Tuesday, January 3, 2012

டீக்கடை பெஞ்சு - 01-03-2012

கேபிளாரின் கொத்துப்பரோட்டா, ஜாக்கியின் சாண்ட்விச் மாதிரி நானும் ஆரம்பிச்சதுதான் மகசூல, இனிமே அது டீ கடை பெஞ்சு அப்படிங்கிற பேர்ல வரும்
(ஆமா, அப்படியே வந்துட்டாலும்...)
=====!00oo00!=====



பெரும்பாலும் அரட்டைக் கச்சேரியாகவே மாறிவிட்ட ட்விட்டரில் ஒரு நாள் நடந்த கவிதை/பொருள் விளக்கக்கூட்டம் இது:

* Gokul R (@rgokul) Like பாரதி, our kavinjar has put together சு ரு தி and all? Amazing I say

*கார்க்கி (@iamkarki) i can decode it and find some music notes. Poet indirectly explained how this poem has to be sung.

* Gokul R (@rgokul) Kavinjar definitely has fully thought through a lot of stuff before coming up with this.

* கார்க்கி (@iamkarki) இடைவெளியின்றி ஓடும் வாழ்க்கையை குறிக்க நோ ஸ்பேஸ்> கவனித்தீர்களா?

* Parisalkaaran (@iParisal) நடுவில் சில எழுத்துகள் மட்டும் கேபிடல் லெட்டரில் எழுதிருக்கார் கவிஞர். ச்சான்ஸே இல்லை!

* Gokul R (@rgokul) Yup. And, there is some postmodernism also coming out of it. Excellent, I say.

* Parisalkaaran (@iParisal) Hazare பிரச்னை முடிஞ்சதுங்கறத H-க்கு அடுத்து கடைசி எழுத்தான Zஐப் போட்டு கவிஞர் சொல்லிருக்கார் கவனிச்சீங்களா?

* Gokul R (@rgokul) It is still not a Haiku; am a big fan of that format

* isr_selva (@isr_selva) இந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா Hzkgjchx இந்த வார்த்தை பிரமாதம்.

இப்படியெல்லாம் பேசிக்கிட்டாங்களே, அது எந்தக் கவிதைக்கு தெரியுங்களா? லங்காஸ்ரீ விசயத்துக்கு கீழே இருக்கும் பாருங்க

=====!00oo00!=====


Twitter துணுக்குகள்:

தனக்கான மனைவியை, பஸ் ஸ்டாண்டுல தேடினது போய் கூகுள், facebook, twitterன்னு தேடறளவுக்கு மாறியிருச்சு சமுதாயம்.

In a Meeting, a Girl said " I am more bitchy than usual" . எங்க ஊர்ல இப்படி சொன்னா என்னா ஆவும் தெரியுமா?

=====!00oo00!=====

சில நேரத்துல சில வானொலிகளில பாட்டுக்கேட்க போறதும் உண்டுங்க. லங்காஸ்ரீல எனக்குப் பிடிச்ச RJ ஆகாஷ் நடத்துற நிகழ்ச்சி evening Drive.

அப்படி ஒரு நாள் பாட்டு கேட்க போன போது கேள்வி கேட்டாரு. அதுக்கான பதிலையும் கீழே குடுத்திருக்கேன்.




ஆகாஷ்: நிலவுக்கு போற மாதிரி இருந்தா யாரைக்கூட்டிட்டுப் போவீங்க.

நான்: தாத்தாவை.

ஆகாஷ்:  ஏன்?

நான்: ஏன்னா என் தாத்தாவுக்கு பாட்டி மேல ரொம்ப பிரியம் பாட்டி இறந்த பிறகு தாத்தா மனசு ஒடிஞ்சு போயிட்டாரு, அவர் நாள் முழுக்க அழுதிட்டே இருக்காரு.

ஆகாஷ்:  அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்

நான்:  நிலாவுக்கு கூட்டிட்டுப்போனா தாத்தா  சரியாகிடுவாரு.. ஏன்னா பாட்டி அங்கேதான் வடை சுட்டுகிட்டு இருக்காங்க.

=====!00oo00!=====



அப்படியெல்லாம் பேசிக்கிட்டாங்களே, அது இந்தக் கவிதைக்குத்தாங்க.

(@vivaji) Ifslstksyksykzlyxj icicl lvkchmtkxmgkcjzmbhNfJXMYDPHPVXKPUDOludluduldulxluckvlcjckyskyskzirMhcsnrZlhzmfMgjz JC Hzkgjchx Zmjghxmgxxhhj


=====!00oo00!=====


படித்ததில் பிடித்தது:

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தி இந்திய உயிர்களைக் குடித்த ஜெனரல் டையர், இதுபோன்ற இறுமாப்புடன்தான் இருந்தான். சட்டம் அவனுக்கு எந்த தண்டனையும் தரவில்லை. 'பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காக சிறிதளவும் வருந்தவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் செய்ததை, வாய்ப்பு கிடைத்தால் ஆப்பிரிக்காவில் அரங்கேற்றவும் தயார்’ என்று மேடைகளில் பேசிவந்தான். 20 வருடங்கள் காத்திருந்து, 1940-ம் ஆண்டு இங்கிலாந்துக்குள் நுழைந்து, காத்திருந்து அவனை சுட்டுக் கொன்றார் இந்திய தீரர் உத்தம்சிங். தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. அது யார் மூலம், எப்படி என்பதுதான் காலம் வைத்திருக்கும் கணக்கு!


