Thursday, March 14, 2013

இணையவாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?

"இணையவாதிகள் கொதிக்கிறாங்க, இவுங்க சமூகத்துல இருந்து தனியாத் தெரியறாங்க. சமூகத்துக்கும் இவுங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
அப்படின்னு ஒரு நண்பர் சொன்னாரு. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.


தினமும் நமக்கு பேச, எதாச்சும் ஒன்னு புதுசு புதுசாக் கிடைக்கனும். அதாங்க, ஏதாவது ஒரு வீட்டுக்கு முன்னாடி, விசாலமான திண்ணையில் பெருசுங்க உக்காந்துகிட்டு, வெத்தலை இடிச்சிகிட்டே ஊர்க்கதை பேசுவாங்க இல்லை.. அட, அதுவுமில்லைன்னா, ஓசியிலோ இல்லை கடன் வெச்சோ டீ குடிச்சாலும், ஒரு பத்தி விடாம பத்திரிக்கையைப் படிச்சிட்டு வம்பளப்பாங்களே டீக்கடை பெஞ்ச், இப்படி இருக்கிற இன்னொரு இடம்தாங்க இந்த இணையத்துல இருக்கிற சமூக வலைதளங்கள். சினிமா விமர்சனமோ, கவர்ச்சி நடிகைகளின் கல்யாணமோ, ஈழப்பிரச்சினையோ, ஏதாச்சும் ஒன்னைப் பேசிக்கிட்டே இருப்பாங்க. தினமும் எதாவது ஒன்னு சூடாகிடும். மாணவர்கள் பிரச்சினையைப்பத்தி ரத்தம் கொதிக்கிற மாதிரி பேசிட்டே இருப்பாங்க. பாலாவோட பரதேசி டீசர் வந்தவுடனே, அதை மறந்துட்டு பாலாவை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் புதுசா வந்த போப் பத்தி, இப்படி தடம் மாறிட்டே இருக்கு இணையவாதிகளின் பேச்சு.


" Loneseoவின் Rhinocerros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் முக்கியமான ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் incongruity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா, ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!"

மேலே இருக்கிறதைச் சொன்னது, கணையாழியின் கடைசிப் பக்கங்கள்ல - ஆகஸ்ட் -1973ல் சாட்சாத்  வாத்தியார் சுஜாதா சொன்னதேதான். அப்ப இருந்த நிலைமைக்கு அவர் சொன்னது, திண்ணைப்பேச்சாளர்களுக்கோ, டீக்கடை பெஞ்ச் தேய்ச்சவங்களுக்கோ. ஆனா இன்னிக்கு அதே இணையவாதிகளுக்கும் பொருந்துது. இதுல இருந்து என்ன தோணுது... இருங்க இருங்க இன்னொன்னையும் சொல்லிடறேன்.

எஸ்.வி. சேகர் ஒரு நாடத்துல சொல்லியிருப்பாரு, "பரபரப்பான செய்தின்னா, முதல் ரெண்டு நாள் முதல் பக்கத்துலையும், அப்புறம் ரெண்டு நாளைக்கு 2ம் 3ம் மூன்றாம் பக்கத்துலயும், ஒரு வாரங்கழிச்சுப் பார்த்தா கடைசிப்பக்கத்துலேயும், அடுத்த வாரம் அந்தச் செய்தியே இல்லாமையும் போயிடும்"னு நாளிதழ்களை பத்தி கிண்டலாச் சொல்லியிருப்பாரு.


தையேத்தான் இணையவாதிகளும் செய்யறோம். இதுல ஒரு வித்தியாசமும், இல்லை. அதனால Moral of the Story is நாம மாறவே இல்லை. பேசுறதுக்கான இடம்தான் மாறியிருக்கோ ஒழிய, முறை மாறவேயில்லை.

Thanks: Img From Dinamalar- Tea Kadai Bench

Tuesday, March 12, 2013

Cloud Computing என்றால் என்ன? கொளுவுக் கணிமை

முதலில் வருவது cloud computing. சட்டென்று இதற்கான கலைச்சொல்லைச் சொல்லாமல் விளக்கம் தந்தே சொல்லுகிறேன். முதன்முதலில் இது போன்ற கலைச்சொற்களைத் தரும்போது விளக்கமும் கொடுத்துச் சொற்களைத் தந்தால் நன்றாக இருக்கும். ஏதொன்றையும் தமிழில் முதலில் எழுதும் போது, புதுச் சொற்கள் பயிலவேண்டிய கட்டாயத்தில் இதுபோன்ற விளக்கமும் கொடுத்து ஆக்கத்தை எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

-------------------

ஒவ்வொரு கணிப்புதிரியின் (computing problem) சிக்கலான தன்மையைப் பொறுத்து அதைத் தீர்ப்பதற்கு கணித்திறன் (computing capacity) தேவைப்படும். கணித்திறன் கூடக் கூடக் கணியின் விலையும் கூடும். ஒவ்வொரு கணிப்புதிரிக்காகப் கணித்திறன் கூடிய புதுப்புதுக் கணிகளை உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது.



பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதிகப்பட்ட கணித்திறன் தேவைப்படும், கணிப்புதிரிகளைச் சுளுவ (to solve) வேண்டும் போது, கணியாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒருசில குறைதிறன் கணிகளைச் சரஞ்சரமாகவோ (series), இணையாகவோ (parallel) கம்பிகளாலும் (wires), வடங்களாலும் (cables) பிணைத்து புதிரிகளின் தீர்வுகளைக் காண முயலுவார்கள்.



