Thursday, April 19, 2012

விவாஜியிஸம் - 01

கடவுள் என்முன் தோன்றி ”ஏன் என்னைப் பார்க்க வரவில்லை” என்று கேட்டார். ”முயன்றேன் இன்னும் முடியவில்லை” என்று கூறி அனுப்பிவைத்தேன்

என்னுடைய கவிதைகளைப் படித்தபடியே உறங்கிப் போய்விடுகிறது என் காதல். அது விழிக்குமுன் இன்னொரு கவிதை எழுதிவிட வேண்டும்.


காதலுக்கும் எனக்கு ஒரே சண்டை, தோற்றுக்கொண்டேயிருந்தேன். பஞ்சாயத்திற்காக என் காதலியை அழைத்துவிட்டு, அவளுக்காக காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு பதிவுலும் மொக்கை வருமாறு முயற்சிக்கிறேன். ஆனால் அதை வரவிடாமல் ஏதோ ஒரு மொக்கை வந்து அதை வென்று விடுகிறது.

தனிமை என்னைக் கொன்றுக்கொண்டிருந்தது, தனியாய் இருக்கேன் என்றேன்.”இல்லையே! கூடவே நானும் இருக்கேனே” என்றது தனிமை.

மனைவிக்கும் எனக்கும் சண்டை. தோற்றுப் போய்விட்டேன் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்வதில்லை மனைவி.

Babysitting செய்கிறேன் ”குழந்தையுடன் என்னையும்” என்று வந்தமர்ந்து விளையாடும் மனைவியை என்ன செய்ய?

நான் அவசரமாய் பயணித்துக்கொண்டிருந்தேன். பாவம் அவைகளுக்கு என்ன அவசரமோ? அதே வேகத்தில பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன மரங்கள்.

நான் வேகமாக உண்டு முடித்தபின் பசியோடு அமர்ந்திருந்தன, தட்டில் சில பருக்கைகள்

கோவிலுக்குப் போகும்போதெல்லாம் அடம்பிடித்து கூடவே வந்துவிடும் பக்தி.போகும் வழியில் அதை எங்காவது தொலைத்துவிடுவது என் வாடிக்கையாகிவிட்டது

பிற்காலத்துக்கு உதவுமென ஒரு இடம் வாங்கிப் போட்டேன். பிற்காலத்துக்கு தேவைப்படுமென எனக்காக 6*4 இடத்தை ஒதுக்கி வைத்திருந்தது, இடம்.

சாமியைக் கும்பிட கோவிலுக்குப் போனேன். சாமியோ, அவர் சாமியைக் கும்பிடப் போயிருப்பார் போல.

கவிதைகளை விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத்துக்கள் எல்லாம் சோர்வடைந்துவிட்டன, பாவம்.


புத்தர் ஆசையே படவேண்டாமென ஆசைப்பட்டாராம். நானோ, எனக்கு நிறைய ஆசைகள் வேண்டும் என ஆசைப்படாமல் இருக்கிறேன்.

இணையத்தில் புதுசா என்னமோ சண்டை போடுக்கொண்டிருக்கிறார்களாம். என் கொள்ளுத்தாத்தாவிடம், எள்ளுத்தாத்தா சொன்ன அதே காரணமாகத்தான் இருக்கும்

Thursday, April 12, 2012

மகசூல் - 04-12-2012

RCB Vs CSK
பொண்ணையும் குடுத்துட்டு, விக்கெட்டையும் உன்கிட்டையே குடுக்கிறோமே முரளி, இப்பவாவது புரிஞ்சிக்கோ எங்களோட தாராள மனசை..
--0o0--




பிஸ்னெஸ்மேனில் சின்ன வயது மஹேஷ் பாபுவா நடிச்ச பையன்தான்(Akash Puri)  தோனியில நடிச்ச பையன். அவரோட அப்பா PuriJagganth. .

பூரி ஜெகன்னாத், தெலுங்குல நம்ம ஊர் ஷங்கர் மாதிரி

--0o0--

  • கடவுள் பல ரூபத்தில் இருக்கிறார். 10நம்பர் டீசர்ட் போட்டும் விளையாடலாம், தோனிக்கும் இசையமைக்கலாம்

  • நாத்திகம் இருவகைப்படும் 1.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது 2.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது #தற்காலம்
  • அகிலேஷ் பதவியேற்ற 24 நாளில் ஆயிரம் அதிகாரிகள் மாற்றம் #முதல்வன் படத்தைப் பார்த்திருப்பாரோ?
  • ரஜினி போல் அலட்டலில்லாத பேச்சை ஸ்ருதியும், கமலினைப் போல் அல்டாப் பேச்சினை ஐஸ்வர்யா, செளந்தர்யாவும் தொடர்வது விநோதம்
  • இவுங்க பதில் சொல்லலைன்னா காசு குடுக்க மாட்டாங்க. அவுங்களோ, குடுத்த காசைப் புடுங்கிக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது #நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி/கையில் ஒரு கோடி
  • உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற உங்க படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா அவுங்களே உங்களை ரிஜக்ட் பண்ணிடுவாங்க
 
