Tuesday, October 16, 2007

கற்றது கணக்கு- Bsc(Maths)

"அப்பா, எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்தான்பா படிக்கனும். அதுதான்பா என்னோட விருப்பமே. வாசவியோ, ஈரோடு ஆர்ட்ஸோ சேர்த்து விட்டுருங்கப்பா."

"ராஜா. கணக்கு படிச்சா உடனடியா அரசு வேலை கிடைக்கும். UPSC, TNPSC எல்லாம் எழுத வசதியா இருக்கும். நான் சொல்றேன் நீ, கோயமுத்தூர்ல தான் படிக்கிறே, அதுவும் ஹாஸ்டல்லதான் BSC Maths படிக்கப்போறே. சொல்லிட்டேன். வேற எதுவும் பேச வேண்டாம்"

அப்பா பேச்சு தட்ட முடியாமல் கோவையில் உள்ள பிரபல கலைக் கல்லூரியில் கணக்கு படிக்க ஆரம்பிச்சான் ராஜா. படிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், அவனுக்கு விருப்பமான விஷயங்களில் கவனத்தைத் திருப்பினான். வேலையத்த வேளையில செய்யுற ஓவியமும், ஷட்டில் பேட்மிண்டனும் அவனுக்கு விருப்பமா இருந்து இருக்கு. அந்தக் கல்லூரியில் இரண்டுக்கும் சொற்பமான மக்களே இருந்தார்கள், இதையெல்லாம் பண்ணினா சோத்துக்கு என்ன பண்றதுன்னு எவனும் சீண்டாத ஏரியா இது. அப்படியே ஓவிய கமிட்டி சேர்மன், பேட்மிண்டனுல பல்கலைகழக்த்துல ஒரு நல்ல இடமுன்னு வாங்கி காலேஜுக்கு போவாம ஓபி அடிச்சுகிட்டே இருந்துட்டான்.

இப்படியே 2 வருஷத்தையும் ஓட்டிட்டான். அதே சமயம் ஏனோ தானோன்னு 40% வாங்கி எல்லா பாடத்திலேயும் பாஸும் ஆகிட்டானுங்க ராஜா. ஆனா இந்தச் சனி இருக்கு பாருங்க, அது மனுசன் கழுத்துல கட்டி நுனிக்கயித்த கையில வெச்சுக்கும், "மவனே ஓடுடா. கடேசியா உனக்கு வெக்கிறேன்"னு வெக்கும் ஆப்பு.

அப்படித்தான் இவனுக்கு கடேசி வருஷம் 5th Sem, 6th Sem எல்லாத்துலேயும் கப்பு. வேற வழியே இல்லே. ஊருக்கு டிகிரி வாங்காம வந்தா மானம் போயிருமேன்னு "என்ன கருமத்தையோ படி, ஊரு பக்கம் மட்டும் டிகிரி வாங்காம வந்துராத"ன்னு இருக்கிற நகையெல்லாத்தையும் அடமானம் வெச்சு 20ஆயிரத்தை ராஜா கையில குடுத்துட்டாங்க.

என்ன பண்ணுவாங்க அவுங்க மட்டும். இவனும் ஏதாவது டிகிரி வாங்கி குரூப் பரீட்சை எழுதி முன்னேறிடுவான்னு கற்பனை அவுங்களுக்கு. "ஆசை இருக்காம் தாசில்தார் ஆவ, யோகம் இருக்காம் கழுதை மேய்க்க".

ராஜாவோட கூட்டாளி ஒன்னு சொன்னான் "மாப்ளே! ஒரு கோர்ஸ் இருக்காடா. இண்டெர்நெட்ல பரீட்சையாம். உடனே ரிசல்டாம். பாஸானா உடனே வேலையாம்டா. "

"என்னடா ஒளற்ர, எப்படிடா உடனே திருத்தி குடுப்பாங்க?"
"இல்லே மாப்ளே. வெட்டியாத்தானே இருக்கோம். வா, ஆப்டெக் வரைக்கும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்"னான்.

காந்திபுரம் பேர்ந்து நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கிற RRT(RajaRajeshwari Towers) ல 5 வது மாடியில இருக்கு ஆப்டெக். செமத்தியான ஃபிகருங்க,. ஜொள்ளிக்கிட்டே கவுன்சலரை பார்க்க போனான் ராஜா. கோர்ஸ் என்னான்னே தெரியாம "Internet Exam, result "ன்னு உளற ஆரம்பிச்சான். இவன் என்ன சொல்ல வரான்னு அவங்களுக்கு சுத்தமா புரியலே. அந்த கவுன்சலரு நல்ல ஃபிகரு. இவன் சொல்றதை எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு ஒரு Broucherஐ எடுத்து முன்னாடி வெச்சு ஆரம்பிச்சது, அதனோட உளர்றலை. இப்போ இவனுக்கு ஒன்னும் புரியல. அப்படியே அவனை கூட்டிக்கிட்டு போயி லேப், கிளாஸ் ரூம் எல்லாம் காட்டுச்சு. அடடா, அடடா, எத்தனை பொண்ணுங்க, எப்படி பசங்களோட சோடி போட்டு படிக்குதுங்க., நேர்த்தியா டிரஸு, ரூமு, பிகரு, "ராஜா, கலக்குறே"ன்னு மனசுக்குள்ள 100 வயலினை வாசிச்சுகிட்டே சொல்லிட்டு போனாங்க தேவதைங்க.