சரி, இது போன்ற பிணைப்புக்களால் ஓரளவுக்குப் பெரும்புதிரிகளைச் சுளுவியெடுக்க (to solve) முடியும் என்றாலும், அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பலநேரங்களில் இந்தக் கணிகளை ஒரேயிடத்தில் ஒன்றுசேர்க்க முடிவதில்லை. அவை பல்வேறு இடங்களில், ஏன் பல்வேறு நாடுகளில், கூட இருக்கக் கூடும். அவற்றை ஒன்று சேர்த்து ஓரிடத்திற்குக் கொண்டுவந்து பிணைத்துக் கணிப்பது என்பது மிகப் பெருமாண்டமான செலவைக் கொண்டுவருகிறது. மாறாக இந்தக் காலத்தில் உலகெங்கும் இருக்கும் பல்வேறு கணிகளை (அவை 100, 1000, 100000 என்று எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும்) “இணையம்” என்ற வலையால் ஒன்றிணைக்க முடியும். பூதியல் (physical) முறையில், கம்பி, வடங்கள் வழி கணிகளை இணைப்பதற்குப் பகரி(substitute)யாக, ஒரு கணியை இணைய வலையில் (internet web) பிணைத்து எங்கெங்கோ இருக்கும் கணிகளையும், நம் கணியையும் ஒரு கூட்டுப் பொதியாக்கி, கூட்டுறவு முறையில், ஒரு கணிப் புதிரியைச் சுளுவுவதையே cloud computing என்று சொல்கிறோம்.



சரியான கணிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (computer control protocols) இருந்தால் ஒரு கணியின் இயக்கக் கட்டகம் (operating system) இந்த வலையின் மூலம் எண்ணற்ற கணிகளை இயக்க முடியும். அதே போல 4, 10 கணிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய இயக்கக் கட்டகங்களை ஒருங்குறச் செயற்பட வைத்து 10000 கணிகளைக் கூடச் செயற்பட வைக்கமுடியும். பலநேரம் எந்தக் கணி கட்டுறுத்துகிறது (which is controlling), எந்தக் கணி கட்டுப்படுகிறது (which is getting controlled) என்று சொல்ல முடியாதபடி அவை மாறி, மாறிச் செயற்படலாம்.



இந்தக் கணிகளின் இணைப்பு இந்த முறையில் தான் ஏற்பட்டது என்று கணுவலை அடவுகளைக் (network design) காட்ட முடியாதபடி கணிகள் முனைகளாக (nodes) ஒருங்கிணைந்து செயற்படும். எப்படி ஒரு மேகத்தினுள் மழைக்கருக்கள் (condensation droplets) சேர்ந்து பஞ்சுபோல் உருக்கொண்டு புதுப்புது உருவம் எடுத்துச் சூழ்நிலைக்கு ஏற்ப பெருகிச் சுருங்கி விரிகின்றனவோ, அது போல இந்த கணி முனைகளும் (கணிக் கருக்களும்) தமக்குள் ஒன்றிணைந்து இயங்கி, கொடுத்திருக்கும் கணிச்சிக்கலைச் சுளுவித் தருகின்றன என்பதால் கணித் திரளைச் சுட்டுவதற்கு மேகத்தை உருவகமாக்கிக் காட்டுவார்கள்.



தமிழில் கொண்டல் என்ற சொல் மேகத்தைக் குறிக்கும் சொல். மழைக்கருக்கள் திரண்டு இருப்பதைக் கொள்ளுதல் என்று சொல்லுவார்கள். குள்>கொள்>கொண்டு>கொண்டல் என்று அந்தச் சொல் உருவாகி, மழைக்கருக்கள் பொருந்திய மேகத்தைக் குறிக்கும். கொண்டல் குளிரும் போது மழை பொழியும். குள்ளுதல் என்பது திரளுதல். குள் என்னும் வேரில் இருந்து பிறந்த கூட்டச்சொற்கள் தமிழில் ஏராளம். இங்கே கொண்டல் என்பது இயற்கையில் வலையும் இல்லை, இணைப்புமில்லை, பிணைப்புமில்லை. அது ஒரு திரள். தாமாகவே திரளும் கூட்டம்.



இப்படித் திரள்வதை agglutination என்றும் ஆங்கிலத்தில் சொல்லலாம். குள்>கொள்>கொளுவு>கொளுவதல் என்பது தமிழில் agglute என்பதைக் குறிக்கும். நம்முடைய கணித் திரளில் வலை இருக்கிறது; இணையம் இருக்கிறது. ஆனால் ஒரு புதிரியைச் சுளுவ, எந்தக் கணி எத்தனை கணிகளோடு பிணைந்தது என்பது குறிப்பிட்டுச் சொல்ல முடியாததால் அது திரள் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. திரளுதல் என்பதை கொளுவுதல் (agglute) என்றும் சொல்லலாம். Tamil is an agglutinative language - தமிழ் ஒரு கொளுவு நிலை மொழி என்று சொல்லுவார்கள். கொளுவுக்கும் கொண்டலுக்கும் அடியில் இருக்கும் கருத்துத் திரளுதலே. இங்கே கொண்டல் என்ற சொல்லை அப்படியே நேரடியாகப் புழங்காமல், பின்னால் ஏற்படக்கூடிய கூட்டுச் சொற்களுக்கு வாய்ப்பாகக் கொளுவு என்பதை முன்சொல்லாக்கிக் cloud computing என்பதைக் ”கொளுவுக் கணிமை” என்று சொல்லலாம். கொளுவு என்ற சொல்லிற்குள் ”திரள், எங்கெங்கோ இருக்கும் கணிகள், இணையம், பிணைப்பு” என எல்லாமே உள்ளூற அடங்கி விடும்.

--------------------



அடுத்தது On line [learning, resources] இதைச் சிறிது காலமாகவே எடுகோடு என்ற சொல்லாற் குறித்து வருகிறேன். எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கும் கோடு. He is always online = எப்பொழுதும் அவர் எடுகோட்டில் இருப்பார். [எங்கெல்லாம் ஆங்கிலத்தில் online வருகிறதோ அங்கெல்லாம் எடுகோடு என்பது சரியாகவே பொருந்துகிறது. பல்வேறு வாக்கியங்களை வைத்துப் பாருங்கள். ஏதேனும் விதிவிலக்கு இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்.



எடுகோட்டுப் படிப்பு = online learning. எடுகோட்டு ஊற்றுகைகள் = online resources. மூலங்கள் என்ற சொல்லை resources என்பதற்கு இணையாக நான் பயன்படுத்துவதில்லை. முளை, மூலம் என்ற சொற்கள் roots என்பதை ஒட்டிவரும் மெய்யியற் சொற்களுக்கே பயன்படுத்துகிறேன். ஊற்று/ ஊற்றுகை என்பது ஊறிவரும் நீர்ப்பொருள் என்பதால் அறிவுப் பொருளைக் குறிக்கமுடியும்.



