அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"
மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு
துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"
"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.
செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.
மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு
சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்
அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.
நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு
செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"
சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!
மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று அரை மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"
Wednesday, February 1, 2006
Tuesday, January 31, 2006
தினமலருக்கு நன்றி
ஒரு படைப்பாளிக்கு எது முக்கியம் தெரியுங்களா?
ஒண்ணு அங்கீகாரம், இரண்டாவது பாராட்டு. நாம வேலை(?!) முடிஞ்சு இளைப்பார நேரத்துல ஏதாவது எழுதலாம்னுதான் இந்த வலை ஆரம்பிச்சேன். அது சில பேர்க்கு பிடிச்சு போய் பாராட்ட உச்சி குளிர்ந்துட்டேன், இப்போ அந்த வரிசையில் தினமலரில் என்னுடைய வலையை அங்கீகரித்து வலையின் பெயரினை வெளியிட்டு இருந்தனர். தொடரும் எமது வலை விவசாயம்.
இதை சொடுக்கி பார்த்துகோங்க
ஒண்ணு அங்கீகாரம், இரண்டாவது பாராட்டு. நாம வேலை(?!) முடிஞ்சு இளைப்பார நேரத்துல ஏதாவது எழுதலாம்னுதான் இந்த வலை ஆரம்பிச்சேன். அது சில பேர்க்கு பிடிச்சு போய் பாராட்ட உச்சி குளிர்ந்துட்டேன், இப்போ அந்த வரிசையில் தினமலரில் என்னுடைய வலையை அங்கீகரித்து வலையின் பெயரினை வெளியிட்டு இருந்தனர். தொடரும் எமது வலை விவசாயம்.
இதை சொடுக்கி பார்த்துகோங்க
Wednesday, January 25, 2006
ரஜினியின் புது படம்
எங்க தமிழ் வாத்தியார் ரொம்ப நல்லவர்ங்க, சின்ன விஷயம்னாகூட ரொம்ப யோசிச்சு சரியா பதில் சொல்லுவார். அவர் துக்ளக் படிக்கிற ஆளுன்னா பார்த்துகோங்க. நம்ம ஊர்ல ஒரு வரையறை இருக்கு என்னான்னா தினத்தந்தி படிச்சா சாதாரண மனுஷன், தினமலர் படிச்சா குடும்பத்தனமான மனுஷன், தினபூமி படிச்சா அம்மா, தினகரன் படிச்சா சூரியன், இண்டியன் எக்ஸ்ப்ரஸ் படிச்சா மேதாவி, துக்ளக் படிச்சா அதிமேதாவி. எங்க வாத்தியார் அதிமேதாவி அப்படின்னு எங்களுக்குள்ள ஒரு நெனப்பு.
கட்டுறை எழுதினாதான் பசங்க அறிவு வளரும் அப்படிங்கிறதுல ரொம்ப நம்பிக்கை உள்ளவர். அதனால வாரத்துல 5 வகுப்பு அவருதுன்னா 3 வகுப்பு கட்டுறையா எழுத வெச்சுருவார். கட்டுறை எழுதுறதுல நாம கொஞ்சம் பிஸ்து வேறயா அதனால வத்தியாருக்கு என்ன ரொம்ப பிடிக்கும். பள்ளிகூடத்துல நாம அவருக்கு செல்ல பிள்ளை மாதிரி. ஒரு நாள் ஒரு தலைப்பு கொடுத்து கட்டுறை எழுதுன்னார். அன்னிக்கு ஆரம்பிச்சார் என்ன அடிக்க, 10வது முடிக்கிற வரைக்கும் தர்ம அடிதான். அப்படி என்ன தலைப்புன்னு கேட்கறீங்களா? தலைப்பு இதுதான்.
சினிமா உருப்பட நீ செய்வது என்ன? நான் என்ன எழுதினேன் தெரியுங்களா? சிலுக்கை எல்லா படத்திலையும் கதாநாயகி ஆக்கிடுவேன்னு எழுதிட்டேன். நான் என்ன நெச்சேன்னா சிலுக்கை கதாநாயகி ஆக்கிட்டா பொம்பளைங்க யாரும் சினிமா பார்க்க போக மாட்டங்க அதனால நாடு உருப்படும்ன்னு நெனச்சேன். எங்க வாத்தியார் என்ன நெனச்சார்னு சாமிக்கே வெளிச்சம்.
