Monday, August 27, 2007

Work from Home-1


Working From Home- இது ஏதோ மேனேஜர்களுக்கு மட்டும்தான்னு இருந்த காலம் போயி, இப்போ எல்லாரும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதென்ன Work From Home? அலுவலகத்துக்கு போகாம வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதுதான் இந்த முறைக்கு அர்த்தம். இது எந்த அளவுக்கு IT சாராத தொழிலுக்கு பொருந்துங்கிறதுதான் எனக்கு தெரியல. மக்களை சந்தித்தே ஆகனும்னு இருக்கிற தொழிலுக்கு இது பொருந்தாது(உதாரணம்- மருத்துவம்). அதிலும் சில இடத்துல செய்ய முடியும். ஆனா இதை என் அலுவலகத்துல ஒரு விளக்கமா குடுத்தப்போ நிறைய எதிர்ப்புகள் வந்தாலும், பிறகு எல்லா மட்டங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்துறதுதாங்க கொஞ்சம் கஷ்டம். இது அடுத்த தலைமுறைக்கான யோசனையா இருக்கலாம். இதனால கிடைக்கும் பலன்கள் அதிகம். உள் அரசியல் இருக்காது, வேலைக்கு போகும் நேரம் குறையும், தனிப்பட்ட வேலைக்கான நேரம் அதிகமாகும், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் கூடலாம். இதைப்பற்றி நிறைய அலசலாம் வாங்க.

Wiki வழக்கம் போல ஒரு விளக்கம் குடுத்து இருக்காங்க.

A Work-at-Home scheme is a Get-rich-quick scheme in which a victim is lured by an offer to be employed at home, very often doing some simple task in a minimal amount of time with a large amount of income that far exceeds the market rate for the type of work. The true purpose of such an offer is for the perpetrator to extort money from the victim.

Work-at-home schemes have been around for decades. Originally found as ads in newspapers or magazines, they have expanded to more high-tech media, such as television and radio ads, and on the Internet.

Legitimate work-at-home opportunities do exist, and millions of Americans do their jobs in the comfort of their own homes. But anyone seeking such an employment opportunity must be wary of accepting a home employment offer, as only about one in 42 such ads have been determined to be legitimate [1]. Most legitimate jobs at home require some form of post-high-school education, such as a college degree or certificate, or trade school, and some experience in the field in an office or other supervised setting.

(தொடரும்)

Thursday, August 23, 2007

வருகிறேன் நண்பர்களே

ஆங்கில பதிவை எழுதிட்டு ஒரு நாளைக்கு மூணு பேரோ, நாலு பேரோ படிச்சுட்டு இருக்க, பின்னூட்டமே இல்லாம 100 பதிவை முடிச்ச பின்னாடிதான் தமிழ்ல பதிவுகள் இருக்குன்னே தெரிஞ்சது. என்னத்தையோ தேடிட்டு இருக்கும் போது தட்டுப்பட்ட, நான் பார்த்த முதல் தமிழ்ப்பதிவு KVRன் "கொசப்பேட்டை". அப்புறம் கொங்கு ராசா, நாமக்கல் ராசான்னு தொடர்ந்து தமிழ்ப் பதிவுகளின் தொடர்பு கிடைச்சு, மதி தொகுத்த வலைப்பூ கண்ணுல பட்ட போது அப்படி ஒரு சந்தோசம் எனக்கு. அப்புறம் சுரதா அண்ணனின் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm உதவியோட தமிழ்ல வலைப் பதிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் இ.கலப்பை.



இப்போவெல்லாம் என்னோட மெயில் பாக்ஸ் திறக்கிறதுக்கு முன்னாடி நான் பார்க்கிற பேரு முகுந்த். எந்த ஊர்ல இருந்தாலும் ஒரு பதிவர் கூப்பிட்டு நல்லா இருக்கியாப்பான்னு கேக்குற அளவுக்கு நண்பர்கள் கூட்டம். வார கடைசியில மணிக்கணக்கா தொலைபேசி பேச்சு. தமிழ்ப்பதிவு மட்டும் உலகம்னு ஆகிப்போயிருச்சு. இப்படி தமிழ்ப் பதிவுகளின் கவர்ச்சியும், கம்பீரமும் பெருமையும் சொல்ல மாளாது. அப்படி ஒரு வசீகரம் இந்த பதிவுலகத்துக்கு இருக்கிற மாதிரி வேறெதுவுமே இல்லே. தமிழ்மணம் பரப்பிய காசி அண்ணனுக்கு ஒரு பெரிய வணக்கம் சொல்லி நன்றி சொல்லிக்கிறேன். அப்படியே தமிழ்மணத்தை வளர்க்க பாடுபட்ட அந்த 5 /6 மக்களுக்கும்.



தமிழ்மணத்துல இருக்கும் பரணை பார்க்கும்போது, அதுல வரும் சுட்டிகளில் ரொம்ப சொற்பமான மக்களின் பதிவுகளே இப்போ படிக்க முடியுது. பரண் ஏதோ வரலாற்று பகுதி மாதிரி பார்த்துட்டு இருப்பேன். அப்போவெல்லாம் "நாமளும் இப்படி ஒரு நாள் வரலாறு ஆகிடுவோம்"னு தோணும். சிதிலங்கள் சகஜம்தானே. அப்படி ஒரு நாள் நினைச்சுட்டு இருக்கும்போது எல்லாம் கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதை ஞாபகத்துக்கு வரும்


உருமாற்றம்



கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.


சந்தோஷம்: பல நண்பர்கள், பொழுதுபோக்கு, எழுத்து மேல் கொண்ட காதலின் வடிகால்.


சோகம்: அரசியல் மற்றும் நாகரிகமற்ற வார்த்தை ஜாலங்கள், எழுதுவதற்கு சுதந்திரமற்ற சூழல், தனிமனித தாக்குதல்.


