Thursday, April 23, 2009

அமெரிக்கா-1

அமெரிக்கா, பலருக்கு கனவு, சிலருக்கு வெறி. கொல்டி மக்களுக்கோ வாழ்க்கை. இங்கே வந்து 2 வருசம் தான் ஆவுதுங்க.. இந்த ரெண்டும் வருசத்துல என்னத்த தெரிஞ்சிக்கிட்டேனோ அதச் சொல்றேங்க. ஊடால ஊடால நம்ம நாட்டையும் ஒப்பிட்டு சொல்ல வேண்டி இருக்கலாங்க. என்னத்த சொல்ல. மொதல்ல இந்த நாட்டுக்கு வந்தவுடனே எதையுமே வாங்க மாட்டோம். அப்படியே வாங்கினாலும், இந்த ஊர்ல 2 டாலர்னா நம்ம ஊர்ல 100 ரூபாய், இது நூறு ரூபாய் குடுத்து வாங்கனுமான்னு தோணும். ஆனாலும் வாங்காம இருக்க முடியாதுங்களே. இப்படி பணத்தை இந்திய ரூபாய்க்கு கணக்குப் போடறது ஒன்னு இல்லைன்னு ரெண்டு வருசம் இருக்கும். அப்புறம் மாறிபோயிரும்.

பழைய சோத்த வெச்சே பல வருசம் வாழ்க்கைய ஓட்டி இருப்பாங்க. இங்க வந்தவுடனே, சில பேரு விடற பீட்டரு தாங்க முடியாதுங்க. இதுல அம்மணிங்க நம்மள விட சதவீதம் சாஸ்தியாய் இருப்பாங்க. அவுங்களும் அவுங்க உடையும் சீக்கிரமே
மாறிப்போயிரும். இதுல அவுங்களுக்குத்தான் கதவு, சன்னல் எல்லாம் வெச்சு துணி மணிங்க கெடைக்கும். நமக்கு மீறிப்போனா டவுசரும், பேண்டும்தானே.

அட, என்னத்தையோ சொல்ல வந்து எங்கே வந்து இருக்கு பாருங்க,. இங்கன எப்படி வார்றதுன்னு கேட்காதீங்க. சினிமாவுல பார்த்த இடத்தை எல்லாம் நேருல பார்க்கும்போது இருக்க பிரமிப்பு சொல்லி மாளாதுங்க. அது ஊட்டி 7 மைலாவாட்டும், விளக்கு புடிச்சுட்டு நிக்கிற சுதந்திர தேவி சிலையாவட்டும்.

இப்ப இங்க இருக்கிற நெலைமையில எல்லாமே பயமாத்தான் இருக்கு. எப்ப வேலை போவுமோன்னு தொடை நடுங்க வேண்டிகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. அலுவலகத்துக்கு உள்ளே போவும்போது தேய்க்கிற அட்டை மட்டும் வேலை செஞ்சுட்டாவே அன்னிக்கு தப்பிச்சேன்னு இருக்கு. இந்தியாவிலேயும் இதே நிலமைதான். பொட்டி தட்டுற மக்களுக்கு ஏழரை போல. வந்து இறங்கினப்புறம் திருப்பி அனுப்புறாங்க, H1bல இருக்கிறவங்களுக்கு வேலை தர்றது இல்லே, விசா நீட்டிக்கிறது இல்லே இப்படி பல சேதி தெனமும் கேட்டுக்கிட்டே இருக்கோம். கஷ்டம் எல்லா இடத்திலேயும்தாங்க.

சரிங்க, இப்படி பல முகம் கொண்ட அமெரிக்காவப் பத்திதாங்க எழுதலாம்னு இருக்கேன். அட இப்போ அமெரிக்கன்னாவே வட அமெரிக்காதானுங்களே. என்ன நமக்கு தெரிஞ்ச விசயத்தையும் கொஞ்சம் தேடியும்தான் தொடராக்கபோறேன். சின்னப்பையன்னு பெரியவங்க கோச்சுக்காம தப்பை சரியாச் சொல்லுங்க.