  •  நாம் ஒரு அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்பதை நமக்கே உணர்த்துவதுதான் வேலைக்கான Interviewக்கள்
  • சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? முக #டேய் தம்பி, அவர்கிட்ட இருந்து மைக்செட்டைக் கழட்டு, தேய்ஞ்சு போன ரெக்கார்டாட்டம் ....
  • உலக அழகிப்பட்டம் வாங்கிட்டா எல்லாரும் சொல்ற வாக்கியம் “Oh My God”. இரவில் எல்லாப் பெண்களும் உலக அழகிகள்தாம் (18+)
 
  • நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க அப்படிங்கிறதுக்கு ஒரு சமகால உதாரணம் இந்த வசனம் “டி.வி வால்யூம் கம்மி பண்ணிட்டு பேசுங்க”"

  • எப்பவுமே வெள்ளிக்கிழமை வந்து விடுமுறை வாங்கித் தருவதாலேயே இதுக்கு GoodFridayன்னு பேர் வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்

----------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Monday, April 9, 2012

வரலாற்றுப் பதிவு

இந்தப் பதிவுக்கு உண்மையாவே என்ன வரலாறு இருக்கும்னு நினைக்கிறீங்க?

http://www.navan.name/blog/?p=15

Thursday, March 22, 2012

பன்னாடை பன்னாடை @vivaji 03-22-2012

பன்னாடை என்றால் என்ன?
இந்த வார்த்தை பலருக்குத் தெரிஞ்சாலும் அது எப்படி இருக்கும்னு தெரியாதில்லையா? இதுதாங்க அது
  • அடுத்து ஒலிபரப்பாகும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் கோச்சடையான்.   இசை: AR Rahman, பேசியிருப்பவர்: ரஜினிகாந்த்

  • இணையத்துல காங்கிரஸ் கட்சி இருந்தா எப்படி இருக்கும்? 150 Admins and 2 Users
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடித்தால் தீக்குளிப்பேன்: கருணாநிதி எச்சரிக்கை #டேய் பசுபதி, எட்றா அந்தக் கடப்பாரையை..
  • ”சினிமாக்காரன் ஆதரவு தரலையா, அவன் படத்தைப் பார்க்காதே” என அவனைத் தள்ளி வெச்சிருந்தா அவந்தாண்டா தமிழன். நாம? ஹிஹி
  • 2025ல் பேசிக்குவாங்க “2012ல் வெட்டிக்கும்பல் ஒன்னு Twitter, facebookன்னு வெட்டியாப் பொழுதைக் கழிச்சிட்டு இருந்தாங்களாம்”
  • தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதில் தாய் முதலிடத்திலும், ராஜா இரண்டாம் இடத்திலும் #துள்ளி எழுந்தது காற்று
  • விகடன் வலைபாயுதே படித்த பின் என் நண்பன் “நீயும் தத்துவம் எல்லாம் எழுதுவியா?” என்று கேட்டு கதிகலங்க வைத்துவிட்டான். ”சத்தியமா இல்லடா” . ட்விட்டர்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை “தத்துவம்”தான்
 
  • ஆக மொத்தம் கேப்டனிடம் இல்லாத ஒன்று, அம்மாவிடம் இருப்பது #திராணி.
  • "அண்ணா" என்பது பெண்களின் கூர்மையான ஆயுதம்! இன்னொரு நல்ல காதலன் கிடைத்துவிடும் போது
 
  • லாபம் "ஈட்டி"த் தந்ததுங்கிறாங்களே, கோடாரி, அம்பு-வில் எல்லாம் எப்போ தரும்?


  • நல்லவர்களுக்குக் காலமில்லை. நிகழ்கால உதாரணம் : வைகோ
  • காதல் ஒரு எழவைப் போல, சிலருக்கு பத்து முடிஞ்சிதான் அது புரியவே ஆரம்பிக்கும்
----------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Monday, March 12, 2012

இனிமேலாவது வீட்டுல சாப்பிடுங்க ராகுல்ஜி @Vivaji Updates

  • இணையத்தில் ஒரு ஸ்மைலி போட்டுட்டாப் போதும், சண்டை முடிஞ்சிருச்சின்னோ இல்லை நான் சண்டைக்கு வரத் தயாரில்லைன்னோ அர்த்தம்

  • காதலனாக இருக்கையில் சில கணங்களில் வருத்தப்படனும், கல்யாணம் ஆன பிறகு அதுவே பல கணங்களில் என மாறும்

  • வாழ்க்கைங்கிற படத்துல இடைவேளை கிடையாதாம். ஆனா பல கிளைமாக்ஸ் வந்துட்டுப் போயிருது

  • தமிழ் மட்டும் ஏன் இவ்வளவு சிதைந்து உருமாறி வந்திருக்கு, இந்தளவுக்கு ஆங்கிலம் இல்லையே. ஏன்?

  • 38 வயசுலேயே அகிலேஷை முதலமைச்சர் ஆக்கிட்டாரு முலாயம். இன்னுமா ஸ்டாலினை இளைஞர் அணிச்செயலாளரா வெச்சிருக்கப்போறீங்க கலைஞர்ஜி?
 