போன வருஷம் இதே நாள்ல தேவ் ஒரு விஷயம் சொன்னாரு

//நண்பா வழக்கமாப் போடுற பின்னூட்டத்தை விட இந்த தடவை ஒரு விஷயம் சொல்ல ஆசைப் படுறேன்.. ஆரம்பத்துல்ல உன் எழுத்துக்களில் இருந்த தீவிரம் இப்போது இல்லை எனபது எனக்கு எப்போதும் வருத்தமே.. உன் வரப்பு உன் எழுத்துக்களின் மறுபிறப்பு எனக் கூடச் சொல்லுவேன்.வரப்பினில் நெஞ்சை வருடும் உன் எழுத்துக்கள்.. விவசாயியாக ஒரு காலத்தில் ஆழ உழவும் செயதன.. ஏனோ இப்போது விவசாயியாக உன் எழுத்துக்களில் அந்த சீற்றம் சற்றே குறைந்து விட்டது போல் உன் வாசகனாய் எனக்கு ஒரு குறை...//

உணமைதான் நண்பா, கிராமத்தின் சீற்றம் கொஞ்சம் குறைஞ்சுதான் போயிருச்சு. அதன் முதல் படியாய்தான் பதிவர் வட்டம்/பதிவர்களைப் பற்றி எழுதுவதை குறைத்தேன், இனிமே கிராமம் பக்கம் போலாம்தான். ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு என் கிராமமே மறந்துபோகும் அளவுக்கு தள்ளி வந்துட்டேன். பாழும் இந்த பொழைப்புக்காக என் கனவு எல்லாம் தொலைச்சுட்டேன் நிற்கிறேன் நண்பா. அப்புறம் எப்படிடா கிராமத்தை பத்தி எழுத. ஒரு வருஷமா உன் வார்த்தைகள் செவியில அறஞ்சுகிட்டே இருக்கு"

அட என்னாத்துக்கு இவ்ளோ பெரிய பதிவுன்னு கேக்குறீங்களா?. ஆமாங்க நான் தமிழ்ல பதிவு எழுத வந்து ரெண்டு வருசம் ஆச்சு. அடுத்த வருஷம் இப்படி பதிவு எழுதுவேனோ தெரியல, இருந்தாலும் ஒரு நம்பிக்கைதான்.


அந்த நம்பிக்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு
எழுத
வருகிறேன் நண்பர்களே!

Wednesday, August 8, 2007

அமெரிக்காவும் கொல்டியும்

இந்த மக்களைப் பத்தி நிறைய சொல்லலாங்க. அதுவும் ITல இருக்கிற கொல்டிக்களைப் பத்தி. இவுங்க ITக்கு வந்துட்டா இவுங்க கனவு, வாழ்க்கை எல்லாமே அமெரிக்காதான். வேற எந்த நாட்டுக்கு போனாலும், அமெரிக்கா, பச்சை அட்டை கனவு மட்டும் அவுங்களுக்கு போகவே போகாது. எங்கம்பெனியில இருந்த நண்பன் 3 வருசமா ப்ராக்(Czech Republic) இருந்தாரு. ஆனாலும் அமெரிக்கா போயே ஆகனும்னு சொந்த காசைப் போட்டு அமெரிக்கா போய்ட்டாரு. அது என்னமோ இவுங்களுக்கு மட்டும் எப்படித் தான் விசா கிடைக்குதோ தெரியல. இவுங்களுக்கு இருக்கிற மொழிப்பற்று, சினிமாப் பற்று, மாநிலப்பற்று, கொல்டிங்க பற்று என்னை ரொம்பவே சிலிர்க்க வெச்ச விஷயம்.

இதுல ஒரு Spreadsheet மெயில வந்துச்சு. அமெரிக்க வாழ் கொல்டி மக்களின் வரதட்சணை பட்டியல் அது. கொல்டி மக்கள் அமெரிக்காவுல இருந்த காலத்தைப் பொறுத்தே வரதட்சணை நிர்ணயமாகுதாம். அந்த Spreadsheetல கடைசி வரிதான் அருமை. வயது: 27-32, இருப்பு:பச்சை அட்டை, படிப்பு: இஞ்சினியரிங், வரதட்சணை: Unlimited. அடங்கொக்க மக்கா இது என்ன சரவணபவன் மீல்ஸா?

Grand Canyon போயிருந்த சமயம், அந்த ஊர்ல சின்னதா இருக்கிற பேருந்துல தான் சுத்தி பார்க்க முடியும். அப்படி போய்ட்டு இருக்கும் போது ஓட்டுனர்கிட்டே பேசிட்டே வந்தேன். அப்போ அவர் கேட்ட கேள்வில எனக்கு சிரிப்பு தாங்கவே முடியல. "இந்தியாவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டாங்களா?"ன்னு கேட்டாரு. ஏன்னா? பேருந்துல இருந்த அத்தனை மக்களுமே இந்தியர்கள். ஆனா நமக்குதானே தெரியும், அங்கே இருந்தவங்க யாருன்னு. நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்ம கூட வந்த கூட்டாளி "என்னப்பா சிரிக்கிறே?"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர்கிட்டே"ஆந்திராவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டிங்களா?"ன்னு நான் கேட்டேன், ஏன்னா அவரும் ஒரு கொல்டிதான்.


இனி துணுக்குகள்:

1) "மாப்ளே இந்தியா போறே எங்களை எல்லாம் மறந்துடாதடா? ஹ்ம்ம் ஹ்ம்ம் கிளம்பு"

"Hello Excuse me, could you please....."

"மாப்ளே என்னடா? இப்படி சொன்னா முன்னாடி போவாங்களா? அவுங்களுக்கு புரியற மாதிரி சொல்லு. இப்போ பாரு, ஜருகண்டி, ஜருகண்டி, ஜருகண்டி ஜருகண்டி"

2) அமெரிக்கா போவாம நீ படிச்சு என்ன ஆவப்போவுது, கம்னு விவசாயம் பார்க்க வந்துரு.