கொசுறு: போன வாரம் ஒரு காலை நேரத்துல ”பழைய சோறும், தொட்டுக்க கோங்குரா தொக்கும் சாப்பிட்டேன்“னு சொன்னேன், ரெண்டு பேரு நக்கலா, ”அங்கே எல்லாம் பழைய சோறு சாப்பிடுவாங்களா?”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க? இங்கே பழைய சோறு திங்கறது அவ்ளோ கஷ்டமா?

Wednesday, April 1, 2009

ஒரு வெளம்பரந்தான்

விளம்பரங்கள் நான் விரும்பி படிக்க இருந்த பாடமுங்க. நமக்கு கெடச்ச மார்க் வெச்சு (டிகிரி பெயிலானதை எப்படியெல்லாஞ் சொல்லவேண்டி இருக்கு பாருங்க) சீட்டு தர மாட்டேன்னு சொல்லிபுட்டாங்க PSG Techகாரவுங்க. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல. அதுல தான் சேரலாமுன்னு இருந்தேன், டிகிரி கெடைக்காததால பொட்டி கட்டுற பொழப்புக்கு வரவேண்டியாதாப் போயிருச்சுங். அதுல இருந்து என்னமோ இந்த வெளம்பரம் எல்லாம் நமக்கு ரொம்ப புடிக்கும். YouTube வந்தப்பொறம் வெளம்பரம் பார்க்குறதையே பொழப்பா எல்லாம் வெச்சிருந்தேன். எதுக்கு இப்படி கத சொல்றான் இவன்னு பார்க்குறீங்களா? போனவாரம் ஒரு வெளம்பரம் பார்த்தேனுங். வெளபரத்தைப் பாருங்க. பொறவால பேசுவோம்.


இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?

நன்றி பரசு:
இதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.

Monday, March 16, 2009

டேய்.... பேசிக்கிட்டிருகோம்ல

செல படங்களோட விழாக்கள் பார்க்க பார்க்க சந்தோசமா இருக்கும். அது மாதிரிதான் இதுவும். பதிவே போடமுடியலைன்னு இருக்கிற நேரத்துல இது மாதிரி சில படத்தப்போட்டுத்தான் கணக்குப் பண்ண வேண்டியதா இருக்கு.



மேலே இருக்குற படம் செம காமெடியா இருக்குமே? இவரு Magic Manஆம். நல்லாத்தான் படம் பண்ணிட்டு இருந்தீங்க பிரபு.

வெவரமா பாக்கனுமா இங்கே போங்க








விஜய நல்ல பையன், அமைதியானப் பையன்னே நான் இது வரைக்கும் நினைச்சிட்டுகிட்டு இருந்தேங்க. இப்படி சில நெச முகம் வந்தாத்தான் தெரியுது... நேத்து வரைக்கும் விஜய் மேல வெச்சிருந்த மரியாதையே போயிருச்சுங்க. என்னமோ. சாரிங்க விஜய். விரக்தியோட எல்லையோ என்னமோ, பாத்து சூதானமா இருந்துக்கோங்க.. அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்.. படம் போனா வரும் ஆனா இமேஜு?

Thursday, February 26, 2009

ஆஸ்கார் வாங்கினா மட்டும் என்ன?

இந்தியா திரும்பிவரும் போது விமான நிலையத்தில்


பின்பு...




Red Carpet, Lime Light, SDM One of the Hero, US visit இருந்தாலும்.. வீடு இதுதானுங்களே. ஆட்டம் முடிஞ்சு போச்சு, வேலையப் பாருடா செல்லக்குட்டி.. :(



Azharuddin Ismail, who played young Salim in the Oscar-winning film “Slumdog Millionaire,” sat in his modest Mumbai home Thursday after returning from the U.S. (Arko Datta/Reuters)

நன்றி: WSJ, The Hindu(X)

