நான் ஆங்கில பதிவுதாங்க மொதல்ல எழுதினேன். அப்போ இருந்த ஒரு கூட்டம் (CAT prep) பண்ணிட்டு இருந்தோம். IIMல சேரனும்னு வெறி. அப்போ தான் பதிவுகள் எங்களுக்கு பழக்கம் ஆச்சு(2003 கடைசியில). எங்களுக்கு நாங்களே படிச்சுக்குவோம். பின்னூட்டம் எல்லாம் அப்போ கிடையாது. HaloScan வந்தப்புறம் பின்னூட்டம் போட வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும் எங்களுக்கு சரியான பதிவர் வட்டம் இல்லே. CATக்கு படிச்சுட்டு இருந்த ஒரு 100 பேரு படிப்போம். அப்புறம் தமிழ்மணம் பார்த்து தமிழ் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் எவனும் படிக்கிறது இல்லே அப்புறம் எதுக்குன்னு ஆங்கிலத்துல எழுதறத விட்டுட்டேன்.
இந்த வருசம் வரைக்கு ஆங்கில பதிவை சீண்டல. இந்த வருசம் ஆகஸ்டு மாசம், சும்மாத்தானே ஆன்சைட்ல இருக்கோம், blogdesam த்தை வாங்கலாமே வாங்கி, தமிழ்மணம் மாதிரியே ஆங்கில பதிவுகளுக்கும் ஒரு இடம் குடுப்போம்னு, காசி அண்ணாக்கு ஒரு மடல் தட்டினேன். அண்ணன் சொன்னாரு "இல்லே இளா, TMIக்கு தமிழ்மணத்தை குடுக்கும் போதே குடுத்துட்டேன், வாக்கு தவற கூடாதுல்ல" அப்படின்னாரு. அண்ணனையும் அவுங்ககிட்ட கேட்டுச் சொல்லுங்கன்னு கேட்டு வற்புறுத்தவும் மனசு இடம் குடுக்கலை. சரி, தமிழ்மணத்தை கேட்கலாம்னா யாருன்னே தெரியல. சரி நாமே ஒன்னு பண்ணிரலாம்னு முடிவு செஞ்சு, ஒத்த ஆளா போராடினேன். இதுல இன்னொரு காமெடி என்னான்னா? System Adminஆ இருக்கிற நான எப்படி ஒரு website பண்ணப்போறேன்னு ஆரம்பிச்சது. சரி படிப்போம்னு, அங்கங்கே இருக்கிற உதவி பக்கத்தையெல்லாம் தேடிப்பிடிச்சு படிச்சு, அங்கங்கே இருக்கிற தானியங்கி இற்றைப்படுத்திற கருவியெல்லாம் ஒன்னு சேத்தி, ஒரு முழு வடிவமா கொண்டு வர 2 மாசம் ஆகிருச்சு. அப்படியே ஓட்ட ஆரம்பிச்சேன்.(Mid of October). அதுபாட்டுக்கு ஓடிட்டு இருந்துச்சு. நவம்பர் கடைசி வரைக்கும் யாருக்கிட்டேயுமே ஒன்னும் சொல்லலை. மக்களா வந்தாங்க, சேர்ந்தாங்க, படிச்சாங்க. அவ்ளோதான். பெரிய எதிர்ப்பார்ப்பும் அதுல எனக்கே அங்கே இல்லே. எங்க மக்களுக்காக ஆரம்பிச்சத்துதானே, விட்டுட்டேன். அப்புறம் தமிழில் இருக்கும் கதை கவிதைகளை ஒரு இடத்துல கொண்டு வரனும் உருவாக்கினதுதான் இப்போ இருக்கிற சங்கமம் பதிவு.
உமர் தம்பி போன்றவங்களுக்கு தமிழ்ப் பதிவுலகத்துல ஒரு இடம் இருக்கு, அதை அங்கீகாரம் பண்ணித் தரணும் அப்படிங்கிறதுதான் என் அடிமனசுல இருந்த எண்ணம். உமர் தம்பி உட்பட 3 பேருக்கு பதிவர்கள் சார்பா பட்டமும், பதிவர்களுக்கு விருதும் தராலாமேனு யோசிச்சேன். ஒரு பதிவரா இதைச் செய்யுறதுல ஏதும் தப்பில்லைன்னு நான் நினனச்சேன். இதையே மையமா வெச்சு NRIக்கள் எல்லாம் சேர்த்து ஒரு துறையில நலிந்த கலைஞருக்கு பொருளுதவி பண்ணலாம்னும் ஒரு யோசனை. அப்போதான் தஞ்சாவூரான் இந்த விஷயத்துக்காக என்னை ஊக்குவிச்சாரு. பதிவர் விருதுக்காக முதல்ல கட்டமா நடுவர் குழுவை சேர்க்க ஆரம்பிச்சேன். இது என்னளவிலும், பிறகு நடுவர் குழுக்களாலேயே மொத்த குழுவாவும் உருவாச்சு. இது நவம்பர் மாசம் கடைசியில நடந்தது. இதுவரைக்கும் தனியாளா இருந்த நான் நடுவர் குழு வந்ததுக்கப்புறம் ஒரு குழுவா ஆகிட்டேன். சரி விருது நடத்த இடம்?
இருக்கவே இருக்கு Blogkut, விருதுக்காக ஒரு இடம் போடுவோம்னு ஒரு தனி Sub-D0main தயார் பண்ணினேன். சில சட்டம் திட்டம் எல்லாம் நடுவர் குழுவுல இருந்து பேசி முடிவுக்கு வந்தோம். ஒத்த வரியில விருதுக்கான முதல்ல அறிவிப்பும் செஞ்சேன். இந்த விருது சச்சரவு வர வரைக்கும் பேரெல்லாம் வெக்கலை. அடுத்த 12 மணிநேரத்துல தமிழ்மணத்துல இருந்து தமிழ்மணம் விருதுகள்னு அறிவிப்பு. சரி, ஆட்டத்தை கலைச்சரலாம்னா நடுவர்குழுவுக்கு என்ன பதில் சொல்றது. சரி நடக்கிறது நடக்கட்டும்னு விட்டுட்டேன். அந்தச் சமயத்துல ஒரு லோகோவோ, ஒரு பேரோ கூட சங்கமத்துக்கு இல்லே.
