Tuesday, November 5, 2013

ஆங்கில் எழுத்துறு டமிலில்

ஆங்கிலத்தில் எழுதி பிரகு டமிலில் மொலி பெயர்த்த போது


enakku palli enrale pidikathu. analum adi vilunthathal ponen. apo avalai pas stopil parthein. bussil aval erivittal. nanum erinen. appothu avali yaro idithargal. enakku rompa kovam vanthuviddathu. udane idithavanai thaddi kettein, avan payanthu odividdan. aval ennai parthu sirithal. naan ulakaiye maranthuvitein. avalai faalow pannien, veedu kandu pudichitein.

adutha naal, vittai vittu kilambothu appa kettar, engeda pore? naan onnum solamal vanduvitein. friends ketta pothu sonen, lavvar vittukku porennu.

adutha naal, naan kadalil vilunthuvitathai eppadiyo appa arinthuvittar. adi pinni vittar. palam illamal naan padukkaiyil irunthein. enna seyyalam enru yosichapothu, savalam enru mudiveduthein. ana lover vanthu kadhal sollivittal. nanri. subam.









டமிலில்:

எனக்கு பல்லி என்றாளே புடிக்காது. ஆனாலும் அடி விழுந்ததால் போனேன். அப்போ அவலை பஸ் ஸ்டாப்பில் பார்த்தேன். பஸ்ஸில், நானும் ஏரினேன். அப்போது அவலை யாரோ இடித்தார்கள். ரொம்ப கொவம் வந்துவிட்டது எனக்கு. உடனே இடித்தவனை தட்டிக் கேட்டேன். அவன் பயந்து ஓடிவிட்டான்.  அவள் சிரித்தபோ, நான் உலக்கையே மறந்துவிட்டேன். அவளையே ஃபாலோ பண்ணினேன். வீடு கண்டுபிடிச்சேன்.

அடுத்த நாள்,

விட்டை விட்டு கிளம்பும்போது அப்ப கெட்டார். எங்கே பொற? நான் ஒன்னும் சொல்லாம வண்டுவிட்டேன். Friends கெட்ட பொழுது சொனேன். லவ்வர் வீட்டுக்குப் போறேன்னு.

அடுத்த நாள்,

நான் கடலில் விழுந்ததை அப்பா எப்படியே அரிந்து விட்டார், அடி பின்னி விட்டார். பழமில்லாமல் பாடுக்கையில் இருந்தேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, சவலாம் என்று முடிவெடுத்தேன். ஆனா லவ்வர் வந்து கடல் சொல்லிவிட்டாள்.

நன்றி! சுபாம்.

Friday, August 16, 2013

நம் நாடு - கதையென்ன?

லைப்பு(Title) போடு போதே எம்.ஜி.ஆர் அவர்களை  ஒரு கதாநாயகனாக காட்டும் படலம். பெண்களை கிண்டல் செய்வோரை தட்டி கேட்கிறார், வயதான அம்மாவுக்காக பேருந்தில் போராடுகிறார், திருடனை பிடிக்கிறார் இப்படி பல நல்ல விசயங்கள் ஆரம்ப காட்சியிலேயே. அறிமுகத்துக்காக தனியாக காட்சி வெக்காமல் தலைப்பு போடும்போதே முடிச்சிட்டாரு இயக்குநர் ஜம்பு.

ளநீர் விற்பவராக, நடிகை ஜெயலலிதா, குடிகார அண்ணன் ஆர்.எஸ்.மனோகர். ”நான் ஏழு வயசுல இளநி வித்தவ, பத்னேழுல நிறைஞ்சு நின்னவ” என்று ஆரம்பித்ததும் பகீரென்றது எனக்கு. இது கில்மா பாட்டு வேற யாரோவுக்கு நினைச்சா ஜெயலலிதாவுக்காம். எப்படி அனுமதித்தார் எம்.ஜி.ஆர்? அதிலும் எம்.ஜி.ஆர் செல்லமாகக் கூப்பிடும் அம்முவாகவே நடித்திருக்கிறார் ஜெ. யாருக்காகவோ உதவப்போக காசு இல்லாமல் தன்னுடைய கடிகாரத்தை ஜெவிடம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். அண்ணன் ஆர்.எஸ்.மனோகர், குடிப்பதற்காக  ஜெவிடமிருந்து கடிகாரத்தை எடுத்து விற்றுவிடுகிறார். இதற்காக பெரும் போராட்டத்துடன் ரூ.200 சேர்க்கிறார் ஜெ. இதனைப் பார்த்த எம்.ஜி.ஆர் கலங்கிப் போய்விடுகிறார்.