அன்புடன்,

இராம.கி.
 
 
http://valavu.blogspot.com/2010/03/cloud-computing.html இதனுடைய நகல்தான் இந்தப் பதிவு. பலரைச் சென்றடையும் என்ற எண்ணத்தில் . நன்றி இராமி.கி ஐயா அவர்களுக்கு

Tuesday, March 5, 2013

கணேஷ்குமார் மோகன் - குறும்படங்களின் குறுநில மன்னன்

நாளைய இயக்குனர்,  இந்தளவுக்குப் பிரபலமாகாத காலம்னு நினைக்கிறேன். தமிழ் குறும்படங்கள் வெகு சொற்பமாய் இருந்த காலம் அப்படின்னு நினைக்கிறேன். அப்பத்தான் இவரோட குறும்படம் ராமசாமியை யூட்யூப் மூலமா பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சது. அடடே, நல்லாயிருக்கே அப்படின்னு பலரும் இவர் பக்கம் திரும்பிப் பார்த்த சமயம் அதுதான்னு நினைக்கிறேன்.

ராமசாமி - வி.கே.ராமசாமியின் ஒரு காட்சியை அடிநாதமா வெச்சி சிரிக்க வெச்ச படம் அது. வெங்கட் சுந்தரோட அபாரமான நடிப்பு இல்லை, இல்லை  அசால்ட்டான நடிப்புதாங்க படத்துக்கே பலம். இதுக்கும் பெரிய தொழில் நுட்பமில்லாத, பெரிய பட்ஜெட் எதுவுமில்லாத, இசைக்குன்னு தனியா ஒரு ஆள் கூட இல்லாம, பின்னி எடுத்த படம்.வசனம், நடிப்பு, காட்சி இவ்வளவுதான் இந்தப் படத்துக்கு ஆதாரம்.

இராமசாமி - குறும்படம்




====0oo0=====

அப்புறம் கொஞ்ச நாளிலேயே வந்துச்சு ஒரு பாட்டு.  அதிபுதிரியாக ஹிட் அடிச்சுது, அதுதான் இவரின் அடுத்தக் குறும்படத்தின் பாடல் - அது ஊருக்கு 4 பேரு. சுருக்கமாக O4P. அந்த பாட்டுக்கு இசையமைச்ச பாலமுரளிக்கு செம திருப்பு முனையா இருந்துச்சுன்னு சொல்லிக்கலாம். படத்தை திரையரங்கத்துல எல்லாம் வெளியிட்டு, அதாங்க Screening [ஒன்னு ரெண்டு காட்சிகள் மட்டும் ஓடும்]. தொழில்நுட்பத்துல ஒரு திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்துச்சு

னக்கோ ஆச்சரியமான, ஆச்சர்யம், இந்தச் செய்திகளை எல்லாம் Facebook வழியாத்தான் தெரிஞ்சிகிட்டேன். இதற்காக இவர் செலவு செய்த  பணமும், நேரமும் அதிகமா ஆகியிருக்கும். என்னமோ திட்டமிருக்கு.

====0oo0=====

குறும்படம் ஊருக்கு 4 பேரு



ருக்கு 4 பேரு, பெரிய ஹிட் ஆச்சு. அபிநவ் (படத்தொகுப்பு) அவரோட அந்தப் படத்தோட லெவலே வேற மாதிரி ஆகிருச்சு. சினிமா மக்களெல்லாருமே இந்தப் படத்தை கண்டிப்பா பார்த்திருப்பாங்க. அதுவும் MLMஐ வெச்சி, நல்ல நோக்கத்தோட வந்ததால உண்மையாலுமே அதிரிபுதிரியா ஹிட்டடிச்சுது. பல விவாத மேடைகளில படத்தோட சாரம்சத்தைப் பத்தி பேசினாங்க.உண்மையாகவே MLM பத்தி பலருக்கும் இருக்கும் கேள்விகளை வெளிச்சம் போட்டு கேட்டாங்க. பதில் இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுவும் இணையத்துல 10 நிமிசத்துக்கு மேல குறும்படம்னாவே ஓட்டிவிட்டு பார்க்கும் காலத்துல சற்றேறக்குறைய 30 நிமிசத்துக்கு படமெடுக்கிறதுக்கும் ஒரு தில் வேணும்

இவுங்க குழுவுல, ஆரம்பத்தில இருந்தே ஒளிப்பதிவுல கலக்கிட்டு இருக்கிறார். KB Prabhu.


====0oo0=====

ஆனா இதுக்கெல்லாம் முன்னாடியே(?!) 536 அப்படிங்கிற குறும்படத்தை எடுத்திருக்காங்க அப்படிங்கிறது பலரும் அறிந்திராத செய்தி. அது உங்களுக்காக

குறும்படம் - 536




ஒரு சமயம் இவுங்களோட பேட்டி கோவையில தனியார் சேனல்ல ஒளிபரப்பாச்சு. அதுலதான் தெரிஞ்சது இயக்குநர் ஷங்கர் அழைச்சதையும், இவர்னால அவரிடம் உதவியாளரா சேரமுடியாத நிலையையும் இதுல சொல்லிருந்தாரு. ஆனா சரியான முடிவை கணேஷ் எடுத்திருக்காருன்னு நான் நினைக்கிறேன்.  

அப்புறம் மஞ்சள் வெயில் அப்படின்னு ஒரு படம்னாங்க, அது என்னாச்சின்னே தெரியலை(???!).



====0oo0=====

வெங்கட் வேற ரெண்டு குறும்படத்துல படத்துல நடிச்சாப்ல. நாளைய இயக்குனர்ல கூட வந்தாப்ல. வெங்கட்டுக்கு ஷங்கர் படத்துல வாய்ப்பு கிடைக்கவும் இது உதவுச்சுன்னா பாருங்களேன். நண்பன் படத்துல விஜய்க்கு சீனியரா நடிச்சிருப்பாப்ல.

YesKay தனியா படம் செஞ்சிருந்தாரு. (http://www.youtube.com/watch?v=kqxA_9hUCi0).