  • விஜய் ராணுவ அதிகாரி. மும்பை போகும்போது ஆகும் பிரச்சினைதான் துப்பாக்கியின் மூலக்கதை. ரொம்ப புதுசா இருக்குல்ல? 

  •  ராஜா எத்தனையோ இசைக்கருவிகள் வாசிச்சாலும் அவருடைய ரசிகர்கள் வாசிக்கிறது என்னமோ “ஜிங்-ஜக்”மட்டும்தான்

  • மகளிர் தினமென அறிவித்ததும் கூட ஒரு ஆணாகத்தான் இருக்கும்

  • காதல் விஜய் படம் மாதிரி. பார்க்காதவன் பார்க்கத்துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்.


  • உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம்: ராகுல் #இனிமேலாவது உங்க வீட்டுல சாப்பிடுங்க ராகுல்ஜி
------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Thursday, March 1, 2012

அப்பாடக்கர் உருவானவிதம் - 2

அப்பாடக்கர் உருவானவிதம் - முதல் பாகம் படிக்க

ஸ்ரீராம் மற்றும் ஜெயவேலன் ஆகியோரைக் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். முதல் நாள் வெளிப்புற படப்பிடிப்பில் மூவருமே பேந்த பேந்த முழித்தோம். மூவருக்குமே ஒன்றும் தெரியவில்லை.(இப்ப மட்டும் தெரிஞ்சிருச்சாக்கும்). ஆனால் அடுத்த நாளில்

ரெண்டு பேருமே சீக்கிரமே நடிப்புக்கலையை கற்றுக்கொண்டது நான் செய்த புண்ணியம். அவர்களை நான் படுத்திய பாடு எல்லாம் Editingல் தெளிவாகத்தெரிந்தது. சில இடங்களில் “உன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே” என்றவாறு முக பாவனை எல்லாம் துள்ளியமாக புரிஞ்சிக்க முடிஞ்சது.


சில பெரிய காட்சிகள் எல்லாம் ஒரே takeல் முடிந்தது. ஸ்ரீராம் - சரக்கு காட்சி எல்லாம் ஒரே takeல் எடுத்ததுதான். ”Voiceover(dub) பண்ணிடலாம் வாங்க ஸ்ரீராம்” என்ற போது, ”இல்லீங்க இனிமே அதை செய்ய முடியாது” என்று சொல்ல Live Recordingஐ அப்படியே வைத்துக்கொண்டோம்.


சரக்கு சீனில் ஒவ்வொரு ரவுண்டுக்கும் இப்படி வைப்பதாகதான் இருந்தது. மங்காத்தாவில் பிரேம்- அஜித் காட்சியிலும் இப்படியே வர ஸ்ரீராம் கடைசி நேரத்துல ஒரு யோசனை சொன்னாரு, “ரவுண்ட்(வட்டம்) மட்டும் போட்டுக்கலாமே” என்று. குத்துச்சண்டையில் ரவுண்டுக்கும் வரும் சப்தம் ஞாபகத்துக்கு வர அப்படியே அமைத்தேன். ஆனா அது யாருக்கும் புரியல (Epic Fail) சரியா, தகவல் போய் சேரலை. Stop Clock சப்தத்தையும் சேர்த்திருந்தேன், அதை பாஸ்டன் பாலா சரியா கண்டுபுடிச்சிருந்தாரு.

என்னதான் படத்தை தெளிவா எடுத்துட்டாலும் Editing என்று வந்த பிறகுதான் தெரிந்தது, 35 GB இருந்தது raw files. அதுவரைக்கும் சுலமாக தெரிந்தது எல்லாமே கஷ்டமாக தெரிந்தது. வடிவேலு சொல்வது போல, ஒரு நாள் எல்லாமே தேவை இல்லாத ஆணிகளாகவே தெரிந்தது.அடுத்த நாள் எல்லாமே தேவையான ஆணிகளாகத் தெரிந்தது. ஜெயவேலன் இல்லாத நேரத்தில் டப்பிங் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்தே செய்ய முடியுமா என்று முயற்சித்தேன். அவருக்கு கல்யாண வேலை.

ஆமாம், ஜெயவேலைனுக்குத்தான் திருமணம். அதிக அழுத்தம் வேறு தரமுடியாத நிலை. ஆனால் அவரே பேசினால் நல்லது என நினைத்தேன். வேறு வழியில்லாமல் அவருக்குப் பதிலாக வேறொருத்தர் செய்துவிடலாம் என முடிவு செய்தேன்.வேறு யார் செய்ய, நானேதான். படம் ஆரம்பத்தில் திருநெல்வேலி களத்துடன் ஆரம்பித்தது, படத்தையும் திருநெல்வேலி பாசையிலேயே எடுத்துட்டு பிறகு கோவை வட்டார மொழிக்கு மாற்றினேன், காரணம் நமக்கு என்ன வருமோ அதைத் தானே செய்யனும்/பேசனும். சரியாகப் பொருந்திப்போக(போவல), சும்மா எடுத்த சில காட்சிகளை வைத்து ஒப்பேற்றினேன்.