பேரில்லாத அந்த So called திரட்டி அப்போ ரெண்டே ரெண்டு பதிவைத்தான் திரட்டிக்கிட்டு இருந்துச்சு. இன்னும் பின்னூட்டம் திரட்டல்ல அந்த ரெண்டு பதிவுதான் இருக்கு. அடுத்த நாள் மக்களே அந்தப் பதிவை வெச்சே திரட்டிக்கு பின்னூட்டமாவும், பதிவாவும் பேர் வெக்க வேற வழியில்லாம சங்கமம்னே Logo போட்டுவிட்டு விதிமுறைகளை வெளியிட்டேன். அங்கே ஆரம்பிச்சதுய்யா ஆட்டம். இருவருமே விருதுகள் அறிவித்து ஏன் பதிவர்களை குழப்பனும்னு தமிழ்மணத்துக்கு ஒரு மடலையும் போட்டுட்டு சூடாகிற பதிவை எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டேன். தமிழ்ல அசைக்க முடியாத இடத்துல இருக்கிற தமிழ்மணத்து மேலையும், காசி அண்ணா மேலையும் எனக்கு மதிப்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு.
அவ்ளோதாங்க நடந்த விஷயம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதிட்டேன். மீதி எல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே.
Thursday, December 20, 2007
Tuesday, December 18, 2007
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று...
'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...'
& பிரமிளின் புகழ்பெற்ற இந்தக் கவிதையை வெளியிட்டது 'அஃக்' இதழ். எட்டு ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.
அதை நடத்திய பரந்த்தாமன் அச்சுக்கும் பதிப்புக்குமாகச் சேர்த்து மூன்று முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில் ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.
''இலக்கியம், சினிமா, ஃபுட்பால்... இதெல்லாம்-தான் இந்தப் பரந்த்தாமன். இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள் தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,
சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச் சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப் படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர் ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தேன்.
அப்போ சேலத்தில் 'இம்பீரியல்'னு ஒரு தியேட்டர் இருந்தது. மரக்கடை கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின், ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர் பத்திரிகையில் 'ரே'யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க. நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும், கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்'' என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து பேசுகிறார் பரந்த்தாமன்.
''நான் பிறந்த ஆறு மாசத்திலேயே அப்பா இறந்துட்டார். அம்மாதான் என்னை வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால் ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும் பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது. ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்; கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன். அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ, பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத் துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம் நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!'' என்கிறார் பரந்த்தாமன்.
''ஒரு நாள், சேலத்துக்கு கு.அழகிரிசாமி வந்தி-ருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். 'என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?'னு கேட்டார். 'ஒண்ணுகூடப் படிச்சதில்லை'னு சொன்னேன். சிரிச்சுட்டு, 'நீ இப்படித் தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு வர்றியா?'னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை, சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, 'என் கூட வா! உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்' என்றார். பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.
அம்மாவிடமும் நண்பர்களிடமும் பணம் வாங்கி 'அஃக்' பத்திரிகை துவங்கினேன். எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன் எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள் எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான் முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள். எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.
காசு? மறுபடியும் அம்மா-தான்! தன் ஒரே மகனுக்கென்று அம்மா கஷ்டப்பட்டு ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து 'பிருந்தாவனம்' பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன். அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள் அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள் மடிந்துவிட்டது.
வண்ணதாசனின் 'கலைக்க-முடியாத ஒப்பனைகள்' என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும் பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும் என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில் எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.
அம்மா எனக்காக வைத்திருந்தது இரண்டே இரண்டு சொத்துக்கள். ஒன்று, வீடு; மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத் தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள் மட்டும்-தான்'' என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.
பரந்த்தாமனுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் சரியான வேலை இல்லை, குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.
அன்று நண்பனிடமிருந்து பெற்ற ஃபிலிம்-ஃபேர் பத்திரிகை அட்டைப் பட சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள் இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.
நன்றி-விகடன்
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...'
& பிரமிளின் புகழ்பெற்ற இந்தக் கவிதையை வெளியிட்டது 'அஃக்' இதழ். எட்டு ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.
அதை நடத்திய பரந்த்தாமன் அச்சுக்கும் பதிப்புக்குமாகச் சேர்த்து மூன்று முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில் ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.
''இலக்கியம், சினிமா, ஃபுட்பால்... இதெல்லாம்-தான் இந்தப் பரந்த்தாமன். இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள் தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,
சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச் சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப் படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர் ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தேன்.
அப்போ சேலத்தில் 'இம்பீரியல்'னு ஒரு தியேட்டர் இருந்தது. மரக்கடை கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின், ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர் பத்திரிகையில் 'ரே'யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க. நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும், கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்'' என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து பேசுகிறார் பரந்த்தாமன்.
''நான் பிறந்த ஆறு மாசத்திலேயே அப்பா இறந்துட்டார். அம்மாதான் என்னை வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால் ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும் பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது. ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்; கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன். அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ, பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத் துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம் நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!'' என்கிறார் பரந்த்தாமன்.
''ஒரு நாள், சேலத்துக்கு கு.அழகிரிசாமி வந்தி-ருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். 'என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?'னு கேட்டார். 'ஒண்ணுகூடப் படிச்சதில்லை'னு சொன்னேன். சிரிச்சுட்டு, 'நீ இப்படித் தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு வர்றியா?'னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை, சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, 'என் கூட வா! உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்' என்றார். பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.
அம்மாவிடமும் நண்பர்களிடமும் பணம் வாங்கி 'அஃக்' பத்திரிகை துவங்கினேன். எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன் எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள் எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான் முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள். எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.
காசு? மறுபடியும் அம்மா-தான்! தன் ஒரே மகனுக்கென்று அம்மா கஷ்டப்பட்டு ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து 'பிருந்தாவனம்' பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன். அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள் அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள் மடிந்துவிட்டது.
வண்ணதாசனின் 'கலைக்க-முடியாத ஒப்பனைகள்' என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும் பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும் என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில் எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.
அம்மா எனக்காக வைத்திருந்தது இரண்டே இரண்டு சொத்துக்கள். ஒன்று, வீடு; மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத் தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள் மட்டும்-தான்'' என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.
பரந்த்தாமனுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் சரியான வேலை இல்லை, குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.
அன்று நண்பனிடமிருந்து பெற்ற ஃபிலிம்-ஃபேர் பத்திரிகை அட்டைப் பட சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள் இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.
