Wednesday, December 3, 2008

BlogOgraphy:கோவி.கண்ணன்

கோவி.கண்ணனை(கோவி)யுடன் பதிவுகள் மூலமாக 2006ல் ஏதோ ஒரு தேதியில் தனி அரட்டையில் பழக்கமாச்சுங்க. முதல் அறிமுகத்துல ரெண்டு பேருக்குமே ஒரு ஆச்சர்யம். ரெண்டு பேரும் ஒரே தொழில்ங்கிறதும், ஒரே காலத்துல அவர் வேலை பார்த்த இடங்களில் இருந்திருக்கேங்கிறதும். நான் அவரை பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வந்த போது, அவர் என்னை ஏற்கனவே பார்த்திருப்பதாவும், நல்லாத் தெரியும்னும் சொன்னாரு. அத்தோட நிப்பாட்டிருந்த இந்தப் பிரச்சினையே இல்லே. அவரோடப் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வெச்சுட்டு, ஞாபகம் இருக்கான்னு கேட்டாரு, தெரியலைன்னதும், "யோசனை பண்ணிச் சொல்லுங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ஒரு நாள் முழுக்க அரை மணி நேரத்துக்கு ஒரு முறை படத்தை பார்க்கிறதும், ஞாபகம் வருதான்னு யோசிக்கிறதாவுமே இருந்தேன். அடுத்த நாள் அவரை அரட்டையில புடிச்சப்போதாங்க சொன்னாரு, அவர் என்னைப் பார்த்தது இல்லேன்னும், சும்மானாச்சு படத்தை அனுப்பினேன்னாரும். அப்போதான் இந்த மனுசனோட குசும்பு தெரிஞ்சுதுங்க. அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!

அவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் எல்லாம் வழக்கம் போலதாங்க இருந்துச்சு. ஒரு சார்பில்லாம, மொக்கைகளும், கும்மியும் கொண்டாட்டமுமா. நட்சத்திர வாரத்துக்கு அவர் எழுதுன கதை, அவரோட பதிவுகள்ல சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். தன்னோட எழுத்துக்கள்ல பெரிசாவோ, சிறிசாவோ, ஏன் அழுத்தமோ இல்லாம இருந்தப் பதிவுகள் U டர்ன் அடிச்சது 2008 பிப்ரவரிலதான்.

அதாவது கருத்துக்களை 'காலங்கள்'ல அள்ளி வீசிட்டு இருந்தவருக்கு அது சோதனை காலம். கருத்து கந்தசாமின்னு பேர் வந்ததும் அப்போதான்.


போலியின் ஒரு அங்கமாவே எண்ணி, கோவிய ஒரு கும்பல்சில நண்பர்கள் தாக்கு தாக்குன்னு தாக்க, கோவி ஓடியோ ஒழியவோ இல்லே. ரெண்டே பதிவுதான், சட்டுன்னு ஃபினிக்ஸ் மாதிரி வந்தாரு. அதுவரைக்கும் மொக்கை, நகைச்சுவை, வெளையாட்டு, கவிதைன்னு பதிவுகள் வந்துட்டு இருந்துச்சு. அப்போ இருந்து கருத்து, கருத்து, கருத்துதான். அநேகமா கோவி இமேஜ் இனி டேமேஜ், அப்படிங்கிற நிலைமைல டாப் கியருல மேல வந்துட்டு இருந்தாரு கோவி. யாருமே எதிர் பார்க்காத ஒரு முயற்சி, வாழ்க்கையில கடை பிடிக்க வேண்டிய முயற்சி அது.