இது எல்லாம் எழுதப்படவே இல்லை. எடிட்டிங் முடிந்த பிறகே ஸ்ரீராமிற்கே தெரிந்தது. இடையிடையே ஸ்ரீராமும் நானும், பல விதமாக காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தோம். எப்படி காட்சிகளை அமைத்தாலும்
வேறு வேறுவிதமான பரிமாணங்கள் வருவதைக்கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுக்கொண்டோம். அதிசயித்தோம்.

எடிட்டிங் என்பது பெரும் கலை.உண்மையைச் சொன்னால் கத்திரி வைப்பதில் தான் படத்தின் ஓட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகில் இருப்பவர்களுக்கு தெரிவதேயில்லை.

இசைக் கோப்பிறகாக ஒரு வார காலமானது. அப்படி இப்படியென 4 மாத காலமானது. பல இரவுகள் 2 மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். கண்டிப்பாக 80-100 மணிநேரமாவது

உழைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஒரு வாராக 6 நிமிடத்திற்கு ஜெயவேலன் இல்லாமலேயே படம் முடிந்தது. வெளியிடும் நேரத்தில் எனக்கு ஒரு தயக்கம். காரணம், படம் எனக்குப் பிடிக்கவில்லை, அடுத்தது negative thought  உருவாக்கம். IT பத்தின இந்த விசயங்கள் பெரிதாக பேசப்படவில்லை எனினும் இந்தப் படம் தெளிவாகவே அதைச் சொன்னது. ஸ்ரீராம் கோபத்தின் உச்சநிலையை அடைந்திருந்தார், ருத்ரதாண்டவம் ஆடாதது ஒன்றுதான் குறை. படம் வந்தே ஆகவேண்டும் என்று அவரே கடைசியாக ஒரு நாள் குறித்தார். அதற்கு முன்னரே படம் முடிவடைந்திருந்தது. சொன்னதேதியில் ஸ்ரீராமிம் கையால் படம் வெளியிடப்பட்டது. ஆனால தமிழோய்வியம்தான் படம் வெளியிடுவதாக இருந்தது. எங்களுக்குள் இருந்த குழப்பத்தால், இரு பக்கமும் படம் ஒரே நாளில் வெளியானது.

இதற்காக சில குரல்களை மட்டும் வெளியிடத்தில் வாங்க வேண்டியிருந்தது, நாட்டாமையாக கணேஷ் சந்திராவும், நாயராக நிஜமாகவே ஒரு மலையாள் நண்பரும் உதவினார்கள். பதிவர்கள் மட்டுமே முதல் நாளில் அதிகம் பார்த்தார்கள் என நினைக்கிறேன், தெரிந்தவர்கள் ஆதலால் யாரும் பெரிதாக குறை சொல்லவில்லை. நல்ல நண்பர்கள். Gregopaul எனும் twitter நண்பர்கள் படத்தை அங்குலம் அங்குலமாக விமர்சித்தார், திரைப்பட்த்தில் ஒளிப்பதிவாளராக இருக்கும் அவர் படத்தினைப்பார்த்த கோணம் வித்தியாசமாக இருந்தது.

இந்தப் படத்திற்காக செலவு என்பது செய்யப்படவே இல்லை. ஆமாம், படம் பிடிக்கத்தேவைப்படும் சில கருவிகள் வாங்கியதைத்தவிர படத்தில் செலவு என்பதே இல்லை. படம் பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் iPhoneலயே பிடிக்கப்பட்டது. ஒரு படம் எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதும் எவ்வாறாக படம் எடுக்கவேண்டும் என்பதற்கான முதல் புள்ளியையும் கற்றுக்கொடுத்தது இந்தப் படம்.

உண்மையைச் சொன்னால், போனமாதம்தான் நானே அந்தப் படத்தை முழுதாக பார்த்தேன். இவ்வளவுநாள் கழிச்சு பார்க்கும்போது நான் செய்த தவறுகள் நிறையத் தெரிந்தன. Editingல் செம சொதப்பல், நீளம், ஏகப்பட்ட தேவையில்லாத காட்சிகள். ஹ்ம்ம், கத்துக்கிட்டா இதையெல்லாம் செய்யறோம். ஆனா மனசுக்குத் திருப்தியா நாம நெனச்சது வரும்போது ஒரு சந்தோசம் வரும்பாருங்க...

ஆனா ஒன்னு சொல்றேங்க, படம் எடுக்கிறது ரொம்பக் கஷ்டங்க.

Friday, February 24, 2012

கிராமத்தானின் ஒரு நாள்

கிராமத்துல ஒரு அட்டவணையைப் போட்டு வாழ்றதில்லைன்னு ஆராச்சும் சொன்னாங்கன்னா நம்பாதீங்க. எங்கூர்ல சத்தியமா ஒரு அட்டவணையாட்டம்தாங்க இருக்கும் வாழ்க்கை. எம்பட ஐயன் படிச்சு பட்டணத்துக்குப் போயி வேற அட்டவணையை போட்டு வாழ்ந்தாலும், எம்பட தாத்தா/பாட்டி/அப்பிச்சி/அம்மாயி வாழ்க்கை வேற மாதரதாங்க இருந்துச்சு. இப்ப நானிருக்குற நிலைமைக்கும் அவிங்களுக்கும் சம்பந்தமேயில்லீங்க. பேன் போட்டா கரண்டு சாஸ்தியாயிரும்னு போன வருசம் சொன்னாருங்க அப்பிச்சு. ஆனா, அதுக்கு மின்னாடியெல்லாம் ஃபேனே அங்கே இல்லீங். நானெல்லாம் வளர்ந்த காலத்துல ஃபேன், டிவி, ரேடியோ எல்லாம் இல்லீங். சரி, நாம விசயத்துக்கு வருவோமுங்.