ஆனாலும் "Internet Exam, result " அப்படியெல்லாம் இந்த ஃபிகரு சொல்லவே இல்லியே, மறுபடியும் இவன் உளரலை ஆரம்பிச்சான். அப்போதான் அந்த ஃபிகருக்கு புரியவே ஆரம்பிச்சது. "இவனுக்கு Softwareக்கும், Hardwareக்குமே வித்தியாசம் தெரியல. எவனோ சொன்னான்னு நம்ம தாலிய அறுக்கிறான்" அப்படின்னு மனசுக்குள்ள நினனச்சிக்கிட்டு. "ஓஹ், நீங்க எதிர்த்தா மாதிரி இருக்கிற கவுன்சிலர்கிட்டே பேசியிருக்கனும் ராஜா. வாங்க அந்த டிபார்ண்மெண்ட்க்கு கூட்டிட்டு போறேன்னு எதிர்த்தா மாதிரி இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே "தூ, இதெல்லாம் ஒரு இடமா? எங்கே பார்த்தாலும் ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டருங்க. ஒரு பொட்டிக்கும் டப்பா இல்லே. எல்லாம் தொறந்தே கிடக்கு. அதுக்கு மேல ஒரு ஃபிகர் கூட இல்லே. அட ஃபிகர் இல்லாட்டி விடுங்கப்பா. ஒரு பொண்ணுங்க கூட இல்லே" என்ன தலை விதிடா. சரி, இங்கே படிக்க அங்கே சைட் அடிக்கன்னு ஆரம்பிச்சான் அந்த கோர்ஸை.

3 மாசம் முடிஞ்சவுடனே placement. சம்பளம் அதிகமில்லை ஆனாலும் நாய் பொழப்பா இருந்துச்சு. ஆனாலும் ஒரு சந்தோசம், ஒரு software மக்களுக்கு வேலை கிடைக்கிலே. இவனுக்கு சோத்துக்கு பஞ்சமில்லாம ஆச்சு. அடிச்சு புடிச்சு 8 வருஷத்துல டாக்டர் படிப்பை விட பெருசா டிகிரி முடிச்சான். அப்படியே படிப்படியா Network Engineer, System Admin அப்படின்னு graphல ஒரே ஏறுமுகம்தான். Bsc Maths படிச்சுட்டு Engineerன்னு விஸிட்டிங்க கார்டு வாங்கின ஒரே ஆள் இந்த ராஜா. அவுங்க அம்மாவுக்கு பெரிய சந்தோசம் வேற. பின்னே மவன் கணக்கு படிச்சாலும் ஒரு பெரிய இஞ்சினியர் ஆகிட்டான்ல.

Sep-11 கூட இவன் வேலைக்கு ஒரு தொந்தரவும் பண்ணல. பிறகாலத்தில் பெரிய புராஜக்ட் மேனஜரா ஆவனும்னு பிலாகுல பதிவு எல்லாம் போடுறான்னா பார்த்துக்குங்களேன். அதானால Bsc Maths படிச்சா இஞ்சினியர் ஆவலாம். அதுவும் கம்பியூட்டர் இஞ்சினியரு.

Wednesday, October 10, 2007

சினிமா குயிஜூ-2007-Oct

சினிமாத்துறையில இருக்கிறவங்க எல்லாம் படிக்காதவங்கன்னு நமக்கு எல்லாம் இளக்காரம் இருக்கத்தான் செய்யுது. அதை பொய்யாக்கவே இந்த குயிஜு. முடிஞ்சா பதில் சொல்லுங்க இல்லாட்டின்னா இருந்தே இருக்கு கூகிலாண்டவர். சிலதுக்கு விடை கிடைக்கலாம். ரெடி ஸ்டார்ட் மீஸிக்.


1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?

2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?

3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.

4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?

5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?

6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.

7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.

8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?

9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?

10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?

11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?

12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?

Tuesday, October 9, 2007

நண்பனான சூனியன்


சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
தெரு முக்கு ஆசாரி சொன்னாரு!
கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.

நீ எங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
என்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
என் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டே!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
எஸ்கேப் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசக் கடைசி ஆகி உன்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பே!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
உன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது?
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.

உன் நட்பு வேணுமின்னு யாருடா கேட்டா?
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!

Tuesday, October 2, 2007

தமிழ்மணத்துக்குமா போலி?

நண்பர்: மச்சான், இன்னுமாடா கவிதை எல்லாம் எழுதிட்டு இருக்கே? அதெல்லாம் விட்டு இருப்பேன்னு நினைச்சேன்.

