Monday, July 12, 2010

சிபஎபா Jul 12

நாணயத்தின் மறுபக்கம் by புதுகைத் தென்றல்

குடும்பஸ்தினிக்குத்தான்(குடும்பஸ்தன் இருக்கும் போது குடும்பஸ்த்தினி இருக்கக்கூடாதா?) இந்த மாதிரி அடுத்த பக்கம் தெரியுது. பெற்றோர்களுக்கு நாம் கொடுக்கும் சிரமங்கள் தெரிவதில்லை. அவர்களும் கண்டுகொள்வதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். நானும் இது மாதிரி சில விசயங்கள் செய்திருக்கிறேன். ஆனால் வருடம் ஒரு முறை என்பதாலோ என்னவோ என் பெற்றோர் அதை விரும்புகிறார்கள். எல்லா வாரமும் இது மாதிரின்னா? அவங்க இன்னும் பெற்றோரா மாறலைன்னுதானே அர்த்தம்.


-------------------------------------

நாங்களும் மீன்களும்! by சந்தனமுல்லை

மீன் புத்தகம், மீன் படம், மீன் குழம்பு.. எப்படி யெல்லாம் தொடர்பு’படுத்தறாங்க’. அம்மாக்களின் வலைப்பூ காத்து வாங்குது அம்மாக்களே, அவுங்க அவுங்க பதிவுகள்ல பட்டைய கிளப்புறாங்க. இதுவரைக்கு தீஷு அம்மான்னா இப்போ இவுங்களும். ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க. நல்லதுதானே



----------------------------------




இப்போவெல்லாம் சமுதாயப் பார்வை கொண்ட பதிவுகள் நிறைய போடுறாரு. பல சினிமாப் பதிவுகளும்..நல்லதொரு பரிணாமம். இவர் சொன்னதுக்கப்புறம்தான் அந்த நிகழ்ச்சிய பார்க்கனும்னு தோணுது. தப்புன்னு தெரிஞ்சே 25 பேரு வந்திருக்காங்கன்னா என்னத்தைச் சொல்ல. தப்பை ஏத்துக்கிறதுக்கு தகிரியம் வேணும்டா, அது உன்கிட்ட இருக்கான்னு பாருன்னு எங்க தமிழ் வாத்தியார் சொல்வாரு, அதான் ஞாபகத்துக்கு வந்துச்சு :)


----------------------------------




படிச்சவுடனே, ஆகா அருமை, wowன்னு சொல்லவைக்கிற கவிதைகள்.

----------------------------------



நல்லதொரு சிறுகதை, தேர்ந்த நடை. சஞ்சிகையில் வர வேண்டிய ஒன்று. கொஞ்சம் காலம் தாழ்த்திதான் படிக்க கிடைத்தது.


----------------------------------


நோய்க்கூறு மனநிலை பத்ரி சேஷாத்ரி


இதை வேண்டுமென்றே போனவாரம் தவிர்த்தேன் காரணம், தமிழர்களின் நிலையைச் சொன்னால் கோவம்தான் வருது, ஏன்னா நாம அப்படித்தானே!

----------------------------------


ரிக்சா..!!! by கார்த்திகைப் பாண்டியன்


ஆயிரந்தான் இருந்தாலும் காசு காசுதாங்கிறதுதான் இந்தக் கதையோட சாராம்சம், மனுசனோட உணர்வு, உழைப்பெல்லாம் யாருக்கு வேணும் சொல்லுங்க.


----------------------------------



அண்ணாச்சி! பழைய பாஃர்முக்கு வந்துட்டார் போல. நல்லதொரு பதிவை தந்திருக்காரு. நீங்க எப்ப இப்படி ஆர்டர் எடுப்பீங்க பத்ரி?

----------------------


மோகம் 30 நாள் by ஆதிமூலகிருஷ்ணன்


மீண்டும் தாமிரா(ஆதிமூலகிருஷ்ணன் எல்லாம் நமக்கு சரிப்படலைங்க, தாமிராதான் பெஸ்ட்). அதெப்படிய்யா சுலபமா 30 நாளுக்கு கணக்கு சொல்றீங்க. சே.. செம பிரிட்டிஷ். எங்க ஊர்ல பிரிட்டிஷ்னா பயங்கர மூளைக்காரங்கன்னு அர்த்தம்.



