Sunday, October 19, 2008

* Thanks

காவேரித் தெருவுல இருக்கிறதே 4 கடைங்கதான், மீதி இருக்கிறது ரெண்டு பக்கமும் 3 அடுக்குமாடி வீடுங்க. ஒரு டாஸ்மாக், அண்ணாச்சி மளிகை, வேலு பான்கடை அப்புறம் ராஜூ மெக்கானிக் கடை. எல்லாமே சின்ன சின்னதான கடைங்க. அப்புறம் பூ விக்கிற மாரியம்மா. ஒரு பரபரப்புமில்லாத தெரு. வேலைக்குப் போவாங்க வருவாங்க, வீடல் அடைஞ்சுக்குவாங்க. தெருவுல நடமாட்டமும் கம்மி.

அப்போதான் அந்தத் தெருவுக்கு வந்தான் கிரிதரன்,ரொம்ப புத்திசாலி, நல்லா பாடுவான், உலக அறிவு அதிகம், நிறைய பேசுவான்.. என்ன ஒன்னுன்னா, எல்லாரும் அவனைப் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. ராத்திரியானா ராஜூ கடைக்கு முன்னால படுத்துக்குவான். பாதுக்காப்புதானேன்னு ராஜூம் ஒன்னும் சொல்லலை.

ஒரு நாள் சாயங்காலம், “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” ராஜூ கடைக்கு முன்னாடி இருந்த திண்டுல உக்காந்துகிட்டு பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பிச்சான் கிரி. ஆனா யாருமே அவனையோ, அவன் பாட்டையோ கண்டுக்கலை. எல்லோரும் ஒரு முறை வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தாங்க. அவ்ளோதான். எல்லாப் பைத்தியக்காரனுக்கு கிடைக்கிற மரியாதைதான் அவனுக்கும் கிடைச்சது. அடுத்த நாள் கதை சொல்ல ஆரம்பிச்சான் கிரி. அண்ணாச்சியின் 7 வயசுப்பையன் மட்டும் ஐஸ் சூப்பிக்கிட்டே கதை கேட்க ஆரம்பிச்சான்.

அடுத்த நாள் அண்ணாச்சிப் பையன் இன்னும் 3 பேர சேர்த்து கூட்டிட்டு வந்தான். ஆனா அன்னிக்கு பக்திச் சொல்ற்பொழிவு, ஆனா அந்தப் பசங்களுக்குத் தகுந்த மாதிரி கதைச் சொன்னான் கிரி.இப்படியே ஒரு வாரம் போச்சுது நல்ல குரல், நல்லசங்கீத ஞானம், மக்களுக்குத்தகுந்தப்படி பாடுறதனால சிலபேரு வீட்டுல இருந்தே கேட்க ஆரம்பிச்சாங்க. கடைக்கு வந்துப்போற மக்கள் நின்னு கேட்க ஆரம்பிச்சாங்க.அப்புறமா அவன் எப்ப பாடுவான்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க அந்தத்தெரு மக்கள். இதனால அவனுக்கு சரியான சாப்பாடு, துணி எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சது. தீவிரவாதியா இருப்பான்னு சில பேரு சொல்லிகிட்டாங்க. ஆனாலும் அதைப்பத்தி எல்லாம் அவன் கவலைப்படவே இல்லை. ஆனாலும் அவன் தனிப்பட்ட விசயத்தைப்பத்திமட்டும் யாருக்கும் தெரியலை. கேட்க துணிச்சலும் இல்லே. பாட்டோ, பேச்சோ அத்தோட சரி. அப்புறம் யார்கிட்டேவும் பேசமாட்டான். சோறு போட்டா நல்லா தின்பான். வாழ்க்கை நல்லா ஓட ஆரம்பிச்சது. காசு
குடுத்தா திருப்பி அவுங்க மேலேயே எறிஞ்சுருவான். இப்படியே ஒரு வருசம் ஓடிப்போயிருச்சு. சாயங்காலம் ஆஞ்சு மணிக்கு காவேரித்தெருவுல கூட்டம் சேர ஆரம்பிச்சுரும். ராஜூ பஜ்ஜி கடையும் சேர்த்து போட்டாரு

ஒரு நாள் திடீர்ன்னு காணாம போயிட்டான் கிரிதரன்.. ஒரு வாரத்துக்கு மக்களுக்கு என்னமோ மாதிரியிருந்துச்சு. வாரம், மாசத்துல மக்கள் மறந்துட்டாங்க. ஆனாலும் அஞ்சு மணியானா அந்தத் திண்டை கண்டிப்பா ஒரு முறையாவது ஒருத்தராவது ஏக்கத்தோட பார்க்காம போக மாட்டாங்க.வருசம் பல ஆச்சு, திண்டு மட்டும் காலியாவே இருந்துச்சு.

லக்கி மாதிரி நல்லா எழுதிட்டு ஒருவித வெறுப்புல பதிவுலகத்தை விட்டு போறவங்களுக்காக, வாசகன் பார்வையில் இந்தப்பதிவை சமர்பிக்கிறேன்.

2 comments:

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)