3) "ஏழுமலைவாடா வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா" லாஸ் வேகாஸ் ஹோட்டலில் தங்கி இருந்த போது பக்கத்து அறையில் பூசை சத்தம் :). அட அநியாய ஆபிசர்களா, இங்கே வந்துமா?

4) "எத்தனை லட்சம் செலவு பண்ணியாவது அமெரிக்கா போயிடனும். அப்புறம் அதை ரிட்டர்னா கல்யாணத்துல வாங்கிக்கலாம்" ஒரு ரெட்டிகாரு "தம்" பிரேக்ல சொன்னது.

5) அமெரிக்காவுல் இருக்கிற எல்லா Consultantsம் அவுங்கதான்.

6)SAP-ன்னா என்ன அர்த்தம் தெரியுங்களா? Systemanalyse und Programmentwicklung அப்படின்னு சொன்னா அது தப்பாம். State of Andrapradeshதான் சரியாம் அவ்ளோ மக்கள் SAPல வேலை பார்க்கிறாங்க. காரணம்?

7) நம்ம ஊர்ல பெரிய Software, pirated கிடைக்காதுன்னு சொல்ற விசயம் அங்கே 30 ரூபாய்க்கு கிடைக்கும்னு சொல்லி நம்மள கதி கலங்க வெப்பாங்க? எப்படீய்யா?

8) ஆந்திரான்னாவே Consulateல ஒரு முடிவோடதான் இப்பவெல்லாம் application பார்ர்கிறாங்க.

9) அதுசரி, தெலுங்கு மக்களுக்கு கொலுட்டின்னு எப்படி பேர் வந்துச்சு? தெலுகுவை திருப்பிபோடு, கமுத்திப் போடுன்னு கதை விடாதீங்க. உண்மையான காரணம் தெரிஞ்சா சொல்லுங்க.

இது நமக்கு தெரிஞ்ச விசயம்தான், இன்னும் இருந்தா "செப்பண்டி"

Sunday, August 5, 2007

* சில சிதிலங்கள்!


வாழ்க்கையில சில விஷயங்களை நாம மறந்துட்டு போய்ட்டே இருக்கோம்.
மறப்பதுதான் மனிதன் இயல்பு. இன்று நான், நாளே நீ, நாளை மறுநாள் இன்னொரு முகம். ஞாபகம் வெச்சுக்க முடியுங்களா? கண்டிப்பா முடியாது. என்னை ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நானும் ஒரு நாள் சிதிலமடைஞ்சிதானே போறேன். அதுதாங்க வாழ்க்கை.


"என்ன ஆனாலும் பரவாயில்லை, உனக்கு மட்டும் என் பொண்ணைத் தர மாட்டேன். ஒரே ஜாதி, நல்ல வேலை, சரியான அந்தஸ்த்து இருந்துட்டா மட்டும் பொண்ணை குடுத்துரனமா என்னா? பார்ப்போம்".
"சரிங்க, நீங்க ரெண்டு பேரும், இப்படி அடம் புடிக்கிறீங்க. கல்யாணம் பண்ணி வெச்சுடறேன். ரெண்டு பேரும் நல்லா இருந்தாவே எனக்கு போதும். பொண்ண பெத்தவனுக்கு பொண்ணு நல்லா இருந்தா மட்டும் போதும். வேற என்ன வேணும்."
"உனக்கு என்னப்பா பொண்ணும், மாப்பிள்ளையும், பேரனும் உலகமெல்லாம் சுத்துறாங்க. பெரிய இடத்துல கட்டி குடுத்துட்டே, உன் கடமைய சரியா பண்ணிட்டே. யாருக்கு இப்படி வாய்க்கும் சொல்லு. இதுக்கு எல்லாம் குடுத்து வெச்சு இருக்கனும். ஹ்ம்ம்"
"அட, கண்ணு போடாதீங்கய்யா. என் பொண்ணு நல்லா இருக்கனும் இல்லே"


"டேய். பேராண்டி. இப்ப எல்லாம் என்ன பாட்டு. பாகவதர் பாடுவாரு பாரு. அது பாட்டு. இப்ப பாடுறது எல்லாம் பாட்டா?"
"யாரு தாத்தா பாகவதர்?"


"ஹேய், இளா என்னை ஞாபகம் இருக்கா? Botany டா. என்னை கூட நீ கிளின்னு சொல்லி கூப்பிடுவியே!"
"அட ஆமா. மறந்தே போச்சு. ஹிஹி"


"இந்த இடத்துலதான் நாங்க அப்போவெல்லாம் பேசி கூத்தடிப்போம். இப்போ அது இல்லே, வேற ஏதோ கட்டடம் இருக்கு. அப்போ பெரிய படிக்கட்டு இருந்துச்சு, எங்களுக்கு பேச வசதியா இருந்துச்சு""




மேலே இருக்கும் படம் நான் பிறந்த வளர்ந்த வீடு. மேலும் ஒரு சிதிலம்.

Friday, August 3, 2007

* 2:1

முனியப்பன் கோவில் பொங்கலுக்காக சென்னையில இருந்து வந்து சகாக்களை பார்க்க கிளம்பினான்.

"அடிச்சேன்னா பாரு, அதுக்கு அது அர்த்தம் இல்லே. அறிவு இல்லே உனக்கு? சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா? எவ்ளோ நாளா சுத்திட்டு இருக்கேன். என் காதல் தெய்வீகமானது இல்லே. ஆனா நிசம், நல்லா வெச்சு காப்பாத்துவேன்" நெற்றி நரம்பு புடைக்க பேசுவதை கை கட்டியபடி அமைதியாக பார்த்தாள்.

"டேய், வேணாம்டா சொன்னா கேளுங்கடா, இது எல்லாம் தப்புடா, அதுவும் நம்ம ஊர்ல நம்ம சாதி சனத்துக்கு தெரிஞ்சா என் மானம் போயிரும்டா"

"அப்போ என்னை என்ன பண்ண சொல்றே. ஒரு முடிவை சொல்லிட்டு போ. 5 வருஷ நினைப்பு இது. இப்படி பட்டும் படாம போனா எனக்கு கஷ்டமா இருக்காதா?"