நன்றி-விகடன்
Monday, December 17, 2007
வெலை போவுது எங்கூரு
எங்க ஊர் பேரு கொழிஞ்சிக்காட்டூருங்க. அந்த ஊர்ல ஒரு 500 ஏக்கராவுக்கு மேட்டாங்காடும், கொஞ்சம் வயலும் இருக்கு. வானம் பார்த்த ஊரு எங்களுது. ஒரு 500 குடும்பங்க இருக்காங்க. இது பாதி, இந்த தலைமுறை யாருமே உள்ளூருல இல்லை(என்னையும் இதுல சேர்த்துக்கிடுங்களேன்). எல்லாரும் படிச்சு வேலைக்கு போயிட்டாங்க. கூலி வேலை செஞ்சவங்களும் ஏதோ ஒரு தொழிலோ, இல்லே குத்தகைக்கோ, இல்லீன்னா மில்லுக்கோ வேலைக்கு போயிட்டு இருக்காங்க. எங்க தாத்தா 20 வருஷத்துக்கு முன்னாடி மாஞ்செடி வாங்கி எங்க தோட்டத்துல நட்டு வெச்சாரு. அவருக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு, எங்கயைனோ நானோ வெவாசாயம் பார்க்க போறதில்லைன்னு.
ஞாயித்துக்கிழமை நானோ, எங்கையனோ கோழி திங்கவாவது ஊருக்கு போயிட்டு இருந்தோம். அதனால எங்களுக்கு தேவையான நெல்லு வெளைய வெச்சுக்குவோம். எந்த தாத்தா ஆணடவன் கிட்டே போனப்புறம் தோட்டத்தை குத்தகைக்கு விட்டு நெல்லு வாங்கிகிட்டோம். அதாவது எப்படியோ வெவசாயம் நடந்துச்சு.
ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு 4 சுமோவுல ஆளுங்க
வந்தாங்களாம். எல்லாரும் கரை வேட்டி வேற கட்டி இருந்தாங்களாம். நேரா ஊர்கவுண்டர் வூட்டுக்கு போன காரு கொஞ்சம் நேரம் கழிச்சு போயிருச்சு. அப்புறம்தான் எங்க ஊர்ல ஒரு திருப்பமே உண்டாகியிருக்கு. எங்கய்யனும் வாரம் ஒரு முறைதான் ஊருக்கு போறதால விஷயம் எங்க காதுக்கு ரொம்ப தாமசமாத்தான் எட்டியிருக்கு. அதாவது எங்க ஊரை யாரோ(?!) வெலை பேசிட்டு இருக்காங்களாம். அப்படி ஓ.பி அடிச்சு பன்னீரா குடிச்சு செல்வத்த சேர்த்தவருக்கு எங்க ஊர்மேல என்ன மோகமோ தெரியல? கருப்ப வெள்ளயாக்கிறதுன்னு பேசிக்கிறாங்க. பக்கத்து ஊருல இருந்த 600 ஏக்கராவையும் அவுங்க(?) வாங்கிட்டாங்களாம். எங்க ஊரையும் வாங்கிடலாம்னு வெலை பேச ஆரம்பிச்சுட்டாங்க.
தடமில்லாத 3 ஏக்கரை நாங்களும் விக்க வேண்டியதா போயிருச்சு. பங்காளிங்களுக்குள்ள தடம் எல்லாம் தேவை இல்லாம இருந்துச்சு. அந்த 3 ஏக்கராவ போவ மீதிய விக்க முடியாது கண்டீசனா சொல்லீட்டாரு எங்கய்யன். இன்னும் கொஞ்ச நாள்ல எங்க வீட்ட சுத்தி இருக்கிற பங்காளிங்க எல்லாம் சங்ககிரிக்கு போயிருவாங்க. அவுங்க எல்லாருக்கு ஒன்னு ரெண்டு லாரி இருக்கு. வாடகை வீடு பார்த்துகிறதா சொல்லிட்டாங்க. எங்க தாத்தா ஆசை ஆசையா எங்க ஊரு முழுக்க வண்டிகட்டியே மாஞ்செடி வாங்கி வந்து குடுத்தாரு. வாங்கியார போயி வர ஒரு வாரம் ஆவும். அப்படி கஷ்டப்பட்டு வளர்த்த மாஞ்செடிங்க எல்லாம் என்ன ஆவுமோ தெரியல. ஊர காப்பாத்துற முனியப்பனும், கருப்பனும் எல்லையில சும்மா உக்காத்து இருக்க காசுக்கு ஆசைப்பட்டு சனம் எல்லாம் ஊரை வீட்டு அடுத்த மாசம் போவப்போவுது. என்னத்த சொல்ல?
ஞாயித்துக்கிழமை நானோ, எங்கையனோ கோழி திங்கவாவது ஊருக்கு போயிட்டு இருந்தோம். அதனால எங்களுக்கு தேவையான நெல்லு வெளைய வெச்சுக்குவோம். எந்த தாத்தா ஆணடவன் கிட்டே போனப்புறம் தோட்டத்தை குத்தகைக்கு விட்டு நெல்லு வாங்கிகிட்டோம். அதாவது எப்படியோ வெவசாயம் நடந்துச்சு.
ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு 4 சுமோவுல ஆளுங்க
வந்தாங்களாம். எல்லாரும் கரை வேட்டி வேற கட்டி இருந்தாங்களாம். நேரா ஊர்கவுண்டர் வூட்டுக்கு போன காரு கொஞ்சம் நேரம் கழிச்சு போயிருச்சு. அப்புறம்தான் எங்க ஊர்ல ஒரு திருப்பமே உண்டாகியிருக்கு. எங்கய்யனும் வாரம் ஒரு முறைதான் ஊருக்கு போறதால விஷயம் எங்க காதுக்கு ரொம்ப தாமசமாத்தான் எட்டியிருக்கு. அதாவது எங்க ஊரை யாரோ(?!) வெலை பேசிட்டு இருக்காங்களாம். அப்படி ஓ.பி அடிச்சு பன்னீரா குடிச்சு செல்வத்த சேர்த்தவருக்கு எங்க ஊர்மேல என்ன மோகமோ தெரியல? கருப்ப வெள்ளயாக்கிறதுன்னு பேசிக்கிறாங்க. பக்கத்து ஊருல இருந்த 600 ஏக்கராவையும் அவுங்க(?) வாங்கிட்டாங்களாம். எங்க ஊரையும் வாங்கிடலாம்னு வெலை பேச ஆரம்பிச்சுட்டாங்க.தடமில்லாத 3 ஏக்கரை நாங்களும் விக்க வேண்டியதா போயிருச்சு. பங்காளிங்களுக்குள்ள தடம் எல்லாம் தேவை இல்லாம இருந்துச்சு. அந்த 3 ஏக்கராவ போவ மீதிய விக்க முடியாது கண்டீசனா சொல்லீட்டாரு எங்கய்யன். இன்னும் கொஞ்ச நாள்ல எங்க வீட்ட சுத்தி இருக்கிற பங்காளிங்க எல்லாம் சங்ககிரிக்கு போயிருவாங்க. அவுங்க எல்லாருக்கு ஒன்னு ரெண்டு லாரி இருக்கு. வாடகை வீடு பார்த்துகிறதா சொல்லிட்டாங்க. எங்க தாத்தா ஆசை ஆசையா எங்க ஊரு முழுக்க வண்டிகட்டியே மாஞ்செடி வாங்கி வந்து குடுத்தாரு. வாங்கியார போயி வர ஒரு வாரம் ஆவும். அப்படி கஷ்டப்பட்டு வளர்த்த மாஞ்செடிங்க எல்லாம் என்ன ஆவுமோ தெரியல. ஊர காப்பாத்துற முனியப்பனும், கருப்பனும் எல்லையில சும்மா உக்காத்து இருக்க காசுக்கு ஆசைப்பட்டு சனம் எல்லாம் ஊரை வீட்டு அடுத்த மாசம் போவப்போவுது. என்னத்த சொல்ல?
Thursday, November 29, 2007
Gmail Launched - Group Chat
Gmail ன் இல்லாத ஒரு வசதி குழு அரட்டை. யாஹூவில் இருந்த இந்த வசதி இல்லாததால் Gmailக்கு மாற விரும்பாதவர்கள் ஏராளம். குழு அரட்டையயும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது Google. இந்த வசதி Webchat அதாவது Gmail பார்க்கும் வசதியுடன் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் Gtalkல் வரவில்லை.
வேறு தில்லாலங்கடி முறையில் குரூப் சேட் நடத்தி இருக்கலாம். இப்போ நேரடியாவே குடுத்துட்டாங்க.

எப்படி குரூப்பா சேட்டுறது?
1. முதல்ல Gmail Login பண்ணுங்க.
2. Chat login ஆகலைன்னா login பண்ணுங்க. For more info
3. Chat login பண்ணி இருக்கிறவங்க யாராவது click பண்ணுங்க.
4. அப்புறம் மேலே படத்துல இருக்கிறா மாதிரி Options Click பண்ணுங்க.
5. இப்போ சோத்தாங்கை படத்துல இருக்கிற மாதிரி mail ID தட்டுங்க. Yahoo மாதிரி Drag and Drop /Click வசதி இன்னும் வரலை.
6. அட்ரஸ் பொஸ்தகத்துல இருக்கிற ID எல்லாம் வரும், தேவையானவங்களை கூப்பிடுங்க. அவ்ளோதான்.
7. You have invited ****to this chat. This is now a group chat. Add another person. அப்படின்னு வரும். Add a person to Chatன்னு இன்னொரு link வரும். அதையும் click பண்ணி ஆளை சேர்த்துகிட்டே போங்க.
Yahoo வின் குரூப் சேட், வீடியோ சேட் எல்லாம் வந்துட்டா Googleம் நிலைநாட்டிடலாம். மேலும் விவரத்திற்கு
அதனால வாங்க மக்களே குரூப்பா சேர்ந்து கும்மியடிக்கலாம்.
வேறு தில்லாலங்கடி முறையில் குரூப் சேட் நடத்தி இருக்கலாம். இப்போ நேரடியாவே குடுத்துட்டாங்க.
எப்படி குரூப்பா சேட்டுறது?
1. முதல்ல Gmail Login பண்ணுங்க.
2. Chat login ஆகலைன்னா login பண்ணுங்க. For more info
3. Chat login பண்ணி இருக்கிறவங்க யாராவது click பண்ணுங்க.
4. அப்புறம் மேலே படத்துல இருக்கிறா மாதிரி Options Click பண்ணுங்க.
5. இப்போ சோத்தாங்கை படத்துல இருக்கிற மாதிரி mail ID தட்டுங்க. Yahoo மாதிரி Drag and Drop /Click வசதி இன்னும் வரலை.
6. அட்ரஸ் பொஸ்தகத்துல இருக்கிற ID எல்லாம் வரும், தேவையானவங்களை கூப்பிடுங்க. அவ்ளோதான்.
7. You have invited ****to this chat. This is now a group chat. Add another person. அப்படின்னு வரும். Add a person to Chatன்னு இன்னொரு link வரும். அதையும் click பண்ணி ஆளை சேர்த்துகிட்டே போங்க.
Yahoo வின் குரூப் சேட், வீடியோ சேட் எல்லாம் வந்துட்டா Googleம் நிலைநாட்டிடலாம். மேலும் விவரத்திற்கு
அதனால வாங்க மக்களே குரூப்பா சேர்ந்து கும்மியடிக்கலாம்.
Wednesday, November 14, 2007
Tuesday, October 16, 2007
கற்றது கணக்கு- Bsc(Maths)
"அப்பா, எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்தான்பா படிக்கனும். அதுதான்பா என்னோட விருப்பமே. வாசவியோ, ஈரோடு ஆர்ட்ஸோ சேர்த்து விட்டுருங்கப்பா."
"ராஜா. கணக்கு படிச்சா உடனடியா அரசு வேலை கிடைக்கும். UPSC, TNPSC எல்லாம் எழுத வசதியா இருக்கும். நான் சொல்றேன் நீ, கோயமுத்தூர்ல தான் படிக்கிறே, அதுவும் ஹாஸ்டல்லதான் BSC Maths படிக்கப்போறே. சொல்லிட்டேன். வேற எதுவும் பேச வேண்டாம்"
அப்பா பேச்சு தட்ட முடியாமல் கோவையில் உள்ள பிரபல கலைக் கல்லூரியில் கணக்கு படிக்க ஆரம்பிச்சான் ராஜா. படிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், அவனுக்கு விருப்பமான விஷயங்களில் கவனத்தைத் திருப்பினான். வேலையத்த வேளையில செய்யுற ஓவியமும், ஷட்டில் பேட்மிண்டனும் அவனுக்கு விருப்பமா இருந்து இருக்கு. அந்தக் கல்லூரியில் இரண்டுக்கும் சொற்பமான மக்களே இருந்தார்கள், இதையெல்லாம் பண்ணினா சோத்துக்கு என்ன பண்றதுன்னு எவனும் சீண்டாத ஏரியா இது. அப்படியே ஓவிய கமிட்டி சேர்மன், பேட்மிண்டனுல பல்கலைகழக்த்துல ஒரு நல்ல இடமுன்னு வாங்கி காலேஜுக்கு போவாம ஓபி அடிச்சுகிட்டே இருந்துட்டான்.