பாலமுரளி- பல குறும்படங்களுக்கு இசையமைச்சிருக்காரு.  சமீபத்துல வெளியான புத்தகம் திரைப்படத்துக்கும் சில காட்சிகளுக்கு இசையமைச்சிருக்கிறதா கேள்வி.

அபிநவ்வோட பேரை பல குறும்படங்களில் பார்த்தேன். நாளைய இயக்குனர்ல வந்த பல படங்களில், இவுங்களோட பங்களிப்பு கண்டிப்பா இருக்கு.

====0oo0=====

2012ல் குட்டீம்மா படத்தைப் பத்தி சொன்னாங்க, படத்தோட trailer வந்திச்சு, அதுவும் சமீபமாத்தான். படத்தைப் பல இடத்துல  Screening பண்ணியிருக்காங்க. பெரிய வெற்றின்னு வேற சொல்றாங்க. படம் Youtubeல வரும்னு காத்திட்டு இருக்கேன்.



B.லெனின், பாலு மகேந்திரா, அம்ஷன் அப்படிங்கிறவங்க எல்லாம் 1980/90களிலேயே இந்தக் குறும்படம்/Documentary எல்லாம் செய்த முன்னோடிகள். 

====0oo0=====
திரைப்படத்திற்காக குறும்படங்களை ஒரு Profile ஆ செய்வாங்க. அதுல கணேஷ் மாபெரும் வெற்றி பெற்றிட்டாரு. குறும்படங்கள் மூலமா பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வெச்ச கணேஷுக்கு வாழ்த்துகள். குறும்படங்களுக்காக இருந்த பல பார்வைகளையும் மாத்தினதுல கணேஷூக்கு முக்கிய இடமுண்டு. இப்பவும் பலர் குறும்படம் எடுத்தா அது Youtube/Vimeoவுல வந்தாப் போதும்னு நினைக்கிறாங்க. இல்லைன்னா நாளைய இயக்குனர். இதுதான் இன்னிக்கு இருக்கிற தமிழ் குறும்பட சூழல்.



கூடிய சீக்கிரம் நாங்க உங்களை ஒரு திரைப்பட இயக்குநராப் பார்க்கனும் பாஸூ.

இப்படிக்கு

இதுநாள் வரைக்கும்  வெகுதொலைவிலிருந்து உங்களைத் தொடரும் ஒரு ரசிகன்

Wednesday, February 13, 2013

எண்களோடான தமிழ்


ஒன்று: வானம் - ஒன்று.

இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.

மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.

நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.

ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.

ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.

ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.

எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.

ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.

Saturday, February 2, 2013

ஒரே மாதிரி எத்தனை படம்டா வரும்?

ஜனவரி 29 ம் தேதி டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட இந்த Animation Video ஆஸ்கர் விருதின் போட்டிக்கு அளித்துள்ளார்கள்.

காணொளி பார்த்தீங்களா? நல்லா இருந்திச்சி இல்லே? பிரச்சினை அது இல்லை. 4 வருடங்களுக்கு முன்னரே Signs அப்படின்னு ஒரு குறும்படம் வந்திச்சு, அதனோட பாதிப்புதான் அப்படின்னு இணைய உலகத்துல பேச்சு. அந்த காணொளியையும் பார்த்துடுங்க.


அதே மாதிரி தமிழில் போன வருடம் Inbox அப்படின்னும் ஒரு குறும்படம் வந்துச்சு. எல்லாம் ஒரே களன்.


ஆச்சா, இப்ப சிரிச்சிக்கிறது எல்லாம் நம்மாளு(பாலசந்தர்) ஏக் துஜே கேளியேவிலே நோட்டம் பார்த்துட்டாரு. அந்தக் காணொளியும் கீழே இருக்கு. நெற்றிக்கண்ல கூட ஒரு காட்சி இப்படி வரும்தானே?



இதனால நான் சொல்ல வரது என்னான்னா? ஆணியே புடுங்க வேணாம்னு நீங்க சொல்றது கேட்குது

Friday, February 1, 2013

விஸ்வரூபம்: கத்தரிக்க வேண்டிய காட்சிகள் - பொது புத்தியாளன் பார்வையில்

த்தரிக்க வேண்டிய காட்சிகளை கடைசியில சொல்லியிருக்கேன், இப்போ படத்தைப் பத்தி பார்ப்போம்.  விருப்பமில்லாதவர்கள் சிகப்பு வரிக்கு நேரடியாகப் போயிடலாம்



படம் பற்றி என் எண்ணம் : 
 படம் ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடக்கிறது. தமிழ்நாட்டைப் பற்றி பேசுவது 3 வார்த்தைகள் மட்டும்தான். அதிலும் குறை எல்லாம் இல்லை. காபூல் எக்ஸ்ப்ரஸ் படத்திலும், The Siege படத்திலும் காட்டப்பட்டதை விட இந்தப் படத்தில் காட்டப்பட்டது குறைச்சலே. இதில் கமல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது.

கமல் கதாநாயகனாக உருமாறும், உருவெடுக்கும் காட்சியில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்கு வைத்து வந்த Opening Sceneவிட அபாரம். அதுவும் இரண்டாம் முறை காட்டப்படும் போது  Simple Fantastic. சண்டைக்காட்சி அமைத்தவருக்கு என் பாராட்டுகள். ராகுல் போஸ், கமலுக்கு இணையான ஒரு கதாபாத்திரம், உண்மையைச் சொல்லப் போனால், சில இடங்களில் கமலை விட அதிகமாக Score செய்து விடுகிறார். படத்தில் கதாநாயகனும் இஸ்லாமியர், வில்லனும் இஸ்லாமியர்.

பூஜா குமாரும், ஆன்ட்ரியாவும் படம் நெடுக வருகிறார்கள். விசாரணைக் காட்சியில் ஆண்ட்ரியாவின் தெனாவெட்டான நடிப்பு Simply Superb. பூஜா குமாரின் கதாபாத்திரம் இப்படியுமில்லாமல் அப்படியுமில்லாமல், ம்ம்ம், கதையில வந்துட்டே இருக்காங்க.