"அட போடா, இதெல்லாம் நடக்காமயா இருக்கு. மக்களுக்கு தெரியட்டுமே, நாம என்ன சின்ன குழந்தைகளா சொல்லு? வயாசாகிட்டே போவுதில்லே?"

"சரி, இப்போ என்ன பண்ணனும்னு சொல்லு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. ஆமாவா இல்லியா?"

"இல்லேடா, வேணாம், நமக்கு இது சரிப்பட்டு வராது. விட்டுரு. நான் வீட்டுக்கு போறேன்"

"வீட்டுக்கு போவ விடமாட்டேன். எனக்கு பதில் சொல்லு. தினமும் உசுரு போற மாதிரி இருக்கு. ப்ளீஸ்" கெஞ்ச ஆரம்பித்தான்.

"நீ என்ன சொன்னாலும் விடப்போறதா இல்லே"

"நான் எப்பவாவது உன்னை காதலிக்கலைன்னு சொன்னேனா? நீயா முடிவு பண்ணாத. இது புரிஞ்சிக்கிற விஷயம். உனக்கு புரியுதா? சும்மா சீன் போடாத. உன்னையும் நான் காதலிக்க வேண்டியதா போச்சே கருமம்" அஞ்சு வருஷமாக பின்னாடியே அலைபவனை சந்தோசத்தில் ஆழ்த்திவிட்டு வீட்டுக்கு போனாள் ரதி.

"ஊரு விட்டு ஊர் போய் நல்ல பேர் எடுக்கலாம்னா இவுனுங்க உள் ஊர்லேயே பேரை கெடுத்துருவாங்க போல இருக்கே"ன்னு மனசுல நெனைச்சுகிட்டு சொல்ல சொல்ல தண்ணி அடிக்காமல், இவனுக்காவே காத்திருந்த நண்பர்களை பரிதவிக்கவிட்டு வீட்டுக்கு போனான் இளா.

Thursday, August 2, 2007

* குறுக்கெழுத்துப்போட்டி

குறுக்கெழுத்துப்போட்டி நடத்தனும்னு முடிவு பண்னின பிறகுதான் தெரிஞ்சது, அது கொஞ்சம் கோக்கு மாக்கான வேலைன்னு. போட்டிக்கு முக்கியமா தேவைப்படுறதே Tableதான். அப்புறம் பார்த்தா பிலாகரு Table support பண்ண மாட்டாராம். அப்படியே கோடிங் எழுதி போட்டாலும், திருச்சிக்கும் கோயமுத்தூருக்கும் போவது Table. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேடி ஒரு வழியா ஒரு Work around கண்டுபுடிச்சுப் போட்டாச்சு. கேள்விக்கு தகுந்தபடிதான் கட்டம் போட்டு இருக்கோம், அதிகமான எழுத்தை ஒரு கட்டத்துக்குள்ள அடிக்க முடியாது. முயற்சிப் பண்ணி பாருங்க.

சரி எல்லா விடையும் பின்னூட்டத்துல தெரிவிக்கனும்னு இல்லே. கட்டத்தை எல்லாம் நிரப்பின பிறகு 2 கேள்வி இருக்கு. அதைச் சொன்னாவே போதும். இது என்னோட முதல் முயற்சி பதில் எல்லாம் சுலபம்தான், கேள்விதான் கொஞ்சம் கஷ்டமா வெச்சு இருக்கோம்.


வலமிருந்து இடம்:
1. Time Magazine 1930ம் வருடம் இவரை Man of the Yearஆ அறிவிச்சாங்க. இவரைப் பற்றி ஸ்பெயினில் எடுக்கப்பட்ட விளம்பரம் இன்றும் அந்த நாட்டின் சிறந்த விளம்பரமா கொண்டு இருக்காங்க.
3. இவுங்க அம்மாவை கொன்றவர்களுக்கும், இவரைக் கொன்றவர்களுக்கும் சம்பந்தமில்லை. இவர் மகன் ஆரம்பித்தத் தொழில் கால் சென்டர்.
5.கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு ஊர். தண்ணீருக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
6. SS Music சேனலில் வீடியோ ஜாக்கியாக இருந்தவர், வில்லியாக நடித்த முதல் படம் இது.
7. பாக்யராஜ் நடித்த படத்தின் முதல் பாதி இது. அடுக்குதொடரின் பாதி மட்டும் இங்கே.
8. இது தமிழர்களின் பழமையான, ஆனால் அழிந்து வரும் ஒரு கலை/பொழுதுபோக்கு. திரும்பி உள்ளது.
9.ஜிஸ்ம் என்ற படத்தின் கதாநாயகி.
10. சுரேஸ் கிருஷ்ணா இயக்கிய பெரிய வெற்றிப் படம், நடு எழுத்து மிஸ்ஸிங்.

மேலிருந்து கீழ்:
1. பேபி கல்யாணி ஆட்டம் போட்டு இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸனையே அசற வைத்த அந்தப்பாடலின் முதல் வார்த்தை.
2.SKF 1138 என்ற வாசகம் வந்தத் திரைப்படம்
3.கோவையில் இருக்கும் ஒரு தியேட்டரின் பெயர். சங்கீதத்தோடு சம்பந்தப்பட்டப் பெயர்.
4.Sliding Doors என்ற திரைப்படத்தை தழுவி வந்த தமிழ்ப்படத்தின் இயக்குனர்
6. ஈராக்கின் கரன்ஸி
9. 1967ல் ஊட்டியில் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு இது
10. ஒரு போதை வஸ்து
11. வேற நாட்டுக்கு போவனும்னா இது கண்டிப்பா தேவை.




