வாரணம் ஆயிரம்ல அப்பா சூர்யா சொல்லுவாரே, எட்ஜ் வாங்கினேன்னு சொல்லி கடுப்பாயி 6 விக்கெட் எடுத்த கதை. அந்தக் காட்சி பார்க்கும் போது கோவிதான் மனசுல வந்தாரு. இது எனக்கும் ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டேன். கருத்துக்களை வீச ஆரம்பிச்சப்போ நான் தனி மடல்ல பதிவுகளின் தாக்கம் குறையுதுன்னு சொன்னேன். அப்புறம் அவர் பதிவுகளை படிப்பதை நிறுத்திக்கிட்டேன். மே மாதத்துல இருந்துதான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா பின்னூட்டினதே இல்லே. ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. கருத்துகள் மட்டும் வந்துட்டுதான் இருக்கு. நடுநடுவே பதிவர் சந்திப்புகளும். கருத்து ஆரம்பிக்கும் வேகம் குறைஞ்சு கடேசியா உங்க இஷ்டம்னு முடிக்கிற அவர் தோரணை எனக்குப் பிடிக்கலை.

'என் வீட்டு பூசையறையில பெரியாரில்லை, பிள்ளையார்தான்'னு எதுக்கோ சொன்ன வார்த்தை இன்னும் மனசுல இருக்கு.

"வெளுத்ததெல்லாம் பால்னு நம்புறாரு, அதான் அவருக்கு ஒரு சோதனையை குடுத்துச்சு"

இப்போ அவர் பதிவுகள் சூடாகாம இருந்ததே இல்லே. தூள் கிளப்பிட்டு இருக்காரு, எந்த அளவுக்குத் தெரியுங்களா?? தமிழ்ப்பதிவுலகுல சிங்கைன்னா கோவிங்கிற அளவுக்கு.

Update: மக்களே மன்னிக்கவும், போலி மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அனைத்து பின்னூட்டங்களையும் அழிக்க வேண்டிய கட்டாயம். போலி பத்தின உங்க கருத்துக்களை சொல்ல வேணாமே.
அடுத்த BlogOgraphy: LuckyLook

54 comments:

  1. நாந்தான் படிக்காமையே பின்னூட்டம் போடுவேன்னு நினைச்சுட்டு இருந்தேன், நீங்களுமா??

    ReplyDelete
  2. நல்லா இருக்கு,குறிச்சு வச்சுகிறேன்

    ReplyDelete
  3. //கோவிய ஒரு கும்பல் தாக்கு தாக்குன்னு தாக்க, கோவி ஓடியோ ஒழியவோ இல்லே.//

    (முன்னாள்) நண்பர்களை கும்பல்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.

    அந்த சுட்டிக்கெல்லாம் இணைப்புக் கொடுத்ததற்கு நன்றி !

    ReplyDelete
  4. மிகவும் நல்லாருக்கு! :)
    (சத்தியமாப் படிச்சிட்டுத் தான் பின்னூட்டினேன் இளா :)

    ReplyDelete
  5. //(முன்னாள்) நண்பர்களை கும்பல்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.//
    அவுங்க எல்லாம் இன்னும் எனக்கு நண்பர்கள் கோவி.:) சரி,லைட்டா மாத்திக்கிறேன்.

    ReplyDelete
  6. நகுதற் பொருட்டு அன்று நட்டல்! மிகுதிக் கண்
    மேற்சென்று இடித்தற் பொருட்டு!
    -என்ற குறள், எனக்கு இப்போ ஏன் ஞாபகம் வந்துச்சி-ன்னு தான் தெரியலை! :)

    ReplyDelete
  7. இளா! நல்லா இருக்கு, பதிவு படிச்சிட்டேன், ஆனா லிங்கு படிக்கலை

    ReplyDelete
  8. //அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//

    நின்னுட்டேன்!
    அமர்க-ன்னு சொல்லவேயில்ல! எம்புட்டு நேரம்யா நிக்குறது? :)

    இளா, "நிற்க"-ன்னு போட்டு எழுதறதை எல்லாம் பாத்தா அவர் கொஞ்சம் கொஞ்சமா "மூத்த" பதிவர் ஆயிட்டு வராரோ?