கமலின் ஆரம்ப காட்சிகளுக்கான நடிப்பு அபாரம், அது எப்படிங்க, அவ்வை சண்முகியே பெருசா நினைச்சா இதுல இன்னொரு பரிமாணம். அவரைப் பத்தி புகழ என்ன இருக்கு, அவருக்கு நடிக்க வரும், வருது.

பிரச்சினையென இஸ்லாமியத் தலைவர் பேசிய பேச்சுக்கும் படத்துக்கும் சம்பந்தமேயில்லை. ட்விட்டரில் எழுதியதை இங்கே பகிர்கிறேன்

"பகடைக் காய்களுக்கு கடைசிவரை தாங்கள்தான் பகடைக் காய்கள் என்றே உணர்வதில்லை" 

அவர்களுக்கு ஒன்று, இது உங்களுக்கான களமில்லை, தயவுசெய்து உங்கள் மதத்தினரை களங்கப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு நீங்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்று மறந்துவிடாதீர்கள். நீங்க சொல்லும் சொல்லை வைத்துதான் உங்களையும் உங்கள் மதத்தவரை மற்ற மதத்தினர் பார்க்கிறார்கள், அதுவும் இந்த சினிமாவை வைத்து, நீங்கள் பேசிய பேச்சுக்கு, என்னுடைய வருத்தங்களும் கண்டனங்களும்.

டம், Hollywood தரமென்றால் ஆமாம் என்று சொல்வேன். ஆனால் கமல் Hollywood தரத்தில் முந்த வேண்டுமென்றால், கமல் எடுத்துவைத்திருக்கும் முதல் படி மட்டும்தான் என்றுதான் சொல்வேன். அதற்கு பொருளாதார Constraint இருக்கும் என்று நம்பினாலும், முதல் படி எடுத்து வைத்துவிட்டார் என்றே சொல்வேன்.

இப்போ என் பார்வையில் தவிர்த்திருக்கவேண்டிய காட்சிகள்:

1. பாப்பாத்தி, இந்தா இந்த கோழியை ருசி பார் - இந்தக் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு பிராமணனையும் பாதித்திருக்கும். நானறிந்தவரையில் பிராமணர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கவில்லை.  இந்த இடத்தில் நான் சொல்லிக்கொள்வது - நான் பிராமணன் இல்லை. பொதுப் புத்தியாளன்

2. ஆங்கிலேயப் பத்திரிக்கையாளரை கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சியில் பின்னணி இசை(I see the YouTube video shows as it). இதே போல பல இடங்களில் இது மாதிரியான இசை வருகிறது. இது ஒரு சம்பவத்தைப் பொதுப்படுத்துதல், இதை எதிர்க்கிறார்கள் என்றால் தவறேயில்லை. என் கண்டனங்கள் சேர்த்துக்குங்க.

3. தாலிபான் குழந்தைகள் விளையாடுமிடத்தில் கூட விரலை துப்பாக்கியாக்கி விளையாடுவதாக காட்டியிருப்பது எனக்கு சரியாகப் படலைங்க, உண்மையாகவே இருந்தாலும் (பத்தி 2க்கான பதிலே இதிலும்,  பிற்பாதியில் அதை மீட்டெடுக்கும் காட்சிகள் வந்தாலும் கூட)

படத்தில் காட்டப்பட்ட மீதிக் காட்சிகள் எல்லாம் பல படங்களில் காட்டிய, செய்திகளில் பார்த்த, பழைய மாவையே திரும்ப அரைத்த காட்சிகள்தான்.

தமாஷ்தான் என்று கமலும், ராகுலும் பேசிக்கொள்ளும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. எல்லாத்தையும் தமாசா எடுத்துக்க முடியல.

எனது முடிவு: இதுவொரு மசாலாப் படம், குழந்தைகளுக்கானது அல்ல, ஒரு முறைக்கு இரு முறை கூட பார்க்கலாம். ஆனால் கமல் இந்த மாதிரி சர்ச்சைகளை விட்டு வெளிவரவேண்டும். நாட்டில் பல விசயங்கள் திரையில் வராமல் இருக்கின்றன, அதையும் மனதில் வெச்சிக்குங்க, இல்லை, இது அமெரிக்காவை திரும்ப பார்க்க வைக்கும் படமென்றால் இந்த மாதிரியும் படமெடுக்கலாம், ஆனால் இந்த ஒரு முறைதான் இருக்கிறதா என்றால், மன்னிக்கவும்  கமல் சார், எடுக்கவேண்டியது நிறைய இருக்கு, வெளியே வாங்க.

Thursday, January 31, 2013

எங்கே சென்றீர் எமை விடுத்து?


ந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் "சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது" என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் "நண்பர் என அழைத்தீர்கள் என்றுதான் இங்கு வந்தேன். உங்களிடம் யாசகம் கேட்க அல்ல. என்று நாங்கள் வேண்டாம் என்று எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். உம் உதவி எமக்குத் தேவையில்லை. விருந்துக்கு என்று அழைத்து என்னை அவமதித்து விட்டீர்கள், எனவே இந்த விருந்தில் இருந்து வெளியேறுகிறேன்" என உடனடியாக கைகழுவி வெளிநடப்பு செய்கிறார் கண்ணியத் தென்றல்.

நேருவை நம்ப வைத்து பின்னர் கழுத்தறுத்து இந்தியாவிற்கு எதிராக சீனா போர் துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை. இந்திய இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேவை என்று அழைப்பு விடுக்கின்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன். அழைப்பைக் கண்ட அடுத்த நொடி தனது இளம் மகனை அழைத்துப்போய் பரங்கிமலை ராணுவ கேம்பில் ராணுவத்திற்கு சேர்த்துவிட்டுத் திரும்புகிறார் பெருந்தகை காயிதேமில்லத்.

பாராளுமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவின் மீதான விவாதம். தன் தாய்மொழியான தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கண இலக்கியச் சிறப்புகள் ஆகியவற்றைத் தன் அழகுமொழியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து "இந்திய துணை கண்டத்தின் ஆட்சிமொழியாக இருக்கும் தகுதியும்,உரிமையும் தன் தாய்மொழி தமிழுக்கே உண்டு" என்று முழங்கி இந்தியை தேசிய மொழியாக்கும் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறார் தலைவர் இஸ்மாயில் சாஹிப்.

ஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கண்ணியத் தென்றல் வெளியிட்ட அறிக்கை கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணாவின் கருத்தைக் கேட்கின்றனர். " அவரது அறிக்கையை நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இஸ்ரேல் முக்கியமா? இஸ்மாயில் முக்கியமா? என்று கேட்டால் நான் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன்! எனவே அவர் எது சொல்லி இருந்தாலும் அதுதான் என் கருத்து" என்று பதிலுரைக்கிறார் அவரது ஆத்ம நண்பர் அறிஞர் அண்ணா.

--00--

பெருந்தகையே! பிறப்பால் இந்தியனாக, இனத்தால் திராவிடனாக, தாய்மொழியால் தமிழனாக, மதத்தால் முஸ்லீமாக.... இவற்றில் எது ஒன்றுக்கும் குறைவைக்காத பெருவாழ்வு வாழ்ந்தவர் நீங்கள்! நீங்கள் மறைந்து 41 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தனக்குத் தலைவனில்லாது தவிக்கிறது, தத்தளிக்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். தலைவன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தன்னைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வழிகாட்டும் தற்குறிகளால் தடுமாறி நிற்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். இனியும் உங்களைப் போல் ஒரு தலைவன் கிடைப்பான் என்ற நம்பிக்கை எமக்கு அறவே இல்லை. இறைவனிடம் கேட்டு நீங்களே எழுந்து வாருங்கள்!!

-------------------------------------------------------------------------------------
ஆக்கம்: புதுகை அப்துல்லா 

Monday, January 14, 2013

வெள்ள ப்ரொடியூசரு

ரு நல்ல நாள் அதுவுமா அந்தத் தயாரிப்பாளரை சந்திச்சேன், சரக்கடிக்கிற இடத்துலதாங்க. நான் என்ன பண்றேன்னு சொல்லவே இல்லை. அவராத்தான் சொன்னாரு, அவரு ஒரு தொழிலதிபர் அப்படின்னும், சினிமாப் படம் ஒன்னு எடுத்துடறதுதான் அவரோட லட்சியம் அப்படின்னும் சொன்னாரு.

ஒன்னு ரெண்டு தம்ளர் இறங்கியதும், நான் பேச ஆரம்பிச்சேன். “அண்ணே, எனக்கு படம் இயக்கனும் அப்படிங்கிற ஆசையிருக்கு. நல்ல கதையா பலதும் இருக்கு. ஆனா உங்களை மாதிரி ஒரு நல்ல தயாரிப்பாளர் மட்டும் கிடைக்க மாட்டேங்குறாங்க. என்னோட விதி இப்படி கதை சொல்லித்தான் முடிஞ்சிடுமோன்னு தெரியலண்ணே” அப்படின்னு பிட்டைப் போட்டு வெச்சேன்.

என் கண்ணையே குறுகுறுன்னு பார்த்திட்டு இருந்தாரு. “ஏங்கண்ணு, என்னைப் பார்த்தா என்ன நினைக்கிறே? (சரக்கு அம்புட்டு உள்ளே போயிருக்கு)”

”சரியாத் தெரியலண்ணே! ஆனா வெள்ளை மனசுக்காரவுகளா இருக்கீங்க. இங்கே சீக்கிரமா ஏமாத்திப் புடுவாங்கண்ணே”

“கண்ணு, உன் கண்ணு கூர்மைடா, பொய் சொல்லலை. நெசமாலுமே, கதையிருந்தா சொல்லு, இப்பம் வேணாம், காலங்காத்தால வா, பேசிக்கலாம். இந்தா என் நம்பரு” அப்படின்னு சொல்லிட்டு, நான் அடிச்ச சரக்குக்கும், சைட் ட்ஷ்ஷுக்கு சேர்த்தே காசை வெச்சிட்டுப் போனாரு.

எனக்கோ நம்பிக்கையேயில்லை. உடனடியா அவரோ நம்பரை பதிஞ்சி வெச்சிக்கிட்டேன், மொபைல் கீது தொலைஞ்சு போயிட்டா, உடனே பக்கத்துல இருந்த ஒரு சிகரெட் அட்டையை எடுத்து அதுலையும் இப்படி எழுதி வெச்சிக்கிட்டேன்.

Dheivam - 98427*****

காலையில எழுந்திருச்சது 5 மணிக்கு, சுத்தமா தூக்கமேயில்லீங்க. தனியாளா நானா ஒரு முறை, ரெண்டு கதையையும் சொல்லிப் பார்த்துக்கிட்டேன். முதல்வன் அர்ஜூன் கணக்கா(கக்கா போகயிலும் கூட).

சரியா 8 மணிக்கு அவரோட வீட்டுக்கு முன்னாடி என்னோட சில்வர் ப்ளஸ் போய் நின்னுச்சு. வீட்டைப் பார்த்தா, இல்லீங், இல்லீங் அது மாளிகை, பங்களா.. வாட்ச்மேன் கேட்டாரு “என்ன தம்பி, ஐயாவை பார்க்க வந்தீங்களா? செத்த நேரம் பொறு, ஒரு அரை மணிநேரத்துல கூப்பிடுவாரு” அப்படின்னு கேட்டுலையே நிக்க வெச்சாரு.

சரியா அரைமணிநேரம் கழிச்சு, வாட்ச்மேன் உள்ளே போகச் சொன்னாரு. 6 இல்லைன்னா 7 காரு இருக்கும்ங்க. அத்தனையும், பளபளன்னு ஜொலிக்குது, வெள்ளைக்காருங்க. ஐயா, இல்லை இல்லை தெய்வம்தான் ஹால்ல உக்காந்து இருந்தாரு, ’வெள்ளையும் சொள்ளையுமா’ அப்படின்னு கேள்விப் பட்டிருப்பீங்க, ஆனா அவரு வெள்ளையோ வெள்ளையா இருந்தாரு, வீடு முழுக்க வெள்ளைதான். சோபா வெள்ளை, பூஞ்செட்டியெல்லாம் வெள்ளை. எல்லாம் வெளுப்பு.