1





2


3



4















5














11



6






9



10






7













8







ஆச்சுங்களா?
இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்கனா நீங்க எல்லா கட்டத்தையும் ரொப்பீட்டங்கன்னு அர்த்தம்
பின்னூட்டம் போடுறதுக்கான கேள்விகள் இதோ
1. 1-காண பதிலின் முதல் எழுத்து, 3 மேலிருந்து கீழின் 2 வது எழுத்தும் மூணாவது எழுத்தும் சேர்ந்தால் என்ன வரும்?
2.11 மேலிருந்து கீழின் 2 வது எழுத்தும், 6 மேலிருந்து கீழின் 3 வது எழுத்தும், 9 மேலிருந்து கீழின் 2 வது எழுத்தும் சேர்ந்தால் என்ன வரும்?
இது என்னோட முதல் முயற்சிதான். எங்காவது தப்பு வந்தா சொல்லுங்க மாத்திக்குவோம்...

Wednesday, August 1, 2007

* கபி அல்வித நா கெஹனா

Chatting எதுக்கு பண்றோம்? நட்பு வட்டத்தை பெரிசு பண்ணவும், புதுசா நட்பை ஏற்படுத்திக்கவும், இருக்கிற நட்பு தொடர்கிறதுக்கும், அப்படியே நேரத்தைக் காலி பண்ணவும்தான். ஆனா, சில நேரத்துல சேட்டிங் நட்பு தொடர்வது இல்லேங்கிறது மட்டுமில்லாம நிறைய கஷ்டத்தையும் குடுத்துட்டு போயிருது. நான் சொல்லப்போற விஷயமும் அதுல ஒன்னுதான்.

எனக்கும் இப்படியாப்பட்ட நட்புகள் கிடைச்சு இருக்காங்க. அதுல Professionalஆ உதவி பண்றா மாதிரி நட்பும் உண்டு. ஒரு Techinical Forum வழியா நட்பாகி பிறகு ஊர் பேர் தெரிஞ்சுகிட்டு சந்திச்சுகிட்டு இருக்கோம், இன்னும் Professionala பிரச்சினை வந்தா உடனே chattingla உக்காந்து சந்தேகம் கேட்டுக்குவோம், என் தொழிலுக்கு ஒரு பெரிய கேங்கே இருக்கு. ஆனா அவுங்க தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி இதுவரைக்கும் கேட்டுகிட்டது இல்லீங்க .


Group Chatன்னு ஒன்னு நடக்கும், அதுதான் சூப்பரான மேட்டர். ஒரு குரூப் ரூம் ஆரம்பிச்சு 10 இல்லைன்னா 20 பேர் கும்மி அடிச்சுட்டு இருப்பாங்க. நாம எல்லாரும் சேர்ந்து, ஒன்னா ஒரு இடத்துல உக்காந்து பேசிக்கிற மாதிரியே இருக்கும், அது மாதிரிதான் ஒரு நாள் சென்னைகலக்கல்ஸ்'ங்கிற பேர்ல ஒரு Group Chat நடந்துகிட்டு இருந்துச்சு. அன்னிக்கு தலைப்பு பெண்ணீயம். இதைப்பத்தி மக்கள் கும்மி அடிச்சுட்டு இருக்கும் போது ஒரு PM(Personal Message) வந்துச்சு "இதைப் பத்தி பேசாதீங்க இளா, அவுங்க பேசிட்டு போகட்டும்"னு ஒரு அன்பு கட்டளை வந்துச்சு. அப்புறமா எங்கேயாவது குரூப் சேட்ல பார்த்த PM பண்ணி பேச ஆரம்பிச்சோம். அப்படியே சாப்பிடீங்களா, காபி குடிச்சீங்களான்னு பேச ஆரம்பிச்சு நட்பான அந்தப் பொண்ணு பேரு "ஜானகி" (அவுங்க பேர மாத்தி வெச்சு இருக்கேன்).



ப்படியே நாளடவில கொஞ்சம் கொஞ்சமா நட்பு
 நெருக்கம் ஆகி பொது விஷயங்களை விட்டு தனிப்பட்ட விஷயங்கள பேச ஆரம்பிச்சோம். அப்போ, ஜானகி yahoo, hotmail Chat Messengerல, Status மெஸேஜ் "Kabhi Alvida Naa Kehna" போட்டு வெச்சு இருப்பாங்க, அப்போ அதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியல. நட்பு & ஆண், பெண் என்கிற வட்டத்த விட்டு வராத நட்புன்னு ஆகிப்போச்சு. Chatன்னு இருந்த நட்பு நாளடைவில போனுக்கு மாற ஆரம்பிச்சது.

அவுங்க கூட போன்ல பேச ஆரம்பிச்சது 2003 ல இருக்கலாம் ஞாபகம் இல்லே. வாரத்துல 10-20 நிமிசம் பேசிக்குவோம், அந்த வாரம் என்ன நடந்துச்சுன்னும், கஷ்டங்களையும் சோகத்தையும், ஃபோனேல பேச ஆரம்பிச்சோம். என் பொறந்த நாளுக்கு நடுராத்திரியில வாழ்த்து சொல்ல கூப்பிட்டு எங்கம்மாகிட்ட திட்டு வாங்கி பின்னாடி சமாதானமாகி எங்க வீட்டுக்கு நல்லா தெரிஞ்ச, ஒரு நல்ல ஸ்னேகிதியா ஆனாங்க.

அவுங்களுக்கு கல்யாணம் நிச்சயமானப்போ நான் நொய்டாவுல இருந்தேன். நண்பர்களுக்கு எல்லாம் விருந்து குடுத்து சந்தோசப் பட்டேன். அவுங்க கல்யாணத் தேதி சொன்ன போதுதான் எனக்கும் இன்னும் கலக்கமாகிருச்சு. என்னோட கல்யாணத்துக்கு அடுத்த வாரம் அவுங்க கல்யாணத் தேதி குறிச்சு இருந்தாங்க. சரி, ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு தெரிஞ்சு போயிருச்சு, கல்யாணத்துலயாவது நேர்ல பார்த்துக்கலாம்னு இருந்தோம். ஆமாங்க நாங்க சந்திச்சுகிட்டதே இல்லே. அப்புறமா சென்னைதானே வரப்போறாங்க அப்போ குடும்ப சகிதமா பார்த்துக்குவோம்னு ரெண்டு பேருமே பேசி முடிவெடுத்து விட்டுட்டோம். கல்யாண வேலையில் நானும் பிஸியா இருந்தேன். ஃபோனோ, மெயிலோ கூட இல்லாம் 3 மாசம் ஓடிப்போயிருச்சு.