 கரசபையில் வேலை பார்க்கும் எம்.ஜி.ஆர் ஒரு இடப்பிரச்சினைக்கு உதவப் போக, ஒரு லட்சாதிபதியை எதிர்க்கிறார். இதனால் வேலையும் இழக்கிறார். ரங்காராவ், தங்கவேலு, அசோகன் எப்பவுமே தண்ணியடிச்சிட்டே இருக்காங்க, வில்லன்கள் ஆயிற்றே. எம்.ஜி.ஆர்’ன் அண்ணன் ரங்காராவின் பெரும் விசுவாசி, அவரிடம் வேலை பார்க்கிறார். ரங்காவீட்டை விட்டு எம்.ஜி.ஆரை வெளியே போகச் சொல்லிவிடுகிறார் அண்ணன்.




 வீட்டை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ஜெ. சேரி மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். காசு குடுக்கிறவங்களுக்கு ஒட்டு போடாதீங்க, பசியை தீர்க்கிறவங்களுக்கு ஓட்டு போடுங்க என்பது எம்.ஜி.ஆர் வைக்கும் பஞ்ச்.

கரசபை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது, இதில் அசோகனுக்கும், தங்கவேலுக்கும், ரங்காராவுக்கும் இடையில் பனிப்போர் நடக்கிறது, அதே சமயம் எம்.ஜி.ஆர் இந்தப் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். தேர்தல் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவிக்கிறார் நாகேஷ். இவ்வளவு நேரமும் இல்லாதவர் திடீரென வருகிறார். கால்ஷீட் பிரச்சினையாய் இருந்திருக்குமோ?

   ழைய தவறுகளை எல்லாம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். இதனால பாதிக்கப்படும் வில்லன்கள் எம்.ஜி.ஆரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள். இதனால பொது மக்களின் பணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எடுத்து ஓடிவிட்டதாக செய்தி பரப்புகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம்.ஜி.ஆரை பதவி விலக வைக்கிறார்கள். அதுவுமில்லாமல் எம்.ஜி.ஆரின் அண்ணனின் வீட்டையும் காலி செய்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆரையும் அடித்துப் போட்டுவிடுகிறார்கள்.

பிறகு பணக்காரர் வேடமிட்டு மீண்டும் உள்ளூருக்கு வருகிறார் எம்.ஜி.ஆர். தன்னுடைய அண்ணனை கண்டுபிடிக்கிறாரா? அவரின் மீதிருக்கும் பழியைத் துடைக்கிறாரா? ஜெ.வை கைப் பிடிக்கிறாரா? வில்லன்கள் எல்லாம் திருந்தினார்களா? வில்லன்களிடமிருந்த பணம் என்னாயிற்று? அந்த CBI அலுவலர் யார்? என்பதே இறுதிக்காட்சிகள்.

திடீர் பணக்காரனாக வரும் எம்.ஜி.ஆருக்கு எங்கேயிருந்து அவ்வளவு பணம் வந்தது? ஒரு நகர சபை தலைவருக்கு அவ்வளவு அதிகாரம் உள்ளதா? மச்சம் மரு எல்லாம் கண்டு புடிக்கவே முடியாதா? இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலில்லை.

கதாநாயகன் துரையாக நடித்திருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். கதாநாயகி அம்முவாக நடித்திருப்பவர் நமது தற்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். அண்ணனாக டி.கே.பகவதியும், அண்ணியாக பண்டரிபாயும், அண்ணன் மகள்களாக குட்டி பத்மினியும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள்.  படத்தின் அனைத்துப் பாடல்களை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி அவர்கள். படத்திற்கு இசை MSV அவர்கள்.