“வா கண்ணு, தூங்குனியா” அப்படின்னு தெய்வமே கேட்க “இல்லைண்ணே, ஒரே படபடப்பாவே இருந்துச்சு”

“என்ன சாப்பிடுற?” உள்ளே திரும்பி, ”மணியா! ரெண்டு காபி கொண்டா, அப்படியே தம்பி வந்திருக்காப்ல, இட்லி பண்ணிடு” அப்படி உத்தரவு போட்டாரு. “சாப்பிடுவே இல்லை” அப்படின்னு என்னைப் பார்த்து கேட்க “என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, சங்கோஜமா இருக்குண்ணே” அப்படின்னு நெளிய ஆரம்பிச்சேன்.

காபி ஆச்சு, கதை சொல்ல ஆரம்பிச்சேன், இட்லி ஆச்சி, மறுபடியும் இன்னொரு காபி ஆகும் போது, என்னோட முதல் கதை/திரைக்கதையை முடிச்சிருந்தேன்.

5 நிமிசம், கண்ணை மூடி உக்காந்திருந்தாரு. என்ன நினைச்சாரோ தெரியலை, மளமளன்னு எந்திருச்சு உள்ளே போனாரு. வரும்போது, கையில ஒரு வெத்தலையும் 51 ரூபாவும் வெச்சி “ஏந்திரிப்பா”ன்னாரு. எழுந்திருச்சேன், “இந்தா, படத்தோட அட்வான்ஸ், மத்தவங்க எப்படி குடுப்பாங்கன்னு தெரியாது, நம்ம குடும்பத்துல இப்படித்தான் வெத்தலை பாக்கு வெச்சி ஆரம்பிப்பாங்க” அப்படின்னு அவரு சொல்லும்போது எனக்கு தரை நழுவுற மாதிரியே இருந்துச்சு.

சடார்ன்னு தெய்வத்தோட காலுல விழுந்துட்டேன். மத்த விசயங்களைப் பேச ஆரம்பிச்சேன், இந்தக் கதைக்கு கதாநாயகனா, பெரிய ஆளைச் சொன்னேன், புது ஆளைப் போடலாம்னாரு, இப்படியே எல்லாத்துக்கும் அறிமுகத்தையே வெச்சி பண்ணிடலாம்னாரு. சரின்னு தலையை ஆட்டி வெச்சேன். கடைசியா ஒரு கொக்கிப்போட்டாரு. “50% பணம் நீ போடு கண்ணு, அப்பத்தான் படம் ஜெயிக்கனுங்கிற வெறி உனக்கு வரும். என்ன சொல்றே?”

”இல்லண்ணே, அவ்ளோ பணத்துக்கு நான் எங்கே போவேன்.”.அப்படின்னு சமாளிக்க, ஆரம்பத்துல அவரு காசு போடுறதாவும், பாதிப் படத்துக்கு மேலே நான் ஏற்பாடு பண்ணிக்கிறதாவும் முடிவாகிருச்சு. சந்தோசத்தோட கிளம்பி வந்தேன், இல்லை பறந்துட்டே வந்தேன்.

இருக்கிற நிலத்தை வெச்சிடலாம்,  கொஞ்சம் பேங்க்ல கடன் வாங்கிக்கலாம், இப்படி பலவிதமா யோசிச்சிக்கிட்டே வீட்டு வந்தா, குமரேசன் நின்னிட்டு இருந்தான். டிகிரி தோஸ்த்து.

”என்றா ஆச்சு, உம்பட போனுக்கு? எத்தனை வாட்டி கூப்பிடறேன், ஆப் பண்ணியே வெச்சிருக்க?” அப்படின்னு எகுற ஆரம்பிச்சான். அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்திச்சு, அட ஆமாம்ல, கதை சொல்ல ஆரம்பிச்ச போது அணைச்சி வெச்சது. சந்தோசத்தை அடக்க முடியாம நிக்கிறேன், அவனா வந்து என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டான். ”மாப்ளே, ஹீரோவாகப்போறேன்டா, ஒரு ப்ரொடியூசரு படம் பண்ணலாம்னு சொல்லிட்டாரு” அப்படீங்க, “டேய், நானும் ஒரு ப்ரொடியூசரை பார்த்துட்டுதான்டா வரேன்” அப்படின்னு சொல்ல ரெண்டு பேருக்கும் தலையும் புரியல, காலும் புரியல.

அண்ணாச்சி கடையில டீ அடிச்சிட்டே சொன்னான் “முதல் 50% பணத்தை நான் போடனும்டா. நெலப்பட்டாவை ஐயன்கிட்ட கேட்டிருக்கேன். தரேன்னுட்டாரு. அப்பத்தான் ஜெயிக்கனும்ங்கிற வெறி வரும்னு சொன்னாருடா. எனக்கும் மனசுக்கு அதான் சரியாப் பட்டுச்சு. இதாப்பாரு” அப்படின்னு வாடின வெத்தலையோட 51ரூபாவை மேம்பாக்கெட்டுல இருந்து எடுத்தான்.

முடிவோட எழுந்திருச்சேன் “வெள்ளை வீட்டு ப்ரொடியூசராடா?”

”ஆமாம்டா, உனக்கு எப்படி.. இரு இரு.. உனக்கும் அவரேத்தானா. அப்ப நீதான் டைரக்டரா? டேய்ய்ய்ய்ய்”

”ஆமாம்டா அவரேத்தான், இரு இரு.. முதல் 50% உன்னோட நிலம். ரெண்டாவது 50% என்னோட நிலம். ஆமாம்டா, முதல்ல 50% அவரு பணம் போடுறாராம், ரெண்டாவது 50% நான் போடனுமாம். எப்படிஈஈ?” அவனையே பார்த்திட்டிருந்தேன்.

