Monday, March 31, 2008

என்னையே எல்லாரும் பார்க்குறாங்க

ஒடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்கு போனேன். ஒரு 10 நிமிசம் காத்திருங்கன்னு வழக்கம்போல சொல்லிச்சு வரவேற்பாளர்-அம்மணி(வெள்ளைக்காரி மாதிரி பகட்டு பண்ற ஒரு ஆசியப் பொண்ணு).
ஒடம்புக்கு சரியில்லாம ஒருத்தர் கூட வந்து இருக்கோம்னு கூட ஒரு தயவு தாட்சயண்மே இல்லாம தங்கமணி "மாமா, அங்கே பாருங்களேன். அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா நகத்தை வெச்சு(ஒட்டுதான்) இருக்கு?"ன்னு சொல்ல, கட்டாத கண்ணு அப்பத்தான் கட்டுச்சு. இனிமே நின்னா வேலைக்கு ஆவாதுன்னு மூலையில போட்டு இருந்த நாற்காலியில போயி உக்காந்துகிட்டேன்.

கொஞ்ச நேரம் தலை குனிஞ்சுகிட்டே ஆசுவாசப்படுத்திகிட்டேன். பணிவு எல்லாம் இல்லீங்க, நோவுதான். சித்த நேரம் கழிச்சு சுத்தி உக்காந்து இருக்கிறவங்கள பார்த்தேன். 2 இந்தியக் குடும்பங்க, 3 வெள்ளைக் குடும்பங்க,1 கருப்பு பொண்ணு மட்டும். இந்தியக் குடும்பத்துல இருந்தவங்க என்னையே பார்த்துட்டு இருந்தாங்க, லேஸா சிரிக்கவும் செஞ்சாங்க. அம்மணிகிட்ட திரும்பி
"பார்த்தியா, ஐயாவுக்கு என்னிக்குமே மவுசுதான்".


"உலகத்துல முட்டாள்னா அது நான் மட்டும்தான். வேற எல்லாம் இல்லே. இது வேற கதையா இருக்கும். ஆமா இந்த நேரத்துல கூட கிளுகிளுப்பு கேக்குதோ?".

இந்த பன்னு நமக்குத் தேவையா? இந்த ஊரு கலாச்சாரம் ஆச்சே.. அவுங்கள பார்த்து நானும் சிரிச்சேன். அந்த ஆம்பளையும் சரி, பொம்பளையும் சரி என்னை பார்த்துகிட்டே இருக்காங்களே தவிர ஒரு பதில் சிரிப்பும் இல்லே.
"சே, சிங்கத்த சேதாரம் பண்ணிட்டாங்களே"ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு வெள்ளைக்காரியப் பார்த்தேன். அதுவும் என்னையே பார்க்குது, அதுவும் விடாம. எல்லாரும் என்னையே பார்க்குறாங்கன்னா ரெண்டு விஷயம் தான் இதுல இருக்கு. ஒன்னு நான் ரொம்ப அழகா இருக்கனும், இல்லாட்டி போடக்கூடியதை(இருபல் இணை) மறந்து போடாம இருந்து இருக்கனும். அப்படியே சுத்தி பார்க்குற மாதிரி கொஞ்சம் நேரம் ஜன்னலைப் பார்த்தேன், அப்படியே எதிர்த்தாப்புல இருக்கிற படத்தைப் பார்த்தேன், நைஸா குனிஞ்சு பார்த்ததுக்கப்புறம்தான் பெரு மூச்சு விட்டேன். போட வேண்டியதை எல்லாம் சரியாத்தான் போட்டு இருக்கேன்.

அப்புறம் என்ன? சரி ஒரு புத்திசாலிய எல்லாரும் அப்படித்தான் பார்ப்பாங்கன்னு மனச தேத்திகிட்டேன். எவ்வளவு நேரம்தான் உக்காந்தே இருக்கிறது, கொஞ்சம் உலாவலேம்னு எந்திருச்சு மக்களைப் பார்த்தேன். இப்பவும் எல்லாரும் என்னையத்தான் பார்க்கிறாங்க, ஆனா சலிப்பா, கோவமா. நாம அசந்து இருந்த நேரத்துல, நாம புத்திசாலி இல்லீங்கிறத அம்மணி சைகையாலே அவுங்களுக்கு சொல்லிருப்பாங்களோ? இருக்காது.

வேற என்னவா இருக்கும், இப்பவும் அந்த மக்களை பார்த்தேன், அதே கடுப்பு, கோவம்.

"என்னவா இருக்கும்?"

திரும்பி பார்த்தா சத்தமில்லாம ஒரு தொலைக்காட்சி ஓடிட்டு இருக்கு. அடப் பாவிகளா இதைத்தான் இவ்வளவு நேரம் பார்த்துகிட்டு, சிரிச்சுகிட்டு இருந்தீங்களா?
"தலைக்கு மேல இவ்வளவு பெரிசா படம் ஓடிட்டு இருக்கு நமக்கு இது தெரியாம போச்சே. என்னமோ என்னையதான் பார்த்துகிட்டு இருந்தீங்கன்னு இல்லே அம்மணிகிட்ட சவடால் விட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு மேலையுமா ஒரு கேவலம் வேணும்?"

