Tuesday, December 28, 2010

Cartoonist சங்கர் பிள்ளை

இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியல் கேலிச் சித்திரங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், பிரபல கார்ட்டூனிஸ்ட் காயங்குளம் சங்கரப்பிள்ளை. சுருக்கமாக சங்கர். சங்கரின் பிரஷ் முனையில் அகப் பட்டுத் தவித்த தலைவர்கள் அநேகம் பேர்.

விடுதலை கிடைப்பதற்கு முன், அதாவது 1932-ம் ஆண்டு இரும்புக் கரம் கொண்டு இந்திய சுதந்திர உணர்வுகளை அடக்கிக்கொண்டி ருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு வில்லிங்டன் பிரபுவுடன், 'ஹிந்துஸ் தான் டைம்ஸ்' நாளிதழில் கார்ட் டூன்கள் மூலம் மோதிக்கொண்டிருந்தார் சங்கர். ஒரு நாள் வைஸ்ராயிடமிருந்து சங்கருக்கு அழைப்பு வந்தது.

'சரி, வைஸ்ராயுடன் இன்று பயங்கர மோதல்தான்' என்று நினைத்துக்கொண்டு சென்ற சங் கருக்கு, வைஸ்ராயின் மாளிகையில் அதிசயம் காத்திருந்தது. சங்கரை வில்லிங்டன் பாராட்டி, ஆதரவுடன் அணைத்து, தனது மனைவியை அறிமுகப்படுத்தினார். "எல்லாம் சரிதான் சங்கர்... நீங்கள் என் கணவரின் மூக்கை இத்தனை நீளமாகப் போடுவதைத்தான் என்னால் ரசிக்க முடியவில்லை" என்றாராம் வைஸ் ராய் மனைவி சிரித்துக்கொண்டே.

தான் சொந்தமாக 'சங்கர்ஸ் வீக்லி' இதழை நடத்தியது பற்றி, "அது ஒரு கஷ்டமான போராட்டம்! ஆனால், சுவாரஸ்யமான, நான் விரும்பிய போராட்டம்" என்பார்.

சங்கர் வக்கீல் தொழிலை விட்டுவிட்டுத் தூரிகையைப் பிடித்தவர். "பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நகைச்சுவை உணர்வு குறைவுதான். அதனால் தான் கார்ட்டூன் சொல்லும் செய்தியை உணர்ந்துகொள்ளாமல் பர்சனலாக எடுத்துக் கொள்கிறார்கள்" என்ற சங்கரின் கணிப்பில், நேருஜி மட்டும் விதிவிலக்கு! நேருஜி, சங்கரின் பரம விசிறி.

"தலைவர்களில் பலருக்கு நாளடைவில் தலைக்கனம், கர்வம், ஆடம்பரம், அதிகாரம் வந்துவிடும். அதைக் குறைப்பதற்கு கார்ட்டூன்கள் தேவைதான். உங்களது கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அந்த கார்ட்டூன்கள் மூலம் என்னை நான் அலசிப் பார்த்துக்கொள்கிறேன். அதனால், என்னை விட்டுவைக்காதீர்கள். வரைந்து தள்ளுங்கள்' என்று சங்கருக்கு நேருஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

சங்கருக்குக் குழந்தைகள் மேல் பிரியம் அதிகம். எனவே, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட 'குழந்தைகள் நூல் டிரஸ்ட்' மற்றும் டில்லியில் 'சர்வதேச பொம்மைகள் மியூசியம்' போன்றவை ஏற்பட முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் சங்கர்.



நன்றி: ஆனந்த விகடனிலிருந்து அப்படியே சுட்டதுதாங்க.

No comments:

Post a Comment

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)