படத்தின் மூன்று பாடல்கள் செம ஹிட். நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், வாங்கய்யா வாத்யாரைய்யா. தாறுமாறான  ஹிட் 7 வயசுல எளநி வித்தவ, நேரடியாவே தப்பான அர்த்தம் கொண்ட பாடல் அது.

Note: குடிகாரன் பேச்சு என்ற பாடல் இணையத்தில் எங்குமேயில்லை. விக்கியில் அதைப் பற்றிய தகவலை இப்பொழுதுதான் சேர்த்தேன். 

பி.கு. இதுபடத்துக்கான விமர்சனமில்லை 

Monday, August 12, 2013

கோச்சடையான் - கதை என்ன?

நன்றாக கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஒரே காட்சி, ஒரே போல கதாப்பாத்திரங்களுக்கு, அதுவும் ரஜினியின் படங்களிலேயே பயன்படுத்தியிருப்பார் கே.எஸ். ரவிக்குமார்.
  • முத்து படத்தில் ஒரு காட்சி, சொத்துக்காக அண்ணனிடமிருந்து சொத்துக்களை பறிக்க முயற்சிப்பார் தம்பி ரகுவரன். இதனையறிந்த அப்பா-ரஜினி அனைத்து சொத்துக்களையும் ரகுவரனுக்கு எழுதி வைத்துவிட்டு, சாமியாராகப் சென்றுவிடுவார்.
  • சொத்துக்களைப் பிரித்துத் தரச்சொல்லி அண்ணன் சிவாஜியிடம் முறையிடுவார் தம்பி மணிவண்ணன். சொத்துக்களைப் பிரிக்க மனமில்லாத சிவாஜி, தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மணிவண்ணனுக்கே கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுவார், இது படையப்பாவில்.

இரு காட்சிகளும், சூழ்நிலைகளும், ஒன்று போலவே இருக்கும். அதுவும் ரஜினிக்கே வைத்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். துணிச்சல்தான். விடுங்க, விசயம் அது இல்லை இப்போ. இன்று இணையத்தில் பரவலாக ஒரு செய்தி அடிபடுகிறது. அதாவது கோச்சடையானின் கதை என்னவென்பதே அது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.



கதை இதோ.

தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடுவார்களா துரோகிகள்? அவரது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள். அப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார் மகன் ரஜினிகாந்த். பிறகு காட்டில் மறைவாக தனிக்குழு ஒன்றை அமைக்கிறார்.  தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டைப் புரட்சி செய்து வெல்கிறார்.

இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றாலும், கதையிலும், மற்ற தயாரிப்பு  பின்னணியிலும் கே.எஸ்.ரவிக்குமாரின் முழுப் பங்கு இருக்கிறது என்பது பலரும் அறிந்த விசயம்தான். ஆனாலும், படத்தின் கதை வசீகரிக்கத்தான் செய்கிறது. அதுவும் Motion Capturing மூலம் படமாக்கப்படும் முதல் முழு நீள தமிழ்த் திரைப்படம் என்கிற போதே ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்கிறது. சும்மாவே ரஜினி கார்ட்டூன் அளவுக்கு படம் காட்டுவாரு, இதுல கார்ட்டூன் படமென்றால், எப்படியிருக்குமென்று யோசித்துப்பாருங்க. ரஜினி என்றாலே மேஜிக்தானே, அந்த மாதிரியான ரஜினியைப் பார்க்கத்தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். சமீபகாலமா வெளிவந்த அனைத்து ரஜினி திரைப்படங்களும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் "அந்த மேஜிக்" கொண்ட ரஜினி இல்லாமல்தான் வந்திருக்கிறது.

பல தடைகள், பல வருடங்கள், ஆனாலும் படத்திற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள், அதில் நானும் ஒருவன். ரகுமானின் இசை, வைரமுத்துவின் பாடல் வரிகள்...