இப்படியே 2 வருஷத்தையும் ஓட்டிட்டான். அதே சமயம் ஏனோ தானோன்னு 40% வாங்கி எல்லா பாடத்திலேயும் பாஸும் ஆகிட்டானுங்க ராஜா. ஆனா இந்தச் சனி இருக்கு பாருங்க, அது மனுசன் கழுத்துல கட்டி நுனிக்கயித்த கையில வெச்சுக்கும், "மவனே ஓடுடா. கடேசியா உனக்கு வெக்கிறேன்"னு வெக்கும் ஆப்பு.
அப்படித்தான் இவனுக்கு கடேசி வருஷம் 5th Sem, 6th Sem எல்லாத்துலேயும் கப்பு. வேற வழியே இல்லே. ஊருக்கு டிகிரி வாங்காம வந்தா மானம் போயிருமேன்னு "என்ன கருமத்தையோ படி, ஊரு பக்கம் மட்டும் டிகிரி வாங்காம வந்துராத"ன்னு இருக்கிற நகையெல்லாத்தையும் அடமானம் வெச்சு 20ஆயிரத்தை ராஜா கையில குடுத்துட்டாங்க.
என்ன பண்ணுவாங்க அவுங்க மட்டும். இவனும் ஏதாவது டிகிரி வாங்கி குரூப் பரீட்சை எழுதி முன்னேறிடுவான்னு கற்பனை அவுங்களுக்கு. "ஆசை இருக்காம் தாசில்தார் ஆவ, யோகம் இருக்காம் கழுதை மேய்க்க".
ராஜாவோட கூட்டாளி ஒன்னு சொன்னான் "மாப்ளே! ஒரு கோர்ஸ் இருக்காடா. இண்டெர்நெட்ல பரீட்சையாம். உடனே ரிசல்டாம். பாஸானா உடனே வேலையாம்டா. "
"என்னடா ஒளற்ர, எப்படிடா உடனே திருத்தி குடுப்பாங்க?"
"இல்லே மாப்ளே. வெட்டியாத்தானே இருக்கோம். வா, ஆப்டெக் வரைக்கும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்"னான்.
காந்திபுரம் பேர்ந்து நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கிற RRT(RajaRajeshwari Towers) ல 5 வது மாடியில இருக்கு ஆப்டெக். செமத்தியான ஃபிகருங்க,. ஜொள்ளிக்கிட்டே கவுன்சலரை பார்க்க போனான் ராஜா. கோர்ஸ் என்னான்னே தெரியாம "Internet Exam, result "ன்னு உளற ஆரம்பிச்சான். இவன் என்ன சொல்ல வரான்னு அவங்களுக்கு சுத்தமா புரியலே. அந்த கவுன்சலரு நல்ல ஃபிகரு. இவன் சொல்றதை எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு ஒரு Broucherஐ எடுத்து முன்னாடி வெச்சு ஆரம்பிச்சது, அதனோட உளர்றலை. இப்போ இவனுக்கு ஒன்னும் புரியல. அப்படியே அவனை கூட்டிக்கிட்டு போயி லேப், கிளாஸ் ரூம் எல்லாம் காட்டுச்சு. அடடா, அடடா, எத்தனை பொண்ணுங்க, எப்படி பசங்களோட சோடி போட்டு படிக்குதுங்க., நேர்த்தியா டிரஸு, ரூமு, பிகரு, "ராஜா, கலக்குறே"ன்னு மனசுக்குள்ள 100 வயலினை வாசிச்சுகிட்டே சொல்லிட்டு போனாங்க தேவதைங்க.
ஆனாலும் "Internet Exam, result " அப்படியெல்லாம் இந்த ஃபிகரு சொல்லவே இல்லியே, மறுபடியும் இவன் உளரலை ஆரம்பிச்சான். அப்போதான் அந்த ஃபிகருக்கு புரியவே ஆரம்பிச்சது. "இவனுக்கு Softwareக்கும், Hardwareக்குமே வித்தியாசம் தெரியல. எவனோ சொன்னான்னு நம்ம தாலிய அறுக்கிறான்" அப்படின்னு மனசுக்குள்ள நினனச்சிக்கிட்டு. "ஓஹ், நீங்க எதிர்த்தா மாதிரி இருக்கிற கவுன்சிலர்கிட்டே பேசியிருக்கனும் ராஜா. வாங்க அந்த டிபார்ண்மெண்ட்க்கு கூட்டிட்டு போறேன்னு எதிர்த்தா மாதிரி இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே "தூ, இதெல்லாம் ஒரு இடமா? எங்கே பார்த்தாலும் ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டருங்க. ஒரு பொட்டிக்கும் டப்பா இல்லே. எல்லாம் தொறந்தே கிடக்கு. அதுக்கு மேல ஒரு ஃபிகர் கூட இல்லே. அட ஃபிகர் இல்லாட்டி விடுங்கப்பா. ஒரு பொண்ணுங்க கூட இல்லே" என்ன தலை விதிடா. சரி, இங்கே படிக்க அங்கே சைட் அடிக்கன்னு ஆரம்பிச்சான் அந்த கோர்ஸை.
3 மாசம் முடிஞ்சவுடனே placement. சம்பளம் அதிகமில்லை ஆனாலும் நாய் பொழப்பா இருந்துச்சு. ஆனாலும் ஒரு சந்தோசம், ஒரு software மக்களுக்கு வேலை கிடைக்கிலே. இவனுக்கு சோத்துக்கு பஞ்சமில்லாம ஆச்சு. அடிச்சு புடிச்சு 8 வருஷத்துல டாக்டர் படிப்பை விட பெருசா டிகிரி முடிச்சான். அப்படியே படிப்படியா Network Engineer, System Admin அப்படின்னு graphல ஒரே ஏறுமுகம்தான். Bsc Maths படிச்சுட்டு Engineerன்னு விஸிட்டிங்க கார்டு வாங்கின ஒரே ஆள் இந்த ராஜா. அவுங்க அம்மாவுக்கு பெரிய சந்தோசம் வேற. பின்னே மவன் கணக்கு படிச்சாலும் ஒரு பெரிய இஞ்சினியர் ஆகிட்டான்ல.