சும்மா இருந்தா தான் பொழப்பையும் கெடுத்து அடுத்தவன் பொழைப்பையும் கெடுத்துடுவான்னு சொல்லுவாங்க. அது உண்மைதான் போல இருக்கு, இன்னைக்கு சுத்தமா வேலையே இல்லை. சரி, புதுசா ஏதாவது எழுதலாம்ன்னு நினைச்சேன். அப்ப கூகில் படங்களில் ஒரு படம் கெடைச்சுது. அப்ப எங்க வாத்தியார் போட்டோவையும் பார்த்தேன். அப்போ சரி இன்னைக்கு எழுத சரக்கே வேணாம் வாத்தியார் சொன்னதையே பில்டப் பண்ணிட்டேன். அந்த படத்துக்கு நானே தலைப்பையும் கொடுத்து இருக்கேன். ஆனா ஒரு விஷயம் ஏதோ ஒரு புண்ணியவான் தான் இந்த படத்த போட்டு இருந்தார். அவருக்கு நன்றி.
தலைப்பு இதுதான் "ரஜினி டைட்டானிக் படத்தில் நடித்து இருந்தால்". நீங்களும் பார்த்து பரவசம் அடைஞ்சுக்கோங்க. (-படம் கீழே)
அதுக்கு முன்னாடி, எல்லாரும் சொல்ற மாதிரி எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
கட்டுறை எழுதினாதான் பசங்க அறிவு வளரும் அப்படிங்கிறதுல ரொம்ப நம்பிக்கை உள்ளவர். அதனால வாரத்துல 5 வகுப்பு அவருதுன்னா 3 வகுப்பு கட்டுறையா எழுத வெச்சுருவார். கட்டுறை எழுதுறதுல நாம கொஞ்சம் பிஸ்து வேறயா அதனால வத்தியாருக்கு என்ன ரொம்ப பிடிக்கும். பள்ளிகூடத்துல நாம அவருக்கு செல்ல பிள்ளை மாதிரி. ஒரு நாள் ஒரு தலைப்பு கொடுத்து கட்டுறை எழுதுன்னார். அன்னிக்கு ஆரம்பிச்சார் என்ன அடிக்க, 10வது முடிக்கிற வரைக்கும் தர்ம அடிதான். அப்படி என்ன தலைப்புன்னு கேட்கறீங்களா? தலைப்பு இதுதான்.
சினிமா உருப்பட நீ செய்வது என்ன? நான் என்ன எழுதினேன் தெரியுங்களா? சிலுக்கை எல்லா படத்திலையும் கதாநாயகி ஆக்கிடுவேன்னு எழுதிட்டேன். நான் என்ன நெச்சேன்னா சிலுக்கை கதாநாயகி ஆக்கிட்டா பொம்பளைங்க யாரும் சினிமா பார்க்க போக மாட்டங்க அதனால நாடு உருப்படும்ன்னு நெனச்சேன். எங்க வாத்தியார் என்ன நெனச்சார்னு சாமிக்கே வெளிச்சம்.
சும்மா இருந்தா தான் பொழப்பையும் கெடுத்து அடுத்தவன் பொழைப்பையும் கெடுத்துடுவான்னு சொல்லுவாங்க. அது உண்மைதான் போல இருக்கு, இன்னைக்கு சுத்தமா வேலையே இல்லை. சரி, புதுசா ஏதாவது எழுதலாம்ன்னு நினைச்சேன். அப்ப கூகில் படங்களில் ஒரு படம் கெடைச்சுது. அப்ப எங்க வாத்தியார் போட்டோவையும் பார்த்தேன். அப்போ சரி இன்னைக்கு எழுத சரக்கே வேணாம் வாத்தியார் சொன்னதையே பில்டப் பண்ணிட்டேன். அந்த படத்துக்கு நானே தலைப்பையும் கொடுத்து இருக்கேன். ஆனா ஒரு விஷயம் ஏதோ ஒரு புண்ணியவான் தான் இந்த படத்த போட்டு இருந்தார். அவருக்கு நன்றி.