கோச்சடையானே வா! வீறு கொண்டு வா! சரித்திரமே வா!

Sunday, July 14, 2013

மாலை நேரத்து வெம்மை

   கூட்டத்தில் நடுநாயகமாக இருக்கும்பொழுது தனித்து இருப்பது போன்று ஒரு  மனநிலை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறேன், சிரிக்கிறேன், மீண்டும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனது எங்கோ இருக்கிறது. வெம்மை தணிக்க மழை பணிக்கிறது, சிறுதூறல் விழ, இடியுடன் மின்னலும் தூரமாய். நம்மைத்தாக்காத வரையில் அது எல்லாம் ஒரு சம்பவமே.

    நாளைய தினத்தின் கவலையை நினைத்து இன்றைய சந்தோசத்தை இழந்துகொண்டிருக்கும் தருணமென்று மனதிடம் சொல்லிக்கொண்டிருந்தது அறிவு. அமெரிக்க மாலை நேரத்திற்கு சற்றும் ஒவ்வாமல் அனத்திக் கொண்டிருந்தது, காலை நேரத்து சென்னை பண்பலையொன்று. விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத விளம்பரங்கள். பிறகு தங்கம் விலை வருங்காலத்தில் ஏறுமென்றும், வாங்கி குவித்துக்கொள்ளவுமென்றும் ஒரு நிபுணர் சொல்லிக்கொண்டிருந்தார். உலோகங்களின் இழுவைக்கு இயந்து போகும் மனிதர்களை என்னவெனச் சொல்ல?

 

   திடீரென்று ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வார்த்தையையும், துண்டு இசையையும் மனமொத்த ஒரு ஜீவனுடன் ரசித்தது நினைவுக்கு வருகிறது. அந்த ஜீவன் என்ன செய்துகொண்டிருக்குமென்று அந்த ஜீவனின் வீட்டிற்குள் புகுந்து வேவு பார்க்கிறது மனது. கற்பனை சொல்லும் அவரின் நிலையை ஏற்றுக்கொள்கிறது மனது. அது சந்தோஷமான நிகழ்வையே சொல்கிறது. மீண்டும் அந்த ஜீவனை சந்திக்கும் ஆவல் எழுகிறது. மழை வலுக்க ஆரம்பிக்கிறது. நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல் இன்னொருவருக்கு வேறொரு நினைவை தந்திருக்கும், சம்பந்தமேயில்லாமல் கூட இருக்கலாம். நினைவுகள் என்றும் ஒன்று போல இருப்பதில்லை, அது தேவையுமில்லை. நினைவுகளொன்றும் ரெட்டை கோடு போட்ட காகிதத்தில் எழுதப்படுவதில்லை, அதற்கு சட்டமுமில்லை, எல்லைக்கோடுமில்லை.


   மீண்டும் விளம்பரம், ஏதோ ஒரு தேநீர் குடித்தால் குதூகலமாகிவிடலாமாம். சோகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தால் மனம் அப்படியொன்றும் குதூகலமாகிவிடுவதில்லை. தேநீருக்கெல்லாம் மனம் மாறுமென்றால், தேநீர் கடை அண்ணாச்சி எப்பொழுதுமே சந்தோசமாக இருக்க வேண்டும். கடை சாத்தும் அண்ணாச்சி வீட்டிற்கு போகும் வழியில் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிப் போகையில்தான் குதூகலாமாவதைக் கண்டிருக்கிறேன். அவருக்கு பிரியாணிதான் ஊக்கம் போலும்.

   ன்றொன்றுக்கும் சம்பந்தமேயில்லாத நினைவுகள், வாழ்க்கை நம்மை நகர்த்திக்கொண்டுதான் இருக்கிறது.   நகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். திடீரென்று சுற்றியிருந்த அனைவரும் சிரிக்கிறார்கள், நானும் சிரித்து வைக்கிறேன். அந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தமென்று எனக்கும் புரியவில்லை, அந்தச் சிரிப்பிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

Thursday, June 27, 2013

பர்ஃபி செய்வது எப்படி?