Sep-11 கூட இவன் வேலைக்கு ஒரு தொந்தரவும் பண்ணல. பிறகாலத்தில் பெரிய புராஜக்ட் மேனஜரா ஆவனும்னு பிலாகுல பதிவு எல்லாம் போடுறான்னா பார்த்துக்குங்களேன். அதானால Bsc Maths படிச்சா இஞ்சினியர் ஆவலாம். அதுவும் கம்பியூட்டர் இஞ்சினியரு.
"ராஜா. கணக்கு படிச்சா உடனடியா அரசு வேலை கிடைக்கும். UPSC, TNPSC எல்லாம் எழுத வசதியா இருக்கும். நான் சொல்றேன் நீ, கோயமுத்தூர்ல தான் படிக்கிறே, அதுவும் ஹாஸ்டல்லதான் BSC Maths படிக்கப்போறே. சொல்லிட்டேன். வேற எதுவும் பேச வேண்டாம்"
அப்பா பேச்சு தட்ட முடியாமல் கோவையில் உள்ள பிரபல கலைக் கல்லூரியில் கணக்கு படிக்க ஆரம்பிச்சான் ராஜா. படிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், அவனுக்கு விருப்பமான விஷயங்களில் கவனத்தைத் திருப்பினான். வேலையத்த வேளையில செய்யுற ஓவியமும், ஷட்டில் பேட்மிண்டனும் அவனுக்கு விருப்பமா இருந்து இருக்கு. அந்தக் கல்லூரியில் இரண்டுக்கும் சொற்பமான மக்களே இருந்தார்கள், இதையெல்லாம் பண்ணினா சோத்துக்கு என்ன பண்றதுன்னு எவனும் சீண்டாத ஏரியா இது. அப்படியே ஓவிய கமிட்டி சேர்மன், பேட்மிண்டனுல பல்கலைகழக்த்துல ஒரு நல்ல இடமுன்னு வாங்கி காலேஜுக்கு போவாம ஓபி அடிச்சுகிட்டே இருந்துட்டான்.
இப்படியே 2 வருஷத்தையும் ஓட்டிட்டான். அதே சமயம் ஏனோ தானோன்னு 40% வாங்கி எல்லா பாடத்திலேயும் பாஸும் ஆகிட்டானுங்க ராஜா. ஆனா இந்தச் சனி இருக்கு பாருங்க, அது மனுசன் கழுத்துல கட்டி நுனிக்கயித்த கையில வெச்சுக்கும், "மவனே ஓடுடா. கடேசியா உனக்கு வெக்கிறேன்"னு வெக்கும் ஆப்பு.
அப்படித்தான் இவனுக்கு கடேசி வருஷம் 5th Sem, 6th Sem எல்லாத்துலேயும் கப்பு. வேற வழியே இல்லே. ஊருக்கு டிகிரி வாங்காம வந்தா மானம் போயிருமேன்னு "என்ன கருமத்தையோ படி, ஊரு பக்கம் மட்டும் டிகிரி வாங்காம வந்துராத"ன்னு இருக்கிற நகையெல்லாத்தையும் அடமானம் வெச்சு 20ஆயிரத்தை ராஜா கையில குடுத்துட்டாங்க.
என்ன பண்ணுவாங்க அவுங்க மட்டும். இவனும் ஏதாவது டிகிரி வாங்கி குரூப் பரீட்சை எழுதி முன்னேறிடுவான்னு கற்பனை அவுங்களுக்கு. "ஆசை இருக்காம் தாசில்தார் ஆவ, யோகம் இருக்காம் கழுதை மேய்க்க".
ராஜாவோட கூட்டாளி ஒன்னு சொன்னான் "மாப்ளே! ஒரு கோர்ஸ் இருக்காடா. இண்டெர்நெட்ல பரீட்சையாம். உடனே ரிசல்டாம். பாஸானா உடனே வேலையாம்டா. "
"என்னடா ஒளற்ர, எப்படிடா உடனே திருத்தி குடுப்பாங்க?"
"இல்லே மாப்ளே. வெட்டியாத்தானே இருக்கோம். வா, ஆப்டெக் வரைக்கும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்"னான்.
காந்திபுரம் பேர்ந்து நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கிற RRT(RajaRajeshwari Towers) ல 5 வது மாடியில இருக்கு ஆப்டெக். செமத்தியான ஃபிகருங்க,. ஜொள்ளிக்கிட்டே கவுன்சலரை பார்க்க போனான் ராஜா. கோர்ஸ் என்னான்னே தெரியாம "Internet Exam, result "ன்னு உளற ஆரம்பிச்சான். இவன் என்ன சொல்ல வரான்னு அவங்களுக்கு சுத்தமா புரியலே. அந்த கவுன்சலரு நல்ல ஃபிகரு. இவன் சொல்றதை எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு ஒரு Broucherஐ எடுத்து முன்னாடி வெச்சு ஆரம்பிச்சது, அதனோட உளர்றலை. இப்போ இவனுக்கு ஒன்னும் புரியல. அப்படியே அவனை கூட்டிக்கிட்டு போயி லேப், கிளாஸ் ரூம் எல்லாம் காட்டுச்சு. அடடா, அடடா, எத்தனை பொண்ணுங்க, எப்படி பசங்களோட சோடி போட்டு படிக்குதுங்க., நேர்த்தியா டிரஸு, ரூமு, பிகரு, "ராஜா, கலக்குறே"ன்னு மனசுக்குள்ள 100 வயலினை வாசிச்சுகிட்டே சொல்லிட்டு போனாங்க தேவதைங்க.
ஆனாலும் "Internet Exam, result " அப்படியெல்லாம் இந்த ஃபிகரு சொல்லவே இல்லியே, மறுபடியும் இவன் உளரலை ஆரம்பிச்சான். அப்போதான் அந்த ஃபிகருக்கு புரியவே ஆரம்பிச்சது. "இவனுக்கு Softwareக்கும், Hardwareக்குமே வித்தியாசம் தெரியல. எவனோ சொன்னான்னு நம்ம தாலிய அறுக்கிறான்" அப்படின்னு மனசுக்குள்ள நினனச்சிக்கிட்டு. "ஓஹ், நீங்க எதிர்த்தா மாதிரி இருக்கிற கவுன்சிலர்கிட்டே பேசியிருக்கனும் ராஜா. வாங்க அந்த டிபார்ண்மெண்ட்க்கு கூட்டிட்டு போறேன்னு எதிர்த்தா மாதிரி இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே "தூ, இதெல்லாம் ஒரு இடமா? எங்கே பார்த்தாலும் ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டருங்க. ஒரு பொட்டிக்கும் டப்பா இல்லே. எல்லாம் தொறந்தே கிடக்கு. அதுக்கு மேல ஒரு ஃபிகர் கூட இல்லே. அட ஃபிகர் இல்லாட்டி விடுங்கப்பா. ஒரு பொண்ணுங்க கூட இல்லே" என்ன தலை விதிடா. சரி, இங்கே படிக்க அங்கே சைட் அடிக்கன்னு ஆரம்பிச்சான் அந்த கோர்ஸை.
