Thursday, July 2, 2009

காசியும், ஞானும், பின்னே சந்தவையும்

சந்தவை: இப்படித்தான் எங்க ஊர்ல சொல்லுவோம். கண்ணாலமாவி மொதோ மொறையா மாப்புள்ளை வூட்டுக்கு வரம்போது சந்தவ செஞ்சு போடுறது, மாமியார் வழக்கம். அது என்னாத்துக்குன்னு எல்லாம் தெரியாது. அது என்னா சந்தவன்னு கேக்குறவங்களுக்கு உங்க பாசையில சொன்னா "இடியாப்பம்" இல்லாட்டி சந்தகை கன்னடத்துல சவிகே, அல்லாத்துக்கும் புரியராப்ல சொன்னாக்கா நூடுல்ஸ்.

சந்தவ சுடுறது பெரிய விசயம். ஏன்னா, இதச் சுட ரெண்டு பேரு வேணும். இட்லிக்கு சுடறாப்லதான் மாவு இருக்கும். என்னா, உளுந்து போட மாட்டாங்க. வெறும் அரிசிய ஊறவெச்சு, உப்பு போட்டு வெச்சுக்குவாங்க, புளிக்க வெக்கவெல்லாம் வேணாம். அப்படியே ஆட்டுக்கல்லுல இருந்து எடுத்து நேராவே இட்லி தட்டுல ஊத்திரலாம். ஆனா இட்லி மாதிரி பொசு பொசுன்னு உப்பாது இது. கல்லாட்டம் இருக்கும்.

இதுவரைக்கும் நமக்கு ஒன்னும் வேலை இருக்காது. சந்தவ மரம்(சந்தவ புளியரது), இது பெரிய வேலை பண்ணும். சந்தவ சுடறதுக்கு மொதோ நாளே எண்ணை போட்டி வெச்சுரனும். இல்லாட்டி திருவரவங்களுக்கு பாடு கஷ்டமாயிரும். சுட்ட இட்லி மாதிரி இருக்குறத எட்டுத்து உள்ளே போட்டு திருவனும். சந்தவ வருதோ இல்லீயோ, திருவரவங்களுக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். சந்தவ எடுத்ததுக்கு அப்புறம் கீழ கொஞ்சூண்டு ஒட்டி இருக்குறதுதான் திருவறவங்களுக்கு. சந்தவ, மூனு வெதமா திம்போம். ஒன்னு- சந்தவய போட்டு, அதுக்கு மேல பழம், சர்க்கரை போட்டுக்கனும். ரண்டு மூணு வாழப்பழத்தை போட்டு பெனஞ்சு, நெய்ய அதுக்குமேல ஊத்தி சாப்புடறது. ரண்டு- சந்தவைக்கு தேங்காப் பால் ஊத்துறது. மூணு- சந்தவய வருத்து திங்கறது.

காசி அண்ணாச்சியோட சேவை மேஜிக்ல கஷ்டப்படாம் சந்தவ வருது(Updated: This site may harm your computer-அப்படின்னு கூகிள் சொல்லுது). இத்தனை கஷ்டம் இல்லே. மாவு ஊத்தினா சந்தவை வருது. NS கிருஷ்ணன் சொன்னாபல் “சுச்சிய தட்டுனா, தட்டுல இட்லி” இந்தியாவுல மூணு வாங்கினேன். அதுல ஒன்னு இப்போ அமெரிக்காவுலதான் இருக்கு. காசி அண்ணாச்சிக்கிட்ட மொதல்ல கேட்டதே "இத வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போவ முடியுமா"ன்னுதான். வாங்கி வேஸ்ட்டாப்போச்சுன்னா? அண்ணாச்சி முயற்சி பண்ணச் சொன்னாரு. கொண்டுவரது கொஞ்சம் சுலுவாத்தான் இருந்துச்சு. இப்போ சந்தவை சுலுவா செய்ய முடியுது. என்ன மாவு மட்டும் கொஞ்சம் சரிப்பதமா இருக்கனும் இல்லாட்டி நல்லா வர மாட்டேங்குது. ஒரு தடவை பண்ணிப்பார்த்துட்டா அப்புறம் தெரிஞ்சிரும். ஒரு சிடி வேற இருக்கு, எப்படி செய்யறதுன்னும் சொல்லித்தர்றாங்க.நெறைய recipe தந்திருக்காங்க, ஆனா அதுல ஒன்னகூட நாஞ்செஞ்சி பார்க்கல. நமக்குத் தெரிஞ்ச மூணு அயிட்டத்தையுமே சாப்பிட்டா போதுமுன்னு வுட்டுட்டேன். அதாகப்பட்டது, சந்தவ சாப்பிட்டா லிவருக்கு நல்லதாம், எதிர்வூட்டு செட்டியாரு சொன்னாரு.

7 comments:

  1. மஞ்சுளா ரமேஷ் சினேகிதி புத்தகத்தில்..எனது ரெசிபி ஒன்னுக்கு...பரிசா கிடைச்சுது.செய்வது ரொம்ப சுலபம்
    http://annaimira.blogspot.com/2009/04/blog-post_09.html

    ReplyDelete
  2. ஏமாத்திட்டீங்களே இளா.. current stituation'kku.. "காசியும் ஞானும் ***"ன்னு ட்விட்டர்ல போட்டு வச்சுட்டீங்க.. நான் ஆர்வமா வேற மேட்டர் இல்ல எதிர்பார்த்தேன்... :(

    ReplyDelete
  3. ஓஹோ..கத அப்பிடிப் போகுதோ?? ரைட்டுண்ணென்..

    ReplyDelete
  4. //nanni. i need to buy one.//
    Worth Buying one, should have wet grinder for raw material- Mixie didn't work

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)