Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்

எனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்


படத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும்  'அவளைப்  பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.

படத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி  குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)

சில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.



காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..

போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல?”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.

இருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)

VTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.



ராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.


பள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.

நானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது  எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :). 

படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது.  மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.

I love You Gautham Sir!

17 comments:

  1. படம் வந்தவுடனே எழுதனும்னு நினைச்சேன். முடியல .. கொஞ்சம் நாளாகிடுச்சில்லை :)

    ReplyDelete
  2. இன்னும் பார்க்கல... எதிர்பாக்குறேன். பார்க்கிற நாளை!

    ReplyDelete

  3. படம் விமர்சனம் எல்லாஞ்சரி இளா. பக்கத்தை ஏத்தறதுக்குள்ள பிரவுசருக்கு தாவு தீருது. எல்லாம் ஒரே ஆட் கிளிக்கர், பிளாக்கிங் குக்கீன்னு முக்குது.. கொஞ்சம் இதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க ;-)).

    ReplyDelete
  4. சத்யா, விளம்பரங்களை எல்லாம் நீக்கிட்டேன்.. :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை! போன முறை காமெண்ட் போடனு வந்தேன். விளம்பரம் மூஞ்சில அடிச்சு வெரட்டிப்புடுச்சு என்னை. இப்போவும் பயந்துகொண்டேதான் வந்தேன். :)

      உங்களுக்கு விளம்பரத்தில் எம்புட்டு வரும், அதைவேணா நாங்க கொடுத்துடுறோம், இப்படி எங்களை கொல்லாதீங்கனு கேட்டுக்கலாம்னு நெனச்சேன். வந்தா விளம்பரம் மூஞ்சில அடிக்குமேனு வரவில்லை.

      எனிவே, உங்களுக்குப் படம் பிடிச்சிருச்சு போல

      ***காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..***

      காதல் தோல்வியடைந்து இப்போ வேறொருவருடன் வாழ்ந்துகொண்டு இருந்தாலுமா?!!

      Delete
  5. //படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது. //

    காதல் எப்படியெல்லாம் மிதக்க விடுதுன்னு தெரியது...

    ஒரு டவுட்டு : //கானகத்தின் நதியின் மேல்,// நதியில் சரி.. அதென்ன நதியின் மேல்?!!

    ReplyDelete
  6. காதல் படம் பார்த்தா அப்படித்தாங்க மிதக்கனும்..அப்புறம், நல்ல சந்தேகம்.. மீதி ரெண்டு வாக்கியத்தையும் படிச்சிடுங்க

    ReplyDelete
  7. //காதல் படம் பார்த்தா அப்படித்தாங்க மிதக்கனும்.// ரைட்டு

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன எப்போப் பார்த்தாலும் இளாவோட இது மாதிரி "விவாதம்" பண்ணிக்கொண்டே இருக்கீங்க? உங்க நட்பின் "ஆழம்" தெரியுதுங்க கவிதா! :)

      Delete
  8. சூசைட் கேஸுகளுக்கான படம்,அதானால மார்டர்கேஸூகளுக்கு புடிக்கலையாட்ட தெரியுது :-)
    படம் பாத்து மறுபடியும் செத்துட்டேன்,சந்தானமும் சமந்தாவும் இல்லைனா அந்த கொஞ்சநேரமும் பாத்திருக்க முடியாது...
    என்னா மொக்க படம்,ஆவூன்னா பாட்டு..
    காக்க காக்க,வாரணம் ஆயிரம்,VTV எல்லாத்துலையும் ஒரே டைலாக் டெலிவரி...கமல் மட்டும் தான் கொஞ்சம் மாத்தி பேசிருக்காப்பல...

    ReplyDelete
  9. //ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது//

    இப்படி ஒரு தெலுங்கு விமர்சனத்துல எழுதியிருந்தாங்களாம். கௌதம் டிவில சொன்னாரு!!!

    ReplyDelete
  10. கொன்னு கொன்னு.. நானா சிந்திச்சி. 3 தடவை மாத்தி போட்டது..

    ReplyDelete
  11. அழகா எழுதி இருக்கிங்க.. எனக்கும் படம் பிடிச்சது.. எக்கச்சக்கமா அழுதிட்டு வந்தேன் :))

    ReplyDelete

  12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)