Thursday, January 31, 2008

சில மேற்'குறி'யீடுகள்

வலைப்பூவில் இன்று படித்தது...கவிஞர் நாதாரி யின் ஒரு கவிதை..

ILA(a)இளா said...
சார், இந்த மாதிரி மலம், கழிவுன்னு இல்லாம கவிதை போட முடியாதுங்களா? நல்ல வார்த்தய போட்டு கவிதை எழுதினா நல்ல கவிதை வராதுங்களா? எனக்கு இந்த கவிதையின் கரு பிடிச்சு இருந்தாலும், கையாளப்பட்ட வார்த்தைகள் பிடிக்கலைங்க. இந்த மாதிரி கவிதைகள் பெரும்பான்மை மக்கள் விரும்புறது இல்லீங்க. இது உங்க பதிவு நீங்க கவிதை போடலாம், எடுக்கலாம். உங்க உரிமை,ஏன்னா உங்க பதிவு இது. நாளைக்கே நாங்களும் பதிவை படிக்க வரனும், செல்லான்னா இப்படித்தான் கவிதை போடுவார்ன்னு நினைக்க வெக்காதீங்க.
July 17, 2007 6:42 PM
OSAI Chella said...
இளா, எதிர் அழகியல் பற்றிய உங்கள் புரிதல் போதவில்லை என்று நினைக்கிறேன். சுகுணா திவாகரின் பதிவுகளில் தேடினால் கிடைக்கும். மற்றபடி அக்கவிதை அவரின் இயல்புநடையிலேயே எனக்கு மிகவும் பிடிக்கிறது. அவர் ஒன்றும் தென்றல் வீசும் மாளிகை மாடத்தை பற்றி இங்கு எழுதவேயில்லை இளா. அப்படி இருந்தால் உங்கள் அழகியல் வெளிப்படிருக்கும்! அது சரி இம்மதிரிக்கருத்துக்கள் கொண்ட ஒரு அழகான கவிதையை வைரமுத்துவிடமோ வாலியிடமோ இருந்து காண்பியுங்களேன் பார்க்கலாம். அவர்களின் அ'ல'கை!!
July 17, 2007 7:31 PM ILA(a)இளா said...
எனக்கு புரிதல் எல்லாம் தெரியாதுங்க, படிச்சா நல்லா இருக்கான்னு மட்டும்தான் சொல்லத்தெரியும், இதுக்கு எதுக்கு வாலியையோ, வைரமுத்தையோ இழுக்கனும்? ஒத்துக்கிறேங்க, உங்க அளவுக்கு கவிதை அறிவு எனக்கு இல்லே. ஆனா எனக்கு இந்த கவிதை அருவருப்பாதான் இருந்துச்சு, இன்னும் இருக்கு. இதுக்காக என்னை கவிதை அறிவில்லாதவன்னு சொல்லிக்குங்க, வழக்கம் போல ஹிஹின்னு போட்டுட்டு போறேன், அருவருப்போட..


//எதிர் அழகியல் பற்றிய உங்கள் புரிதல் போதவில்லை என்று நினைக்கிறேன்//இப்படி மலம் கழிவுன்னுதான் எழுதினாதான் எதிர் அழகியல் புரிய வெச்சதுக்கு நன்றிங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லீங்க.----------------------------------------------------------------------------------

நான் : .... எதிர் அழகியல் பற்றியும் சொல்லி இருக்கலாம். தமிழ்ப்பதிவர்களுக்கு ரொம்பவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்குங்க, என்னையும் சேர்த்து.


அய்ஸ்:
இளா

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை சிறிது கடினம்தான்..பழக்கப்பட்ட அல்லது தான் நம்பும் ஒன்றை சிதைக்க இயலாத குறுகிய மனங்களே கவிதையில் ஆபாசம் என ஓ வென்று கத்துகிறார்கள்.புரியவில்லை என புலம்புகிறார்கள்..

-----------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் ஒரு கத்தி மாதிரிங்க. அதை சரியான விதத்தில் வெளிப்படுத்தனும். ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம்தான். வாந்தி எடுக்கிற மாதிரி கவிதை எழுதிட்டு எதிரழகியல்னு சொன்னா.. ஹிஹி எனக்கு அறிவு அவ்வளவுதான்னு ஒதுக்கிக்கலாம். எந்த அழகா இருந்தா என்ன? பெத்தவங்ககிட்ட வாசிச்சு காட்டுற மாதிரி இருக்கனுங்க. அதனால சொல்றது என்னான்னா "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று". கட்டற்ற சுதந்திரம் இருக்கு. அதை நல்ல முறையில பயன்படுத்திக்க வேணாம்.
பதிவுலக எதிரழகியலும் பொடலங்காயும்.. தூத்தெறி

7 comments:

  1. நல்லா தானே இருந்தீங்க???

    ReplyDelete
  2. செல்லாவின் எதிர்ப் பதிவு/.

    இந்த நேரத்துல நீங்க இந்தப் பதிவு போட்டிருக்க மாட்டீங்கன்னு தெரியும். விடிய காலை 4:30 மணிக்கு எல்லாம் பதிவ படிக்க/எழுத மாட்டீங்கன்னு தெரியும். இதுக்கும் நுண்ணரசியல்னுதான் பேரா?

    ReplyDelete
  3. பதிவு பெரிசா இருக்க வேணாமேன்னு இடுகைக்காண சுட்டிய இணைச்சாச்சுங்க. மீதிய அங்கங்கே படிச்சுக்கலாம்.

    ReplyDelete
  4. //விவசாயி இளாவின் நுண்ணரசியல்....
    Posted on: January 31, 2008 06:28:33 pm

    முகஸ்துதி – அறிஞர் கருத்துக்கள்!
    Posted on: January 31, 2008 06:30:49 pm///

    இளா, உங்களுக்கு அரசியல் அனுபவம் போதாது.சும்மா இருத்தலே நலம்...

    ReplyDelete
  5. இளா வேண்டாத வேலை. என்ன சொன்னாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை. சொல்வதையும் நுண்ணரசியல் புண்ணரசியலுக்குள் புகுத்துவார்கள்.

    ஒரு வாரம் விட்டு விடுங்கள். தானா அடங்குவாங்க. எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதீங்க.

    அப்படியும் தமிழ்மனம் படிக்கனும்னா அவாமின் கையில வெச்சுகுங்க

    ReplyDelete
  6. செல்லாவின் நிலைப்பாடு அதே மாதிரியே இருக்கு, அதில் எந்த மாற்றமும் இல்லை. புரியுதுங்களா அனானி. நீங்க போட்ட பின்னூட்டத்தை வெளியிட முடியாது. காரணம், இந்த வாதத்துல 3 பேர்தான் இருக்காங்க. நான், செல்லா, அய்ஸ். வேற யாரும் இல்லீங்கோவ்..

    ReplyDelete
  7. **வெட்டி, எல்லா நேரத்திலும் நல்லாவே இருந்துட்டா எப்படிங்க?

    **அனானி-1. உங்க சந்தேகம் எனக்கும் இருக்குங்க.

    //இளா, உங்களுக்கு அரசியல் அனுபவம் போதாது//
    போதாதா? சுத்தமாவே தெரியாது.. ஹிஹி

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)