    ReplyDelete
  9. //ரெண்டே பதிவுதான், சட்டுன்னு ஃபினிக்ஸ் மாதிரி வந்தாரு//

    பதிவில் இந்த வரிகளை மட்டும் எந்த சார்பு உள்ளவரும் மறுக்க முடியாது!

    //ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. கருத்துகள் மட்டும் வந்துட்டுதான் இருக்கு//

    இது முழுக்க முழுக்க உண்மை இல்லை இளா!

    கருத்தின் தாக்கமோ, இல்லை அதில் அவர் உறுதியாக, ஒரே நிலையில் இல்லாமல், குழப்பமாகப் பேசுவதாலோ வேணுமானால் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம்!

    ஆனால் versatility இல்லை என்பது NOT 100% TRUE!
    பார்வையின் வேறுபாடாகக் கூட இருக்கலாம்!

    இதற்கு கோவி அண்ணாவோ, இல்லை மற்ற பதிவர்களோ என்ன சொல்கின்றார்கள் என்று பார்க்கலாம்!

    துறை சார்ந்த பதிவுகளில் வெர்சடாலிட்டி பாக்க முடியுமா என்பது தனி விவாதம்!
    (கோவி அண்ணே! - "துறை சார்ந்த"-ன்னு சொல்லிக் காமெடி எல்லாம் சத்தியமா பண்ணலீங்கோ! :))

    ReplyDelete
  10. /kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ரெண்டே பதிவுதான், சட்டுன்னு ஃபினிக்ஸ் மாதிரி வந்தாரு//

    பதிவில் இந்த வரிகளை மட்டும் எந்த சார்பு உள்ளவரும் மறுக்க முடியாது!
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  11. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//

    நின்னுட்டேன்!
    அமர்க-ன்னு சொல்லவேயில்ல! எம்புட்டு நேரம்யா நிக்குறது? :)

    இளா, "நிற்க"-ன்னு போட்டு எழுதறதை எல்லாம் பாத்தா அவர் கொஞ்சம் கொஞ்சமா "மூத்த" பதிவர் ஆயிட்டு வராரோ?
    ///


    அண்ணாச்சி என்னாது ? கொஞ்சம் கொஞ்சமாவா ????

    அதெல்லாம் எப்பவோ ஆயாச்சு!

    (அது சரி இன்னுமா நீங்க ”நிற்க”றீங்க சரி உக்காருங்க உக்காருங்க! :))))

    ReplyDelete
  12. //ILA said...
    //(முன்னாள்) நண்பர்களை கும்பல்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.//
    அவுங்க எல்லாம் இன்னும் எனக்கு நண்பர்கள் கோவி.:) சரி,லைட்டா மாத்திக்கிறேன்.
    //

    மாற்றியதற்கு நன்றி.

    முன்னாள் நண்பர்கள் என்று குறிப்பிட்டது எனக்குத்தான். உங்களுக்கு அல்ல.

    அந்த நேரத்தில் ஒருவர் என்னிடம் "இதுல இறங்கிட்டா நான் அறிஞ்சவன், தெரிஞ்சவன், நண்பனெல்லாம் பாக்கமாட்டேன்" என்று எனக்கு தனிப்பட்ட எச்சரிக்கை கொடுத்துவிட்டுதான் என்மீது கனைகளைத் தொடுத்தார்.

    மற்றொரு விளம்பர பிரியர் சுய விளம்பரத்துகாக என்னைத் தூற்றினார். அவதூறு ஆறுமுகம் பற்றிச் சொல்லவே வேண்டாம். இவருடைய அவதூறினால் வசந்தம் ரவி என்ற பெயரில் எழுதிய ஒருபதிவர் (அவர் இன்னும் வேறொரு பெயரில் எழுதுவதாக நண்பர் ஒருவர் சொன்னார்) பதிவை மூடிவிட்டார். கவிதா திரும்ப எழுத வந்திருக்காங்க. யார் மீது வேண்டுமானாலும் அவதூறு சொல்லும் உரிமையை பதிவர்கள் இவருக்கு கொடுத்து இருப்பதால், அவதூறு ஆறுமுகம் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை.

