Saturday, September 24, 2005

(ஹ)அரிக்கேன்

(ஹ)அரிக்கேன்.

(ஹ)அரிக்கேன்,நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஊர்ல, கரண்டு இல்லாத வீட்ல, ராவுக்கு (ராத்திரிக்கு) வெளிச்சத்துக்காக ஏத்தி வைப்பாங்க. அதுக்கு பட்டணத்துல சிம்னின்னும், எங்க ஊர்ல ராந்தல்ன்னும் பேரு. 2 வாரமா அரிக்கேன்'ங்ர வார்த்தை அடிக்கடி தொலைகாட்சியில், செய்தித்தாள்களிலும் தலைப்புச்செய்தியாய் வருது. அட என்னடா நம்ம ஊர் மேட்டரு எல்லாம் அமெரிக்காவுல அடிபடுதே என்னான்னு பார்க்கலாம்னு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டாதான் தெரியுது, அது அமெரிக்காவுல வர்ற புயலோட பெயராம். கத்த்ரீனா, ரீட்டான்னெல்லாம் பேர் வெச்சுருக்காங்க.

அரிக்கேன் அப்படின்னா துர்தேவதைன்னு அர்த்தமாம். இதனால அதிகம் பாதிக்கபடறது கடலோரத்துல இருக்கிற மட்டும் இல்லை, மத்திய அமெரிக்காவும் சூறாவளின்னால பாதிக்கபடுது. ஒவ்வொரு வருஷமும் உயிகளின் இழப்பு அதிகமாயிட்டே வருது. இதுக்கு என்னதான் முடிவு? கடவுள்தான் சொல்லனும்.

அதிகப்படியான தமிழ் மக்களை கொண்ட நகரம் ஹுஸ்டன். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஹூஸ்டன் நகர மக்களை வெளியேர அமெரிக்க அரசு சொல்லிருக்காங்க. உயிருக்கு பயந்து மக்கள் எல்லோரும் ஒரே நேரத்துல மூட்டை முடிச்சுகளுடன் வெளியேர, வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கு. இன பாகுபாட்டோடுதான் சேவை செய்யறாருன்னு கத்ரீனாவால கெட்ட பேர் வந்துருச்சு, ரீட்டாவ எப்படி சமாளிக்க போறாரோ?

ஆமா ஹரிக்கேன்னுக்கு துர்தேவதைன்னா அர்த்தம்ன்னா, நம்ம ஊர்ல ஏன் விளக்குக்கு இப்படி ஒரு பேர்? இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர்? தெரிஞ்சா சொல்லுங்களேன்.

Monday, September 19, 2005

சானியா மிர்சா


சின்ன வயசு, டென்னிஸ்ன்னா என்னான்னு தெரிஞ்ச காலத்தில், நம்மளோட Fav. சபாடினி. யார் யாருக்கோ நாம support பண்றோமே, நம்ம நாட்டிலிருந்தும் யாராவது விளையாட வந்தால் நல்லாயிருக்குமேன்னு நினைப்பேன். அப்புறம் மேரி பியர்ஸ், அன்னா அப்படின்னு வந்தாங்க, அப்போ ஜொள்ளு விட்டது என்னவோ உணமைதாங்க.

அந்த நேரத்தில் தான் நம்ம சானியா மிர்சா களம் இறங்கினாங்க. அவுங்க அழகுதாங்க, ஆனாலும் நாம என்னமோ அவுங்ககிட்ட ரசிச்சது விளையாட்டதானே தவிர அழகை இல்லை. எல்லா இந்தியனுக்கும் விளையாட்டு மேல இருந்த தீராத தாகம்தாங்க எனக்கும் இருந்தது. பெரிய levela பரிசு வாங்கலன்னாலும் நல்லாவே விளையாடறாங்க. கண்டிப்பா இன்னும் ஒண்ணு இல்லை ரெண்டு வருஷத்துல பெரிய level kku வந்துருவாங்க.

ஆனா இது நம்ம மக்களுக்கு பொறுக்காதே. சானியா போடுற துணி இஸ்லாமத்துக்கு ஒத்து வராதுன்னு ஒரு அமைப்பு, சானியாவுக்கு மிரட்டல் விட்டு இருக்காங்க. இதுல என்ன கொடுமைன்னா, என்ன மாதிரி சாமானியனுக்கு சானியா முஸ்லிம்ன்னு தெரிஞ்சதே அந்த மிரட்ட்லுக்கு அப்புறம் தான். ஏனுங்க சானியாவுக்கு ஒரு 8 கஜம் சேலை கட்டி டென்னிஸ் விளையாட விட்டுரலாமா? யோசனை பண்ணுங்க சாமி. இப்பத்தான் இந்தியா ஒவ்வொரு விளையாட்டிலும் பிரகாசிக்க ஆரம்பிச்சிருகாங்க இந்த நேரத்துல இது எல்லாம் தேவையா?