----------------------------------


என்ன செய்யலாம்? by யுவகிருஷ்ணா


பிச்சைக்காரர்களுக்கு’னு, தட்டவே ஒரு மாதிரியா இருக்கும் போது அவுங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு நாளைக்கு அவுங்களை மாதிரி வாழ்ந்து பார்னு யாரோ சொன்னாங்க. அவுஙகளை வாழ வைக்க வேண்டியது சமூகத்தோட கடமையாச்சே. அதுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்தா நொல்ல சொல்லைன்னு சொல்லிகிட்டு. லக்கிகிட்ட இருந்து இப்படி ஒரு ஆழ்ந்த பதிவு படிச்சு பல வருசம் ஆச்சு. நல்ல பதிவு, சவுக்கடி மாதிரி. பாப் மார்லி மாதிரி இன்னொரு பதிவு வருமா பாஸ்?


----------------------------------



கேபில், கலக்குறீங்க. அப்படின்னு சொல்லலாம்னா அது பதிவுக்கு மட்டும்தான். வெளிச்சம் போடப்படும் விசயங்கள் நிறைய இருக்கு. ப்ச்

----------------------------------


இதன் பெயர் தனிமை by Vidhoosh(விதூஷ்)


பதிலோ பின்னூட்டமோ சொல்லத் தோணலைங்க. படிச்சுக்குங்க.


------------------------





பேட்டின்னா வேட்டி கிழியும்(நன்றி-கோவி), ஆனா இந்தப் பதிவு கண்ணீரில் திளைத்தது. ஜோசப் நல்லாயிருக்கனும்யா நீ! பதிவுலகமே போதைதான்யா, நல்ல விசயங்கள் வந்துகிட்டே இருக்கும்போது எனக்கு போதை எப்படி குறையும்?


----------------------------------




இது ஒரு சின்ன விளம்பரம். புஸ்தகப் போட்டின்னு வெச்சுங்களேன். உங்க ஆதரவும் தேவை இல்லையா?


----------------------------------

11 comments:

  1. நன்றீங்க வந்து படிச்சதுக்கும் இங்க பகிர்ந்ததுக்கும்.

    ReplyDelete
  2. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி இளா படிச்சதுக்கும், பாராட்டியதற்கும், பகிர்ந்து கொண்டதற்கும்.

    editing எழுத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு உணர வைத்த கதை இது. :-)

    என்றும் அன்புடன்,
    விதூஷ்.

    ReplyDelete
  3. //குடும்பஸ்த்தினி //

    குடும்பபெண் என்றால் சண்டைக்கு வராங்களே... :)) அதனால,
    குடும்பஸ்திரீ என்ற வழக்கு வடமொழி என்றாலும், அதுவே சரியாக தோன்றுகிறது... :-))

    ReplyDelete
  4. எல்லோருடையதையும் படித்துக் கொண்டே இருக்கிறேன். அனைவருமே நன்றாக எழுதுகிறார்கள்.

    சொக்கன் புத்தகப் பதிவு இப்போதுதான் பார்க்கிறேன். பகிர்வுக்கு ரொம்ப நன்றி :)

    அன்புடன்
    விதூஷ்.

    ReplyDelete
  5. இளா : சிபஎபா அருமை....

    ReplyDelete
  6. ஜோசப் நல்லாயிருக்கனும்யா நீ! //


    Repeatyee:-))

    ReplyDelete
  7. இராமசாமி கண்ணண், Vidhoosh(விதூஷ்),வழிப்போக்கன், சந்தனமுல்லை ,*இயற்கை ராஜி* ->thanks for visiting

    ReplyDelete
  8. நீங்க பகிர்ந்துக்கிற என்னோட இரண்டாவது இடுகை இது.. ரொம்ப நன்றிண்ணே..:-))))

    ReplyDelete
  9. //கேபில், கலக்குறீங்க. அப்படின்னு சொல்லலாம்னா அது பதிவுக்கு மட்டும்தான்//

    என்ன சொல்ல வர்றீங்க.. புரியலையே..:(

    ReplyDelete
  10. நீங்க லிங்க் கொடுத்ததை 2 வருஷம் கழிச்சு இன்னைக்குத்தான் படிச்சேன்.

    மன்னிக்கவும்.

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)