தலைப்பு இதுதான் "ரஜினி டைட்டானிக் படத்தில் நடித்து இருந்தால்". நீங்களும் பார்த்து பரவசம் அடைஞ்சுக்கோங்க. (-படம் கீழே)
அதுக்கு முன்னாடி, எல்லாரும் சொல்ற மாதிரி எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
Thursday, January 19, 2006
முதலையை தின்னும் முதலைகள்
சின்ன முதலை பெரிய முதலை பற்றிய இரண்டு கதைகளை பார்ப்போம். முதலில் பெரிய முதலை சின்ன முதலையை விழுங்கும் கதை இது.
முதன் முதலில் 1 ரூபாய்க்கு விமான சேவையை ஆரம்பித்து தன்னுடைய வியாபாரத்தை பெருக்க மற்ற விமான சேவை நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கறைத்தது ஏர் சஹாரா. அப்புறம் டெக்கான், ஸ்பைஸ் போன்ற நிறுவனங்கள் ஏர் சஹாராவின் புளியை திருப்பி கறைத்தது என்பதோ வேற கதை. அப்போ ஏர் சஹாரா பெரிய முதலையாக இருந்தது. அதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். போன மாதம் ஜெட் 400millionனுக்கு பேரம் ஆரம்பிச்சு 500millionனுக்கு முடிஞ்சு இருக்கு. ஏற்கனவே சஹாராவில் நிறுவனம் பணப்பிரச்சினை இருப்பதாக ஒரு பேச்சு செய்தித்தாள்கள் வெளியிட்டு இருந்தது நினைவிருக்கலாம்.
ஆக மொத்தம் பெரிய முதலைகள் மட்டுமே வியாபாரம் நடத்தும் சூழ்நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இதில் Dishnet, BPL, Aircell எல்லாம் அடக்கம். இது நல்ல ஒரு நடை முறை இல்லையென்றாலும் வேறு சாத்தியமும் இதில் இல்லை. இன்னும் சில வருடங்களில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வியாபாரம் நடத்தும்.
அப்போ சிறிய நிறுவங்களின் கதி?
இப்போ சின்ன முதலை பெரிய முதலையை விழுங்கும் கதை. இதில் கொஞ்சம் குடும்ப அரசியலும் கூட இருக்கு. கர்நாடகாவில் நடக்கிற கூத்த பத்திதான் சொல்றேன்னு இந்நேரம் புரிஞ்சு இருக்குமே. இதுல கலாட்டாவே தந்தை-மகன் விளையாட்டுதான். நடந்தது இது தான். கர்நாடகாவில் தரம்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி நடத்துகிறது. பா.ஜ.க எதிர் கட்சியாக இருக்கிறது(ந்தது). முன்னால் பிரதம மந்திரி தேவகெளடா (அதாங்க முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் குறட்டை விட்டு தூங்கினவர் தான் இவர்). நேற்றைய நிலவரப்படி சுமார் 45 Mளாக்களுடன் தேவகெளடாவின் மூத்த மகன் குமாரசாமி பா.ஜ.க. வின் ஒத்துழைப்புடன் (?!) கவர்னரிடம் தானே ஆட்சி அமைக்க போவதாகவும் அதற்கு பெரும்பான்மை இருப்பதகவும் மனு கொடுத்திருக்கிறார். எல்லாருக்கும் வந்த அதே கேள்வி தான் எனக்கும் தோணிச்சு "அது எப்படி அப்பாவை எதிர்த்து இப்படி பேச முடியுதுன்னு". ஆனா மேட்டர் அது இல்லை சாமி. ஒரு பெரிய பிண்ணனி இருக்கு இதுல.
நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் அமோக ஆதரவு பெற்று வெற்றி பெற்றது. அதனால ஜனதா தளத்திற்க்கு அடி வயிறு கலங்போச்சு. அப்போதே காங்கிரஸை ஓரம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க ஜ,த. இப்போ குமாரசாமி பா.ஜ.க வுடன் சேர்ந்து ஆட்சி செய்தால் காங்கிரஸை ஓரம் கட்டி விடலாம் என்பது கெளடாவின் நினைப்பு.