3 மாசம் முடிஞ்சவுடனே placement. சம்பளம் அதிகமில்லை ஆனாலும் நாய் பொழப்பா இருந்துச்சு. ஆனாலும் ஒரு சந்தோசம், ஒரு software மக்களுக்கு வேலை கிடைக்கிலே. இவனுக்கு சோத்துக்கு பஞ்சமில்லாம ஆச்சு. அடிச்சு புடிச்சு 8 வருஷத்துல டாக்டர் படிப்பை விட பெருசா டிகிரி முடிச்சான். அப்படியே படிப்படியா Network Engineer, System Admin அப்படின்னு graphல ஒரே ஏறுமுகம்தான். Bsc Maths படிச்சுட்டு Engineerன்னு விஸிட்டிங்க கார்டு வாங்கின ஒரே ஆள் இந்த ராஜா. அவுங்க அம்மாவுக்கு பெரிய சந்தோசம் வேற. பின்னே மவன் கணக்கு படிச்சாலும் ஒரு பெரிய இஞ்சினியர் ஆகிட்டான்ல.
Sep-11 கூட இவன் வேலைக்கு ஒரு தொந்தரவும் பண்ணல. பிறகாலத்தில் பெரிய புராஜக்ட் மேனஜரா ஆவனும்னு பிலாகுல பதிவு எல்லாம் போடுறான்னா பார்த்துக்குங்களேன். அதானால Bsc Maths படிச்சா இஞ்சினியர் ஆவலாம். அதுவும் கம்பியூட்டர் இஞ்சினியரு.
Wednesday, October 10, 2007
சினிமா குயிஜூ-2007-Oct
சினிமாத்துறையில இருக்கிறவங்க எல்லாம் படிக்காதவங்கன்னு நமக்கு எல்லாம் இளக்காரம் இருக்கத்தான் செய்யுது. அதை பொய்யாக்கவே இந்த குயிஜு. முடிஞ்சா பதில் சொல்லுங்க இல்லாட்டின்னா இருந்தே இருக்கு கூகிலாண்டவர். சிலதுக்கு விடை கிடைக்கலாம். ரெடி ஸ்டார்ட் மீஸிக்.
1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?
2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?
3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.
4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?
5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?
6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.
7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.
8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?
9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?
10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?
11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?
12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?
1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?
2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?
3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.
4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?
5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?
6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.
7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.
8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?
9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?
10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?
11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?
12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?
Tuesday, October 9, 2007
நண்பனான சூனியன்

சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
தெரு முக்கு ஆசாரி சொன்னாரு!
கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.
நீ எங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
என்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
என் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டே!
பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயுது.
டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
எஸ்கேப் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.
சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசக் கடைசி ஆகி உன்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பே!
சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
உன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது?
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.
உன் நட்பு வேணுமின்னு யாருடா கேட்டா?
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!
Thursday, October 4, 2007
Tuesday, October 2, 2007
தமிழ்மணத்துக்குமா போலி?
நண்பர்: மச்சான், இன்னுமாடா கவிதை எல்லாம் எழுதிட்டு இருக்கே? அதெல்லாம் விட்டு இருப்பேன்னு நினைச்சேன்.
நான்: ஏண்டா? எனக்கு அரைகுறையா வரதே அது ஒன்னுதான். அதையும் நிறுத்திட்டா?
(ஆமா, கவிதை எழுதித்தான் சாய்ஞ்சுட்டு இருக்கிற இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தப்போறேன். நான் ஒளர்றதை கவிதைன்னு சொல்ல ஒரு கூட்டமே இருக்கும் போல)
நண்பர்: இளா! நானும் ஏதாவது எழுதனும்னு நினைக்கிறேன். எப்படிடா?
நான்: அதான் Blogன்னு ஒன்னு இருக்கே. எனது எல்லாம் படிச்சியா? இருடா லின்க் தரேன்
(நீயுமாடா? நல்லாதாண்டா இருக்கே. அப்புறம் ஏண்டா சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கிறீங்க?)
நண்பர்: வேணாம்டா. அப்புறம் அதுக்கு அர்த்தம் சொல்றேன்னு என்னை அறுக்க ஆரம்பிச்சுருவே. வேணாம். சரி நான் பிலாக் எழுதறேன். அப்புறம் அதை எப்படி மத்தவங்க படிப்பாங்க? (அப்பாடா! எங்கே கவிதை சொல்லி காலங்காத்தால மூட் அவுட் பண்ணிருவானோன்னு பயம்தான்)
நான்: நண்பா! இதுக்காகவே பாடுபட்டு சில நல்ல மனுஷங்க ஒரு இடத்தை நமக்காகவே வெச்சு இருக்காங்க.
(நாங்கயெல்லாம் இங்கேதான் 'குடி' இருக்கோம். வாடகை வாங்கினா செம வசூல் ஆவும்)
நண்பர்: அப்படியா? அப்போ தமிழுக்காக எழுதற மக்கள் எல்லாம் இங்கே எழுதறாங்களா?
நான்: இல்லே. நீ எங்கே வேணுமின்னாலும் எழுது. ஆனா இங்கே ஒரு தொடுப்பு குடுத்துட்டா போதும்.
(என்னாது தமிழுக்காக மக்கள் எழுதறாங்களா? அதுதான் ஊர்ல மழை இன்னும் பின்னி பெடலெடுக்குதா?)
நண்பர்: அப்படியா? சரி. நல்ல விஷயம்தான். அப்போ பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் ப்லாகல எழுதறாங்கன்னு சொல்லு.