Tuesday, February 17, 2009

குருவிகள்: 6 வார்த்தைகளில் கதை/கவிதை

முன்னாள் பதிவர்கள்(ஆமாங்க ட்விட்டர்ல இருக்கிற எல்லா மக்களும் பதிவுகளுக்கு டாடா சொல்லிடறாங்க. ஆனா எல்லாப் பதிவுகளையும் படிப்பாங்க.முக்கியமான விசயம், மூத்தப்பதிவர்களுக்கே உரித்தான ஸ்டைல்ல பின்னூட்டம் போட மாட்டாங்க. என்ன ட்விட்டர்? ஊர்ல திண்ணை இருக்கும் பார்த்திருக்கீங்களா?. எல்லா ஊர்ப்பெருசுகளும் வேலை வெட்டி இல்லாம வெத்தலை பாக்கு போட்டுகிட்டு ஊரைப் பத்தி பொரனி(எந்த ன?) பேசுவாங்களே அந்த மாதிரி ஒரு திண்ணைதான் இந்த ட்விட்டர்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி லிங்கன் ஒரு மேட்டரைச் சொன்னாரு. அதாவது 6 வார்த்தைகளில் கதை எழுதனும். அது கவிதை/ஹைக்கூவா மாறிடுச்சுங்க. சுவாரஸியமா போகுது ட்விட்டர் இப்போ. வெட்டியா பொழுதப் போக்கினாலும்..6 வார்த்தை கவிதைகள்ல கலக்கிட்டாங்க. இப்ப், பதிவுகளை விட ட்விட்டர் செம ஜோராப்போவுதுங்க. 6 வரிகள்ல கவிதை எழுதலாம் 6 வார்த்தைகள்ல?

6 வார்த்தைல கவிதை/கதை/ஹைக்கூ

இளா: தெருவில் பிச்சைக்காரன், ஒரு ரூபாய் கூடவா இல்லை?

ajinomotto : பேரன் பேத்தி கண்ட உனக்கு சின்ன வயசு ஜோடியை மனசு தேடினால் நீ சூப்பர் ஸ்டார்...

gchandra : நீ இப்போ என்ன செய்யறே?, டிவிட்டரில் நான்.

ajinomotto : சினிமா வாய்ப்பு.சோப்பு.உழைப்பு.3 ஹிட்டு.பஞ்சு டயலாக்கு.நாளைய தமிழக முதல்வர்

பெனாத்தலார் : கடன்காரன் தொல்லை; கவலை இல்லை! மந்திரி பிள்ளை!

பெனாத்தலார் : தலால்தெருவின் பிச்சைக்காரன் காரை வெறிக்கிறான். நாளைக்கு நீ

இலவசக் கொத்தனர் : இணையம் இல்லை. விண்டோஸ் திறந்தேன். உலகம் அழகு!

பெனாத்தலார் : அவனைக் காப்பியடித்து கதை படைத்தேனாம். அவனுமா படித்தான் ஆங்கிலம்?...

இளா : பதவியேற்றபின் நடிக்க வேண்டியிருக்கு, நடிகனாவே இருந்திருக்கலாமே!...

பெனாத்தலார் : அட்டுபிகர். அழகாய்த் தெரிந்தாள். ரெண்டுநாள் ரயிலில் இலுப்பைப்பூ!...

இளா : இருட்டு, தெரியவில்லை அடுத்த வீட்டு ஃபிகர்.

இலவசக் கொத்தனர் : பாழாப்போன பத்மஸ்ரீ. பாவம் விவேக். சிரிக்கிறாரு வடிவேலு!...

இளா : தமிழில் கவிதை எழுதப் பழகனும், வரி இல்லாவிடினும்.

இலவசக் கொத்தனர் : தொலைபேசி, செல்பேசி, இணையம் இருந்தாலும் கம்யூனிகேஷன் கேப்!...


இலவசக் கொத்தனர் : பையனோடு நட்சத்திரம் பார்த்து நாளானது. நன்றி ஆற்காட்டார்!..

இளா : இப்போது டிவிட்டரிலும் குட்டிக் கதைகள்!


gchandra : யாருக்கும் வேலை இல்லை, டிவிட்டரில் குட்டி கதைகள்

இளா : பினாத்தல் இலவசம்- டிவிட்டரில்

பெனாத்தலார் : கும்மிருட்டு, புதிதாய்த் தெரியுது பக்கத்துவீடு. தாங்க்ஸ் ஆற்காட்டார்!..


இளா : மின்சாரம் இல்லா உலகம், பளிச்சென்று உறவுகள்

gchandra : குருவி பறந்துபோச்சு. வில்லு உடைஞ்சுபோச்சு. வேட்டைக்காரன் ஐயோ பாவம் !!...