காலை, வெள்ளைனைய எழுந்திருச்சி(4:45-5:00) மாடு,எருமை பாலை பீய்ச்சிருவாங்க. கருக்கல்ல இருக்கறப்பவே சொஸைட்டிக்கு போயி பாலை ஊத்தியாவனும். நம்பூட்டும் சொஸைட்டிக்கும் ஒரு ஒன்ற மைல் இருக்கும்னு நினைக்கிறேன். பால் எடுத்துட்டுப் போவ பால் லாரி வரதுக்கு முன்னாடியே போயாவனும்.

சொஸைட்டியில் ரீடிங் பார்த்து புஸ்தவுத்துவத்துல குறிச்சிட்டு கிளம்புனா விடியறாப்ல மசமசன்னு இருக்கும்போதே வீட்டு வந்துரனும். அப்புறம் பாட்டி வெக்கிற காப்பிய குடிச்சிட்டு கிளம்பிரோனும். வருசையா தேங்காய் மரத்துல இருந்து உழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கி ஒன்னா இரு கூட்டானா சேர்த்துட்டு அப்படியே “2” போயிட்டு வந்துரனும். வரும்போதே பல்குச்சியில பல்லு விளக்கிட்டே திரும்ப வந்து, சாப்பிட தயாராயிரோனும். இந்த நேரத்துல பாட்டி கட்டுத்தாரைய கூட்டியிருக்கும், தயிர கடைஞ்சு மோராக்கியிருக்கும். ஒரு பெரிய தேங்கா அளவுக்கு வெண்ணை எடுத்து உரில போட்டும் வெச்சிருக்கும். வந்தவுடனே பழைய சோத்துக்கு மோரும் ஊத்தி குடுச்சிபுட்டா மணி 8 ஆயிருக்கும். காட்டுல வேல இருந்தா அப்படி பார்க்க வேண்டியதுதான். என்னவேலைன்னு கேட்குறீங்களா? தண்ணி கட்டுறது, பார் புடிக்கிறது, செடிக்கு மருந்து வெக்கிறது, கரும்புக்கு சோவை எடுக்கிறது, களை புடுங்குறது, பருத்தி புடுங்குறது, வயலடிக்கிறது, செடி வெட்டியாந்து உரம்போடுறது இப்படி மொறைக்கு ஒவ்வொரு வேலை இருக்கும்.


இதெல்லாம் காலை நேரத்துல மத்தியானம் சோறுங்கிறது 12-12:30க்குள்ள முடிஞ்சிரும். பெரும்பாலும் நேத்து வெச்ச குளம்புதான் சோத்தோட திங்கனும். மோர் ஊத்தி கரைச்சி குடிச்சிபுட்டா கண்ணை சொக்கிரும்.தென்ன மரமோ, புங்க மரத்தடியிலோ, இல்ல வேப்ப மரமோ ஒவ்வொரு ஊட்டுக்கு மின்னாடியும் இருக்கும், அப்படியே தூங்கிர வேண்டியதுதான். 2 மணிக்காட்டம் எந்திருச்சு ஆட்டையும், மாட்டையும் கரட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போனா சாயங்காலம் ஆகிரும். 4-4:30ரக்கு ஊட்டு திரும்ப வந்து ஆட்டை எல்லாம் பட்டியில அடைச்சிபுடனும். மறுபடியும் பால் பீச்சினதும் காப்பி வெச்சுரும் பாட்டி. குடிச்சிட்டு பாலை எடுத்துட்டு சொஸைட்டிக்குப் போயிருவோம். அங்கே கதையடிக்கிறது, பொரணி பேசறதெல்லாம் அப்பத்தான் நடக்கும்.
[ஒலக்கச்சின்னானூர்- கோட்டான்கல் கரடு]

இந்த நேரத்துல பாட்டி சோறு பண்ணி வெச்சிருக்கும். சொஸைட்டியில இருந்து திரும்ப வந்ததும் அண்டாவுல தண்ணியூத்தி சூடு பண்ண வேண்டியதுதான். அதுக்குன்னே தேங்காய் மட்டை உரிச்சி அடுக்கி வெச்சிருப்போம். தேங்காய் உரிக்கிறதைப் பத்தி இன்னொருக்கா சொல்றேங்க. குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு தூங்கிர வேண்டியதுதான்.
[ஒலக்கச்சின்னானூர்- அப்பச்சி வீட்டுல இருக்கும் குளியலறை]