ஜானகியோட அவுங்க சென்னை நம்பர் வாங்கலாம்னு அவுங்க வீட்டுக்கு கூப்பிட்ட போது எடுத்தது அவுங்க அண்ணன் "ஜானகி, அவளோட சென்னை நம்பரை உன்கிட்ட தரவேணாம்னு சொல்றாடா, உங்களுக்குள்ள என்னடா பிரச்சினைன்னு?"ன்னு அவுங்க அண்ணன் கேட்டபோதுதான் ஏதோ பிரச்சினைன்னு தோணிச்சு . அவுங்க அண்ணன்கிட்ட அதுக்கு மேல பேச ஒன்னுமில்லைன்னு முடிவு பண்ணிட்டு, எப்படியும் ஒரு நாள் கூப்பிடதான் போறா அன்னிக்கு கேட்டுக்கலாம்னு நினைச்சுகிட்டேன். ஆனா ஜானகி என்னைக் கூப்பிடவும் இல்லே, மெயிலும் போடலை. வயித்து பொழப்புக்காக வேற நாட்டுக்கு நானும் போயிட்டேன்.


கிட்டதட்ட ஜானகியோட நட்பு முடிஞ்சுருச்சு அப்படின்னு முடிவு பண்ணி, அவுங்களைப் பத்தி சுத்தமா மறக்குற நேரத்துல தான் ஜானகிக்கிட்ட இருந்து சின்னதா ஒரு மெயில் வந்துச்சு. "இளா, நான் இப்போ 3 மாசம் முழுகாம இருக்கேன், வீட்ல சொல்லிடு, நல்லா இருக்கேன்" அவ்ளோதான். எனக்கு ஒரு சந்தோசம் மெயில் பார்க்கற வசதி வந்துருச்சு போலன்னு நெனச்சுகிட்டு "நல்லா இரு, ஒடம்ப பத்திரமா பார்த்துக்கோ" ன்னு ஒரு ரிப்ளை போட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சு ஒரு பெரிய மெயில் வந்துச்சு. அதுல ஜானகியோட வீட்டுக்காரர் ரொம்ப "பொஸசிவ்", வேற ஆம்பிளைங்கிட்டே பேசினா ஒரு மாதிரியா பேசறாரு, அதுக்காகதான் உன் கூட chat/mail எல்லாம் பண்ணாம இருக்கேன்" னு காரணம் சொல்லி குறைப்பட்டாலும் அவுங்க வீட்டுக்காரரை விட்டுக்குடுக்காம எழுதி இருந்தாங்க. மெயில் படிச்சதும் முடிச்சதும், ஜானகி அவுங்க அம்மா வீடல இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு. உடனே அவுங்க அம்மா வீட்டுக்கு போனடிச்சேன் எடுத்தது ஜானகிதான். நான் "ஹலோ" ன்னு சொல்றதுக்கு முன்னாடி ஜானகி "டேய் இளா, நல்லா இருக்குயா?"ன்னு ஆரம்பிக்க எனக்கு வாயடைச்சு போயிருச்சு. எனக்கு என்ன சொல்லன்னே தெரியல. வழக்கம் போல பேசுறா மாதிரி நலம் விசாரிச்சுட்டு எனக்கு வேலை இருக்குனு சொல்லி disconnect பண்ணிட்டேன்.

அவுங்களுக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் அப்பப்போ மெயில்லையோ போன்லையோ பேசிகிட்டு இருந்தோம். இதுல என்ன கொடுமைன்னா ஒரு நாள் போன்ல பேசிகிட்டு இருக்கும் போது பேச்சுக்கு நடுவுல "குழந்தை பொறந்ததுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் அவர் கிட்டே அறிமுகப்படுத்தி வெக்கிறேன். அப்புறமா நாம பேசிகிட்டா அவர் சந்தேகப்ப்ட மாட்டார் இல்லே, இளா" ன்னு ஜானகி கேட்கும்போதுதான் ஏதோ மண்டையில உறைச்சது. "நாம என்ன தப்பா பண்றோம்"னு கேட்கலாம்னு தோணிச்சு. ஆனா ஒன்னும் பேசாம இருந்துட்டேன்.

நம்மளால எதுக்கு அந்த பொண்ணுக்கு கஷ்டம்னு நான் அவுங்ககிட்டே பேசுறதை குறைச்சுட்டேன். கிட்டதட்ட அவுங்க போன் பண்ணினாலோ மெயில் வந்தாலோ சரியா பதில் சொல்லாம பட்டும் படாம பேச ஆரம்பிச்சேன். ஜானகி அமெரிக்கா போகும்போது ஒரு மெயில் போட்டுட்டுதான் போனாங்க, அதுக்கு கூட நான் பதில் அனுப்பல. இப்போ அமெரிக்காவுலதான் இருக்கேன்.


பின்னாடி ஒரு நாள், மனசு கேட்காம  நம்பர் கேட்டு ஒரு மெயில் போட்டேன், அதுக்கு ஒரு பதில் வந்துச்சு "இனிமே நாம பேசிக்க வேணாம், கூப்பிடவும் செய்யாதே" அப்படின்னு . அதுக்கு நான் பதில் எதுவும் போடவும் இல்லை.

 "கபி அல்வித னா கெஹனா" ங்கிறது கிஷோர்குமார் பாடின சல்தே சல்தேனக்ன்கிற பாட்டுல வர வரிதான். நேத்து ராத்திரி அந்த பாட்டும் கேட்கும் போதுதான் அதுக்கு அர்த்தம் புரிஞ்சது. இனிமே இந்தப்பாட்டை கேட்கவே கூடாதுன்னு நினைச்சுகிட்டு, பாட்டை நிப்பாடிட்டு தூங்க முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஆனா தூங்கறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு .

Tuesday, July 31, 2007

* சக்தி டிரான்ஸ்போர்ட்-2

Click here to Read [Part-1]
"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து
"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.

ராஜியோ "இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.

அவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா
"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமா?அவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா? அறிவு இல்லே உனக்கு? அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க? போயி அவளை சமாதானப்படுத்து".

ஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் பண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.

அடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா "ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.

வெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.

அடுத்த வாரம் திங்கட் கிழமை

பவானி, 6:35Am, பேருந்து நிலையம்.
சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.


ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு

"டேய், என்னடா என் மேல கோவமா? ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.

இதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் "அப்போ ராஜி சொன்னது பொய்தானே?"

"ஆமாண்டா" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.

ரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.

"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி?"

"சொல்லுடா"

"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

அதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு

"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்"னு சொல்லிட்டு

"என்ன ரதி சொன்னே?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

"எவன் அப்படி சொன்னான்?"

"நீதான்"

"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.

ரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா

"இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"

--முற்றும்--

* சக்தி டிரான்ஸ்போர்ட்-1

பவானி, 6:38Am, பேருந்து நிலையம்.

சக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம்
(திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).

ஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்னொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.


ஆவலோட எட்டி பார்த்தா ரதி.



"என்ன இவனை இன்னும் காணோம்? எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்".

டென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறதும், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.



சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு


"உனக்கு என்னடி ராசாத்தி ? எம்புட்டு அழகா இருக்கே.." அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.

ரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.

"டேய் என்னடா சொல்றே? எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.

"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு "ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல "ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ? ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே".

ஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.


காலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் வாங்கிட்டு வந்த அயூப் "மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா? எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும்.? நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு? அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா? ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா "

"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்காலம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே?"

"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா ", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.

"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா? உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு "சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் " சொன்னான் ஜெய்.

ஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொல்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு "ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்?"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .

அடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் "டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க? ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா"

"என்னது போயிடாவா? நீ வரலையா?"

"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.

ஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.



"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண? அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல?. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா?"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே சொல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .



தூரத்துல ராஜியும், ரதியும் வர, "மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா " ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.


பில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ராஜிக்கு "ஹாய் " சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.

(தொடரும்....) Part- 2 படிக்க

Monday, July 30, 2007

* குழப்பலாம் வாங்க

இது ஒரு சின்ன குழந்தைங்க விளையாட்டு. குயிஜூ வெச்சு இருக்காங்க, 3D வெச்சு இருக்காங்க. ஆனா இது மாதிரி ஏதாவது போட்டி வெச்சு இருக்காங்களான்னு தெரியல. கீழே இருக்கிற கட்டத்தை க்ளிக் பண்ணி படத்தை ஒழுங்கு பண்ணி யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?





* காதல்னா கெட்ட வார்த்தை

 "தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு
"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"


"அய்யோ அம்மா, இந்த மாதிரி கதை எல்லாம் எத்தனை நாள்தான் சொல்லுவே? கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சும்மா. வேற ஏதாவது சொல்லேன்மா"


"இல்ல கண்ணா, இது நவீன பாண்டவர்கள் கதைடா, கேக்குறியா?"

"ஓ, அப்படியா? வில்லு, அம்பு எல்லாம் வெச்சு இருக்க மாட்டாங்களா?"

"இல்லேடா, சொல்றேன் கேளு. புடிச்சதுன்னா சொலறேன்."

"ம்ம்ம்ம்"

"அந்த பாண்டவர்கள் அஞ்சு பேரும் கோயமுத்தூர் கங்கா, காவேரி காம்ப்ளக்ஸ்ல, செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு வெளியே வராங்க. மேல சொல்லட்டுமா?"

"ம்ம் சரி, சொல்லுமா. என்ன படம்?"

"கோகுலத்தில் சீதைன்னு ஒரு படம். நிறைய படம் பார்த்து இருந்தாலும் இவுங்க அஞ்சு பேரையும் இந்த படம் பலமா பாதிச்சுருச்சு. நம்ம ஹீரோ, சரவணன், சுரேஷ், தினேஷ், ஜெகா அஞ்சு பேரும் காலேஜ் முடிச்சுட்டு அவுங்களுக்கு தகுந்த மாதிரி, வேலை கிடைக்காததால கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறாங்க. வீட்டுல இருக்கிற பெரியவங்களும் இவுங்களை நம்பி யாரையும் திட்டாம பணம் அனுப்பிட்டே இருக்காங்க, அதனால இவுங்களும் கவலை இல்லாம ஊரைச் சுத்திட்டு இருக்காங்க. என்ன சூர்யா கதை கேக்குறியா? மேல சொல்லட்டுமா?"

"கேக்குறேன்மா"

இனிமே கதை.

"தம் குட்றா, படம் என்னை ரொம்ப பேஜாராக்கிருச்சு" சரவணன்"இருடா சாப்பிட்டு அடிப்போம், செகண்ட் ஷோ வந்தா சோறு வேற கிடைக்காது. கடைய சாத்திட்டு போயிருவாங்க. ராஜா கடைய சாத்தியிருப்பானா"? சுரேஸ் கேட்டான்."ஒரு கட்டிங் குடுத்தா போதும்டா, கொத்து போட்டு குடுப்பான்.விடு, அதை நான் பார்த்துகிறேன், டேய் தினேஷா என்னடா மேட்டரு? இப்படி ஏண்டா இருக்கிற? ஏண்டா எல்லாரும் இப்படி இருக்கீங்க?, என்னை மாதிரியே உங்களுக்கு ஃபீலிங் ஆகிப்போச்சா? " இது நம்ம ஹீரோ."மாப்ளே, நாம அஞ்சு பேருமே நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு ஊர் சுத்திட்டு இருக்கோம்டா. லவ்டுடே பார்த்தோம் இல்லே. அந்த படத்தையும் இந்த படத்தையும் மிக்ஸ் பண்ணி பாருடா. புரியும். நாம ஏதோ தப்பு பண்றோம்னு தோணுது" சொன்னது ஜெகா.