Thursday, September 15, 2005

ஊர் சுத்தல்- கர்நாடகா


நம்ம ஊர்ல இந்த வருஷம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சி, விவசாயம் பண்றவங்களுக்கு ஏதோ பரவாயில்லை. ஆனா பாருங்க, எங்க ஊர்ல இப்போ கூலி வேலைக்குதான் ஆளுங்க கிடைக்கவே மாட்டேங்றாங்க. காரணம் என்னன்னு யோசிச்சு, விசாரிச்சு பார்த்தாதான் உண்மை தெரியவருது. முன்னாடி தோட்டத்துல வேலை பார்த்த அத்தனை பேரும் Factory இல்லாங்காட்டி கடைல வேலை பார்க்கிறாங்க.

காரணம்:
1. தோட்டத்துல வேலை பார்க்கிறதை கெளரவ கொறச்சலா, அடிமைத்தனமா நினைக்கிறாங்க.
2. பணம் கொஞ்சம் கூடுதலா கிடைக்குது.
3. வாரம் ஒரு நாள் விடுமுறை.
4. வேர்வை சிந்தி உழைக்க தயாராக இல்லை.


ஆனா பாருங்க போன வாரம் கொஞ்சம் கர்நாடகா விவசாய நிலங்களை சுத்தி பார்க்க ஒரு வாய்ப்பு கெடைச்சுது. அங்கே, வேலை ஆள் சுலபமா கிடைக்கிறாங்க. வளமையா இருக்காங்க. இந்த புகைபடங்களை பாருங்க புரியும்.


இதெல்லாம் ஒரு புலம்பல்தாங்க. இன்னும் நிறையா இருக்குங்க.

Monday, August 29, 2005

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 
ராதாமோகனின் 2வது படம் என்கிறதனால் கொஞ்சம் எதிர்பார்ப்போடுதான் படம் பார்க்க போனேன். எடுத்தவுடனே மண்டையில் ஒரு Flash, தெய்வமகன் மாதிரி இருக்கேன்னு நெனச்சேன். அப்புறம்தான் படம் அப்படியில்லை அப்படின்னாரு Director. 



    சின்ன கதை. அக அழகா? புற அழகா? ஒரு பட்டிமன்றம். அக அழகில் உற்றார், உறவினர்களின் அன்பைப் பெற்ற ஒருவன், புற அழகை பெற முயற்சிக்கும் போது ஏற்படும் குழப்பங்களே படம். சின்ன வயசுல ரவிகிருஷ்ணாவிருக்கு முகத்துல ஒரு தழும்பு(வடு) விழுந்துடுது. கொஞ்சம் பெருசான அப்புறம் (இளமையில) feel ஆகுறார். அதை மறைக்க Plastic Surgery பண்ண முயல, பணம் தேவைப்பட, Part time வேலை பார்க்க, நண்பர்கள், அம்மா, அக்கா வோடு பிரச்சனை, அப்படின்னு போகுது கதை. .....படத்தின் சிறப்பே வித்யசாகரின் இசை. வித்தியாசமான கதை & திரைகதை, துணிச்சலான முயற்சி. ஆனால் Art Film இல்லை. பொன்னியின் செல்வன் - சிறுகதை

Wednesday, August 24, 2005

விவசாயி

கடவுள் என்னும் முதலாளி
கணடெடுத்த தொழிலாளி

விவசாயி ..... விவசாயி .....

முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து

மண்ணிலே முத்து எடுத்து பிறர் வாழ
வணங்கும் குணம் உடையோன் விவசாயி ....

விவசாயி ..... விவசாயி .....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

விவசாயி ..... விவசாயி .....

கருப்பு என்றும் சிவப்பென்றும் வேற்றுமையா
கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி!
உழைத்தால் பெருகாதோ சாகுபடி!

விவசாயி ..... விவசாயி .....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கோடி
எத்தனையோ கட்சிகளின் எண்ண படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்ன கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி

விவசாயி ..... விவசாயி .....




இந்த பாடல் எனக்கு என்றுமே ஒரு வேதம் போல. இருப்பதோ வெளியூரில், ஆனாலும் விவசாயம் மீது எனக்கு அளவுகடந்த மோகம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் விவசாயம் செய்ய ஆசைப்பட்டு, முடியாமல் வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன்.
விவசாயி என்ற எண்ணம் என்றும் என் மனதில் இருந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு. நன்றி!

Edited Several Times

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)