சனிக்கிழமைன்னக்கே பால் சொஸைட்டியில அந்த வாரத்துக்குண்டான பால் காசு வந்துரும். சனியன்னிக்கி கொங்கணாபுரம் சந்தை, ஆடு விக்க வாங்க வேலை இருந்தாப் போவலாம், காய் போட போவோம். அதுக்கு வெள்ளிக்கிழமையன்னிக்கே காயேல்லாம் பொறிச்சு சாக்குப்பையில கட்டி வெச்சிருவொம். மொதல்ல சைக்கிள்லதா போயிட்டு இருந்தோம். இப்போ டிவிஎஸ் 50 வந்ததிலிருந்து 4-5 மூட்டை அடிக்கி எடுத்துட்டு போயிரலாம். கண்டிப்பா தனியா போவ மாட்டோம், பங்காளிங்க எல்லாம் ஒன்னு கூடிதான் போவோம். அப்பத்தான் புரோக்கரு ஏமாத்தாம காசு தருவான்.

அதுவுமில்லா நாங்க பங்காளிங்க அல்லாரும் ஒன்னாப் போனாவே அவனுக்கு 407 அளவுக்கு வந்துரும்ல. அவனுக்கும் ஒரே வேளையாப் போயிரும். சனியன்னிக்கு கொங்கணாபுரம் போவற வேலையில்லைன்னா ஞாயித்துக்கிழமை சங்கீரி (சங்ககிரி) போயிருவோம். அன்னிக்குத்தான் சங்ககிரியில் சந்தை. அன்னிக்குத்தான் பலசரக்கு சாமான் வாங்குறதெல்லாம். கோழிபுடிக்கிறது எல்லான் ஞாயித்துக்கிழமைதான்.

அப்புறம் சினிமாவுல காட்டுறாப்ல பஞ்சாயத்தையெல்லாம் என் வாழ்க்கையிலேயே பார்த்தது இல்லீங். எங்க ஐயனும் பார்த்தது இல்லியாம். இட்லி தோசை எல்லாம் தீவாளுக்கும், ஆடி அமாவாசைக்கும்தான் கிடைக்கும் இல்லாட்டினா சந்தைக்குப் போறப்ப சாப்புட்டுவந்தாதான் ஆச்சு. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா பஜ்ஜியோ, போண்டாவோ, கச்சாயமோ, தேங்கா வடையோ பாட்டி சுடும். ஒரு ரவுண்டு கட்டிட்டா ரவைக்கு சாப்புடவே தோணாதுங்.

இந்த வாழ்க்கை முறை, 1990 களில் என் பள்ளிப் பருவத்தை அடிப்படையா வெச்சி எழுதுனதுங்க. 2000கள்ல டிவி வந்துச்சு, நாடகம், போன் எல்லாம் வந்துருச்சு. அதைப் பத்தி இன்னொரு நாள்ல எழுதறேனுங்.

Wednesday, February 22, 2012

இந்து மதமா இல்லாட்டாலும் - கடி ஜோக்ஸ்

எவ்வளவுதான் சம்பாரிச்சாலும் வரி கட்டத் தேவையில்லாத ஒரே இடம் - மார்ச்சு”வரி

இசை ஞானம் உள்ள பேய் வே"தாளம்"

ஃபெவிக்”கால்”ன்னு பேர் வெச்சிருந்தாலும் அசையாமத்தான் இருக்க வெக்கனும் #epicFail

இந்து மதமா இல்லாட்டாலும் அவுங்க எல்லாரும் இத்”தாலி”காரங்கதான்

ஆணுக்கே ஆனாலும் அது தாடி’தான். ’தாடா’ இல்லை

மம்தா சாப்பிட்டாலும் அது பொங்கல்தான் பெங்கால் இல்லை.. #சொல்லியாச்சா


கிராம் கணக்குல இருக்கிற எறும்பு கடந்தாலும் அந்தத் தூரம் கிலோமீட்டர்தான்.

அது பொண்ணே ஆனாலும் கிளம்பும்போது ” டாடா”ன்னுதான் சொல்லியாகனும்

எவ்வளவுதான் மொக்கை போட்டாலும் அதை நம்மளால போட்டதை திரும்ப எடுக்கவே முடியாது

விடைபெறும் போது -> இருக்கும்போது நிறைய கேள்வி கேட்டிருப்பாங்களோ?

நட்டுன்னு பேர் வெச்சிருந்தாலும் கிழங்கை புடுங்கித்தான் சாப்பிடனும்

பே”ரன்” என்பதாலேயே அவர் நல்லா ஓடுவார்னு எதிர்பார்க்கக்கூடாது.

காசு வாங்கிட்டு ஓடிப்போனாலும் அவன் பேரு பேரன்’தான் #PayRun

சர்”தார்” - ஜல்லி பேராத ஒரே ஆள்


பேக்’கிங்’ எந்த நாட்டு ராஜா? சத்தியமா நம்ம நாட்டைப் பத்தி பேசலை

சே’சிங்’ பஞ்சாபில் தான் தோன்றி இருக்க வேண்டும்!

