாமா?"

"இல்ல மாமா, வேணாம். விட்டுருங்க. எனக்கு இஷ்டம் இல்லே" வாழ்நாள் முடியர வரைக்கும் இனிமேல் இந்தத் தெரு பக்கம் வரவே கூடாது என நினைத்தபடி என்றபடி ஆக்ஸிலேடரை மிதித்தேன்.

<இது ஒரு உணமைச்சம்பவம்>

Friday, March 4, 2011

The Babysitters 2008 (18+)

எதையுமே நேர்த்தியாக அடுக்கி வைக்கும் பெண் ஷெர்லி என்கிற மாதிரிதான் ஆரம்பிக்கிறது படம். ஷெர்லி ஒரு பதின்ம வயதுப்பெண் அதுவும் Under18. அமெரிக்காவுல Under18னை தொட்டவங்க கெட்டாங்க, கண்டிப்பா சிறைவாசம் கிடைக்கும். அதுக்காக 18க்கு கீழ் வயதுப்பொண்ணுங்க எல்லாம் மேட்டர் பண்ணாம இருக்காங்களான்னு கேட்காதீங்க. 18க்கு கீழே இருக்கிறவங்க, 18 க்கு கீழே இருக்கிறவங்களை____. தெரிஞ்சாதான் தப்புங்கிறதுதான் அமெரிக்காவிலும் நடைமுறை.ஷெர்லி ஒரு பள்ளியில படிக்கிறாள். தன் படிப்பு செலவுக்காக part-time Baby sitting செய்கிறாள், அதாவது குழைந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலை, அதுவும் பள்ளி முடிந்ததும் பகுதிநேரமாய். இது அமெரிக்காவில் சகஜம். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போறாங்கன்னா 6 மணி வரைக்கும் daycareல விட்டுருவாங்க. அப்புறம் 2/3 மணிநேரத்துக்கு இப்படியாப்பட்ட baby sitterஐ வெச்சு குழந்தைகளை சமாளிப்பாங்க.

சரி, படத்துக்கு வருவோம். இப்படியாப்பட்ட ஷெர்லி ஒரு வீட்டுல baby sitting செய்கிறாள். ஒரு நாள் அந்த வீட்டு எஜமானன் மைக்கேல், ஷெர்லியை வீட்டில் விட ஆரம்பிக்கிறது ரவுசு
. பசியோட ஷெர்லி இருக்கிறத தெரிஞ்சிகிட்ட மைக்கேல், அவளுக்கு சாப்பாடு வாங்கி தருகிறான்(ர்). அப்படியே அந்த ஊரிலிருக்கும் உடைந்த ரயிலைப் பார்த்துட்டு வரலாம்னு சொல்லி அழைச்சுட்டுப் போறார். அங்கே எக்குத் தப்பான இடத்துல முத்தம் குடுத்துடறாரு. baby sitting க்கு காசு $20ன்னா மைக்கேல் அன்னிக்குன்னு பார்த்து ஷெர்லிக்கு $200 தர்றாரு. அதாவது முத்தத்தை வெளியே சொல்லவேணாம்னு சொல்லி. அடுத்த நாளோ மைக்கேலுக்கும் ஷெர்லிக்கும் கசமுசா ஆகிருது, காசும் $200தர.. அத்தோட முடிஞ்சிருந்தா பரவாயில்லை.

கல்யாணமான மைக்கேலுக்கோ குற்ற உணர்ச்சி கொப்பளிக்க, கூட வேலை செய்யுற ஜெர்ரிகிட்ட நடந்த மேட்டரை எல்லாம் சொல்லி மனசோட பாரத்தை குறைக்கிறான். ஜெர்ரியோ வேற மாதிரி கணக்குப்போட, மைக்கேலும் ஷெர்லிகிட்டே ஜெர்ரி வீட்டுலயும் "baby sitting" செய்யமுடியாம்னுன்னு கேட்கிறான். கேட்கிற அந்த இடத்தில வசனம் கொஞ்சம் ‘நச்’, ”baby sitting" அப்படிங்கிற வார்த்தைய அழுத்திச் சொல்றான். ஷெர்லியும் ஒத்துக்கிடறா.