இதுக்கு முன்னால் கெளடாவின் குடும்பத்தை தெரிந்து கொள்ளுங்கள். நம்மை எல்லாம் குடும்பத்தொழில் என்னவென்று கேட்டால் விவசாயம், நெசவுன்னு சொல்லுவீங்க. ஆனா அவர் அரசியல்ன்னு சொல்வார்(விவசாயம் தான் அவருடைய குலத்தொழில்), ஏன்னா அவரும் அவருடைய நாலு மகன்களும் அரசியல்தான் இருக்காங்க வேற எந்த தொழிலும் இப்போதைக்கு இல்லை. சரி விஷயத்துக்கு வருவோம் இப்போ பா.ஜ.க வுடன் சேர்ந்து காங்கிரஸை ஒழிச்சுட்டு மீண்டும் அப்பாவும் பிள்ளையும் ஒண்ணு சேர்ந்துப்பாங்க. இதுல இன்னொரு ஆதாயமும் இருக்கு மகனும் அரசியலுக்கு வந்துருவான் தரம் சிங்கையும் ஓரம் கட்டிலாம்.
அப்ப மக்கள் என்ன இ. வாயன்களான்னு அடுத்த தேர்தல் வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கனும், இங்கே சின்ன முதலை பெரிசை சாப்பிட்டுச்சா இல்லையான்னு நீங்கதான் சொல்லனும்.
Thursday, December 29, 2005
சண்டக்கோழி-விமர்சனம்

படத்துக்கு, வேகம்னு பேர் வெச்சு இருக்கலாம், அவ்வளவு வேகம். படம் ஆரம்பிச்சதுக்கும், இடைவேளைக்கும் என்னமோ ஒரு நிமிஷம்தான்கிற மாதிரி முதல் பாதி சரியான வேகம்.
படத்தின் கதை நாம எப்போங்கோ சொல்லிருக்கோம் இத சொடுக்கி பார்த்துக்கோங்க.
படத்துல குறைன்னு சொன்னா அது CLIMAX௯தான். நட்சத்திர அந்தஸ்த்து இல்லைன்கிற குறை CLIMAXல தெரியுது. படம் முடிஞ்சப்புறம் "சே! CLIMAX௯ல விஜய்யோ, ஜெயம் ரவியோ நடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமே" அப்படிங்கிற குறை இருக்கத்தான் செய்யுது. சண்டை காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க, அதுக்கான பலனும் தெரியுது.
விஷாலும் சரி, மீரா ஜாஸ்மினும் சரி, ராஜ்கிரணும் சரி நடிப்புல பின்னி பெடல் எடுத்திருகாங்க. யுவன் இசை ரசிக்கிற மாதிரி இருக்கு, "இரவு" பாடல் படம் முடிஞ்சாலும் முணுமுணுக்க வைக்குது. 'ஜி' படத்துக்கப்புறம் இந்த படம் அப்படிங்கிறதுனால கடுமையாவே உழைச்சிருக்கார் லிங்குசாமி. மறுபடியும் ஜெயிச்சு காட்டியிருக்கார்.
குடும்பத்தோட பார்க்கலாம், நல்ல படம்ங்க
Wednesday, December 28, 2005
Friday, December 23, 2005
சிறந்த இந்தியர் 2005
இந்த வருடத்திய சிறந்த இந்தியருக்கான் தேர்வு பட்டியலை ஏர்டெல் , NDTV நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. ஒரு 10 பேர் பட்டியலையும் அது குடுத்து இருக்கிறது (அதில் ஏன் கலா நிதி மாறன் பெயர் இல்லை?)
ராகுல் டிராவிட் - வழக்கம்போல பொறுப்புகளை தோல்மேல் சுமந்து விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை, டால்மியா-பாவார் அரசியலில் "தாதா" ஓரங்க்கட்ட பட இவருக்கு அடித்தது யோகம்.
சானியா மிர்சா - ஒரு காலத்தில் பி.டி.உஷா பெற்ற புகழை விட அதிகமாக குறுகிய காலத்தில் பெற்றார், சச்சரவும் கூட. பெண்கள் டென்னிசுக்கு அம்மணி போட்டதுதான் பிள்ளையார் சுழி. இப்பொழுது அம்மணி தரப்பட்டியலில் இடம் குறைந்து வருகிறார், பார்த்துக்கோங்க.
சோனியா காந்தி, மன்மோகன் சிங் - அரசியலில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை.