காலால உதைச்சாலும் அதுக்குப்பேரு பயங்”கர”வாதம்தான்

காட்டேரியாகவே இருந்தாலும் தூங்கினப்புறம் Cotஐ விட்டு இறங்கித்தான் ஆவனும் #Cot #ஏறி

OUT"doorல party வெச்சாலும் ”IN"viteதான் பண்ணனும்

விஜய் படம் பார்த்தாலும் வருவது என்னமோ தலை வலிதான்


------------------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் நேத்து நான் Twitterல் போட்ட மொக்கைகள்.


Photo Courtesy: http://photo-dictionary.com

Wednesday, February 8, 2012

22 பேரைக் கொன்ற மக்கனாவை காப்பாற்றிய Dr. கே.அசோகன்- வாருங்கள் பாராட்டலாம்

நாம் மறந்து வரும் விசயங்களில் ஒன்று பாராட்டுதல், அங்கீகரித்தல். சச்சினுக்கு பாரதரத்னா கிடைக்குமான்னு ஏங்குற நம்ம மக்கள், வீதியில கிடக்கிற குப்பையை சுத்தம் செய்யும் ஊழியர்களை அருவெருப்பா பார்க்கிற உலகம் இது. கொஞ்சம் நாமளும் பாராட்டலாமே, நாலு பேருக்கு இந்த விசயத்தை கொண்டு செல்லலாமே அப்படிங்கிற எண்ணதுலதான் தினமணியில் வந்த செய்தியை கீழே குடுத்திருக்கேன். 

கொஞ்சம் பாராட்டினாதான் கொறைஞ்சா போயிருவீங்க பாஸூ?

நன்றி: தினமணி(மூலம்)  -எம்.ஆனந்த்

========================================
கோவை, வ.உ.சி. மாநகராட்சி உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள தனது அறையில் இரவு, பகல் என அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் வலைதளத்தில் விலங்குகளுக்கான சிகிச்சை மற்றும் தேவையான தகவல்களை அவர் சேகரித்துக் கொண்டிருப்பார். பூங்காவில் உள்ள முதலைக்கு கீழ் தாடை உடைந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும், பாம்புக்கு புற்றுநோய் கட்டியுள்ளது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்...

- இப்படி 'எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும்' தாயுமானவரின் வரிகளுக்கு இலக்கணமாக இருப்பவர், கோவை வஉசி மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் மற்றும் மருத்துவரான கே.அசோகன். அவரிடம் நாம் பேசியதிலிருந்து....

''சென்னையில் உள்ள கால்நடை கல்லூரியில் 1989-ல் எனது படிப்பை முடித்து 1996-ல் சின்ன சேலத்தில் உள்ள அரசுக் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணியில் அமர்ந்தேன். 22 ஆண்டுகள் பணியில் 12 முறை இடமாற்றங்கள்... இதுதான் என் பணிக்குக் கிடைத்த பரிசு
.

நான் முதுமலையில் பணிபுரிந்த போது, அடிக்கடி யானைகள் இறந்தன. யானைகளின் திடீர் மரணம் ஏன் ஏற்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டேன். யானைகளுக்குத் தொண்டையடைப்பான் நோய் வருவதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து, மற்ற யானைகளுக்குப் பரவாமல் தடுத்தேன்.

அதேபோல் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் யானைகளின் வாழ்நாள் குறைந்திருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தேன். யானைகளைத் தாக்கும் நாடாப்புழுக்கள்தான் இதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தேன். அதற்கான சிகிச்சையை மேற்கொண்டேன்.

அதேபோல் காட்டுக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்களில் பலா பழத்தில் வெடிகுண்டை ஒளித்துவைத்து யானைகளைக் கொல்வது, அதன் வழித்தடத்தில் ஆணி பொறிகளை வைப்பது, தந்தங்களுக்காக யானைகள் சுடப்படுவது போன்ற காரணங்களைக் கண்டறிந்தேன். தாயால் கைவிடப்பட்ட யானைக் குட்டிகள், தோல் நோய் போன்ற மற்ற காரணங்களையும் கண்டுபிடித்து அவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறேன். ஏறக்குறைய 55 யானைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்து பல விஷயங்களைக் கண்டறிந்தேன்.

வயநாடு (கேரளா) - முதுமலை இடையே அவ்வப்போது ஓடி ஒளிந்துகொண்டு 22 பேரைக் கொன்ற மக்கனா (கொம்பில்லா ஆண் யானை). இந்த வகை யானைகள் ஆசியாவிலேயே 5விழுக்காடுதான் உள்ளன. அதனால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற பல குழுக்கள் அமைத்து அதைப்பிடித்தேன். அப்போதுதான் அதன் உடலில் இருந்த பல துப்பாக்கி குண்டுகளைப் பார்த்தேன். பிழைப்பதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில், பல லட்சம் செலவு செய்து தினமும் 3 மணி நேரம் சுமார் ஓர் ஆண்டு சிகிச்சை கொடுத்து அதன் காயங்களைக் குணமாக்கி அதை நடமாடச் செய்து இன்னும் அது உயிருடன் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன்.

1998-99 வாக்கில் சிறுமுகை வனப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறக்கும் நிலையில் இருந்த யானைக்கு, எங்களின் மருத்துவக் குழுவுடன் தொடர் சிகிச்சை கொடுத்து அதைப் பிழைக்க வைத்தோம்.