    ReplyDelete
  13. திரு.கோவி கண்ணன் அவர்களை பிரித்து மேய்ந்திருக்கும் பதிவு.

    கோவி கண்ணன்:பிளாக் ஓ கிராபி(கோவி கண்ணன்:வலைப்பூ ஓ சரியுதே)க்கு ஓர் "ஓ" போட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. // ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. //

    கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்கும் பெரிய இயக்குனர் படங்களே மக்கள் ரசனை முன் ஊற்றிக்கொள்கிறது. நாமெல்லாம் சாரி நானெல்லாம் கிடைக்கிற கேப்பை பயன்படுத்திக் கொள்ள எழுதுகிறேன். அனைத்தும் தரமானது கருத்து செறிவுடன் எழுதவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு எழுத்து என்னுடைய வாழ்க்கையை தீர்மாணிப்பாதாக அமையவில்லை என்பதும் காரணம் தான், அதை நான் விரும்பவும் இல்லை. நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.

    எழுத்தினால் கிடைத்த நன்மையாக நான் கருதுவது நல்ல நண்பர்கள், சிலர் அண்ணன் என்று அன்புடன் அழைக்கிறார்கள். பதிவுகளை எழுதி குவிக்காவிட்டால் இவ்வளவு பேரின் அறிமுகம் கிடைத்திருக்குமா என்பது ஐயமே. அந்த வகையில் எனது பதிவுகளை படித்து பாராட்டிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ள்ளேன்.

    இந்த இடுகை பாசிட்டீவாக இருப்பதால் இதுபற்றி என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை. ஓரளவு சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறேன் என்பது அல்ல, ஆனால் ஒருவரையும் எதிரியாக நினைப்பது இல்லை. எழுத்துச் சிந்தனைகளும் ஒருவரது தனிப்பட்ட பழக்கவழக்கமும் ஒன்றல்ல என்றே நினைக்கிறேன். கதையில் கொலையோ, பாலியல் பலாத்காரமோ வைத்து எழுதுவர்களையும், நீலப்படம் பார்பவர்களையும் வக்கிரமானாவர்கள் என்று சொல்ல முடியாது இல்லையா ? ஒருவருடைய கொள்கைகளையும் அவரது தனிப்பட்ட குணங்களையும் ஒன்றாக நினைப்பது இல்லை. எல்லோரும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். கூடவே நேரம், காலம் அவர்களை ஆட்டி வைக்கிறது என்கிற புரிந்துணர்வு இருக்கிறது.

    ReplyDelete
  15. சொல்ல மறந்த கேள்விப்பட்ட விசயம். கோவி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரஜினி ரசிகராமே. உண்மைங்களா கோவி?

    ReplyDelete
  16. //இல்லேன்னும், சும்மானாச்சு படத்தை அனுப்பினேன்னாரும். அப்போதான் இந்த மனுசனோட குசும்பு தெரிஞ்சுதுங்க.//


    பாத்துகுங்களேன்...

    ReplyDelete
  17. ///ரெண்டு பேரும் இப்போ டேப்பரா நம்மளை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க///

    டேப்பரான்னா என்ன அர்த்தம்?

    'முகத்திலிருந்து முழங்கால் வரை'?

    ReplyDelete
  18. //ILA said...
    சொல்ல மறந்த கேள்விப்பட்ட விசயம். கோவி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரஜினி ரசிகராமே. உண்மைங்களா கோவி?
    //

    அது என்னுடைய பதிவுலகம் சாரா நண்பர்கள் அறிந்த தகவல்.

    ரஜினி படம் எப்போதும் பிடிக்கும். ரஜினியின் தெளிவற்ற பேச்சுகள் ஒரு 5 ஆண்டுகளாகவே பிடிக்காமல் போச்சு. வெறும் நடிகனாகவே மட்டும் இருந்தால் நான் ரஜினி எனக்கு பிடிக்கும்.