நான்: ஏண்டா? எனக்கு அரைகுறையா வரதே அது ஒன்னுதான். அதையும் நிறுத்திட்டா?
(ஆமா, கவிதை எழுதித்தான் சாய்ஞ்சுட்டு இருக்கிற இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தப்போறேன். நான் ஒளர்றதை கவிதைன்னு சொல்ல ஒரு கூட்டமே இருக்கும் போல)

நண்பர்: இளா! நானும் ஏதாவது எழுதனும்னு நினைக்கிறேன். எப்படிடா?

நான்: அதான் Blogன்னு ஒன்னு இருக்கே. எனது எல்லாம் படிச்சியா? இருடா லின்க் தரேன்
(நீயுமாடா? நல்லாதாண்டா இருக்கே. அப்புறம் ஏண்டா சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கிறீங்க?)

நண்பர்: வேணாம்டா. அப்புறம் அதுக்கு அர்த்தம் சொல்றேன்னு என்னை அறுக்க ஆரம்பிச்சுருவே. வேணாம். சரி நான் பிலாக் எழுதறேன். அப்புறம் அதை எப்படி மத்தவங்க படிப்பாங்க? (அப்பாடா! எங்கே கவிதை சொல்லி காலங்காத்தால மூட் அவுட் பண்ணிருவானோன்னு பயம்தான்)

நான்: நண்பா! இதுக்காகவே பாடுபட்டு சில நல்ல மனுஷங்க ஒரு இடத்தை நமக்காகவே வெச்சு இருக்காங்க.
(நாங்கயெல்லாம் இங்கேதான் 'குடி' இருக்கோம். வாடகை வாங்கினா செம வசூல் ஆவும்)

நண்பர்: அப்படியா? அப்போ தமிழுக்காக எழுதற மக்கள் எல்லாம் இங்கே எழுதறாங்களா?

நான்: இல்லே. நீ எங்கே வேணுமின்னாலும் எழுது. ஆனா இங்கே ஒரு தொடுப்பு குடுத்துட்டா போதும்.
(என்னாது தமிழுக்காக மக்கள் எழுதறாங்களா? அதுதான் ஊர்ல மழை இன்னும் பின்னி பெடலெடுக்குதா?)

நண்பர்: அப்படியா? சரி. நல்ல விஷயம்தான். அப்போ பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் ப்லாகல எழுதறாங்கன்னு சொல்லு.
(நானும் அங்கே எழுதி பெரிய ஆள்ன்னு காட்டிக்கலாம்தானே)

நான்: இல்லேடா எழுதனும்னு நினைக்கிற மக்கள் இங்கே எழுதறாங்க. பெரிசு சிறுசு எல்லாம் இங்கே இல்லே. எல்லாரும் ஒன்னுதான். (யார் வேணுமின்னாலும் வயசு, தகுதி இல்லாம திட்டலாம். இல்லைன்னா தைரியமா அனானியா வந்து திட்டலாம்)

நண்பர்: ஆஹா,. கருத்து சுதந்திரம் ஜாஸ்தியா?


நான்: ஆமா. அதுவே உண்மைதான்.
(அந்தக் கருமத்தை நினைச்சாத்தான் எரிச்சலா இருக்கு.)

நண்பர்: சரி அந்த இடங்களை சொல்லுங்க. யார் யார் எழுதறாங்கன்னு பார்க்கிறேன்.

நான்: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி.
(பாரிஸ் கார்னர், சுண்ணாம்பு கால்வா. அங்கேதான் தமிலு துல்லி வெலையாடுது. இல்லாட்டி டிவி பாரு அங்கே பேஷுவாங்க)

நண்பர்: தமிழ்மணம், திறந்தாச்சு. ஆனா நீ சொல்ற மாதிரி ஒன்னுமே இல்லியே.

நான்: பாரு நண்பா. இருக்கும், ஏதாவது தொடுப்பு தட்டி பாரு.

நண்பர்: என்னாது பிலாகா? நீ சொல்ற மாதிரி ஒரு இடமே இல்லியே.

நான்: மச்சான். லின்க் குடு
(அடங்கொய்யால, அதையும் தாக்கிப்புட்டாங்களா?)

நண்பர்: http://tamilmanam.com/

நான்: (மனதுள்:இது என்னாது புதுக்கதை? ஒரு வேளை போலியா இருக்குமோ? 'அவரே' வெளி உலகத்துக்கு நல்லவரா வந்துட்டாரே)

அந்த வலைப்பக்கத்தை திறந்து பார்த்தபின்,

சே சே அப்படியெல்லாம் இல்லே. இதைத்தான் ஒரே மாதிரி சிந்திக்கிறதுன்னு சொல்றாங்களா?

இந்தப் பதிவு தமிழ் மணம் பரப்பிய அண்ணன் காசிக்குச் சமர்ப்பனம்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)