இலவசக் கொத்தனர் : ஆறு வார்த்தைக் கதையா? காதலியின் கண்ணுக்குள் பாரு!

Wednesday, February 11, 2009

ராம சேனா செஞ்சாதான் தப்பா?

காட்சி-1
சூர்யா: கலெக்டர் சார், நீங்க ஒரு கோர்ட் வெச்சி, இது சரி, இது தப்பு, இது பண்ணாத அப்படின்னு சொன்னா சரி, நாங்க சொன்னா தப்பா? ஏன்னா உங்க கிட்ட அதிகாரம். நாங்க படிக்காதவங்க. (படம் தளபதி)

மக்களிடமிருந்து விசில் பறக்கிறது. இது சினிமா.

காட்சி-2(உண்மைச் சம்பவம்)

இடம் : மருதமலை மேல் ஒரு parking.

கல்லூரி பெண்கள்(போலிருக்கும் ஒரு 5/6 பேர்) ஜீப்பின் பின்னாடி கண்ணீருடன் அமர்ந்திருக்க, ஆண்கள் எல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
காரணம்- ”அவுங்க எல்லாம் எதுக்கு சார் மருதமலைக்கு வராங்க? மலையில இருக்கிற ம்ரத்துக்கு கீழ ஒதுங்கி......... க்காகதான். அவுங்க அப்பா அம்மாகிட்ட சொன்னாதான் திருந்துவாங்க. படிக்கிற வயசுல என்ன அ**ப்பு வேண்டிக்கிடக்கு?”

விசாரித்துக் கொண்டிருந்த நான் ”பாவம் சார், விட்டுருங்க தெரியாம செஞ்சிட்டாங்க” பரிதாபத்துடன் நான் வேண்டிகொண்டேன்

காட்சி-3
மெரினா கடற்கறை(ரை) சென்னை, மற்றும் பூங்காகளில் ‘சேரும்’ ஜோடிகளைப் பிரிக்க அரசு வாய்மொழி உத்தரவு.
காவல்துறை: ..........தா, இதுக்குதான் நாங்க போலீஸ் ஆனோமா?

மக்கள்: இப்படித்தான் செய்யனும், அங்கே என்ன லவ்வு வேண்டிக்கிடக்கு?

காட்சி -4

செய்தி: மங்களூரில் இராம சேனா பப்’ல் அடிதடி. ஆண் பெண் பாராமல் தாக்கினார்கள்.

மக்கள்: இவன் யாரு பபுக்குள்ள போயி அடிக்க?

என்ன கொடுமை இது சரவணண் - மறுபடியும் மொதோ காட்சிய படிச்சுப்பாருங்க.

Sunday, February 1, 2009

தலை குனிந்து கொள்ளுங்கள் தமிழர்களே

ஈழத்தமிழனுக்கு வேலை மறுக்கும் தமிழர்கள், மாற வேண்டியது எது? மாற்ற வேண்டியது எதை? அரசியல்வாதிகள் செய்வதுதான் நமக்குத்தெரியுது, பொதுமக்கள் செய்றது மட்டும் சரீங்களா?




பார்த்து முடிச்சுட்டா தலைப்பை மாத்திப் படிங்க.
தலை குனிந்து கொள்ளுங்கள் ”தமிழகத்து“ தமிழர்களே. சனம், நட்பு, சொந்தம், பந்தம், குடும்பம் எல்லாத்தையும் விட்டு நம்மை நம்பி வர்றவஙக்ளுக்கு ஒரு வேலை கூட குடுக்க முடியாதா? அரசாங்கம்தான் செய்யாது, வேலை குடுத்துட்டு இருக்கிற முதலாளிங்களுமா?

Tuesday, January 13, 2009

துணுக்ஸ்

சத்யம் பண்ணினது தப்பே இல்லேடா?

ஏன்?

நாம வேலை பார்குற மாதிரி ஏமாத்தினோம். அவுங்க லாபம் வந்த மாதிரி ஏமாத்திட்டாங்க. அது தப்பா?





உன்ன அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னதுக்கு ஏண்டா அவனை அடிக்கிற?

என்ன செருப்பால அடிப்பேங்கிறததாண்டா அவன் அப்படிச் சொல்றான்..




என்னாது உங்க MD அறை ஒரு கோயில் மாதிரியா?

