Friday, July 28, 2006

தேன்கூடு-மரணம்-முன்னுரை

வரப்புல ஒரு கவிதையை எழுதிவெச்சு இருந்தேங்க. அப்போதான் "கைப்பு" மோகன் கூப்பிட்டு "கவிதை நல்லா இருக்கு இளா, என்ன சொல்றதுன்னே தெரியல. போட்டியில இது கண்டிப்பா பரிசு வாங்கும்" அப்படின்னு சொன்னாரு. தமிழ்மணம், தேன்கூடு எதையுமே என்னுடைய இடத்துல பார்க்க முடியாது (இன்னும்தான்). அதனால மரணம் போட்டியைப் பத்தி அந்த சமயம் எனக்கு தெரியாதுங்க.

அப்போதான் ஜூன் மாத போட்டி ஞாபகம் வந்துச்சு (வராதே பின்னே, நம்ம மக்களான இளவஞ்சி, ராசா கலந்துகிட்டு பரிசு வாங்கினவங்க ஆச்சே). தேன்கூடு போட்டி பத்தின விவரம் தெரிஞ்சிக்கிட்ட போதுதான் வாத்தியாரு எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரிஞ்சது (வாத்தியாரு'ங்கிறது இளவஞ்சியின் செல்ல பேருங்க). பின்ன "மரணம்"ல தலைப்பு சொல்லியிருக்காரு. சோகம், எழவு, ரத்தம் அப்படின்னு எதையுமே எழுத கூடாதுன்னு முடிவு பண்ணிட்டுதான் அந்த கவிதைய மாத்தினேன். ஆச்சு கவிதை தலைப்புக்கு ஏத்தமாதிரி சாராம்சம் குறையாமல் மாத்தி போட்டியில கலந்துகிட்டேன்.


நம்ம சக விவசாயி "கொங்கு" ராசா கூப்பிட்டு "இளா என்ன சொல்றதுன்னே தெரியல, ஆனா கவிதை நல்லா இருக்கு" அப்படின்னு சொன்னாரு. அப்பதான் ஒரு பெருமூச்சு விட்டேன். அப்படியே 3 நாள் தோட்டத்துல வேலை அதிகமா இருந்ததினால வலைப் பக்கமா வர முடியல. அப்புறம், பின்னூட்ட மட்டுறத்தல் பக்கம் பார்த்தா, நிறைய பேரு பின்னூட்டம் போட்டு இருந்தது தெரிஞ்சது. அட நம்ம கவிதையை கூட ரசிச்சு, பாராட்டிதான் பின்னூட்ட போட்டு இருக்காங்கன்னு நினைச்சு படிச்சு பார்த்தா தலை சுத்திருச்சு. போட்ட பின்னூட்டம் எல்லாத்திலேயும் ஒரே மாதிரி "என்ன சொல்றதுன்னு தெரியல" அப்படின்னே எழுதியிருந்தாங்க. சரி, நம்ம கவிதைக்கு அவ்ளோதான் மதிப்பு அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

அப்போதான் ஒரு யோசனை வந்துச்சு. அனுசுயாகிட்ட கேப்போம், அவுங்க ஒரு நடுவர் மாதிரின்னு நினைச்சு "என்னங்க சொல்ல ஒண்ணுமேயில்லயா கவிதையில" அப்படின்னு ஒரு தனி மடல்ல கேட்க அவுங்க போட்ட பதில் தான் என்னை சமாதானப் படுத்திச்சு. இதோ அவுங்க போட்ட பதில்
"இளா, நீங்க வேற நிஜமா சூப்பராயிருக்குங்க. இந்த கவிதைய படிச்சுட்டு யாரும் கருத்து சொல்ல முடியாது. அனுபவிக்கனும். ஒவ்வொரு வரியும் அனுபவிக்கறா மாதிரி எழுதியிருக்கீங்க. படிச்சவுடனே அவங்கவங்க நினைவுகள்ள முழுகற மாதிரியிருக்கு அப்புறம் எப்டி கருத்த சொல்லறது. ஆட்டோக்ராப் மாதிரி அவங்கவங்க வாழ்க்கை நினைவுகள்ள முழ்கடிக்குது. இதபோயி யாராவது நல்லாயில்லனு சொல்ல முடியுமா? நிஜமா வெற்றி பெறும் கவிதையிது. அப்புறம் நம்ம கிட்டயும் கருத்து கேட்டதுக்கு நன்றிங்கோ :)". நன்றிங்க அனுசுயா


"கொடுமையிலே பெரிய கொடுமை இளமையில் வறுமை, ஆனா அதை விட கொடுமை முதுமையில் தனிமை". இதை நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு பாடம். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாதது. ஆனா அதை மறந்து வாழ என்ன பண்றதுன்னு பெரியவர் ஒரு முறை என்கிட்ட கேட்டபோது, ஒண்ணும் பேசாம எழுந்திருச்சு வந்துட்டேன். இந்த கேள்வி ரொம்ப நாள் பாரமா இருந்துச்சு. "முதுமையில் தனிமை, மரணத்துக்கே முன்னே வரும் ஒரு பெரிய மரணம்"ன்னு அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதன் பிரதிபலிப்பே இந்த கவிதை. ஒரு முற்றுபுள்ளி மட்டுமே நம் வாழ்க்கையை முடிவு செய்துவிட கூடாது. நாம் அனுபவித்து, ரசித்த வாழ்வின் 50 வருடம் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெறுமையாய் ஆகிவிட்டால், நாம் வாழ்ந்த முற்பகுதி வீண் என்று அர்த்தமாகிவிடாதா? வாழ்வில் சுகம், துக்கம் இரண்டும் உண்டு. மனிதனின் பிற்பகுதியில் அவன் கண்ட சுகங்கள் நிலைக்க சுகத்தை அசை போட்டால், வெறுமையும் இல்லை தற்கொலையும் இல்லை. நான் சொல்ல வந்த கருத்து இதுதான் "முற்பகுதி சுகத்தினை அசை போடு, பிற்பகுதியும் சுகமாக இருக்கும்.

நம்ம வாழ்க்கை, பாசம், நேசம், காதல், காமம், குடும்பம், வாரிசு அப்படிங்கிற எல்லாம் நிறைஞ்ச ஒண்ணு. அதை போலதான் எனது கவிதையிலும் சொல்லியிருக்கேன்.

அந்த பெரியவர் சொல்ற மாதிரியே கவிதை எழுதினேன். எழுதி முடிச்ச உடனே அவர்கிட்ட படிச்சு காண்பிச்ச போது எல்லோரையும் போல அவரும் ஒண்ணும் சொல்லல. கண்ணீர் மட்டும் பதிலா வந்துச்சு. எனக்கு மனசுல ஒரு கனம், அதையும் மீறி கவிதையில ஏதோ சொல்லியிருக்கோம்ன்னு ஒரு திருப்தி.




இந்தக் கவிதை ஜூலை மாத தேன்கூடு-தமிழ்ஓவியம் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது இன்னும் மகிழ்ச்சியே - படிக்க - ரசிக்க- சொடுக்கவும்

3 comments:

  1. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி ஸ்யாம்.
    தீக்ஷ்யனயாவை தமிழ்ல எழுத வெச்சதுக்கு இன்னொரு நன்றிங்கோ

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)