நிதிஷ் குமார் - உண்மைய சொன்னேன் சீட்டு கெடச்சது அப்படின்னு பாட்ஷாவுல தலைவர் சொல்வார். அது மாதிரி சொல்லி கில்லி மாதிரி வெற்றி பெற்றவர். என்ன செய்வார் என பொறுத்து இருந்து பார்ப்போம். பீஹாரின் தலை எழுத்த மாத்திட்டா அடுத்த வருஷம் என்னுடையா ஓட்டு இவருக்குதான், இப்போ இல்லே.
நாரயண மூர்த்தி - இவரால வாழ்ற மக்கள் நிறைய, இருந்தாலும் பெங்க்ளூருக்கு ஏதாவது செய்ங்க.
S. மஞ்சு நாத் - பாவபட்ட ஜென்மமம், ஒரு காலத்தில் சத்யஜித் தூபே, இப்போ இவர், பீஹாரின் ரத்தப்பசிக்கு பலியாகும் IIT. IIMகள் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்து இருக்கிறது. என்னுடையா ஓட்டு இவருக்கு கண்டிப்பாக உண்டு.
அத்வானி, அருணா ராய், லக்ஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் எல்லாம் எதுக்கு இந்த பட்டியலில்?
ராகுல் டிராவிட் - வழக்கம்போல பொறுப்புகளை தோல்மேல் சுமந்து விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை, டால்மியா-பாவார் அரசியலில் "தாதா" ஓரங்க்கட்ட பட இவருக்கு அடித்தது யோகம்.
சானியா மிர்சா - ஒரு காலத்தில் பி.டி.உஷா பெற்ற புகழை விட அதிகமாக குறுகிய காலத்தில் பெற்றார், சச்சரவும் கூட. பெண்கள் டென்னிசுக்கு அம்மணி போட்டதுதான் பிள்ளையார் சுழி. இப்பொழுது அம்மணி தரப்பட்டியலில் இடம் குறைந்து வருகிறார், பார்த்துக்கோங்க.
சோனியா காந்தி, மன்மோகன் சிங் - அரசியலில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை.
நிதிஷ் குமார் - உண்மைய சொன்னேன் சீட்டு கெடச்சது அப்படின்னு பாட்ஷாவுல தலைவர் சொல்வார். அது மாதிரி சொல்லி கில்லி மாதிரி வெற்றி பெற்றவர். என்ன செய்வார் என பொறுத்து இருந்து பார்ப்போம். பீஹாரின் தலை எழுத்த மாத்திட்டா அடுத்த வருஷம் என்னுடையா ஓட்டு இவருக்குதான், இப்போ இல்லே.
நாரயண மூர்த்தி - இவரால வாழ்ற மக்கள் நிறைய, இருந்தாலும் பெங்க்ளூருக்கு ஏதாவது செய்ங்க.
S. மஞ்சு நாத் - பாவபட்ட ஜென்மமம், ஒரு காலத்தில் சத்யஜித் தூபே, இப்போ இவர், பீஹாரின் ரத்தப்பசிக்கு பலியாகும் IIT. IIMகள் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்து இருக்கிறது. என்னுடையா ஓட்டு இவருக்கு கண்டிப்பாக உண்டு.
அத்வானி, அருணா ராய், லக்ஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் எல்லாம் எதுக்கு இந்த பட்டியலில்?
Thursday, December 15, 2005
தொடர்பு எல்லை
இன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.
நண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.
இந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.
இப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே?
நண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.
இந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.
இப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே?
கொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.
அதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாடித்திரையில் கிடைச்சிடுமா, என்ன?
வருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.
அதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாடித்திரையில் கிடைச்சிடுமா, என்ன?
வருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.
சரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க!
Tuesday, December 13, 2005
தத்துவம்
சில நேரங்களில் தத்துவம் நல்லாதான் இருக்கும், இப்போ இருக்குற கொஞ்ச நேரத்துல சிரிக்க வைச்ச சில மகத்துவமான தத்துவங்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். நன்றி Junker
1) ரயில் எவ்வளவு வேகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியாதான் போகும்
2) Cell Phoneல balance இல்லைன்னா call பண்ண முடியாது....ஆனா மனுஷனுக்கு கால் இல்லைன்னா balance பண்ண முடியாது
3) பஸ் போயிட்டா பஸ் ஸ்டேண்ட் அங்கையே தான் இருக்கும், ஆன cycle போயிட்டா cycle stand கூடவே போகும்
4) Filesன்னா உட்கார்ந்து பார்க்கனும், ஆன Piles ன்னா பார்த்து உட்க்காரனும்
5) கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்
6) அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது
7) வாயால "நாய்"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?