இப்போ இருக்கிற நோவ விட இந்தக் கேவலம் கடுப்படிக்க மறுபடியும் நான் அவுங்கள பார்க்க ஆரம்பிச்சேன், அவுங்க என்னைய பார்க்க ஆரம்பிச்சாங்க.

15 comments:

  1. :)

    நல்ல அனுபவம்!

    அதை போட்டா வேற புடிச்சீங்களா?

    நல்ல வேளை! சிரிப்பு சீன் வந்ததால தப்பிச்சீங்க!

    ReplyDelete
  2. நல்லா பாத்துகிட்டீங்கய்யா ... சரி, நோவு சரியாச்சா இல்லையா?

    அதுக்குத்தான், ஆராயாம அம்மணிகள்கிட்டே சவடால் விடக் கூடாது :)

    ReplyDelete
  3. அது சரி. ஆமாம், தலைக்கு மேல என்ன இருக்குன்னு கூட பார்க்கறது இல்லையா?

    ReplyDelete
  4. //அது சரி. ஆமாம், தலைக்கு மேல என்ன இருக்குன்னு கூட பார்க்கறது இல்லையா?//

    Paathu irutharna pathivu pottu irukka maattarpa :) lol

    ReplyDelete
  5. தலைக்கு மேல் இருப்பதைப் பார்த்து சிரிச்சாங்களா... :P

    உள்ளே இருப்பதை நினைச்சு சிரிச்சாங்களா... :P

    கொஞ்ச நேரம் பரபரப்பா இருந்திருக்கும், அப்படி என் கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன என்றுக் கேட்கத் தோணியிருக்கும்மே...கேட்டியிருந்தா...

    பாவனாவிடம், ஸ்நேக் பாபு கேட்ட படக் காட்சிப் போலவே இருந்திருக்கும்.. :)))))))))))

    ReplyDelete
  6. /
    பாவனாவிடம், ஸ்நேக் பாபு கேட்ட படக் காட்சிப் போலவே இருந்திருக்கும்.. //
    அது என்ன?

    ReplyDelete
  7. //உள்ளே இருப்பதை நினைச்சு சிரிச்சாங்களா... :P//

    அதான் இருபல் இணை போட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கேனே..அப்புறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு..

    ReplyDelete
  8. இந்தப் படம் பாருங்க..

    http://en.wikipedia.org/wiki/Arya_(film)

    அப்பறம் புரியும்..இல்லாட்டி..யூடுயுபில் தேடுங்க..

    சுட்டிக் கிடைச்சா பிறகு நானும் தாரேன்

    ///
    ILA(a)இளா said...
    /
    பாவனாவிடம், ஸ்நேக் பாபு கேட்ட படக் காட்சிப் போலவே இருந்திருக்கும்.. //
    அது என்ன?
    ///

    அண்ணே, மூளைக்கும்மா இனை...கொடுமையோ..கொடுமை.. :P

    ///

    ILA(a)இளா said...
    //உள்ளே இருப்பதை நினைச்சு சிரிச்சாங்களா... :P//

    அதான் இருபல் இணை போட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கேனே..அப்புறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு..

    ///

    ReplyDelete
  9. ஒடம்பு இப்போ பரவாயில்லயா?
    அப்புறம் இதெல்லாம் அறிவாளிங்க லைப்ல்ல சகஜம்ய்யா :)))

    ReplyDelete
  10. நல்ல காமெடி, வாய் விட்டு சிரிச்சேன்

    ReplyDelete
  11. சரியாக 3 நிமிடம், 50 விநாடிகளில் இருந்து பார்க்கவும்...

    http://www.youtube.com/watch?v=m4DNzD2V5Pc

    விவசாயி இளா = ச்னேக் பாபு என்று பதிவு போட இருந்தேன்.. :P

    விவசாயி டிராக்டர் ஓட்டலாம்..

    அதுக்காக நாம் அவரை ஓட்டலாமா என்று விட்டுவிட்டேன்.. :P

    ReplyDelete
  12. சங்கத்து சிங்கத்துக்கு இதெல்லாம் ஜகஜம். நாங்க இதுக்கெல்லாம் பயந்துட்டா பொழப்ப நடத்த முடியுமா..

    ReplyDelete
  13. ஹி ஹி பல்பா.... :)

    ஒடம்பை பார்த்துக்கோங்க சாரே...

    ReplyDelete
  14. \தேவ் | Dev said...
    ஒடம்பு இப்போ பரவாயில்லயா?
    அப்புறம் இதெல்லாம் அறிவாளிங்க லைப்ல்ல சகஜம்ய்யா :)))\\

    ரீப்பிட்டே ;))

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)