=====!00oo00!=====


Tea Kadai Bench:


நமது பாரம்பரியத்தில் பொரணி பேசறதுக்கும், வெட்டி அரட்டை அடிக்கிறதுக்கும் இருந்த வசதியில திண்ணையை முற்றிலுமாக ஒழிச்சிட்டோம். பின்னே? அப்பார்ட்மெண்ட்ல  திண்ணைய  வெச்சி கட்ட முடியுங்களா? இன்னொனும் அதுல அழிஞ்சிட்டு வருது தெரியுங்களா? அதாங்க டீ கடை பெஞ்சு. அதனை மீட்டெடுக்க ஒரு போராட்டம் நடத்த இருக்கிறேன். கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கண்டிப்பா பதிவர்களான சிலர் கூட சேர்ந்து அதனை மீட்டெடுப்பாங்க.

=====!00oo00!=====


18+

கணவன் இல்லாத நேரமாப் பார்த்து, மனைவி கள்ளக்காதலனோட ஜல்சா பண்ணிட்டு இருந்தாள்.  அந்த நேரத்துல கணவன் வர்ற சத்தம் கேட்டவுடனே, கள்ளக்காதலன், பரண் மேல போய் ஒளிந்துகொண்டான்.  அங்கே அவளோட 9 வயது மகனும் ஒளிஞ்சிட்டு இருந்தான். இந்த நேரம் பார்த்து அந்தப் பொடியன்,

"இங்கே ரொம்ப இருட்டா இருக்கில்லை அங்கிள்?"

"ஆமாம்"

காத்தோட்டமே இல்லையில்லை?"

"ஆமாம்"

"அங்கிள்,ஆனா என்கிட்ட ஒரு கிரிக்கெட் பேட் இருக்கு. அதை வாங்கிக்குங்க, 5000 ரூபாய்தான்"

க.காதலனுக்கோ செம கோவம்.

"டேய், இதுக்கா 5000 ரூபாய், தரமுடியாது. எனக்கு இது தேவையுமில்லை"

அதுக்குப் பொடியன் "வாங்கலைன்னா விடுங்க அங்கிள்,  அப்பாகிட்ட போய் நீங்க இந்தப் பேட்டை வாங்கிக்கலைன்னு சொல்லிடறேன்"னு சொன்னான்.

கள்ளக்காதலனும் வேற வழியில்லாம 5000 ரூபாய் குடுத்து வாங்கிக்கிட்டான்.

இன்னொரு நாள். அதே மாதிரி, கணவன் வர, கள்ளக்காதலன் பரண் மேல ஏறிக்க, பொடியன் அங்கே இருக்க..

"இங்கே ரொம்ப இருட்டா இருக்கில்லை அங்கிள்?"


"ஆமாம்"

"காத்தோட்டமே இல்லையில்லை?"

"ஆமாம்"

"அங்கிள், ஆனா என்கிட்ட ஒரு கிரிக்கெட் பால் இருக்கு. அதை வாங்கிக்குங்க, 2000 ரூபாய்தான்"
 
இந்த முறை கள்ளக்காதலன் பேசாம காசைக்குடுத்து பந்தையும் வாங்கிட்டு போயிட்டார்.
 
ஒரு நாள், பொடியனோட அப்பா பொடியன் கிட்ட "பேட்டையும், பாலையும் எடுத்துட்டு வாடா கிரிக்கெட் விளையாடலாம்"னு கூப்பிட, பொடியன் "அப்பா, அதை ரெண்டையும் 7000 ரூபாய்கு வித்திட்டேன்" என்று சொன்னான்.  
 
அப்பாவுக்கோ செம கோவம் "பாவிப்பயலே, 500க்குக்கூட போவாத பேட்டையும் பாலையும் அநியாய விலைக்கு வித்திட்டேயாடா. வா மாதாகோவிலுக்குப் போலாம். அநியாய விலைக்கு வித்ததை பாவ மன்னிப்பு கேட்டு பாவத்தைக் கழிச்சுக்கோ"
 
மாதாகோவிலில், பாவ மன்னிப்புக் கூண்டுக்குள்ள போன பொடியன் சொன்னான்
 
இங்கே ரொம்ப இருட்டா இருக்கில்லை?"
 
பாதிரியார் சொன்னார், "டேய், மறுபடியும் ஆரம்பிக்காதே, என்கிட்ட சல்லிக்காசு கூட இல்லை"

10 comments:

  1. Utham Singh did not kill General Dyer. He died of stroke and paralysis. Utham Singh shot Odwyer who was the Governor of Punjab Province when this massacre happened. He was accused of backing General Dyer.