இது அரசியல் பதிவு அல்ல:




முதலில் பெரிதாய் 40 தேங்காய்களை வாங்கித் தந்துவிட வேண்டும். கூட்டாளியே அதைத் துருவி தந்துவிடுவார்கள் என்பதுதான் பேசப்படாத ஒப்பந்தம். தராவிட்டால் கூட்டாளியின் வீட்டுக்கே விமானம் ஏறிப் போய் துருவித்தர நிர்பந்திக்க வேண்டும். கூட்டாளி துருவித்தர ஒப்புக்கொண்ட பிறகு நாம் இங்கே பர்ஃபி செய்ய ஆயத்தமாக வேண்டும். கூட்டாளி தேங்காய் வாங்கியதில் பிரச்சினை என்று நம் மேலேயே பிராது கொடுக்க, சர்க்கரை வாங்க அனுப்பிச்ச ஆளை திரும்ப வரச்சொல்லிவிட வேண்டும். பிராதை, அதோ இதோ என்று இழுவையில் இருக்கும் போது, உங்க பர்ஃபியே வேண்டாம், குடுத்த தேங்காய்களைத் திரும்ப குடுங்க என்று கேட்டு திரும்ப வாங்கி வந்துவிட வேண்டும். கூட்டாளியே ரெண்டு பேரை டெம்போ வைத்து நம் வீட்டு வந்து பர்ஃபி செய்யச் சொல்லி கேட்பார்கள்.அப்பொழுதும் மசியாமல் பர்ஃபி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட வேண்டும். அதற்காக கூட்டாளியிடத்தில் துருவ சென்ற நமது ஆட்களையும் திரும்ப வரச்சொல்லி விடவேண்டும்.

திடீரென்று மகளுக்கு பர்ஃபி சாப்பிட ஆசை வந்தவுடன், மறுபடியும் தேங்காயை வாங்கி கூட்டாளியிடமே திரும்ப தந்துவிட வேண்டும்.

அப்புறம்?

அப்புறமா, முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கவும்..

==00==
பர்ஃபியை மைய்யமாக வைத்து சமீபத்தில் வந்த நகைச்சுவை காணொளி இங்கே 1:02லிருந்து பார்த்துக்கொள்ளவும்


பி.கு: இந்தப் பதிவு எந்த வித அரசியல் சம்பவங்களையும் குறிப்பது அல்ல. நீங்களாகவே ஒப்பிட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

Friday, June 21, 2013

தலைவா - கதை என்ன?

சமூக பொறுப்பு எதுவுமின்றி கூத்தும் கும்மாளமுமாய், வெளிநாட்டில் படித்து வரும் கதாநாயகன், அங்கேயே காதலும் கொள்கிறார். உள்நாட்டில் ஒரு ஊரில் பெரிய மனிதராக, எல்லோராலும் மதிக்கப்படும் மனிதராக இருக்கிறார் கதாநாயகனின் அப்பா. ஜாதிப் பிரச்சினையால் தகப்பனாரை கொன்றுவிடுகிறார்கள் வில்லன்கள். இதனால் உள்ளூருக்கு வரும் கதாநாயகன் அப்பாவைப் போலவே தலைவனாக உருவெடுக்கிறார், வில்லன்களை பழிவாங்கி தகப்பனாரைவிட பெரிய சக்தியாக உருவெடுக்கிறார். இது தான் தலைவா’வின் கதை.

தலைவா - துண்டிப்படம்



இருங்க, தேவர் மகன் கதை மாதிரியே இருக்குல்ல?

Monday, June 17, 2013

பண்ணையம் June-17-2013

பல்பு 

முந்தியெல்லாம் படைப்புகளை எழுதி காசு குடுத்து கவரிலோ போஸ்ட் கார்டிலோ எழுதிப் போட்டா 'வருந்துகிறோம்' அப்படின்னு காசு குடுத்து கவர் வாங்கி திருப்பி அனுப்புவாங்க. இப்போதெல்லாம், நாமளும் ஈமெயிலுல அனுப்புறோம். ஆனா,  வருந்துகிறோம் அப்படின்னு கூட பதில் ஈமெயில் வருவது இல்லை. படைப்பு வெளியானாத்தான் தெரிய வருது. இதுதான் புது வகையான பத்திரிக்கை தர்மம் போல.