    ReplyDelete
  19. //டேப்பரான்னா என்ன அர்த்தம்? //
    அதெல்லாம் டேப்பராதான் இருக்கும். அஜக்குன்னா அஜக்குதான்,குமுக்குன்னா குமுக்குதான்’ங்கிற மாதிரி. எங்கூரு பாசைங்க மோகன்.

    ReplyDelete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. கோவி.கண்ணன் பதிவு லிங்க் 1 & 4 ஒரே பதிவுக்குப் போகுது...

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. இளா,

    இங்கே எனக்கு விழுந்திருக்கிற 'ரொம்ப நல்லவர்' பின்னூட்டங்களைப் பார்த்து சிங்கைப் பதிவர்கள்,

    "அண்ணே, நீங்க ரொம்ப நல்லவராமே, 100, 200 இல்லாட்டி 500 வெள்ளி கைமாத்தாக குடுங்கண்ணே" ன்னு கேட்கிறாங்க.

    வம்புல மாட்டிவிட்டுட்டிங்களே.

    :))))))

    ReplyDelete
  25. பல விசயங்கள்/உண்மைகள் திரிக்கப்பட்டிருக்குன்னு நண்பர்கள் கோவப்படுறாங்க. மக்களே, எனக்குத் தெரிஞ்சவரைக்கும்தான் எழுதமுடியும். பின்னூட்டப்பொட்டி தொறந்துதான் இருக்கு,உங்களுக்குத் தெரிஞ்சதை எழுதிட்டுப்போங்க. என் மேல கோவப்படாதீங்க, அப்படியே பட்டாலும், உங்களுக்குள்ள இருக்கிற மேட்டர் எனக்கு எப்படித் தெரியும்? போலிய அவர் ஆதாரிச்சாரா, இல்லைய்யான்னு நான் "ரொம்ப நல்லவங்க" கேட்டகரியில இருந்துக்கிறேன்.

    ReplyDelete
  26. //பொறம்போக்கு கும்பலில் //
    நீங்க சொல்ற பொறம்போக்கு கும்பல்னாலாதான் இன்னிக்கு நான் எல்லாம் கொஞ்சமாச்சும் சுதந்திரமா பொட்டிய தொறந்து வெச்சிருக்கேங்கிறேன். அவ்வளவு நன்றி எல்லாம் நான் மறக்கலைங்க குழலி, எனக்கு எட்டிய விசயம் இவ்ளோதான். வேற ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.

    ReplyDelete
  27. /*//அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//

    நின்னுட்டேன்!
    அமர்க-ன்னு சொல்லவேயில்ல! எம்புட்டு நேரம்யா நிக்குறது? :)

    இளா, "நிற்க"-ன்னு போட்டு எழுதறதை எல்லாம் பாத்தா அவர் கொஞ்சம் கொஞ்சமா "மூத்த" பதிவர் ஆயிட்டு வராரோ?
    */
    மூத்த பழுத்த பதிவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது

    ReplyDelete
  28. //நிற்க//
    SV Sekar நாடகம் பார்த்து வந்ததுதான் 'நிற்க', அப்போ சேகரரென்ன மூத்தப் பதிவரா??

    ReplyDelete
  29. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  30. என்ன கொடுமைடா இது? ஒருத்தனுக்கு தெரிஞ்சதை மட்டும் எழுதினாத் தப்பா??

    ReplyDelete
  31. (எல்லாருக்குமே..பதிவ சாராதவங்களுக்கும்)
    ஐயா, மக்களே. கொஞ்சம் பார்த்து சூதானமா பேசுங்கய்யா..

    ReplyDelete
  32. இளா..

    சந்தோஷமாய்யா இப்போ?

    அடுத்தது லக்கியா...