8) நேரம் சரி இல்லைன்னா ஒட்டக்கத்துக்கு மேல ஏறி உக்கார்ந்தாலும் நாய் கடிச்சு வைக்கும்
நாளை என் மனதை உலுக்கிய "தவமாய் தவமிருந்து" படத்தை விமர்சிக்கிறேன்
1) ரயில் எவ்வளவு வேகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியாதான் போகும்
2) Cell Phoneல balance இல்லைன்னா call பண்ண முடியாது....ஆனா மனுஷனுக்கு கால் இல்லைன்னா balance பண்ண முடியாது
3) பஸ் போயிட்டா பஸ் ஸ்டேண்ட் அங்கையே தான் இருக்கும், ஆன cycle போயிட்டா cycle stand கூடவே போகும்
4) Filesன்னா உட்கார்ந்து பார்க்கனும், ஆன Piles ன்னா பார்த்து உட்க்காரனும்
5) கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்
6) அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது
7) வாயால "நாய்"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?
8) நேரம் சரி இல்லைன்னா ஒட்டக்கத்துக்கு மேல ஏறி உக்கார்ந்தாலும் நாய் கடிச்சு வைக்கும்
நாளை என் மனதை உலுக்கிய "தவமாய் தவமிருந்து" படத்தை விமர்சிக்கிறேன்
Wednesday, November 16, 2005
ஆண்-பெண், நன்மை-தீமை ஆகிய இருமைகளால்தான் பிரச்சினை
சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியது
ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டால் நீங்கள் ஒரு பெண் அல்லது ஆண் என்பதை மறந்துவிட வேண்டும். இததுதான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம். உங்கள் இல்லத்தில் நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ செயல்பட வேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.
ஆனால் உலகம் முழுவதிலும் காணப்படும் ஆன்மீக வழிமுறைகள் ஆன்மீகப் பாதையில் ஈடுபடுபவர்கள் துறவிகளாக இருக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகின்றன? இதற்கான விடை மிகவும் எளிமையானது. உங்கள் மனத்தில் ஆண்-பெண், நன்மை-தீமை போன்ற இருமை எண்ணங்களை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் காரணம். இருமைகளுக்கு மத்தியில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது முழுமையானது. அந்த முழுமையை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்பதுதான் ஆன்மீகம்.
உங்கள் வாழ்க்கை இருமை எண்ணங்களைச் சார்ந்ததாக இருந்தால் நீங்கள் திறமையாக அம்மானை ஆட வேண்டியிருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருந்தால் நீங்கள் நீங்கள் திறமையாக அம்மானை ஆடுகிறீர்கள் என்று அர்த்தம். சரியாக ஆடாவிட்டால் எல்லாமே சிதறிப்போகும். ஒரு கல்லை நீங்கள் பிடிப்பதற்குள் மற்றதெல்லாம் கீழே விழுந்துவிடும். ஒரே சமயத்தில் ஐந்தாறு கற்களை வைத்துக்கொண்டு அம்மானை ஆடுபவர்களும் இருக்கிறார்கள். ஒன்று கீழே விழுந்தால் எல்லாமே கீழே விழுந்துவிடும்.
ஆக, இருமைகளுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டால் அம்மானை ஆட்டத்தைத் தவிர்க்கவே முடியாது. ஆடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஆடித்தான் ஆக வேண்டும். ஆன்மீகப் பாதையில் சென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி - இந்த ஆட்டம் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.
இந்த ஆட்டம் ஆன்மீகப் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்ததன் விளைவு அல்ல. எப்படியும் நீங்கள் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும். வாழ்வின் இருமைகளோடு நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டதன் விளைவு இது.
திருமணம் என்பது இருமைகளைச் சார்ந்தது. எனவே திருமண வாழ்வில் புகுந்த பிறகு இருமைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களால் உங்களுக்குத் தொல்லை வரத்தான் செய்யும். பெரும்பாலான வீடுகளில் - குறைந்தபட்சம் இந்திய வீடுகளில் - ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணால்தான் பெருமளவில் தொல்லைகள் வருகின்றன. இதுதான் பொதுவான நிலவரம்.
நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் ஆணா பெண்ணா என்பதல்ல பிரச்சினை. நீங்கள் மற்றவர்களை ஈடுபடுத்தாமல் தனியாக ஏதோ செய்கிறீர்கள். எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். இதுதான் பிரச்சினை. மொத்தக் குடும்பமும் ஆன்மீகப் பாதையில் செல்வதுதான் இதைத் தீர்க்கச் சிறந்த வழி. அப்போது எல்லாமே சுலபமாகிவிடும். ஆனால் இது எல்லா சமயங்களிலும் சாத்தியமாகாது. அப்படியானால் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும்.
நன்றி-தோழி- பெண்களுக்கான ஒரு நல்ல வலை
ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டால் நீங்கள் ஒரு பெண் அல்லது ஆண் என்பதை மறந்துவிட வேண்டும். இததுதான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம். உங்கள் இல்லத்தில் நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ செயல்பட வேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.
ஆனால் உலகம் முழுவதிலும் காணப்படும் ஆன்மீக வழிமுறைகள் ஆன்மீகப் பாதையில் ஈடுபடுபவர்கள் துறவிகளாக இருக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகின்றன? இதற்கான விடை மிகவும் எளிமையானது. உங்கள் மனத்தில் ஆண்-பெண், நன்மை-தீமை போன்ற இருமை எண்ணங்களை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் காரணம். இருமைகளுக்கு மத்தியில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது முழுமையானது. அந்த முழுமையை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்பதுதான் ஆன்மீகம்.
உங்கள் வாழ்க்கை இருமை எண்ணங்களைச் சார்ந்ததாக இருந்தால் நீங்கள் திறமையாக அம்மானை ஆட வேண்டியிருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருந்தால் நீங்கள் நீங்கள் திறமையாக அம்மானை ஆடுகிறீர்கள் என்று அர்த்தம். சரியாக ஆடாவிட்டால் எல்லாமே சிதறிப்போகும். ஒரு கல்லை நீங்கள் பிடிப்பதற்குள் மற்றதெல்லாம் கீழே விழுந்துவிடும். ஒரே சமயத்தில் ஐந்தாறு கற்களை வைத்துக்கொண்டு அம்மானை ஆடுபவர்களும் இருக்கிறார்கள். ஒன்று கீழே விழுந்தால் எல்லாமே கீழே விழுந்துவிடும்.
ஆக, இருமைகளுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டால் அம்மானை ஆட்டத்தைத் தவிர்க்கவே முடியாது. ஆடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஆடித்தான் ஆக வேண்டும். ஆன்மீகப் பாதையில் சென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி - இந்த ஆட்டம் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.
இந்த ஆட்டம் ஆன்மீகப் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்ததன் விளைவு அல்ல. எப்படியும் நீங்கள் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும். வாழ்வின் இருமைகளோடு நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டதன் விளைவு இது.
திருமணம் என்பது இருமைகளைச் சார்ந்தது. எனவே திருமண வாழ்வில் புகுந்த பிறகு இருமைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களால் உங்களுக்குத் தொல்லை வரத்தான் செய்யும். பெரும்பாலான வீடுகளில் - குறைந்தபட்சம் இந்திய வீடுகளில் - ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணால்தான் பெருமளவில் தொல்லைகள் வருகின்றன. இதுதான் பொதுவான நிலவரம்.
நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் ஆணா பெண்ணா என்பதல்ல பிரச்சினை. நீங்கள் மற்றவர்களை ஈடுபடுத்தாமல் தனியாக ஏதோ செய்கிறீர்கள். எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். இதுதான் பிரச்சினை. மொத்தக் குடும்பமும் ஆன்மீகப் பாதையில் செல்வதுதான் இதைத் தீர்க்கச் சிறந்த வழி. அப்போது எல்லாமே சுலபமாகிவிடும். ஆனால் இது எல்லா சமயங்களிலும் சாத்தியமாகாது. அப்படியானால் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும்.
நன்றி-தோழி- பெண்களுக்கான ஒரு நல்ல வலை
Tuesday, November 8, 2005
Subscribe to:
Posts (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
'சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது...' & பிரமிளின் புகழ்பெற...



