சோகங்களின் கண்ணீரும்
மகிழ்வின் ஆணவமும்
காதலியின் சிணுங்கல்களும்
காதலனின் ஆளுமையும்
தனிமையாய் தனிமையும்
கூட்டத்தின் ஆரவாரமும்
மணல் வீடுகளாய் கற்பனைகளும்
கற்பனைகளாய் மணல்வீடுகளும்
பேனாக்களின் கனவுகளும்
கனவுகளோடு காகித பட்டப் படிப்புகளும்
அதி காலை ஆழ்தியானமும்
மாலையோர படகு மறைவுகளும்
இவை யெல்லாம் என்று ஓயும்
நானும் ஓய்ந்து தலை சாய!
No comments:
Post a Comment