பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா
எழுதியவர்: பா.விஜய்
பாடல் : யாரது.. யாரது
பாடியவர்கள்: கார்த்திக் , சுசித்ரா
எழுதியவர்: யுகபாரதி
பாடியவர்கள்: கார்த்திக் , சுசித்ரா
எழுதியவர்: யுகபாரதி
பாடல் : ஸ்டெப் ஸ்டெப்
பாடியவர்கள்: பென்னி தயாள் , மேகா
எழுதியவர்: விவேகா
இந்தப் பாட்டுக்கு இசையமைச்சது விஜய் ஆண்டனியோன்னு சந்தேகப்படுற அளவுக்கு ஆரம்ப இசையும், இசைக் கோர்வையும். ”நிலாவே வா”அஃதே அஃதே வில ஆரம்பிச்ச ஆட்டம் இந்தப் பாட்டிலும் தொடருது. மேற்கத்திய இசையில் ஒரு களோபரமே நடந்திருக்கு. விஜய் ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்த்த பாடல். வித்தியாசம் பண்ணியிருக்காரு விதயாசாகர். வழக்கமா விஜய் பாட்டுன்னாவே போற்றித்தான் பாடனுமா? யூ டூ விவேகா?
பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை
ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை
பாடல் : சடசட சடசட
பாடியவர்: கார்த்திக்
எழுதியவர்: யுகபாரதி
மீண்டும் கார்த்திக், யுகபாரதி. டிபிகல் கார்த்திக், வித்யாசாகர் பாடல். இதென்ன யுவன் பாட்டு மாதியிருக்கேன்னு கேட்கத் தோணுது. மீண்டும் மேற்கத்திய சாம்ராஜ்ஜியம். புல்லாங்குழல் வரவேண்டிய இடத்தில் கூட கீபோர்ட். ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் அதே துள்ளல், வேகம் உள்ள பாட்டு. கோவில் படத்துல ஹாரிஸ் போட்ட “சிலுசிலுவென தென்றல் அடிக்குது” சாயல் ரொம்பவே பல்லவியில தெரியுது. அதுதான் மனசுல நெருடுது.”காதல் தெருவிலே என் ஆசை அலையுதே நீங்க நினைவினிலே நிழல் கூட வெளுக்குதே”
”குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே”
பாடல் : பட்டாம்பூச்சி
பாடியவர்: கே.கே, ரீட்டா
எழுதியவர்: கபிலன்
ஆரம்ப பாடல் இல்லைன்னா என்ன, எனக்கும் ஒரு வாய்ப்பு வருமென கபிலன் காத்திருந்திருப்பார் போல. semi beatல் ஒரு காதல் பாடல். மீண்டும் 90களில் பாட்டமைத்தது போலவே இந்தப் பாட்டும். இந்தப் பாட்டி பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காதலர்களின் தேர்வா இருக்கும் பாடல். அரசியலுக்கு உள்குத்து வெச்சும் ஒரு வரி. தெரிஞ்சே செஞ்சிருப்பாங்களோ? இந்தப் பாட்டே எனக்கும் புடிச்ச பாட்டு, திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கு. ”அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..”
ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, 4 வருடங்களாக விஜய்க்கு முன்னுரிமை தந்தே வந்த பாடல்களைக் கேட்டு கேட்டு சலிச்சுப் போன நேரத்துல நல்லவிதமாய், வித்தியாசமாய் அமைந்த பாடலகள். இது விஜய்க்கும், வித்யாசாகருக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேருக்குமே ஒரு hit தேவைப்படற நேரத்துல வித்யாசாகர் தனக்கு குடுத்த வேலையை திருப்திகரமா முடிச்சுட்டாரு. அப்ப விஜய்?

நீங்க சொல்லிருக்கீங்களேன்னு யாரது கேட்டேன்.. என்ன ஆனாலும் அனுராக விலோசனனாயி மாதிரி வர்ல பாஸ்! (அதுக்காக அதே பாட்டை எல்லாரும் பாட முடியுமான்னு எடக்கு மடக்கா கேக்கப்பிடாது..)
ReplyDeleteவிளக்கமான விமர்சனம்
ReplyDeleteஇனிமேல் தான் பாடல்களைக் கேட்கணும்
ReplyDeleteஇப்படத்தின் பாடல்களை ஆவலோடு எதிர்பார்த்தேன், விஜய்க்காக அல்ல வித்யாசாகருக்காக
உங்க குறிப்பை மீண்டும் வாசிச்சுக்கொண்டு பாடல்களைக் கேட்கிறேன்
அதே பாட்டை எல்லாரும் பாட முடியுமா?
ReplyDelete:))))
ReplyDelete5 பாட்டுமே ஹிட். எழுதி வச்சிக்கோங்க
கார்க்கி,
ReplyDelete:)