    Nevertheless, Utham Singh was and is a real hero.

    ReplyDelete
  2. Thanks for writing about Shaheed-i-Azam Udham Singh. Read about him again in Wikipedia.

    Seemachu

    ReplyDelete
  3. SathyaPriyan, Seemachu- I have a point in it. Will reveal tomorrow

    ReplyDelete
  4. ஆஹா அருமையா @#$%^&*தை தல
    18+ நல்லாருக்கு :-)))

    ReplyDelete
  5. Sathyapriyan said exactly what I wasabout to correct this blog regarding general Dyer.. hats off to Sathyapriyan for correctin the wrong mesage given by this blogger

    ReplyDelete
  6. Sultan- ஏற்கனவே சீமாச்சு, மற்றும், சத்யப்ரியனிடம் சொல்லியிருந்த மாதிரி, இது ஒரு பிரபல வார இதழில் வந்த செய்தி. அதுவும் தெளிவாகவே சொன்னேன் இது படித்தது என. அங்கே தவறை சுட்டிக் காட்ட முடியாத போது இங்கே இப்படி உள்குத்து வெச்சிக்கிறோம். உள்குத்து என்பதெல்லாம் பதிவுலகத்துல மறந்துட்டோமா?

    ReplyDelete
  7. //wrong mesage given by this blogger//
    எங்கே படிச்சேன்னு கேட்கமாட்டீங்க? தலையை விட்டு வால் புடிக்கிறது தமிழனின் பிறவிக்குணமாச்சே

    ReplyDelete
  8. பாதிரியார்,ஒரு மாதிரியாராயிருப்பார் போலிருக்கே

    ReplyDelete
  9. இளா,

    இதையே சரக்கு கடை பென்ச் என வைத்திருந்தால் நாந்தேன் முதப்போணி! சாயாக்கடை பென்ச்சில இருந்து புரொமோஷன் ஆகி ரொம்ப காலம் ஆச்சு!

    ஆனாலும் அந்த கால சாயாக்கடை பெஞ்ச், அப்புறமா பிளாஸ்டிகஸ்டூல் போட்டாங்க, அதில டாப் அடிச்சு ஒரு டீ வாங்கிட்டு ஒரு நாளிக்கு அடிச்ச கதை எல்லாம் சீக்கிரம் விட்டுப்போய்டுமா?

    நமக்கும் ஒரு இடம் விட்டு வைங்க வந்து டீ குடிச்சு தீயைப்பத்த வைப்போம்(தம்க்கு சொன்னேன்)

    //கேபிளாரின் கொத்துப்பரோட்டா, ஜாக்கியின் சாண்ட்விச் மாதிரி நானும் ஆரம்பிச்சதுதான் மகசூல, இனிமே அது டீ கடை பெஞ்சு அப்படிங்கிற பேர்ல வரும்
    (ஆமா, அப்படியே வந்துட்டாலும்...)//

    நாம எல்லாம் முன்னோடிங்க தல, ஆனா என்ன பிரச்சினைனா ஸ்டார்ட்டிங்க் சரியா இருக்கும் அப்புறம் , வாரா வாரம் டைம்க்கு கடைய தொறக்காம போய்டுவோம்.!(ஹி...ஹி நானும் வந்தப்போ இப்படித்தான் கதம்பமா போட்டேன்)

    ////wrong mesage given by this blogger//
    எங்கே படிச்சேன்னு கேட்கமாட்டீங்க? தலையை விட்டு வால் புடிக்கிறது தமிழனின் பிறவிக்குணமாச்சே//

    ஹி..ஹி உங்க கிட்டேவாது வால் பிடிச்சாங்க என்கிட்டே வவ்வால் பிடிக்க வராங்க :-))

    அது எஸ்ரா ஜூ.வீ தொடரா, அதை நான்ப்படிப்பதில்லை, அவரேப்போட்ட பழய மொக்கை அது!(அவர் தான் சமீபத்தில வரலாறு எழுதுகிறார் அதான் கேட்டேன்)


    பதிவைப்படிக்கும் போதே ஏன் இந்த குறுக்கு சால்னு நினைச்சுக்கிட்டே படிச்சேன், பின்னூட்டத்தில தெரிஞ்சுப்போச்சு!

    ReplyDelete
  10. //ஏன் இந்த குறுக்கு சால்னு நினைச்சுக்கிட்டே படிச்சேன், பின்னூட்டத்தில தெரிஞ்சுப்போச்சு!//
    இந்த மாதிரி உள்குத்துகளை புரிஞ்சிக்க புதிய பதிவர்களுக்கு தெரியறதில்லையோ? இல்லை நமக்குத்தான் சரியா விளக்கத் தெரியலையோன்னு தெரியலை. ஆனா இதுக்கும் மத சாயம் பூசலையே அதுவே சந்தோசம்தாங்க

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)