(நானும் அங்கே எழுதி பெரிய ஆள்ன்னு காட்டிக்கலாம்தானே)
நான்: இல்லேடா எழுதனும்னு நினைக்கிற மக்கள் இங்கே எழுதறாங்க. பெரிசு சிறுசு எல்லாம் இங்கே இல்லே. எல்லாரும் ஒன்னுதான். (யார் வேணுமின்னாலும் வயசு, தகுதி இல்லாம திட்டலாம். இல்லைன்னா தைரியமா அனானியா வந்து திட்டலாம்)
நண்பர்: ஆஹா,. கருத்து சுதந்திரம் ஜாஸ்தியா?
நான்: ஆமா. அதுவே உண்மைதான்.
(அந்தக் கருமத்தை நினைச்சாத்தான் எரிச்சலா இருக்கு.)
நண்பர்: சரி அந்த இடங்களை சொல்லுங்க. யார் யார் எழுதறாங்கன்னு பார்க்கிறேன்.
நான்: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி.
(பாரிஸ் கார்னர், சுண்ணாம்பு கால்வா. அங்கேதான் தமிலு துல்லி வெலையாடுது. இல்லாட்டி டிவி பாரு அங்கே பேஷுவாங்க)
நண்பர்: தமிழ்மணம், திறந்தாச்சு. ஆனா நீ சொல்ற மாதிரி ஒன்னுமே இல்லியே.
நான்: பாரு நண்பா. இருக்கும், ஏதாவது தொடுப்பு தட்டி பாரு.
நண்பர்: என்னாது பிலாகா? நீ சொல்ற மாதிரி ஒரு இடமே இல்லியே.
நான்: மச்சான். லின்க் குடு
(அடங்கொய்யால, அதையும் தாக்கிப்புட்டாங்களா?)
நண்பர்: http://tamilmanam.com/
நான்: ஏண்டா? எனக்கு அரைகுறையா வரதே அது ஒன்னுதான். அதையும் நிறுத்திட்டா?
(ஆமா, கவிதை எழுதித்தான் சாய்ஞ்சுட்டு இருக்கிற இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தப்போறேன். நான் ஒளர்றதை கவிதைன்னு சொல்ல ஒரு கூட்டமே இருக்கும் போல)
நண்பர்: இளா! நானும் ஏதாவது எழுதனும்னு நினைக்கிறேன். எப்படிடா?
நான்: அதான் Blogன்னு ஒன்னு இருக்கே. எனது எல்லாம் படிச்சியா? இருடா லின்க் தரேன்
(நீயுமாடா? நல்லாதாண்டா இருக்கே. அப்புறம் ஏண்டா சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கிறீங்க?)
நண்பர்: வேணாம்டா. அப்புறம் அதுக்கு அர்த்தம் சொல்றேன்னு என்னை அறுக்க ஆரம்பிச்சுருவே. வேணாம். சரி நான் பிலாக் எழுதறேன். அப்புறம் அதை எப்படி மத்தவங்க படிப்பாங்க? (அப்பாடா! எங்கே கவிதை சொல்லி காலங்காத்தால மூட் அவுட் பண்ணிருவானோன்னு பயம்தான்)
நான்: நண்பா! இதுக்காகவே பாடுபட்டு சில நல்ல மனுஷங்க ஒரு இடத்தை நமக்காகவே வெச்சு இருக்காங்க.
(நாங்கயெல்லாம் இங்கேதான் 'குடி' இருக்கோம். வாடகை வாங்கினா செம வசூல் ஆவும்)
நண்பர்: அப்படியா? அப்போ தமிழுக்காக எழுதற மக்கள் எல்லாம் இங்கே எழுதறாங்களா?
நான்: இல்லே. நீ எங்கே வேணுமின்னாலும் எழுது. ஆனா இங்கே ஒரு தொடுப்பு குடுத்துட்டா போதும்.
(என்னாது தமிழுக்காக மக்கள் எழுதறாங்களா? அதுதான் ஊர்ல மழை இன்னும் பின்னி பெடலெடுக்குதா?)
நண்பர்: அப்படியா? சரி. நல்ல விஷயம்தான். அப்போ பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் ப்லாகல எழுதறாங்கன்னு சொல்லு.
(நானும் அங்கே எழுதி பெரிய ஆள்ன்னு காட்டிக்கலாம்தானே)
நான்: இல்லேடா எழுதனும்னு நினைக்கிற மக்கள் இங்கே எழுதறாங்க. பெரிசு சிறுசு எல்லாம் இங்கே இல்லே. எல்லாரும் ஒன்னுதான். (யார் வேணுமின்னாலும் வயசு, தகுதி இல்லாம திட்டலாம். இல்லைன்னா தைரியமா அனானியா வந்து திட்டலாம்)
நண்பர்: ஆஹா,. கருத்து சுதந்திரம் ஜாஸ்தியா?
நான்: ஆமா. அதுவே உண்மைதான்.
(அந்தக் கருமத்தை நினைச்சாத்தான் எரிச்சலா இருக்கு.)
நண்பர்: சரி அந்த இடங்களை சொல்லுங்க. யார் யார் எழுதறாங்கன்னு பார்க்கிறேன்.
நான்: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி.
(பாரிஸ் கார்னர், சுண்ணாம்பு கால்வா. அங்கேதான் தமிலு துல்லி வெலையாடுது. இல்லாட்டி டிவி பாரு அங்கே பேஷுவாங்க)
நண்பர்: தமிழ்மணம், திறந்தாச்சு. ஆனா நீ சொல்ற மாதிரி ஒன்னுமே இல்லியே.
நான்: பாரு நண்பா. இருக்கும், ஏதாவது தொடுப்பு தட்டி பாரு.
நண்பர்: என்னாது பிலாகா? நீ சொல்ற மாதிரி ஒரு இடமே இல்லியே.
நான்: மச்சான். லின்க் குடு
(அடங்கொய்யால, அதையும் தாக்கிப்புட்டாங்களா?)
நண்பர்: http://tamilmanam.com/
நான்: (மனதுள்:இது என்னாது புதுக்கதை? ஒரு வேளை போலியா இருக்குமோ? 'அவரே' வெளி உலகத்துக்கு நல்லவரா வந்துட்டாரே)
அந்த வலைப்பக்கத்தை திறந்து பார்த்தபின்,
சே சே அப்படியெல்லாம் இல்லே. இதைத்தான் ஒரே மாதிரி சிந்திக்கிறதுன்னு சொல்றாங்களா?
இந்தப் பதிவு தமிழ் மணம் பரப்பிய அண்ணன் காசிக்குச் சமர்ப்பனம்.
Monday, October 1, 2007
Subscribe to:
Posts (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
'சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது...' & பிரமிளின் புகழ்பெற...




