Thursday, December 15, 2005

தொடர்பு எல்லை

இன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.



நண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.



இந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.



இப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே?



கொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.

அதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாடித்திரையில் கிடைச்சிடுமா, என்ன?

 வருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.



சரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க!

No comments:

Post a Comment

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)