கணவன் - கணிணியில் வேலையாய் இருக்க, சமயலறையில் மகள், மனைவியிடையே ஏதோ வாக்குவாதம்.
கணவன்: என்ன இங்க சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்?
மனைவி : அதான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தோம்ல. அதான்.
கணவன்: ஏதோ புஸ்தகம்னு காதுல விழுந்துச்சு, அதுக்கும் மேல ஒன்னும் கேட்கலயே
மனைவி : இவ்ளோ நேரம் அதைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தோம். இப்ப வந்து என்னான்னு கேட்டா?
கணவன்: கவனிக்கலைம்மா.
மனைவி : அதான, நாங்க பேசும் போது நீங்க எங்கே கவனிச்சிருக்கீங்க?
கணவன்: வேற வேலையா இருந்தேன்மா. அதான் கவனிக்கலை
மனைவி : நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு வேற வேலை வந்திரும்ல?
கணவன்: சரி, விடு நான் கேட்கலை.
மனைவி : அதான? வீட்டு மேல அக்கறை இருந்தா என்ன பேசியிருப்போம்னு கேட்டிருப்பீங்கள்ல?
கணவன்: அக்கறை இல்லாமத்தான் கேட்க வந்திருப்பேனா?
மனைவி : அக்கறை இருந்திருந்தா முதல்லயே வந்திருக்கமாட்டீங்களா? அதான் இல்லைன்னு தெரியுமே.
கணவன்: ஷ்ஷ்ஷ், நான் கேட்டதுதான் குத்தமா?
மனைவி : ஓ, அப்ப நான் சண்டை போட்டதுதான் குத்தமா?
கணவன்: என்னான்னு தெரியாம நான் எப்படி குத்தம்னு சொல்லுவேன்.
மனைவி : எனக்கு வேறை வேலையில்லாம நாந்தான் உங்க ரெண்டு பேர் மேலையும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்கேனா?
கணவன்: சரி, விடு, எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ....
[மறுபடியும் சிகப்பிலிருக்கும் வரியில இருந்து படிக்கவும்..]