"ஆமாண்டா, இனிமே சினிமா கிடையாது, லஷ்மி காம்ப்லெக்ஸ், சேரன் டவர்ஸ், கிராஸ் கட் ரோடு போயி சைட் அடிக்க கூடாது. அந்தமாதிரி வேஸ்ட் பண்ற நேரத்துல படிக்கனும். சீக்கிரமே முன்னேறனும்டா. நாம பாதி நேரம் ஊரையே சுத்திட்டு இருக்கோம்" இது தினேஷ்.
"இனிமே இந்த மாதிரி ஊர் சுத்துறது எல்லாம் வேணாம். கோர்ஸ் நான் டிஸ்கண்டினியூ பண்றேன். எனக்கு இது ஏறல. அவனவனுக்கு என்ன திறமை இருக்கோ அதை வெச்சு முன்னேறலாம். அஞ்சு வருஷம் தான், .. இதே கங்கா காம்ப்லெக்ஸ், இதே நேரம். இந்தா போறாங்களே, இதை விட பெரிய காருல வரனும். ..த்தா நாம் யாருன்னு இந்த உலகத்துக்கு காட்டனும்" சுரேஸ் உச்சதாயில சொடக்கு
போட்டு சொல்ல,நம்ம ஹீரோ "கரெக்டுடா சுரேசு. ஜெகா, நீ கோடீஸ்வரன், இனிமே எங்க கூட தங்காதே. உங்கப்பா பார்க்குற தொழிலைப்பாரு. 190 ஏக்கர் காடு வேற இருக்கு, நீ இனிமே அதைப்பாரு. தினேஷா நீ எலக்ட்ரானிக்ஸ்ல பிஸ்து, அதுல வேலை தேடு. நானும் சரவணனும் ஆப்டெக் கோர்ஸ் முடிச்சுட்டு வேலை தேடப் போறோம். சுரேஸ், உங்கப்பா ஏற்கனவே அரசியல்ல பெரிய ஆளு அதை வெச்சு முன்னேற பாரு. நாம இனிமே நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாம்"தம் பத்த வெச்சுகிட்டே சரவணன் "ஆமா, இனிமே நம்ம வாழ்க்கையில ஃபிகருங்களே கிடையாது. இந்த படத்துல சொல்றா மாதிரி லவ் இனிமே நமக்கு கெட்ட வார்த்தை. எந்தப் பொண்ணையும் இனிமே பார்க்கக்கூடாது. டோட்டல் வேஸ்ட்"

"வாழ்க்கையில பெரிய ஆளா வரனும்டா. பொண்ணுங்க, லவ் எல்லாம் மாயை. நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம். அதனால நம்ம வாழ்க்கையில இனிமே காதல் அப்படிங்கிறது கெட்ட வார்த்தை, இதை ஒத்துகிட்டவங்க சத்தியம் பண்ணுங்கடா"ன்னு கைய நீட்ட, உடம்புல புது ரத்தம் பாய்ஞ்சா மாதிரி எல்லாரும் ஹீரோ கையில சத்தியம் பண்ணினாங்க.


இப்படி சொல்லிட்டு, சூர்யா தூங்கிட்டானான்னு அம்மா பார்க்க, அவன் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருந்தான்.

"என்னம்மா அவ்ளோதானா கதை?"

"இல்லேடா, தூங்கிட்டியான்னு பார்த்தேன்.மீதிக்கதை சொல்றேன் கேளு. சரவணன் இப்போ சென்னையில இருக்காரு, பெரிய ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றாரு. மூனு பொட்டப்புள்ளைங்க. சுரேசும், ஜெகாவும் அவுங்க அவுங்க அப்பா செல்வாக்குல செட்டில் ஆகிட்டாங்க. தினேஸ் வெளிநாடு போய்ட்டு நல்லா சம்பாரிச்சுட்டு இந்தியா வந்தாச்சு. அடுத்த மாசம் அவுங்களுக்கு குட்டி பாப்பா பொறக்கப் போவுது"

"அப்போ நம்ம ஹீரோ என்ன ஆனாரு?"

"அதோ அங்கே உக்காந்து, நட்சத்திர வாரத்துக்கு பதிவு போட்டுக்கிட்டு இருக்காரே, அவர்தான்"

"ஐய், நம்ம ஃபார்மர் அப்பாவா? சத்தியம் பண்ணினமாதிரியே பாண்டவர்கள் இருக்காங்களாம்மா?"

"இல்லேடா கண்ணா, அஞ்சு பேருமே பண்ணிகிட்டது லவ் மேரேஜ்"

"என்னது லவ் மேரேஜா? அப்போ அவுங்க பாஷையில சொன்னா, கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம்மா?"

"எகத்தாள ரத்தம்தானே உன் உடம்புலேயும் ஓடுது. இந்தக் கேள்விய உங்கப்பாக்கிட்டேயே போய் கேட்டுக்க"ன்னு சொல்லி, மடியில இருந்து இறக்கி விட

குதிச்சு அப்பாகிட்ட போயி "அப்பா நீ கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டீங்களாமே? உண்மையாப்பா? அம்மா சொன்னாங்க என் உடம்புல ஓடுறது எகத்தாள ரத்தமாமே, உங்க ஒடம்புல என்னப்பா ஓடுது?"ன்னு கேட்க.

லேப்டாப்பை மூடி வெச்சுட்டு, சூர்வை தூக்கி முத்தம் குடுத்துட்டு சிரிச்சபடியே சொன்னேன் "சேம் பிளட்டுடா கண்ணா".

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)