2000-ஆம் ஆண்டில், குன்னுரில் விஷம் தடவிய மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டு கோமா நிலைக்குச் சென்ற சிறுத்தைக் குட்டியை பிழைக்கவைத்தோம். அண்மையில் கோவை வஉசி பூங்காவில் புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட பாம்புக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து அது நல்ல நிலையில் உள்ளது.

நாகை மாவட்டத்தில் 2004-ஆம் ஆண்டு கால்நடை மருத்துவராக இருந்தபோது படகு வலையில் சிக்கி ஆயிரக்கான ஆமைகள் இறப்பது வழக்கமாக இருந்தது. அப்போது கடற் கரையில் செயற்கையாக ஆமைகள் முட்டைகளைப் பாதுகாக்க ஓர் இடத்தை உருவாக்கி குஞ்சுகள் பொரிந்தவுடன் அவற்றை எடுத்துச் சென்று ஆழ்கடலில் விட்டு ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியையும் செய்திருக்கிறேன். மீனவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் மூலம் ஆமைகள் பாதுகாப்புக்கு வழிவகை செய்கிறோம்.

மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த 2008-ஆம் ஆண்டு அங்கு சென்ற குழுவில் நானும் இடம்பெற்றேன்'' என்றார்.

- இவர் முதுமலையில் இருந்தபோது, இவரின் தன்னலமற்ற பணிக்காக 'அண்ணா' விருதுக்கு இவரின் பெயரை பரிந்துரை செய்தனர் அந்தப் பகுதியில் இருந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். ஆனாலும் விருது கிடைக்கவில்லை. சுயநலமில்லாமல் சூழலுக்கு உழைப்பவர்களுக்கு அரசு விருது தந்து கௌரவிக்க வேண்டும் என்பது பல சுற்றுச் சூழல் ஆர்வளர்களின் ஏக்கம்.

Monday, February 6, 2012

@Vivaji Updates - ரெகார்ட் டான்ஸ்காகவே போடப்பட்ட பாடல்

* என்னதான் பெண்ணுரிமை பேசுற பெண்ணே உபயோகப்படுத்தினாலும், அதுக்குப் பேர் ஆண்’ட்ராய்டுதான்

* விஜய்க்கு எத்தனைப் படம் ஓடினாலும் ’தல’ மேல வெச்சி கொண்டாட முடியாது

* அவர்: கும்புடு வெச்சிக்கிறேங்க.

நான்: நீங்களே வெச்சிக்கப்போற கும்புடுக்கு என்கிட்ட ஏன் சொல்லனும்?

* பழசா இருந்தாலும் அதுக்குப்பேரு ”சொலவடை”தான். சொலவடைகறி இல்லை


* ஆண்களுக்குப் பிடிக்காத ஒரே வாக்கியம் "டாப்-அப் பண்ணிடுடா,, பேலன்ஸ் இல்லே"

* இன்று தியாகிகள் தினம் #கணவர்களும் தியாகி பட்டியலில் வருவாங்கதானே? சியர்ஸ்

* தலை கால் புரியாம ஆடக்கூடாது #தலை என்பது இங்கே அஜித் எனக் கொள்க

* உலகப்படங்களை தமிழ்ல காப்பி அடிக்கிறோமா? நாம கேட்ட முதல் கதையே பாட்டி வடை 'சுட்ட' கதைதானே சார்?

* காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா #bra_section

* மங்காத்தாவில் லஷ்மிராய் கதாபாத்திரத்தின் பெயர் - சோனா #ஏதேச்சை

* கார்க்கி எப்போ போலீஸ்காரர் ஆவாரு? அவர் “ர்” விடும்போது #காக்கி

* ஒரு புள்ளி சேர்த்திருந்தால் ஆச்சர்யகுறியும் ஆண்தான்.

* ரெண்டாவதா வந்தாலும், கஷ்டம்னா இந்த எழுத்தைத்தான் சொல்றோம் #பி பாஸிட்டிவ்.  என்னதான் கோவம் தப்பே ஆனாலும்  முதல் எழுத்தைத் சொல்றோம் #ஏஏஏஏ(A)

* அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்” ரெகார்ட் டான்ஸ்காகவே போடப்பட்ட பாடல் போல
....

Wednesday, February 1, 2012

ஜெ - கேப்டன் மோதல் - Videos

விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்



ஹொய்ய்ய்ய்



ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்


நன்றி- நக்கீரன்

My Twits:

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டமாம். இப்ப ரெண்டு கூத்தாடிங்க அடிச்சிக்கிறாங்க. ஊரு கொண்டாட்டமா வேடிக்கைப் பார்க்குது

ஒரு நடிகையை முதலமைச்சராகவும், ஒரு நடிகரை எதிர்கட்சித் தலைவராகவும் உருவாக்கி அழகு பார்க்கும் இனமே தமிழினம்தான்

மேடைப் பேச்சுக்கும், சட்டசபை விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவங்களைத்தான் அங்கே அமர்த்தியிருக்கிறோம் #@சபாஷ் தமிழா

--
..
..

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)