ஆமாண்டா, செருப்பால எவனும் அடிச்சிற கூடாதுன்னுதான் வெளியிலே ஹூவை கழட்டி வெச்சிட்டுதான் போவனும்.




இந்த விளம்பரமே தப்பு மச்சி..

ஏன்?

விஜய் 'நடிக்கும்' படம்னு இல்லே போட்டிருக்கு.




திருமங்கலத்துல டெபாசிட்டே போயிருச்சுங்களே, நம்ம தொண்டர்களை எப்படிச் சமாதானப் படுத்துவீங்க?

நமக்கு இலக்கு 2011தான், இது 2009ன்னு சமாளிச்சுடலாம்.

Tuesday, December 23, 2008

இஞ்சினியர் மாமா

ஏழாவது படிக்கும் போது, எதிர்காலத்துல பொறியியல் படிக்கிறதுதான் என்னோட டார்கெட். அந்தச் சமயத்துல எங்க ஊர்ல பொறியியல் படிச்சவங்க 3 இல்லைன்னா 4 பேர்தான் இருப்பாங்க. மீதி எல்லாம் Diploma இல்லாட்டி Bsc/Msc தாங்க. பொறியியல் படிச்சவங்கள்ல மூத்தவரு எங்க இஞ்சினியர் மாமா. அரசு வேலை, கார், புல்லட்ன்னு இருக்கிறவரைப் பார்த்தா எல்லாருக்கும் அப்படி இருக்கனும்னுதான் தோணும். அப்படியே எனக்கு தோணிப்போச்சு.

அவுங்க வீட்டுல நாங்க ரெண்டு வருசம் வாடகைக்கு குடியிருந்தோம். அதாவது 9,10 படிக்கிற நேரத்துல. அந்த காலகட்டம் எல்லாருக்குமே வாழ்க்கையின் படிக்கட்டு. அந்தச் சமயத்துல அவுங்க வீட்டில இருந்ததுதான் என்னோட மொத படிக்கட்டா ஆனது. மாமாவும் அத்தையும் படின்னு சொல்றது ஒன்னும் புதிசா இல்லை. ஏன்னா எல்லாரும் சொல்றதுதானே. ஆனா, அந்த ரெண்டு வருசத்துல அவுங்க சொல்லிக்குடுத்தது வாழ்க்கையின் பாடத்தைப் பத்தி. மரியாதை, குடும்ப சூழல்க்கு தகுந்தபடி வாழ்றது, வாழ்க்கைய எப்படி அமைச்சிக்கிறது இதெல்லாம்தான். எங்க வீட்டுல இதை எல்லாம் சொல்லி இருந்தா கண்டுக்காம விட்டிருப்பேன். ஆனா அவுங்க ரெண்டு பேரும் சொன்ன விதம், பசுமரத்தாணியாட்டம் நின்னுருச்சு.

வாழ்கையின் சக்கரத்துல எல்லாரும் சிதறித்தான் போனோம். மாமா வீட்டுக்கும் எங்களுக்குமான தொடர்புக்கான தொலைவு அதிகமாச்சு. ஆனாலும் மாமா பையன் கூட கடைசி வரைக்கும் அதே பாசம் இருந்துச்சு, மூத்தவர்னாலும் ஒரே செட்டாகிட்டோம். மாமாவுக்கு செல்வாக்கு ரொம்ப அதிகம், பணமும் கைநிறைய, அதனால மாமா பையன் தொழில்ல இறங்கினது ஒன்னும் பெருசாத் தெரியல.

போன மாசம் ஒரு நாள் அம்மாகிட்ட ஒரு போன், "இஞ்சினியர் மாமா இறந்துட்டாருடா, மாரடைப்பாம்". அதுக்குமேல எனக்கு பேச ஒன்னுமேஇல்லை. சிலரோட இழப்புக்கு யார் தோள் மேலயாவது சாய்ஞ்சு அழுனும் தோணும், சிலரோடதுக்கு கதறி அழனும்னு தோணும். ஆனா, மாமாவோட இழப்புக்கு எனக்கும் எதுவுமே பேசத்தோணலை. ஒரு நாள் முழுக்க பிரமை பிடிச்ச மாதிரியே அலுவலகத்துல இருந்தேன். எந்த வேலையும் பார்க்கலை. ஏன், அத்தை வீட்டுக்கு பேசனும்னு கூடத் தோணலை. ஒரு வாரம் இப்படியே விரக்தியாவே கடந்தது.