அடுத்த நாள், ஜெர்ரி வீட்டிலிருந்து கிளம்பி ஷெர்லியை விட்டுட்டு வர்ற கார்ல கிளம்புறாங்க. அப்போ ஜெர்ரி ஷெர்லிகிட்ட ’உனக்கு என்ன பிடிக்கும்?’னு பொதுவா கேட்க ஷெர்லி நேரா மேட்டருக்கு போயிடறா. இந்த இடத்தில்யே நாமளும் கடுப்பாகிருவோம், இப்படியா ஒரு பொண்ணான்னு, ஜெர்ரிக்கும் ஆச்சர்யம். ஆனா இதை எதிர்பார்த்துதானே கூட்டிகிட்டு வந்தேங்கிற மாதிரி நடந்துக்கிறா ஷெர்லி. ஷெர்லியும் பள்ளிக்கூடத்துல இதைப் பத்திப் பேச ஒரு குழுவே தயாராகிடுது. கிட்டதட்ட ஒரு மாமி ரேஞ்சுக்கு மாறிடறா ஷெர்லி. யார் “போனாலும்” இவளுக்கு வர வேண்டியது 20%. இதுல மட்டும் ஷெர்லி ரொம்ப கண்டிப்பு. timetable போட்டு schedule பண்ணி, ஒரு பெரிய லெவல்ல project managementஏ செய்ய ஆரம்பிக்கிறா ஷெர்லி.

அப்பத்தான், குழுவுல இணைஞ்ச ப்ரெண்டாங்கிற பொண்ணோட உறவுக்கார பொண்ணு நடினே டபுள் கிராஸ் செய்ய ஆரம்பிக்கிறா.  வாடிக்கையாளர்கிட்டே பணத்தைக் குறைச்சு கேட்கிறது, ஷெர்லிக்கு தெரியாம போயிட்டு வரது, கமிசன் தராம டபாய்க்கிறது, இப்படி நெறைய கோக்கு மாக்கு பண்றா. இப்படி. இதைப் பார்த்துட்டு ஷெர்லி, கண்ணகி ரேஞ்சுக்கு கலாட்ட செய்றா. அப்பத்திக்கு மட்டும் அடங்கிட்டு போயிடறா நடினே. இப்படி நாளொரு ’மேனி’யும் பொழுதொரு ‘வண்ணமா’ கழியுது.

மைக்கேல் சைடுல நண்பர்கள் ஒரு 6 பேரும், ஷெர்லி சைடுல 6 பேரும் ஒரு குழுவா ஒரு சுற்றுலா போறாங்க. அங்கே போதைப் பொருளை எல்லாப் பொண்ணுங்களுக்கும் கட்டாயப்படுத்தி குடுத்து சல்லாபிக்கிறாங்க. போதைப் பொருளால பிரண்டாவுக்கு மட்டும் ஞானோதயம் வந்திட, மாறிடறா. சுத்தமா குழுவுல இருந்தே கழண்டுக்கிறா. ஷெர்லியும் மறுபடியும் பிரண்டாவை குழுவுக்குள்ள இணைச்சிக்க முயற்சி பண்றா, முடியாதுன்னு தெரிஞ்சவுடனே விட்டுடறா.

மறுபடியும் நடினே டபுள் கிராஸ் பண்ண மைக்கேல் துணையோட ஷெர்லி  ஒரு காருலேயே ‘வேலை’ விசயமா இருந்த நடினேவை பொண்ணுங்க இழுத்துப்போட்டு அடிக்க, காருல இருந்த ஆளை மைக்கேல் அடிச்சுப் பின்றான். சண்டையோட முடிவுல பார்த்தா காருல இருந்த புது வாடிக்கையாளர் ஷெர்லியோட அப்பா. அம்புட்டுத்தான் ஷெர்லி அங்கேயே அழுது, திருந்திடறதா. படம் முடியும் போது துள்ளுவதோ இளமையில தனுசு வர மாதிரி, ஷெர்லி ஒரு கார்ல மைக்கேல் வீட்டுக்கு முன்னாடி வந்து, தான் திருந்திட்டதாகவும், நல்ல நிலைமையில இருப்பாதாவும் சொல்லி கதையை முடிக்கிறாங்க/

கண்டிப்பா இது வயசுக்கு வந்தவங்க மட்டுமே பார்க்க வேண்டிய படம். XX சீன்கள் கொஞ்சம் உண்டு. படம் முழுக்க மேட்டர், மேட்டர் சம்பந்தப் பட்ட காட்சிகளே வந்துட்டு இருக்கும். ஷெர்லியா நடிச்ச Katherine Waterstonம், மைக்கேலா நடிச்ச John Leguizamoம் நல்லா நடிச்சிருக்காங்க. அதுவும் john ஒரு குற்றவுணர்வோடையும் கொஞ்சம் possessivenessஆவும் நடிச்சிருக்கிறது அபாரம்.

இந்தப் படத்துக்கு பயங்கர critics இருந்துச்சு. இந்தக் இடுகையப் பாருங்க தெரியும். படத்தை ஒரு முறை கில்மாவா பார்க்கலாம், 18+



Starring
  • Katherine Waterston
  • John Leguizamo
  • Cynthia Nixon
  • Andy Comeau

Music - Chad Fischer

Cinematography - Michael McDonough

Editing - Zene Baker

Written & Directed - David Ross  

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)