இப்பவெல்லாம் பல்பு வாங்கினா கூட தெரியறதே இல்லை


==000==

ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க

ட்வர்ட் ஸ்நோடன் அப்படிங்கிறவந்தான் விக்கிலீக்ஸுக்கு விசயங்களை ததவரு அப்படிங்கிற செய்திதான் போன வாரயிறுதி பரபரப்பு. அவருதான் சொல்லியிருக்காரு NSA(அதாவது லோக்கல் மொழியில சொன்னா அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு வாரியம்(?!)) தொலைபேசி, Skype, Facebook, Twitter இன்னும் எது எது எல்லாம் தொலைதொடர்புகளுக்காக உபயோகப்படுத்துறோமோ, அதை எல்லாத்தையும் NSA ஒட்டுக்கேட்பதா அவர் சொன்னாரு. இது பலரை கொந்தளிக்க வெச்சிருக்கு. இதை ட்விட்டர், ஃபேஸ்புக் அப்படின்னு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, பலரோ அப்படியெல்லாம் இருக்காதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

இது போன வாரம் ஹூஸ்டன் பண்பலையில வந்த  ஒரு நகைச்சுவை இல்லாட்டி நக்கல் அப்படின்னு எடுத்துக்கலாம். போன வாரம்ஒபாமாவின் மகளோட பிறந்தநாள், அவருக்கு என்ன ஒபாமா என்ன பரிசளிச்சிருப்பாரு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டாங்க அதுக்கு வந்த ஒரு பதில் இது "Justin Bieber's Cell Phone Call records".

==000==

இனிமே தந்தி அடிக்காது


டந்த 160 ஆண்டுகளாக நமக்காக சேவை செய்த "தந்தி"  ஜூலை 15 முதல் தன்னோட சேவையை நிறுத்திக்கொள்ளப் போகிறதா தபால் துறை அறிவிச்சிருக்கு. தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிந்துப் போகிறது இன்னொரு தொழில் நுட்பம்,. வல்லவன் வாழ்வான்  என்பதுதான் நியதியும் கூட. ஆனாலும் தந்தி பல தலைமுறைகளாக நம்மோக சமூகத்தில் ஒரு அங்கமாகிட்டே வந்திருக்கு. தந்தி வந்தா பயப்படறது , "பயத்துல பல்லெல்லாம் தந்தியடிச்சுது" அப்படின்னு சொல்றது,  ஏன் தினத்தந்தி அப்படிங்கிற ஒரு நாளிதழ் அப்படின்னு நம்மோடவே பயணித்திருக்கிறது தந்தி.இன்றைய செல்போன் யுகத்துல தந்தி என்பது செல்லாக்காசு.

போய்(வா) தந்தி!


==000==


நடுத்தெருவில் 
அடிபட்டு இறந்துகிடந்தது
நாயொன்று
நன்றியில்லாமல் 
கடந்து போயின
மனித மிருகங்கள்..

==000==





சினிமாவுல அடிச்சுக்கொல்றதுக்கு மூக்கு லாரியைத்தான் வில்லன்கள் உபயோகப்படுத்துவாங்க. அதனால சின்ன வயசுல மூக்கு லாரின்னாலே பயம்தான். இப்பவும் அந்த பயம் இருக்கத்தான் செய்யுது.