    ம்ம்.. நடக்கட்டும்..நடக்கட்டும்...

    ReplyDelete
  33. இளா....
    இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...
    :((

    ReplyDelete
  34. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  35. நல்ல வரலாற்றைத் திரும்பத் திரும்ப எழுதலாம், படிக்கலாம். நம்மை மெருகூட்டும்!
    ஆனால்...! இதுபோன்ற மறக்கப்பட வேண்டிய விடயங்கள்...! பதிவர்களுக்குள் குழப்பத்தையும் பகைமையையும் ஏற்படுத்திவிடக் கூடும். நன்றி!

    ReplyDelete
  36. போன பதிவுல ரவிய பத்தி எழுதும் போது எனக்கு புடிச்ச புடிக்காத விசயத்தையும் எழுதி இருந்தேன். அதுல ரவியின் அதிருப்தி தெரிஞ்சது. அதனாலயே கோவியபத்தி தப்பாச் சொல்லலை. ஆனாலும் போலிய சம்பந்தப்படுத்திவந்த பின்னூட்டங்களை தவிர்த்த வேண்டியது என்னுடைய பொறுப்பு. மட்டுறத்தல் இல்லாததாலயும், நான் புதரக நேரத்துல காலையில எழுந்திருச்சு பார்த்தா பதிலும் வந்திருச்சு,அதுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன் மக்களே. நடுநிலைவியாதியா இருக்கிறத விட்டுறலாமோன்னு தோணுது. நேர்ல ஒரு மாதிரி பொடனி பக்கம் வேற மாதிரியும் மக்கள் இங்கேயும் இருக்காங்க.

    ReplyDelete
  37. //அதனாலயே கோவியபத்தி தப்பாச் சொல்லலை. //

    வேறு எதாவது தப்பாக சொல்லி இருந்தாலும் அதை விமர்சனமாக நான் கருதி இருப்பேன். "மூர்த்தி மற்றும் மும்மூர்த்திகள்" எனக்கு அருள்பாலித்ததை நான் மறந்து பலமாதங்கள் ஆகிவிட்டன. அவற்றை நீங்கள் பதிவில் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  38. மூட நம்பிக்கைகளை எதிர்க்கிற நாத்திகத்தை தவறா புரிஞ்சிகிட்டவங்களுக்கு கோவி சரியான சவுக்கடி கொடுப்பார்

    ReplyDelete
  39. கோவிஜியோட பயோகிராபியை(அவர் மத்தவங்களுக்கு கொடுக்குரது) உங்களது நல்லா டீப்பா இருக்குது

    ReplyDelete
  40. நான் தான் 50 தான்னு தெரியனும் எப்போ வருவிங்க

    ReplyDelete
  41. //இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...//
    இல்லீங்க, சில பின்னூட்டங்களை தவிர்த்திருக்கலாம். நான் சொல்லாத விஷயங்களை அவுங்க அவுங்க பதிவுல விருப்பம் போல சொல்லி இருக்கலாம். அதான் பிரச்சினையே. அதே மாதிரி சிலர் ட்விட்டுகளையும் தவிர்த்திருக்கலாம். ஒரு பக்கவியாதிகளும் இருக்காங்கன்னு இப்போதான் தெரியுது.

    ReplyDelete
  42. அசத்தல்.. நிஜமா முழுசா படிச்சேன்.. நல்லா எழுதி இருக்கிங்க.. போலி விஷயம்னு சொன்னதான அந்த லின்க்ஸ் மட்டும் போக விருப்பம் இல்லை.. நல்லவை மட்டும் தெரிஞ்சிப்போம்.. :)

    ReplyDelete
  43. Chella, thairiyam ellaam ithula venaanga. BLOGs thairiyam waste, ithu oru prechanaiya vara vendamnu sonnathalathaan comments ellaathaiyum delete panninein.

    // நல்லவை மட்டும் தெரிஞ்சிப்போம்.. //
    I agree with Sanjai.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)