இப்படி முடிச்சான்

 “அப்புறம் என்ன ****க்குடா அவனுக்கு ப்ரொடியூசருன்னு பேரு *&*&^(*&^*(&^” 

படம் நன்றி: Super Goodfilms
Disc: மேலேயுள்ள கதைக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வெள்ளை வெளேறென்றால் இவர்தான் சரியா வருவாருங்கிறதால அவர் படம். அம்புட்டுதான்

Tuesday, January 1, 2013

குடுத்த காருக்கு மேல கூவனும் போல

  • நீபொவ -காதலிச்சவங்களுக்குத் தான் பிடிக்கும். யானையோட பழகினா கும்கி பிடிக்கலாம். அப்ப அனகோண்டா படம் பிடிக்கனும்னா????

  • குழந்தைகள் அடம்பிடிப்பது கூட அழகுதான், வேடிக்கைப் பார்க்கும்பொழுது

  • மனுச இனத்தை விருத்தி பண்ண சிட்டுக்குருவிகளை ஏண்டா கொல்றீங்க? #லேகியம்


  • Nobody is perfect = ஒரு பொணமும் சரியில்லை #மொழியாக்கம் #லபக்குதாஸ்

  • மாத‌ சாப்பாட்டு செலவுக்கு ரூ.600 போது‌ம்: ஷீலா தீட்சித் #30 நாளும் உண்ணாவிரதம் இருக்கிற குடும்பத்தைப் பத்தி சொல்றாங்கப்பா
 
  • இந்த வருட வெற்றி நாயகன் .. விஜய்... இருங்கப்பா விஜய் சேதுபதி #பீட்சா #சுந்தரபாண்டியன் #NKPK

  •  பேஸ்புக்கில் ஒரு பெண் தன் படத்தை பகிர்ந்திருந்தார் , Like போட்டுவிட்டு, “ப்ப்பாஆஅ” என்று Comment போட்டுவிட்டேன். குழம்பட்டும்
  •  இனிமே கட்சி மாறினா, குடுத்த காசு(ரு)க்கு மேல கூவனும் போல

Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்

எனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்


படத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும்  'அவளைப்  பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.

படத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி  குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)

சில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.



காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..

போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல?”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.

இருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)

VTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.



ராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.


பள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.

நானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது  எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :). 

படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது.  மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.

I love You Gautham Sir!

Friday, December 21, 2012

தமிழ் இனி - குறும்படம்


நான் பாஸ்டனுக்கு வந்த புதிது. நண்பர்கள் யாருமில்லாத நிலையில், வேறு என்ன செய்வதென்று தெரியாமல், குறும்படங்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்தேன். அதில 10-15 தேறியது, பிறகு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய போது. மொத்தம் 9 கதைகள் கிடைத்தது. வசனம், திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.

இப்படியாக போய்க்கொண்டிருந்த போதுதான், சம்பந்தமேயில்லாமல் குறும்படம் “அப்பாடக்கர்”ஐ எடுத்துத் தொலைத்தேன். அது நான் எழுதிய கதைகளில் இல்லாத ஒன்று. பரீட்ச்சார்த்த முயற்சி. 

ழுதும் கதைகளை எல்லாம், நண்பர்களிடத்தில் சொல்லி “எப்படியிருக்கு” எனக் கேட்பது வழக்கம். இன்னொருவர் கோணத்தில் நிறைய மாறுதல்கள் கிடைக்கும் என்பது என் அனுபவம். இப்படி ஒரு நாள் மொத்தக் கதைகளையும் ஒரு பள்ளிக்கால நண்பனிடம் சொல்லிக்கொண்ண்ண்ண்டிருந்தேன். இருக்காதுங்களா 3 மணி நேரம், தொடர்ச்சியா கதையே சொல்லிட்டிருந்தா, அதுவும் மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா? மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொல்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே! இதுல 4 கதைகளைச் சேர்த்தா ஒரு பெரிய படம் வந்துருமே” அப்படின்னான்.

அப்பத்தான் தோணுச்சி, பயபுள்ள வெவரமாத்தான் கேட்டிருக்கான் அப்படின்னு. அப்புறம், அவன் சொன்ன கோணத்துல இருந்து ஆரம்பிச்சி திரைக்கதையை எழுதி முடிச்சிட்டேன். போன வாரம் அதே நண்பன் கூப்பிட்டான் “என்னடி மாப்ளே, பெரிய படமா பண்றேன்னு சொன்னே? குறும்படமா வந்திருக்கு”

படம் பார்த்தவுடனே ஆச்சர்யம், என்னுடைய கதையில் ஆரம்பக்காட்சி அப்படியே இந்தக் குறும்படத்தில் வந்திருந்ததுதான். அதுவும் என் படத்தின் தலைப்பும் இதுல வந்திருந்ததுதான். (உடனே காப்பி அப்படின்னு சொல்லிடாதீங்க மக்கா. வெளிநாட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தோணுற விசயம்தான் படமா வந்திருக்கு. ஒத்த அலைவரிசை.. அஷ்டே)



டடே! என்னை மாதிரியே ஒருத்தர் சிந்திச்சிருக்காரு அப்படின்னு மூச்சடைச்சுப் போயிட்டேன். டுமீலன்ஸ் அப்படின்னு ஒரு குறும்படம் எடுக்கலாம்னு ஆரம்பிச்சு Casting பிரச்சினையினால அப்படியே நின்னுப் போச்சு. அந்தக் கதையின் சாரமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ஆனால் திரைக்கதை அப்படியே வேற.. இன்னொரு நண்பர் சொன்னார், ”ஆமாய்யா அதேதான்,,, என்ன நாம பேசி ரெண்டு வருசம் இருக்குமா? என்று சொன்ன போதுதான் உரைச்சது :) நாம லேட்தானுங்களே”

மெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் அடி மனசுல இருக்கும் வலியை ஆழமாவும்,  தமிழன் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் இருக்கும் பயத்தைத் தெளிவாச் சொல்லியிருக்கு இந்தக் குறும்படம். முக்கியமா, தமிழ் வாழ வேண்டிய தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் பாலம் என்பதை தெளிவாச்சொல்லியிருக்கு.

யக்குநர் மணிராம் - நாளைய இயக்குனர் வாழ்த்துகள்! மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள்! இந்தப்பதிவை படிக்க நேர்ந்தால் இந்த வாழ்த்தை நான் நேராச் சொன்னது போலவே எடுத்துக்குங்க.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)