==000==


இணையம் மூலம்
உலகம் முழுக்க பேசுவோம்
பக்கத்துவீட்டுக்காரன் 
யாரென்று தெரியாமலேயே


 ==000==

ன் முதல் அலைபேசியை 2001ல் வாங்கினேன். அப்ப பேச, நான் மத்தவங்களுக்கு அழைச்சா ரூ.4(Outgoing), வேற யாராவது என் அலைபேசிக்கு அழைச்சா நிமிசத்துக்கு ரூ.2(Incoming). காசை விடுங்க, அதைவிட பெரிய சிக்கல் Charger. 10 நிமிசம் பேசினாவே Charge போயிடும். அதுக்காக  Charger கையிலேயே தூக்கிட்டுப் போவனும். நோக்கியா வந்தபிறகு கொஞ்சம் இது மாறியது. 2013லும் Charger எடுத்துட்டுதான் போக வேண்டியிருக்கு, அப்ப Ericscon இப்ப iPhone, ஒன்னும் வித்தியாசமில்லை.பேச மட்டுமே iPhone வெச்சிருந்தா தாங்குது, ஆனா 4g/LTEன்னு போட்டு விளையாண்டோம், முடிஞ்சோம். 3 மணிநேரத்துக்காவது தாங்குறாப்ல ஃபோன் குடுங்க டிம்மு

Thursday, June 6, 2013

அப்பாடக்கர் என்றால் என்ன? Meaning of Appatakkar

What is the Meaning for Appatakkar/Appatucker

இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. 


 அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)

இதைச் சொன்னவர் M.m. Abdulla

Wednesday, June 5, 2013

அழிந்துவரும் விவசாயம்

தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரிய​வந்துள்ளது. 

கடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரை​யிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்​பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

''விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது'' என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.


''ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது.  ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.
செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.
ராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து 'வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள்  செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.


1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்’ ஏறவைத்தது'' என்றார் நம்மாழ்வார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்போதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, '40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை. அடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர். பல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.


ஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராமசாமி.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ''கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது. சொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் 'ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது'' என்றார் சின்னசாமி.

ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 'பார்’ மட்டும்தான் நடக்கும்போலும்!
- ஜி.பழனிச்சாமி 

படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

விகடனில் வந்த கட்டுரை. ஒரு கோப்புக்காக இங்கே பதிவிட்டுள்ளேன். நன்றி விகடன்

Tuesday, May 28, 2013

பண்ணையம் -மே-28-2013

இணைய மொண்ணைகள் :

எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு ஒன்று வாசக வட்டத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். அதற்கான விளக்கத்தையும், சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆமாம் இணையத்தில் பெரும்பான்மையினர் மொண்ணைகள்தான். நுனிப்புல் மேய்தல் கூட்டம்தான் அதிகம், ஒரு எழுத்தாளனின் உண்மையான கருத்தை படித்து அறிவதற்கு கூட ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களை எல்லாம அவர் மொண்ணைகள் என்று சொன்னதில் தவறேதுமில்லை. #iSupportJemo [1] [2]

=======================================
IPL-6 

இறுதி ஆட்டத்தில் சென்னையும் மும்பையும் மோதும், அதில் மும்பை வெற்றி பெரும் என்று நான் கொஞ்சம் நாளுக்கு முன்னமேயே கணித்து ட்விட்டரில் சொல்லியிருந்தேன். அதுபோலவே நடந்தது. விசயம் அதிலில்லை, சச்சின் ஆட்டதின் போது கண்ட பேட்டியும், ஒரு குழந்தையைப் போல் அவர் குதூகலித்தையும் மறக்கவே முடியவில்லை, எத்தனாயிரம் ஆட்டங்கள் பார்த்திருப்பார், ஆனாலும் புதிதாக ஆடவருபவனின் உணர்ச்சியைப்போலவே இருந்த அந்த மனிதனின் குணம்தான் இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

தோனி - கடைசிவரைக்கும் தன்னாலானதை இறுதி ஆட்டத்தில் செய்தார். கடைசி பந்தில் 29 ஓட்டங்கள் தேவை, இது சாத்தியமே இல்லை என்றாலும், பெளலிங்கில் வைட் போட்டது, ஃபீல்டிங்கை மாற்றியது என மும்பை செய்தது எல்லாம் தோனி என்கிற பயமே காரணம். வெற்றியோ தோல்வியோ, விசில் போடுறதை மட்டும் நிறுத்தப் போவதில்லை நாங்கள். மும்பை அணியினருக்கு வாழ்த்துகள் #விசில் போடேய்

=======================================

போன வாரம் ஒரு கடற்கரைக்குப்  போனோம். அப்ப இந்தப் பெயர்ப்பலகை கண்ல பட்டுச்சு. அப்ப சுட்டது இது.
(சுட்டது-Shoot புகைப்படம் சுட்டேன், சரியா வராது இல்லே?)