ஐயோ, அத்தையின் அந்த கம்பீரம் தொலைச்ச முகத்தையும், தகப்பனை இழந்த மாமா பையனின் சோக முகத்தையும் எப்படி பார்ப்பேன்? அவுங்க வீட்டுக்கு போனா "மாப்ளே"ன்னு சொல்ற சிம்மாசனக் குரல், இதெல்லாம் இனிமே கிடைக்குமா?.. என்ன செய்ய முடியும்? மாமவோட கால புடிச்சி அழ வேண்டிய நேரத்துல எங்கோ ஒரு தேசத்துல இருந்துகிட்டு இப்படி வேதனைப் படுறது எவ்வளவு பெரிய சோகம், சாபம்? இந்த மாதிரி சமயங்கள்லதான் அயல்நாட்டு வாழ்க்கை மேல ஒரு வெறுப்பு வருது.

மாமாவின் ஞாபகங்கள் நிறைய நினைச்சுப் பார்க்கிறேன், அவர் சொன்ன விசயங்கள், வாழ்க்கையில அந்த காலத்துல படிச்சு முன்னேறுன வைராக்கியம், சாதாரண நிலைமையில இருந்து இன்னிக்கு ஊருல ஒரு பெரிய நிலைமைக்கு வர காரணமா இருந்த அவரோட உழைப்பு, எதையுமே சாதாரணமா நினைக்கிற குணம் இதெல்லாம் யாருக்கு வரும். எங்களை எல்லாம் விட்டு போக வேண்டிய வயசா இது? இந்தப் பதிவு போடும் போது மட்டுமே ரெண்டு முறை அழுதிருக்கேன். சில பிரிவுகளை மனசு ஏத்துக்காது, மறக்காது. அது மாதிரிதான் மாமாவின் பிரிவும். உங்க ஆத்மா சாந்தியடைட்டும் மாமா!

Sunday, December 14, 2008

அமெரிக்காவின் நிலைமை?


போன வருசம் Statue Of Liberty போயிருந்த போது எடுத்தது. இதுதான் இன்னிக்கு அமெரிக்காவின் நிலைமைன்னு போனவருசமே நமக்கு தெரிஞ்சிருக்குப் பாருங்களேன்.


என்னை அமெரிக்கா வெளியே போகச் சொன்னா .. மேலே இருக்கிற படம்தான் பதிலு.மேலேன்னா மொத மேலே.

ஆக மொத்தம் ரெண்டு படங்கள்ல ரெண்டு விசயமாச்சுங்களா?

Wednesday, December 3, 2008

BlogOgraphy:கோவி.கண்ணன்

கோவி.கண்ணனை(கோவி)யுடன் பதிவுகள் மூலமாக 2006ல் ஏதோ ஒரு தேதியில் தனி அரட்டையில் பழக்கமாச்சுங்க. முதல் அறிமுகத்துல ரெண்டு பேருக்குமே ஒரு ஆச்சர்யம். ரெண்டு பேரும் ஒரே தொழில்ங்கிறதும், ஒரே காலத்துல அவர் வேலை பார்த்த இடங்களில் இருந்திருக்கேங்கிறதும். நான் அவரை பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வந்த போது, அவர் என்னை ஏற்கனவே பார்த்திருப்பதாவும், நல்லாத் தெரியும்னும் சொன்னாரு. அத்தோட நிப்பாட்டிருந்த இந்தப் பிரச்சினையே இல்லே. அவரோடப் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வெச்சுட்டு, ஞாபகம் இருக்கான்னு கேட்டாரு, தெரியலைன்னதும், "யோசனை பண்ணிச் சொல்லுங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ஒரு நாள் முழுக்க அரை மணி நேரத்துக்கு ஒரு முறை படத்தை பார்க்கிறதும், ஞாபகம் வருதான்னு யோசிக்கிறதாவுமே இருந்தேன். அடுத்த நாள் அவரை அரட்டையில புடிச்சப்போதாங்க சொன்னாரு, அவர் என்னைப் பார்த்தது இல்லேன்னும், சும்மானாச்சு படத்தை அனுப்பினேன்னாரும். அப்போதான் இந்த மனுசனோட குசும்பு தெரிஞ்சுதுங்க. அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!

அவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் எல்லாம் வழக்கம் போலதாங்க இருந்துச்சு. ஒரு சார்பில்லாம, மொக்கைகளும், கும்மியும் கொண்டாட்டமுமா. நட்சத்திர வாரத்துக்கு அவர் எழுதுன கதை, அவரோட பதிவுகள்ல சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். தன்னோட எழுத்துக்கள்ல பெரிசாவோ, சிறிசாவோ, ஏன் அழுத்தமோ இல்லாம இருந்தப் பதிவுகள் U டர்ன் அடிச்சது 2008 பிப்ரவரிலதான்.

அதாவது கருத்துக்களை 'காலங்கள்'ல அள்ளி வீசிட்டு இருந்தவருக்கு அது சோதனை காலம். கருத்து கந்தசாமின்னு பேர் வந்ததும் அப்போதான்.


போலியின் ஒரு அங்கமாவே எண்ணி, கோவிய ஒரு கும்பல்சில நண்பர்கள் தாக்கு தாக்குன்னு தாக்க, கோவி ஓடியோ ஒழியவோ இல்லே. ரெண்டே பதிவுதான், சட்டுன்னு ஃபினிக்ஸ் மாதிரி வந்தாரு. அதுவரைக்கும் மொக்கை, நகைச்சுவை, வெளையாட்டு, கவிதைன்னு பதிவுகள் வந்துட்டு இருந்துச்சு. அப்போ இருந்து கருத்து, கருத்து, கருத்துதான். அநேகமா கோவி இமேஜ் இனி டேமேஜ், அப்படிங்கிற நிலைமைல டாப் கியருல மேல வந்துட்டு இருந்தாரு கோவி. யாருமே எதிர் பார்க்காத ஒரு முயற்சி, வாழ்க்கையில கடை பிடிக்க வேண்டிய முயற்சி அது.

வாரணம் ஆயிரம்ல அப்பா சூர்யா சொல்லுவாரே, எட்ஜ் வாங்கினேன்னு சொல்லி கடுப்பாயி 6 விக்கெட் எடுத்த கதை. அந்தக் காட்சி பார்க்கும் போது கோவிதான் மனசுல வந்தாரு. இது எனக்கும் ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டேன். கருத்துக்களை வீச ஆரம்பிச்சப்போ நான் தனி மடல்ல பதிவுகளின் தாக்கம் குறையுதுன்னு சொன்னேன். அப்புறம் அவர் பதிவுகளை படிப்பதை நிறுத்திக்கிட்டேன். மே மாதத்துல இருந்துதான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா பின்னூட்டினதே இல்லே. ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. கருத்துகள் மட்டும் வந்துட்டுதான் இருக்கு. நடுநடுவே பதிவர் சந்திப்புகளும். கருத்து ஆரம்பிக்கும் வேகம் குறைஞ்சு கடேசியா உங்க இஷ்டம்னு முடிக்கிற அவர் தோரணை எனக்குப் பிடிக்கலை.

'என் வீட்டு பூசையறையில பெரியாரில்லை, பிள்ளையார்தான்'னு எதுக்கோ சொன்ன வார்த்தை இன்னும் மனசுல இருக்கு.

"வெளுத்ததெல்லாம் பால்னு நம்புறாரு, அதான் அவருக்கு ஒரு சோதனையை குடுத்துச்சு"

இப்போ அவர் பதிவுகள் சூடாகாம இருந்ததே இல்லே. தூள் கிளப்பிட்டு இருக்காரு, எந்த அளவுக்குத் தெரியுங்களா?? தமிழ்ப்பதிவுலகுல சிங்கைன்னா கோவிங்கிற அளவுக்கு.

Update: மக்களே மன்னிக்கவும், போலி மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அனைத்து பின்னூட்டங்களையும் அழிக்க வேண்டிய கட்டாயம். போலி பத்தின உங்க கருத்துக்களை சொல்ல வேணாமே.
அடுத்த BlogOgraphy: LuckyLook

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)