=======================================

சினிமாப் படமோ, குறும்படமோ : எதை எடுத்தாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் 15 விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். சினிமாப் பிரியர்கள் படிக்க வேண்டிய உபயோகமான 15 குறிப்புகள், http://www.moviemaker.com/articles-directing/danny-boyle-15-golden-rules-filmmaking/


=======================================

ன்னிக்கு காலையில கனவுல வந்தது, தாவரங்கள் இல்லைன்னா உலகம் பொய்த்துப்போகும் அப்படின்னு என்னமோ ஒரு கனவு, அதுல வந்த ஒரு வார்த்தையை படமா போட்டுப் பார்த்தேன். கனவுல கூட நமக்கு உலகத்தைக் காக்கிற சிந்தனைதான் வருதுன்னா பாருங்களேன்.
=======================================

TMS



தமிழ் சினிமாவுலகுக்கு மாபெரும் இழப்பு. இப்ப எல்லாம் சில பாடல்களைக் கேட்டா சில சம்பவங்கள் நினைவுக்கு வரும்,. சில பாடல்களை கேட்டவுடனே உடனடியா, ரொம்ப நாளா கூப்பிடாத கல்லூரி/பள்ளித் தோழனையோ தோழியையோ கூப்பிட்டு அந்தப் பாட்டை கேட்டதையும், அதுக்கு சம்பந்தமான சம்பவத்தை நினைச்சி சிலாகிச்சி பேசிக்குவோம். அப்படித்தான் ஒரு தலைமுறையே இந்த மாதிரி சம்பவங்களுக்கான ஞாபகத்தை வரவழைக்கக் கூடியவர் TMS. எத்தனாயிரம் பாடல்கள் பாவனைகள்? எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் , சிவாஜிக்கு ஒரு மாதிரியும், முடியுமா? ஒரு தலைமுறையையே தன் குரலால அடிமைப் படுத்தி வெச்சிருந்தவரு. இன்னிக்கு காலையில முருகன் பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்தப் பாட்டும் வந்துச்சு. "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" பாட்டை இறைஞ்சி பாடியிருக்காரு. நாமளே முருகன் கிட்டே நேரடியா கேட்கிறமாதிரி நமக்குத் தோணும். உங்களுக்கு ஏது ஐயா சாவு. எங்க மனசுல எப்பவுமே இருப்பே ராசா..

Tuesday, April 30, 2013

கண்ணதாசனும் கொத்தாளத்தேவனும்

உண்மையைச் சொன்னா நாம நம்பிடுவோமுங்களா? கண்டிப்பா இல்லை, யார் நமக்கு நம்பிக்கையா இருக்காங்களோ அவுங்க எதைச் சொல்றாங்களோ அதைத்தான் நம்புவோம். அதுக்கு ரெண்டு உதாரணங்கள் கீழே இருக்குங்க. 
 
 ==00oo00==

 1.  கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

         
கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,

''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''


==00oo00==

2.  விருமாண்டியாய் பசுபதியும், கொத்தாளத்தேவரா கமலும் நடிச்சிருந்தா இவங்கள்ல யார் வெர்ஷனை நம்பியிருப்பீங்க? .(இது ஒரு ட்விட்)

கண்டிப்பா கமல் சொன்னதைத்தானே நம்பியிருப்போம். அப்ப எது உண்மை அப்படிங்கிறதை யார் சொன்னா நம்புவோம்?

இப்ப முதல் வரியைத் திரும்பப் படிச்சிப்பாருங்க. நாஞ்சொன்னது சரிதான்னு உங்களுக்கே தோணும்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)